திங்கள், 9 அக்டோபர், 2017

வர்ணாஸ்ரமதர்மம்

BJPயும் RSS ம் BMS எங்கேயும் மனுதர்மத்தை சட்டமாக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்பார்கள். அது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் தெரியுமா? தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் மனுதர்மத்தை அடித்துத் துவைத்துக் காயப் போட்டு விட்டதால் வெளிப்படையாக மனுதர்மத்தை ஆதரித்துப் பேச மாட்டார்களே தவிர அவர்களுடைய வார்த்தைகளில் மறைமுகமாக மனுதர்மத்தை ஆதரித்துப் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்.

உதாரணத்திற்கு
“நமது சமுதாயத்தில் அர்ச்சகர்கள், ஆசிரியர்கள், மற்றும் வைத்தியர்கள் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் சமுதாயத்திற்காக தொண்டாற்றினார்கள். சமுதாயம் அவர்களைக் காப்பாற்றியது. அரசர் சட்டத்தை இயற்ற முடியாது. அது ரிஷி, முனிவர்கள் போன்றவர்களிடம் விடப்பட்டது. ராஜா கூட அந்த சட்டங்களுக்குப் பணிந்து செயல்புரிந்தனர். இதுபோன்ற உயர்ந்த மரபுகள் நமது சமுதாயத்தினை உயிரூட்டமுள்ளதாகக் காத்து வருகிறது. நமது நாட்டை நாம் அதே அடிப்படையில் அமைக்க வேண்டும்” (BMS சங்க மடல் 1998 ஜன. பிப்)

இப்படிச் சொல்கிறது பிஎம்எஸ்ஸின் சங்க மடல். இதில் உள்ள வார்த்தை ஜாலத்தைக் கவனித்தால் இதில் உள்ள விசமத்தனமும் ஆபத்தும் நன்றாகப் புரியும். இதுதான் மனுதர்மம். அர்ச்சகர்கள் ஆசிரியர்கள், வைத்தியர்கள் சமுதாயத்திற்காகத் தொண்டாற்றினார்களாம். என்ன தொண்டு? அவர்களால் யாருக்கு என்ன நன்மை? அர்ச்சகர்கள் யார்? ஆசிரியர்கள் யார்? வைத்தியர்கள் யார்? இவர்கள் அனைவரும் பிராமணர்கள்தானே?


அர்ச்சகர்களால் சமுதாயத்திற்கு என்ன நன்மை? ஆசிரியர்கள் யாருக்குக் கல்வி புகட்டினார்கள்? பிராமணர்கள் வைத்தியத்தொழில் செய்தார்களா? அவர்கள் எல்லா சாதிக்காரர்களையும் தொட்டு வைத்தியம் செய்தார்களா?
கல்வி சூத்திரர்களுக்குக் கிடைத்ததா? சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்றுதானே இவர்கள் சொல்லும் ரிஷிகளும் முனிவர்களும் இயற்றிய சட்டங்கள் சொன்னது? இவர்கள் சொல்லும் ஆசிரியர்கள் சூத்திரர்களுக்குக் கல்வி கற்பிக்க மறுத்தார்கள் என்பதுதானே கடந்த கால வரலாறு? அர்ச்சகர்கள் ஒரு ஆறு மாதத்திற்கு ப10ஜை புனஸ்காரங்கள்ää சடங்குகள் செய்யாமல் இருந்தால் யாருக்காவது ஏதாவது நட்டம் ஏற்பட்டிருக்குமா? எந்த நட்டமும் ஏற்பட்டிருக்காது. மாறாக நன்மைகள்தான் ஏற்பட்டிருக்கும். அப்படியிருக்க அவர்கள் ஏதோ சமுதாயத்திற்குத் தொண்டாற்றினார்கள் என்று சவடால் அடிக்கிறது பிஎம்எஸ்.

அடுத்து அரசர்கூட சட்டத்தை இயற்ற முடியாதாம். அது ரிஷிகள் முனிவர்கள் போன்றவர்களிடம் விடப்பட்டதாம். சுவாமி சிவானந்தா என்பவர் இவ்வாறு எழுதுகிறார்:

“இந்து ரிஷிகளும் முனிவர்களும் சமூகத்திற்குரிய லட்சியம் நிறைந்த திட்டத்தைத் தீட்டினர். தனியாரின் வாழ்வுக்கான லட்சியம் வாய்ந்த வழியையும் வகுத்துத் தந்தனர். அம்முறைதான் வர்ணாஸ்ரமதர்மம் என்ற பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. வர்ணாஸ்ரமதர்மம் என்னும் அடிமனையால் இந்துமதம் என்னும் சொர்ண மாளிகை கட்டப்பட்டுள்ளது. வர்ணாஸ்ரம தர்மங்களைக் கடைப்பிடித்தலானது தன் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் உதவி புரிகிறது. இது மிகமிக அவசியமானது. அதன் விதிகள் மீறப்படுமானால் நாடு இருந்த இடம் காடாக மாறிவிடும். பொதுவான நிலையான தர்மத்தின் வளர்ச்சியை அல்லது மேம்பாட்டை மேன்மேலும் உயர்த்துதலே வர்ணாஸ்ரம தர்மத்தின் முக்கிய நோக்கமாகும்.

(இந்து தர்மம் என்ற நூலில் பக்கம் 89ää சிவானந்தா ஆஸ்ரமம் வெளியீடுää நாமக்கல்)

~உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் பார்ப்பனருக்கே சொந்தம்; மற்றவர்கள் பார்ப்பனர் தயவிலேயே வாழ்கிறார்கள்| (மனு - அத்தியாயம் 1 சுலோகம் 100)

என்ற சாஸ்திர விதிகள் எல்லாம் இவர்கள் சொல்லும் ரிஷிகளும் முனிவர்களும் உண்டாக்கியதுதானே! இதனால் முழுப் பலனையும் அடைந்தவர்கள் பார்ப்பனர்கள்தானே?

அதே அடிப்படையில் நமது சமுதாயத்தை அமைப்பதுதான் நமது இலட்சியம் என்று பிஎம்எஸ் சொல்கிறது என்றால் அவர்கள் யாருக்காக சங்கம் வைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் சொல்லுகின்ற அந்த சமுதாய அமைப்பு இன்று மாறிப்போய் அனைவருக்கும் பொருந்தக் கூடிய பொதுவான சட்டத்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இயற்றியுள்ளார்கள். பிஎம்எஸ்ஸின் இந்தக் கூற்றுப்படி அம்பேத்கர் எழுதிய சட்டங்கள் மாற்றப்பட்டு மீண்டும் பழைய மனுதர்ம சாஸ்திர சம்பிரதாயங்களைக் கொண்டு வந்து பார்ப்பனர் கையில் ஆட்சியை ஒப்படைக்கத்தான் அவர்கள் பாடுபடுகிறார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

அத்தகைய சமுதாயம் அமைந்தால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களே! உங்கள் நிலை என்ன? சிந்திப்பீர்! பிஎம்எஸ் ஐ நம்பி கிடைத்த வாழ்வையும் இழக்காதீர்!

