வியாழன், 26 அக்டோபர், 2017

பிஎம்எஸ்சின்அம்பேத்கர் சிறப்பிதழ்

 ஆர்எஸ்எஸ் சின் தொழிற்சங்கமான பிஎம்எஸ் கோல்வால்கர் சிறப்பிதழ் வெளியிடலாம். சவர்க்கர் சிறப்பிதழ் வெளியிடலாம். ஹெட்கேவர் சிறப்பிதழ் வெளியிடலாம். டெங்கடி சிறப்பிதழ் வெளியிடலாம். ஏன்? மோடி சிறப்பிதழ் கூட வெளியிடலாம். அதையெல்லாம் யாரும் குறை கூறப் போவதில்லை. எதற்காக அம்பேத்கர் சிறப்பிதழ் வெளியிட வேண்டும்? அங்கேதான் அவர்களின் சூழ்ச்சி புதைந்திருக்கிறது.

தங்களது கொள்கை என்பது வெகுமக்களுக்கு எதிரானது. அதிலும் குறிப்பாக உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானது. முஸ்லிம்களுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிரானது என்பதை இப்பொழுது அவர்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். இருந்தாலும் அதனை அமுல்படுத்தியே ஆக வேண்டும் என்ற வெறி இருக்கிறது. எப்படியாவது இந்துராஜ்யத்தை உருவாக்கி பார்ப்பனர் கைகளில் ராஜ்யத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். அதற்காக அவர்கள் எவ்வளவு கீழான நிலைக்கும் செல்வதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
தங்கள் கொள்கைகள் வெகுமக்களிடம் எடுபடாமல் போனதற்குக் காரணம் அம்பேத்கரும் பெரியாரும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தமிழகத்தில் அண்ணா போன்றவர்கள் காரணம் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அதனை எதிர்த்து அவர்கள் கொள்கைகளுக்கு மறுப்புச் சொல்லித் தங்கள் அமைப்பை இங்கே காலூன்ற வைக்க முடியாது என்பதால்தான் அவர்களை அரவணைப்பதுபோல் அரவணைத்து அழித்தொழிக்க நினைக்கிறார்கள். அதனால்தான் டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்களை வளைத்துப் போட்டு அவர்கள் மூலமாக இப்பொழுது பெரியார் கொள்கைகளும் அம்பேத்கர் கொள்கைகளும் ஒத்து வராது என்று சொல்ல வைக்கிறார்கள். அப்படிச் சொன்ன கையோடு அம்பேத்கரும் பெரியாரும் இப்பொழுது இருந்திருந்தால் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று பேச வைக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ் சின் எந்த சித்தாந்தத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதையும் சொன்னால் பரவாயில்லை. அதைச் சொல்ல மாட்டார்கள். பெரியாரும் அண்ணலும் ஆர்எஸ்எஸ் சின் இந்து ராஜ்யத்தை ஏற்றுக் கொள்வார்களா? இராமராஜ்யத்தை ஆதரிப்பார்களா? இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் ஆதரிப்பார்களா? பகவத் கீதையை அங்கீகரிப்பார்களா? மனுதர்மத்தை ஒத்துக் கொள்வார்களா? இராமனுக்குக் கோயில் கட்டுவதை சரி என்பார்களா? சேது சமுத்திரத்திட்டத்தை எதிர்க்க இராமன் பாலம் இருந்தது என்ற சிந்தனையை அவர்கள் அங்கீகரிப்பார்களா?
இது எதுவும் நடக்காது. இருந்தாலும் மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற ஒரு கருத்தைப் பரப்பி வருகிறார்கள். இப்பொழுது புதிதாக ஒருவர் முரளிதர ராவ் என்ற ஆந்திராக்காரர் ஏதோ அண்ணாவை முழுதாக அறிந்தவர் போல அறிஞர் அண்ணா இன்று இருந்தால் பாஜக வில்தான் சேருவார் என்று கதை விடுகிறார்.
அதைவிட ஒருபடி மேலே போய் வெங்கடேசன் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞரைப்பிடித்து இந்துத்துவ அம்பேத்கர் என்று எழுத வைக்கிறார்கள்.
அப்படி அண்ணல் அம்பேத்கரை இந்துத்துவ அம்பேத்கர் என்று நிரூபிப்பதற்காகத்தான் பிஎம்எஸ் சும் அம்பேத்கர் ஜெயந்தி சிறப்பிதழ் என்று வெளியிட்டு அம்பேத்கரின் கொள்கைகளை தப்பும் தவறுமாகச் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறது. அதுபோன்ற கருத்துக்கள் அவர்கள் வெளியிட்ட அம்பேத்கர் சிறப்பிதழில் ஏராளம் மலிந்து கிடக்கிறது. அதில் பல விசமத்தனமான கருத்துக்கள் இடம் பிடித்துள்ளன.
அதில் ஒன்றுதான் அம்பேத்கர் பாக்கிஸ்தான் பிரிவதை கடுமையாக எதிர்த்தார் என்று எழுதுகிறது. பாக்கிஸ்தான் பற்றிய சிந்தனைகள் என்ற நூல் கிட்டத்தட்ட எழுநூறு பக்கங்கள் கொண்டது. அதை முழுவதையும் படித்து உள்வாங்குவதற்கே ஒரு தனி அறிவு வேண்டும். அந்த நூலில்  இந்துக்கள் இஸ்லாமியர் இரு தரப்பாருடைய வாதங்களையும் நடுநிலையோடு ஆராய்ந்து பொதுவான கருத்துக்கள் பலவற்றை எடுத்துரைக்கிறார். இருதரப்பாருடைய அணுகுமுறையுமே தேசிய நலனுக்கு அப்பாற்பட்டவையாகத்தான் உள்ளன என்கிறார். (பக்கம் 577)
எந்த இடத்திலும் பாக்கிஸ்தான் கூடாது கூடவே கூடாது என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் இந்துராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று ஆணித்தரமாகச் சொல்கிறார். “இந்துராஜ்யம் நிஜமாகும் பட்சத்தில் அது இந்த நாட்டின் மிகப்பெரும் சோக சம்பவமாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. இந்துக்கள் என்ன சொன்னாலும் இந்துமதம் விடுதலைää சமத்துவம்ää சகோதரத்துவம் ஆகியவற்றுக்குப் பேரிடராகவே இருக்கும். இந்த விசயத்தில் அது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல. இந்து ராஜ்யம் எந்த விலை கொடுத்தேனும் தடுக்கப்பட வேண்டும்” என்று சொல்லும் அவர் அதற்குப் பரிகாரமாக பாக்கிஸ்தான் அமையாது என்பதையும் நடுநிலையோடு சுட்டிக்காட்டுகிறார். பக்கம் 536)
இதனை அப்படியே மூடிமறைத்து விட்டு அண்ணல் அவர்கள் ஏதோ முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரான கருத்தைச் சொன்னார் என்று அவரைத் திசைதிருப்பப் பார்க்கிறது.
ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் முஸ்லிம்களிடையே உருவாகவில்லையே என்று கவலைப்படும் அவர் முஸ்லிம்கள் எடுத்த எடுப்பிலேயே பாக்கிஸ்தான் கோரிக்கையை வைக்கவில்லை என்பதையும் முகமதலி ஜின்னா 1920 லிருந்து 1937 வரை பாக்கிஸ்தான் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். “1937வரை கூடிவாழும் விருப்பம் நிச்சயமாக இருந்து வந்தது. 1935ம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டம் உருவாக்கப்பட்டபோது தாங்கள் ஒரே நாட்டின் ஒரே சட்டத்தின் கீழ் கூடி வாழ வேண்டும் என்ற கருத்தை இந்துக்களும் முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டதுடன் அச்சட்டம் ஏற்றப்படுவதற்கு முந்தைய விவாதங்களிலும் கலந்துகொண்டனர்” என்கிறார் அண்ணல் (பக்கம்521)
பாகிஸ்தான் எதிர்ப்பாளர்களின் முகத்திரையைப் பல இடங்களில் கிழித்துத் தொங்க விட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் இந்துமகாசபையின் இரட்டை வேடங்களைத் தோலுறித்துக் காட்டுகிறார்.
