வெள்ளி, 30 டிசம்பர், 2016

அனுப்புதல் 

வை.இராசேந்திரன்   உதவிப்பொறியாளர்                                                       பாரத மிகுமின் தொழிலகம்    திருச்சி -14.

பெறுதல்
தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி                                            தலைவர் திராவிடர் கழகம்

அய்யா, வணக்கம்!

என்னுடைய சகோதரிக்கு இரண்டு மகள்கள். இருவருமே வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். அந்த இருவருக்கும் எப்படித்திருமணம் செய்து வைக்கப்போகிறோம் என்று எங்கள் குடும்பத்தில் கவலையாக இருந்தோம். திருச்சியில் நவம்பர் 30 அன்று நடந்த மன்றல் விழா குறித்து பெல் நிறுவனத்தில் திராவிடர் தொழிலாளர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் துண்டறிக்கை வழங்கினார்கள். ஃபிளக்ஸ் போர்டு வைத்திருந்தார்கள். அத்துடன் பூவை.புலிகேசியை வைத்து வாயிற்கூட்டம் நடத்தினார்கள். இதையெல்லாம் பார்த்தபிறகு எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு அந்நிகழ்வில் கலந்துகொண்டோம். அன்றைக்கே பெரிய பெண்ணான செல்வி விக்னேஸ்வரிக்கு திருமணம் உறுதி ஆகிவிட்டது. தென்னூரைச் சேர்ந்த செல்வன் பாஸ்கரன் (அவரும் ஒரு மாற்றுத் திறனாளி) திருமணத்துக்கு ஒத்துக்கொண்டு வரும் ஏப்ரல் 14 அன்று வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்வு பெரியார் மாளிகையில் நடைபெற வேண்டும் என்ற அனைவரது ஆசையின்படி அது முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் இயக்கத் தோழர்களைப் பெருமளவு கலந்துகொள்ளச் செய்து திருமணத்தை நடத்தித் தர அறிவுறுத்துமாறு வேண்டுகிறேன். இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணமும்கூட.


மார்ச் 17ல் மதுரையில் நடந்த மன்றல் விழாவில் கலந்துகொண்ட தோழர் சரவணன் (மதுரை – 18) என்பவர் எனது சகோதரியின் இன்னொரு மகள் செல்வி வினோதினி என்பவரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார் என்பதை தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இதுபோன்ற விழாக்களை நடத்தும் தங்களுக்கு என் பாராட்டுக்களைத்   தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுக்கும் தங்கள் இயக்கத்துக்கும் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம் என்பதைத் தெரிவித்து இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மணமகன் பெயர் : செல்வன் பாஸ்கரன் வெள்ளாளர் தெரு தென்னூர் திருச்சி – 17
       
மணமகள் பெயர் : செல்வி விக்னேஸ்வரி பெரியபுதூ சாரதா கல்லூரி அருகில் சேலம் -6

இப்படிக்கு
வை.இராசேந்திரன்


01-04-2013
திருச்சி -14.


தண்ணீரும் தாகமும்

தண்ணீரும் தாகமும்

உயிரினங்கள், செடிகொடிகள் அனைத்தும் உயிர்வாழத் தண்ணீர் மிகமிக அவசியம். ஆனால் ஆறறிவு படைத்த மனிதனுக்கே குடிக்கத் தண்ணீர் தர மறுத்தது அர்த்தமுள்ள இந்துமதம். நமக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது. பண்பாடு இருக்கிறது. பாரம்பரியம் இருக்கிறது என்று சொல்லி ஆர்எஸ்எஸ் பிஎம்எஸ் கும்பல் செய்துவரும் பிரச்சாரத்துக்குச் சொந்தமான இந்துமதத்தில்தான் இந்தக் கொடுமை. இது ஓராண்டு ஈராண்டல்ல, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்தது. விலங்குகளிடமும் அன்பு செலுத்துகிறவர்கள் என்று பெருமை பேசுகின்ற அவர்கள்தான் மனிதன் தாகத்தால் தவிக்கும்போதுகூடத் தண்ணீர் தர மறுத்தார்கள்.

ஒருசாதிக்காரன் தொட்ட பாத்திரத்தில் இன்னொரு சாதிக்காரன் தண்ணீர் அருந்த மறுத்தான். தீண்டத்தகாதவர்கள் அழுக்கடைந்த குட்டைகளில் கிடந்த மாசடைந்த நீரை அருந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர்;. சொர்க்கத்துக்குப் போக ஆசைப்பட்ட சில ~தர்மவான்கள்| வைத்த தண்ணீர்ப்பந்தல்களில்கூட மூங்கில் குழாய்களில்தான் தீண்டத்தகாதவர்களுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது. அதை மறுமுனையில் நின்று அவன் கைகளில் பிடித்துக் குடிக்க வேண்டும்.