வியாழன், 5 அக்டோபர், 2017

கடவுள் இல்லை


பகுத்தறிவு வினாக்கள்
#உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?
#நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?
#குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?
#எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?
#எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?
#ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?
#அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?
#அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?
#முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?
#ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?
#மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?
#நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?
#எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?
#அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?
#அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?
#பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?
#சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?
# தட்டுங்கள்! திறக்கப்படும்!!! என்றால் எதற்காக சாத்தி வைத்தீர்கள்..??? தட்டினால் தான் திறக்கும் என்று சொல்லும் கடவுள் நல்லவனா, கெட்டவனா...???
#தேடுங்கள்! தரப்படும்!!! என்றால் கண் இல்லாதவன் எப்படி தேடுவான்...??? முதலில் யார் அதை ஒளித்து வைத்தது...??? ஒளித்துவைத்தவன் பதுக்கல்காரன் தானே...???
#கேளுங்கள்! கிடைக்கும்!!! என்றால் ஊமை எப்படி கேட்பான்...??? கேட்டால் தான் கிடைக்கும் என்று சொல்லும் கடவுளை நான் ஏன் வணங்கவேண்டும்...???
#வாதை உன் கூடாரத்தை அணுகாது!!! என்றால் நான் என் வீட்டை விட்டு வெளியில் வந்தால் அணுகிவிடுமா...??? என் கூடாரத்தை மட்டும் அணுகாமல் இருப்பதற்கு பதிலாக மொத்த உலகத்தையும் அணுகாமல் இருந்தால் நல்லது தானே...??? அப்படி என்றால் இதை சொல்லும் கடவுளுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லையோ...???
#ஆண்டவர் உன்னைப் பிடித்துள்ள பிசாசுகளை விரட்டுவார்!!! என்றால் பிசாசு என்னைப் பிடிக்கின்ற போது ஏன் தடுக்கவில்லை...??? பிசாசுகளை உருவாக்கிவிட்டு அதை என்னை போன்றவர்களைப் பிடிக்கவும் செய்துவிட்டு ஏன் விரட்டவேண்டும்...??? அதற்குப் பதிலாக பிசாசுகளைப் படைக்காமலேயே இருந்திருக்கலாமே...???
#நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். (யோவான் 12:49). இது இயேசு அவர்கள் சொன்னதாக விவிலிய நூல் குறிக்கிறது. தன்னால் சுயமாய்ப் பேசத் தெரியாதவனை ஏன் நான் பின்பற்றவேண்டும்...??? தன்னால் சுயமாகச் சிந்திக்கத் தெரியாத ஒருவனை இறைத்தூதனாக அவனது பிதா அனுப்பினார் என்றால் அந்த பிதா எவ்வளவு பெரிய முட்டாளாக இருப்பான்...???
# சாமிக்கு அலகு குத்தி நிவர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஏன் எந்த எலும்பும் இல்லாத கன்னத்தின் பகுதியில் குத்துகின்றனர்...??? கொஞ்சம் பின்னே தள்ளி காதுக்கு கீழே குத்திக்கொள்ளலாமே...??? அப்படி குத்தினால் உயிர் போய்விடும் என்று தெரிந்துதானே செய்வதில்லை...??? கன்னத்தில் அலகு குத்துவதுபோல் கழுத்திலும் குத்திக்கொள்ள துணிச்சலுண்டா...???
# இந்த அலகு குத்திக்கொள்வதைப் பரப்பியதே ஆரியப் பார்ப்பன நாய்கள் தான்... இதுவரை கடவுளை வைத்து பிழைப்பு நடத்தும் எந்த பார்ப்பனாவது அலகு குத்திக்கொண்டு ஆடியதுண்டா...???
# தீ மிதிக்கும் திருவிழாவில் எரிந்த நெருப்புத்துண்டுகளில் நடந்து போகும் பக்தர்கள் நெருப்பில் காய்ச்சிய கம்பிகளை வைத்தால் மிதித்து நடப்பார்களா...??? நெருப்பை மூட்டியதும் எரிகின்ற நெருப்பில் நடந்து செல்வார்களா...??? முடியாது! ஏன்..? இதை அறிவியல் தெளிவாக விளக்குகின்றது. விறகடுப்பில் இருந்து விழும் நெருப்புத்துண்டுகளை கையாலேயே எடுத்து உள்ளே போட முடியும். ஆனால், அடுப்பில் கொதிக்கும் பாத்திரத்தின் மூடியைத் தொடக்கூட முடியாது. துணியை வைத்து தான் எடுக்க முடியும். நெருப்புத்துண்டை சுற்றி உருவாகிக்கொண்டிருக்கும் நீறு வெப்பத்தைக் கடத்தாது. அதனால் அதை துரிதமாக எடுத்து உள்ளே போட்டுவிட முடிகிறது. நெருப்பால் உருவாகும் வெப்பத்தை பாத்திரம் எளிதாக கடத்துகிறது. அதனால் அதை தொட்டால் சுட்டுவிடுகிறது.
# தீயில் தன் உடலை வருத்துவதுதான் நிவர்த்திக்கடன் என்றால் மிகச்சிறப்பாக தீக்குளிக்கலாமே...??? இல்லையென்றால், குறைந்தபட்சம் நெருப்பில் சுட்ட கம்பிகளை தரையில் கிடத்தி அவைகளின்மீது நடந்து நிவர்த்திக்கடனைச் செலுத்தலாமே...??? இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம் இல்லையா...??? காட்டுமிராண்டித்தனம் இல்லையா...??? எந்த பார்ப்பனனாவது தீ மிதித்து நிவர்த்திக்கடன் செலுத்திக் கண்டதுண்டா...??? குறைந்தபட்சம் மொட்டையாவது அடித்ததுண்டா...???
# உலகத்தைக் கடவுள் தான் படைச்சார் என்று சொல்லுவார்கள்! அப்படியென்றால் அந்த கடவுளை யார் படைத்தார் என்று கேட்டால் கடவுளை யாரும் படைக்க முடியாது. கடவுள் தானக தோன்றியவர் என்று சொல்வார்கள். கடவுள் தானக தோன்றுவார் என்றால் உலகமும் தானாக தோன்றாதா...???
# பிள்ளையாருக்கு இந்த நாடு முழுதும் பால் ஊற்றி வழிபடுகிறீர்களே! எந்த ஒரு இடத்திலயாவது ஒரு பசித்த பச்சிளங்குழந்தைக்கு ஒரு பிள்ளையாராவது((அது தான் நிறைய பிள்ளையார்கள் உண்டே! அந்த பிள்ளையார் இந்த பிள்ளையார் என்று))பால் கொடுத்ததுண்டா...???
# ஒரு இந்து, இயேசு கிறித்துவையும் அல்லாவையும் நம்புவதில்லை! ஒரு கிறித்தவர், இந்துக்கடவுள்களையும் அல்லாவையும் நம்புவதில்லை! ஒரு முகமதியர், இந்துக்கடவுள்களையும் இயேசு கிறித்துவையும் நம்புவதில்லை! ஒரு நாத்திகர் இவற்றில் எவற்றையும் நம்புவதில்லை!!!
# கடவுள் தான் இந்த உலகத்தைப் படைத்தார் என்றால் உலகின் ஒருபகுதி நல்ல வளமாகவும் மறு ஒருபகுதி பாலைவனமாகவும் இருப்பது ஏன்...??? எல்லாம் சேர்ந்ததுதான் உலகம் என்று சொல்வார்களானால், பாலைவனத்தில் ஏன் உயிர்களைப் படைத்து வாட்டியெடுக்க வேண்டும்...???
# உலகில் உள்ள எல்லா உயிர்களையும் கடவுள்தான் படைத்தார், படைக்கின்றார், படைப்பார் என்றால் குருடன், செவிடன், முடவன், அரவாணி, பிச்சைக்காரன், விலைமாதுக்கள் என்று ஏன் படைக்கவேண்டும்...???
# கடவுளை வணங்கினால் பாவங்களை மன்னிப்பார் என்றால் நான் பாவம் செய்யும்போது தடுக்காமல் செய்யவிட்டுவிட்டு ஏன் மன்னிப்பு கேட்க வைத்து மன்னிக்க வேண்டும்...???
# மதுக்கடைக்கு உந்துருளியில் செல்பவர்களை வேடிக்கை பார்த்துவிட்டு தடுக்காமல் அவர்கள் மது அருந்திவிட்டு வரும்போது அவர்களிடம் தண்டம் கேட்கும் காவல்துறையைவிடவும் கேடுகெட்டவரா கடவுள்...???
# மனிதனைப் படைத்த கடவுள் பாவம் செய்யும் மனநிலையை அவன் சிந்தனையில் ஏன் செலுத்தவேண்டும்...???
# செய்த பாவத்திற்கு உண்டான தண்டனை என்றால் பிறக்கும்போதே ஒரு குழந்தை என்ன பாவம் செய்தது...??? அதை ஏன் கண்பார்வை இல்லாமலோ, கேட்கும் திறம் இல்லாமலோ, கை கால்கள் இல்லாமலோ படைக்க வேண்டும்...???
# கடவுளின்றி இந்த உலகில் அணுவளவும் அசையாது என்றால் செய்த பாவத்திற்கு முதல் கரணியம் கடவுள் தானே...???
# முதல் குற்றவாளிக்கு என்ன தண்டனை...??? யார் கொடுப்பது...???
# உலகில் உள்ள எல்லா உயிர்களையும் கடவுள் தான் படைத்தார் என்றால் எந்த ஆடும் மாடும் புலியும் சிங்கமும் கரடியும் தக்காளியும் மிளகாயும் ஏன் கடவுளை வணங்குவதேயில்லை...??? மனிதன் மட்டும் ஏன் விழுந்து விழுந்து வணங்குகிறான்...??? ஏன் என்றால் ஒரு சாரார் எந்த வேலையும் செய்யாமல் கடவுள் பெயரால் ஏமாற்றி வாழவே இந்த புளுகு மூட்டைகளை எல்லாம் உங்கள் சிந்தையில் செலுத்திவிட்டனர்...!!!
# கடவுள் இல்லை