இந்தியாவில் மொழிவாரி மாகாணங்கள் பிரிவதை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுவிட்ட கோட்பாடாகிவிட்டது. “கர்னாடகமும் ஆந்திராவும் பிரிவதில் அதிர்ச்சி அளிக்கக் கூடியது எதுவம் இல்லையெனில் பாக்கிஸ்தான் பிரிவினைக் கோரிக்கையில் மட்டும் என்ன அதிர்ச்சி இருக்க முடியும்? பாக்கிஸ்தான் கோரிக்கை சீர்குலைவை உண்டுபண்ணும் என்று வாதிப்பதனால் இந்து முhகாணங்களான கர்னாடகம் மகாராஷ்டிரத்திலிருந்தும் ஆந்திரா சென்னையிலிருந்தும் பிரிந்து செல்வதைவிட இது அதிக சீர்குலைவை ஏற்படுத்தி விடாது. பாக்கஸ்தான் என்பது தனக்கே  உரிய தனது சொந்தக் கலாச்சாரத்தை வளர்;த்துக்கொள்வதற்குச் சுதந்திரம் வேண்டும் என்ற ஒரு கலாச்சார யூனிட் முன்வைக்கும் கோரிக்கையின் மறு வெளிப்பாடாகும்” என்று கூறுகிறார் (பக்கம் 41)அத்துடன் 1826 முதல் இந்தியாவுடன் இணைந்திருந்த பர்மா 1937ல் தனி நிர்வாகத்தின் கீழ் வந்தது. அவ்வாறு இந்தியாவிலிருந்து பர்மா பிரிக்கப்பட்டதை எதிர்க்காத இந்துக்கள் அரசியல் நோக்கில் பிரிக்கக் கூடியதும் சமுதாய நோக்கில் பகையுணர்வு மிக்கதும் சமய நோக்கில் அந்நியமானதுமான பாக்கிஸ்தான் போன்றதொரு பகுதியை மட்டும் பிரிக்கக் கூடாதெனக் கூறுதல் மிக விந்தையானது”  என்கிறார் அண்ணல் (பக்கம் 96)
அத்துடன் பாக்கிஸ்தான் பிரிவதால் இந்தியாவின் வலிமை குன்றும் என்ற கூற்றுக்கு இங்கு நிறைந்துள்ள வளங்களை நோக்கும்போது விலிமையான அரண்களை நம்மால் உருவாக்க இயலும் என்று இந்துக்கள் உறுதியாக நம்பலாம் என்று மேலும் கூறுகிறார் பக்கம் 99) வளங்களின் பற்றாக்குறை குறித்தும் அச்சம் எதுவும் தேவை இல்லை என்பதையும் குறிப்பிடுகிறார். 102
போர்ப்படைகள் குறித்த பிரச்சினைகளைப்பற்றி அலசி ஆராய்ந்த அண்ணல் அவர்கள் போர்ப்படைகளுக்காக குறிப்பாக முஸ்லிம் போர்ப்படைகளுக்காக செலவிடப்படும் தொகை இந்துக்களின் வரிப்பணத்திலிருந்து செலவிடப்படுகிறது என்றும் அதற்கு உறுதியான வழி பாக்கிஸ்தான் பிரிந்துபோக விட்டுவிடுவதே நல்லது என்றும் அவர் சொல்கிறார்.
ஆனால் இந்துமகாசபையும் காங்கிரசும் பாக்கிஸ்தான் பிரிவினையை எதிர்த்து வந்தார்கள். இந்துக்களிலுள்ள உயர்சாதி இந்துக்கள் இந்தப் பிரிவினைகளை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்துள்ளார்கள். அவர்களது இரட்டை வேடத்தை அண்ணல் அவர்கள் அம்பலப்படுத்துகிறார். 1915ல் பம்பாய் மாநிலத்திலிருந்து சிந்துவைத் தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்றவர்கள் 1929ல் சைமன் கமிஷன் முன்பு சிந்து மாகாணத்தைப் பிரிக்கக் கூடாது என்கிறார்கள் என்றும் அவர்களது முரண்பாட்டைச் சுட்டிக்காட்டும் அண்ணல் அவர்கள் 1915ல் சிந்து மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை என்றும் முஸ்லிம் அரசாகவும் இல்லாத நிலையில் அரசு உயர் பதவிகளில் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றிவிடலாம் என்ற நோக்கிலேயே 1015ல் சிந்து மாகாணத்தைப் பிரிக்க ஒத்துக் கொண்டார்கள். ஆனால் 1929ல் சிந்து மாநிலமாகப் பிரிக்கப்பட்டு அங்கு முஸ்லிம் அரசு பொறுப்பேற்றுள்ளதால் அரசு உயர் பதவிகளில் தங்களுடைய ஏகபோக நிலைமை பாதிக்கப்படும் என்பதால் இந்துக்கள் எதிர்த்தனர் என்கிறார்.
மேல்சாதி இந்துக்களின் கீழான பண்புக்கு வங்கப் பிரிவினைக்கு அவர்கள் காட்டிய எதிர்ப்பினைக்  கூறலாம். முழுமையான வங்காளம் மட்டுமின்றி பீகார் ஒரிசா அஸ்ஸாம் அய்க்கிய மாகாணங்கள் ஆகியவற்றில் அனைத்து உயர் அரசுப் பொறுப்புக்களையும் வங்காள இந்துக்களே பெற்று வந்தனர். வங்க மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டால் பசுமையான இந்த மேய்ச்சல் நிலத்தின் ஒரு பகுதி போய்விடுமே என்பதால்தான் இந்துக்கள் வங்கப் பிரிவினையை எதிர்த்தனர். வங்கம் பிரிந்தால் கிழக்கு வங்கத்தின் ஆட்சி அதிகாரப் பதவிகளை முஸ்லிம்களுக்கு பெரும்பாலும் விட்டுத்தர வேண்டியிருக்கும். இவ்வாறு வங்காள முஸ்லிம்களுக்கு தமது பதவிகளில் ஒரு பகுதியை விட்டுத் தரவேண்டிய நிலைமையை தவிர்த்து தங்கள் ஏகபோக நிலையை நீடித்து இருத்திக் கொள்வதே இந்துக்களின் வங்கப் பிரிவினை எதிர்ப்புக்கு தலையாய காரணம்” என்று அண்ணல் அவர்கள் மேல்சாதிப்பார்ப்பனர்களின் இரட்டை வேடத்தைத் தோலுறித்துக் காட்டுகிறார்.
மேல்சாதி இந்துக்களின் தாழ்பண்புகள் காரணமாகத் தங்களது பதவி வேட்டைக்காடுகளின் பரப்பு குறைந்து விடுமேயென்ற காரணம் ஒன்றுக்காகவே பாக்கிஸ்தான் பிரிவினையை எதிர்க்கிறார்களோ என்ற அச்சம் தோன்றுவதாக அண்ணல் கூறுகிறார். பாக்கிஸ்தான் பிரிவினையை எதிர்ப்பதற்கான பல்வேறு காரணங்களில் மேல்;சாதி இந்துக்களின் தன்னலமும் ஒன்றாக இருக்குமெனில் வியப்பதற்கில்லை என்கிறார் 176
“தங்களுடைய உயர் வேலைவாய்ப்புப் பகுதிகளில் சில குறைந்துவிடும் என்பதற்காக வங்க பஞ்சாபி மேல்சாதி இந்துக்கள் பாக்கிஸ்தான் பிரிவினையை எதிர்ப்பதன் மூலம் மாபெரும் தவறு செய்கிறார்கள் என்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அரசுப் பதவிகள் அனைத்தையும் தங்கள் ஏகபோக உரிமையாய் வைத்துக்கொள்ளும் காலம் மலையேறிவிட்டதென்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும். தேசியத்தின் பெயரால் அவர்கள் தாழ்ந்த சாதி இந்துக்களை வேண்டுமானால் இன்னும் ஏமாற்றிக் கொண்டிருக்கலாமேயன்றி முஸ்லிம் பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களை ஏமாற்றி அதிகாரப் பதவிகளைத் தங்கள் வசமே தக்க வைத்துக்கொள்வது என்பது இனியும் நடவாது. …. முஸ்லிம்களை முட்டாளாக்கி முழுமையான ஆட்சி அதிகாரத்தை என்றென்றும் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று அவர்கள் கருதுவது அறிவுடைமை ஆகாது” என்று பார்ப்பனர்களின் முகத்திரையைக் கிழித்துக்காட்டுகிறார் (பக்கம் 177)
மேலும் சவர்க்கர் இந்தியாவின் பாதுகாப்புக்கும் பந்தோபஸ்துக்கும் ஆபத்தான ஒரு நிலையை உருவாக்குகிறார் என்றும் இந்து இனத்தவர் தங்களுக்கென்று தனியாக ஒரு நாடு இருக்க வேண்டும் என்று கோருகின்ற அவர் முஸ்லிம் இனத்தவர் தங்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்று கோருவதை எப்படி மறுக்க முடியும்? என்கிறார் (பக்கம் 206)
“முஸ்லிம் இனத்தவர்கள் அதிகாரத்தில் இந்து இனத்தவர்களுடன் சரிசமமாக இருப்பதை திரு சவர்க்கர் அனுமதிக்க மாட்டார். இந்து இனம் ஆதிக்கம் செலுத்தும் இனமாகவும் முஸ்லிம் இனம் சேவகம் புரியும் இனமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இந்து இனத்தவருக்கும் முஸ்லிம் இனத்தவருக்கும் இடையில் பகைமை என்னும் விதையைத் தூவிய பின்னர் ஒரே அரசியல் சட்டத்தின் கீழ் ஒரே நாட்டில் வாழ வேண்டுமென்று திரு சவர்க்கர் விரும்புகிறார் என்பது விளக்குவதற்குக் கடினமானதாகும்” என்கிறார் அண்ணல் (பக்கம் 207)
திரு சவர்க்கர் உருவாக்கிய சுயராஜ்யத் திட்டம் முஸ்லிம்களை அடக்கி ஆளும் ஒரு சாம்ராஜ்யத்தை இந்துக்களுக்கு வழங்கி அதன் மூலம் தாங்கள் ஒரு ஏகாதிபத்திய இனம் என்ற திருப்தியையும் பெருமையையும் வழங்கும். ஆனால் அது இந்துக்களுக்கு ஒரு நிலையான அமைதியைத் தராது. ஏனெனில் முஸ்லிம்கள் இத்தகையை ஒரு பயங்கரமான மாற்றுத் திட்டத்திற்கு ஒருபோதும் ஒப்புக்கொண்டு அடிமைகளாக இருக்க மாட்டார்கள்” என்றும் அண்ணல் அவர்கள் சவர்க்கரை அம்பலப்படுத்துகின்றார்.
