ஞாயிறு, 30 ஜூலை, 2017

MYogiAdityanath ஆளும் உபி யில்

பாரத பண்பாடு & கலாச்சாரம் என்று ஒரு மயிரும் கிடையாது..
ஒரு காதல் ஜோடி ஒன்றாக வருகிறது, அப்போது அவர்களை ஒருக் கூட்டம் வழி மறிக்கிறது.. பின்பு நீங்கள் என்ன ஜாதி என்று கேட்கிறார்கள்.. அதற்கு அந்த காதலர்கள் தங்கள் ஜாதியினை சொல்கிறார்கள் (தலித்)..
உடனே அந்தக் கும்பல் அந்த காதலர்களின் உடைகளை முழுமையாக களைகிறார்கள்.. காலணிகளையும் கழட்டச் சொல்கிறார்கள்.. அவர்கள் இருவரும் முழு நிர்வாணம் ஆகிறார்கள்.. சுட்டெரித்து கொளுத்தும் வெயில்!!!
பிறகு நிர்வாணமான இருவரையும் அந்தக் கும்பல் கம்பு மற்றும் தடியால் பலமாக தாக்குகிறார்கள்.. கூட்டத்தில் சிலர் தாரை, தப்பட்டை அடித்து உற்சாகம் அளிக்கிறார்கள்,, கோஷம் எழுப்புகிறார்கள்..
பிறகு,
காதலனை அந்த முழு நிர்வாணப் பெண்ணை துக்கி தோளில் வைத்து நடக்கச் சொல்கிறார்கள், அவனும் நடக்கிறான், ஒரு கும்பலுக்கு நடுவே தன் முழு நிர்வாண காதலியை சுமந்து தானும் நிர்வாணமாய் கொளுத்தும் வெயிலில் நடக்கும் அவனை அந்த கும்பல் கம்புகளால் கோஷம் எழுப்பியபடி தாக்குகிறார்கள்..
அவள் அவமானம் மற்றும் வலியால் கதறுகிறாள்.. சிறிது தூரம் சென்ற பிறகு அந்த பெண்ணிடம் அவனை சுமக்க சொல்கிறார்கள்.. அவளும் தன்னுடைய முழு நிர்வாண காதலனை தனது தோளில் சுமந்து நடக்க ஆரம்பிக்கிறாள்.. அப்போது அந்தக் கும்பல் அவளுடைய முழு நிர்வாண உடலில் தாக்குகிறார்கள்..
பாவம் அவள் பெண் என்ன செய்வாள்!!! சிறிது தூரம் தூக்கி சென்று பின்பு சுருண்டு விழுந்துவிட்டாள்.. கீழே விழுந்த அவர்களை அந்த கும்பல் மீண்டும் கொடூரமாக தாக்குகிறது.. தாரை, தப்பட்டை அடிக்கிறார்கள், கோஷம் எழுப்பி ஆனந்தம் கொள்கிறார்கள்..
இந்த முழு சம்பவத்தையும் அதே கூட்டத்தில் இருந்த சிலர் சிரித்துக் கொண்டே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போட்டு விட்டனர்!!!
தன் காதலியை சுமந்த அவனை அவனுடைய ஆணுறுப்பில் கம்பினை வைத்து தாக்கினார்கள்,, அவளையும் விடவில்லை, அவளது பெண்ணுறுப்பிலும் தாக்கினார்கள்..
வீடியோவை முழுவதும் பார்த்தேன். கண்ணீருடன் கலந்த அளவுக்கதிகமான கோபம்.. வீடியோவையே பதிவிடலாம் என்றே நினைத்தேன்.. ஆனால் ஏனோ மனம் ஏற்கவில்லை, நமது வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்களே என்று!!!
அவளுடைய தற்போதைட மன நிலை எப்படி இருக்கும், உயிரோடு இருக்கிறாளா அல்லது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துக் கொண்டாளா என்று தெரியவில்லை..
காரணம் அப்படியொரு கொடுமையான சம்பவம் அது..
நிச்சயம் இப்படியொரு மனசாட்சியில்லா கொடூரத்தை நிகழ்த்திய அக்கும்பல் மனித ஜென்மங்களாக இருக்க முடியுமா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்..
சம்பவம் நடந்த இடம்:-
BharatiyaJanataParty (BJP) கட்சியின் MYogiAdityanath ஆளும் உபி யில்..
நடந்த நாள்:- நேற்று முன் தினம்..
அவர்கள் தாக்கபட்ட காரணம்:- தலித்..
அந்த கும்பல் போட்ட கோஷம்:- பாரத் மாதாகி ஜே!!!
பாரத பண்பாடு & கலாச்சாரம் என்று ஒரு மயிரும் கிடையாது..
Prakash j p