தந்தை பெரியார் 1924ல் வைக்கத்தில் போராடி தீண்டத்தகாதவர்களுக்கு பொதுவீதியில் நடக்க உரிமை பெற்றுத் தந்தபிறகு சென்னை மாகாணத்தில் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் பொதுவீதி, குளங்கள், கிணறுகள், சாலைகள் ஆகியவற்றை அனைவரும் பயன்படுத்தலாம் என்று தீர்மானம் கொண்டு வந்து நீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல பம்பாய் மாகாணத்திலுள்ள மகாத் நகராட்சியிலும் போலே என்பவராலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை.

அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து அண்ணல் அம்பேத்கர் மகாத் குளத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களோடு சென்று 1927 மார்ச் 20 அன்று  நீர் அருந்தும் போராட்டத்தை நடத்தினார். அதற்கு அவருக்கு உந்துசக்தியாக இருந்தது பெரியார் நடத்திய வைக்கம் போராட்டமாகும். அம்பேத்கரும் அவரது மக்களும் அக்குளத்து நீரைப் பருகியதால் குளமே தீட்டாகிவிட்டது என்று நீரெடுக்க மறுத்தனர் உயர் ஜாதியினர்.

எல்லாவற்றுக்கும்தான் பார்ப்பனர்கள் பரிகாரம் வைத்திருக்கிறார்களே! அதன்படி 108 குடங்களில் பசுவின் சாணம்ää பசுவின் மூத்திரம், பால், தயிர் இவற்றைத் தண்ணீரில் கலக்கி பார்ப்பனர்கள் தவளைகளைப்போல் கூச்சல் போட்டு வேதமந்திரம் முழங்கி இவற்றைக் குளத்தில் கொட்டி தீட்டுப்போக்கினர்.

மனிதன் தண்ணீர் அருந்தியதால் தீட்டானதாகக் கூறி மாட்டுச்சாணியையும், மூத்திரத்தையும் கலந்தால் தீட்டுப்போகும் என்று சொல்லுகின்ற மதம்தான் இந்துமதம். மாட்டுச்சாணியையும் மூத்திரத்தையும் விடக் கேவலமாக மனிதனை மதித்தது இந்துமதம்.

 மகாராஷ்டிரத்தில் சிவாஜிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த பேஷ்;வாக்கள் இந்தத் தீண்டாமையை மிகக் கடுமையாகக் கடைப்பிடித்தார்கள். அந்த பேஷ்வாக்களால் துவக்கப்பட்ட அமைப்புத்தான் ஆர்எஸ்எஸ்.

வெள்ளைக்காரன் வந்ததால் இந்தப் பார்ப்பன மனிதவிரோதச் செயல்களில் சில மாற்றங்கள் வந்தது. அந்த மாற்றங்களைக்கூடத் தாங்கிக் கொள்ளாமல் மீண்டும் தங்களது சாதி ஆதிக்கத்தைத் தக்கவைக்க மராத்திய சித்பவன் பார்ப்பனர்களால் துவக்கப்பட்ட அமைப்பு ஆர்எஸ்எஸ். அதனுடைய தொழிற்சங்கம் பிஎம்எஸ். இவர்கள் தண்ணீருக்காகக் கண்ணீர் விடுவது ஓநாய் ஆட்டுக்காக விடும் கண்ணீருக்குச் சமம்.

பார்ப்பன சனாதன தருமத்தைக் காப்பாற்றுவதற்காக மற்றவர்களுக்காகவும் குரல் கொடுப்பதுபோல் நடிப்பது இவர்களுக்குக் கைவந்த கலை. எனவே, இவர்களின் பசப்பு வார்த்தையை நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.


வியாழன், 29 டிசம்பர், 2016

பெரியாரியல் பயிலரங்கு

பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக பெரியாரியல் பயிலரங்கு 16-06-2013 அன்று பெல் தொமுச அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பெல்;;;;;; திராவிடர் தொழிலாளர் கழகம் பெல் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெரியாருடைய கருத்துக்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் இது குறித்து நல்ல விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

அதில் ஏராளமான இளைஞர்கள் தாங்களும் கலந்துகொண்டு பயிற்சி பெற விரும்புவதாகத் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தார்கள். எனவேää குறிப்பிட்ட நேரத்திலேயே தோழர்கள் அனைவரும் வந்து தங்கள் பெயர்களைப் பதிவுசெய்து தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள்.

காலை சரியாக 10 மணிக்கு பயிலரங்கத் துவக்க விழா நடைபெற்றது. திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு மு.சேகர் தலைமை உரையாற்றினார். திருச்சி மண்டலத் தலைவர் மானமிகு ஞா.ஆரோக்கியராஜ்ää திருவெறும்பூர் ஒன்றியத்தலைவர் வ.மாரியப்பன்ää ஒன்றியச் செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  திராவிடர் கழக செயலவைத்தலைவர் பயிலரங்கைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

திராவிடர் கழகத் துணைத்தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியாரின் பன்முக ஆற்றல் என்ற தலைப்பில் இளைஞர்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மிக அருமையாக முதல் வகுப்பை நடத்தினார்கள்.