இந்துராஜ்யம் எந்த விலை கொடுத்தேனும் தடுக்கப்பட்டாக வேண்டும் என்று கூறும் அண்ணல் அவர்கள் எந்த இடத்திலும் அதேபோல பாக்கிஸ்தான் தடுக்கப்பட்டாக வேண்டும் என்று கூறவில்லை. மாறாக “பாக்கிஸ்தான் வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரும் பட்சத்தில் அவர்களது கோரிக்கைக்கு இணங்குவதே அறிவார்ந்த பாதையாக இருக்கும் என்பதில் அய்யம் ஏதும் இருக்க முடியாது” என்கிறார் (பக்கம் 550)
அப்படி பாக்கிஸ்தான் வேண்டும் என்பதை யார் முடிவு செய்ய வேண்டும் என்பதையும் அண்ணல் கூறுகிறார்.
பாக்கிஸ்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று சொல்லக் கூடிய வேலை பம்பாய் அல்லது சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு இல்லை. பல ஆண்டுகளாக தங்களது வாழ்வும் வருங்காலமும் எந்த அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ளதோ அதில் ஏற்பட்ட மிகவும் உக்கிரமான மிகவும் புரட்சிகரமான மிகவும் அடிப்படையான ஒரு மாற்றத்தின் விளைவுகளைத் தாங்கிக் கொள்ளக் கூடிய அப்பகுதிகளில் வாழும் மக்களே அதைத் தீர்மானிக்க விட்டு விட வேண்டும். பாக்கிஸ்தான் மகாணங்களில் வாழும் மக்களிடையே நடத்தப்படும் ஒரு கருத்துக் கணிப்புத்தான் பாக்கிஸ்தான் பிரச்சினையைத் தீர்க்கும் மிகவும் பாதுகாப்பான அரசியல் சட்டரீதியான வழிமுறையாக எனக்குத் தோன்றுகிறது என்று அண்ணல் கூறுகிறார். 593.
இந்தியாவைப் பிரிவினை செய்வதற்கு மாட்சிமை பொருந்திய மன்னரின் அரசாங்கத்தினுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தச் செய்வதன் மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள எண்ணுவது முஸ்லிம் லீக்கின் நலன்களுக்கு உகந்தது அல்ல என்ற இன்னொரு விசயத்தையும் நான் கூற விரும்புகிறேன். பாகிஸ்தானைப் பெறுவதைவிட மிக முக்கியமானதென்று நான் கருதுவது என்னவெனில் பாகிஸ்தானை ஏற்படுத்துவதில் பின்பற்றப்படும் நடைமுறைகளேயாகும். பிரிவினைக்குப் பின்னர் பாக்கிஸ்தானும் இந்தியாவும் இரு நேச நாடுகளாக ஒன்று மற்றதன்பால் நல்லெண்ணத்துடனும் பகைமையுணர்வு இன்றியும் தொடரவேண்டும் என்பதே குறிக்கோளாகும்.
மக்களின் வாக்கெடுப்பு மூலம் மேற்கொள்ளப்படும் முடிவைத் தவிர இந்த இலக்கை அடைவதற்கு வேறொரு சிறந்த தீர்வு இருக்க முடியுமா என்பதை நானறியேன். 600
இவ்வளவு தெளிவாக பாக்கிஸ்தான் பற்றிய தனது முடிவை அண்ணல் அவர்கள் தெரிவித்திருக்கும்போது முஸ்லிம் லீக்கின் பிரிவினை கோஷத்தை அவர் வன்மையாகக் கண்டித்தார் என்று எழுதுவது விசமத்தனமானது. அண்ணலை முஸ்லிம்களுக்கு எதிராகச் சித்தரிப்பதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு அவர்களை அடியாளாகப் பயன்படுத்துவதே அவர்களது நோக்கமாகும்.
அதே நூலில் அண்ணல் அவர்கள் இந்துராஜ்யம் அமைவதைத் தடுக்க முகமதலி ஜின்னாவுக்கு யோசனையும் தெரிவிக்கிறார். நாட்டைத் துண்டாடாமல் முஸ்லிம் லீக்கை மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்துக்களும் முஸ்லிம்களும் கலந்த ஒரு கட்சியை உருவாக்குவதுதான் இந்துராஜ்யம் என்ற பூதத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒரே பயனுறு வழியாகும். அரசியல் சட்டரிதியான பாதுகாப்பு நடவடிக்கைளின் பிரச்சினை மீதான கருத்து வேறுபாடுகள் தொடரும்வரை காங்கிரசிலும் இந்துமகாசபையிலும் சேருவது முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மையினருக்கும் சாத்தியமில்லை என்பது உண்iதான். ஆனால் இப்பிரச்சினை நிச்சயம் தீர்க்கப்படும். தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை இது. இத்தீர்வு முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மையினருக்கும் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பைப் பெற்றுத்தரும் என்பதை நம்பிக்கையுடன் கூற முடியும். இது நிறைவேற வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகின்றோம். அவ்வாறு நிகழும்போது கட்சிகள் மறு ஒருங்கிணைக்கப்படும் வழியில் எதுவும் குறுக்கிட முடியாது.
காங்கிரசும் இந்து மகாசபையும் தகர்ந்துபடும்.
இந்து சமுதாயத்தில் பல கீழ்மட்டப் பிரிவுகள் உள்ளன. அவர்களுடைய பொருளாதார அரசியல் சமூகத் தேவைகள் பெரும்பாலான முஸ்லிம்களின் தேவைகளைப் போன்றதேயாகும். பல நூற்றாண்டுகளாகத் தங்களுக்கு சாதாரண மனித உரிமைகளை மறுத்தும் பறித்தும் வந்த உயi;ஜாதி இந்துக்களுடன் இணங்கிப் போவதைவிட பொதுவான இலக்குகளை எய்துவதற்கு முஸ்லிம்களுடன் ஒரு பொதுவான இலட்சியத்தில் இணைவதற்கு அவர்கள் தயாராக இருப்பார்கள். இத்தகைய ஒரு போக்கை பின்பற்றுவதை அபாயகரமான செயல் என்று கருத முடியாது. இப்பாதை நன்கு பழகிய பாதைதான். பெரும்பாலான மாநிலங்களில் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் கீழ் முஸ்லிம்களும் பிராமணர் அல்லாதார்களும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் ஒன்று சேர்ந்து 1920 முதல் 1937 வரை ஒரே குழு உறுப்பினர்களைப் போன்று சீர்திருத்தங்களைச் செயல்படுத்தப் பாடுபட்டது உண்மையல்லவா?
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு வகுப்புவாத நல்லிணக்கத்தை எய்தவும் இந்துராஜ்யம் உருவாகும் அச்சுறுத்தலை ஒழிக்கவுமான மிகவும் பயனுள்ள வழிமுறை இதில்தான் உள்ளது.
திரு.ஜின்னா இந்த வழியை எளிதில் பின்பற்றியிருக்கலாம். அதில் வெற்றிபெறுவது திரு ஜின்னாவுக்கு கடினமானது அல்ல. இத்தகைய ஒரு வகுப்புசாராத கட்சியை உருவாக்க திரு ஜின்னா முயன்றிருந்தாரேயானால் அவரது தரப்பில் வெற்றிக்கு எல்லா வாய்ப்புக்களும் இருந்திருக்கும் என்று திரு ஜின்னாவுக்கே ஆலோசனை வழங்கியவர் அண்ணல் அவர்கள்.
அவரது ஆலோசனையை ஏற்காமல் பிரிட்டிஷ் அரசு பாக்கிஸ்தானைப் பிரித்ததால்தான் தேவையற்ற மதக்கலவரங்களும் கொலைகளும் வெட்டுக்குத்துகளும் ஏற்பட்டன.
இந்தியாவிலுள்ள மற்ற சிறுபான்மையினரும் பார்ப்பனரல்லாதாரும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரும் ஒருங்கிணைந்தால் இந்துராஜ்யம் அமையும் அபாயத்தைத் தகர்க்க முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாக அண்ணல் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அவரது ஆலோசனையின்படி இன்றுள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் பார்ப்பனரல்லாதாரும் முஸ்லிம்களும் மற்ற சிறுபான்மையினரும் ஒன்று சேர்ந்து இந்துராஜ்யம் உருவாவதைத் தடு;த்து விடுவார்கள் என்ற அச்சத்தினால்தான் சங் பரிவார் கும்பல் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிடப் பார்க்கிறது. அதனை அண்ணலின் அறிவுhயுதத்தைக்கொண்டு முறியடிப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வியாழன், 12 அக்டோபர், 2017

பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான மோடி அரசின் சட்ட விரோத ஆணை; கிரிமிலேயர் முறை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்



- குடந்தை கருணா -



கிரிமிலேயர் எனும் அரசியல் சட்ட விரோத விதியைப் பயன்படுத்தி வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை ஒழித்திடும் கிரிமிலேயர் சட்டத்தை மோடி அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிடும் ஆணையை மத்திய அரசு 8.9.1993 முதல் நடைமுறைப்படுத்தியது. இதில் பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினரை நீக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்ற ஆணையின்படி ஒரு குழு நியமிக்கப்பட்டு அதன் பரிந்துரைப்படி மத்திய அரசில் குரூப் ஏ குரூப் பி பதவிகளில் பணியாற்றுவோரை கிரிமிலேயர் என அறிவித்தது மத்திய அரசு. குரூப் சி மற்றும் குரூப் டி பிரிவு பணியாளர்களைப் பொறுத்தவரை ஆண்டு வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அத்தகைய ஆண்டு வருமானத்தில்இ மாதச் சம்ப

ளத்தையும் விவசாய வருமானத்தையும் கணக்கில் எடுத்திட தேவையில்லை என்றும் அரசு அறிவித்தது.

பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தவரை மத்திய அரசுக்கு இணையான குரூப் ஏ, பி பதவிகள் எவை என நிர்ணயிக்கும்வரை அதில் பணியாற்றும் பிற்படுத் தப்பட்டோரின் ஆண்டு வருமானத்தை அதில் மாதச் சம்பளம் தவிர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசாணை தெரிவித்தது.

இதன்படிஇ மத்திய அரசில் குரூப் சி, டிஇ பதவிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினர் என்பதைக் கண்டறிய ஆண்டு வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அது ரூ.ஆறு லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இந்த வருமானத்தில் மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு குறித்த எந்தப் பிரிவிலும் கிரிமிலேயர் எனும் பொருளாதார அளவு கோல் இல்லை என்ற நிலையில் இது நீக்கப்பட வேண்டும் என திராவிடர் கழகம் உள்ளிட்ட சமூக அமைப்புகளும் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு உள்ளிட்ட நலச் சங்கங்களும் திமுக,  வலது கம்யூனிஸ்ட்,  ஜனதா தளம், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்திய நிலையிலும்இ மாதச் சம்பளம் ஆண்டு வருமானத்தில் எடுத்துக் கொள்ளாததால்இ பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோரின் பிள்ளைகளுக்கு சான்றிதழ் பெறவும், கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறவும் ஒரு வாய்ப்பு கிட்டியது. இத்தகைய சூழ்நிலையிலும்இ தற்போது மத்திய அரசின் குரூப் ஏ பதவிகளில்இ பிற்படுத்தப்பட்டோர் வெறும் பத்து விழுக்காடுதான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த இரு ஆண்டுகளாக மத்திய அரசின் பணி யாளர் ஆணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற பிற்படுத்தப்பட்டோருக்கு பிரதமரின் கட்டுப்பாட்டில் இயங்கும் பணியாளர் நலத்துறை பணி ஒதுக்கீடு அளிக்கவில்லை. இதற்கான காரணம், தேர்வு பெற்ற பிற்படுத்தப்பட்டோரின் பெற்றோர் பொதுத்துறை நிறுவனங்களில்பணியாற்றுகிறார்கள்;அவர்களது ஆண்டு வருமானம் ரூ.ஆறு லட்சத்திற்கு மேல் உள்ளது என்று அவர்களது மாதச் சம்பளத்தை வருமானமாக கணக்கிட்டு, அவர்கள் முன்னேறிய வகுப்பினர்; ஆகவே பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அவர்களுக்கு பணி வழங்க முடியாது என பணியாளர் நலத்துறையின் அதிகாரிகள் தன்னிச்சையாக கருத்து தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை நிர்வாக தீர்ப்பாயத்திலும் சிலர் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை நிர்வாக தீர்ப்பாயம் மத்திய பணியாளர் நலத்துறையின் செயல்பாடு சட்டவிரோதமானது என 12.1.2017 அன்று தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பணியாளர் நலத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னை நிர்வாக தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்து 31.8.2017 அன்று தீர்ப்பளித்தது. பணியாளர் நலத்துறையின் சட்ட விரோத முடிவைக் கண்டித்தும் பாதிக்கப்பட்டோருக்கு உடன் பதவி வழங்கிடவும் தீர்ப்பில் கூறப்பட்டது.

தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய மத்திய அரசின் பணியாளர் நலத்துறை தங்களது 8.9.1993 ஆணையில் திருத்தம் செய்து புதிய ஆணையை தற்போது 6.10.2017 அன்று வெளியிட்டுள்ளது. இந்த திருத்தத்தின்படி பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர் அவர் கள் நிர்வாகிகளாக பணியாற்றினாலும் அதற்குக் கீழ் உள்ள பணிகளில் இருந்தாலும் ஆண்டு வருமானம் ரூ. ஆறு லட்சம் (தற்போது ரூ.எட்டு லட்சம்) மேல் இருப்பின் அவர்கள் முன்னேறிய பிரிவினர் (கிரிமிலேயர்) எனக் கருதப்படுவார்கள்; அதேபோன்று அரசு வங்கிகள் மற்றும் காப்பீட்டுக்கழகத்தில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர் அதிகாரிகளாக பணியில் தேர்வானாலே அவர்கள் கிரிமிலே யராகக் கருதப்படுவார்கள்; அதிகாரிகள் பதவிக்குக் கீழ் உள்ள எழுத்தர் பியூன் பதவிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆண்டு வருமானம் ரூ.ஆறு லட்சம் (தற்போது எட்டு லட்சம்) மேல் இருந்தால் அவர்கள் கிரிமிலேயராகக் கருதப் படுவார்கள்.

