திங்கள், 30 ஜனவரி, 2017

பாரத் மாதா கீ ஜெய்

குடியரசுதின நிகழ்ச்சியில் பாரத் மாதா கீ ஜெய் னு முழக்கம் போடுறாங்களே அது சரியா என்று ஒரு தோழரிடம் (காம்ரேடு) கேட்டேன்

அதில என்ன தவறு தோழர்?

பாரத அன்னையை வணங்குகிறேன்
என்பதுதானே அதன் பொருள்?

என்று சொன்னார்.

பாரத அன்னை என்று அவர்கள் எதைச் சொல்கிறார்கள்?

வங்கமொழியில் வெளியான ஆநந்தமடம் என்ற நாவலில் வரும் பாடல்தான் வந்தே மாதரம்

அந்த நாவலில்தான் பாரத் மாதா கீ ஜெய் என்று முழக்கம் வரும்
ஆநந்தமடம் முழுக்க முழுக்க முஸ்லிம் எதிரப்புக் கொண்ட கதை

அந்த வந்தே மாதரத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் பாரதி

அவர் பாரத மாதா யார் என்று சொல்றார் பாருங்க

ஆலயந்தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம் தேவி இங்கு உனதே
பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத்து இதழ்களில் களித்திடும் கமலையும்
அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ

என்று பாரதி மொழி பெயர்த்தான்

இதைத்தான் ஆர்எஸ்எஸ் காரர்கள் பாடுகிறார்கள் முழங்குகிறார்கள்

பாரதி காலத்துக்கு முந்தைய ஆர்எஸ்எஸ் காரர் என்று நாம் சொல்வதற்கு இதுபோல் பல காரணங்கள் உள்ளன

ஆனால் காம்ரேடுகளுக்கு இருக்கும் பாரதிபோதை அதையெல்லாம் சிந்திக்க விடுவதில்லை

இது குறித்து தோழர் அருணன் காலந்தோறும் பிராமணியம் என்ற நூலில் பின்வருமாறு எழுதுகிறார்

இப்படியொரு பாடலை தேசியகீதம் என்ற பெயரில் முஸ்லிம்களைப் பாடச் சொல்வது என்ன நியாயம்?
முஸ்லிம்கள் மட்டுமல்ல வேறு எந்த மதத்தவரும் இதை தேசிய கீதமாக இசைக்க மாட்டார்கள்
இது சுத்தமான பிராமணிய மதப்பாடல்
பிராமணர்களுக்கு பிராமணியமே தேசியமாக இருந்தது
ஆகவே பாரதமாதாவை இப்படிப் பிராமணிய மதக்கடவுளாகச் சித்தரித்துக் கொண்டார்கள்
அதை அவர்கள் பாடிக் கொள்ளலாம்
ஆனால் அரசாங்கப் பாடலாக்கி அனைவரையும் பாடச் சொல்வது என்ன நியாயம்?

என்று 2010 லேயே எழுதி இருக்கிறார்

ஆனாலும் காம்ரேடுகள் அதில் என்ன தவறு தோழர் என்று நம்மிடமே கேட்கிறார்கள் என்றால்

பாரதி தமிழில் மொழி பெயர்த்தான் என்பதற்காகவே இதை ஆதரிக்கிறார்களோ என்று தோன்றுகிறது

இவர்களுக்கு பாரத போதையைவிட பாரதிபோதை அதிகம் என்பதுதானே புலப்படுகிறது?

கொடூரமான எண்ணங்களின் கொடிய செயல்களின் மொத்த உருவமாக ரிக் வேதத்துப் பாசுரங்கள் உள்ளன

அம்பேத்கரை திரிபுவாதம் செய்யும் பிஜேபி
வேதங்களை ஆதரித்தவர் அம்பேத்கராம்

இது உண்மையா?
வேதங்கள் குறித்து அண்ணல் அம்பேத்கர் கூறுவதைக் கேளுங்கள்

நியமம் அல்லது சடங்குகளின் கோர்வையாக ஆரியர்களின் மதம் இருந்தது. சிறந்த வாழ்ககை வாழ வேண்டும். ஒழுக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்ற தாகம் எழவில்லை. ஆன்மிக உள்ளடக்கம் இல்லாத மதமாக ஆரிய மதம் ஆகிவிட்டது.

ரிக் வேதத்தில் இருக்கும் பாசுரங்கள் இதற்குச் சிறந்த ஆதாரமாகும்

இந்தப் பாசுரங்கள் ஆரியர் தம் கடவுளைப் போற்றிப் பாடியவை.
 எதைக் கேட்பதற்குப் பிரார்த்தனை செய்தனர்?

ஆசைகளிலிருந்து விடுவிக்கும்படி  வேண்டினார்களா?
தீமைகளிலிருந்து நீக்கும்படி வேண்டினார்களா?
பாவமன்னிப்பு கேட்டார்களா?
இந்திரனைப் போற்றிப் புகழ்வதாக அமைந்தவை இந்தப் பாசுரங்கள்.
ஆரியர்களின் எதிரியை அழித்ததற்காக – கிருஷ்ணன் என்னும் அசுரனின் கர்ப்பிணி மனைவியை அவன் கொன்றதற்காக
அசுரர்களின் நூற்றுக்கணக்கான கிராமங்களை நாசப்படுத்தியதற்காக
பாராட்டு தெரிவிக்கின்றன.

இலட்சக் கணக்கான தஸ்யூக்களை அழித்ததற்காக இந்திரனை அவை போற்றுகின்றன.
அனாரியர்களின் செல்வத்தைக் கவர்ந்து கொள்வதற்காகவும் அவர்களின் தானியங்களைப் பெறுவதற்காகவும்
அனாரியர்களுக்கு இந்திரன் அழிவை ஏற்படுத்துவான் என்று இந்திரனைப் புகழ்ந்தார்கள்.
கொடூரமான எண்ணங்களின் கொடிய செயல்களின் மொத்த உருவமாக ரிக் வேதத்துப் பாசுரங்கள் உள்ளன

நாணயமான ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை குறித்து ஆரியமதம் எப்போதும் கவலைப்பட்டது கிடையாது

என்கிறார் அண்ணல் அம்பேத்கர்
அம்பேத்கர் பேச்சும் எழுத்தும்  தொகுதி 7 பக்கம் 40

கொடூரமான எண்ணங்களின் கொடிய செயல்களின் மொத்த உருவமாக ரிக் வேதத்துப் பாசுரங்கள் உள்ளன

என்று மிகத் தெளிவாக அண்ணல் குறிப்பிட்டிருந்தும் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் அண்ணல் அம்பேத்கர் வேதங்களைப் பாராட்டினார் என்று பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் என்றால் ஆர்எஸ்எஸ் காரர்கள் எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரர்கள் என்பது புரிகிறதா? இல்லையா?


