புதன், 30 நவம்பர், 2016

பிஎம்எஸ் 2014 மே மாதம் நடந்த தேர்தலுக்கு முன்பாக ஓட்டுப்போடச் சொல்லி கேட்டில் நோட்டீஸ் கொடுத்தது. ஆனால் சாமர்த்தியமாக யாருக்குப் போட வேண்டும் என்று சொல்லவில்லை.



ஆர்எஸ்எஸ் என்பது கொடிய விஷமுள்ள பாம்பு. அது நாற்பது குட்டிகளுக்கு மேல் போட்டுள்ளது. ஆர்எஸ்எஸ்ஸின் பல்லிலுள்ள விஷம் அந்தக் குட்டிகளுக்கும் உள்ளது. ஆர்எஸ்எஸ் காந்தியைக் கொன்றது. அதன் குட்டிகள் திருச்சியில் மாநாடு போட்டு திரிசூலம் வழங்கி திரிசூலத்தின் ஒருமுனை இஸ்லாமியரைக் குத்த இன்னொரு முனை கிறிஸ்தவர்களைக் குத்த மூன்றாவது முனை நாத்திகம் பேசும் கம்யூனிஸ்ட் தி.க காரர்களைக் குத்த என்று வெறியூட்டினார்கள்.

அதன் பிறகு பாதிரியார்கள் கொல்லப்படுகிறார்கள்ää கன்னியாஸ்திரிகள் கற்பழிக்கப்படுகிறார்கள்ää மசூதிகளும் சர்ச்சுகளும் எரிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். இதையெல்லாம் செய்தது ஆர்எஸ்எஸ் போட்ட குட்டிகள்தான். தாய் எட்டுப் பேரைக் கடித்துக்கொன்றால் குட்டிகள் பதினாறு பேரைக் கடித்துக்கொல்லும்.


ஆனால் அந்தக் குட்டிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லை என்று சொல்லிக் கொள்ளும். பிஜேபி என்கிற குட்டிக்கு ஜனசங்கம் என்ற பெயர்தான் முதலில் இருந்தது. இது ஆர்எஸ்எஸ் முன்பே போட்ட குட்டி. ஆனால் அதற்குப் பின்பு போடப்பட்ட குட்டிதான் பிஎம்எஸ் என்கிற குட்டி. பிஎம்எஸ் என்கிற குட்டி சொன்னது “நாங்கள் 1955லேயே போடப்பட்ட குட்டிகள். பிஜேபியை 1982ல்தான் ஆர்எஸ்எஸ் போட்டது. அப்படியிருக்க அந்தக் குட்டிக்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள் என்று சொல்வது தவறு என்றது. பெயர்தான் 82ல் மாற்றப்பட்டதே தவிர அந்தக் குட்டியை ஆர்எஸ்எஸ் 1952லேயே போட்டது. இதிலேயே பித்தலாட்டம்.

அந்த பிஜேபி குட்டி சார்பாக ரங்கராஜன் குமாரமங்கலம் திருச்சியில் நின்றபோது அந்த பிஜேபி குட்டிக்கு ஓட்டுப்போடச்சொல்லி கேட் மீட்டிங் புக் பண்ணிக் கொடுத்து தேர்தல் ஏஜன்ட் வேலை பார்த்து ஜெயிக்க வைத்துää அவர் மூலம் பல சலுகைகளை அனுபவித்தது பிஎம்எஸ் குட்டி. அவர் செத்த பிறகு சுகுமாறன் நம்பியாரை பிஜேபி குட்டி தேர்தலில் நிறுத்தியபோது அவருக்கும் கேட் மீட்டிங் புக் பண்ணிக்கொடுத்து தேர்தல் வேலை பார்த்ததுää பிஎம்எஸ் குட்டி. அதற்குப் பிறகு லலிதா குமாரமங்கலத்துக்கும் கேட் மீட்டிங் புக் பண்ணி இத்தியாதி வேலை பார்த்ததும் பிஎம்எஸ் குட்டிதான். இந்த வரலாறெல்லாம் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது என்று நினைத்துக்கொண்டு அந்தக் குட்டிக்கும் இந்தக் குட்டிக்கும் சம்மந்தமில்லை என்று புஷ் புஷ் என்று சீறுகிறது.

ஆனால் இந்த பிஎம்எஸ் குட்டி 2014 மே மாதம் நடந்த தேர்தலுக்கு முன்பாக ஓட்டுப்போடச் சொல்லி கேட்டில் நோட்டீஸ் கொடுத்தது. ஆனால் சாமர்த்தியமாக யாருக்குப் போட வேண்டும் என்று சொல்லவில்லை. இந்தக் குட்டிகளும் யாருக்கு ஓட்டுப் போட்டிருப்பார்கள் என்று தெரிந்திருக்கும். உள்ளே போய் சுகம் அனுபவித்து விட்டு வந்து வெளியிலே வந்து சிணுங்கிக் கொண்டேää அந்தக் குட்டிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்று சத்தம் போடுகிறது.

இந்த தேர்தலில் திருச்சி தொகுதியில் நின்றவர் கேப்டன் கட்சிக்காரர் என்பதால் இப்படி ஒரு நடிப்பு. இ.வா. திராவிடக்கட்சி சங்கத்தின் பேரில் கேட் மீட்டிங் புக் பண்ணித் தேர்தல் பிரச்சாரம் பண்ணியது. அதே நேரத்தில் பிஜேபி குட்டியே நின்றிருந்தால் அந்தக் குட்டியோடு எந்த சம்மந்தமுமில்லை என்று மூச்சு விட்டிருக்குமா? அப்படி மூச்சு விட்டிருந்தால் ஆர்எஸ்எஸ் பாம்புதான் சும்மா விட்டிருக்குமா?

அந்த பிஜேபி குட்டியை விபரம் புரியாமல் வீட்டுக்குள் விட்டதால் (நாட்டுக்குள் விட்டதால்) ஏராளமான விஷத்தைக் கக்கி எல்லாவற்றையும் கபளீகரம் செய்யப் பார்க்கிறது. அதனை நியாயப் படுத்த முடியாது என்பதால் கும்பலில் ஒரு திருடன் மாட்டிக் கொண்டால் மாட்டிக் கொள்ளாத திருடனும் திருடன்! திருடன்! என்று சத்தம் போட்டுத் தப்பித்து ஓடுவது போல பிஜேபி குட்டியின் தவறுகளை எதிர்ப்போம் என்று நாடகமாடி மீதியுள்ள பொருட்களையும் நயவஞ்சகமாகக் கவரத் துடிக்கும் திருடன் போல பிஎம்எஸ் குட்டி நடிக்கிறது.

இந்த அனைத்துக் குட்டிகளுடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தொழிலாளர்களை எச்சரிக்கிறோம். இப்பொழுது கடிக்கவில்லை என்றாலும் படுக்கையில் இருக்கும் பாம்பு நம்மைக் கடிக்காமல் விடாதுää சட்டையைக் கழற்றி விட்டால் பாம்பு பல்லியாக மாறிவிடாதுää பாம்பு பாம்புதான். அதன் பல்லிலுள்ள விஷம் கொடியதுதான். அதனை நம்ப வேண்டாம் என்று தொழிலாளர்களை குறிப்பாக இளம் தொழிலாளர்களை எச்சரிக்கிறோம்.



இராமராஜ்யத்தில் சூத்திரன் சாமியாராக முடியுமா?



இராமராஜ்யத்தில் இராமன் அரச சபையைக் கூட்டி மக்களுடைய குறைகளைத் தீர்த்து வைத்ததாக எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அவன் அரச சபையைக் கூட்டி மக்கள் குறைகளைக் கேட்டது ஒரே ஒரு முறைதான் என்று அண்ணல் அம்பேத்கர் இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர் என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். அதுதான் சூத்திரனான சம்பூகவதம்.

இராமனுடைய அரண்மணைக்கு பார்ப்பனர்கள் ஒரு அய்ந்து வயது சிறுவனுடைய பிணத்தைத் தூக்கிக் கொண்டு வருகிறார்கள். இராமா! உன்னுடைய ஆட்சியில் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கி விட்டது@ அதனால்தான் பிராமணச் சிறுவன் இறந்து விட்டான் என்று முறையிடுகிறார்கள். இராமன் அப்படி என்ன அதர்மம் நடந்துவிட்டது? என்று கேட்டபோது சம்பூகன் என்ற சூத்திரன் கடவுளை வணங்குவதற்காக தவம் இருக்கிறான். தர்மம் என்பது அவரவர் குலத்தொழிலை அவரவர் செய்வதுதான். சூத்திர சம்பூகன் பிராமணர்களாகிய எங்களைத்தான் கடவுளாக வணங்க வேண்டும். அவனே நேரடியாக கடவுளை வணங்கக் கூடாது.

அப்படியிருக்க சம்பூகன் கடவுளை நோக்கி தவமிருப்பது தர்மத்துக்கு விரோதமானது. அதனால் அந்த சூத்திரனை நீ கொல்ல வேண்டும் என்று இராமனுக்கு (அதாவது அரசனான கடவுள் இராமனுக்கு) பிராமணர்கள் உத்தரவு போடுகிறார்கள். இராமன் மறுமொழி பேசாமல் நேராகக் காட்டுக்குச் சென்று தவம் செய்து கொண்டிருக்கும் சம்பூகனை வாளால் வெட்டிக் கொலை செய்கிறான். அவனைக் கொன்றவுடன் பிராமணச் சிறுவன் உயிர் பெற்று எழுந்து விடுகிறான். இராமனின் இந்த செய்கையைப் பாராட்டி வான லோகத்து தேவர்கள் எல்லாம் இராமனுக்கு மலர்மாலை தூவி வாழ்த்துகிறார்கள் என்று வால்மீகி இராமாயணம் கூறுவதாக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அந்த நூலில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

ஆனால் இன்று இராமராஜ்யம் அமைக்கப் போவதாகச் சொல்லும் பிஎம்எஸ் கடந்த மாதம் நடந்த வாயிற்கூட்டத்தில்; தாழ்த்தப்பட்டவர் ஒருவர் ஒரு மடம் அமைத்து அதன் தலைவராக இருப்பதாகவும் அவர் தீண்டாமையை ஒழிக்க நான் அக்கிரஹாரத்துக்கு வருகிறேன் என்றும் கூறினாராம். உடனே ஆர்எஸ்எஸ் அவரை அழைத்துக்கொண்டு அக்கிரஹாரத்துக்குச் சென்றதாம். நாற்பது நாட்கள் அக்கிரஹாரத்தில் அவர் தங்கினாராம். பிராமணர்கள் எல்லாம் அவரை வரவேற்று அவருக்கு பாதபூஜை செய்தார்கள் என்கிறது.

அண்ணல் அம்பேத்கர் மதம் மாறப்போவதாகச் சொன்னபோது ஆர்எஸ்எஸ் காரர்கள் அவரிடம் சென்று நீங்கள் மதம் மாற வேண்டாம். நீங்கள் சொல்லுகிற சீர்திருத்தங்களை இந்து மதத்தில் செய்கிறோம் என்று சொன்னார்களாம். அதற்கு அம்பேத்கர் அவர்கள்ää ~ஒரு தாழ்த்தப்பட்டவரை சங்கர மடத்துக்குத் தலைவராக்கி அவருடைய பாதங்களில் பிராமணர்களை விழுந்து வணங்கச் சொல்லுங்கள். நான் உங்களுடைய கோரிக்கையைப் பரிசீலிக்கிறேன்| என்று கூறினார். வந்தவர்கள் பின்னங்கால் பிடரியில்பட ஓடிவிட்டார்கள். இன்னமும் அந்தக் கோரிக்கை அப்படியே இருக்கிறது. இது அம்பேத்;கர் வரலாறு திரைப்படத்திலேயே காட்டப்படுகிறது.

தாழ்த்தப்பட்டவர் தானாக ஒரு மடத்தைக்கட்டி தானே அந்த மடத்தின் தலைவராக இருக்கிறாரே தவிர அம்பேத்கரின் கோரிக்கைப்படி சங்கர மடத்துக்கு இன்னும் எந்தத் தாழ்த்தப்பட்டவனும் பீடாதிபதி ஆக்கப்படவும் இல்லை. பிராமணர்கள் அவரது காலைக் கழுவிக் குடிக்கவும் இல்லை. ஆனால் பிஎம்எஸ் வார்த்தை ஜாலம் செய்து தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றப் பார்க்கிறது.

அவர்களுக்கு சவால் விட்டுக் கேட்கிறோம். நீங்கள் அமைக்கப் போகும் இராமராஜ்யத்தில் தாழ்த்தப்பட்டவன் சங்கர மடத்துக்குத் தலைவராக முடியுமா? சூத்திரன் சாமியாராக முடியுமா? அப்படி முடியும் என்றால் சூத்திர சம்பூகனைக் கொலை செய்த இராமனை செருப்பால் அடிப்பீர்களா? அல்லது அந்த இராமாயணத்தைத் தீவைத்துக் கொளுத்துவீர்களா? அறிவு நாணயம் இருந்தால் அல்லது இந்த ~பாஷை| புரிந்தால் பதில் சொல்லுங்கள்!                : திராவிடர் தொழிலாளர் கழகம்.

சனாதனிகள் கோவிலுக்கு நுழைய தடையில்லை, ஆனால் சூத்திரர்கள் தலித்துகள் எப்படி கோவிலுக்குள் நுழையலாம்?

கெட்டிக்காரன் புளுகே எட்டு நாள்!

           ராஞ்சியில் நடந்த மத விழா ஒன்றில் பூரி சங்கராச்சாரியார் நிச்சலானந்தா பேசும் போது பகவத் கீதையில் 16-ஆவது அத்தியாயத்தில் வர்ணாசிரமம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நான்கு வர்ணங்கள் மனித குலத்தின் நன்மைக்காக உருவாக்கப்பட்டவைகள். அவரவர்கள் அவர்களுக்கான பணியைச் செய்வதே சிறப்பான ஒன்றாகும். இதற்காகத்தான் வர்ண முறையை உருவாக்கினார்கள். ஆனால் இந்த வர்ண முறையை மீறி அதற்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக தற்போது நடந்து வருகிறார்கள்.
                     
அதாவது சனாதனிகள் கோவிலுக்கு நுழைய தடையில்லை, ஆனால் சூத்திரர்கள் தலித்துகள் எப்படி கோவிலுக்குள் நுழையலாம்? வர்ணாசிரம கொள்கையின் படி தூய்மையானவர்கள் மாத்திரமே கோவிலுக்குள் நுழைய முடியும், அப்படி இருக்க தூய்மைப் படுத்தும் பணியில் உள்ளவர்கள் கோவிலுக்குள் நுழைய எப்படி அனுமதிக்க முடியும்? இது அவர்களாகவே புரிந்து கொண்டு கோவிலுக்குள் நுழைவதைத் தவிர்க்கவேண்டும் இது சாஸ்திரத்தில் கூறியுள்ளது. என்று பேசினார்.