இந்த ஆணையை சம்மந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் 31.3.2018-க்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்போது மத்திய அரசின் கல்வித்துறையிலும் பணிகளிலும் சேரும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறை யும். அந்த இடங்கள் பொதுப் பிரிவினர் என்ற போர்வையில் பார்ப்பனர்களுக்கு செல்லும் நிலை ஏற்படும்.

மத்திய அரசின் பதவிகளுக்கு இணையாக பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பதவிகள் குறித்து தேசிய பிற்படுத் தப்பட்டோர் ஆணையம் 26.10.2015 அன்று மத்திய அரசுக்கு அறிக்கைஅளித்துள்ளது.இந்தபரிந்துரையையும்இமத்திய அரசின் பணியாளர் நலத்துறை ஏற்கவில்லை. பிற்படுத்தப் பட்டோருக்கான நாடாளுமன்றக் குழுவின் கருத்தையும் ஏற்கவில்லை. மாறாக பணியாளர் துறையில் உள்ள இட ஒதுக்கீட்டிற்கு எதிரான அதிகாரிகள் முடிவு செய்து ஆணையை வெளியிட்டுள்ளனர்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரச மைப்புச் சட்ட அதிகாரம் அளிப்போம் என்று கூறி மாநில அரசின் உரிமைகளைப் பறித்திட ஒரு சட்டத்தைக் கொண்டு வந்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எந்தெந்த பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மத்திய அரசின் பணிகளில் கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளார்கள் என்று எந்த புள்ளி விவரத்தையும்இகணக்கெடுப்பையும்வெளியிடாமல்பிற் படுத்தப்பட்டோரில் மிகப் பிற்படுத்தப்பட்டோரைக் கண் டறிய நீதிபதி ரோகிணி தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்துள்ள மோடி அரசு தற்போது உச்சக்கட்டமாக பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத் தப்பட்டோரை முன்னேறியப் பிரிவினர் பட்டியலில் சேர்த்து உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோரைக் கண்டறிய வேண்டும் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.

பொருளாதரப்பிரிவு சொல்லப்படவில்லை.

அரசமைப்புச் சட்டவிரோத கிரிமிலேயர் பிரிவை முற்றிலுமாக நீக்கினால்தான் பிற்படுத்தப்பட்டோர் மத்திய அரசின் உயர் பதவிகளில் வாய்ப்பு பெற முடியும் என்பதை உணர்ந்து மத்திய அரசின் இந்த சமூக விரோத ஆணையை எதிர்த்து போராட பிற்படுத்தப்பட்டோர் முன்வர வேண்டும்.

திங்கள், 9 அக்டோபர், 2017

வர்ணாஸ்ரமதர்மம்

BJPயும் RSS ம் BMS எங்கேயும் மனுதர்மத்தை சட்டமாக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்பார்கள். அது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் தெரியுமா? தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் மனுதர்மத்தை அடித்துத் துவைத்துக் காயப் போட்டு விட்டதால் வெளிப்படையாக மனுதர்மத்தை ஆதரித்துப் பேச மாட்டார்களே தவிர அவர்களுடைய வார்த்தைகளில் மறைமுகமாக மனுதர்மத்தை ஆதரித்துப் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்.

உதாரணத்திற்கு
“நமது சமுதாயத்தில் அர்ச்சகர்கள், ஆசிரியர்கள், மற்றும் வைத்தியர்கள் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் சமுதாயத்திற்காக தொண்டாற்றினார்கள். சமுதாயம் அவர்களைக் காப்பாற்றியது. அரசர் சட்டத்தை இயற்ற முடியாது. அது ரிஷி, முனிவர்கள் போன்றவர்களிடம் விடப்பட்டது. ராஜா கூட அந்த சட்டங்களுக்குப் பணிந்து செயல்புரிந்தனர். இதுபோன்ற உயர்ந்த மரபுகள் நமது சமுதாயத்தினை உயிரூட்டமுள்ளதாகக் காத்து வருகிறது. நமது நாட்டை நாம் அதே அடிப்படையில் அமைக்க வேண்டும்” (BMS சங்க மடல் 1998 ஜன. பிப்)

இப்படிச் சொல்கிறது பிஎம்எஸ்ஸின் சங்க மடல். இதில் உள்ள வார்த்தை ஜாலத்தைக் கவனித்தால் இதில் உள்ள விசமத்தனமும் ஆபத்தும் நன்றாகப் புரியும். இதுதான் மனுதர்மம். அர்ச்சகர்கள் ஆசிரியர்கள், வைத்தியர்கள் சமுதாயத்திற்காகத் தொண்டாற்றினார்களாம். என்ன தொண்டு? அவர்களால் யாருக்கு என்ன நன்மை? அர்ச்சகர்கள் யார்? ஆசிரியர்கள் யார்? வைத்தியர்கள் யார்? இவர்கள் அனைவரும் பிராமணர்கள்தானே?


அர்ச்சகர்களால் சமுதாயத்திற்கு என்ன நன்மை? ஆசிரியர்கள் யாருக்குக் கல்வி புகட்டினார்கள்? பிராமணர்கள் வைத்தியத்தொழில் செய்தார்களா? அவர்கள் எல்லா சாதிக்காரர்களையும் தொட்டு வைத்தியம் செய்தார்களா?
கல்வி சூத்திரர்களுக்குக் கிடைத்ததா? சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்றுதானே இவர்கள் சொல்லும் ரிஷிகளும் முனிவர்களும் இயற்றிய சட்டங்கள் சொன்னது? இவர்கள் சொல்லும் ஆசிரியர்கள் சூத்திரர்களுக்குக் கல்வி கற்பிக்க மறுத்தார்கள் என்பதுதானே கடந்த கால வரலாறு? அர்ச்சகர்கள் ஒரு ஆறு மாதத்திற்கு ப10ஜை புனஸ்காரங்கள்ää சடங்குகள் செய்யாமல் இருந்தால் யாருக்காவது ஏதாவது நட்டம் ஏற்பட்டிருக்குமா? எந்த நட்டமும் ஏற்பட்டிருக்காது. மாறாக நன்மைகள்தான் ஏற்பட்டிருக்கும். அப்படியிருக்க அவர்கள் ஏதோ சமுதாயத்திற்குத் தொண்டாற்றினார்கள் என்று சவடால் அடிக்கிறது பிஎம்எஸ்.

அடுத்து அரசர்கூட சட்டத்தை இயற்ற முடியாதாம். அது ரிஷிகள் முனிவர்கள் போன்றவர்களிடம் விடப்பட்டதாம். சுவாமி சிவானந்தா என்பவர் இவ்வாறு எழுதுகிறார்:

“இந்து ரிஷிகளும் முனிவர்களும் சமூகத்திற்குரிய லட்சியம் நிறைந்த திட்டத்தைத் தீட்டினர். தனியாரின் வாழ்வுக்கான லட்சியம் வாய்ந்த வழியையும் வகுத்துத் தந்தனர். அம்முறைதான் வர்ணாஸ்ரமதர்மம் என்ற பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. வர்ணாஸ்ரமதர்மம் என்னும் அடிமனையால் இந்துமதம் என்னும் சொர்ண மாளிகை கட்டப்பட்டுள்ளது. வர்ணாஸ்ரம தர்மங்களைக் கடைப்பிடித்தலானது தன் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் உதவி புரிகிறது. இது மிகமிக அவசியமானது. அதன் விதிகள் மீறப்படுமானால் நாடு இருந்த இடம் காடாக மாறிவிடும். பொதுவான நிலையான தர்மத்தின் வளர்ச்சியை அல்லது மேம்பாட்டை மேன்மேலும் உயர்த்துதலே வர்ணாஸ்ரம தர்மத்தின் முக்கிய நோக்கமாகும்.