சிறிது நேர தேநீர் இடைவேளைக்குப்பிறகு செயலவைத் தலைவர் மானமிகு அறிவுக்கரசு அவர்கள் வருணமும் வர்க்கமும் என்ற தலைப்பில் ஏராளமான ஆதாரங்களோடு வகுப்பினை எடுத்தார்கள்.

அதனையடுத்து துணைத்தலைவர் அவர்கள் பண்பாட்டுப் படையெடுப்பு என்ற தலைப்பில் தமிழர் அடையாளத்தை பார்ப்பனர் எவ்வாறு சிதைத்தனர் நம்முடைய தமிழர்களின் பண்பாட்டை எப்படிக் கெடுத்தனர் என்பதனை தமிழர்களின் பெயர்கள்ää ஊர்ப்பெயர்கள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி அந்த அடையாளத்தை மீட்டெடுக்க தந்தை பெரியார் இயக்கம் எடுத்து வரும் முயற்சிகளையும் சுட்டிக்காட்டிப் பேசியபோது மாணவர்கள் வியப்பிலாழ்ந்தார்கள்.

பகல் 1.30 மணிக்கு அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டது.

 உணவு இடைவேளைக்குப்பின் 2.30 மணிக்கு செயலவைத்தலைவர் அவர்கள் தொழிலாளரும் பகுத்தறிவும் என்ற தலைபபில் தொழிலாளர்களிடமும் சமுதாயத்திலும் நிலவி வரும் மூட நம்பிக்கைகளையும் அவற்றைக் களைந்து அனைவரும் பகுத்தறிவாளர்களாக மாற வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி பாடம் நடத்தினார்கள்.

அனையடுத்து துணைத்தலைவர் கவிஞர் அவர்கள் ஜாதி மதக் கேடுகள் என்ற தலைப்பில் மிக அருமையாக வகுப்பு எடுத்தார்கள். ஜாதிää தீண்டாமை ஆகியவற்றின் கொடுமைகளையும் மதத்தின் கேடுகளையும் அவற்றை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தையும்ää ஜாதியையும் மதத்தையும் ஒழிக்க தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் மிகப் பெரிய வரலாற்று ஆசிரியர்போல வகுப்பு எடுத்தார்கள்.

பிற்பகல் 4.30 மணிக்கு தேநீர் இடைவேளைக்குப் பிறகு செயலவைத் தலைவர் அவர்கள் தொழிலாளர்க்கான இயக்கங்கள் என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார்கள். இந்தியாவில் தொழிலாளர்களின் நிலையையும் தொழிற்சங்கங்கள் தோன்றிய வரலாற்றையும் மும்பையில் டோக்கன் வாங்க வரிசையில் நிற்காமல் முண்டியடித்துச் சென்றபோது தங்களுடைய சாப்பாட்டு மூட்டையை தீண்டத்தகாதவர்கள் தொட்டுவிட்டார்கள் என்பதற்காகத்தான் முதல் வேலை நிறுத்தம் நடைபெற்றது என்பதனையும் அகில இ;திய தெரிற்சங்க காங்கிரஸ்ää அதிலிருந்து உடைத்து காங்கிரஸ் இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கிய வரலாறுää சிங்காரவேலர்ää ஜீவா போன்றவர்களின் வரலாறுகளையும் தந்தை பெரியார் நாகை ரயில்வே ஊழியர் போராட்டத்தை ஆதரித்தது முதல் மேதினத்தைக் கொண்டாடிய வரலாறுää இரயில்வேயில் தென் இந்திய இரயில்வே தொழிற்சங்கத்தைத் துவக்கிய வரலாறு ஆகியவற்றையும் எடுத்துச் சொல்லி உண்மையான தொழிற்சங்கவாதிகள் யார் என்பதையும் உண்மையான கம்ய10னிஸ்ட்கள் நாம்தான் என்பதையும் வரலாற்று ஆதாரங்களைக் காட்டி வகுப்பெடுத்தார்கள்.

மாலை 5.30 மணிக்கு தேநீர் இடைவேளை முடிந்த உடன் கேள்வி பதில் நேரம் துவங்கியது. அதில் இளைஞர்கள் தொடுத்த வினா மிகவும் சமூகப்பொறுப்புடனும் சமுதாய மாற்றத்தை நோக்கியதாகவும் இருந்தது. ஜாதிää தீண்டாமை தொடர்பாகவும்ää சமூகநீதி தொடர்பாகவும் பெண்ணடிமை ஒழிப்புக் குறித்தும் பலகேள்விகள் தொடுக்கப்பட்டன.