ஞாயிறு, 29 ஜனவரி, 2017

இது யாருடைய அரசு? - பேரா.சுப.வீரபாண்டியன் -2
சிறிய நிகழ்வு தொடங்கி புதிய கல்விக் கொள்கை, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பெரிய மாற்றங்கள் வரையில் எல்லாவற்றிலும், இந்தியாவின் பன்முகத் தன்மையை அழித்து, தட்டையான ஒற்றை இந்துத்துவ முகத்தை நிலைநிறுத்த மோடி அரசு முயல்கிறது.
புதிய கல்விக் கொள்கை என்றால் உடனே, "எல்லா பல்கலைக்கழகங்களும் சமற்கிருத மொழிக்குத் தாராளமாக உதவ முன்வர வேண்டும்” என்கிறது வரைவு அறிக்கையின் ஒரு பிரிவு. அது ஏன், சமற் கிருதத்துக்கு மட்டும்? இந்திய அரசமைப் புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணை ஏற்றுக் கொண்டுள்ள 22 மொழிகளில், ஒரு மொழிக்கு மட்டுமே எல்லா உதவிகளும் என்றால், மற்ற 21 மொழிகளின் நிலை என்ன?
1950ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, எட்டாவது அட்டவணையில் 14 மொழிகள் மட்டுமே இருந்தன. பிறகு, காங்கிரஸ் ஆட்சியில் நான்கு மொழிகளும், பாஜக ஆட்சியில் நான்கு மொழிகளுமாக எட்டு மொழிகள் சேர்க்கப்பட்டு 22 மொழிகள் ஆயின. அவற்றுள் பல மொழிகள் கோடிக்கணக் கான மக்களால் பேசப்படுபவை.
சில மொழிகள் லட்சக்கணக்கான மக்களால் பேசப்படுபவை. ஆயிரக்கணக்கானவர்களால் மட்டும் பேசப்படும் ஒரே மொழி சமற்கிருதம்தான். 1951ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி, சமற்கிருதத்தைத் தங்கள் தாய்மொழி என்று பதிவு செய்த வர்கள் 1,544 பேர் மட்டுமே. பல கோடி மக் களின் வரிப்பணம், சில ஆயிரம் மக்களின் மொழிக்காகச் செலவிடப்படுவதுதான் இந்தியாவின் ஜனநாயகம்.
அம்பேத்கரை திரிபுவாதம் செய்யும் பிஜேபி
வேதங்களை ஆதரித்தவர் அம்பேத்கராம்
பிஜேபியின் பித்தலாட்டமான தேர்தல் பிரச்சாரம்
புதுடில்லி, ஜன.29 வடமாநிலங்களில் நடைபெறுகின்ற தேர்தல்களில் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக, அம்பேத்கர் வேதங்களை எதிர்க்கவில்லை என்றும், பார்ப்பனர்களை எதிர்க்க வில்லை என்றும் திரிபுவேலைகளில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். கடந்த கால வரலாறுகளை, ஆவணங் களை மாற்றி அமைத்திட முனைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். கருத்துகளிலும், செயல்பாடுகளிலும் எதிர்ப்புகள் வந்த போதிலும், இளைய தலைமுறையினரிடையே வரலாற்றுப்பதிவுகளை மாற்றி அமைக்கின்ற திட்டத்துடன் இந்து தேசியவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். எல்லா நிலைகளிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்திய விடுதலைப் போராட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பங்களிப்பு உள்ளதா என்கிற தலைப்பில் விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
இந்துக்களாக உள்ள அனைவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என வலியுறுத்தியதால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, காந்தி மற்றும் அம்பேத்கர் ஆகியோருக்கு எதிரான வெறுப்புணர்ச்சியைக் கொண்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ். பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தது.
ஆர்.எஸ்.எஸ். இணைப் பொதுச்செயலாளர் கிருஷ்ணகோபால்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் கிருஷ்ண கோபால் லக்னோவில் உள்ள பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் குறித்து தொடர் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
அவர் பேசியபோது குறிப்பிட்டதாவது:
“அம்பேத்கர் தமது பணிகளுக்கிடையே எத்தனையோ இழிநிலைகளை சந்தித்த போதிலும், நாட்டுக்கு எதிராக அவர் எப்போதும் பேசியவரில்லை. பிறருக்கு தீங்கிழைக்கும் நோக்கமின்றி ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்றுஎண்ணினார்.அவர்பணிகளுக்கிடையேவன் கொடுமைகளையும், இழிவுபடுத்தலையும் சந்தித்தபோதி லும், அவர் எதிலும் தவறாகவோ, எவர் ஒருவருக்கும் எதிராகவோசெயல்பட்டதில்லை.மற்றவர்கள்பாதிக்கப் படக்கூடாது என்று சிவன் கடவுள் விஷம் அருந்தியது போல், அம்பேத்கர் செயல்பட்டார்.
மகாத்மா காந்தி போன்றவர்களைப்போன்றே அம்பேத் கரும் அதே கொள்கைகளை உடையவராக இருந்தார்.
சில பிரச்சினைகளில் அவர்கள் வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், நாட்டின் நலனையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். மதமற்ற சமூகம் குறித்து அவர் எண்ணிப்பார்த்தவரில்லை. அவருடைய கருத்தின்படி, மதம்தான் மய்யப்புள்ளி. ஆனால், சடங்கு களின்மீது அவருக்கு நம்பிக்கையில்லை. ஆன்மிகம் என்பதில், வேதங்களில் ஆதாரங்கள் உள்ளதாக அவர் நம்பினார். அம்பேத்கர் பார்ப்பனர்களை எப்போதுமே எதிர்த்தவரில்லை’’ என்று கிருஷ்ண கோபால் பேசினார்.
அம்பேத்கர் கருத்துகளில் ஆர்.எஸ்.எஸ். கொண்டிருந்த முரண்பாடுகளை மாற்றிக்கொண்டதுபோல் கூறத் தொடங்கியுள்ளது. தற்போது அம்பேத்கர்குறித்து ஆர்.எஸ்.எஸ். கூறும்போது, அம்பேத்கர் வேதங்களை எப்போதுமே எதிர்த்தவர் இல்லை என்றும், குறிப்பிட்ட ஜாதியையோ, மதத்தையோ அவர் முன்னிறுத்தியது கிடையாது என்றும் ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அக்கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் கிருஷ்ணகோபால் கூறும்போது, ‘...வேத மதத்தின்மீது அதிகப்படியான நம்பிக்கையை வைத்திருந்தார். ஆனால், பின்னாளில் ஏற்பட்ட முரண்பாடுகளால் எதிர்த்தார்...’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிருஷ்ண கோபால், அம்பேத்கரை ‘தேசபக்தர்’ என்று குறிப்பிட்டுள்ளார். சிலர் கூறுவதுபோல், மதம் இல்லாத சமூகத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்று அம்பேத்கர் கருதியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் அடையாளமாக விளங்கும் அம்பேத்கர் எந்த ஜாதியையும் எப்போதுமே முன்னிறுத்தியவர் இல்லை என்றும் கிருஷ்ண கோபால் கூறியுள்ளார்.
வேத சாத்திரங்களை அழிக்கவேண்டும் என்றவர் அம்பேத்கர் என்பதே உண்மை
ஜாதியை ஒழிக்கவேண்டும் என்ற கட்டுரையில் அம் பேத்கர் குறிப்பிட்டுள்ளதைக் காணும்போது அம்பேத்கர் குறித்த கிருஷ்ணகோபால் கருத்து ஆச்சரியத்தையே ஏற்படுத்தும்.
அம்பேத்கர் அக்கட்டுரையில், “பகுத்தறிவுக்குப் பொருந் தாத, அறநெறிகளுக்கு இடமில்லாத வேத சாத்திரங்களை அழித்து மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். மத ஸ்ருதிகள், மத ஸ்மிருதிகள் ஆகியவற்றைக் கட்டாயம் அழித்து ஒழித்திட வேண்டும். அவை எவ்வித பயனையும் ஏற்படுத்தப்போவதில்லை. இதுதான் என்னுடைய உறுதியான கருத்து’’ என்று குறிப்பிடுகிறார்.
எழுத்து வடிவம் இல்லாத செவிகளால் கேட்கப் படுகின்ற ஸ்ருதிகள் வேதங்கள் எனப்படுகின்றன. புத்த கங்கள் வடிவில் மகாபாரதம், இராமாயணம் போன்றவை ஸ்மிருதிகள் எனப்படுகின்றன.
‘எகனாமிக் டைம்ஸ்’ இதழில் குறிப்பிட்டுள்ளபடி, அம்பேத்கர் எழுதியுள்ள நூல்களான இந்தியாவில் இந்துமதத்தில் புதிராக உள்ள ஜாதிகள்-(1916), ஜாதியை ஒழிக்கவேண்டும்-(1936), சூத்திரர்கள் யார்?-(1946), தீண்டத்தகாதவர்கள்-(1948)
[Riddles in Hinduism-Caste in India (1916), Annihilation of Caste (1936), Who were the Shudras (1946) and The Untouchables (1948)]
ஆகிய நூல்களில் ஜாதி, மதம் குறித்த அம்பேத்கரின் சாடல்கள் நிறைந்து உள்ளன.
வேதங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண் டிருந்தவரான அம்பேத்கர் உண்மையில் புத்த நெறியைத் தழுவிக்கொண்டவர் ஆவார்.
அம்பேத்கர் கொண்டிருந்த ஆளுமைகள் அல்லது வாழ்க்கைகுறித்து ஆர்.எஸ்.எஸ். திரிபுவாதங்களுடன் விளக்க முற்படுவது இது முதல்முறையல்ல. இது போன்று நீண்ட காலமாகவே அவரை ஆர்.எஸ்.எஸ்.சின் மய்யமான கொள்கைகளுக்கு நெருக்கமானவர் என்று உருவகப்படுத்திட பெருமுயற்சி எடுத்துவருகிறது.
2015ஆம் ஆண்டில் ‘தி இந்து’ ஆங்கில இதழில் ஒரு கட்டுரை வெளியானது. அண்மையில்கூடஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த எம்.ஜி.வைத்யா, அம்பேத்கர் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டு, அனைத்து வகைகளிலும் இட ஒதுக்கீட்டினை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். கருத்துக்கு
வராலாற்றுப் பேராசிரியரின் மறுப்பு
ஆர்.எஸ்.எஸ்.சின் கூற்றை மறுத்து வரலாற்றுப் பேராசிரியர் ராமச்சந்திர குகா கூறும்போது, 1949 -1951 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சார்பு அமைப் புகளை அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார் என்று ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.
வைத்யா எழுதும்போது, “இந்து சட்ட வரைவை எதிர்ப்பவர்கள் பலராக இருக்கும்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் அதற்குப் பொறுப்பு என்று எப்படி கூறலாம்? சங்கராச்சாரியார்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பினர்களா? இந்து மதத்தில் உள்ள அனைத்து சங்கராச்சாரியார்களையும், மகந்துகளையும், மடாதிபதிகளையும் ஒரே நிலைப்பாட்டின்கீழ் கொண்டு வருவது என்பது மிகவும் கடினமானது’’ என்றார்.
உண்மையில் 1964ஆம் ஆண்டில் அனைத்து சங்கராச் சாரியார்கள், மகந்துகள், மடாதிபதிகள் அனைவரையும் ஒரே நிலைப்பாட்டில் ஆர்.எஸ்.எஸ். கொண்டு வந்து, தீண்டாமையை இந்து மதம் அங்கீகரிக்கவில்லை என்று அறிவிக்கச் செய்ததாக வைத்யா கூறத்தொடங்கியுள்ளார்.
தாழ்த்தப்பட்டவகுப்பினர்குறித்துஆர்.எஸ்.எஸ். குறிப்பிடும்போது, அந்நியர்கள் ஆண்டபோது அவ்வகுப் பினரை உருவாக்கினார்கள் என்று கூறத் தொடங்கியுள்ளது. முசுலீம்களிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி வரை அந்நியர்கள் படையெடுத்தபோது தாழ்த்தப்பட்ட ஜாதியை உருவாக் கியதாக ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ்சின் இக்கருத்தை அம்பேத்கர் மறுத்துக் கூறியுள்ளார்.
ஒரு நிகழ்ச்சிக்கு அம்பேத்கர் அழைக்கப்பட்டு, அவர் பேசுவதற்கு மறுக்கப்பட்ட நிலையில் ‘ஜாதி ஒழிக்கப்பட வேண்டும்‘ என்கிற தலைப்பிலான கட்டுரையாக அப் பேச்சு வெளியானது. அக்கட்டுரையில் அம்பேத்கர் தெளிவாக ஆர்.எஸ்.எஸ். கருத்தை மறுத்துள்ளார்.
(தமிழில் அம்பேத்கர் கருத்தை ‘ஜாதி ஒழிய வேண்டும் ஏன்?’ என்கிற தலைப்பில் மொழிபெயர்த்து ஒரு நூலாக தந்தை பெரியார் வெளியிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது)
ஆர்.எஸ்.எஸ்சுக்கு எதிரான தாழ்த்தப்பட்டவர்களின் மனக்கசப்புகள், ஆத்திரங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. அண்மைக்காலங்களில் ஆர்.எஸ்.எஸ். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பினரின் பல்வேறு செயல்கள், பல்வேறு சம்பவங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக உள்ளதை உணர்த்தியுள்ளன.
அய்தராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவரான ரோகித் வெமுலா தற்கொலை மரணம், குஜராத் மாநிலத்தில் உனா பகுதியில் செத்த மாட்டின் தோலை உரித்ததாக, தாழ்த்தப்பட்டவர்கள் எழுவர்மீது நடந்த கொடுமையான தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்கள், சங் பரிவாரங்களின் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரான செயல்களுக்கான உதாரணங்களாக உள்ளன.
அய்ந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தல்களை ஒட்டி, தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளைப் பிரித்து, பாஜக அறுவடை செய்வதற் காகவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, தன் கொள்கைகள் அம்பேத்கருடன் ஒத்துப்போவது போன்ற தோற்றப் பாட்டை ஏற்படுத்த முனைப்பு காட்டி வருகின்றது என்பதை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் அண்மைக்கால நிலைப்பாடுகள் உணர்த்துகின்றன என டிஎன்ஏ இதழின் அறிக்கை படம்பிடித்துக்காட்டியுள்ளது.
சமுதாயத்தில்தாழ்த்தப்பட்டவர்கள்என்கிறமுத்தி ரையை அகற்றிட, இந்து சமூகத்திலிருந்து தாழ்த்தப் பட்டவர்கள் என்கிற நிலை அகற்றப்படவேண்டும் என்று பாஜகவுக்கான வாக்குகளுக்காக ஆர்.எஸ்.எஸ். கூறத் தொடங்கியுள்ளதாக அவ்விதழின் அறிக்கை குறிப்பிடுகிறது.
Read more:
ஆர்.எஸ்.எஸ்.சின் கூற்றை மறுத்து வரலாற்றுப் பேராசிரியர் ராமச்சந்திர குகா கூறும்போது, 1949 -1951 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சார்பு…
VIDUTHALAI.IN