செவ்வாய், 3 அக்டோபர், 2017

பிச்சைக்காரர்களும் இல்லை. திருடர்களும் இல்லை





பொய். பொய்யைத்தவிர வேறு எதையுமே பேசப்போவதில்லை என்று முடிவோடு இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் காலத்துக் கல்விமுறைபற்றி பிஜேபி அம்பி சொன்ன வாதங்களை ஆதாரத்துடன் தவிடுபொடி ஆக்கிய பிறகு அதனை அறிவுப் பூர்வமாக மறுக்க முடியாத அம்பி மேலும் பிதற்றுகிறார். அம்பேத்கர் வரலாற்றை எழுதிய தனஞ்செய்கீர் ஆங்கிலேயர் அல்லர். அவரும் ஒரு பார்ப்பனரே. பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆர்எஸ்எஸ் காரர்களின் முன்னோடி. தினமணியோ பார்ப்பனப்பத்திரிகை. இதிலிருந்துதான் ஆதாரங்களை காட்டியுள்ளோம்.
உண்மையை யார் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. பொய்யை யார் சொன்னாலும் அதைக் கண்டிப்பாக எதிர்த்தே தீருவோம். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இணையதளம் என்று எதையாவது புருடா விடுவார்களாம். மெக்காலே சொன்னான் என்று எக்காளமிடுவார்களாம். உண்மையைச் சொன்னால்மட்டும் உடம்பெல்லாம் எரியுமாம்.
நமது நாட்டில் பார்ப்பனரல்லாத பெரும்பான்மையினரைக் கல்வி அறிவில்லாதவர்களாக ஆக்கியவர்கள் பார்ப்பனர்கள்தான் என்ற உண்மையை மூடி மறைக்க அம்பி படாதபாடுபடுகிறார்.
எப்படிப்பட்ட கதையை அவிழ்த்துவிடுகிறார் அம்பி? பசியும்; திருட்டும் இல்லாமல் எல்லோரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்களாம்! 21ம் நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை என்று இதற்குப் பரிசு தரலாம்.
இவர் சொல்லக் கூடிய காலத்தில் பார்ப்பானே இல்லையா? பார்ப்பனருடைய குலத்தொழில் என்ன? பிச்சை எடுத்தல்தானே! வேதங்களும்ää ஸ்ருதிகளும்ää ஸ்மிருதிகளும் பார்ப்பனர்களுக்கும் மற்றவர்களுக்கும் விதிக்கப்பட்ட தருமங்களை ஆணியடித்துக் கூறியிருக்கின்றனவே! விஷ்ணுபுராணம் என்ன சொல்கிறது?
அந்தணர்கள் வேதாத்யனம் செய்து யாகங்கள் புரிந்து வேதம் ஓதிää நீதிதவறாத நல்வழியில் ஈட்டிய பொருளை உடையவர்களிடமிருந்து தானமாகப் பெறவேண்டும்.
சத்திரியனும் வைசியனும் பார்ப்பனருக்கு தானம் வழங்கவேண்டும்  என்பதுதானே?
தானம் பெறுவது என்றால் பிச்சை எடுத்தல்தானே! பிச்சைக்காரர்களே இல்லை என்றால் மன்னர்களால் சத்திரங்களும் சாவடிகளும் எதற்காகக் கட்டப்பட்டன? உங்கள் புராண இதிகாசத்திலேயே குசேலன் 27 பிள்ளைபெற்று பிச்சைக்காரனாய் இருந்தான் என்றுதானே கூறப்பட்டுள்ளது?
நீங்கள் பெரிதும் போற்றிப்பாராட்டும் இந்துராஜ்யம் கண்ட மராத்தியமாவீரன் சிவாஜியின் வரலாறு என்ன சொல்கிறது தெரியுமா? இந்தியரான வரலாற்று அறிஞர் சாதுநாத் சர்க்கார் என்பவர் இந்துசுயராஜ்யம் என்ற பெயரால் நடந்த அட்டூழியங்கள் குறித்துக் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.ää
~மராட்டிய மாவீரன் சிவாஜி இந்துராஜ்யத்தை அமைத்தவுடன்  சூத்திரன் பட்டம் கட்டிக்கொள்ள இயலாது என்று பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்தனர். அவனைச் சத்திரியன் ஆக்குகிறேன் என்று யாகங்கள் நடத்தினார்கள். அந்தக்காலத்திலேயே அய்ந்துகோடி பொன் செலவானது. அந்த யாகம் சரியில்லை என்றுகூறி மீண்டும் ஒரு யாகம் நடத்தப்பட்டது. இதனால் கஜானா காலியானது. கஜானாவை நிரப்ப தென்னகத்தின்மீது சிவாஜி படையெடுத்து வந்தான்.
சென்னைக்குத் தெற்கே உள்ள பணக்காரர்களிடம் தண்டப்பணம் வசூலித்தான். பணம் கொடுத்ததோடு அவர்களின் துயரம் நிற்கவில்லை. சிவாஜியின் படைவீரர்களோடு 2000 பார்ப்பனர்களும் வந்தார்கள். அவர்களிடம் காணப்பட்ட பேராசை சொல்லில் அடங்கா. சிவாஜியினுடைய படைவீரர்களும் அதிகாரிகளும் இரக்கம் சிறிதுமின்றி பயணிகளையம் நகரவாசிகளையம் கொள்ளை அடித்தார்கள். அவர்களிடம் அச்சமும் இல்லை. இரக்க உணர்வும் இல்லை.
இந்த அலங்கோலத்தைப் பயன்படுத்திக்கொண்டு உள்ளுர்க்காரர்களும் கொள்ளையடிக்கத் தொடங்கினார்கள். சிவாஜி எடுத்துச்செல்லாமல் விட்டுச்சென்ற மிச்சசொச்சத்தில் மக்களுக்குக் கிடைப்பதை அவர்கள் அபகரித்துக்கொண்டார்கள்.|  இவ்வாறு அறிஞர் சாதுநாத் சர்க்கார் எழுதுகிறார்.
திருமலைநாயக்கன் காலத்தில் மதுரையில் அட்டூழியம் செய்த கள்ளர்களை மதுரைவீரன் அடக்கினான் என்பதையும் நாம் படித்திருக்கின்றோம். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில்
மாட்டுவண்டிபூட்டிக்கிட்டு மாப்பிள்ளயக்கூட்டிக்கிட்டு காட்டுவழிபோற பொண்ணே கன்னியம்மா
உன் காசுமால பத்திரமா பாத்துக்கம்மா      என்று கட்டப்பொம்மன் பாடுவதாகக் காட்சி வரும். இது திரைப்படம் என்று ஒதுக்கி விட முடியாது. அந்தக் காலச் சூழ்நிலையை அது எடுத்துக்காட்டுகிறது என்பதுதான் உண்மை.
உண்மை இப்படியிருக்க பிச்சைக்காரர்களும் இல்லை. திருடர்களும் இல்லை என்று கூசாமல் பொய் சொல்கிறார் அம்பி.  இதற்கு மெக்காலேவைத் துணைக்கு அழைக்கிறார். இவர்களின் உண்மை உருவத்தைப் புரிந்துகொள்வீர்!