துணைத்தலைவர் அவர்களும்ää செயலவைத் தலைவர் அவர்களும் அக்கேள்விகளுக்கெல்லாம் சுவைபடவும் அறிவுப்ப10ர்வமாகவும் ஆதாரப் பூர்வமாகவம் விடையளித்தார்கள். அந்த விடைகளால் இளைஞர்கள் அனைவரும் திருப்தி அடைந்து மனநிறைவுற்றார்கள். இதற்கு மேலும் உங்களுக்கு அய்யங்கள் எழுமேயானால் எங்களுக்கு எழுதுங்கள். தாராளமாக விடையளிக்கிறோம் என்று கவீஞர் அவர்களும் செயலவைத் தலைவர் அவர்களும் உறுதியளித்தார்கள்.

பயிலரங்கில் 54 இளைஞர்கள் கலந்துகொண்டார்கள். பயிற்சி நிறைவில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்கள் சார்பாக தோழர் சண்முகம் கவிஞர் அவர்களுக்கும்ää செயலவைத் தலைவர் அவர்களுக்கும் பயனாடையும் கேடயமும் வழங்கினார். பயிற்சிக்கான களத்தினை உருவாக்கிக் கொடுத்த பெல் திதொக செயலாளர் ம.ஆறுமுகம் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

பயிலரங்கு நிறைவடைந்த உடன் 24-06-2013 அன்று பணி ஓய்வு பெற உள்ள பெல் திதொக தலைவர் மானமிகு க.வெ.சுப்பிரமணியன் அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. மாவட்ட தி.க தலைவர் மு.சேகர் தலைமையேற்றார். திருச்சி மண்டலத்தலைவர் ஆரோக்கியராஜ் திருவெறும்ப10ர் ஒன்றியத்தலைவர் வ.மாரியப்பன் ஒன்றியச் செயலாளர் இரா. தமிழ்ச்சுடர் ஆகியோர் முன்னிலை வகி;த்தனர். பெல் திதொக செயலாளர் ம.ஆறுமுகம் க.வெ.சுப்பிரமணியன் அவர்களின் தொண்டினையும் அவர் ஏற்ற பொறுப்புக்கள் செய்த பணிகள் ஆகியவற்றைத் தொகுத்து வழங்கி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் க.வெ.சுப்பிரமணியன் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டுரை வழங்கினார். திராவிடர் கழகத் துணைத்தலைவர் ஆடையணிவித்து வாழ்த்திப் பேசினார். ஒன்றிய திராவிடர் கழகத்தலைவர் வ.மாரியப்பன் நன்றியுரையாற்றினார்.

பயிலரங்கத்திலும் பணி ஓய்வு பாராட்டு விழாவிலும் பகுத்தறிவாளர் கழக மாவட்ட முன்னாள் செயலாளர் சி.மேகநாதன்ää பெல் திதொக முன்னாள் தலைவர் சி.பிச்சைமணிää காட்டூர் பக தோழர் சங்கிலிமுத்துää காட்டூர் கிளை செலாளர் சிவானந்தனää துவாக்குடி நகரத்தலைவர் விடுதலை கிருஷ்ணன்ää நகரச் செயலாளர் ஆ.இராமலிங்கம்ää கவிஞர் இனியன்ää தி.தொக பொருளாளர் தாமஸ்ää தி.தொக தாமோதரன்ää திரு தமிழரசன்ää பாலகங்காதரன்ää திருவேங்கடநகர் கணேசன் விடுதலை செய்தியாளர் மா.செந்தமிழினியன்ää அமைப்புசாரா திராவிடர் தொழிற்சங்கத்தலைவர் திராவிடன் கார்த்திக்ää செல்வக்குமார்ää ஜோ.பி.சேவியர்ää காட்டூர் கனகராசு உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்துகொண்டார்கள். பயிற்சியாளர்களுக்கு உணவு தேநீர் ஆகிவற்றை வழங்கும் பொறுப்பை மானமிகு பூபாலன்ää தோழர் மேகநாதன்ää தோழர் சி.பிச்சைமணிää தோழர் ம.சங்கிலிமுத்து கவிஞர் இனியன் ஆகியோர் ஏற்றுக்கொண்டு சுவையான உணவும் தேநீரும் வழங்கினார்கள்.

 

புதன், 28 டிசம்பர், 2016

பெரியார் வழியில் செல்லுவோம் - வெல்லுவோம்!

பெரியார் வழியில் செல்லுவோம் - வெல்லுவோம்!


‘‘யார் ஒருவர் மக்கள் நன்மைக்குப் பாடுபடுபவராகவும்இ ஒழுக்கத்தில் சிறந்து தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டும் விளங்குகிறாரோஇ
அவர் மற்ற மக்கள் யாவரும் அப்பண்புகளைப் பின்பற்றுவதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.

அப்பேர்ப்பட்டவரை மக்கள் உணரும்படிச் செய்யவேண்டும்.

அவரின் உயரிய பண்புகளையும்இ சேவைகளையும் மற்ற மக்களும் பின்பற்றி நடக்கும் வண்ணம் செய்யவேண்டும்.