புதன், 19 ஜூலை, 2017

சமூக உணர்வுள்ள சத்யராஜ் அவர்களின் மகளைப் பாராட்டுகிறோம்

சமூக உணர்வுள்ள சத்யராஜ் அவர்களின் மகளைப் பாராட்டுகிறோம்
தவறான மருந்தை சிபாரிசு செய்யும்படி அமெரிக்க நிறுவனம் என்னை மிரட்டுகிறது என்று பிரதமர் மோடிக்கு நடிகர் சத்யராஜ் மகள் கடிதம் எழுதி உள்ளார்.
-
பிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். திவ்யாவை அமெரிக்க மருந்து நிறுவனத்தை சேர்ந்த சிலர் அணுகி நோயாளிகளுக்கு தங்கள் மருந்தை சிபாரிசு செய்யும்படி மிரட்டி உள்ளனர். இதுகுறித்து திவ்யா பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
“மருந்துகள் உயிரை காப்பாற்றுவதாக இருக்க வேண்டும். நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மருந்து நிறுவனங்களில் பல மோசமான காரியங்கள் நடக்கின்றன. நான் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றுகிறேன். சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க மருந்து கம்பெனியை சேர்ந்த பிரதிநிதிகள் சிலர் என்னை சந்தித்தனர்.
அவர்கள் தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை என்னிடம் கொடுத்து அவற்றை உங்கள் ‘கிளினிக்’கில் உள்ள நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யுங்கள் என்றனர். அது பலவகை வைட்டமின் சத்துக்கள் கொண்டது என்றும் கூறினார்கள். அந்த மருந்தில் என்ன கலந்து இருக்கின்றன என்று நான் ஆராய்ந்த போது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்கள் அதில் இருப்பது தெரிய வந்தது. ஊக்க மருந்துகளும் கலக்கப்பட்டு இருந்தது.
அந்த மருந்தை நோயாளிகள் சாப்பிட்டால் உடலில் அதிகமாக உயிர் சத்துக்கள் உருவாகி நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கண்பார்வையும் பாதிக்கும். நாளடைவில் ஈரல் கோளாறுகளும் ஏற்படும். எனவே நான் அந்த மருந்துகளை சிபாரிசு செய்ய முடியாது என்று மறுத்து விட்டேன். அவர்கள் எனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனர். அதையும் வாங்கவில்லை.
இதனால் அவர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. என்னை மிரட்டினார்கள். நாங்கள் இந்தியாவில் உள்ள ஒரு மந்திரி வீட்டில்தான் தங்கி இருக்கிறோம். அரசியல் கட்சி பிரமுகர்களிடமும் எங்களுக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்று கூறினார்கள். அதன்பிறகு இந்திய டாக்டர்கள் விஞ்ஞான ரீதியாக இதையெல்லாம் ஆராய்வது இல்லை. நாங்கள் கொடுக்கும் மருந்துகளை சிபாரிசு செய்து விடுவார்கள் என்றனர்.
அவர்களிடம் நான்இ இந்திய டாக்டர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. உலக அளவில் பெரிய மரியாதைக்குரியவர்களாக இந்திய டாக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களை பற்றி தரக்குறைவாக பேச வேண்டாம் என்று எச்சரித்தேன். மீண்டும் அவர்கள் என்னிடம் தங்களுடைய அரசியல் செல்வாக்கை சொல்லி மிரட்டி விட்டுச்சென்றார்கள்.
அந்த மருந்தில் என்னென்ன பொருட்கள் இருந்தன என்ற குறிப்புகளை இந்த கடிதத்தில் இணைத்து இருக்கிறேன். இது ஒரு முக்கிய பிரச்சினை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற மருந்துகள் அனுமதி இல்லாமல் இந்தியாவுக்குள் வந்தால் மக்களை எப்படி காப்பாற்ற முடியும். இத்தகைய மருந்து மோசடிகளை தடுக்க வேண்டும்.
ஆஸ்பத்திரிகளில் தங்களுக்கு சரியான மருந்து கொடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பு கிடைக்க வேண்டும். ஏழை மக்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. நீட் தேர்வானது முறைகேடுகளுக்கு வழிவகுத்து உள்ளது. இப்படி இருந்தால் தரமான டாக்டர்கள் உருவாக முடியாது.
இவ்வாறு கடிதத்தில் திவ்யா கூறியுள்ளார்.