                        இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்தியப்பிரதேச ஆளுநர் ராம்நரேஷ் கூறியதாவது சங்கராச்சாரியாவின் பேச்சில் எந்த தவறும் இல்லை அவர் சாஸ்திரத்தை மேற்கோள்காட்டிப் பேசினார் என்று கூறியிருந்தார். பூரி சங்கராச்சாரியின் தலித் விரோதப் பேச்சின் காரணமாக சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் உயர்சாதியினருக்கும் உள்ள ஜாதி பேதத்தை மேலும் அதிகரித்து ஜாதீய தீண்டாமையைத் திணிப்பவர்களுக்கு துணிச்சலை ஊட்டும் செயலாக இருக்கிறது.
         
ஞாயிறு (19.10.14) பூரி மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்து விட்டனர். சமூகத்தில் ஒருவர் தீண்டாமையை பச்சையாக ஆதரிக்கிறார் அவர் ஒரு மதத்தலைவர் என்றதும் அவருக்கு காவல்துறை சிறப்பு மரியாதை தருகிறது. அவரது பேச்சு சட்ட விரோதமானது என்று காவல்துறைக்கு தெரியவில்லையா? அல்லது அவர்களுக்கு மேலுள்ளவர்கள் இச்சாமியாருக்கு ஆதரவானவர்களா?
          தேங்கடிஜியும் அம்பேத்காரும் பல நாட்கள் சமுதாயப் பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகவம் அம்பேத்கர் அவர்கள் இந்துமதக் கோட்பாடுகள் எதிலும் தீண்டாமை சொல்லப்படவில்லை என்பதை ஹிந்து சன்னியாசிகள் துறவியர் ஒன்று கூடி பகிரங்கமாக அறிவித்திட வேண்டும் என்று விரும்பியதாகவும் அதனை ஏற்று சமுதாயத்தில் நிலவி வரும் தீண்டாமைக் கொடுமைக்கு சாஸ்திர அங்கீகாரம் கிடையாது என தீர்மானம் இயற்றப்பட்டதாகவும் பிஹெச்இஎல் புருடா மன்னர் சங்கம் 13-10-2014 ல் துண்டறிக்கை வெளியிட்டது.

கெட்டிக்காரன் புளுகுக்கே எட்டு நாள்தான் ஆயுள் என்பார்கள். இவர்கள் புளுகு எட்டு மணி நேரம் கூடத்  தாண்டவில்லை. இவர்கள் உயர்த்திப் பிடிக்கும் கீதையிலேயே தீண்டாமைக்கு ஆதாரம் இருப்பதாகப் போட்டு உடைத்து விட்டார் பூரி சங்கராச்சாரி. அவரது பேச்சை பாஜகவைச்சேர்ந்த ஆளுநரும் ஆமோதித்துள்ளார். அந்த சங்கராச்சாரியுடன் மோடி நெருக்கமாக இருக்கும் படங்கள் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.

இப்பொழுது பிஎம்எஸ் என்ன சொல்லப் போகிறது? இந்த பூரிää சப்பாத்தி சங்கராச்சாரிகளெல்லாம் நாங்கள் சொன்ன சன்னியாசிää துறவியர் லிஸ்ட்டில் வரமாட்டார்கள் என்று சொல்லப் போகிறதா? அவருடன் உறவு வைத்திருக்கும் மோடிகள் கேடிகள்மீது நடவடிக்கை எடுக்கப் போகிறதா? அல்லது அந்த கீதையை பகிரங்கமாக நெருப்பு வைத்துக் கொளுத்தப்போகிறதா? அல்லது நாங்கள் எப்பொழுதும் விடும் புருடா மாதிரி இதுவும் ஒரு புருடாதான் என்று ஒத்துக்கொள்ளப்போகிறதா?

இப்படித் தீர்மானம் இயற்றிய சாதுக்கள்ää துறவியர் யார்? யார்? அவர்களெல்லாம் இப்பொழுது உயிருடன் இருக்கிறார்களா? செத்துப் போய்விட்டார்களா? அவர்கள் இந்த பூரி கொழுக்கட்டை மீது நடவடிக்கை எடுப்பார்களா?

அம்பேத்கர் சொன்னது மாதிரி இந்த பூரி கொழுக்கட்டைகளையெல்லாம் சங்கராச்சாரி பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு ஒரு தாழ்த்தப்பட்டவரை சங்கராச்சாரியாக நியமித்து அவரது காலில் இவர்களெல்லாம் விழுந்து மன்னிப்புக் கேட்பார்களா? இல்லையென்றால் இந்த புருடா மன்னர்கள் தங்களது சங்கத்தைக் கலைத்து விட்டு மொட்டையடித்து கஷாயம் தரித்து சன்னியாசியாகப் போய் கங்கையில் விழுந்து கதிமோட்சம் அடையப் போகிறார்களா?                              

பெரியார் பிறந்த பூமியில் மதவாத சக்திகள் தலைதூக்குவதும்ஜாதியம் சண்டித்தனம் செய்வதும் மிகவும் ஆபத்தானது.


     
        நடந்து முடிந்த பணியாளர் வைப்பு நிதி மற்றும் உணவகக் குழுத் தேர்தல் முடிவுகள் நமக்கெல்லாம் வேதனையும் வேடிக்கையும் அளிப்பதாக இருந்தாலும் நிர்வாகம் எதிர் பார்த்தபடி முடிந்துள்ளது. பங்குபெறும் சங்கங்களின் ஒற்றுமை இன்மை சங்கங்களுக்குள்ளேயே குழு மோதல்கள் சொந்த சங்கத்துக் காரனையே எதிரியாகக் கருதும் மனப்பாங்கு இவையெல்லாம் மற்ற சங்கங்களின் தோல்விக்கு காரணமாக அமைந்து.

அகில இந்தியத் தேர்தலில் எப்படி காங்கிரசின் இயலாமை பிஜேபி யின் வெற்றிக்குக் காரணமாக இருந்ததோ  அதுபோலத்தான் இங்கேயும் அவர்களே எதிர்பாராமல் வெற்றிக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். மோடி மோடி வளர்ச்சி வளர்ச்சி என்று கோஷம் போட்டு படாடோபமாக வந்து ஓராண்டு ஆனபின்னும் எந்த வளர்ச்சியும் நாட்டில் ஏற்படவில்லை. மாறாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அபார வளர்ச்சி. அதே போன்ற நிலைதான் இங்கேயும் ஏற்படப் போகிறது என்பதில் எள்ளளவும் அய்யம் இல்லை.

       நிர்வாகம் எப்படியாவது அவர்களை ஜெயிக்க வைத்தே தீர வேண்டும் என்பதிலே குறியாக இருந்தது. இருக்காதா பின்னே? வேலை மட்டும் செய் பலனை எதிர்பாராதே! என்று விவேகானந்தர் புத்தகத்தை வழங்கியதே பிஎம்எஸ்எஸின் ஏற்பாடுதானே! தொழிலாளி மட்டும் பலனை எதிர் பாராமல் வேலை செய்ய வேண்டும். அதிகாரிகள் எல்லாப் பலன்களையும் அனுபவித்துக் கொள்ள வேண்டும். இதுதான் அதன் கருத்து. அந்தக் கொள்கையை அமுல்படுத்த நிர்வாகத்துக்கு பெருந்துணையாக பிஎம்எஸ் இருக்கும் என்பதால்தான் கடந்த மூன்று தேர்தல்களில் மண்ணைக் கவ்விய பிஎம்எஸ் சுக்கு அலுவலகத்தைத் திறந்து விட்டது. அதோடு இ - மெயிலில் பிரச்சாரம் செய்ய அனுமதித்தது. வடநாட்டுக் காரன்களையெல்லாம் பிஎம்எஸ்சுக்கு ஓட்டுப்போட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது நிர்வாகம்.

      அடுத்து நமது தொழிலாளர்களை ஜாதி சங்கங்கள் தவறான திசைக்கு இழுத்துச் செல்கின்றன என்பதும் வேதனையானது. இங்கே ஒவ்வொரு ஜாதிக் காரர்களும் நாங்கள்தான் ஆண்ட பரம்பரைää ஆளப்போகும் பரம்பரை என்றெல்லாம் ஜாதி வெறியை தூண்டி விட்டு ஆதாயம் தேடுகின்றன. அவர்களுக்கு இந்த மதவாத சக்திகள் பெருந்துணையாக இருக்கும் என்பதால் ஜாதிச் சங்கங்கள் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்தன.

      மூவேந்தர்களும் நாங்கதான், சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் எல்லாம் எங்க சொந்தம்தான் என்று பெருமை பேசித் திரிகின்றீர்களே! இந்த மூவேந்தர்களும், சேர சோழ பாண்டிய பல்லவர்களும் இந்த நாட்டை ஆண்டும் உழைக்கும் மக்களுக்கு என்ன பயன்?

ஆயிரம் வருட மன்னர்கள் ஆட்சியை பின்னோக்கிப் பார்த்தால் எந்த மன்னனாவது தமிழன் படிக்க கல்விச் சாலைகளை நிறுவினான் என்ற வரலாறு உண்டா? இப்பொழுது ஆர்எஸ்எஸ், பிஜேபி, பிஎம்எஸ் கும்பல் இராசேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு முடி சூட்டுவிழாவைக் கொண்டாடி வருகிறார்களே!

அந்த இராசேந்திரன் என்ன செய்தான் தெரியுமா?

ஆயிரக் கணக்கான கோயில்களைக் கட்டி வைத்து அதற்கு இலட்சக் கணக்கான வேலி நிலங்களை மானியமாக அளித்து பார்ப்பனர்களை அர்ச்சகராக்கி அவர்கள் உண்டு கொழுக்க ஏற்பாடு செய்தவன்தானே இராசேந்திர சோழன்? அத்தோடு எண்ணாயிரம் என்ற இடத்தில் சமஸ்கிருத வேதபாடசாலை அமைத்து ஆயிரக்கணக்கான வேலி நிலங்களை மான்யமாக அளித்து பார்ப்பனர் மட்டும் படிக்க வசதி செய்து கொடுத்தவன்தானே அந்த இராசேந்திர சோழன்?

      இப்படி அனுபவித்த பார்ப்பான் நம் மக்களை சூத்திரன் என்றான். தேவடியாள் மகன் என்று சாஸ்திரத்தில் எழுதி வைத்தான். சூத்திரன் படிக்கக் கூடாது.படித்தால் நாக்கை அறு என்றான். அதன் காரணமாகத்தானே நம் மக்கள் படிப்பறிவை இழந்தனர். இந்த ஆண்ட பரம்பரையைச் சேர்ந்த யாராவது ஒருவர் நூறு ஆண்டுக்கு முன்னால் படிப்பறிவு பெற்றதாக வரலாறு உண்டா? கையெழுத்து என்றால் கட்டை வண்டி மையைத் தேடித்தானே ஓட வேண்டும். இதையெல்லாம் மாற்றிக் காட்டியவர்தானே தந்தை பெரியார்?

      அந்தப் பெரியார் பிறந்த பூமியில் மதவாத சக்திகள் தலைதூக்குவதும்ஜாதியம் சண்டித்தனம் செய்வதும் மிகவும் ஆபத்தானது. மீண்டும் பழைய நிலையைக் கொண்டு வரவே இவர்கள் முயற்சி செய்வார்கள். இந்த வரலாறு தெரியாத இளைஞர்களிடம் மதவாதமும் ஜாதிய வாதமும் திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. பெற்ற உரிமைகளைப் பேணிக் காக்க பிற்படுத்தப்பட்ட – தாழ்ப்பட்ட மக்களே! ஒன்று சேருங்கள். ஜாதி மத சக்திகளை விரட்டி அடியுங்கள்!      
       

ஐ.நா.சபை 2012 அய் சர்வதேச கூட்டுறவு ஆண்டாக அறிவித்து அந்தமாநாட்டை ஸஹகார் பாரதி என்ற அமைப்பிடம் ஒப்படைத்துள்ளதாம்




   ஐ.நா.சபை 2012 அய் சர்வதேச கூட்டுறவு ஆண்டாக அறிவித்து அந்தமாநாட்டை ஸஹகார் பாரதி என்ற அமைப்பிடம் ஒப்படைத்துள்ளதாம். அந்தஅமைப்பு பாரத்மாதாகீஜெய் என்று கோஷம் எழுப்பும் அமைப்புத்தான் என்றுமிகவும் பெருமை பொங்க அறிவித்துள்ளது பிஎம்எஸ். அதுஎன்னபாரத் மாதாகீ ஜெய் என்றுகோஷம்  எழுப்பும் அமைப்பு? ஆர்எஸ்எஸ்ஸின் ஒரு பிரிவு என்று வெளிப்படையாகச் சொல்ல வெட்கம் ஏன்? ஆர்எஸ்எஸ் என்பது மரம். அதிலிருந்து பலகிளைகள் தோன்றியுள்ளன. முதலில் வந்த கிளை பிஎம்எஸ். கடைசியாக வந்த கிளை இந்த ஸஹகார் பாரதி என்ற அமைப்பு.

   சிலநாட்களுக் குமுன் ஸம்ஸ்க்ருத பாரதி என்ற அமைப்பைப் பற்றியும் பிஎம்எஸ் நோட்டீஸ் ஒட்டினாலும் அப்பொழுது இதுபோல் தாங்கள்தான் அதனை ஒட்டினோம் என்று போடவில்லை. ஏனென்றால் ஒருகாலத்தில் ஸம்ஸ்க்ருதம் ப்ராம்ணர்கள் மட்டுமே பேசியமொழி. தேவபாஷை என்று சொல்லப்பட்ட பாஷை. முப்பத்திமுக்கோடி தேவர்களும் பேசியபாஷை. நம்முடைய ஆட்கள் அதைக் கற்றுக்கொள்ள முயன்றபொழுது சூத்திராளுக்கெல்லாம் சொல்லித்தரமாட்டோம் என்று மறுக்கப்பட்டபாஷை. இன்று பேசுவதற்கு நாதியில்லாத செத்த மொழியான பாஷை. முப்பத்தி முக்கோடி தேவர்களும் செத்துப் போயிட்டா போலிருக்கு.

அதனால அந்த பாஷையை சாகவிடாமல் தடுப்பதற்காக சூத்திராளுக்கும் பஞ்சமாளுக்கும் இலவசமாச் சொல்லித் தாரோம்னுட்டு ஏகத்துக்கும் விளம்பரம் பண்ணியும் சீந்துவாரில்லாமல் போயிடுத்து.

   அந்த ஸம்ஸ்க்கிருத பாரதியும் பாரத் மாதாகீ ஜெய் னுட்டுகோஷம் போடற அமைப்புத்தான். அதே மாதிரி பாரதீய ஜனதாங்கிற கட்சியும் கூட  பாரத் மாதாகீ ஜெய் னுட்டுகோஷம் போடற அமைப்புத்தானே தவிர பாரத் பிதாகீ ஜெய்னுட்டு கோஷம் போடறஅமைப்பு இல்லை! இதையெல்லாம் ஏன் பிஎம்எஸ் பெருமையாச் சொல்றதில்லை? அதான் இப்பக்கூட நாறிப்போய்க்கிடக்கிறதே!