கோட்ஷே காந்தியைச் சுட்டபோது ஏன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி இருந்தான்?
அவன் ஏன் சுன்னத் செய்திருந்தான்?
காந்தி மிகவும் நேசித்த கடவுள் இராமன்
கோட்ஷே கும்பலுக்கும் பிடித்த கடவுள் இராமன்
ஆனால் அந்த இராமன் காந்தியின் உயிரைக் காப்பாற்றவில்லை
கொலைகாரக் கும்பலுக்கு உறுதுணையாக இருந்தான்
இராமனே ஒரு கொலைகாரன்தானே!
அவனை நம்பியது காந்தியின் தவறுதானே?
இராமன் ஒரு குடிகாரன்
பெண் பித்தன்
அவனுடைய அந்தப்புரத்தில் பல பெண்களுடன் சல்லாபம் செய்தான்
சீதையையும் அவனுடைய சல்லாபத்தில் ஈடுபடச்செய்தான் என்று இராமாயணத்தை நார் நாராகக் கிழித்த அண்ணல் அம்பேத்கரை
இராமனைத் தூக்கிப்பிடிக்கும் காவிக்கும்பல் உயர்த்திப் பிடிப்பது ஏன்?
அம்பேத்கரியவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் அதனை எதிர்க்கத் தயங்குவது ஏன்?
பாபர் மசூதியை இடித்த ஆர்எஸ்எஸ் கும்பல் அதனை மறுக்கவில்லை
நாங்கதான் மசூதியை இடித்தோம்
உங்களால் என்ன செய்ய முடியும்? என்று பாராளுமன்றத்திலேயே முழங்குகிறார்கள்
சட்டத்துக்கே சவால் விடுகிறார்கள்
ஆனால் காந்தியைக் கொன்ற கோட்ஷேவை எங்க ஆள்தான் என்று சொல்லத் தயங்குவது ஏன்?
காந்தி கையில் இருந்ததும் பகவத்கீதை
கோட்ஷே கையில் இருந்ததும் பகவத்கீதை
பகவத் கீதையைப் படித்தேன்
அதன்படிதான் காந்தியைக் கொன்றேன் என்றான் கோட்ஷே
அந்த பகவத் கீதை புனிதநூலா?
கொலைகாரநூலா?
இராமன் கடவுளை நோக்கி தவம் இருந்த சம்பூகனை ஏன் கொன்றான்?
ஈராயிரம் ஆண்டுகளாக பார்ப்பனியம் இராமன் செய்ததைத்தானே அப்படியே கடைப்பிடிக்கிறது?
அந்த இராமனின் வழியில்தானே
கடவுளை வணங்கவேண்டும் என்று துடித்த நந்தனைக் கொன்றார்கள்?
அதே வழியில்தானே ஆறுமுகசாமியின் கையை உடைத்தார்கள்?
அதே வழியில்தானே இன்றைக்கும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதைத் தடுக்கிறார்கள்?
அப்படியிருந்தும் பார்ப்பனரல்லாதார் மீண்டும் மீண்டும் ஆரியக் கும்பலுக்கு அடிமையாக இருப்பது ஏன்?
இராவணனை இராமன் ஏன் கொன்றான் என்றால்
இராவணன் இராமன் மனைவி சீதையை சிறையெடுத்துச் சென்றான்
அதiனால் இராமன் அவனைக் கொன்றான் என்கிறார்கள்
ஆனால் இராமனை விஷ்ணுவின் அவதாரமாகக் கொண்டாடும் பதர்கள் இராவணனை அழிப்பதற்காகவே இராமனாக விஷ்ணு அவதாரம் எடுத்ததாகச் சொல்வார்கள்
ஏற்கனவே அவனைக் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து விட்டு
அவனைக் கொல்ல நியாயமான காரணம் கிடைக்காததால் சீதையை இராவணனுக்குக் கூட்டிக் கொடுத்து விட்டு
அதையே ஒரு காரணமாக்கி அவனை இராமன் கொன்றான் என்பதுதானே உண்மை?

காந்தியை ஆர்எஸ்எஸ் சைச் சேர்ந்த கோட்ஷே சுட்டுக்கொன்ற நாள்

ஜனவரி 30 தேசப்பிதா என்று அழைக்கப்பட்ட காந்தியை ஆர்எஸ்எஸ் சைச் சேர்ந்த கோட்ஷே சுட்டுக்கொன்ற நாள்

இந்த நாளை இப்பொழுது எப்படிக் கடைப்பிடிக்கிறார்கள் தெரியுமா?

காந்தி நினைவுநாள் என்று அல்ல. தியாகிகள் தினம் என்று கடைப்பிடிக்கிறார்கள்ஃ
ஏன் தியாகிகள் தினம் என்கிறான்?
ஒட்டுமொத்த தியாகிகளையும் நினைவுகூர்வதற்கு அந்த நாள்தான் கிடைத்ததா?

அன்றைய தினத்தை காந்தி நினைவுநாள் என்று கடைப்பிடிப்பதில் என்ன சிக்கல்?

காந்தி நினைவுநாள் என்று சொன்னால் அவர் எப்படி இறந்தார் என்ற கேள்வி வரும். அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார் என்றால் அவரைச் சுட்டுக் கொன்றது யார் என்ற வினா எழும்
அவரைச் சுட்டுக்கொன்றவன் கோட்ஷே என்று சொன்னால் அவன் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன் என்ற வினா வரும்

கோட்ஷே என்ற உடன் அவன் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன் என்ற கேள்விக்கு அவன் ஆர்எஸ்எஸ் என்ற விடை வரும்

அந்த ஆர்எஸ்எஸ்சின் அரசியல் வடிவம் எது என்றால் பிஜேபி என்ற பதில் வரும்

பிஜேபியின் மோடி ஆர்எஸ்எஸ் சில் பயிற்சி பெற்றவர் என்ற தகவல் வரும்

இவர்களது வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும்

அதையெல்லாம் மூடி மறைக்கவே காந்தியார் நினைவுநாளைக்கூட காந்தி நினைவுதினம் என்று கடைப்பிடிக்காமல் தியாகிகள் தினம் என்று காந்தியையே இருட்டடிப்பு செய்கிறது காவிக்கும்பல்

வரலாற்றையே இருட்டடிப்பு செய்பவர்களுக்கு காந்தியை இருட்டடிப்பு செய்வது என்ன அவ்வளவு பெரிய விசயமா?

சனி, 28 ஜனவரி, 2017

நன்றி எதிர்பாராத பெரியார் தொண்டர்னு

வீரமணி என்ன செஞ்சு கிழிச்சாருன்னு ஒரு இளைஞன் கேட்டான்
இன்னைக்கு மத்திய அரசு வேலைக்குOBC ன்னு ஒரு சான்றிதழைக்கொடுத்து வேலைக்குப் போறியே அது யாரு வாங்கிக் கொடுத்த உரிமை தெரியுமான்னேன்
தெரியாதுன்னான்
உங்க அப்பா அம்மா அதுக்காகப் போராடி ஜெயிலுக்குப் போயிருக்காங்களான்னு கேட்டேன்
இல்லேன்னான்
உங்க தாத்தா பாட்டி அதுக்காகப் போராடுனாங்களான்னேன்
அதுக்கும் இல்லேன்னான்.
அதுக்கு யாரு போராடுனதுன்னு தெரியுமான்னேன்
தெரியாதுன்னான்

நீ OBC ன்னு சான்றிதழ் கொடுத்து வேலைக்குப் போறே
உங்க அப்பா அம்மா யாரும் அதுக்காகப் போராடல
ஆனா வீரமணியோட பிள்ளைங்க யாரும் அரசாங்க வேலைக்குப் போகல
அவருதான்யா 42 மாநாடு நடத்தி 16 போரட்டங்கள் நடத்தி ஜெயிலுக்கெல்லாம் போயி இந்த உரிமைய உனக்கு வாங்கிக் குடுத்தாருன்னேன்

அப்பவும் அவன் ஒரு நன்றி கூடச் சொல்லல

என்னா வீரமணி போராடலன்னா இது கெடச்சிருக்காதான்னு எகத்தாளமாக் கேட்டான்
அப்பவும் சொன்னேன்
இந்த நன்றியக் கூட எதிர்பாராமத்தான்யா அவரு போராடுனாருன்னு சொன்னேன்
அவர் நன்றி எதிர்பாராத பெரியார் தொண்டர்னு சொன்னேன்
அப்படியான்னுட்டு அங்க இருந்து நகர்ந்துட்டான்

இதுதான் இன்றைய இளைஞர்களின் நிலை

பாரத் மாதா கீ ஜெய்




நமது பெல் நிர்வாகம் தொழிற்சங்கங்களையெல்லாம் அழைத்து நீங்கள் ஜாதி மத உணர்வுகளைத் தூண்டக்கூடாது. எந்த ஒரு ஜாதிக்கோ அல்லது மதத்துக்கோ ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பேசவோ எழுதவோ செயல்படவோ கூடாது என்று அறிவுரை கூறினார்கள். ஆனால் அது ஊருக்குத்தான் உபதேசம் எனக்கு அல்ல என்பதுபோல பல காரியங்களைச் செய்வார்கள். பல உதாரணங்களை அதற்குச் சொல்ல முடியும்.