அதற்கென்று அவரின் குணங்களை மக்கள் பார்த்துத் தமது வாழ்க்கையில் பின்பற்றி வந்த தகாத காரியங்களை விட்டொழித்துத் திருந்தி வாழவேண்டும்.

அதற்காக இவரைப் பார்த்தவுடன் அவரின் உயர்ந்த பண்புகள் யாவும் உதித்து அதனைப் பின்பற்றச் செய்யவேண்டும் என்பதற்காகவே படத்திறப்பும்இ சிலை திறப்பும் ஆன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.’’

- இவ்வாறு தந்தை பெரியார் கூறியுள்ளார்.

பொதுவாக தந்தை பெரியார் கூறியிருந்தாலும்இ இது தந்தை பெரியார் அவர்களுக்கே பொருந்தக் கூடியதாகும். இதனைப் படிக்கும் ஒவ்வொருவர் அகக் கண்ணிலும் தந்தை பெரியார் அவர் களின் உருவமே நிழலாடும்.

பண்பு என்று சொல்லும்பொழுது - புரட்சிக்கவிஞர் சொன்னாரே - தந்தை பெரியார்பற்றி ‘‘மிக்க பண்பின் குடியிருப்பு’’ என்றுஇ அந்த வரி நினைவுக்கு வருமே!
சேவைகளை மதிக்கவேண்டும் என்று தந்தை பெரியார் அவர் கள் கூறும் வரியைப் படிக்கும்பொழுது - புரட்சிக்கவிஞர் கூறிய ‘‘தொண்டு செய்து பழுத்த பழம்‘’ என்ற வரி நினைவுக்கு வந்தே தீரும்.

மனிதனாக இருப்பதே பிறருக்குத் தொண்டு செய்வதே என்பது தந்தை பெரியார் அவர்களின் செழித்த சிந்தனையாகும்.

‘‘மனிதன் தானாகப் பிறக்கவில்லை. ஆகவேஇ அவன் தனக்காகப் பிறக்கவில்லை. மற்றவர்களுக்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்கவேண்டும். அப்படி எண்ணிப் பார்த்து செயல்புரிவதுதான் மனிதத் தன்மை’’ (21.7.1962) என்று தொண்டு செய்து பழுத்த பழமாம் தந்தை பெரியார் கூறுவதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

95 வயதிலும் மூத்திர வாளியைச் சுமந்து கொண்டு கடைசி நிமிடம்வரை பாழ்பட்டுப் போன திராவிடர் சமுதாயத்துக்காக உழைத்துக் கொண்டிருந்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு பெரும் தலைவரின் நினைவு நாள் இந்நாள் (43 ஆம் ஆண்டு).

அவர் வாழ்ந்த காலத்தைவிடஇ மறைந்த இந்தக் காலகட்டத்தில் அதிகமாக நினைக்கப்படுகிறார் - இன்னும் சொல்லப்போனால் தேவைப்படுகிறார் என்பதுதான் உண்மை.

அதுவும் மத்தியில் இந்துத்துவா வெறி கொண்ட ஓர் ஆட்சி நடந்துகொண்டுள்ளது. தங்கள் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனீயத்துக்குப் புத்துயிரூட்டிஇ மனுதர்மக் கொடியை ஏற்றிட வேண்டும் என்ற துடிப்பில் இருக்கிறது.

செத்தொழிந்து போன சமஸ்கிருதத்தைப் பாடத் திட்டத்தில் கொண்டு வரவேண்டும் என்பது எதைக் காட்டுகிறது? குருகுல முறையைப் பாடத் திட்டத்தில் சேர்த்திருப்பதன் பின்னணி என்ன?

தேசிய புதிய கல்விக் கொள்கை - 2016 என்பது நவீனக் குலக் கல்வித் திட்டம்தானே! இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்திலேயே இந்தக் கல்வித் திட்டத்தை எதிர்ப்பதில் முன் வரிசையில் தமிழ் மண் மார்தட்டி நிற்கிறது என்றால் காரணம் - இது தந்தை பெரியார் அவர்களால் செப்பனிப்பட்டது என்பதுதானே!

ஆர்.எஸ்.எஸின் அடிப்படைச் சித்தாந்தத்தை செயல்படுத்த முனைகிறார்கள் என்கிறபோது - யார் சொன்னாலும் சொல்லா விட்டாலும்இ அந்தக் கொடும் நோயை ஒழிப்பதற்குச் சரியான அறுவை மருத்துவம் தந்தை பெரியார் கொள்கையும்இ சித்தாந்த முமே தான் என்பதில் இரு கருத்துக்கு இடம் இல்லை.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - இந்தியத் துணைக் கண்டத்துக்கே தேவைப்படும் கருத்தாகி விட்டது. அதன் எதிரொலியாக இந்தி யாவில் பல மாநிலங்களிலும் உள்ள பல்கலைக் கழகங்களிலும்இ கல்லூரிகளிலும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப் படுகிறதுஇ நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது என்பது எதனைக் காட்டுகிறது?