(இந்து தர்மம் என்ற நூலில் பக்கம் 89ää சிவானந்தா ஆஸ்ரமம் வெளியீடுää நாமக்கல்)

~உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் பார்ப்பனருக்கே சொந்தம்; மற்றவர்கள் பார்ப்பனர் தயவிலேயே வாழ்கிறார்கள்| (மனு - அத்தியாயம் 1 சுலோகம் 100)

என்ற சாஸ்திர விதிகள் எல்லாம் இவர்கள் சொல்லும் ரிஷிகளும் முனிவர்களும் உண்டாக்கியதுதானே! இதனால் முழுப் பலனையும் அடைந்தவர்கள் பார்ப்பனர்கள்தானே?

அதே அடிப்படையில் நமது சமுதாயத்தை அமைப்பதுதான் நமது இலட்சியம் என்று பிஎம்எஸ் சொல்கிறது என்றால் அவர்கள் யாருக்காக சங்கம் வைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் சொல்லுகின்ற அந்த சமுதாய அமைப்பு இன்று மாறிப்போய் அனைவருக்கும் பொருந்தக் கூடிய பொதுவான சட்டத்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இயற்றியுள்ளார்கள். பிஎம்எஸ்ஸின் இந்தக் கூற்றுப்படி அம்பேத்கர் எழுதிய சட்டங்கள் மாற்றப்பட்டு மீண்டும் பழைய மனுதர்ம சாஸ்திர சம்பிரதாயங்களைக் கொண்டு வந்து பார்ப்பனர் கையில் ஆட்சியை ஒப்படைக்கத்தான் அவர்கள் பாடுபடுகிறார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

அத்தகைய சமுதாயம் அமைந்தால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களே! உங்கள் நிலை என்ன? சிந்திப்பீர்! பிஎம்எஸ் ஐ நம்பி கிடைத்த வாழ்வையும் இழக்காதீர்!

வியாழன், 5 அக்டோபர், 2017

கடவுள் இல்லை


பகுத்தறிவு வினாக்கள்
#உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?
#நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?
#குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?
#எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?
#எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?
#ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?
#அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?
#அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?
#முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?
#ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?
#மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?
#நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?
#எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?
#அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?
#அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?
#பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?
#சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?
# தட்டுங்கள்! திறக்கப்படும்!!! என்றால் எதற்காக சாத்தி வைத்தீர்கள்..??? தட்டினால் தான் திறக்கும் என்று சொல்லும் கடவுள் நல்லவனா, கெட்டவனா...???
#தேடுங்கள்! தரப்படும்!!! என்றால் கண் இல்லாதவன் எப்படி தேடுவான்...??? முதலில் யார் அதை ஒளித்து வைத்தது...??? ஒளித்துவைத்தவன் பதுக்கல்காரன் தானே...???
#கேளுங்கள்! கிடைக்கும்!!! என்றால் ஊமை எப்படி கேட்பான்...??? கேட்டால் தான் கிடைக்கும் என்று சொல்லும் கடவுளை நான் ஏன் வணங்கவேண்டும்...???
#வாதை உன் கூடாரத்தை அணுகாது!!! என்றால் நான் என் வீட்டை விட்டு வெளியில் வந்தால் அணுகிவிடுமா...??? என் கூடாரத்தை மட்டும் அணுகாமல் இருப்பதற்கு பதிலாக மொத்த உலகத்தையும் அணுகாமல் இருந்தால் நல்லது தானே...??? அப்படி என்றால் இதை சொல்லும் கடவுளுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லையோ...???
#ஆண்டவர் உன்னைப் பிடித்துள்ள பிசாசுகளை விரட்டுவார்!!! என்றால் பிசாசு என்னைப் பிடிக்கின்ற போது ஏன் தடுக்கவில்லை...??? பிசாசுகளை உருவாக்கிவிட்டு அதை என்னை போன்றவர்களைப் பிடிக்கவும் செய்துவிட்டு ஏன் விரட்டவேண்டும்...??? அதற்குப் பதிலாக பிசாசுகளைப் படைக்காமலேயே இருந்திருக்கலாமே...???
#நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். (யோவான் 12:49). இது இயேசு அவர்கள் சொன்னதாக விவிலிய நூல் குறிக்கிறது. தன்னால் சுயமாய்ப் பேசத் தெரியாதவனை ஏன் நான் பின்பற்றவேண்டும்...??? தன்னால் சுயமாகச் சிந்திக்கத் தெரியாத ஒருவனை இறைத்தூதனாக அவனது பிதா அனுப்பினார் என்றால் அந்த பிதா எவ்வளவு பெரிய முட்டாளாக இருப்பான்...???
# சாமிக்கு அலகு குத்தி நிவர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஏன் எந்த எலும்பும் இல்லாத கன்னத்தின் பகுதியில் குத்துகின்றனர்...??? கொஞ்சம் பின்னே தள்ளி காதுக்கு கீழே குத்திக்கொள்ளலாமே...??? அப்படி குத்தினால் உயிர் போய்விடும் என்று தெரிந்துதானே செய்வதில்லை...??? கன்னத்தில் அலகு குத்துவதுபோல் கழுத்திலும் குத்திக்கொள்ள துணிச்சலுண்டா...???
# இந்த அலகு குத்திக்கொள்வதைப் பரப்பியதே ஆரியப் பார்ப்பன நாய்கள் தான்... இதுவரை கடவுளை வைத்து பிழைப்பு நடத்தும் எந்த பார்ப்பனாவது அலகு குத்திக்கொண்டு ஆடியதுண்டா...???
# தீ மிதிக்கும் திருவிழாவில் எரிந்த நெருப்புத்துண்டுகளில் நடந்து போகும் பக்தர்கள் நெருப்பில் காய்ச்சிய கம்பிகளை வைத்தால் மிதித்து நடப்பார்களா...??? நெருப்பை மூட்டியதும் எரிகின்ற நெருப்பில் நடந்து செல்வார்களா...??? முடியாது! ஏன்..? இதை அறிவியல் தெளிவாக விளக்குகின்றது. விறகடுப்பில் இருந்து விழும் நெருப்புத்துண்டுகளை கையாலேயே எடுத்து உள்ளே போட முடியும். ஆனால், அடுப்பில் கொதிக்கும் பாத்திரத்தின் மூடியைத் தொடக்கூட முடியாது. துணியை வைத்து தான் எடுக்க முடியும். நெருப்புத்துண்டை சுற்றி உருவாகிக்கொண்டிருக்கும் நீறு வெப்பத்தைக் கடத்தாது. அதனால் அதை துரிதமாக எடுத்து உள்ளே போட்டுவிட முடிகிறது. நெருப்பால் உருவாகும் வெப்பத்தை பாத்திரம் எளிதாக கடத்துகிறது. அதனால் அதை தொட்டால் சுட்டுவிடுகிறது.
# தீயில் தன் உடலை வருத்துவதுதான் நிவர்த்திக்கடன் என்றால் மிகச்சிறப்பாக தீக்குளிக்கலாமே...??? இல்லையென்றால், குறைந்தபட்சம் நெருப்பில் சுட்ட கம்பிகளை தரையில் கிடத்தி அவைகளின்மீது நடந்து நிவர்த்திக்கடனைச் செலுத்தலாமே...??? இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம் இல்லையா...??? காட்டுமிராண்டித்தனம் இல்லையா...??? எந்த பார்ப்பனனாவது தீ மிதித்து நிவர்த்திக்கடன் செலுத்திக் கண்டதுண்டா...??? குறைந்தபட்சம் மொட்டையாவது அடித்ததுண்டா...???
# உலகத்தைக் கடவுள் தான் படைச்சார் என்று சொல்லுவார்கள்! அப்படியென்றால் அந்த கடவுளை யார் படைத்தார் என்று கேட்டால் கடவுளை யாரும் படைக்க முடியாது. கடவுள் தானக தோன்றியவர் என்று சொல்வார்கள். கடவுள் தானக தோன்றுவார் என்றால் உலகமும் தானாக தோன்றாதா...???
# பிள்ளையாருக்கு இந்த நாடு முழுதும் பால் ஊற்றி வழிபடுகிறீர்களே! எந்த ஒரு இடத்திலயாவது ஒரு பசித்த பச்சிளங்குழந்தைக்கு ஒரு பிள்ளையாராவது((அது தான் நிறைய பிள்ளையார்கள் உண்டே! அந்த பிள்ளையார் இந்த பிள்ளையார் என்று))பால் கொடுத்ததுண்டா...???
# ஒரு இந்து, இயேசு கிறித்துவையும் அல்லாவையும் நம்புவதில்லை! ஒரு கிறித்தவர், இந்துக்கடவுள்களையும் அல்லாவையும் நம்புவதில்லை! ஒரு முகமதியர், இந்துக்கடவுள்களையும் இயேசு கிறித்துவையும் நம்புவதில்லை! ஒரு நாத்திகர் இவற்றில் எவற்றையும் நம்புவதில்லை!!!
# கடவுள் தான் இந்த உலகத்தைப் படைத்தார் என்றால் உலகின் ஒருபகுதி நல்ல வளமாகவும் மறு ஒருபகுதி பாலைவனமாகவும் இருப்பது ஏன்...??? எல்லாம் சேர்ந்ததுதான் உலகம் என்று சொல்வார்களானால், பாலைவனத்தில் ஏன் உயிர்களைப் படைத்து வாட்டியெடுக்க வேண்டும்...???
# உலகில் உள்ள எல்லா உயிர்களையும் கடவுள்தான் படைத்தார், படைக்கின்றார், படைப்பார் என்றால் குருடன், செவிடன், முடவன், அரவாணி, பிச்சைக்காரன், விலைமாதுக்கள் என்று ஏன் படைக்கவேண்டும்...???
# கடவுளை வணங்கினால் பாவங்களை மன்னிப்பார் என்றால் நான் பாவம் செய்யும்போது தடுக்காமல் செய்யவிட்டுவிட்டு ஏன் மன்னிப்பு கேட்க வைத்து மன்னிக்க வேண்டும்...???
# மதுக்கடைக்கு உந்துருளியில் செல்பவர்களை வேடிக்கை பார்த்துவிட்டு தடுக்காமல் அவர்கள் மது அருந்திவிட்டு வரும்போது அவர்களிடம் தண்டம் கேட்கும் காவல்துறையைவிடவும் கேடுகெட்டவரா கடவுள்...???
# மனிதனைப் படைத்த கடவுள் பாவம் செய்யும் மனநிலையை அவன் சிந்தனையில் ஏன் செலுத்தவேண்டும்...???
# செய்த பாவத்திற்கு உண்டான தண்டனை என்றால் பிறக்கும்போதே ஒரு குழந்தை என்ன பாவம் செய்தது...??? அதை ஏன் கண்பார்வை இல்லாமலோ, கேட்கும் திறம் இல்லாமலோ, கை கால்கள் இல்லாமலோ படைக்க வேண்டும்...???
# கடவுளின்றி இந்த உலகில் அணுவளவும் அசையாது என்றால் செய்த பாவத்திற்கு முதல் கரணியம் கடவுள் தானே...???
# முதல் குற்றவாளிக்கு என்ன தண்டனை...??? யார் கொடுப்பது...???
# உலகில் உள்ள எல்லா உயிர்களையும் கடவுள் தான் படைத்தார் என்றால் எந்த ஆடும் மாடும் புலியும் சிங்கமும் கரடியும் தக்காளியும் மிளகாயும் ஏன் கடவுளை வணங்குவதேயில்லை...??? மனிதன் மட்டும் ஏன் விழுந்து விழுந்து வணங்குகிறான்...??? ஏன் என்றால் ஒரு சாரார் எந்த வேலையும் செய்யாமல் கடவுள் பெயரால் ஏமாற்றி வாழவே இந்த புளுகு மூட்டைகளை எல்லாம் உங்கள் சிந்தையில் செலுத்திவிட்டனர்...!!!
# கடவுள் இல்லை