பல அதிகாரிகள் இந்துத்துவ ஆர்எஸ்எஸ் சக்திகளின் கைக்கூலிகளாகவே இருந்து நாங்கள் அப்படித்தான் செய்வோம். யார் எங்களை என்ன செய்ய முடியும் என்பதுபோல அதிகார மமதையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனுடைய தொடர்ச்சிதான் குடியரசு தின நிகழ்ச்சிகளிலும் சுதந்திர தின நிகழ்ச்சிகளிலும் செக்யூரிட்டி,NCC, SCOUT, HOME GUARD போன்ற அணிவகுப்புக்களில் பாரத் மாதா கீ ஜெய் என்று முழக்கமிடுகிறார்கள்.

இந்த பாரத் மாதா கீ ஜெய் என்று முழங்குவது ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சங் பரிவார நிகழ்ச்சிகளில் முழங்குகின்ற முழக்கமே தவிர இது ஒன்றும் அரசு வழிகாட்டுதல் கிடையாது. இன்று இந்தியாவை ஆளுகின்ற பிஜேபி யினர் மனங்குளிர வேண்டும் என்பதற்காக நிர்வாகம் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறது. பிஜேபி அரசாங்கமே கூட இதனை இன்னும் துணிச்சலாக எங்கும் அமுல்படுத்தவில்லை. அவர்கள் ஏற்கனவே சரஸ்வதி வந்தனா பாடச் சொல்லியும் வந்தே மாதரம் பாடச் சொல்லியும் ஆணை பிறப்பித்து எதிக்கட்சியினர் எதிர்த்ததையடுத்து அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டனர். அதனால் சூடு கண்ட பூனையாக அரசு இதில் எச்சரிக்கையாக இருக்கிறது. படிப்படியாக இந்த நாட்டை இநது ராஜ்யமாக மாற்றுகின்ற பணியினை மத்திய பிஜேபி அரசு செய்து வருகிறது. இன்னும் முழுமையாக அது நிறைவேறவில்லை.

ஆனால் இங்கே இருக்கக் கூடிய அதிகாரிகள் ஏதோ இங்கே இந்துராஜ்யமே மலர்ந்து விட்டது போலவும் இப்படியெல்லாம் செய்தால் ஆட்சியாளர்களின் தயவு தங்களுக்குக் கிடைக்கும் என்றும் கருதிக்கொண்டு குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் பாரத் மாதா கீ ஜெய் என்ற முழக்கத்தை ஆணையாகப் பிறப்பிக்கிறார்கள்.

இந்த முழக்கமானது வங்காளத்தில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்ட ஆனந்தமடம் என்ற நாவலில் வரும் ஒரு முழக்கமாகும் வந்தே மாதரம் என்ற பாடலும் அந்த நாவலில் பாடப்பட்ட பாடல்தான். அது முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரான கதை கொண்ட நாவல். முஸ்லிம் வெறுப்பை நாவல் முழுக்க கக்கியிருக்கக் கூடிய கதைதான் அது.
அதிலே சொல்லக்கூடிய பாரத மாதா என்பது காளிதேவி என்கிறது அந்த நாவல். காளிதேவிதான் பாரதமாதா வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை வங்கமொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த பாரதியே கூட பாரதமாதா என்பவள்

பத்துப்படைகொளும் பார்வதி தேவியும்
கமலத்து இதழ்களில் களித்திடும் கமலையும்
அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ

என்று பாரத மாதா என்பவள் இந்துக்கள் வணங்கக் கூடிய பார்வதி சரஸ்வதி ஆகிய தேவியரின் வடிவம் என்பதை வெளிப்படுத்துகிறார்.

இதனை ஆர்எஸ்எஸ் சும் சங்பரிவாரங்களும் அவர்கள் நிகழ்;ச்சிகளில் முழங்கிக் கொள்ளட்டும் அதனை ஒரு பொதுத்துறை நிறுவனம் தனது விழாக்களில் பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது முழுக்க முழுக்க மதவெறி சக்திகளுக்கு ஆதரவான நிலையே தவிர இந்திய இறையாண்மைக்கும் இந்திய அரசின் மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரானது. பல மதங்கள்ää பல இனங்கள்ää பல மொழிகள் பேசக்கூடிய மக்கள் வாழும் நாட்டில் இதுபோன்ற செயல்கள் ஏற்புடையது அல்ல.

 ஏற்கனவே இது முழக்கப்பட்டிருந்தாலும் இனி வரும் காலத்தில் இது முற்றிலும் தவிர்க்கப்பட  வேண்டும். அதுதான் உண்மையான மதச்சார்பற்ற தன்மை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இல்லையேல் நிர்வாகமே தான் கூறியதற்கு மாறாக ஜாதி வெறியையும் மதவெறியையும் தூண்டுவதற்குத் துணைபோகிறது என்ற குற்றச்சாட்டு உண்மையாக மாறிவிடும்.


வியாழன், 26 ஜனவரி, 2017

facebook

Kanimozhi MV பதிவு.
எது நடந்தாலும்
 பற்றி எரிவது என்னவோ
சேரிகள் தான்.
இன்று நேற்றல்ல
இரண்டாயிரம் ஆண்டுகளாய்.
அரக்கு மாளிகையில்
பாண்டவர்களுக்காக
வைத்த தீயில்
பாண்டவர்கள் சாகவில்லை
ஐந்து பஞ்சமர்களே
பலியானார்கள்
இது மகாபாரதம்.
குரங்கு வைத்த தீயில்
எரிந்தது எல்லாம் எது?
ஈழத்துச் சேரிகள் தான்
இது இராமாயணம்
உயிரோடு எரிக்கப்பட்ட
கழுமரத்தில் கொல்லப்பட்ட
பௌத்தர்களும்
சமணர்களும் யார்?
தாழ்த்தப்பட்டவர்களே
இது சைவ வரலாறு
காஞ்சியிலும்
திருப்பெரும்புதூரிலும்
எரிக்கப்பட்ட ஏழைகள் யார்?
இராமானுஜரால்
பார்ப்பனராக்கப்பட்ட
பறையர்களே
இது வடகலை வைணவம்
கண்ணகி மூட்டிய
மதுரைத் தீயில்
கருகிப்போன
தீத்திறத்தார் யார்?
சேரி மக்களே.
இது சிலப்பதிகாரம்
நந்தன்
ஏன்
நாயனார் ஆனார்?
அது அந்தணர் இட்ட தீ
இது பெரியபுராணம்
ஈராயிரம் ஆண்டுகளாக
கொலைகளைச் செய்து கொண்டும்
கொல்லாமைப் பேசிக் கொண்டும்
பயணப்படுகிறது பார்ப்பனீயம்.
ஆதிக்க வெறிக்கு
வர்ணங்கள் உண்டு
வர்க்க வேறுபாடுகள் உண்டு
அவர்ணர்களுக்கு அது ஏது?
அவர்ணங்களா?
ஆம்.
வர்ணமற்றவர்களே.
அடைகாத்த
ஆதிக்கத்திமிர் அகற்றிட
அணிவகுக்கும் காலம்
அருகில் தான்.
அயர்ந்து விடாதீர்
எரியிடை மூழ்கி அல்ல
எரிதழல் ஏந்தி.

புதன், 25 ஜனவரி, 2017

“தோழர்” என்கின்ற பதத்தையே உபயோகிக்க வேண்டும்

முக்கிய குறிப்பு
இயக்கத் தோழர்களும் இயக்க அபிமான தோழர்களும் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளுவதிலும், பெயருக்கு முன்னால் பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக “தோழர்” என்கின்ற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும், மகா ள - ஸ்ரீ,
 கனம், திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, ஸ்ரீஜத் என்பது போன்ற வார்த்தைகள் சேர்த்து பேசவோ எழுதவோ கூடாது என்று வணக்கமாய் வேண்டிக் கொள்ளுகிறேன். “குடி அரசி” லும் அடுத்த வாரம் முதல் அந்தப்படியே செய்ய வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக் கிறேன். - ஈ.வெ.ரா
குடி அரசு - அறிக்கை - 13.11.1932 " தோழர் பெரியார்"

அண்ணல் அம்பேத்கர் இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை எழுதாமல் இருந்திருந்தால் மனுதர்மம்தான் சட்டமாக இருந்திருக்கும். அப்படி மனுதர்மம் என்கிற அதர்மம் மட்டும் சட்டமாகி இருந்தால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களே உங்கள் நிலை என்ன? சிந்தித்துப் பாருங்கள்! நீங்கள் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும்தானே நிலை நிறுத்தப்பட்டிருப்பீர்கள்? நீங்கள் படித்திருக்க முடியுமா? பட்டம் பெற்றிருக்க முடியுமா? பதவிகளில் அமர்ந்திருக்க முடியுமா? இன்றைக்கு நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் வசதிகளை அனுபவித்திருக்க முடியுமா? சிந்தியுங்கள் நீங்கள் அவருக்கு நன்றி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை அவரையும் ஒரு தேசியத் தலைவராக அங்கீகரித்தாலே போதும் அவரை ஒரு குறிப்பிட்ட ஜாதித் தலைவராக மட்டும் பார்க்காதீர்கள்

அண்ணல் அம்பேத்கர் இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை எழுதாமல் இருந்திருந்தால் மனுதர்மம்தான் சட்டமாக இருந்திருக்கும்.

அப்படி மனுதர்மம் என்கிற அதர்மம் மட்டும் சட்டமாகி இருந்தால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களே உங்கள் நிலை என்ன?

சிந்தித்துப் பாருங்கள்!

நீங்கள் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும்தானே நிலை நிறுத்தப்பட்டிருப்பீர்கள்?

நீங்கள் படித்திருக்க முடியுமா?
பட்டம் பெற்றிருக்க முடியுமா?
பதவிகளில் அமர்ந்திருக்க முடியுமா?
இன்றைக்கு நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் வசதிகளை அனுபவித்திருக்க முடியுமா?

சிந்தியுங்கள்

நீங்கள் அவருக்கு நன்றி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை


அவரையும் ஒரு தேசியத் தலைவராக அங்கீகரித்தாலே போதும்

அவரை ஒரு குறிப்பிட்ட ஜாதித் தலைவராக மட்டும் பார்க்காதீர்கள்

புதன், 18 ஜனவரி, 2017

விவேகாந்தருக்கு விழா எடுக்கும் பிஎம்எஸ்ஸே!

விவேகாந்தருக்கு விழா எடுக்கும் பிஎம்எஸ்ஸே!