சென்னை அய்.அய்.டி.இயில் பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டபோதுஇ பார்ப்பன அதிகாரவர்க்கம் தடை செய்தது. அதனை நிலை நிறுத்த முடிந்ததா? தடை உடைபட்டதே! சென்னை கிண்டியில் அவர்கள் தடை செய்ததன் விளைவு - இந்தியாவில்  பல மாநிலங்களில் உள்ள அய்.அய்.டி.இகளில் பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டு விட்டதே!

எதிர்க்க எதிர்க்கத்தான் தந்தை பெரியார் கொள்கை தலை நிமிர்ந்து வெற்றிக் கொடியை நாட்டும். வாழ்நாள் முழுவதும் எதிர்நீச்சல் போட்டுதானே தந்தை பெரியார் வெற்றி பெற்றார்.

விநாயகனை உடைத்ததுமுதல் இந்திய அரசமைப்புச் சட்டத் தையே கொளுத்தவில்லையா? இந்தச் செயல் வேறு எந்த மாநிலத்தில் நடந்திருக்கிறது?
பிரச்சாரம் - போராட்டம் என்ற இரு அணுகுமுறைகளைத் தந்து சென்றுள்ளார் அந்தப் புரட்சித் தந்தை.

தந்தை பெரியார் அவர்கள் மறைந்த ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடுக்கு சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட்டு விட்டது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசுத் துறைகளில் 27 சதவிகித இட ஒதுக்கீடு கல்வியிலும்இ வேலை வாய்ப்பிலும் உறுதி செய்யப்பட்டு விட்டது.

மதச் சார்பின்மைஇ சமூகநீதி என்னும் குடையின்கீழ் இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள்இ முற்போக்குவாதிகள்இ இடதுசாரிகள் ஒன்றிணைந்து ‘பெரியார் வாழ்க!’ என்று குரல் கொடுத்துத் தீரவேண்டிய காலகட்டம் இது.

அவர்களின் 43 ஆம் ஆண்டு நினைவு நாளில் நமது செயல் பாட்டில் கூடுதலான வேகமும்இ எழுச்சியும் இருக்கப்போவது உறுதி! அதற்கான பழுத்த சூழ்நிலையை நமது எதிரிகள் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

பெரியார் வழியில் செல்லுவோம் - வெல்லுவோம்!