    கர்நாடகத்தில் ஸிந்தகிவட்டத்தில் ஆர்எஸ்எஸ் காரர்களே அதாவதுபாரத் மாதாகீ ஜெய் னுட்டுகோஷம் போடற அமைப்புக்களில்  ஒன்று பாக்கிஸ்தான் கொடியேற்றிவிட்டு முஸ்லிம்கள் மேல் பழியைப் போட்ட விவகாரம் பற்றி சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடந்து கொண்டிருந்தபோது பிஜேபியின் மூன்றுஅமைச்சர்கள் சுவாரஸ்யமாக செல்போனில் பலான படம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். சட்டசபை நிகழ்சிகளையெல்லாம் டிவியில நேரடியாக் காட்டுவாங்க என்கிற சொரணைகூட இருந்ததாகத் தெரியவில்லை. இதனை அந்த கடன்கார டிவிக்காரன் ஸ_ம் பண்ணிக்காட்டிபுட்டான்.

அதைக்கண்டு புடுச்சிக் கேட்டா தென்னமரத்துல தேங்காதிருடப் போனவன் மாட்டிக்கிட்டவுடனே கன்னுக்குட்டிக்குப் புல்லுப் பறிக்கவந்தேன்னு சொல்றமாதிரிää வெளிநாட்டுக்காரன் ஒரு பொண்ணைரேப் பண்ற மெஸேஜ் எஸ்எம்எஸ்ல வந்தது. அதத்தான் பாத்துக்கிட்டிருந்தோம்னுட்டு அசடுவழிஞ்சா அந்த மூணு பேரும். யப்பா! நீங்க பாத்ததுரேப் சீனா இருந்தா ஆம்பளதான் பொம்பள டிரஸ்ஸ அவுத்துப்போடுவான். இதுல பொம்பளயே ஒவ்வொருடிரஸ்ஸா அவுத்துப்போட்டுட்டு ஆடுறாளே! இதுவாரேப் சீனு? னுட்டு எக்குத்தப்பாக் கேட்ட உடனே அந்த மூணுபேரும் ராஜினாமா பண்ணிட்டா. இவாளும் பாரத் மாதாகீ ஜெய்ன்னு கோஷம் போடறவாதானே?

   இதையெல்லாம் இந்தபிஎம்எஸ் ஏன் பெருமையாச் சொல்லலை?
சொன்னால் முக்காடு போட்டுக்கொண்டு அவாளோட உறவு வச்சிண்டு யாராவது கேட்டா நான் அவனில்லை@ அவனுக்கும் நேக்கும் எந்தத் தொடர்பும் இல்லைன்னு சொல்ற பித்தலாட்டம் வெளியில வந்துடுமோல்லியோ?

ஒருமரத்திற்குப் பலகிளைகள் இருந்தாலும் எந்தக் கிளையில்  பழம் பழத்தாலும் எல்லாவற்றுக்கும் ஒரே ருஷிதான் இருக்குமே தவிர ஒவ்வொரு கிளையிலும் பல்வேறு ருசியுள்ள கனிகள் காய்ப்பதில்லை என்பது இயற்கை நியதி. அதே மாதிரி ஆர்எஸ்எஸ் என்கிற மரத்தின் பல்வேறு கிளைகளுள் பிஎம்எஸ். ஒருகிளை. பிஜேபி இன்னொரு கிளை. அதற்கு உள்ள பவுதிக குணங்கள் அனைத்தும் இதற்கும் இருக்கும்.

எனவே, பிஎம்எஸ்ஸே! முக்காடு போட்டுக்கொண்டு தொழிலாளர்களை ஏமாற்றாதே! முக்காட்டை விலக்கி உன் உண்மைக் கோர முகத்தைக் காட்டு! இல்லையேல் தொழிலாளர்களே உன் முகத்திரையைக் கிழிப்பார்கள்!

அதுசரி! ஐ.நா சபை அறிவித்த சர்வதேச கூட்டுறவு ஆண்டைக் கொண்டாடச் சொல்கிறாயே!  ஆனால் சர்வதேச தொழிலாளர் தினமான மேதினத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாயே! இது என்ன இரட்டைவேடம்?                     28-04-2012
 :

BMS கூட்டுக் குழுவுக்கு கன்வீனர் பொறுப்புக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டது



1996ல் தேர்தல் நடப்பதற்கு முன் பங்குபெறும் சங்கமாக இருந்தவர்களை கையாலாகாத சங்கங்கள், கையாலாகாத சங்கங்கள் என்றே கேலி பேசி வந்தது BMS. எங்களுக்கு ஒரே ஒரு முறை வாய்ப்புத் தாருங்கள். நாங்கள் வந்தால் வானத்தை வில்லாய் வளைக்கிறோம். மணலைக் கயிறாய்த் திரிக்கிறோம் என்று சவடால் விட்டார்கள்.

அப்பொழுது மத்தியில் BJPஆட்சி நடந்ததால் மக்களிடம் நாங்கள்தான் ஆட்சியில் இருக்கிறோம். எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள். வந்த உடன் நடப்பதைப் பாருங்கள் என்று ரீல் விட்டார்கள். தொழிலாளர்களும் நம்பி ஓட்டுப் போட்டார்கள்.
மத்தியில் எங்கள்  ஆட்சிதான் நடக்கிறது என்று கூறி  1997ல் நடந்த ஊதிய உயர்வு கூட்டுக் குழுவுக்கு கன்வீனர் பொறுப்புக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

அதற்காக நடந்த கூட்டுக்குழுக் கூட்டத்தை BMS அலுவலகத்தில் கூட்டினார்கள். அப்பொழுது திராவிடர் தொழிலாளர் கழகம்தான் “நீங்கதான் அரசியல் சார்பற்ற சங்கம்னு சொல்லிக்கிறீங்களே! உங்களுக்கும் BJPக்கும் எந்த சம்மந்தமும் இல்லேன்னும் சொல்லிக்கிறீங்களே! இப்ப நாங்கதான் மத்தியில ஆளுறோம். அதனால எங்களுக்கு கன்வீனர் பொறுப்பு வேணுமின்னு எப்படி விரும்புறீங்க?” என்று கேட்ட உடன் உப்புக் கண்டம் பறிகொடுத்து பழைய பாப்பாத்தி மாதிரி விழிக்க ஆரம்பிச்சாங்க.

அதையே மற்ற சங்கங்களும் வழிமொழிய ஆரம்பிச்சாங்க. அதனால உடும்பு வேண்டாம். கையை விட்டாப் போதும்னு ஓடி ஒளிஞ்சிக்கி;ட்டாங்க. அன்றைக்கு முதன்மைச் சங்கமா இருந்த அம்பேத்கர் சங்கம் தலைமை தாங்கனும். இல்லேன்னா அடுத்த இடத்தில் இருக்கிற தொமுச தலைமை தாங்கனும்னு கோரிக்கை வைத்தோம். ஏற்கனவே பல போராட்டங்களில் தலைமையேற்று வெற்றி பெற்ற தொமுச வே தலைமை தாங்கலாம் என்று எல்லோரும் முடிவெடுத்தாங்க. அதன்பிறகு தொமுச பொதுச் செயலாளர் முத்துக் கருப்பன் கன்வீனரானார்.

கையாலாகாத சங்கங்கள் என்று BMS ஆல் வர்ணி;க்கப்பட்ட சங்கங்கள் இருந்தபோது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்றும் அடுத்து அய்ந்து ஆண்டுக்கு ஒரு முறை என்றும் ஊதிய மாற்ற ஒப்பந்தம் ஏற்பட்டு வந்தது. BMS  பங்குபெறும் சங்கமாக ஆனபிறகு அப்பொழுது நடந்த BJP அரசாங்கத்தின் கொள்கையாலதான் அதுவரை 5 ஆண்டாக இருந்த ஊதிய மாற்றம் பத்து வருடத்திற்கு என்று முடிவானது. ஆக அய்ந்து வருடத்தை பத்து வருடமாக ஆக்கியதுதான் BMS ன் ஒரே சாதனை. BJPஅரசாங்கத்தின் சாதனை.

இப்பொழுதும் தொழிலாளர்கள் மத்தியில் அதுபோன்ற பிரச்சாரம் நடக்கிறது. அதாவது மத்தியில BMS க்கு நெருக்கமான மோடி தலைமையிலான BJPஅரசாங்கம் நடக்கிறதால BMS க்கு ஓட்டுப் போட்டீங்கன்னா நாங்க மறுபடியும் வானத்த வில்லா வளைப்போம் மணலைக் கயிறாத் திரிப்போம்னு கதை விடுறாங்க.
பழைய தொழிலாளர்கள்தான் அப்போ அதை நம்பி ஏமாந்தாங்க! இப்போ புதிய தொழிலாளர்களாகிய நீங்களும் நம்பி ஏமாறப் போறீங்களா? சிந்தியுங்கள்.!!


டியூசன் வாத்தியார் தன்னிடம் பயின்ற மாணவன் வேலைக்குப் போனால் உன் சம்பளத்தையெல்லாம் என்னிடம்தான் தர வேண்டும் என்று சொன்னால் எவ்வளவு அயோக்கியத் தனமானதோ அதைவிட மோசமானது பிஎம்எஸ் ஸின் செயல்.


நமது அர்த்தமுள்ள(?) இந்து மதத்தில் ஒருவனுடைய ஜாதி பிறப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்படுகிறது. கேட்டால் பிர்மா உன் தலையில் அப்படி எழுதி விட்டார் என்று கதைவிட்டார்கள். அந்த நபர் தான் வளர்ந்த பிறகு தன்னுடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஏற்ற வகையில் வேறு ஒரு மதத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள இந்த நாட்டு சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் தன்னுடைய ஜாதியை மாற்றிக் கொள்ள இந்துமதம் அனுமதிப்பதில்லை. தோட்டியின் மகன் தோட்டியாகவே சாகவேண்டும். தீண்டத்தகாதவன் எல்லாக் கொடுமைகளையும் அனுபவித்து விட்டு தீண்டத்தகாதவனாகவே சாக வேண்டும். பார்ப்பான் மட்டும் உலகிலுள்ள எல்லா சுகபோகங்களையும் அனுபவித்து விட்டு பார்ப்பானாகவே சாக வேண்டும் என்கிறது இந்து மதம்.

அதே போல இந்த நிறுவனத்தில் வேலைக்கு வருவதற்கு முன்பே ஒரு தொழிலாளிக்கு தொழிற்சங்கமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்படி நிர்ணயம் செய்பவர்கள் பிஎம்எஸ் காரர்கள். இந்த நிறுவனத்தில் ஒரே ஒருமுறை தொழிலாளர்கள் ஏமாந்து ஓட்டுப்போட்டாலும் அடுத்தடுத்த தேர்தல்களில் பிஎம்எஸ் சுக்கு இங்கு இடமில்லை என்று ஓடஓட விரட்டியடித்தார்கள்.

தங்களைப்பற்றியும் தங்கள் கொள்கைகளையும் வெளிப்படையாக எடுத்துச்சொல்லி தொழிலாளர்களைத் தங்கள் சங்கத்தில் சேர்க்க முடியாது என்பதைத் தெரிந்துகொண்ட பிஎம்எஸ் ஒரு குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்தது. அதுதான் ஆர்டிசான் பயிற்சி வகுப்பு. இங்கே பல சங்கங்களும் அந்தப் பயிற்சி வகுப்பை நடத்தினாலும் வேலைக்குச் சேர்ந்த பிறகு எங்கள் சங்கத்தில்தான் சேர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை.

ஆனால் பிஎம்எஸ் மட்டும் பயிற்சியில் சேரும்போதே ஏற்கனவே பிஎம்எஸ் ஸில் இருக்கும் நபர் சிபாரிசு செய்ய வேண்டும் என்றும்ää தேர்வில் வெற்றி பெற்று தேர்வு ஆனால் பிஎம்எஸ்ஸில்தான் உறுப்பினராகச் சேரவேண்டும் என்றும் உறுதிமொழி எழுதி வாங்கிக் கொள்கிறது.

அத்துடன் ஆர்எஸ்எஸ் சாகாக்களில் செய்வதுபோல் அவர்களை மூளைச்சலவை செய்து சத்தியம் வாங்கிக் கொள்கிறது. அவர் வேலைக்கு வந்த உடனேயே அவரை அணுகி உறுப்பினர் படிவத்தை நீட்டி கையெழுத்து வாங்கி விடுகிறார்கள். அவர்கள் தயங்கினால் அவர்களை மிரட்டி நாங்கள் நினைத்தால் உன்னுடைய ஆர்டரையே நிறுத்தி விடுவோம். பெர்சனலில் எங்களுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று பிளாக் மெயில் செய்து அவர்களை உறுப்பினராக்குகிறார்கள்.

இது கடைந்தெடுத்த ஏமாற்று வேலையாகும். இவர்கள் பயிற்சி அளிப்பது பணம் வாங்கிக் கொண்டுதானே தவிர யாருக்கும் இலவச பயிற்சி அளிப்பதில்லை. அது ஒரு டியூசன் வாத்தியார் பணிதான். டியூசன் வாத்தியார் தன்னிடம் பயின்ற மாணவன் வேலைக்குப் போனால் உன் சம்பளத்தையெல்லாம் என்னிடம்தான் தர வேண்டும் என்று சொன்னால் எவ்வளவு அயோக்கியத் தனமானதோ அதைவிட  மோசமானது பிஎம்எஸ் ஸின் செயல்.

எனவே, பிஎம்எஸ்இனிமேல் இதுபோன்ற பிளாக் மெயில் வேலையை நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது நிர்வாகம் இதுபோன்ற பயிற்சி வகுப்பினை நடத்துவதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது.  புதிய ஊழியர்களே! பிஎம்எஸ் ஸின் மிரட்டலுக்குப் பணியாதீர்! அவர்கள் தொழிலாளர்களுக்காக தொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொழிலாளர்களால் நடத்தப் படுகிற சங்கம் என்று சொல்வது பொய்.

அந்த சங்கத்தை ஆரம்பித்த திரு. தெங்கடி ஒரு ஆர்எஸ்எஸ் காரர். அவர் எந்த தொழிற்சாலையிலும் வேலைபார்த்த தொழிலாளி அல்ல. அதை வழிநடத்தும் தலைவர்கள் ஓ.பி. அஹி, எம்.என்.ஜா போன்றோரும் ஆர்எஸ்எஸ் காரர்களே! ஆர்எஸ்எஸ் ஸால் ஆரம்பிக்கப்பட்டு ஆர்எஸ்எஸ் கொள்கையைப் பரப்புவதற்காக ஆர்எஸ்எஸ் காரர்களால் நடத்தப்படுகிற சங்கம்தான் பிஎம்எஸ். நாட்டில் மூன்றுமுறை தடைசெய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் சின் சங்கத்தில் சேர்ந்து உங்கள் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளாதீர்!    :

சங்கராச்சாரி சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத யாராவது பார்த்து விட்டால் தோஷம்


அண்ணல் அம்பேத்கரின் சமூக மறுமலர்ச்சி சிந்தனைää சுவாமி விவேகானந்தரின் ஆன்மபலம்ää நேதாஜியின் தேசபக்திää காந்தியின் சுதேசி பொருளாதாரம்ää ஹெட்கேவரின் தேசிய விழிப்புணர்ச்சி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த சக்தியாக பிஎம்எஸ் அய் தெங்கடி உருவாக்கினார் என்று பிஎம்எஸ் சங்கமடல் மார்ச் 1997ல் எழுதினார்கள் பிஎம்எஸ் காரர்கள்.