1) கடந்த ஆண்டு பெல் நிர்வாகம் வழங்கிய பாரதமேää உயிர்தெழு! என்ற நூலில் ~கடமையைச் செய்@ பலனை எதிர் பாராதே!| என்று கூறியிருக்கிறார். அதற்கு உதாரணமாக தொழிலாளிக்குப் பாடுபடுவதே எங்கள் கடமை! பங்குபெறும் சங்கத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற பலன் எங்களுக்குத் தேவையில்லை என்று அறிவிப்பீர்களா?

2) விவேகானந்தர் ஜாதி போகக் கூடாது, ஜாதிகள் நல்லது. ஜாதியை அழிக்க விரும்புவது முட்டாள்தனம் என்கிறார். அதுதான் உங்கள் கொள்கையா?

3) விதவைத் திருமணம் கூடாது என்கிறார். ஒரு ஆண் மனைவி இறந்த உடன் மறுமணம் செய்துகொள்ளலாம். ஒரு பெண் மறுமணம் செய்துகொள்ளக் கூடாதா? இதுதான் உங்கள் தர்மமா?

4) ~ஸகஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜோத்| எவ்வளவு குறையுடைதாக இருந்தாலும் அவரவர் குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும். குயவன் குயவனாகவும்ää மீனவன் மீனவனாகவும்ää விவசாயி விவசாயியாகவும்தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறாரே? பரம்பரைத் தொழிலை விட்டு வேறு தொழில்களுக்குச் செல்லக் கூடாதா? விருப்பம் இருந்தாலும் விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு தொழில்களைச் செய்யக் கூடாதா? விருப்பமில்லாமல் குலத்தொழிலை மட்டுமே செய்துகொண்டிருந்தால் நாட்டில் தொழில் வளர்ச்சி எவ்வாறு உண்டாகும்?

5) செருப்புத் தைப்பதை சக்கிலியனுக்கு பெருமைக்குரியதாக சொல்லும் அவர் நாட்டை ஆள அவன் ஆசைப்படக் கூடாது என்கிறாரே! இதுதான் உங்கள் தருமமா? நாட்டை பிராமணர் மட்டும்தான் ஆள வேண்டுமா? மற்ற ஜாதிக்காரன் ஆள்வதற்கு ஆசைப்படக் கூடாதா?

6) பிராமணன் தனது குலத்தொழிலான மணியடிப்பதை விட்டுவிட்டு சத்திரியனின் வேலையான நாட்டை ஆளச்செல்லலாம். மற்ற ஜாதிக்காரர்கள் மட்டும் அவரவர் குலத்தொழிலைச் செய்ய வேண்டுமா?

7) பிராமணனின் பூணூலால் எந்தப் பலனும் இல்லை. அது கோவணம் கட்டத்தான் பயன்படும் என்று விவேகானந்தர் சொன்னாரே! இனியும் பூணூல் அணிவது அவசியமா?

8) உங்கள் தெங்கடிஜி தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டதாகக் கூறுகிறீர்களே! ஜாதியை ஒழிக்காமல் தீண்டாமையை எப்படி ஒழிக்க முடியும்? தீண்டாமைக்கு ஆதாரமே ஜாதிதானே!

9) ஒரு பாட்டா செருப்புக் கடையில் வேலைபார்ப்பவனையும் செருப்புத் தைக்கிற சக்கிலியனையும் யாராவது ஒரே மாதிரிக் கண்ணோட்டத்தில் பார்ப்பார்களா? ஜாதிக்கண் கொண்டுதானே பார்ப்பார்கள்? அப்படிப் பார்க்கும்போது தீண்டத்தகாதவனாகத்தானே ஒரு சக்கிலியனை சமூகம் பார்க்கும்? இது மாதிரி ஜாதியை வைத்துக் கொண்டு எப்படி தீண்டாமையை உங்களால் ஒழிக்க முடியும்?

10) எந்தத் தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உருவானால்தானே சமுதாயத்தில் ஜாதியப் பார்வை குறையும்?

11) பிஜேபிக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? தொடர்பு இல்லையென்றால் சென்ற தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்?

12) பிஜேபியும் நீங்களும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள்தானே! இரண்டு அமைப்புக்களுக்கும் தொடர்பு இல்லை என்று மறைப்பது யாரை ஏமாற்ற?

13) மோடிஜி நல்லவர் வல்லவர் என்று ஓட்டுப் போட்டுவிட்டு இப்பொழுது அவர் சரியில்லை என்று சொல்லுவது யாரை ஏமாற்ற?
இதற்கெல்லாம் நேரடியாகப் பதில் சொல்.

சென்ற ஆண்டு போல குதர்க்கமாக விவேகானந்தர் நல உரிமைச்சங்கம் பாரத தொழிலாளர் கழகம் என்ற முகமூடி அணிந்துகொண்டு திருட்டுத்தனமான வந்து பித்தலாட்டம் செய்யாதே! நீங்கள் நேர்மையானவர்களாய் இருந்தால் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்! அதற்குத் திராணியின்றி எங்கள் சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கையெழுத்து வேட்டையாடி தொழிலாளர்களால் ஓட ஒட விரட்டப்பட்டு மூலையில் போய் முடங்காதே!


செவ்வாய், 17 ஜனவரி, 2017

facebook

கேட்டான் பார் ஒரு கேள்வி..!!!
**.) கோல்கேட் பற்பசையில் பல் துலக்கி
**.) கில்லெட் ரேசரில் சவரம் செய்து
**.) ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூவும் லக்ஸ் சோப்பும் போட்டு குளித்து
**.) ஓல்ட் ஸ்பைஸ் வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு
**.) ஜாக்கி ஜட்டியையும் , க்ரூசோ பனியனையும்
**.) பீட்டர் இங்க்லெண்ட் சட்டையையும் , ஆக்சம்பர்க் பேன்ட்டையும் போட்டுக்கொண்டு
**.) மேகி நூடுல்சை சாப்பிட்டு,
நெஸ்கபே காபியை குடித்துவிட்டு
**.) ரீபோக் ஷூவை மாட்டிக்கொண்டு,
**.) சாம்சங் போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,
ரேபான் கண்ணாடியையை அணிந்து,
**.) வெஸ்டார் வாட்சைக் கட்டிக்கொண்டு,
சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,
**.) ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே, கொக்கோ கோலா அருந்தி
**.) மெக்டோனல்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு
**.) மாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு கே எப் சி பர்கரும்,
**.) குழந்தைகளுக்கு டோமினோ பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு, நண்பர்களோடு அமர்ந்து கேட்டான்..
"இந்தியன் ரூபா மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சின்னு???"
**கேட்டான் பார் ஒரு கேள்வி**

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

ஈகி நடராசன் நினைவு நாள்

முதல் இந்திஎதிர்ப்புப் போரில் உயிர் நீத்த முதல் ஈகி நடராசன் நினைவு நாள்
15.1.1939
1938ஆம் ஆண்டு இராசாசி அரசு கட்டாயப் பாடமாக பள்ளிகளில் இந்தியை திணிக்க முற்பட்ட போது தமிழர்கள் அதனை எதிர்த்துப் போரிட்டனர். அப்போது தமிழ் காக்கும் அறப்போரில் ஒரு இருபது வயது கொண்ட இளைஞன் நடராசன் என்பவன் முதன் முதலாகப் பலியானான். 1919ஆம் ஆண்டு சென்னை பெரம்பூரில் பிறந்த இவன் வீட்டிற்கு ஒரே மகன். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவனது தந்தையின் பெயர் இலட்சுமணன்.
இந்தித் திணிக்கப்படுவதைக் கண்டு கோபம் கொண்ட நடராசன் சென்னை இந்து தியாலசிகல் பள்ளியின் முன்பு நடந்த மறியல் போரில் பங்கேற்று 5.12.1938 அன்று கைது செய்யப்பட்டான். நீதிமன்றம் இவனுக்கு ஆறுமாதம் சிறைத் தண்டனையும், ஐம்பது ரூபாய் தண்டனையும் வழங்கியது. நடராசன் சிறை வாழ்வை மகிழ்வோடு ஏற்றான். அந்த மகிழ்ச்சி நீண்டநாள் நிலைக்க வில்லை. கடும் வயிற்று வலி காரணமாக சென்னை பொது மருத்துவமனையில் 30.12.1938ஆம் நாளில் சேர்க்கப்பட்டான்.
மருத்துவ சிகிச்சையில் உடல்நலம் முன்னேற்றமில்லை. இராசாசி அரசு மனிதாபிமானத்தோடு விடுதலை செய்ய மறுத்தது. நடராசன் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் விடுதலை செய்வதாக நிபந்தனை விதித்தது. உடல் நலிவோடு வாடிய நிலையிலும் தமிழுக்கு நான் மண்டியிடுவேனே தவிர, ஒருபோதும் மன்னிப்பு கேட்டு இராசாசியிடம் மண்டியிட மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்தான்.
தான் நேசித்த தமிழ்மொழிக்கு துரோகம் செய்ய விரும்பாத அந்த வீரத்தமிழ் மகன் 15.1.1939இல் மரணத்தை தழுவினான்.
நடராசன் இயற்கையாக மரணமடைந்ததாக தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அப்போது, "இராசாசி நடராசன் படிப்பு வாசனை அற்றவர், அதனால் தான் மறியலில் ஈடுபட்டார், அவரைப் போல படிப்பறிவில்லாத அப்பாவிகளை இந்தி எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்" என்று மரணத்தை இழிவாகப் பேசினார்.
உடனே, நடராசன் தந்தையார் ஒரு கண்டன அறிக்கை விடுத்தார். அதில் "மன்னிப்பு கடிதம் கொடுக்க மறுத்த நடராசன் கோழையாக வாழ்வதை விட வீரனாக சாவதையே விரும்புவதாக கூறினான். அதன்படி வீரமரணம் எய்து விட்டான்" என்று குறிப்பிட்டிருந்தார். நடராசனின் இறுதி ஊர்வலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அவனுக்குப் பின்னர் தாலமுத்து என்பவன் உயிர் துறந்தான். இந்த மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் விதமாக சென்னை எழும்பூரில் உள்ள அரசு கட்டிடம் ஒன்றுக்கு 'தாலமுத்து- நடராசன்' பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. இதில் தவறொன்று நடந்துள்ளது. முதலில் உயிர் துறந்த நடராசன் பெயர் முதலில் எழுதப்பட்டு இரண்டாவதாக தாலமுத்து பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும். எந்த ஒரு போராட்டத்திலும் முதலில் உயிர் துறந்தவரைப் போற்றும் மரபு உள்ளது. இதனடிப்படையில் நடராசன் பெயர் முதலாவதாக எழுதப்பட்டு நிகழ்ந்த தவறு சரி செய்யப்பட வேண்டும். இது தமிழக அரசுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோளாகும்.
நடராசன் உயர்த்திப் பிடித்த இந்தி எதிர்ப்பு உணர்வை தமிழகத்தில் மங்காமல் காத்திட இந்நாளில் உறுதிமொழி ஏற்போம்!