ஜக்கி வாசுதேவ் எனும் பொறுக்கி சாமியார்

அரசாங்கத்தையே கட்டுப்படுத்தும் ஜக்கி வாசுதேவ் எனும் பொறுக்கி சாமியார்                  - செ.கார்கி
விவரங்கள்
எழுத்தாளர்: செ.கார்கி
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
வெளியிடப்பட்டது: 17 ஆகஸ்ட் 2016
ஜக்கி வாசுதேவனை தெரியாதவர்கள் என்று தமிழ்நாட்டில் அனேகமாக யாரும் இன்று இருக்க முடியாது. அரசியல் தலைவர்களின் சுவரொட்டிகளுக்கு இணையாக தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இந்தக் கருமம் பிடித்தவனின் புகழ் பரப்பும் சுவரொட்டிகளைக் காணமுடியும். இந்தக் கேடிப்பயலுக்குச் சாமானிய மக்கள் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள சில முக்கிய திரைப்பட நடிகர்கள், நடிகைகள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலதரப்பட்ட நபர்களும் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இப்படி அதிகார வர்க்க பலமும், பணபலமும் பொருந்திய ஜக்கியின் மீது கொடுக்கப்படும் புகார்கள் ஆளும்வர்க்கத்தால் கண்டுகொள்ளப்படும் என்றா நினைக்கின்றீர்கள்?
jaggi vasudevகோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர் காமராஜ் அவரது மனைவி சத்தியஜோதி ஆகியோர் தங்களது மகள்கள் இரண்டுபேரை ஈஷா யோகமையத்தினர் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாகவும், அவர்களை மீட்டுத் தரக் கோரியும் கோவை ஆலந்தூர் காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போன்றவர்களிடமும் புகார் அளித்துள்ளனர். ஆனால் ஜக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலந்தூர் காவல் நிலையமும், மாவட்ட ஆட்சியரும் அந்தப் புகாரை கண்டுகொள்ளாமல் போனாதால் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் ஒரு மானங்கெட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தால் காவல்துறை சம்பந்தப்பட்ட நபரை நீதிமன்றத்தின் முன் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் காவிமூளை நீதிபதிகளான எஸ். நாகமுத்து மற்றும் வி. பாரதிதாசன் ஆகியோர் ஈஷா யோகா மையத்தின் எடுபிடிகள் போன்று தீர்ப்பு வழங்கி உள்ளனர். அந்தத் தீர்ப்பில் மாவட்ட முதன்மை நீதிபதிகள் தனது அறிக்கையில் அந்தப் பெண்கள் இருவரும் தங்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே ஈஷா யோகா மையத்தில் தங்கியிருப்பதாகவும், அவர்களை யாரும் சட்ட விரோதமாக அங்கு அடைத்து வைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அந்த இரண்டு பெண்களையும் பெற்றோர் நேரில் சென்று பார்க்க எந்தத் தடையும் இல்லை. ஆனால் அவர்கள் எப்போது அங்கு செல்கிறார்கள் என்பதை முன்கூட்டியே ஈஷா யோகா மையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டுச் செல்ல வேண்டும். அது போல அந்தப் பெண்களை பெற்றோர் தவிர வேறு யாரும் சென்று பார்க்கக்கூடாதுஎன்றும் லதா, கிதா ஆகியோர் இருவரும் விரும்பி சன்னியாசம் பூண்டிருந்தால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக்கப்பட்டிருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்கள்.
இதற்குப் பெயர் தீர்ப்பாம்!. ஈஷா யோகா மையம் எழுதிக் கொடுத்ததை அப்படியே படித்த மாதிரி இருக்கின்றது. அந்தப் பெற்றோர்கள் தங்கள் மகள்களை கொண்டுவந்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது யாரோ முன்பின் தெரியாத நபருக்கு எதிராக அல்ல. அவர்கள் புகார் தெரிவிக்கும் ஜக்கிக்கு எதிராக கஞ்சா விற்ற வழக்கு, நில அபகரிப்பு வழக்கு, தன்னுடைய மனைவி விஜியைக் கொன்றதாக கொலை வழக்கு என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு பொறுக்கியின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்போது அந்தக் குற்றச்சாட்டை நீதி மன்றம் எப்படி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்?
லதா மற்றும் கீதா ஆகியோர்களின் பெற்றோர்களான காமராஜ், சத்தியஜோதி தம்பதிகள் முன்வைத்திருக்கும் முக்கிய குற்றச்சாட்டுகள் தங்கள் மகள்களை ஜக்கி ஏமாற்றி வலுக்கட்டாயமாக அடைத்து வைத்திருக்கின்றார் என்பது மட்டும் அல்ல. தங்கள் பெண்களுக்குக் கருப்பை நீக்கம் செய்திருக்கின்றார்கள் என்பது போன்ற பயங்கரமான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து இருக்கின்றார்கள். நேர்மையான நீதிபதிகளாக இருந்திருந்தால் இந்த இரண்டு பெண்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்கள் சொன்னது உண்மையா பொய்யா என்பதை கண்டறிய உத்திரவிட்டிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யத் துப்பில்லாமல் ஒரு குழுவை ஈஷா யோகா மையத்திற்கே அனுப்பி விசாரணை செய்யச் சொல்வது என்ன வகையான நீதி? எந்தச் சட்டத்தில் அப்படி செய்ய சொல்லி இருக்கின்றது?