உலகமகாப் பொய்

ஆர்எஸ்எஸ் ஸின் சங்கமான பிஎம்எஸ் (புருடா மன்னர்கள் சங்கம்) தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17,2010 அன்று ஜமுக்காளத்தில் வடிகட்டி ஒரு பொய்யை அவிழ்த்து விட்டது. வெள்ளைக்காரன் வருவதற்கு முன் இந்த நாட்டில் 70 சதவிகிதம் பேர் படித்திருந்ததாகவும் வங்காளத்தில் மட்டும் 12000 பள்ளிக்கூடங்கள் இருந்ததாகவும் வெள்ளைக்காரன் வந்தபிறகு படித்தவர் எண்ணிக்கை 7 சதவிகிதமாகக் குறைந்து விட்டதாகவும் உலகமகாப் பொய்யை அவிழ்த்து விட்டார்கள். படித்தவர்கள் எல்லோரும் செத்துப் போய்விட்டார்களோ? அல்லது இந்த நாட்டை விட்டு ஓடிவிட்டார்களோ தெரியவில்லை.
அது எவ்வளவு பெரிய பொய் என்பதற்கு அண்ணல் அம்பேத்கர் வரலாற்றிலிருந்து ஆதாரங்களைத் தருகிறோம். அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளில் அதைச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.
“அக்காலத்தில் பெறற்கரிய புதையலாகக் கருதப்பட்ட இலக்கியமும் கல்வியும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரித்தாக விளங்கின. இவை இரண்டும் சாதி இந்துக்களுக்கு மறுக்கப்பட்டன. சத்தாராவின் அரசர்கூட இரவில்தான் கல்வி கற்க வேண்டும் என்ற அளவிற்குப் பார்ப்பனர்களின் அதிகாரம் அச்சமூட்டுவதாய் இருந்தது. 1821ல் பூனாவில் சமஸ்கிருதப் பள்ளி ஒன்றை மகாராட்டிர அரசு தொடங்கியது. அப்பள்ளியில் பார்ப்பனர்களைத் தவிர சாதி இந்துக்களும் சேர்த்துக் கொள்ளப் படுவதற்கு பார்ப்பனர்கள் கடுமையான வெறுப்பையும் எதிர்ப்பையும் காட்டினர். பெரும்பாலான பார்ப்பன ஆசிரியர்கள் பள்ளிகளில் இருந்து தங்கள் பதவிகளைத் தூக்கியெறிந்து விட்டு வெளியேறினர். எனினும் சாதி இந்துக்கள் பயில்வதற்கான பள்ளிகள் பையப்பைய அரசினால் நிறுவப்பட்டன. இதனால் பார்ப்பனர் அல்லாதவர்களும் பின்தங்கிய வகுப்பினரும் கல்வியிலும் அரசு வேலைகளிலும் மெல்ல மெல்ல முன்னேறினர். இதற்கான பெருமை பிரிட்டிஷ் அரசையே சேரும்.
சாதி இந்துக்களுக்கே இந்த ஈனகதி என்றால் தீண்டத் தகாத வகுப்பு மக்களின் நிலை எவ்வாறு இருக்கும்? அவர்கள் இந்தத் துறைகளில் இடம் பெறவே இல்லை. கல்வியில் இவர்கள் நெடுந்தூரம் பின்தங்கி இருந்தனர். தீண்டத் தகாதவர்களுக்குக் கல்வி தருவதன்மூலம் பார்ப்பனர்களின் பகையைத் தேடிக்கொள்ள ஆங்கிலேய ஆட்சி விரும்பவில்லை. அதனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி அளிப்பதில எப்போதும் நழுவல் போக்கும் திசை திருப்பல் முயற்சியுமே அரசிடம் இருந்தது. மேலும் அக்காலத்தில் ஆசிரியர்கள்ää பள்ளி ஆய்வாளர்கள்ää கல்வி அலுவலர்கள் ஆகிய அனைவருமே பார்ப்பனர்கள். வெகு மக்களுக்கு கல்வி தருவது என்ற சிந்தனையையே இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
கிறிஸ்தவ மத நிறுவனங்கள் இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். இவர்களுக்கு ஓர் உள்நோக்கம் இருந்தாலும் தாழ்ந்த சாதியினருக்கும் தீண்டப்படாத வகுப்பு மக்களுக்கும் கல்வி வழங்கிடத் தொடங்கினர். சாதி இந்துக்கள் படிக்கும் பள்ளிகளில் தீண்டப்படாத வகுப்புக் குழந்தைகள் சேர்க்கப்படவில்லை. பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாட் 1883ல் தாழ்த்தப்பட்டவர்களுக்கெனப் பள்ளிகளை நிறுவினார். இந்தப் பள்ளிகளில் இந்துக்கள் எவரும் ஆசிரியராகப் பணியாற்ற முன் வராததால் முஸ்லிம் ஆசிரியர்களைக் கொண்டே நடத்த வேண்டி இருந்தது”              ---(தனஞ்செய்கீர் எழுதிய அண்ணல் அம்பேத்கர் வரலாறு பக்கம் 5ää6ää7)               
இந்த இலட்சணத்தில் எழுபது சதவிகிம் பேர் யார் படித்திருப்பார்கள்? பார்ப்பனர்கள் வேண்டுமானால் படித்திருக்கலாம். வேறு யாராவது படித்திருக்க முடியுமா? நோட்டீஸ் மேல் நோட்டீஸ் போடும் பிஎம்எஸ் இதற்கு பதில் சொல்லுமா?   இது கடந்த ஆண்டு வெளியிட்ட துண்டறிக்கை. இதுவரை பதில் இல்லை. இனியாவது பதில் சொல்லுமா பிஎம்எஸ்?

வியாழன், 21 செப்டம்பர், 2017

நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்?

நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்?  ஏனெனில்
1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது
2) அதுதான் என்னை சூத்திரன் என்றது
3) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது
4) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது
5) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது
6) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது
7) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது
8) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது
9) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது
10) அதுதான் என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது
11) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது
12) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது
13) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது
14) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது
15) அதுதான் நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது
16) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது
17) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது
18) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது
19) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது
20) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது
21) அதுதான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது
22) அதுதான் என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது
23) அதுதான் என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது
24) அதுதான் என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது
25) அதுதான் என் பாட்டன் முடி வளர்க்காதே என்றது
26) அதுதான் என் பாட்டன் வளர்த்த முடிக்கும் வரி போட்டது
27) அதுதான் என் பாட்டியை நகை அணியாதே என்றது
28) அதுதான் என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது
29) அதுதான் என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது
30) அதுதான் என்னை குளத்திலே குளிக்காதே என்றது
31) அதுதான் என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகிவிடும் என்றது
32) அதுதான்; அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் தீட்டாகிவிட்டது என்று தீட்டுப் போக்கியது
33) அதுதான் என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது
34) அதுதான் என் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது
35) அதுதான் என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறுகால் மாறு கை வாங்கியது
36) அதுதான் என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றது
37) அதுதான் என்னைப் படிக்காதே என்றது
38) அதுதான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது
39) அதுதான் என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது
40) அதுதான் என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்றது
41) அதுதான் சூத்திர சம்பூகனைக் கொலை செய்தது
42) அதுதான் சூத்திர ஏகலைவனின் கட்டை விரலை வாங்கியது
43) அதுதான் என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது
44) அதுதான் என்னை தகுதி திறமை இல்லை என்றது
45) அதுதான் என்னை ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது
46) அதுதான் என்னை ஓட்டலில் பெஞ்சில் அமராதே என்றது
47) அதுதான் என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது
48) அதுதான் என்னை சாக்கடை அள்ளு என்றது
49) அதுதான் என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது
50) அதுதான் என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது
51) அதுதான் செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் போடாதே என்றது
52) அதுதான் என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது

53) அதுதான்  விவசாயம் பாவத் தொழில் என்றது
54) அதுதான் என்னை மற்ற ஜாதிக்காரர்களுக்கு தொண்டூழியம் செய் என்றது
55) அதுதான் என்னை பார்;ப்பான் கூலிகொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்றது
56) அதுதான் நான் கொலை செய்தால் எனக்கு தூக்கு. பார்ப்பான் கொலை செய்தால் அவனுக்கு மொட்டை அடித்தால் போதும் என்றது
57) அதுதான் சூத்திரனுக்கும் பெண்களுக்கும்  சொர்க்கத்திலும் இடம் இல்லை என்றது
58) அதுதான் பெண்களை ஆணின் உடைமை என்றது
59) அதுதான் பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என்றது
60) அதுதான் ஆணுக்குப் பெண் அடிமை என்றது
61) அதுதான் பெண்களைப் படிக்காதே என்றது
62) அதுதான் பெண்ணுக்கு சொத்துரிமை கூடாது என்றது
63) அதுதான் பெண்ணை விதவை என்று ஆக்கி கொடுமைப்படுத்தியது
64) அதுதான் பெண்ணை உடன்கட்டை ஏற வைத்தது
65) அதுதான் பெண்ணை குழந்தையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொடுத்துவிடு என்றது
66) அதுதான் வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றது
67) அதுதான் விதவைப் பெண்களை தரிசுநிலம் என்றது
68) அதுதான் சூத்திரன் நாட்டை ஆளக்கூடாது என்றது
69) அதுதான் சூத்திரன் ஆளும் நாட்டில் பார்ப்பான் வசிக்கக் கூடாது என்றது
70) அதுதான் நாட்டை சூத்திரன் ஆண்டால் அவனைக் கொன்றுவிட வேண்டும் என்றது
71) அதுதான் சூத்திரன் ஆளும் நாடு சதுப்பு நிலத்தில் சிக்கிய பசுப்போல அழிந்துவிடும்
என்றது
72) அதுதான் சூத்திரன் சட்டத்துக்குப் பொருள் சொல்லக்கூடாது என்றது
73) அதுதான் சூத்திரன் நீதி விசாரணை செய்யக் கூடாது என்றது
74) அதுதான் சூத்திரன் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்றது
75) அதுதான் பார்ப்பான் பட்டினியாக இருக்கக் கூடாது என்றது
76) அதுதான் பறையனும் பிணமும் ஒன்று என்றது
77) அதுதான் பறையனைத் தொட்டாலும் குளிக்க வேண்டும் என்றது
78) அதுதான் பிணத்தைத் தொட்டாலும் குளிக்க வேண்டும் என்றது
79) அதுதான் ஒரு பார்ப்பான் சாப்பிடுவதை சூத்திரன் பார்த்தால் தோஷம் என்றது
80) அதுதான் சாதியை இன்னும் பாதுகாத்து வருகிறது
81) அதுதான் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆகக் கூடாது என்கிறது
82) அதுதான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆனால் சாமி செத்துப் போகும் என்கிறது
83) அதுதான் சூத்திரன் சாமியாராக ஆக முடியாது என்றது
84) அதுதான் சாதித்தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் செய்யக்கூடாது என்றது
85) அதுதான் உழைத்துக் கொடுப்பவனைக் கீழ்ஜாதி என்றது
86) அதுதான் உழைக்காமல் உண்டுகொழுக்கும் பார்ப்பானை உயர் ஜாதி என்றது
87) அதுதான் இந்த உலகமே பார்ப்பானுக்காகவே படைக்கப்பட்டது என்றது
88) அதுதான் உலகில் உள்ள செல்வம் அனைத்தும் பார்ப்பனருக்கே சொந்தம் என்றது
89) அதுதான் சூத்திரன் சொத்து வைத்திருந்தால் பார்ப்பான் எடுத்துக்கொள்ளலாம் என்றது
90) அதுதான் பார்ப்பான் சூத்திரனின் சொத்துக்களைப் பறிக்க கலியாணம் கருமாதி திதி தெவசம் கோயில் திருவிமா தேர் என்று அனைத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது
91) அதுதான் சாதிக்கொரு வீதி என்று பிரித்து வைத்திருக்கிறது
92) அதுதான் சாதிக்கொரு சுடுகாடு என்று கூறுபோட்டிருக்கிறது
93) அதுதான் ஜாதி மாறிக் கல்யாணம் செய்யாதே என்கிறது
94) அதுதான் ஜாதி மாறிக்கல்யாணம் செய்தால் ஆணவக்கொலை செய்யச் சொல்கிறது
95) அதுதான் பார்ப்பானே தெய்வம் என்கிறது
96) அதுதான் பார்ப்பானை அனைவரும் வணங்கவேண்டும் என்கிறது
97) அதுதான் ஆண்டவனுக்கும் மேலே அந்தணன் என்றது
98) அதுதான் அரசனுக்கும் மேலே பார்ப்பான் என்றது
99) அதுதான் பார்ப்பான் சொல்படிதான் அரசன் ஆள வேண்டும் என்கிறது
100) அதுதான் கடவுளர்களே பார்ப்பானை வணங்குகிறார்கள் என்றது
இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகளை இழைத்தது. இவை அனைத்திற்கும் மனுதர்மத்திலும் இதிகாச புராணங்களிலும் ஆதாரம் உள்ளது. அந்த இந்து மதத்தை நான் எதிர்க்க இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்க நான் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூறுங்களேன்.
இப்படிக்கு: மானமுள்ள சுயமரியாதைக்காரன்

வியாழன், 14 செப்டம்பர், 2017

கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தியவர்கள் யார்?

ஆகஸ்ட்07
கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தியவர்கள் யார்?

விவரங்கள்
எழுத்தாளர்: வாலாசா வல்லவன்
தாய்ப் பிரிவு: தலித் முரசு
பிரிவு: ஆகஸ்ட்07
 வெளியிடப்பட்டது: 03 மே 2010
இந்து மதம்
அம்பேத்கர்
கோயில் நுழைவுப் போராட்டம்இ வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பேசப்பட்டிருக்கிறது. இந்து மதத்தைப் பொறுத்தவரைஇ கோயில் கர்ப்பக்கிரகம்தான் சாதிய ஏற்றத் தாழ்வுகளின் பிறப்பிடமாகஇ உற்பத்திக் கேந்திரமாக இன்றளவும் விளங்குகிறது. எனவேஇ பாகுபாட்டின் - தீண்டாமையின் தோற்றுவாயில் சமத்துவத்தைக் கோரும்போதுஇ அதில் வெற்றி பெறும்போதுஇ சமூகத்தின் பிற நிலைகளில் இயல்பாகவே சமத்துவம் மிளிரும். அதனால்தான் கடவுளை மறுத்த பெரியார்கூடஇ கோயில் நுழைவு மற்றும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார். அர்ச்சகர் பதவிகளை ஜனநாயகப்படுத்துவது என்பதுஇ சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கான முதற்படி என்பதே அம்பேத்கரின் கருத்துமாகும்.

தற்பொழுது கோயில் நுழைவுப் போராட்டங்களை பார்ப்பனர்களும்இ தேவர்களும் முன்னின்று நடத்தியதாக ஆதாரமின்றி கட்டுக் கதைகள் ("தினமணி' - 8.7.2007; இல. கணேசன் பேட்டி - "புதிய பார்வை'இ ஆகஸ்ட் 2007) வெளிவரத் தொடங்கியுள்ளன. எனவேஇ கோயில் நுழைவுப் போராட்டங்கள் தொடர்பான வரலாற்றுப் பின்னணியை உற்று நோக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில்இ கோயில் நுழைவுக்கான முயற்சி 1872களிலேயே தொடங்கிவிட்டது. இதை நாடார் சமூகம் முன்னின்று நடத்தியது. பார்ப்பனரல்லாதார் இயக்கம்இ நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம்இ 30.11.1917 அன்று நெல்லையில் நடைபெற்ற நீதிக்கட்சி தென்மண்டல மாநாட்டில்இ இந்து கோயில்களுக்குள் இந்து நாடார்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. "ஆதிதிராவிடர் பொது இடங்களில் நடப்பதைத் தடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்; அதற்கு ஒரு சட்டம் இயற்ற வேண்டும்' என எம்.சி. ராஜா 1921இல் கோரிக்கை வைத்தார்.

நீதிக்கட்சி அரசு 1925 இல் இயற்றிய இந்து அறநிலையத் துறைச் சட்டத்தின்படி நாடார்களும்இ ஆதிதிராவிடர்களும் கோயில்களில் அறங்காவலர் குழுவில் அங்கம் வகிக்க வழிவகை செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் பெரியார் காங்கிரசில் வகுப்புரிமைக்காகப் போராடிஇ இனி காங்கிரசை ஒழிப்பதே என் வேலை என்று வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். 1926 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றது. திராவிடர் இயக்கத்தின் சார்பில் முதல் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியவர் ஜே.எஸ். கண்ணப்பர். திருவண்ணாமலை கோயிலில் 7.2.1927 அன்று அவர் கோயில் நுழைவு செய்தார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 30.4.1928 அன்று வழக்கு முடிவுற்றது. கோயில் குருக்கள் கண்ணப்பர் வரும்போது கதவை மூடிச் சென்றதால் ராமநாத சாஸ்திரிஇ குப்புசாமி குருக்கள் ஆகியவர்களுக்கு தலா ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டது; கண்ணப்பருக்கு ரூ. 100 இழப்பீடு அளிக்கவும் உத்தரவிடப்பட்டது ("குடி அரசு' 6.5.28).