  அம்பேத்கர் கேட்டார் ~சங்கரமடத்துக்குத் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்டவனை நியமித்து அனைத்துப் பார்ப்பனர்களும் அவர் காலில் விழுந்து வணங்கத் தயாரா?| என்று. அதனைத்தான் பிஎம்எஸ்ஸை நோக்கி நாங்கள் கேட்டோம். சங்கராச்சாரியாகக் கூட அல்ல சங்கர மடத்தில் ஒரு சமையல் காரனாகக்கூட ஒரு தாழ்த்தப்பட்டவனை ஆக்க முடியாது. தாழ்த்தப்பட்டவன் மட்டுமல்ல ஒரு உயர்ந்த ஜாதி என்கிற ஜாதி இந்துவைக்கூட நியமிக்க முடியாது. ஏனெனில் சங்கராச்சாரி சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத யாராவது பார்த்து விட்டால் தோஷம் என்று அந்த சாப்பாட்டை குழிக்குள் போட்டுப்புதைக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

அம்பேத்கரின் இந்தக் கேள்வியைத்தான் நாங்கள் கேட்டோம். இதற்கு பதில் சொல்ல வக்கில்லை பிஎம்எஸ்ஸ_க்கு. இவர்கள்தான் அம்பேத்கரின் சமூக மறுமலர்ச்சி சிந்தனையை ஏற்றுக்கொண்டவர்களாம். இக்கேள்வியை நாங்கள் கேட்டதுபோல பிஎம்எஸ் உளறுகிறது. இன்னும் இதுபோல எங்கள் கேள்விகள் பல இருக்கின்றன. இதற்கெல்லாம் பதில் சொல்ல பிஎம்எஸ்ஸால் மட்டுமல்ல அதன் அப்பன் பாட்டனாலும் முடியாது. இதுபோன்ற பதில் சொல்லமுடியாத வினாக்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது ஆர்எஸ்எஸ் சங்பரிவாக் கூட்டத்தின் தந்திரங்கள். பதில் சொன்னால் அவர்கள் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்பது அனைவருக்கும் மட்டுமல்ல அவர்களுக்கும் தெரியும்.

அதனால் இப்பொழுது பிஜேபி என்ற பெயராலும் இந்துமுன்னணி என்ற பெயராலும் பெரியார் மணியம்மை திருமணத்தைப்பற்றி எழுதி ஏதோ திகவுக்கு பதில் சொல்லிவிட்டதுபோலவும் எதிர்த்து மடக்கிவிட்டதுபோலவும் தனக்குத்தானே திருப்தி அடைந்துகொண்டிருக்கிறது பிஎம்எஸ். இந்த இந்துமுன்னணியும்ää பிஜேபியும் எந்த சந்துபொந்துக்குள் நுழைந்துள்ளது? ஏன் பிஎம்எஸ் நேரடியாக பதில் சொல்லாமல் இப்படி குறுக்கு வழிகளைக் கையாள வேண்டும்? அதுதான் ஆர்எஸ்எஸின் தந்திரம்.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உன் அப்பன் பாட்டன் காலத்திலேயே பதில் சொல்லி விட்டோம். வாந்தியெடுத்ததை மீண்டும் சாப்பிட்டு மீண்டும் மீண்டும் வாந்தியெடுக்கும் ஜந்துபோல நூறு தடவைக்குமேல் நாங்கள் பதில் சொன்ன விஷயத்தையே மீண்டும் கேட்காதே. பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்தது உடல் சுகத்துக்காகவோ, பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையினாலோ நடந்தது அல்ல. மணியம்மையும் பெரியாரின் சொத்துக்காகவோ அவரிடம் சுகம் காண வேண்டும் என்பதற்காகவோ அவரிடம் வந்து சேர்ந்தவர் அல்ல.

அண்ணாவும் திமுகவினரும் முதலில் பெரியார் மணியம்மை திருமணத்தை எதிர்த்திருந்தாலும் அண்ணா வெற்றி பெற்று முதல்வரானவுடன் அந்த ஆட்சியையே பெரியாருக்குக் காணிக்கை என்று ஆக்கி அவரது கொள்கைகளையெல்லாம் சட்டமாக்கினார். அவர் வழி வந்த கலைஞரும் பெரியாரின் கொள்கைளையே சட்டமாக நடைமுறைப்படுத்தினார்.

திகவும் திமுகவும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு வரும் காலத்தில் இதுபோன்ற சிண்டுமுடியும் கேள்விகள் கேட்பது உன்னுடைய பேடித்தனத்தையே காட்டுகிறது. நாங்கள் கேட்ட கேள்விகள் பதில் சொல்ல முடியாமல் ஏராளம் இருக்கின்றன. அதற்கெல்லாம் பதில் சொல். நீங்கள் எந்தக் கேள்வி கேட்டாலும் பெரியார் வழிவந்த நாங்கள் அவரைப்போலவே உன் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றுவோம். எனவே பிஎம்எஸ்ஸே! முகமூடி அணிந்து குறுக்குச்சால் ஓட்டாதே!

ஆர்எஸ்எஸ்டன் உள்ள உறவை பெருமையாக வெளியில் சொல்லிக் கொள்வதில்லை.


சமூக ஆர்வலர் என்ற முகமூடியை அணிந்து அன்னா ஹசாரேயை களத்தில் இறங்கிக் கச்சை கட்டினார். அடுத்து பாபா ராம்தேவ் என்ற சாமியார். இவர்களின் பின்னணியில் இருப்பது ஆர்எஸ்எஸ் சங் பரிவார், பிஜேபி என்பதில் அய்யம் எதுவும் இல்லை. ஆனால் அன்னா ஹசாரேயோ, ராம்தேவோ தாங்கள் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் என்பதை ஒத்துக் கொள்வதில்லை. அன்னா ஹசாரே சவால் விட்டார். நான் ஆர்எஸ்எஸ் காரன் என்பதை நிரூபிக்க முடியுமா? என்று. அதேபோல் பெல் நிறுவனத்தில் செயல்படும் பிஎம்எஸ் சங்கமும் தனக்கும் ஆர்எஸ்எஸ் சுக்கும் சம்மந்தமே இல்லை என்று சத்தியம் செய்கிறது.

ஆனால் இவர்களது குட்டை ஆர்எஸ்எஸ் மட்டைக்கு இரண்டு கீற்றாகக் கிழித்துப் போட்டுவிட்டது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்ராவ் பகவத்ஆ,ர்எஸ்எஸ் சுக்கும் அன்னா ஹசாரேவுக்கும் நீண்டநாள் தொடர்பு உள்ளதாகவும்ää ஆர்எஸ்எஸ்தான் அவரை ஊழலுக்கு எதிராகப் போராடச் சொன்னதாகவும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். பிஎம்எஸ் சுக்கும் ஆர்எஸ்எஸ் சுக்கும் உள்ள தொடர்பை பத்து ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் திருவெறும்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அம்பலப்படுத்தினார். இருந்தாலும் அவர்கள் ஆர்எஸ்எஸ் சுடனான உறவை இன்னும் வெளியில் சொல்ல வெட்கப்படுகிறார்கள். அது ஏன்?

ஆர்எஸ்எஸ் என்பது வெகு மக்களுக்கு எதிரான அமைப்பு. காந்தியைக் கொன்ற கோட்ஷேயை உருவாக்கிய இயக்கம். பார்ப்பன நலனை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட இயக்கம். ஜாதி வெறியும் மதவெறியுமே அதன் மூலதனம். அதில் உறுப்பினர் என்பதையோ அதனுடைய ஆதரவாளர் என்பதையோ வெளிப்படையாகச் சொல்வதற்கு அதன் ஆதரவாளர்களுக்கே அவமானமாக இருக்கிறது.

சமுதாயத்தில் நல்ல செல்வாக்குள்ள மரியாதைக்குரிய நபர் யாராவது இருந்தால் அவருக்கு சம்மந்தமில்லாதவராக இருந்தாலும்கூட ஏதாவது ஒரு விதத்தில் அவருடன் தொடர்புள்ளவர் என்பதை பெருமையாகப் பலரும் கருதுவர். ஆனால் அதே நேரத்தில் பல குற்ற வழக்குகளில் ஈடுபட்டு காவல்துறையால் கைவிலங்கிடப்பட்டு வீதியில் ஒருவர் இழுத்துச் செல்லப்படும்போது,அதற்கு முதல் நொடிவரை அவருடன் தண்ணியடித்து, தம்மடித்து பிரியாணி தின்று உறவாடியவர்கூட அவருடைய தொடர்பை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ள மாட்டார். அத்துடன் வேறு யாராவது இவரிடம் அவர் உனக்கு வேண்டியவர்தானே என்று கேட்டாலும் இல்லை இல்லை அவருக்கும் எனக்கும் தொடர்பே இல்லை என்றுதான் சொல்வார்.

அதுபோலத்தான் ஆர்எஸ்எஸ் என்பது வெகுமக்களிடம் அம்பலப்பட்டுக்கிடக்கிறது அதனால்தான் யாரும் அதனுடன் உள்ள உறவை பெருமையாக வெளியில் சொல்லிக் கொள்வதில்லை. அதன் காரணமாகத்தான் அன்னா ஹசாரே நான் ஆர்எஸ்எஸ் இல்லை என்பதை அடித்துச் சொல்கிறார். பாபா ராம்தேவ் பசப்பு வார்த்தை பேசுகிறார்.  பெல்லில் பிஎம்எஸ் ஆர்எஸ்எஸ் சுடைய தொழிற்சங்கம் இல்லை என்பதுவும் அந்த அடிப்படையில்தான்.
வெளிப்படையாக இருப்பவரை நம்பலாம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். எனவே உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி சமூக சேவை என்று முகமூடி அணிந்து உலாவரும் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது வெகுமக்கள் நலன் நாடுவோரின் கடமையாகும்.               இவண்:

தற்காலிக ஊழியர் என்ற கொள்கையை முறியடிக்காமல் RECRUITING POLICY யை மாற்றாமல் என்னதான் தொழிலாளர்களுக்குக் குரல் கொடுப்பதாக நடித்தாலும் அது நிர்வாகத்துக்கு சாதகமாகத்தான் முடியும்.



நம் நிறுவனத்தில்  பணிநியமனத்தில் மேற்பார்வையாளர்களும் பொறியாளர்களும் நிரந்தரமாக எடுக்கப்படுகிறார்கள். ஆனால் தொழிலாளர்கள் மட்டும் தற்காலிகம் என்று எடுக்கப் படுகிறார்கள். முதல் பேட்ஜ் ஆர்டிசான் எடுத்தபொழுது அதற்கான அறிவிப்பில் ஓராண்டு தற்காலிகத்துக்ப் பின் அவர்கள் நிரந்தரம்
செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால் பணி ஆணை வழங்கியபோது தான் கூறியதற்கு மாறாக 2.5 ஆண்டுகளுக்குப்பின் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று ஆணை வழங்கியது. இது மிகப்பெரிய நாணயக் கேடாகும். எந்த ஒரு தனியார் நிறுவனம்கூடச் செய்யத் துணியாத காரியத்தை எந்த விதக் கூச்சநாச்சமின்றி எந்தவித சட்டவிதியையும் மதிக்காமல் அதனைச் செய்தது பொதுத்துறை நிறுவனமான பெல் நிர்வாகம்.

அதற்கு அரசு வழிகாட்டல் எதுவும் அப்போது இல்லை. நிறுவனத்தின் மனிதவளக் கொள்கையிலும் அத்திட்டம் இல்லை.Government guideline, Company guideline, HR Manual, Recruiting policy எதுவுமே இல்லாமல் மிகவும் துணிச்சலாக இந்த சட்டவிரோதச் செயலைச் செய்தது நிர்வாகம். அதற்குப் பிறகு எடுத்த இரண்டாவது பேட்ஜ் ஆர்டிசான் மூன்றாவது நான்காவது என்று தொடர்ந்து அப்படித்தான் செயல்பட்டது நிர்வாகம். 2007ல்தான் நிர்வாகம் HR MANUAL ல்  RECRUITING POLICYயை மாற்றுகிறது.

இதற்கு என்ன காரணம்? நிர்வாகத்தில் ஆர்எஸ்எஸ் காரர்களின் ஊடுருவல் அதிகரித்திருக்கிறது. தொழிலாளர்களிடம் கூலிகொடுத்தோ கூலிகொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்ற  மனுதர்ம மனப்பான்மையின் அடிப்படையில் அந்த அதிகாரிகள் அதனை செயல்படுத்தியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பிஎம்எஸ் உறுதுணையாக இருக்கும் என்பதால்தான் எப்படியாவது பிஎம்எஸ்ஸை வளர்த்துவிட வேண்டும் என்று நிர்வாகம் பல சலுகைகளை பிஎம்எஸ்சுக்கு வழங்கி வருகிறது. இந்தத் தற்காலிக ஊழியர் என்ற கொள்கையை முறியடிக்காமல்  RECRUITING POLICY யை மாற்றாமல் என்னதான் தொழிலாளர்களுக்குக் குரல் கொடுப்பதாக நடித்தாலும் அது நிர்வாகத்துக்கு சாதகமாகத்தான் முடியும்.

பொறியாளரும் மேற்பார்வையாளரும் நிரந்தரமாக எடுக்கப்படும்போது ஆர்டிசான் மட்டும் ஏன் தற்காலிகமாக எடுக்கப்படவேண்டும் என்ற கேள்வியை பிஎம்எஸ்ஸால் எழுப்ப முடியுமா? அந்தக் கேள்வியை எழுப்பாமல் தொழிலாளர்களுக்காகக் குரல்கொடுப்பது என்பது ஏமாற்று வேலை. இங்கு பிஎம்எஸ் ஆர்டிசானுக்குக் குரல் கொடுப்பதாக நடித்து வருவதெல்லாம் அடுத்த தேர்தலில் எப்படியாவது இழந்த தனது அங்கீகாரத்தை மீண்டும் பெறுவதற்காகவே. ஆர்டிசானுக்கு 11000 என்பதும் 2.5 இன்கிரிமென்ட் என்பதும், வழக்கு, ஆணையம் என்பதெல்லாம் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதக் கொள்கைக்கு மேலும் வலுவூட்டுவதாகத்தான் இருக்கிறது.

அதனை நம்பி தொழிலாளர்கள் ஏமாந்தால் அவர்கள் தலையில் அவர்களே மண்ணைப் போட்டுக்கொள்கிற கதையாகத்தான் முடியும். ஏனென்றால் பிஎம்எஸ்எஸின் தொழிலாளர் கொள்கை என்பது தொழிலாளர்கள் என்றும் அடிமைகள் என்பதுதான். தன்னுடைய  எஜமானர்களின் நன்மைக்காக தொழிலாளர்கள் உழைக்க வேண்டும் என்பதுதான்.