செவ்வாய், 3 அக்டோபர், 2017

பிச்சைக்காரர்களும் இல்லை. திருடர்களும் இல்லை





பொய். பொய்யைத்தவிர வேறு எதையுமே பேசப்போவதில்லை என்று முடிவோடு இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் காலத்துக் கல்விமுறைபற்றி பிஜேபி அம்பி சொன்ன வாதங்களை ஆதாரத்துடன் தவிடுபொடி ஆக்கிய பிறகு அதனை அறிவுப் பூர்வமாக மறுக்க முடியாத அம்பி மேலும் பிதற்றுகிறார். அம்பேத்கர் வரலாற்றை எழுதிய தனஞ்செய்கீர் ஆங்கிலேயர் அல்லர். அவரும் ஒரு பார்ப்பனரே. பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆர்எஸ்எஸ் காரர்களின் முன்னோடி. தினமணியோ பார்ப்பனப்பத்திரிகை. இதிலிருந்துதான் ஆதாரங்களை காட்டியுள்ளோம்.
உண்மையை யார் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. பொய்யை யார் சொன்னாலும் அதைக் கண்டிப்பாக எதிர்த்தே தீருவோம். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இணையதளம் என்று எதையாவது புருடா விடுவார்களாம். மெக்காலே சொன்னான் என்று எக்காளமிடுவார்களாம். உண்மையைச் சொன்னால்மட்டும் உடம்பெல்லாம் எரியுமாம்.
நமது நாட்டில் பார்ப்பனரல்லாத பெரும்பான்மையினரைக் கல்வி அறிவில்லாதவர்களாக ஆக்கியவர்கள் பார்ப்பனர்கள்தான் என்ற உண்மையை மூடி மறைக்க அம்பி படாதபாடுபடுகிறார்.
எப்படிப்பட்ட கதையை அவிழ்த்துவிடுகிறார் அம்பி? பசியும்; திருட்டும் இல்லாமல் எல்லோரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்களாம்! 21ம் நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை என்று இதற்குப் பரிசு தரலாம்.
இவர் சொல்லக் கூடிய காலத்தில் பார்ப்பானே இல்லையா? பார்ப்பனருடைய குலத்தொழில் என்ன? பிச்சை எடுத்தல்தானே! வேதங்களும்ää ஸ்ருதிகளும்ää ஸ்மிருதிகளும் பார்ப்பனர்களுக்கும் மற்றவர்களுக்கும் விதிக்கப்பட்ட தருமங்களை ஆணியடித்துக் கூறியிருக்கின்றனவே! விஷ்ணுபுராணம் என்ன சொல்கிறது?
அந்தணர்கள் வேதாத்யனம் செய்து யாகங்கள் புரிந்து வேதம் ஓதிää நீதிதவறாத நல்வழியில் ஈட்டிய பொருளை உடையவர்களிடமிருந்து தானமாகப் பெறவேண்டும்.
சத்திரியனும் வைசியனும் பார்ப்பனருக்கு தானம் வழங்கவேண்டும்  என்பதுதானே?
தானம் பெறுவது என்றால் பிச்சை எடுத்தல்தானே! பிச்சைக்காரர்களே இல்லை என்றால் மன்னர்களால் சத்திரங்களும் சாவடிகளும் எதற்காகக் கட்டப்பட்டன? உங்கள் புராண இதிகாசத்திலேயே குசேலன் 27 பிள்ளைபெற்று பிச்சைக்காரனாய் இருந்தான் என்றுதானே கூறப்பட்டுள்ளது?
நீங்கள் பெரிதும் போற்றிப்பாராட்டும் இந்துராஜ்யம் கண்ட மராத்தியமாவீரன் சிவாஜியின் வரலாறு என்ன சொல்கிறது தெரியுமா? இந்தியரான வரலாற்று அறிஞர் சாதுநாத் சர்க்கார் என்பவர் இந்துசுயராஜ்யம் என்ற பெயரால் நடந்த அட்டூழியங்கள் குறித்துக் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.ää
~மராட்டிய மாவீரன் சிவாஜி இந்துராஜ்யத்தை அமைத்தவுடன்  சூத்திரன் பட்டம் கட்டிக்கொள்ள இயலாது என்று பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்தனர். அவனைச் சத்திரியன் ஆக்குகிறேன் என்று யாகங்கள் நடத்தினார்கள். அந்தக்காலத்திலேயே அய்ந்துகோடி பொன் செலவானது. அந்த யாகம் சரியில்லை என்றுகூறி மீண்டும் ஒரு யாகம் நடத்தப்பட்டது. இதனால் கஜானா காலியானது. கஜானாவை நிரப்ப தென்னகத்தின்மீது சிவாஜி படையெடுத்து வந்தான்.
சென்னைக்குத் தெற்கே உள்ள பணக்காரர்களிடம் தண்டப்பணம் வசூலித்தான். பணம் கொடுத்ததோடு அவர்களின் துயரம் நிற்கவில்லை. சிவாஜியின் படைவீரர்களோடு 2000 பார்ப்பனர்களும் வந்தார்கள். அவர்களிடம் காணப்பட்ட பேராசை சொல்லில் அடங்கா. சிவாஜியினுடைய படைவீரர்களும் அதிகாரிகளும் இரக்கம் சிறிதுமின்றி பயணிகளையம் நகரவாசிகளையம் கொள்ளை அடித்தார்கள். அவர்களிடம் அச்சமும் இல்லை. இரக்க உணர்வும் இல்லை.
இந்த அலங்கோலத்தைப் பயன்படுத்திக்கொண்டு உள்ளுர்க்காரர்களும் கொள்ளையடிக்கத் தொடங்கினார்கள். சிவாஜி எடுத்துச்செல்லாமல் விட்டுச்சென்ற மிச்சசொச்சத்தில் மக்களுக்குக் கிடைப்பதை அவர்கள் அபகரித்துக்கொண்டார்கள்.|  இவ்வாறு அறிஞர் சாதுநாத் சர்க்கார் எழுதுகிறார்.
திருமலைநாயக்கன் காலத்தில் மதுரையில் அட்டூழியம் செய்த கள்ளர்களை மதுரைவீரன் அடக்கினான் என்பதையும் நாம் படித்திருக்கின்றோம். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில்
மாட்டுவண்டிபூட்டிக்கிட்டு மாப்பிள்ளயக்கூட்டிக்கிட்டு காட்டுவழிபோற பொண்ணே கன்னியம்மா
உன் காசுமால பத்திரமா பாத்துக்கம்மா      என்று கட்டப்பொம்மன் பாடுவதாகக் காட்சி வரும். இது திரைப்படம் என்று ஒதுக்கி விட முடியாது. அந்தக் காலச் சூழ்நிலையை அது எடுத்துக்காட்டுகிறது என்பதுதான் உண்மை.
உண்மை இப்படியிருக்க பிச்சைக்காரர்களும் இல்லை. திருடர்களும் இல்லை என்று கூசாமல் பொய் சொல்கிறார் அம்பி.  இதற்கு மெக்காலேவைத் துணைக்கு அழைக்கிறார். இவர்களின் உண்மை உருவத்தைப் புரிந்துகொள்வீர்!