இந்தப் பொறுக்கியின் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் தனக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தப் பொறுக்கி தப்பித்துக்கொண்டே இருக்கின்றான். பெரியாரின் அரசியல் வாரிசாக தன்னை அறிவித்துக்கொள்ளும் கருணாநிதியின் ஆட்சியில் தான் இந்தப் பொறுக்கி தனது கார்ப்ரேட் ஆன்மீக சாம்ராஜ்ஜியத்தை தமிழகத்தில் ஆழமாக நிலை நிறுத்திக்கொண்டான். பல ஏக்கர் காடுகளை அழித்து கட்டிடங்கள் கட்டிக்கொண்டான். இன்றுவரை கலைஞரோ அவரது குடும்பமோ ஈஷா யோகா மையத்திற்கு எதிராக கண்டனம் எதையும் தெரிவிக்கவில்லை என்பதையும் இதனோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்..
தன்னை மதம் சாராத ஆன்மீகவாதி என்று இத்தனை நாட்களாக சொல்லிக்கொண்டு உலக நாடுகள் அனைத்திலும் கடைவிரித்து பணம் கறந்துவந்த இந்தப் பரதேசியின் உண்மை முகம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. ஈஷா யோகமையத்திற்கு விசாரணைக்காக சென்ற அதிகாரிகளை உள்ளே செல்ல விடாமல் தடுத்திருக்கின்றான் பார்ப்பன பொறுக்கி எச். ராஜா. அவன் சரியாகவே ஈஷா யோகாவை அம்பலப்படுத்தி இருக்கின்றான். ஈஷா யோகா மையத்தின் மீதான குற்றச் சாட்டுகளுக்குப் பின் மதமாற்ற சக்திகள் உள்ளதாக தெரிவித்து இருக்கின்றான். ஈஷா யோகா மையம் இந்துக்களை வேறுமதம் நோக்கி செல்வதை தடுப்பதாகவும் அதனாலேயே அதன் மீது புகார்கள் தரப்படுவதாகவும் சொல்கின்றான் இந்தப் பார்ப்பன பொறுக்கி.
அப்படி என்றால் ஈஷா யோகா ஒரு இந்துமத அடிப்படைவாத அமைப்பு என்பது உறுதி ஆகின்றது. சிவலிங்கத்தை வைத்துக்கொண்டு இந்த நாய் இத்தனை நாட்களாக தன்னை மதம் சாராதவனாக விட்டுக்கொண்டிருந்த ரீலை பார்ப்பன பொறுக்கி எச்.ராஜாவே அறுத்துவிட்டிருக்கின்றான். அதற்காக அந்த பொறுக்கி பயலுக்கு நாம் நன்றிகளை சொல்ல வேண்டும்.
தங்களுக்கு ஒரு நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பி நீதிமன்றத்திற்கு போன அந்தப் பெற்றோர்களுக்கு ஜக்கியின் நாக்குகளில் தீர்ப்பு சொல்லி தாங்கள் ஈஷா யோகாமையத்தின் கைக்கூலிகள் என்பதை நீதிபதிகள் நிரூபித்துவிட்டார்கள். தன்னுடைய குழந்தைகளை பார்க்க போகும்போது கூட இனி அவர்கள் முன்கூட்டியே ஈஷா யோகா மையத்திற்கு தெரிவித்துவிட்டுத்தான் போகவேண்டும். அப்போதுதான் அவர்கள் பெற்றோர்களிடம் எப்படி, என்ன பேசவேண்டும் என அவர்களுக்கு பயிற்சி அளிக்க வசதியாக இருக்கும். இதற்குப் பெயர்தான் நீதி என்று இந்த நீதிபதிகள் நம்மை நம்பச் சொல்கின்றார்கள்.
இந்தச் சம்பவத்தை ஒட்டி கருத்து தெரிவித்து இருக்கும் ஈஷா யோகா மையம் ஈஷாவில் இருக்கும் பெண்துறவிகளை மட்டும் பழிப்பது பெண் உரிமையை நசுக்குவதோடு மட்டுமில்லாமல் அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செய்யப்படும் செயல்களாகவே பார்க்க முடிகிறதுஎன கூறி இருக்கின்றது.
எவ்வளவு சாதூர்யமாக இந்தப் பிரச்சினையை பெண்ணுரிமை சார்ந்த பிரச்சினையாக மாற்றப் பார்க்கின்றான் இந்தப் பரதேசி என்று பாருங்கள். இந்தப் பெண்கள் சமூக சேவை செய்கின்றார்களாம். யோகா கற்றுக் கொடுக்கின்றேன் என்று சொல்லி கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் இந்த நாயிடம் அந்தப் பெண்கள் சமூக சேவை செய்யப் போகின்றார்களாம். ஆசிரமத்துக்கு வரும் வெளிநாட்டு பக்தர்களிடம் ஆங்கிலத்தில் பேசி அவர்களை மூளைசலவை செய்து அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு விடுவதற்கு பெயர் சமூக சேவையாம்!.
நன்றாக படித்து நல்ல வேலையில் இருந்த இந்தப் பெண்களை இன்று மொட்டை போட்டு காவி உடை அணிவித்து தான் நடத்தும் கார்ப்ரேட் ஆன்மீக சாம்ராஜ்ஜியத்துக்குச் சேவை செய்ய வைத்துள்ளான். தன்னுடைய மகள் ராதேவுக்கு கர்நாடகாவை சேர்ந்த பாடகர் சந்தீப் நாராயணை மணம் முடித்து அழகு பார்த்த அந்த பொறுக்கி அடுத்தவன் வீட்டு பிள்ளைகளுக்கு மொட்டை போட்டு காவி உடை அணிவித்து தீட்சை கொடுக்கின்றான். இந்தப் பொறுக்கியின் யோக்கியதை என்னவென்று தெரியாமல் பலபேர் இவனை கடவுளுக்கு நிகராக வைத்து வழிபடுகின்றார்கள்.
இவனைப் போன்ற பரதேசிகள் இந்த ஆளும் வர்க்கத்திற்கு எப்போதுமே தேவைப்படுகின்றார்கள். தங்கள் மீது மக்களுக்கு உள்ள எதிர்ப்பை மட்டுப்படுத்தவும், அவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையின் மையமான காரணத்தை யோசிக்கவிடாமல் தடுக்கவும் இது போன்ற கார்ப்ரேட் சாமியார்கள் திட்டமிட்ட முறையில் ஆளும் வர்க்கத்தால் வளர்த்துவிடப் படுகின்றார்கள். அதனால் அரசே முன்வந்து இவன் மீது நடவடிக்கை எடுக்கும் என நம்பிக் கொண்டிருந்தால் நம்மால் இவனை ஒன்றும் செய்யமுடியாது. இவனுக்கு எதிராக அனைத்து முற்போக்கு இயக்கங்களும் ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்துவதன் வாயிலாகவே இவனையும் இவனைப் போன்ற கார்ப்ரேட் சாமியார்களையும் நாம் தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்க முடியும்.
- செ.கார்கி