சனி, 14 ஜனவரி, 2017

பீட்டா

பீட்டாவின் பின்னணியில் மதவெறியர்கள்!
=================
"விலங்குகளின் நண்பர்கள்"என்ற அமைப்பின் தலைவர் மத்திய அமைச்சர் மேனகா காந்தி.இவருடைய மகன் தான் வருண்காந்தி.வெளிநாட்டு பெண்களை சுகிப்பதற்காக நம் நாட்டு ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்குக் கொடுத்த மகான் இவர்.் உடலுறவில ஈடுபட்டு இருந்த போது எடுத்த நிர்வாணக் காணொளிகள் கடந்த மாதம் வெளியாகி இந்தியாவையே உலுக்கியது.
இந்தியாவில் பீட்டாவின் பிரதிநிதியாக செயல்படும் ராதாராஜன் என்ற பிராமண மூதாட்டி தன் கொள்கைகள் RSS கொள்கைகள் தான் என்று டிவி பேட்டிகளில் வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கிறவர்."இந்து மதத்தை மட்டும் விமர்சனம் செய்து வந்த கல்புர்கியையும் பன்சாரேயையும் சுட்டுக் கொன்றது சரி தான் " என்று கட்டுரை எழுதியவர்.
"இந்துத்துவா கொள்கையில் உடன்பாடுள்ள நீதீபதியின் முன் ஜல்லிக்கட்டு கேஸ் விசாரணைக்கு வந்ததால் தான் தடை உத்தரவு கிடைத்தது என்று ராதாராஜன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது இந்த வழக்கை ஹேண்டில் செய்த நீதீபதியின் கொள்கை நிலைபாட்டைக் காட்டுகிறது.
மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்திய மிருக நல வாரியம் அமைக்கக் கடமைப்படுள்ளது.அதன் உதவித் தலைவராக சின்னிகிருஷ்ணா என்ற பிராமணரை மோடி நியமித்துள்ளார்.அவர் "உயர்ஜாதி என்பது பிறப்பினால் வருவது அல்ல..பரிணாம வளர்ச்சியில் மூளை வளர்ச்சியில் கீழ் ஜாதிக்காரர்களை விட கூடுதல் திறனுள்ளவர்கள்" என்று இந்த பிராமணன் ஜாதி அமைப்பிற்கு புது விளக்கம் கொடுத்து பரப்புரை செய்து லருபவர்.
புளுகிராஸின் துணைத் தலைவர் சின்னிகிருண்ணாவின் மனைவி நந்திதா கிருஷ்ணா.அவரும் மனிதர்களில் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் ஜாதிப் பிரிவினை நியாயமானது என்று பேசி வரும் இன்னொரு பிராமணப் பெண்மணி
இந்திய மிருக நல வாரியத்தின் தலைவராக அமெரிக்க குடியுரிமை பெற்று தன்னை அமெரிக்கப் பிரஜை என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பிராமணப் பெண்ணை மோடி தலைவராக நியமித்துள்ளது.அந்த அரசின் அமைப்பிற்கு ஒரு இந்திய பிரஜையை தலைவராக நியமிக்கக் கூட முடியவில்லை என்பது மோடியின் கேவலமான தேசப்பக்தியை எடுத்துக் காட்டுகிறது.
இந்த இந்துத்துவா மனப்பான்மை உள்ள பிராமணர்களுக்குத் தான் இந்தியாவில் உள்ள மிருகநல அமைப்புகளில் உறுப்பினர்களாகத் தங்களுக்கு வேண்டியவர்களாக இணைதேதுக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.
இவர்களுக்கு மோடியிடம் உள்ள செல்வாக்கை ஒப்பிடும் போது பொன்னாரை வெறும் ஆபிஸ் பாய் என்ற கடைநிலை ஊழியர் என்று தயங்காமல் சொல்லி விடலாம்.
இந்த பத்திருபது பிராமணர்கள் தான் மத்திய-மாநில அரசுகளின் ஆசிர்வாதத்தோடு தங்கள் பணபலத்தை பயன்படுத்தி 19 பெரிய வக்கீல்களை வைத்து தங்களோடு கொள்கைரீதியாக உடன்பாடுள்ள நீதீஅரசரின் ஆதரவோடு தாங்கள் மிருகவதையை எதிர்க்கும் கோடிக்கணக்கான மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக பொய் தோற்றத்தை ஏற்படுத்தி மோசடியாய் வாங்கப் பட்டது தான் ஜல்லிக்கட்டுத் தடை உத்தரவு.
#கேட்டதையும்படித்ததையும்தழுவியது.
==================
மூத்த வழக்கறிஞர்
தோழர் சி.ஞானபாரதி முகநூல் பதிவு!

புதன், 11 ஜனவரி, 2017

ஜாதியை அழிக்க விரும்புவது வடிகட்டின முட்டாள்தனம் என்கிறார் விவேகானந்தர்


தொழிலாளிக்கு மிகை நேரப்பணி இல்லை. அய்ந்து ஆண்டு முடிந்து போச்சு. ஊதிய மாற்றம் இல்லை. பல்வேறு சலுகைகள் ரத்தாகிறது. எல்சிஎஸ் ஊழியர்களுக்கு இன்னும் புத்தாண்டுப் பரிசு வழங்கப்படவில்லை. ஆனால் பல இலட்சம் செலவில் விவேகானந்தரின் பாரதமே விழித்தெழு என்று நூல் நிறுவனத்தின் செலவில் வழங்கப்படுகிறது. அதன் நோக்கம் என்ன? விவேகானந்தரே இளைஞர்களைப்பார்த்துச் சொல்கிறார்:

“வேலை செய்வதற்கு மட்டுமே உனக்கு உரிமை உள்ளது@ பலன்களை எதிர்பார்க்க அல்ல”“கடவுள் ஒருவர்தான் பலன்களைத் தருபவர். அதை அவரிடம் விட்டுவிட்டு எல்லா வேலைகளையும் செய். பலன்களைக் கணக்கிடுவதில் நீ என்ன பெறப்போகிறாய்? அந்த வழியைப் பின்பற்றாதே. எப்போதும் வேலை செய்துகொண்டே இரு” “ கீதை சொல்வதுபோல் நம்முடையதெல்லாம் பலன்களை எதிர்பார்க்காமல் வேலை செய்வதுதான்” என்று சொல்கிறார்.

இப்பொழுது புரிகிறதா நிர்வாகம் ஏன் இந்தப் புத்தகத்தை வெளியிட்டது என்று?

யாரும் எதையும் கேட்கக்கூடாது. அதனால் நிர்வாகத்திடம் எதுவும் கேட்கப்படாது. பகவானிடமும் கேட்கப்படாது. பகவானாப் பார்த்து என்ன கொடுக்கிறாரோ அதை வாங்கிக் கொண்டு வேலை செய் என்று நிர்வாகம் கூறுகிறது. பகவான் கொடுக்கப் போறது இல்லை. அதனால் யார் கொடுக்கிற இடத்தில் இருக்கிறாரோ அவர்தான் பகவான். இங்கே யார் பகவான்? நுனு பகவான் புஆ ஃ ர்சு பகவான். அதனால்தான் சங்கங்களும் கடவுளிடம் இறைஞ்சுவதுபோல்;  இவர்களிடமும் இறைஞ்சுகிறார்களோ! அல்லது இறைஞ்ச வேண்டும் என்ற நிர்வாகம் எதிர்பார்க்கிறதோ!! அவர்களாகப் பார்த்து என்ன கொடுக்கிறார்களோ அதனைப் பெற்றுக் கொண்டு மனமுவந்து வேலை செய்ய வேண்டும் என்கிறதா நிர்வாகம்?

தனக்கு வசதியானதை மட்டும் எடுத்துக்கொள்ளும் நிர்வாகம் சிலவற்றை மீறுகிறதே! ஏன்? தீண்டாமையை விவேகானந்தர் கண்டிக்கிறார். தாழ்த்தப்பட்டவர்களைப் பார்த்து எங்களைத் தொடாதீர்கள்! தொடாதீர்கள்! என்று கூவிக் கொண்டிருக்கிறோம்! அதனால் அவர்கள் கிறிஸ்தவர்களாகி விட்டார்கள். முகமதியர் வருகை அவர்களுக்கு கதிமோட்சமாக அமைந்தது என்று கூறி கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும்தான் மதம் மாற்றுகிறார்கள் என்று கூறும் ஆர்எஸ்எஸ் கும்பலின் தலையில் குட்டு வைக்கும் விவேகானந்தர் அந்தத் தீண்டாமை ஒழிய சொல்லும் வழிதான் கேலிக்கூத்தானது. எல்லோரும் தீண்டத்தகாதவர்போல் ஒருநாள் வாழ்ந்து பார்க்க வேண்டுமாம். தீண்டாமை ஒழிந்துவிடுமாம்.
தீண்டாமை ஒழிய ஜாதி ஒழிய வேண்டும் என்று சொன்னவர்கள்; அம்பேத்கரும் பெரியாரும். ஆனால் ஜாதியை அழிக்க விரும்புவது வடிகட்டின முட்டாள்தனம் என்கிறார் விவேகானந்தர். ஜாதி இருக்கும்வரை தீண்டாமையும் இருக்கத்தானே செய்யும்? உண்மையிலேயே தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று கருதுபவர்கள் ஜாதியை ஒழிக்க விரும்புவார்கள். தீண்டத்தகாதவர்களை ஏய்க்க நினைப்பவர்கள் தீண்டாமையை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு ஜாதியைப் பாதுகாக்க முயல்வார்கள். அந்த ரகத்தில் விவேகானந்தர் கூறுவது முரண்பாடானது.