1929 ஏப்ரலில் குத்தூசி குருசாமி முயற்சியில் ஈரோடு ஈஸ்வரன் கோயிலில்இ கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் வழக்கு நடத்திஇ சுயமரியாதை இயக்கத்தினர் வெற்றி பெற்றனர். 1929 மே 26 அன்று அண்ணல் அம்பேத்கர் தலைமையில் நாக்பூரில் சுயமரியாதை மாநாடுஇ உண்மை நாடுவோர் சங்கம் மூலம் நடத்தப்பட்டது. அம்பேத்கரை பற்றிய சிறப்பான அறிமுகத்துடன் அவருடைய தலைமை உரையை "ரிவோல்ட்' ஏடு (23.6.1929) வெளியிட்டது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 3.3.1930 அன்று நாசிக் காலாராம் கோயிலில் சத்தியாகிரகத்தை நடத்தினார். 500 பெண்கள் உள்பட 8இ000 பேர் இதில் பங்கேற்றனர். 2.5.1932 அன்று சென்னை ஆதிதிராவிடர் சங்கத்தை சேர்ந்தவர்கள்இ மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் நுழைந்து பூசை செய்து வழிபட்டனர். அதே போல திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும் பண்டிதர் அயோத்திதாசர் மகன் பட்டாபிராமன் தலைமையில் ஆதிதிராவிடர்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்திவிட்டு வந்தனர். "ஒன்றும் குடிமுழுகிப் போய் விடவில்லை' என 3.5.32 "திராவிடன்' ஏடு எழுதியது.

இவ்வாறு எண்ணற்ற முயற்சிகள்இ சாதி ஒழிப்பையும்இ உரிமை வேட்கையையும் மய்யமாகக் கொண்டுஇ கோயில் நுழைவுப் போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

31.1.1933 அன்று டாக்டர் சுப்பராயன்இ சென்னை சட்டமன்றத்தில் கோயில் நுழைவு உரிமைக்கான சட்டவரைவு ஒன்றை கொண்டு வந்தார். அப்போது சுப்பராயன் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார். நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. "சுப்பராயன் எதிர்க் கட்சியைச் சார்ந்தவர் என்ற காரணத்தினால்இ நீதிக்கட்சியினர் இதை ஆதரிக்காமல் விட்டுவிடக் கூடாது. இம்மசோதாவை கட் டாயம் ஆதரிக்க வேண்டும்' என்று மசோதா வரும் முன்பே பெரியார் எழுதினார் ("குடி அரசு' - 10.11.32). இம்மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் உட்படப் பலரும் பேசினர். நீதிக் கட்சியில் சிலர் ஆதரித்தனர்இ சிலர் நடுநிலை வகித்தனர். மசோதாவுக்கு ஆதரவாக 56 வாக்குகளும் நடுநிலையாக 19 வாக்குகளும் பதிவாயின. எதிர்ப்பு என்பதே இல்லை. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு வைசிராய் ஒப்புதல் கொடுக்காத காரணத்தால்இ இது சட்டமாக்கப்படவில்லை.

சுப்பராயன் மசோதாவிற்கு மாற்றாக ரங்க அய்யர் கோயில் நுழைவு மசோதா ஒன்று டெல்லி சட்டசபையில் (பார்லிமெண்ட்) 24.3.1933 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் பல குறைபாடுகள் இருந்தன. இதனால் இதை அம்பேத்கர் ஆதரிக்க மறுத்தார். காந்தி இதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய ஜி.டி. பிர்லாஇ ராஜாஜிஇ தேவதாஸ் காந்தி ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தார். 1935இல் தேர்தல் வருவதைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் இம்மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமலேயே குழி தோண்டி புதைத்தனர்.

சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சி 1937 தேர்தலில் தோல்வி கண்டது. 1937இல் ராஜாஜி முதல் அமைச்சரானார். எம்.சி. ராஜா அப்போது அவர்களுடன் இருந் தார். 15.8.1938 அன்று எம்.சி. ராஜா கோயில் நுழைவு மசோதா ஒன்றை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துஇ "டாக்டர் சுப்பராயன் மசோதாவிற்குஇ கவர்னர் ஜெனரல் ஒப்புதல் தரவில்லை. ரங்க அய்யர் மசோதா புதைக்கப்பட்டது. எனவேஇ கோவில் நுழைவு உரிமைக்காக நான் இப்போது இந்த மசோதாவை தாக்கல் செய்கிறேன்'' என்றார். முதல்வர் ராஜாஜிஇ "வேண்டாம் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்' என்றார். எம்.சி. ராஜாஇ முடியாது விவாதத்திற்கு எடுத்துக் கொண்டே ஆக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். உடனே ராஜாஜி இந்த மசோதாவை எதிர்த்துப் பேசிவிட்டு வாக்கெடுப்புக்கு விட்டார். இதற்கு 24 பேர் ஆதரவு தெரிவித்தனர்; 130 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். கோயில் நுழைவில் ராஜாஜியின் அக்கறையும்இ யோக்கியதை யும் இவ்வளவுதான்.

காங்கிரஸ் இயக்கம் 1885இல் தொடங் கப்பட்டது. 1916 வரையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளில்இ தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. 1917இல் அன்னி பெசன்ட் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில்தான் தீண்டாதார் பிரச்சனை பற்றி பேசப்பட்டது. 1919க்குப் பிறகு காந்தி காங்கிரசை கைப்பற்றுகிறார். காந்தி வர்ணசிரம ஆதரவாளர்இ அழுத்தமான இந்து சனாதனிஇ வெளிவேடத்திற்கு தீண்டாமை ஒழிப்பைப் பற்றி பேசி வந்தவர்.

"தீண்டாதார்களுக்கு நான் கூறும் பொதுவான யோசனை என்னவென்றால்இ தீண்டாமை தீமை நடைமுறையில் இருக்கும் வரையில்இ அவர்கள் ஆலயப் பிரவேச உரிமையை சோதனை செய்து பார்க்க வேண்டாமென்பதுதான். கர்ப்பகிரகத்திற்குள் செல்லும்படி நான் யாருக்கும் யோசனை கூறியதே இல்லை'' ("யங் இந்தியா' - 8.12.1927).

யார் இந்த மதுரை வைத்தியநாத அய்யர்? 1922இல் திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் நாடார்கள் கோவில் நுழைவு தீர்மானம் கொண்டு வந்தால்இ காங்கிரசை விட்டே விலகி விடுவேன் என மிரட்டி தீர்மானம் நிறைவேறாமல் செய்தவர். சேரன் மாதேவி குருகுலப் போராட்டத்தில்இ பார்ப்பன சிறுவர்களோடு மற்ற சாதிச் சிறுவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தலாம் எனத் தீர்மானம் கொண்டு வந்தவுடன் காங்கிரஸ் காரிய கமிட்டியிலிருந்து விலகியவர். இந்நிலையில்இ மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அவர் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்றார் என்ற கூற்றில் உண்மை இருக்க முடியுமா?

1939 சூலை 8 அன்று வைத்திய நாத அய்யர்இ அமைச்சர் டி.எஸ்.எஸ். ராஜன் வருவதாகச் சொல்லிஇ குருக்களை இரவு இருக்கச் சொல்லியிருந்தார். இரவு 8.45 மணிக்கு 5 ஆதிதிராவிடர்களையும்இ ஒரு நாடாரையும் வைத்தியநாத அய்யர் (அய்ந்து ஆதிதிராவிடர்கள் : சுவாமி முருகானந்தம்இ பி. கக்கன்இ முத்துஇ சின்னையாஇ ஆர். பூவாலிங்கம்இ விருதுநகர் நகர மன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சண்முக நாடார்) அழைத்துச் சென்றார் (ஆதாரம் : "தமிழ் நாட்டில் காந்தி' பக். 624). அதற்குப் பிறகு வெளியில் வந்து "அரிசன ஆலயப் பிரவேசம்' நடந்துவிட்டதாக அறிவித்தார். இதை அறிந்த பட்டர்கள்இ கோயிலைப் பூட்டி விட்டுச் சென்றனர். அங்கு அறங்காவலராக இருந்த ஆர்.எஸ். நாயுடுஇ நீதிக் கட்சிக்காரர். எனவேஇ அவர் மறுநாள் பூட்டை உடைத்து கோயிலைத் திறந்து விட்டார். "இரவு 8.45 மணிக்கு மந்திரி வருகிறார் என்று சொல்லி கோயில் பட்டரை ஏமாற்றி கூட்டிக் கொண்டுஇ நிர்வாகி ஆர்.எஸ். நாயுடு வந்தார். அந்நேரம் பார்த்து கோயிலுக்குள் நுழைந்த வைத்தியநாதய்யரிடம் பட்டர் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு தீபாராதனை காண்பித்து விபூதி கொடுத்தார். அதன் பின்னரே அவருடன் வந்தவர்கள் - அய்ந்து பஞ்சமரும் ஒரு நாடாரும் எனத் தெரிந்தது என வர்ணாசிரம சங்கம் சார்பில் துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது'' ("விடுதலை' - 13.7.1939).