உலகமகாப் பொய்

ஆர்எஸ்எஸ் ஸின் சங்கமான பிஎம்எஸ் (புருடா மன்னர்கள் சங்கம்) தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17,2010 அன்று ஜமுக்காளத்தில் வடிகட்டி ஒரு பொய்யை அவிழ்த்து விட்டது. வெள்ளைக்காரன் வருவதற்கு முன் இந்த நாட்டில் 70 சதவிகிதம் பேர் படித்திருந்ததாகவும் வங்காளத்தில் மட்டும் 12000 பள்ளிக்கூடங்கள் இருந்ததாகவும் வெள்ளைக்காரன் வந்தபிறகு படித்தவர் எண்ணிக்கை 7 சதவிகிதமாகக் குறைந்து விட்டதாகவும் உலகமகாப் பொய்யை அவிழ்த்து விட்டார்கள். படித்தவர்கள் எல்லோரும் செத்துப் போய்விட்டார்களோ? அல்லது இந்த நாட்டை விட்டு ஓடிவிட்டார்களோ தெரியவில்லை.
அது எவ்வளவு பெரிய பொய் என்பதற்கு அண்ணல் அம்பேத்கர் வரலாற்றிலிருந்து ஆதாரங்களைத் தருகிறோம். அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளில் அதைச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.
“அக்காலத்தில் பெறற்கரிய புதையலாகக் கருதப்பட்ட இலக்கியமும் கல்வியும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரித்தாக விளங்கின. இவை இரண்டும் சாதி இந்துக்களுக்கு மறுக்கப்பட்டன. சத்தாராவின் அரசர்கூட இரவில்தான் கல்வி கற்க வேண்டும் என்ற அளவிற்குப் பார்ப்பனர்களின் அதிகாரம் அச்சமூட்டுவதாய் இருந்தது. 1821ல் பூனாவில் சமஸ்கிருதப் பள்ளி ஒன்றை மகாராட்டிர அரசு தொடங்கியது. அப்பள்ளியில் பார்ப்பனர்களைத் தவிர சாதி இந்துக்களும் சேர்த்துக் கொள்ளப் படுவதற்கு பார்ப்பனர்கள் கடுமையான வெறுப்பையும் எதிர்ப்பையும் காட்டினர். பெரும்பாலான பார்ப்பன ஆசிரியர்கள் பள்ளிகளில் இருந்து தங்கள் பதவிகளைத் தூக்கியெறிந்து விட்டு வெளியேறினர். எனினும் சாதி இந்துக்கள் பயில்வதற்கான பள்ளிகள் பையப்பைய அரசினால் நிறுவப்பட்டன. இதனால் பார்ப்பனர் அல்லாதவர்களும் பின்தங்கிய வகுப்பினரும் கல்வியிலும் அரசு வேலைகளிலும் மெல்ல மெல்ல முன்னேறினர். இதற்கான பெருமை பிரிட்டிஷ் அரசையே சேரும்.
சாதி இந்துக்களுக்கே இந்த ஈனகதி என்றால் தீண்டத் தகாத வகுப்பு மக்களின் நிலை எவ்வாறு இருக்கும்? அவர்கள் இந்தத் துறைகளில் இடம் பெறவே இல்லை. கல்வியில் இவர்கள் நெடுந்தூரம் பின்தங்கி இருந்தனர். தீண்டத் தகாதவர்களுக்குக் கல்வி தருவதன்மூலம் பார்ப்பனர்களின் பகையைத் தேடிக்கொள்ள ஆங்கிலேய ஆட்சி விரும்பவில்லை. அதனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி அளிப்பதில எப்போதும் நழுவல் போக்கும் திசை திருப்பல் முயற்சியுமே அரசிடம் இருந்தது. மேலும் அக்காலத்தில் ஆசிரியர்கள்ää பள்ளி ஆய்வாளர்கள்ää கல்வி அலுவலர்கள் ஆகிய அனைவருமே பார்ப்பனர்கள். வெகு மக்களுக்கு கல்வி தருவது என்ற சிந்தனையையே இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
கிறிஸ்தவ மத நிறுவனங்கள் இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். இவர்களுக்கு ஓர் உள்நோக்கம் இருந்தாலும் தாழ்ந்த சாதியினருக்கும் தீண்டப்படாத வகுப்பு மக்களுக்கும் கல்வி வழங்கிடத் தொடங்கினர். சாதி இந்துக்கள் படிக்கும் பள்ளிகளில் தீண்டப்படாத வகுப்புக் குழந்தைகள் சேர்க்கப்படவில்லை. பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாட் 1883ல் தாழ்த்தப்பட்டவர்களுக்கெனப் பள்ளிகளை நிறுவினார். இந்தப் பள்ளிகளில் இந்துக்கள் எவரும் ஆசிரியராகப் பணியாற்ற முன் வராததால் முஸ்லிம் ஆசிரியர்களைக் கொண்டே நடத்த வேண்டி இருந்தது”              ---(தனஞ்செய்கீர் எழுதிய அண்ணல் அம்பேத்கர் வரலாறு பக்கம் 5ää6ää7)               
இந்த இலட்சணத்தில் எழுபது சதவிகிம் பேர் யார் படித்திருப்பார்கள்? பார்ப்பனர்கள் வேண்டுமானால் படித்திருக்கலாம். வேறு யாராவது படித்திருக்க முடியுமா? நோட்டீஸ் மேல் நோட்டீஸ் போடும் பிஎம்எஸ் இதற்கு பதில் சொல்லுமா?   இது கடந்த ஆண்டு வெளியிட்ட துண்டறிக்கை. இதுவரை பதில் இல்லை. இனியாவது பதில் சொல்லுமா பிஎம்எஸ்?