“இந்த வேலை கடவுள் கொடுத்தார். அதற்காக எவ்வளவு கூலி கிடைக்க வேண்டுமோ அதனை கடவுள் கொடுப்பார். அதனை மனமுவந்து பெற்றுக்கொண்டு தனது சமுதாயக் கடமையை நிறைவேற்ற வேண்டும்” என்று அவர்களது நிறுவனர் தெங்கடிஜி அவர்கள் WHY BMS?’ என்ற நூலில் கூறியிருக்கிறார்.
இந்தக் காரணத்தினால்தான் 1996ல் பங்குபெறும் சங்கமாக இருந்தபோது ஊதிய மாற்றத்துக்காக நடைபெற்ற கூட்டுக்குழுவில் சம்பளம் எவ்வளவு என்பதை நாம் முடிவு செய்து கோரிக்கையாக நிர்வாகத்துக்கு வைக்க வேண்டாம். ஊதிய மாற்றத்தை விரைந்து முடி என்று மாத்திரம் கோரிக்கை வைப்போம் என்று பிஎம்எஸ் வாதாடியது.

நிர்வாகம் எவ்வளவு தருகிறதோ அதனை கொஞ்சம் கூட்டித்தரச் சொல்லி கெஞ்சிக்கிளறி அதிகம் பெறலாம். நிர்வாகத்திற்கு இவ்வளவுதான் தரவேண்டும் என்று கோரிக்கை எல்லாம் வைக்க வேண்டாம் என்பதுதான் அதன் நோக்கம்.  தொழிலாளி தனக்கு எது தேவை என்பதை வாதாடிப் போராடிப் பெறாமல் கெஞ்சிப்பெற வேண்டும் என்பதுதான் சரியான கொள்கையா?

அப்படிக் கெஞ்சுகின்ற சங்கம் தொழிலாளிக்கு என்ன உரிமையைப் பெற்றுத்தரும்? அதேபோன்று பிஎம்எஸ் பங்குபெறும் சங்கமாக இருந்தபோதுதான் அய்ந்து ஆண்டுகளாக இருந்த ஊதிய ஒப்பந்தம் பத்து ஆண்டுகளாக ஆக்கப்பட்டது, இன்னும் பல்வேறு சலுகைகள் பறிபோயின என்பதையும் மறவாதீர்! சிந்திப்பீர்!

பல பரிவார் அமைப்புகள் பணியாற்றுவதைப்போல தொழிலாளர்துறையில் பிஎம்எஸ் பணியாற்றுகிறது|


டிசம்பர் - 6 என்றதும் நமது நினைவுக்கு வருவது அண்ணல் அம்பேத்கர் அவர்களின்  நினைவுதினம். அந்த நினைவு மக்களுக்கு வந்துவிடக்கூடாது என்று அந்த நாளைத் தேர்ந்தெடுத்து 400 ஆண்டு பழமைவாய்ந்த பாபர் மசூதி என்ற நினைவுச்சின்னத்தை இடித்து நாட்டை மதவெறிக்கடாக்கியவர்களுக்கு நினைவுக்கு வருவது மசூதி இடிப்பு. அதனால்தான் அம்பேத்கருடைய வரலாற்றிலிருந்து அந்தக் காலத்தில் பார்ப்பனரல்லாதாரின் கல்வி நிலைபற்றியும் அக்கல்வி பற்றி பிஎம்எஸ்ஸின் புருடா பற்றியும் எழுதியிருந்தோம்.  

அதேபோல ஒவ்வொரு ஆண்டும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகளில் ஒன்றான விஹெச்பி யின் பெயரிலும் அன்னிய ஆக்கிரமிப்பாளனால் கட்டப்பட்ட அவமானச்சின்னம் அகற்றப்பட்டநாள் என்றும் தேசிய எழுச்சிநாள் என்றும் அடுத்து காசியும் மதுராவும் இடிக்கப்பட வேண்டும் என்றும் அரசியல் சுதந்திரம் ஆகஸ்ட் 15 என்றும் தன்மான சுதந்திரம் டிசம்பர் 6 என்றும் தொடர்ந்து ஒட்டுவார்கள். இந்த ஆண்டு ஒரு வித்தியாசம். விஹெச்பி என்பதற்குப் பதிலாக பேட்ரியாட் என்று போட்டிருந்தார்கள்.

இவர்களுடைய நோக்கம் நாட்டை மதவெறிக்காடாக்கி சிறுபான்மையினரை அச்சத்திலாழ்த்தி பார்ப்பனரல்லாதாரை மதவெறிக்கு பலிகடாவாக்கி பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவுவதே. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்த நாட்டில் இருக்க வேண்டுமானால் இராமனையும் கிருஷ்ணனையும் கடவுளாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியக் குடிமகன் என்ற உரிமையுமின்றி இங்கே வாழவேண்டும் என்று அவர்களை மிரட்டிவைக்க வேண்டும் என்பதே.

இதனை சமூகநல்லிணக்கத்தை விரும்புபவர்களும் மதவெறியை மாய்த்து மனிதநேயம் காக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நிர்வாகம் அவர்களது நடவடிக்கையைக் கட்டுப்படுத்த இதுவரை உருப்படியான எதனையும் செய்யவில்லை. மனிதவளநிர்வாகம் இதுவரை அளித்த பதில் அப்படிச் செய்வது யாரென்று தெரியாது என்று கூறி அவர்களை வளரவிட்டுக்கொண்டிருந்தது.


பிஎம்எஸ்ஸை ஆரம்பித்தது அவர்கள்தான். அதன் பாதுகாவலர்களும் வழிநடத்துவதும் அவர்கள்தான் என்பதில் எள்ளவும் அய்யமில்லை. பிஎம்எஸ் சார்பாக அவர்கள் வெளியிட்ட சங்கதீபம் என்ற இதழ் (அக்டோபர் 1999ல்) இப்படிக்கூறுகிறார்கள். ~நமது தேவையறிந்து ஒரு முழுநேரப்பணியாளரை பிஎம்எஸ் சுக்காக ஆர்எஸ்எஸ் பேரியக்கம் அளித்துள்ளது. அவர்தான் சிறீமான் சங்கரசுப்பிரமணியம். அவரை வாழ்த்தி வரவேற்கிறோம்| என்று அவர்கள் கூறுகிறார்கள். பிஎம்எஸ் சங்கமடல் 2001ல் ~பரிவார் இயக்கங்கள் வவேறு துறைகளில் பணியாற்றி வருகின்றன. கல்வியில், கலை கலாச்சாரத்துறையில், விவசாயத்துறையில், பண்பாட்டுத்துறையில் பல பரிவார் அமைப்புகள் பணியாற்றுவதைப்போல தொழிலாளர்துறையில் பிஎம்எஸ் பணியாற்றுகிறது| என்று கூறுகிறார்கள்.

இப்படி இருக்கும்போது எங்களுக்கும் பிஜேபிக்கும் சம்மந்தமில்லை. எங்களுக்கும் ஆர்எஸ்எஸ்சுக்கும் தொடர்பு இல்லை என்பதெல்லாம் இளம் தொழிலாளர்களை ஏமாற்றி அவர்கள் உறுப்பினராக்கி பின்னர் அவர்களை ஆர்எஸ்எஸ் பணிகளில் ஈடுபடுத்துவதற்கே.  ஆர்எஸ்எஸ் பணி என்பது மதவெறியே. அதனையும் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

 17-8-1997 அன்று பிஎம்எஸ் ஸின் உறுப்பினர்களை சங்கப்பணியில் ஊக்கப்படுத்தும் முகமாக பயிற்சிமுகாம் நடந்ததாக செப்டம்பர் 97 இதழில் தெரியப்படுத்துகிறார்கள். இங்கே சங்கப்பணி என்பது ராஷ்ட்ரிய ஸ்யம் சேவக் கின் பணிதான்.

ஆர்எஸ்எஸ் என்பது மூன்றுமுறை தடைசெய்யப்பட்ட அமைப்பு. அதனை தொழிலாளர் மத்தியில் வளரவிட்டால் மதவெறி தலைதூக்கும். அதனால்தான் அதற்குத் தடைவிதிக்கச் சொன்னோம். இவற்றுக்கெல்லாம் தத்துவரீதியாக பதிலளிக்க முடியாதவர்கள் நாங்கள் கூலிக்கு மாரடிப்பதாகவும் பங்குகளுக்கு பக்கவாத்தியம் வாசிப்பதாகவும் சொல்வது பந்தை அடிக்க முடியாதவன் காலை அடிப்பது போன்றது. கூலிக்கு மாரடிப்பதாக நீ சொல்வது உண்மையானால் உன்னிடம் இல்லாத பணமா? அந்தக் கூலியை நீ தரலாமே! கோடிகள் இட்டழைத்தாலும் அதைத் தொடாமல் உன்னை அம்பலப்படுத்துவோம் என்பது உனக்கும் தெரியுமே!                

தொழிலாளர்களே! வெல்டர்கள் போராட்டத்தை ஆதரித்துப் பேசியதற்காக நடவடிக்கை எடுக்கச் சொல்பவர்கள் தொழிலாளர்களின் தோழர்களா? சிந்திப்பீர்! பங்குபெறாத சங்கக் கூட்டத்திற்கு அழைப்பு ஏதும் இல்லாதபோது அழையா வீட்டு நுழையா விருந்தாளியாகச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால்தான் தேர்தலில் எங்கள் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆதாரமில்லாமல் பேசுபவர்கள் இவர்கள் என்பதற்கு இதுவே ஆதாரம்.    

இவண் : பெல் பெரியார் தொழிலாளர் நல உரிமைச்சங்கம்

இருவருக்கு சார்ஜ் ஷீட் கொடுத்த நிர்வாகம் இவருக்கு ஏன் வழங்கவில்லை?


1992ல் 400 ஆண்டு பழமை வாய்ந்த வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதியை இடித்த நாளைத் தேசிய எழுச்சி தினம் என்று நோட்டீஸ் ஒட்டியது பிஎம்எஸ். 1992க்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 என்றாலே யாருமே நிம்மதியாக வீட்டை விட்டு வெளிவரவே முடியாது. அவ்வளவு பிரச்சினைக்குரிய செயலை ஆதரித்து நோட்டீஸ் ஒட்டுவது என்பது நம் நிறுவன தொழில் அமைதியைப் பாதிக்கக் கூடிய செயல்.

பல மதத்தவர்களும் இனத்தவர்களும் பணியாற்றும் இந்நிறுவனத்தில் சிறுபான்மை மக்களை அச்சத்திலாழ்த்தும் செயல் இது என்பதால் அந்த நோட்டீஸ் ஒட்டியவர் மீது நடவடிக்கை எடு என்று திதொக கோரிக்கை வைத்த உடன் பிஎம்எஸ், எங்களுக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்று சொல்லி இருக்க வேண்டும்.

அல்லது தைரியமாக நாங்கள்தான் அதனை ஒட்டினோம்@ ஆனதைப் பாருங்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். அத்தகைய வீரத்தை அவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு என்று சொல்லும் வகையில் உங்கள் சங்க செயலாளர் வெல்டர்ஸ் அசோசியேசன் பொதுக்குழுவில் பேசினார். அதற்கு ஏன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டு ஆட்காட்டி வேலை செய்கிறது.
எங்கள் செயலாளர் அந்தக் கூட்டத்தில் பேசியது உண்மைதான். அது ஒன்றும் இரகசியக் கூட்டம் அல்ல. அனைவருக்கும் அழைப்பு விடுத்து பொதுவான மண்டபத்தில் ஒலிபெருக்கி வைத்து அனைவருக்கும் கேட்கும் வண்ணம் நடைபெற்ற அக்கூட்டத்தில் வெளிப்படையாக அவர் பேசினார்.

 அவருடைய பேச்சு அனைத்துத் தொழிலாளர்களாலும் வரவேற்கப்பட்டது. அதற்கு முதல் நாள் எங்கள் சங்கத்தின் பெயர் போட்டு போராட்டத்திற்கு ஆதரவாகவும் வெல்டர்ஸ் அசோசியேசன் இல்லாமல் பேச்சுவார்த்தை என்பது நோயாளியை அழைத்துச் செல்லாமல் மருத்துவரிடம் அவருக்கு வேண்டியவர் சென்று மருந்து கேட்பது போலத்தான் முடியுமே தவிர நோய் தீர வழியேற்படாது என்றும் வெல்டர்ஸ் அசோசியேசனையும் வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதுதான் இப்பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்றும் நிர்வாகத்துக்கும் பங்குபெறும் சங்கங்களுக்கும் வேண்டுகோள் வைத்து துண்டறிக்கை வெளியிட்டோம்.

அது அனைத்து வெல்டர்களாலும் குறிப்பாக இளம் வெல்டர்களால் வரவேற்கப்பட்டு ஒருவருக்கொருவர் அது குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. பொதுக்குழுவில் பேசுகின்றபொழுது முதல் நாள் அந்தத் துண்டறிக்கை வெளியிட்டது தங்கள் சங்கம்தான் என்றோää தான் அந்த சங்கத்தின் செயலாளர் என்றோ வெளிப்படுத்தி பிஎம்எஸ் சைப்போல நாங்கள் மட்டுமே உங்கள் போராட்டத்தை ஆதரிக்கிறோம். எங்கள் சங்கத்திற்கு ஆதரவு தாருங்கள் என்றோ ஓட்டுப்போடுங்கள் என்றோ நன்கொடை தாருங்கள் என்றோ பொருள்படும்படிப் பந்தலிலே பாகற்காய் என்ற பாணியில் பேசவுமில்லை. ஆதாயம் தேடவுமில்லை. இது தவறான செயலா? தொழிலாளர்களை இது பாதிக்கச் செய்ததா? பங்குபெறாத சங்கமாக இருக்கும்போதே இதற்காக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் சங்கம் பங்குபெறும் சங்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் எத்தகைய பாதகத்தைச் செய்வார்கள் என்பதைத் தொழிலாளர்களே! புரிந்துகொள்வீர்!
இதுபோல துணிச்சலாக பாபர் மசூதி இடித்த தினத்தை தேசிய எழுச்சிநாள் என்று துண்டறிக்கை ஒட்டியது நாங்கள்தான் என்று ஒத்துக்கொள்ளத் தயாரா?