கோயில் நுழைவை பகிரங்கமாக நடத்தும் நோக்கமும் துணிவுமின்றிஇ இரவு 8 மணிக்கு மேல் கோயில் நுழைவு நாடகமாடியதற்குக் காரணம் என்ன என்பதை பெரியார் விளக்குகிறார் : "தேர்தல் வந்ததுஇ கதவும் திறந்தது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மனதிற்கொண்டே வைத்தியநாதய்யர் நாடகமாடினார். இதுஇ ராஜாஜியின் சூழ்ச்சி. இதனால் ஆதிதிராவிடர்களுக்கு நிரந்தரப் பயன் எதுவும் இல்லை. செய்கிற சட்டத்தை ஒழுங்காகவும் நன்றாகவும் செய்ய வேண்டும் என பெரியார் வேண்டுகோள் விடுத்தார்'' ("விடுதலை'இ 12.7.1939).

நடேச அய்யர் தலைøமயில் வைதிகர் கள் கோயில் நுழைவை எதிர்த்து வழக்கு தொடுத்தனர். இதிலிருந்து வைத்தியநாத அய்யரைக் காப்பாற்றவேஇ ராஜாஜி ஆலய நுழைவு அவசர சட்டம் ஒன்றை இயற்றினார். பின்பு அது சட்டமாக்கப்பட்டது. இதனால் அவர்கள் கைது செய்யப்படாமல் காப்பாற்றப்பட்டனர். இதைத்தான் வரலாறு படைத்த ஆலயப் பிரவேசம் என்று வி.கே. ஸ்தாது நாதன் 7.7.07 அன்று "தினமணியில்' எழுதியிருக்கிறார். இதைவிட ஒரு பெரிய மோசடி என்னவென்றால்இ 8.7.07 அன்று "தினமணி'யில் "மீனாட்சி அம்மன் கோயிலில் 68 ஆண்டுகளுக்கு முன் தீண்டாமையை அகற்றிய அரிஜன ஆலயப் பிரவேசம்' என்று ஒரு படத்தை வெளியிட்டுள்ளதுதான். உண்மையில் அந்தப்படம்இ ஆலயப் பிரவேசம் நடந்ததாக சொல்லப்படும்போது எடுக்கப்பட்ட படமல்ல. வேறு எங்கோ எடுக்கப்பட்ட படம் அது.

இதைவிட ஒரு பெரிய கொடுமைஇ விடுதலைச் சிறுத்தைகள் மண்ணுரிமை மாநாட்டில் இயற்றிய தீர்மானம். "காந்தியார் கோயில் நுழைவு நடத்தச் சொன்னதாகவும்இ வைத்தியநாத அய்யர் தலைமையில் அது நடந்ததாகவும்இ அவருடன் முத்துராமலிங்கத் தேவர் இருந்ததாகவும் - அதனால் அந்த நாளில் கோயில் நுழைவை நடத்த வேண்டும்' என்றும் "நமது தமிழ்மண்' (சூலை 2007) தலையங்கம் கூறுகிறது. இந்த கோயில் நுழைவுப் போராட்டம் நடந்த காலத்தில் முத்துராமலிங்கத் தேவர் சட்டமன்ற உறுப் பினர். அவர் அதில் கலந்து கொண்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. அவர்இ சத்தியமூர்த்தி அய்யரின் ஆதரவாளர். போராட்டம் நடத்திய வைத்திய நாத அய்யரோ ராஜாஜியின் சீடர். காங்கிரஸ் உட்கட்சிப் பூசல் இருந்த நேரம் அது. வைத்திய நாதய்யரே கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தவில்லை என்னும்போதுஇ அதில் முத்துராமலிங்கத்திற்கு இடமேது?

அண்ணல் அம்பேத்கரின் காலாராம் கோயில் போராட்டமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குறியீடாக இருக்க முடியும். சாதி இந்துக்கள் நடத்தாத ஒரு போராட்டத்தைக் கொண்டாடுவதுஇ வரலாற்றை முன்மொழிவதாகாது; வரலாற்றைப் பிழையாக
மொழிவதிலேயே அது முடியும்.

நாளேடுகள் வெளியிடும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு மறுப்பு


 வெளியிடப்பட்டது: 09 செப்டம்பர் 2014
திராவிடம்
நாளேடுகள் வெளியிடும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு மறுப்பு

தமிழ்நாட்டில் முதன்முதல் தாழ்த்தப்பட்டோரை கோயிலுக்குள் அழைத்துச் சென்று போராடியவர் மதுரை வைத்தியநாத அய்யர் என்றுஉண்மைக்கு மாறான ஒரு வரலாற்றை சிலநாளேடுகள் பதிவு செய்து வருகின்றன. கடந்த ஜூலை 8 ஆம் தேதி ஆலயப் பிரவேசம் நிகழ்ந்தநாள் என்று ‘தினத்தந்தி’ ஒரு கட்டுரை வெளியிட்டது. இதே தவற்றை ‘தினமணி’யும் தொடர்ந்துசெய்து வருகிறது. இதை மறுத்து முதன்முதலாக கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியது சுயமரியாதை இயக்கம் தான் என்ற வரலாற்றைஆதாரங்களுடன் விளக்கிஇ மேட்டூர் கழகத் தோழர் மே. கா. கிட்டுஇ ‘தினத்தந்தி’ நாளேட்டுக்கு எழுதினார்.

‘தினத்தந்தி’ வெளியிடாத அந்தக்கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவுசெய்கிறது. கடந்த 08. 07. 2014 அன்று ‘தினத்தந்தி’யில் வி. கே. ஸ்தாணுநாதன் அவர்களால் எழுதப்பட்ட “ஆலயபிரவேசம் நிகழ்ந்த நாள்” கட்டுரையை வெளியிட்டிருந்தீர்கள். அதில்இ “1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதிமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சகோதரர்கள் நால்வருடனும் அந்நாளில் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நாடார்களுடனும் வைத்தியநாத ஐயர் பக்தி விசுவாசத்தோடு மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பிரவேசித்து சாமி தரிசனம்செய்தார்” என்று எழுதியுள்ளார் கட்டுரையாளர்.

இப்பொழுது மட்டுமல்லஇ 23. 02. 1997 ஆம் ஆண்டு‘தினமணி’யில் “ஆலயப் பிரவேசத்தின் முன்னோடி”என்ற தலைப்பிலும் மதுரை மீனாட்சியம்மன்கோவிலில் நடந்ததுதான் முதல் கோவில் நுழைவுப்போராட்டம் என்றும்இ போராட்டத்தின் முன்னோடிவைத்தியநாதர் அய்யர் என்றும் எழுதியிருந்தார். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டம் பற்றியஉண்மைகளைத் தெரிந்தே திட்டமிட்டு மறுத்து வி. கே. ஸ்தாணுநாதனால் எழுதப்பட்ட கட்டுரைக்குமறுப்புத் தெரிவித்து உண்மையான வரலாற்றை எழுதிஇ கடிதமாக பெரியாரியக்கத் தோழர்கள் அனுப்பினார்கள்.

மறுப்புக் கட்டுரையை ‘தினமணி’ நாளேடு வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாசகர் கடிதம் பகுதியிலும்கூட மறுப்பை வெளியிடவில்லை. மீண்டும் ‘தினமணி’ 08. 06. 2005 இல் அதே ஸ்தாணுநாதன் எழுதிய “வரலாறு படைத்த நிகழ்ச்சி” என்ற கட்டுரையில் மதுரையில் வைத்தியநாத அய்யர் நடத்திய கோவில் நுழைவுக் கிளர்ச்சிப் பற்றிய செய்தியை வெளியிட்டது. முன்பு எழுதிய கட்டுரையில் இருந்த அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையிலேயே அந்தக் கட்டுரையும் அமைந்திருந்தது. இதையெல்லாம் மறுத்து பெரியாரியக்கத் தோழர்களால் 2005 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டை பெரியார் பாசறை வெளியீட்டின் மூலம் குத்தூசி குருசாமி நூற்றாண்டு நினைவாக ஒரு சிறு நூலையும் வெளியிட்டார்கள்.