விவேகானந்தர் உண்மையில்  தீண்டாமையை ஒழிக்கச் சொன்னார் என்று கூறுவார்களே யானால் அதனை ஏற்று நிர்வாகம் அதனை ஒழித்து விட்டதா? அந்தக் காலத்தில் தீண்டத்தகாதவன் அசுத்தமான வேலை செய்கிறான். குளிக்காமல் இருக்கிறான். நல்ல துணி உடுத்தாமல் அழகற்று இருக்கிறான் என்று கூறி தீண்டாமையை நியாயப்படுத்தினார்கள். ஆனால் பெல் நிர்வாகம் நன்கு படித்து நாகரிகமாக உடையுடுத்தி நல்ல திறமையுடன் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துவரும் தாழ்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகுதி இல்லை திறமை இல்லை என்று கூறி வெளிநாட்டுக்கு அனுப்புவதில் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறதே! இது நவீன தீண்டாமை இல்லையா? இந்த நிர்வாகத்துக்கு விவேகானந்தர் புத்தகத்தை வெளியிட அருகதை இருக்கிறதா? எல்லாம் இரட்டை வேடம். ஆர்எஸ்எஸ் பாசம். உயர்ஜாதி வெறி!! அதனை முறியடிக்க அணிதிரள்வீர்!!    

       தொடரும்...

பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் விவேகானந்தரின் பாரதமே உயிர்த்தெழு எனும் நூல் பெல் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பெல் செலவில் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள்இ சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளனர்.

சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவேகானந்தர்   ரதம் செல்லுகிறதாம் - அரசின் அனுமதியோடு;

இது ஒரு தவறான முன்னுதாரணமாகும்.  விவேகானந்தர் முற்போக்குப் பேசினார் - இளைஞர்களை விழித்தெழச் செய்தார் என்றெல்லாம் அவரைப்பற்றித் துதி பாடுவார்கள். ஆனால் அவர் சொன்ன முற்போக்கு சாயல் தெரிவது போன்றவற்றைக்கூட வெளியில் எடுத்துச் சொல்ல மாட்டார்கள். மாறாக இந்து மதத்தின் சிறப்புகள் வேதங்களின் உயர்ந்த தத்துவங்கள், உபநிஷத்தில் எழுதப்பட்டுள்ள தாக சிலவற்றை விவேகானந்தர் கூறுவதாக வெளிப்படுத்துவார்கள்.

அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தைப் பரப்பினார் என்பதைத்தான் பெரிதுபடுத்து வார்கள். அதன் மூலம் விவேகானந்தர் என்றால் ஒரு வசீகரத்தை மக்கள் மத்தியில் இளை ஞர்கள் மத்தியில் உருவாக்குவதுதான் இதன் பின்னணியில் உள்ள இரகசியம். பூணூல் என்பது ஆசிரமத்தில் சீடர்கள் கோவணம் கட்டுவதற்குப் பயன்படுத்திய  கயிறு என்று கூடச் சொல்லி இருக்கிறார் - இவற்றை எல்லாம் வெளிப்படுத்துவார்களா?    

  இதில் இன்னொரு கொடுமை - மோசடி என்ன தெரியுமா? பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் விவேகானந்தரின் பாரதமே உயிர்த்தெழு எனும் நூல் பெல் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பெல் செலவில் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

யார் வீட்டுப் பணத்தை எடுத்து யாருக்குத் தானம் செய்வது? மதச் சார்பற்ற அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம்  குறிப்பிட்ட மதப் பிரச்சாரகரான விவேகானந்தரின் நூலை வழங்குவது சட்டப்படி சரியானது தானா?

மதச் சார்பற்றவர்கள்இ இஸ்லாம்இ கிருத்துவம் முதலிய மதங்களைச் சார்ந்தவர்களுக்கு இத்தகைய  நிறுவனங்களில் உள்ள நிலைப்பாடு என்ன? ஓர் அரசு நிறுவனத்தில் தேவையில்லாத மதச் சர்ச்சைகளை அந்த நிறுவனத்தின் தலைமை நிருவாகமே ஏற்படுத்தலாமா?

ஆன்மீகப் பண்பாடும்இ துறவும் கொண்ட பிராமணனே நமது லட்சியம். பிராமண லட்சியம் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்? உலகியல் சிறிதும் இல்லாத உண்மை அறிவு வளம் மிக்க பிராமணத்துவத்தையே நான் கூறுகிறேன். இதுதான் இந்து இனத்தின் லட்சியம். - என்று இந்நூலில் 167ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதன் பொருள் என்ன? மிக வெளிப் படையானது.
பிராமணத்துவம் என்பதுதான் அறிவு வளம் மிக்க தத்துவமாம். அதனை அடைவதுதான் இந்து இனத்தின்

லட்சியமாம்.பிராமணத்துவம் என்பதற்குத் தம் வசதிக்கேற்ப வெண்டைக்காய்இ விளக்கெண்ணெய் வியாக்கியானம் ஒரு பக்கம் இருக்கட்டும்; இதுதான் இந்து இனத்தின் லட்சியம் என்று கூறப்பட்டுள்ளதே! இது கண்டிப்பாக இந்து மதத்தைப் பரப்பும் ஒரு செயல் அல்லவா!இந்த இந்துத்துவத்தைப் பரப்பும் வேலையில் அரசு செலவில் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஈடுபடலாமா?

இதுபோன்ற நிறுவனங்களில் பார்ப்பன ஆதிக்கமும்இ ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும் இருப்பதே இதற்கெல்லாம் காரணம் என்பது விளங்கவில்லையா?  கல்விக் கூடங்களில் இவற்றையெல்லாம் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு எப்படி அனுமதிக்கிறது?

இவற்றை எல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம் - மக்கள் கருத்தை உருவாக்குவோம்!            

(நன்றி : விடுதலை- தலையங்கம்)  

இந்து மதம் மக்களை சகோதர சகோதரிகளாகக் கருதுகிறதா?



விவேகானந்தர் இந்தமதத்தின் பெருமைகளை அமெரிக்காவரை சென்று பரப்பி வந்தவர் என்று எல்லோரும் பெருமைபொங்கச் சொல்லுவர். அவருக்கு அந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது? அமெரிக்கா உருவாகி 400வது ஆண்டுவிழா 1883ல் சிகாகோவில் நடத்தப்பட்டது. உலக மதங்களின் பிரதிநிதிகள் அனைவருக்கும் ஒருநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டது. இந்து மதத்தில் பார்ப்பனர் ஒருவருக்குத்தான் அந்த அழைப்பு வந்தது. பார்ப்பனர் கடல் தாண்டிச் செல்வது ~தோஷம்| என்பதால் அவர் செல்ல மறுத்ததனால் பார்ப்பனரல்லாதாரான விவேகானந்தருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.

அங்கு பேசிய அனைவரும் ~லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்| என்று பேசினார்களாம். விவேகானந்தர் ~பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்| என்று பேசினாராம். உடனே அவருக்குக் கூடுதல் நேரம் கொடுத்துப் பேசச் சொன்னார்கள் என்று வானத்தைக் கிழித்து எழுதி வருகிறார்கள்.

உண்மையில் இந்து மதம் மக்களை சகோதர சகோதரிகளாகக் கருதுகிறதா? கூட்டம் முடிந்தவுடன் பலர் அவரிடம் கேள்வி கேட்டார்கள். உங்கள் நாட்டில் மனிதனை மனிதன் தொட்டால் தீட்டுää பார்த்தால் பாவம்ää நிழல் பட்டால் தோஷம் என்ற நிலை இருக்கிறதே! அப்படியிருக்க, சகோதரத்துவம் நிலவுவதாகச் சொல்வது சரிதானா? என்ற கேள்விக்கு விவேகானந்தரால் எந்த பதிலும் சொல்ல இயலவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.

பிறப்பதற்கு முன்பே ஒரு குழந்தையின்மீது திணிக்கப்பட்ட ஜாதி அந்தக் குழந்தை பெரியவனாகி இறந்த பிறகு சுடுகாட்டில்கூடத் தொடர்கிறதே! மனிதன் சாகிறான்@ ஆனால் அவன்மீது திணிக்கப்பட்ட ஜாதி சாவதில்லையே! இந்த யோக்கியதையில் உள்ள ஒரு மதத்தில் சகோதரத்துவம் இருப்பதாக விவேகானந்தர் சொன்னார் என்றால்ää அது உண்மைக்கு மாறாக பொய்யாக இன்னொரு நாட்டில் எடுத்துச் சொல்லப்பட்ட பொய்யுரை அல்லவா?

அமெரிக்கா வரை சென்று இந்து மதத் தத்துவத்தை உலகறியச் செய்தார் என்று மட்டும் திருப்பித் திருப்பிச் சொன்னால் பொய்யும் உண்மையாகும் என்ற தந்திரப்படி பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை.

அந்த விவேகானந்தர் விழா என்று இங்கே பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புருடா மன்னர் சங்கமான பிஎம்எஸ் கொண்டாடுவதற்கு யாரை அழைத்து நடத்துகிறது? ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து நடத்துகிறது! அந்த ஆர்எஸ்எஸ் சுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லையென்று இவ்வளவு நாள் சத்தியம் செய்து வந்ததே! அது என்ன ஆனது? அப்பாவி கிறிஸ்தவää முஸ்லிம்ää தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்களை ஏமாற்றுவது அல்லாமல் வேறு என்ன?

அந்த ஆர்எஸ்எஸ் மனுதர்மத்தை இந்த நாட்டின் சட்டமாக்குவோம் என்கிறது. மனுதர்மம் தொழிலாளர்களை தேவடியாள் பிள்ளை என்கிறது. அவனிடத்தில் கூலி கொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்கிறது அந்த மனுதர்மம்.

இந்நிலையில் தொழிலாளிக்காகப் பாடுபடுவதாகச் சொல்வது யாரை ஏமாற்ற? உழைப்பவனுக்கு எந்த உரிமையுமில்லை என்பதோடு அவன் இழிந்தவன் கீழானவன் என்கிறது மனுதர்மம்@ உழவுத்தொழில் பாவமான தொழில் என்பதும் அந்த மனுதர்மம். ஆனால் உழவுத்தொழிலால் கிடைக்கும் பச்சரிசி, வாழைக்காய், கத்திரிக்காய், பருப்பு, புடலங்காய், மாங்காய் எல்லாவற்றையும் தின்று கொழுப்பவன் பார்ப்பான். உழவுத்தொழில் இல்லாமல் இவையெல்லாம் பார்ப்பான் சொல்லும் மந்திரத்தில் கிடைக்கிறதா? பாவமான உழவுத்தொழிலைச் செய்யும் விவசாயி கீழ்ஜாதி! உழைக்காமல் உண்டுகொழுக்கும் பார்ப்பான் மேல்ஜாதியா? பிஎம்எஸ்ஸே! பிதற்றாமல் பதில் சொல்!!