அக்கூட்டத்தில் பேசிய இருவருக்கு சார்ஜ் ஷீட் கொடுத்த நிர்வாகம் இவருக்கு ஏன் வழங்கவில்லை? இவருக்கும் நிர்வாகத்துக்கும் என்ன தொடர்பு? என்று ஏதோ புலன் விசாரணை செய்து மர்மக்கதை எழுதுகிறது. 21-08-2011 அன்று வெல்டர்ஸ் அசோசியேசன் கூட்டம் நடைபெற்றது. 13-08-2011 தேதியிட்டு எங்கள் சங்கத்துக்கு எதிர்காலத்தில் எப்பொழுதுமே வாயிற்கூட்டம் நடத்த அனுமதியில்லை என்று நிர்வாகம் கடிதம் வழங்கியது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை தவறு என்பதை நிரூபித்துத்தான் மீண்டும் எங்கள் சங்கத்துக்கு வாயிற்கூட்டம் நடத்த அனுமதி பெறப்பட்டது. இதுதான் எங்களுக்கும் நிர்வாகத்துக்கும் உள்ள தொடர்பு. இதனையும் மீறி நிர்வாகத்துடன் எங்களுக்கு என்ன உறவு என்று பிஎம்எஸ் சொல்கிறதோ புரியவில்லை. எனவே தொழிலாளர்களே! புரிந்துகொள்வீர் பிஎம்எஸ்ஸை!  இவண் :

வெள்ளைக்காரன் வந்தபோது முப்பத்து நான்காயிரம் கப்பல்கள் ஓடியதாம். வெள்ளைக்காரன் இந் நாட்டைவிட்டுப் போனபோது 1400 கப்பல்கள் இருந்ததாம்.



ஆர்எஸ்எஸ் ஸின் சங்கமான பிஎம்எஸ் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17,2010 அன்று ஜமுக்காளத்தில் வடிகட்டி ஒரு பொய்யை அவிழ்த்து விட்டது.

வெள்ளைக்காரன் வருவதற்கு முன் இந்த நாட்டில் 70 சதவிகிதம் பேர் படித்திருந்ததாகவும் வங்காளத்தில் மட்டும் 12000 பள்ளிக்கூடங்கள் இருந்ததாகவும் வெள்ளைக்காரன் வந்தபிறகு படித்தவர் எண்ணிக்கை 7 சதவிகிதமாகக் குறைந்து விட்டதாகவும் உலகமகாப் பொய்யை அவிழ்த்து விட்டார்கள்.

70 சதவிகிதம்பேர் படித்திருந்தார்கள் என்றால் யார் படித்தது? பிற்படுத்தப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன் படித்திருந்தானா? பார்ப்பனர் மட்டும் படித்திருந்தார்களா? என்று கேட்டோம். இதுவரை நாணயமான பதில் இல்லை.

அதேபோல 2012 செப்டம்பர் 17லிலும் இன்னொரு பொய்யைத் துணிச்சலாக அவிழ்த்துவிட்டுள்ளார்கள். அக்பர் இந்த நாட்டைக் கைப்பற்றியபோது நாற்பதாயிரம் வணிகக்கப்பல்கள் ஓடியதாம். வெள்ளைக்காரன் வந்தபோது முப்பத்து நான்காயிரம் கப்பல்கள் ஓடியதாம். வெள்ளைக்காரன் இந் நாட்டைவிட்டுப் போனபோது 1400 கப்பல்கள் இருந்ததாம்.

சரி, இருந்ததாகவே வைத்துக்கொள்வோம். அந்தக் கப்பலில் பயணம் செய்தவர்கள் யார்?   வணிகக் கப்பல் என்றால் வைசியர்கள்தான் அதில் பயணம் செய்திருக்க முடியும். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஒரு வைசியர். அவர் பாரிஸ்டர் பட்டப் படிப்புக்காக இலண்டன் செல்ல முயற்சிக்கிறார்.

அப்பொழுது அவருடைய  ஜாதிக்காரர்கள் நம்முடைய இந்து சாஸ்திரப்படிää வைசியன் கடல் தாண்டிப் போகக்கூடாது என்று அவரைத் தடுக்கிறார்கள். அதையும் மீறி அவர் இலண்டன் செல்கிறார். அதனால் அவரை ஜாதியை விட்டே நீக்கி வைக்கிறார்கள்.

இதனை அண்ணல் காந்தியடிகள் தனது சுயசரிதையான சத்தியசோதனையில் தெரிவிக்கிறார்.

ஆக வைசியர் அக்கப்பலில் பயணம் செய்திருக்க வாய்ப்பு இல்லை.
அடுத்து பிராமணர்கள் இக்கப்பலில் சென்றார்களா என்று ஆய்வு செய்தோமானால் அதற்கும் வாய்ப்பு இல்லை. நம்முடைய காஞ்சி ஜெயேந்திர சரசுவதி, சங்கரராமன் என்ற வரதராஜப்பெருமாள் கோயில் மேலாளரை ஏன் போட்டுத் தள்ளினார் தெரியுமா?

சங்கராச்சாரி அப்பொழுது வெளிநாடு போக முயற்சித்தார். இந்து சாஸ்திரங்களின்படி பிராமணர் கடல் தாண்டிப் போகக் கூடாது என்று இருக்கிறது. எனவே, சங்கராச்சாரி வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது என்று தடுத்தார். சங்கரராமனை சங்கராச்சாரி போட்டுத்தள்ளியதற்கு இதுவும் ஒரு காரணம்.

மண்ணுருண்டை மாளவியா என்று ஒருவர் இருந்தார். அவருக்கு அப்பெயர் ஏன் வந்தது? அவர் ஒரு பிராமணர். பிராமணர் வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் இவர் வெளிநாடு செல்ல வேண்டும். அதற்கு ஒரு உபாயம் கண்டுபிடித்தார். அவர் செல்லும்போது இந்திய மண்ணை ஒரு பிடி உருண்டையாக (பிள்ளையாரைப்போல்) பிடித்து தன்னுடன் எடுத்துச் செல்வார். அதாவது அவர் எப்போதும் இந்திய மண்ணில்தான் இருக்கிறாராம். இது அவருடைய கண்டு பிடிப்பு. ஆக பிராமணரும் அக்கப்பலில் பயணித்திருக்க வாய்ப்பில்லை.

எஞ்சியிருப்பது சூத்திரர்களும் தீண்டத்தகாதவர்களும்தான். இந்த நாட்டிற்கு வெள்ளைக் காரன் வந்து பஸ்ஸை ஓட்டினான். பஸ் முதலாளிகள் இந்தியர்கள். அந்த பஸ்ஸில் ஏறுவதற்கு பஞ்சமர்களுக்கு அனுமதியில்லை என்று பஸ் டிக்கட்டின் பின்புறத்தில் அச்சடித்திருந்தான். பெரியாரின் தொண்டரான WPA சவுந்திரபாண்டியநாடார் இராமநாதபும் ஆட்சிமன்றக்குழுத் தலைவராக இருந்தபோது அவ்வாறு பஸ் டிக்கட்டில் அச்சடித்திருப்பதை எடுக்கவில்லையென்றால் பஸ் பெர்மிட் ரத்து செய்யப்படும் என்று அறிவித்த பிறகுதான் அது நீக்கப்பட்டது என்பது தொன்னூறு ஆண்டுக்கு முன்பு உள்ள வரலாறு.

ஆக பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் பஞ்சமன் யாருமே பயணம் செய்திருக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிறது. யார் அந்த 40000 கப்பலில் பயணம் செய்தது? பொய் சொல்லவும் ஒரு துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் பிஎம்எஸ் காரர்களுக்கு நிறையவே உள்ளது. அதற்காக அவர்களைப் பாராட்டி புருடா மன்னர் சங்கம் என்ற பட்டத்தை வழங்கி கவுரவிக்கலாம்.
இவண் :

படித்தவர்கள் எல்லோரும் செத்துப் போய்விட்டார்களோ? அல்லது இந்த நாட்டை விட்டு ஓடிவிட்டார்களோ தெரியவில்லை.


ஆர்எஸ்எஸ் ஸின் சங்கமான பிஎம்எஸ் (புருடா மன்னர்கள் சங்கம்) தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-2010 அன்று ஜமுக்காளத்தில் வடிகட்டி ஒரு பொய்யை அவிழ்த்து விட்டது. வெள்ளைக்காரன் வருவதற்கு முன் இந்த நாட்டில் 70 சதவிகிதம் பேர் படித்திருந்ததாகவும் வங்காளத்தில் மட்டும் 12000 பள்ளிக்கூடங்கள் இருந்ததாகவும் வெள்ளைக்காரன் வந்தபிறகு படித்தவர் எண்ணிக்கை 7 சதவிகிதமாகக் குறைந்து விட்டதாகவும் உலகமகாப் பொய்யை அவிழ்த்து விட்டார்கள். படித்தவர்கள் எல்லோரும் செத்துப் போய்விட்டார்களோ? அல்லது இந்த நாட்டை விட்டு ஓடிவிட்டார்களோ தெரியவில்லை.

அது எவ்வளவு பெரிய பொய் என்பதற்கு அண்ணல் அம்பேத்கர் வரலாற்றிலிருந்து ஆதாரங்களைத் தருகிறோம். அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளில் அதைச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

“அக்காலத்தில் பெறற்கரிய புதையலாகக் கருதப்பட்ட இலக்கியமும் கல்வியும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரித்தாக விளங்கின. இவை இரண்டும் சாதி இந்துக்களுக்கு மறுக்கப்பட்டன. சத்தாராவின் அரசர்கூட இரவில்தான் கல்வி கற்க வேண்டும் என்ற அளவிற்குப் பார்ப்பனர்களின் அதிகாரம் அச்சமூட்டுவதாய் இருந்தது. 1821ல் பூனாவில் சமஸ்கிருதப் பள்ளி ஒன்றை மகாராட்டிர அரசு தொடங்கியது. அப்பள்ளியில் பார்ப்பனர்களைத் தவிர சாதி இந்துக்களும் சேர்த்துக் கொள்ளப் படுவதற்கு பார்ப்பனர்கள் கடுமையான வெறுப்பையும் எதிர்ப்பையும் காட்டினர்.

 பெரும்பாலான பார்ப்பன ஆசிரியர்கள் பள்ளிகளில் இருந்து தங்கள் பதவிகளைத் தூக்கியெறிந்து விட்டு வெளியேறினர். எனினும் சாதி இந்துக்கள் பயில்வதற்கான பள்ளிகள் பையப்பைய அரசினால் நிறுவப்பட்டன. இதனால் பார்ப்பனர் அல்லாதவர்களும் பின்தங்கிய வகுப்பினரும் கல்வியிலும் அரசு வேலைகளிலும் மெல்ல மெல்ல முன்னேறினர். இதற்கான பெருமை பிரிட்டிஷ் அரசையே சேரும்.

சாதி இந்துக்களுக்கே இந்த ஈனகதி என்றால் தீண்டத் தகாத வகுப்பு மக்களின் நிலை எவ்வாறு இருக்கும்? அவர்கள் இந்தத் துறைகளில் இடம் பெறவே இல்லை. கல்வியில் இவர்கள் நெடுந்தூரம் பின்தங்கி இருந்தனர். தீண்டத் தகாதவர்களுக்குக் கல்வி தருவதன்மூலம் பார்ப்பனர்களின் பகையைத் தேடிக்கொள்ள ஆங்கிலேய ஆட்சி விரும்பவில்லை.

 அதனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி அளிப்பதில எப்போதும் நழுவல் போக்கும் திசை திருப்பல் முயற்சியுமே அரசிடம் இருந்தது. மேலும் அக்காலத்தில் ஆசிரியர்கள், பள்ளி ஆய்வாளர்கள், கல்வி அலுவலர்கள் ஆகிய அனைவருமே பார்ப்பனர்கள். வெகு மக்களுக்கு கல்வி தருவது என்ற சிந்தனையையே இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

கிறிஸ்தவ மத நிறுவனங்கள் இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். இவர்களுக்கு ஓர் உள்நோக்கம் இருந்தாலும் தாழ்ந்த சாதியினருக்கும் தீண்டப்படாத வகுப்பு மக்களுக்கும் கல்வி வழங்கிடத் தொடங்கினர். சாதி இந்துக்கள் படிக்கும் பள்ளிகளில் தீண்டப்படாத வகுப்புக் குழந்தைகள் சேர்க்கப்படவில்லை. பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாட் 1883ல் தாழ்த்தப்பட்டவர்களுக்கெனப் பள்ளிகளை நிறுவினார். இந்தப் பள்ளிகளில் இந்துக்கள் எவரும் ஆசிரியராகப் பணியாற்ற முன் வராததால் முஸ்லிம் ஆசிரியர்களைக் கொண்டே நடத்த வேண்டி இருந்தது”            
 ---(தனஞ்செய்கீர் எழுதிய அண்ணல் அம்பேத்கர் வரலாறு பக்கம் 5,6,7)
               
இந்த இலட்சணத்தில் எழுபது சதவிகிம் பேர் யார் படித்திருப்பார்கள்? பார்ப்பனர்கள் வேண்டுமானால் படித்திருக்கலாம். வேறு யாராவது படித்திருக்க முடியுமா? நோட்டீஸ் மேல் நோட்டீஸ் போடும் பிஎம்எஸ் இதற்கு பதில் சொல்லுமா?   இது கடந்த ஆண்டு வெளியிட்ட துண்டறிக்கை. இதுவரை பதில் இல்லை. இனியாவது பதில் சொல்லுமா பிஎம்எஸ்?

இவண்: 6-12-2011       திராவிடர் தொழிலாளர் கழகம்

கிரஹப்பிரவேசம்



நம்முடைய மக்கள் குடியிருக்க வீடு கட்டும்போது பார்த்துப்பார்த்துக் கட்டுகிறார்கள். உயர்ந்த வகை சிமென்ட், செங்கல், கம்பி, இரும்பு, உயர்ந்த வகையில் பளபளப்பான கிரானைட் கற்கள், உயர்ந்தவகை வண்ணம் எல்லாவற்றிலும் உயர்ந்ததையே தேர்ந்தெடுத்து மிகச்சிறப்பாக வீட்டைக் கட்டினாலும் கிரஹப்பிரவேசம்னு ஒண்ணச் செய்யலேன்னா அவங்களுக்கு நிம்மதியே இருக்காது.

புகையே படக்கூடாது என்பதற்காக கேஸ் அடுப்பு, இன்டக்ஷன் அடுப்பு, சோலார் அடுப்பு  வைத்துக் கட்டப்பட்ட வீட்டில் பளபளப்பான கிரானைட் கற்கள் பதித்த தளத்தில் பார்ப்பானைக் கூட்டிவந்து மூன்றடி உயரத்துக்கு செங்கல்லை அடுக்கி விறகுச் சுள்ளிகளைப் போட்டு புகையை உண்டாக்கி எல்லோரையும் இரும வைத்து, சாகப்போற பசுமாட்ட ஓட்டிவந்து ஒண்ணுக்கடிக்க வச்சு சாணியக் கழிய வச்சு சமஸ்கிருதத்தில புரியாத மந்திரத்தச் சொல்லி பசு மூத்திரம், சாணம், பால், தயிர் இவற்றுடன் தண்ணீரைக் கலக்கி கோமியம் என்ற பெயரால் வீட்டைக்கட்டிக் குடிபுகும் தம்பதியரைக் குடிக்க வைப்பார்கள்.

அதுவும் விடியக்காலம் நாலரை டு ஆறு என்று டயம் போட்டு சொந்தக்காரனையும் கஷ்டப்படுத்தி வரவச்சு கிரஹப் பிரவேஷம் பண்ணினாத்தான் ஷேமமா இருக்க முடியும்னு பார்ப்பான் சொல்றத நம்பிக்கிட்டு இவ்வளவும் செய்தால்தான் நிம்மதி ஏற்படுது. இது எதுக்காகன்னு யாருக்காவது தெரியுமா?