கட்டுரையாளரின் பொய் வரலாறு ‘தினமணி’யிலிருந்து ‘தினத்தந்தி’க்கு மாறியிருக்கிறது அவ்வளவுதான். தொடர்ந்து ஒரே பொய் வரலாற்றை மாறி மாறி எழுதுகிறார். ஈழத் தமிழர் வரலாற்றை பிரசுரித்து அதை நீங்கள் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளீர்கள். இங்குள்ள தமிழர்களின் வரலாற்றை தவறாக உங்கள் இதழ்களில் இனிமேலும் வரக்கூடாது என்பதற்காகத்தான் இதை எழுதுகிறேன். இதை பிரசுரிப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

• சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 18. 01. 1926 இல்கோவில் நுழைவுக்கென்று சுசீந்திரம் கோவிலில் தான் கிளர்ச்சி துவக்கப்பட்டது.

• முதல் கோவில் நுழைவுப் போராட்டத்தைத்தொடங்கியவர் ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே. எஸ். கண்ணப்பர். இவர் 07. 02. 1927இல் திருவண்ணாமலை கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்றார். அவரை கோவிலுக்குள் வைத்து பூட்டினர். அவர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும்மேலாக வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையில் கண்ணப்பருக்குச் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டது. (‘குடிஅரசு’ 6. 5. 1928)

• 1927 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கமுன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜே. என். இராமநாதன் தாழ்த்தப்பட்டோரை அழைத்துக்கொண்டு திருச்சி தாயுமானவர். மலைக்கு படியேறிச் சென்றபோது அவர்கள் குண்டர்களால் தடியால் அடித்து பாறைப்படிகளில் உருட்டிவிடப்பட்டார்கள். (‘கேசரி’ 71இ 73 ஐசளஉhமைஇ 339)

• அன்றைய சுயமரியாதை இயக்க செயற்பாட்டாளர் கி. ஆ. பெ. விசுவநாதம் தலைமையில்1927இல் சுமார் 1000 பேர் அனைத்துச் சாதியினருடன் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் நுழையச் சென்றனர். நுழை வாயிலையும்கருவறையையும் கோவில் நிர்வாகிகள்பூட்டிவிட்ட போதிலும் பக்கவாட்டுக் கதவுகள்சென்று ‘மணிக்கதவம் தாழ் திறவாய்’என்ற திருநாவுக்கரசர் பாடலை பாடினார்.

• 25. 06. 1928 இல் திருச்சி மலைக்கோயிலிலும்12. 08. 1928இல் திருவானைக்கோவிலிலும்அத்தகைய முயற்சிகள் நடத்தப்பட்டன.

•தந்தை பெரியார் 1922 ஆம் ஆண்டு திருப்பூர்காங்கிரசு மாநாட்டில் கோவில் நுழைவு - பொதுஉரிமைகள் வேண்டுமெனத் தீர்மானம் கொண்டுவந்தவர்.

• 1929 மார்ச் 12-ந் தேதி “ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதி திராவிடர் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும்” என்று தேவஸ்தானகமிட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரதேவஸ்தான கமிட்டித் தலைவரான தந்தைபெரியார் முன்னின்றார். அதற்கு அடுத்த நாளேபெரியார் கோவை சென்று விடுகிறார். தேவஸ்தானக் கமிட்டியின் தீர்மானத்தை குத்தூசிகுருசாமி நடைமுறைப்படுத்தத் துணிந்தார்.

பெரியாரின் துணைவியார் நாகம்மையாரின் துணையோடு குத்தூசி குருசாமிஇ பொன்னம்பலனார் மற்றும் ஈரோடு கச்சேரி வீதி ஈஸ்வரன்இ மஞ்சமேட்டான் மகன் பசுபதிஇ கிருஷ்ணம் பாளையம் கருப்பன் ஆகிய 3 தாழ்த்தப்பட்ட தோழர்களை நெற்றியில் திருநீறு பூசச் செய்து முக்கிய தெருக்களின் வழியாக அழைத்துக் கொண்டுச்சென்று தேங்காய்இ பழம்இ பூ ஆகியவை அடங்கியதட்டுடன் கோவிலுக்குள் நுழைந்தார்கள். குத்தூசிகுருசாமியும் தோழர்களும் கோவிலுக்குள்இருக்கும்போதே வெளிக்கதவை இழுத்து மூடிவிட்டனர்.

இரண்டு நாள்கள் பூட்டிய கதவைத் திறக்கமறுத்து விட்டனர். இரண்டு நாள்களுக்குப் பின் பெரியார் வந்த பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. குத்தூசி குருசாமி மற்றும் தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டது.

இது தொடர்பான வழக்குகள் குறித்த செய்திகளை ‘குடிஅரசு’ (21. 4. 1929) பதிவு செய்துள்ளது. 9 மாதங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு ஈசுவரன்இ பசுபதிஇகருப்பன் ஆகியோருக்கு ரூ. 60 அபராதம் விதிக்கப்பட்டது. ஈசுவரன் மட்டும் அபராதம் கட்டமறுத்து சிறை ஏகினார். ‘குடிஅரசு’ இதைப்பாராட்டிஇ ஆலயப் பிரவேச சரித்திரத்தில் தோழர்ஈசுவரன் பெயர் முதல் பெயராக இடம் பெறும் என்றுபாராட்டி எழுதியது.

ஈரோடு கோவில் நுழைவு வழக்கில் ஈரோடுநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதே காலகட்டத்தில் சுசீந்திரத்தில் கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடந்து சென்றதற்காக திருவாங்கூர் நீதிமன்றத்தால் ஒடுக்கப்பட்ட வகுப்பைச்சார்ந்த 12 பேர் தண்டிக்கப்பட்டிருந்தனர். அந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு வழக்குகளிலும் தண்டனையைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு இடங்களில் கோயில் நுழைவுப் போராட்டங்களைச் சுயமரியாதை இயக்கத் தோழர்கள் மேற்கொண்டனர். ஈரோட்டில் கண்ணப்பரும்இ காரைக்குடியில் சொ. முருகப்பாவும் தலைச்சேரியில் டபிள்யூ. பி. ஏ. சவுந்தரபாண்டியனும்இ திருவல்லிக்கேணி பார்த்தசாரதிஇ மயிலை கபாலீசுவரர் கோவில்களில்‘திராவிடன்’ ஆசிரியர் சுப்ரமணியன்இ பண்டிதர் திருஞானசம்பந்தன் தலைமையிலும்இ ஆதி திராவிடர்கள்‘ஆலயப் பிரவேசம்’ செய்து கைதானார்கள்.

சென்னைச் சட்டமன்றத்தில் 01. 11. 1932 இல்டாக்டர் சுப்பராயன் அவர்கள் கோவில் நுழைவுமசோதாவைக் கொண்டு வந்தார். அந்த மசோதாவை ஆதரிக்க வேண்டியது நீதிக் கட்சியினரின் கடமை என்று மசோதா வருவதற்கு முன்பே பெரியார் 30. 10. 1932 ‘குடிஅரசில்’ தலையங்கம் எழுதினார். இவ்வளவு நீண்ட நெடிய வரலாறுகள் இருக்கும்பொழுது 1939 ஆம் ஆண்டு செய்த செயலா முதன்மையானது?
யார் இந்த வைத்தியநாத அய்யர்?

வைத்தியநாத அய்யர்இ திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் (1922) பெரியார் கொண்டு வந்த தீண்டப்படாதார் கோவில் நுழைவுத் தீர்மானத்தைஎதிர்த்தவர். இதை திரு.வி.க. தனது வாழ்க்கைக் குறிப்பில் பதிவு செய்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இவர் நடத்திய ஆலயப்பிரவேசம்இ அன்று நடக்கவிருந்த மதுரைஇஇராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது.

கோவிலில் யாருக்கும் தெரியாமல்இ இரவு நேர கடைசிபூஜைக்குப் பிறகுஇ சில தாழ்த்தப்பட்டவர்களுடன் உள்ளே நுழைந்தார். இதற்கு உறுதுணையாக இருந்ததோடு கருவறையை பூட்டிவிட்டு ஓடிய பார்ப்பனர்கள் மீது நடவடிக்கையும் எடுத்தவர்இ கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர். எஸ். நாயுடு என்ற நீதிக்கட்சிக்காரர். வரலாற்றுப் பிழையான கட்டுரைக்கு வரலாற்று ஆதாரங்களோடு எழுதியுள்ளேன்.

தமிழ் தமிழ்நாடு தமிழனுக்காக பத்திரிகை நடத்துபவராகிய நீங்கள் தமிழனுடைய வரலாற்றைத் தவறாகப் பிரசுரித்ததற்காக அந்த களங்கத்தைத் துடைக்கும் வண்ணம் இதை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு கழகத் தோழர் மே.கா.கிட்டு ‘தினத்தந்தி’ ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்