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்தும் கீழடியில் தொல்பொருள் ஆய்வை நிறுத்துவதா?
துக்ளக் இதழில் (11.1.2017) வெளிவந்த பார்ப்பன அமைப்பின் விளம்பரத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
துக்ளக்கின் விளம்பரம் இதோ:
அறிமுகம்:
Website: www.BrahminsforSociety.com
Great Contributors:
தன் தியாகத்தால் நம் நாட்டுக்கு
பெருமை சேர்த்தவர்கள் /
தன் திறமையால் தானும் உயர்ந்து
பிறரையும் உயர்த்தியவர்கள்;
இது அடுத்த தலைமுறைக்கான Electronic Database
இடஒதுக்கீடு: இன்றைய தமிழ் நாடு அரசு வேலையில் நம் பங்களிப்பு 0% சதவிகிதத்திற்கு அருகில் இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் நீங்கள் அரசு வேலைக்கு முயற்சி செய்யும் நம் குல இளைஞனை கண்டதுண்டா? இல்லை! இல்லை!! இல்லவேயில்லை!!! நம் இளைஞர்கள் சமூக நிலவரம் புரிந்து, மறுக்கப்படும் அரசு வேலையில் இருந்து விலகி இருக்கிறார்கள். இடஒதுக்கீட்டில் இப்போதைய நம் நிலை என்னவாக இருக்க வேண்டும்? ஒரு பார்வை.
குருவிக் கூட்டம்: 5-ல் மூன்று தம்பதிகள் ஒரு குழந்தையுடன் நிறுத்துகிறார்கள். 5-ல் 2 இளைஞர் களுக்கு திருமணம் ஆவதில்லை. 10-ல் ஒரு குடும்பம் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி தன் அடையாளம் இழக்கிறது. திருமண வயது 30 தாண்டி போய் கொண்டிருக்கிறது. 50 வயதுக்கு கீழ் அரசு ஊழியர், எழுத்தாளர், ஆசிரியர், கல்வியாளர், பத்திரிகையாளர், வக்கீல்கள், நீதிபதிகள், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், தமிழ் அறிஞர்கள், பல துறைகளில் வல்லுநர்கள் என பொதுவாழ்வில் எவரும் இல்லை. தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் மிகப் பெரிய பங்களிப்பை கொடுத்த சமூகம், இன்று  Tech  கூலிகளாக சுருங்கி விட்டோமா?
திருமணம்: லட்சம் இளைஞர்களுக்கு திருமணம் ஆகப் போவதில்லை. ஆண், பெண் விகிதாச்சாரம் மிக மிக மோசமான சரிவில் இருக்கிறது. இந்தப் பிரச்சினை அடுத்த 20 ஆண்டுகளில் நம் சமூகத்தை முழு அழிவில் நிறுத்தும். தமிழகத்தில் ஒரு குலத்தோர் மற்றும் கர்நாடக பிராமணர்கள், இதே பிரச்னைக்கு எப்படி தீர்வை நோக்கி செல்கிறார்கள் - E Book.
வெறுப்பின் நிழலில்: "My Code is My Craft"  என்று பெருமையாய் சொல்லும் Software நிறுவனத்தின் Management
கூட்டத்தில் “இங்கு இருக்கும் பிராமணர்கள் கை தூக்குங்கள்" என்றார்கள். கைகள் தூக்கப்பட்டன. "எங்களுக்கு பிராமணர்கள் தேவை இல்லை. அடுத்த
6 மாதத்தில் நீங்கள் அனைவரும் விலகலாம்" (மீன்களின் கண்ணீர்?) - வெறுப்பை எதிர் கொண்டு அதை அன்பால் வென்றவர்கள் நிஜ கதைகள்.
வைதீகத்தில் இருப்பவர்களின் இன்றைய நிலை என்ன? "அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்" என்பதில் நம் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்.
About us  கண்ணாடியின் முன்னே, தமிழ் கல்வி (white space for next generation) நான் ஆரியனா? (ஒரு சாமானியன் பதில்) (பதில் என்ன?), நம் தேவைகள் மற்றும் கனவுகள் ஆகலாம் வாங்க (Business Networ...) etc...
We say "No" to Donations, "No" to membership "No" to politics, "No" to hatred against any one.
Email: contact@BrahminsForSociety.com Fb:Brahmins Tamilnadu.
(We are in the draft version;
Looking for change agents like you to complete (y) Our mission.)
- மேலே கண்ட ஒரு பக்க விளம்பரம் 'துக்ளக்' 11.1.2017 இதழில் வெளி வந்துள்ளது!
contact@BrahminsForSociety.com Fb:Brahmins Tamilnadu â¡ø e-mail - - மின்னஞ்சலிலிருந்து இந்த விளம்பரம்.
ஸ்ரீமான்களான பூதேவர்களே, உங்களின் இந்த அழுகை பொய் அழுகையா? அல்லது நிஜப்புலம்பலா?
இடஒதுக்கீட்டில் உங்களது மக்கள் தொகையான 3 சதவிகிதத்திற்கு மேல், 3 அல்லது 4,5 மடங்கினை இன்னமும் எல்லாத் துறைகளிலும் அனுபவித்துக் கொண்டே இப்படி ஒப்பாரியை வைத்து உங்களவா எல்லோரையும் கூட்டிடும் முயற்சியா?
குழந்தை பெற்றுக் கொள்ளவோ, கல்யாணம் செய்து கொள்ளவோ எந்த திராவிடன் - தமிழன் - பார்ப்பனரல்லாதான் உங்களைத் தடுத்தான்? தடுக்கிறான் இல்லையே!
குருவிக் கூட்டமாகவா உள்ளீர்கள்? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்;  பருந்துக் கூட்டமாய், வல்லாதிக்க வல்லூறுக் கூட்டமாகவல்லவா இன்றும் எங்களை அடிமைப்படுத்துகிறீர்களே, அதற்கு என்ன பதில்?
ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் படிக்கவே கூடாது என்கிற மனு வேத தர்மத்தை எத்தனை ஆயிரம் ஆண்டு காலமாக சூத்திர, பஞ்சம சமுதாயத்தின்மீது சுமத்தி அவர்களை ஏர் கட்டி ஓட்டினீர்கள்?
'தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்திராதீனம் துதெய்வதம்
தன்மந்த்திரம் பிராமணாதீனம்
தஸ்மத், பிரபுஜெயத்'.
'இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது.
கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது.
மந்திரம் பிராமணனுக்குக் கட்டுப்பட்டது.
எனவே, பிராமணனை வணங்குவதே முதன்மை.'
- இப்படியெல்லாம் எழுதி வைத்து, மற்றவர்களை நம்ப வைத்து, இன்று வரை அவர்களது புத்தியை நீங்கள் சுவாதீனப்படுத்தி, பெரும்பான்மையான முட்டாள்தனத்தை, வெகு சிறுபான்மையான நீங்கள் ஆளுவது எந்த அளவு சரி - நியாயம்?
மற்றவர் நோய் வாய்ப்பட்டாலும் உங்களுக்கு வருமானம்; மரணமடைந்தாலும் தொடர் வசூலுக்குப் பஞ்சமில்லை - அதுவும் "முதல் போடா பக்தி வியாபாரம்", கன ஜோராக நடப்பதை ஏனோ வசதியாக மறந்தீர் அல்லது மறைத்தீர்? விதைக்காது விளையும் கழனி என்று அறிஞர் அண்ணா உங்களைப்பற்றி அழகாகச் சொல்லியுள்ளாரே!
இப்போது எம்மக்களுக்கு சிறிது மாறுதல் என்ற வுடன் இப்படி ஒரு பொய் அழுகையா? புலம்பலா? வெறுப்பின் நிழல் அல்ல; நெருப்பின் சூடு எங்கள் சமுதாய உழைக்கும் மக்கள் மீது எவ்வளவு காட்டமாக இருந்தது என்பதற்கு இதிகாச கால ஏகலைவனும், சம்பூகனும், பிற்கால நந்தன்களும் சாட்சியங்கள் அல்லவா? வெறுப்பின் நிழலில் இவாள் நிற்கிறார்களா? பொறுப்பின்மையால் புலம்புகின்றனர்! எங்கள் தாய் மார்களை "தேவடியாள்களாக" மானமிழக்கச் செய்து, எங்களை தாசி மக்கள் - வேசி மக்களாக இன்னமும் எழுதியுள்ள நீங்கள் வெறுப்பைப் பற்றி வேதாந்தப் பாடம் எடுப்பது என்னேகொடுமை! என்னே தலைகீழ் நிலைமை!!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பற்றியும் உங்கள் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளீர்களே - எங்களை சூத்திரன் பஞ்சமன் என்று சொல்லி, நாங்கள் நுழைந்தால் சாமி தீட்டுப்பட்டு விடும், செத்து விடும் என்கிறீர்களே, நீங்களா திருந்தி விட்டீர்கள் - மாற்றம் பெற்றுள்ளீர்கள்!
புத்தரை விழுங்கிய உங்களால் பெரியாரை விழுங்கிட முடியாமல் திணறித் திக்கு முக்காடி தெருவில் வந்து புலம்புகிறீர்கள் என்று தானே பொருள் கொள்ளப்படும்?
புத்தரை விரட்டினீர்! காந்தியைக் கொன்றீர்கள்!! பெரியார் தாக்கத்திடமும், தர்க்கத்திடமும் உங்கள் கதை எடுபடவில்லை.
காரணம் பெரியார் வெறும் தத்துவம் மட்டுமல்ல;
நடைமுறை - வாழ்க்கை நெறி! வீண் பழிக்கஞ்சாப் பாதை ஈரோட்டுப் பாதை; வரலாறு உண்மைகளைக் கூறும்போது அது கசப்பாக இருக்கும் - பிறகு உலகத் திற்கே வெளிச்சம் தரும்!
தொடருங்கள் உங்கள் மாய்மாலத்தை; நாங்கள் தொடர்ந்து கொடுக்கிறோம் - சொடுக்கிறோம்.

கி.வீரமணி
பெரியாரின் தொண்டர்களின் தொண்டன்

சென்னை
8-1-2017


Read more: http://www.viduthalai.in/headline/136057-2017-01-08-10-23-37.html#ixzz4VF23BFi5