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் யாருக்காவது நூறு வருஷத்துக்கு முன்ன மாடிவீடு, மச்சுவீடு இருந்ததுன்னு நிரூபிச்சா ஒரு லட்சம் பரிசு தரப்படும்னு திராவிடர் தொழிலாளர் கழகம் அறிவிச்சு ஏழு மாசம் ஆச்சு. இன்னமும் அந்தப் பரிசினை வாங்க யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அப்படியென்றால் நூறு வருஷத்துக்கு முன்ன மாடிவீடு மச்சு வீடு உள்ளவர்கள் நம்முடைய தொழிலாளர்களில் யாரும் இல்லை என்பதுதானே இதன் பொருள்?
நூறு வருஷத்துக்கு முன்னால நம்ம நாட்டில மாடிவீடு மச்சு வீடு யாரு கட்டியிருப்பாங்க? ராஜாக்கள், ஜமீன்தார்கள் அரண்மனையில் வாழ்ந்தார்கள். அடுத்து அக்கிரஹாரத்திலும் முன்னேறிய ஜாதியினரின் குடியிருப்புக்களிலும் மாடிவீடு மச்சு வீடு இருந்திருக்கும். அந்த வீட்டைக் கட்டிக்கொடுத்த தொழிலாளிகள் கொத்தனார்ää சித்தாள்ää ஆசாரிää வண்ணம் தீட்டுபவர் எல்லாம் நம்ம பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட மக்கள்தானே?
அப்படி நமது மக்கள் வேலை செய்ததால் அந்த வீடு தீட்டாகி இருக்குமாம். அந்தத் தீட்டைப் போக்கத்தான் இந்த கிரஹப்பிரவேசம்.

மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 124 இவ்வாறு சொல்கிறது@    
~வீடு முதலானவற்றிற்கு சண்டாளாதிகளால் அசுத்தம் நேரிட்டபோது விளக்குதல் மெழுகுதல் கோமூத்திரம் தெளித்தல் கொஞ்சம் மேல் மண்ணை எடுத்துப்போடுதல் பசுமாட்டை ஒரு நாள் வசிக்கும்படிச் செய்தல் இவ்வைந்தினால் அப்பூமி பரிசுத்தப்படுத்தப்படுகிறது|.
(சண்டாளாதிகள் - கீழ்ஜாதிக்காரர்கள்)

இது உழைக்கும் நமது பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துகின்ற செயலா? இல்லையா? இதனை அறியாமல் நம்முடைய மக்கள் இலட்சக்கணக்கில் செலவு செய்து வீட்டைக்கட்டிää பார்ப்பனரை அழைத்து கிரஹப்பிரவேசம்ää கணபதிஹோமம் இவையெல்லாம் செய்வது நம்முடைய உழைக்கும் மக்களை நாமே இழிவுபடுத்துவதாகாதா?

இவ்வாறு உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதுதான் மனுதர்மம். அந்த மனுதர்மத்தைச் சட்டமாக ஆக்க வேண்டும் என்று சொன்னவர் திலகர். அந்தத் திலகர் பிறந்தநாளில் அவரது கொள்கையை அமுல்படுத்த ஆரம்பிக்கப்பட்டதுதான் பாரதீய மஸ்தூர் சங்கம் (பிஎம்எஸ்).

இவர்கள்தான் உழைப்பவர்களுக்கு உரிமை பெற்றுத் தந்த மே தினத்தைத் தொழிலாளர் தினமாக ஏற்றுக் கொள்ளாமல் இந்த மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்கிறார்கள்.
எனவே, தொழிலாளர்களே! நாம் கொண்டாட வேண்டிய தொழிலாளர் தினம் மே தினமா? விஸ்வகர்மா ஜெயந்தியா? சிந்திப்பீர்! மனுவாதிகளுக்கு தக்க பதிலடி தாரீர்!

பகவத் கீதையையும் பகவான் கண்ணனையும் நம்புவதாகச் சொல்லிக்கொண்டு


இப்பொழுது சாமியார்களும் ஆர்எஸ்எஸ் காரர்களும் ஊழல்ää கறுப்புப்பணம் என்று சொல்லி உத்தம வேடம் பூண்டுகொண்டு உண்ணாவிரதம்ää போராட்டம் என்று சண்டித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கே பிஎம்எஸ் காரர்களும் போராட்டம் அது இது என்று பாவ்லா செய்து வருகிறார்கள். இவர்கள் எல்லோருமே பகவத் கீதையையும் பகவான் கண்ணனையும் நம்புவதாகச் சொல்லிக்கொண்டு அதனைப் பரப்புவதைப் பிறவிக்கடனாகக் கொண்டு நடப்பவர்கள்.  

கீதையில் கண்ணன் என்ன சொல்கிறார்?

~~எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும். எதைக் கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு? எது இன்று உன்னுடையதாக இருக்கிறதோ, அது நாளை வேறொருவருடையதாக இருக்கிறது. எது வேறொருவருடையதாக இருக்கிறதோ, அது நாளை உன்னுடையதாக இருக்கும்|| என்று பகவான் சொல்வதாக அச்சடித்து அதுதான் கீதையின் சாரம் என்று அலுவலகம், கடை, வீடு எல்லா இடத்திலும் வைக்கப்பட்டுள்ளது.

நடந்தது, நடப்பது, நடக்கப் போவது எல்லாமே நன்றாக இருக்கிறது என்று கண்ணனே கூறிவிட்ட பிறகு இவர்கள் எதற்காகக் கூச்சல் போட வேண்டும்? கீதையையும் கண்ணனையும் இவர்கள் நம்பவில்லை  என்பதைத்தானே இது காட்டுகிறது? அத்துடன் கண்ணன் மேலும் கூறுகிறார்:

~எங்கு தர்மம் அழிந்து, அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கு நான் அவதரித்து தர்மத்தைக் காப்பேன்| என்று சொல்கிறார்.
புராணங்களில் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குவதாகச் சொல்லப்படும் போதெல்லாம் தேவர்கள் கடவுளிடம் சென்று முறையிடுவார்கள். உடனே பகவான் இப்பூமியில் அவதரித்து தர்மத்துக்கு எதிரானவர்களை ஒழித்து அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

இந்தக் காவிக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதை நம்பக்கூடியவர்கள்தானே? இவர்கள் என்ன செய்ய வேண்டும்? பகவானிடம் சென்று பஜனை செய்து இப்பூமியில் தர்மம் அழிந்து விட்டது. அதர்மம் தலைதூக்கிவிட்டது. உடனே இங்கு அவதரித்து இந்த ஊழல், கறுப்புப்பணம் எல்லாவற்றையும் ஒழித்துக்கட்டு பகவானே! என்று முறையிட வேண்டியதுதானே?

அதைச்செய்யாமல் உண்ணாவிரதம், போராட்டம் என்று நடத்தினால் என்ன பொருள்? அவர்களே இதை நம்பவில்லை என்பதுதானே? இவர்கள் நம்பாத பகவத் கீதையைத்தான் எல்லோரும் நம்பவேண்டும் என்கிறார்கள். அந்த பகவத் கீதை மீது சத்தியம் செய்துதான் நீதிமன்றத்திலேயே சாட்சி சொல்ல வேண்டுமாம்.

எந்தக் காலத்திலும் பகவான் அவதாரம் எடுத்ததும் கிடையாது, இனி எடுக்கப் போவதும் கிடையாது. முன்பு அவதாரம் எடுத்ததாகச் சொல்வதெல்லாம் வெறும் ஏமாற்று. இவர்களுக்குப் பிடிக்காதவர்களை சூழ்ச்சி செய்து இவர்களே ஒழித்து விட்டு பாமர மக்களை ஏமாற்ற பகவானே அவதாரம் எடுத்து வந்து ஒழித்து விட்டார் என்று கதை கட்டி விடுவார்கள்.

இப்பொழுது அது மாதிரியெல்லாம் செய்ய முடியாது. ஏனெனில் தந்தை பெரியார் இந்த மண்ணில் தோன்றி இந்த அவதாரங்களின் பித்தலாட்டத்தையெல்லாம் தோலுறித்துக் காட்டிவிட்டார். அவர் தோற்றுவித்த இயக்கம் இருக்கிறது. அவர் ஊட்டிய உணர்வு இருக்கிறது. அவை இருக்கும்வரை பகவானும் அவதரிக்க முடியாது. பார்ப்பனப் பம்மாத்தும் இனிப் பலிக்காது. அவதாரம் எடுத்தது பகவானா? பார்ப்பானா என்று சோதித்தால் எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும். எனவே  தமிழர்களே! இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!!
இவண் :        

செவ்வாய், 29 நவம்பர், 2016

ஆயுதபூஜை உண்மையிலேயே தொழிலையும் தொழிலாளியையும் பெருமைப்படுத்துகிறதா? இழிவுபடுத்துகிறதா?


நம்முடைய அர்த்தமுள்ள(?) இந்துமதத்தில் தொழிலாளர்கள் அனைவரும் சூத்திரர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சூத்திரர் என்றால் மனுதர்மத்தில் விபச்சாரி மகன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த மனுதர்மம்தான் இந்தியாவில் எந்த அரசன் ஆண்டாலும் ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளாக நம்முடைய நாட்டில் சட்டமாக இருந்தது.

இந்த நாட்டை வெள்ளைக்காரன் கைப்பற்றியதாலும் அண்ணல் அம்பேத்கர் சட்டத்தை எழுதியதாலும் மனுதர்மம் இன்று சட்டமாக இல்லை. என்றாலும் இந்துலா விற்கு அந்த மனுததர்மம்தான் அடிப்படையாக இன்றும் உள்ளது. அந்த மனுதர்மம் குஜராத்தில் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்தை அகற்றிவிட்டு  மனுதர்மத்தை இந்தியா முழுமைக்கும் சட்டமாக ஆக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பல் முயன்று வருகிறது.

அந்த மனுதர்மத்தின்படிதான் நமது நாட்டில் எந்தத் தொழில் வளமும் பெருகவில்லை.

ஜாதிவாரியாகத் தொழில்களும் தொழிலாளர்களும் பிரிக்கப்பட்டு ஒருவனுக்கு அந்தத் தொழில் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தனது தந்தையின் தொழிலையே செய்யக் கட்டாயப் படுத்தப்பட்டான். விருப்பமில்லாத தொழிலை எவனாவது ஈடுபாட்டுடன் செய்ய முடியுமா?

தந்தை என்ன தொழில் செய்தாரோ அதே தொழிலைச் செய்யும் மகன் தந்தை பயன்படுத்திய அதே கருவியினையே பயன்படுத்தினான். தந்தை எந்த உளியினால் தச்சு வேலை செய்தாரோ அதே உளியினால்தான் மகனும் தச்சு வேலை செய்தான்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மாதிரியான கலப்பையை நம்முடைய மக்கள் பயன்படுத்தினார்களோ அதே மாதிரி கலப்பையைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் பயன்படுத்தினார்களே தவிர இயந்திரக் கலப்பை என்ற ஒன்றே அவசியமில்லாமல் போய் விட்டது.

அதே போலத்தான் ஒவ்வொரு தொழிலும் நடந்தது. அதனால் புதிய கருவிகள் அவனுக்குத் தேவைப்படவில்லை. தேவைதான் புதிய கண்டுபிடிப்புக்களின் தாய் என்பார்கள். அந்தத் தேவை இல்லாததால் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் அவசியம் இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் நமது நாட்டில் எந்த விதமான இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. புதிய தொழில்வளமும் பெருகவில்லை.
அத்துடன் நமது நாடு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. ஆனால் அந்த விவசாயத்தைப் பாவமான தொழில் எனகிறது மனுதர்மம்.

“சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது. ஏனெனில் இரும்பை முகத்திலேயுடைய கலப்பையும் மண்வெட்டியும்ää பூமியையும் பூமியிலுண்டான பலபல ஜந்துக்களையும் வெட்டுகிறதல்லவா?” என்று மனுதர்மம் பத்தாவது அத்தியாயம் 84வது சுலோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அதனால்தான் பார்ப்பான் நிலத்துக்குச் சொந்தக் காரனாக இருந்தாலும் ஏர்பிடித்து உழுகின்ற தொழிலைச் செய்ய மாட்டான். அப்படியானால் புவ்வாவுக்கு பார்ப்பான் என்ன செய்ய வேண்டுமாம்! அதையும் மனுதர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 112 இவ்வாறு சொல்கிறது

“பிராமணன் வேறு ஒன்றினாலும் உயிர் வாழ முடியாத போது சிலத்தினாலாவது அல்லது உஞ்சத்தினாலாவது ஜீவிக்கலாம். பிச்சை வாங்குவதைவிட சிலம் மேலானது. அதைவிட உஞ்சம் மேலானது” என்கிறது அந்த மனுதர்மம்

சிலம் என்றால் என்ன? உஞ்சம் என்றால் என்ன?

வயலில் சிந்தின கதிர் நெல்லைப் பொறுக்குவது சிலம். சிந்தின தனி நெல்லைப் பொறுக்குவது உஞ்சம். (இதனால்தான் உஞ்சிவிருத்திப் பார்ப்பான் என்று சொல்கிறார்களோ)

இப்படிப் பொறுக்கித் தின்றவர்களால் உருவாக்கப்பட்டதுதான் மனுதர்மம். இந்த மனுதர்மத்தைச் சட்டமாக்கத் துடிப்பவர்கள்தான் தொழிலாளிக்கும் தொழிலுக்கும் மரியாதை தருவதாகக் கூறி ஆயுத பூஜை என்று கொண்டாடச் சொல்கிறார்கள். இந்த ஆயுதபூஜை உண்மையிலேயே தொழிலையும் தொழிலாளியையும் பெருமைப்படுத்துகிறதா? இழிவுபடுத்துகிறதா? ஆயுதபூஜை தேவையா? சிந்திப்பீர்!

தீண்டாமை என்ற சொல்லில் தீமை இருக்கிறது



தீண்டாமை என்ற சொல்லில் தீமை இருக்கிறது. இந்தத் தீண்டாமை உலகத்தில் வேறு எங்குமே இல்லாதது. எந்த மதத்திலும் இல்லாதது. இந்து மதத்தில்மட்டுமே உள்ளது. கிறிஸ்துவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தால் கைகுலுக்கிக் கொள்வார்கள். முஸ்லிம்கள் ஒருவருடன் ஒருவர் சகோதரனே என்று சொல்லி ஆரத்தழுவிக்கொள்வார்கள். இந்துக்கள் நமஸ்காரம் என்றோää கும்புடுறேங்க என்றோ கைகூப்புவது ஏன் தெரியுமா? தொட்டால் ஒட்டிக் கொள்ளும் என்ற தீண்டாமை உணர்வால்தான்.

அதனால்தான் ~வணக்கம் என்பது நம்மை அந்நியப்படுத்தும். கைகுலுக்குவோம்| என்றார் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி.

அந்தத் தீண்டாமை சேமகரமானது என்றார் செத்துப்போன காஞ்சிபுரத்து சாமிநாத சங்கராச்சாரி. உலகத்தில் உயர்ந்த சோப்புப் போட்டுக் குளித்தாலும் உடம்பில் உள்ள அழுக்கு மட்டும்தான் போகும். பிறிவியிலுள்ள அழுக்குப் போகாது என்றார் பூரி சங்கராச்சாரி.

இந்த சங்கராச்சாரிகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதனால் அவர்கள் எங்கள் பிரதிநிதிகள் அல்ல என்றார்கள் பிஎம்எஸ் காரர்கள். அந்த பிஎம்எஸ்ஸின் குருநாதர் ~லோகமான்ய| பாலகங்காதர திலகர். அவரை பிஎம்எஸ் காரர்கள் மறுக்க மாட்டார்கள் என்று நம்புவோம். அந்தத் திலகர் பெருமான் அரசியலில் நுழைவதற்கு முன் காங்கிரஸ் கட்சியின் மாநாடுகளில் மாநாடு முடிந்த அடுத்த நாள் சமூக சீர்திருத்த மாநாடு நடத்துவார்கள். அதில் விதவைத்திருமணம் குழந்தைத்திருமணம் உடன்கட்டை ஏறுதல் தீண்டாமை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்று பேசுவார்கள்.

இது திலகர் பெருமானுக்குப் பிடிக்கவில்லை. நம்ம விவேகானந்தருக்கும் பிடிக்கவில்லை. இதுமாதிரி சீர்திருத்தம் பேசுபவர்களோடு சேராதீர் என்றார் விவேகானந்தர். திலகர் பெருமான் காங்கிரஸ் மாநாட்டிற்குப்பிறகு சீர்திருத்த மாநாடு நடத்தினால் மாநாட்டுப் பந்தலையே தீ வைத்துக் கொளுத்தி விடுவோம் என்று மிரட்டினார். 1895ல் பூனாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுப் பந்தலுக்குள் நுழைய தீண்டத்தகாதவர்களை திலகருடைய ஆட்கள் அனுமதிக்காததால் தீண்டத்தகாதவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அது மட்டுமல்ல. காஞ்சி சுப்பிரமணிய சங்கராச்சாரி கொலை, கற்பழிப்பு கேசில் ஜெயிலுக்குப் போனபோது ஒரு பிராமணன் சமைச்சாத்தான் சாப்பிடுவேன் என்று சொன்னதை ஏற்று ஜெயில் நிர்வாகம் ஒரு பிராமண போலீஸ்காரரை விட்டு சமைக்கச் சொன்னது. அதே மாதிரி ஏன் அதையும் தாண்டி கல்கத்தா செல்லும்போது. அங்கே உள்ள பிராமணர் சமைத்ததையே சாப்பிட மறுத்து தன்னுடைய ஊரிலிருந்து ~சித்பவன்| பிராமண சமையல்காரரை உடன் அழைத்துச் செல்வாராம் திலகர். அவ்வளவு தீண்டாமை வெறி!

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் முதலாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு பெற்றுக் கொடுத்த தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனித் தொகுதி முறையை முதலில் ஆதரித்த அன்றைய தாழ்த்தப்பட்ட தலைவரான எம்சி.இராசா என்பவர் டாக்டர் மூஞ்சே அவர்களின் தூண்டுதலால் பின்னர் எதிர்த்தார். அந்த மூஞ்சே யாரென்றால் 1925ல் நாகபுரியில் அய்ந்துபேர் கூடித் துவக்கப்பட்டதே ஆர்எஸ்எஸ், அந்த அய்வரில் ஒருவர்தான் டாக்டர் மூஞ்சே. 1991ல் வி.பி.சிங் அமுல்படுத்திய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து அவரது ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் பிஜேபியினர்.

இப்படி பச்சையாக தீண்டாமை வெறிபிடித்த தலைவர்களைக் குருநாதராகக் கொண்டாடும் பிஎம்எஸ்ää இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பிஜேபிää ஆர்எஸ்எஸ் ஸின் சங்கமான பிஎம்எஸ்ää தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாய்ப்புத் தருகிறோம் என்று பிரச்சாரம் செய்வது அந்த மக்களை ஒன்றுமறியாத முட்டாள்கள் என்று கருதிக்கொண்டு அந்தப் பிரச்சாரத்தைச் செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த மக்களுக்கு வரலாற்றைச் சொல்லித் தருவோம். அவர்கள் விரிக்கும் வலையில் விழாமல் தடுப்போம்!

ஏமாற்றாதே! ஏமாற்றாதே!!

ஏமாறாதே! ஏமாறாதே!!


இத்தனை ஆண்டுகள் இல்லாத கரிசனம் இந்த சுதந்திரநாளின்மீது ஏன் வந்தது?



சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆனது? இவர்கள் சங்கம் துவக்கி எத்தனை ஆண்டுகள் போனது? இத்தனை ஆண்டுகள் இல்லாத கரிசனம் இந்த சுதந்திரநாளின்மீது ஏன் வந்தது? எப்படி வந்தது? சுதந்திரத்துக்கு இவர்கள் ஆற்றிய பணி என்ன? சுதந்திரநாளில் இவர்களின் குருநாதர்கள் என்ன செய்தார்கள்? இவையெல்லாம் கேள்விக்குறிகள்.

இவர்களின் குருநாதர் திலகர் சுதந்திரத்தைப்பற்றி என்ன கருத்துக் கொண்டிருந்தார்? சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று சொன்னவர் ~இந்த நாட்டுக்குச் சுதந்திரம் வந்தால் மனுதர்மம்தான் சட்டமாக இருக்க வேண்டும் என்றவர். ஜனநாயகத்தின்மீது நம்பிக்கையற்றவர். கற்றறிந்த பிராமணர்களின் ஆலோசனையோடு மன்னர்கள் ஆட்சி நடத்த வேண்டும் என்று சொன்னவர். செக்கு ஆட்டுபவனும் பீடாக்கடைக்காரனும்ää சலவைத் தொழிலாளியும் மற்றவர்களும் தேர்தலில் நின்று சடச்சபைக்குச் செல்ல வேண்டும் என்று ஏன் ஆசைப்படுகிறார்கள்? அவர்களெல்லாம் அவரவர் குலத்தொழிலைச் செய்ய வேண்டுமே தவிர நாட்டை ஆள ஆசைப்படக்கூடாது என்றவர்.

அவர் அரசியலில் நுழைந்ததே படுபிற்போக்குத்தனமான காரியத்திற்காகத்தான். மனுதர்மத்தின்படி ஒரு பெண்ணுக்கு எட்டு வயதுக்குள் திருமணம் செய்து கொடுத்து விடவேண்டும் என்ற இந்துமத ஆச்சாரத்தின்படி அப்பொழுது திருமணம் நடைபெற்று வந்தது. இதுவே காட்டுமிராண்டித்தனமான செயல். அப்படி எட்டு வயதில் திருமணம் செய்த பெண்ணை முப்பது வயது முரடன் உடலுறவு கொண்டான். அந்தக் கொடூரச்செயலால் அந்தப் பிஞ்சு இறந்துபோனது. இதைப்பார்த்த வெள்ளை அரசாங்கம் திருமணம் ஆனாலும் ஒரு பெண்ணுக்கு பத்து வயது ஆகுமுன் அப்பெண்ணுடன் கணவன் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தை எதிர்த்து தீவிர அரசியலில் இறங்கிய படுபிற்போக்குவாதிதான் திலகர். அதற்குப் பிறகு காங்கிரசில் நுழைந்து காங்கிரஸ் பந்தலுக்குள்ளேயே தீண்டத்தகாதவர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் அப்படி மீறி அனுமதித்தால் பந்தலையே கொளுத்திவிடுவோம் என்று மிரட்டிய ஜாதி வெறியர்தான் திலகர்.

இந்த திலகரும் கோட்ஷேயும், சாவர்க்கரும், ஹெட்கேவரும் இன்னும் பல ஆர்எஸ்எஸ் தலைவர்களும் மராட்டிய சித்பவன் பார்ப்பனர்கள். இந்த சித்பவன் பார்ப்பனர்கள்தான் மராட்டிய வீரனான சிவாஜியை சூத்திரன் என்பதற்காகப் பட்டம் கட்டவிடாமல் செய்து அவனை சத்திரியனாக்குவதாகக் கூறி யாகங்களையும் வேள்விகளையும் செய்து தங்கமும், வைரமும், வைடூரியமும் தானமாகப்பெற்று சிவாஜியை திவால் ஆக்கினவர்கள். சிவாஜிக்குப் பிறகு மராட்டிய அரசியலைக் கைப்பற்றி அங்கே ஜாதிவெறியையும் தீண்டாமையையும் தாண்டவமாடச் செய்தவர்கள். இவர்கள் கேட்ட சுதந்திரம் என்பது வெள்ளைக்காரன் தங்களிடம் நாட்டை ஒப்படைத்து மீண்டும் பார்ப்பன ராஜ்யத்தை உருவாக்குவதே.

அப்படிச் செய்யாமல் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைத்ததால் ஆத்திரமடைந்து சுதந்திர நாளையே துக்கநாளாகக் கொண்டாடினார்கள். அன்றைய தினம் ஜெர்மனிய ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடியை ஏற்றியவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள். கோட்ஷே தனது பத்திரிகையில் தலையங்கப் பகுதியை கறுப்பு மையால் இட்டு நிரப்பி தனது எதிர்ப்பைக்காட்டினான்.

அந்த திலகரின் வழிவந்த பிஎம்எஸ் இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இப்பொழது திடீரென்று சுதந்திர நாளைக் கொண்டாடுவதாக அறிவிப்பதே ஒரு நாடகம். இவர்கள் கூறும் தியாகிகள் பட்டியலில் காந்தியைக் காணோமே ஏன்? அவர் சுதந்திரத்துக்குப் பாடுபடவில்லையா? காந்தியைக் கொன்ற கூட்டம் அவர் படத்தை எப்படிப் பயன்படுத்தும்?

இவர்கள் ஜனநாயகத்தை நம்பாதவர்கள். அம்பேத்கர் எழுதிய இன்றைய அரசியல் சட்டத்தை ஏற்காதவர்கள். இந்த நாட்டை இந்து நாடாக மாற்ற வேண்டும் என்று துடிப்பவர்கள். அந்த இந்து ராஜ்யத்தில் பிற்படுத்தப்பட்டவனுக்கும் தாழ்த்தப்பட்டவனுக்கும் கல்வி தரக்கூடாது, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்ற கொள்கை கொண்டவர்கள். முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் இந்த நாட்டில் வாழ வேண்டுமானால் இராமனையும் கிருஷ்ணனையும் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பவர்கள்.

இப்படிப்பட்டவர்களின் பசப்பு வார்த்தையை நம்பி மோசம் போகாதீர் என்று தொழிலாளர்களை பணிவுடன் வேண்டுகிறோம்.


பிள்ளையார் பிறந்தநாளுக்கு விடுமுறையாம்



பிள்ளையார் பிறந்தநாளுக்கு விடுமுறையாம்.

இது என்ன காலத்தின் கொடுமை. 2014ம் ஆண்டுக்கு விடுமுறை விடப்பட்டது. அதனால் என்ன விளைவுகள் வரும் என்பதை எடுத்துச்சொல்லி திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக அனைத்துப் பணிக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் கொடுத்து நேரிலும் பேசினோம். நாம் எடுத்துக் கூறிய காரணத்தின் நியாயத்தை உணர்ந்துகொண்ட அனைத்துப் பணிக்குழு உறுப்பினர்களும் 2015ம் ஆண்டில் விடுமுறைப் பட்டியலில் இருந்து விநாயகர் சதுர்த்தியை நீக்கி விட்டார்கள். நமது சார்பாக அனைவருக்கும் நன்றி தெரிவித்தோம்.

ஆனால் தற்பொழுது 2016ம் ஆண்டிற்கான விடுமுறைப் பட்டியலில் விநாயகர் சதுர்த்தியை இணைத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இது உண்மையா? என்பது தெரியவில்லை. உண்மையாக இருக்குமானால் இது மிகவும் வருத்தத்திற்குரியது.

மதப் பண்டிகைகளிலேயே மற்ற பண்டிகைகளுக்கும் விநாயகர் சதுர்த்திக்கும் ஒரு வேறுபாடு உண்டு. மற்ற பண்டிகைகளை மதநம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே தங்கள் வீடுகளிலோ வழிபாட்டுத் தலங்களிலோ யாருக்கும் எந்த இடைய10றும் இல்லாமல் கொண்டாடுவார்கள்.

ஆனால் இந்த பிள்ளையார் சதுர்த்தி மட்டும் மதவெறியர்கள் கைகளில் சிக்குண்டு அது மதவெறியைத் தூண்டுவதற்கான கருவியாகப் பயன்படுகிறது. உண்மையான பக்தர்கள் மிகச்சிறிய பிள்ளையார் பொம்மையை களிமண்ணால் செய்து தங்கள் வீட்டு கிணற்றிலோ குளங்களிலோ கரைத்துவிட்டுப் போய்விடுவார்கள். அவ்வளவுதான்.

ஆனால் இப்பொழுது மதவாதிகள் அதைக் கையிலெடுத்து 50 அடி 60 அடி என்று பிள்ளையார் பொம்மைகளைச் செய்து வீதிக்கு வீதி மூலைக்கு மூலை சந்துக்கு சந்து என்று நான்கு நாள் அய்ந்து நாள் என்று வைத்து ஊர்வலம் செல்வதாகப் பெயர்பண்ணி எங்கெல்லாம் மசூதி இருக்கிறதோ எங்கெல்லாம் இஸ்லாமியர் அதிகம் குடியிருக்கிறார்களோ அங்கெல்லாம் ஊர்வலமாகச் சென்று இஸ்லாமியருக்கு எதிராக முழக்கமிட்டு மதக்கலவரத்தைத் தூண்டி வருகிறார்கள். அவர்களிடம் பக்தி என்பது எதுவும் கிடையாது. அவர்களிடம் இருப்பது மதவெறியே!

இந்த விநாயருக்கு விடுமுறை விடுவது என்பது அத்தகைய மதவெறியர்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக அமையுமே தவிர இதனால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. விருப்ப விடுப்பு நான்கு நாள் வருவதால் தொழிலாளர்களுக்கு அதனால் இலாபம்தான். ஏற்கனவே நான்கு நாட்கள் விருப்ப விடுப்பு விடப்பட்டதற்கான ஆதாரங்களும் நம்மிடம் இருக்கின்றது. கடந்த 2011ம் ஆண்டு நமக்கு நான்கு நாட்கள் விருப்ப விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த விருப்ப விடுப்பு இருந்தால் எத்தனையோ ஈட்டிய விடுப்புக்களும் மருத்துவ விடுப்புக்களும் தொழிலாளர்களுக்கு மீதம் ஆகக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது.

தனக்குத் தேவையான நாட்களில் ஊழியர்கள் விருப்ப விடுப்பினை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. அதைவிடுத்து ஏன் மதப் பண்டிகைக்கு விட வேண்டும். ஏதாவது ஒரு விடுமுறை விட்டுத்தான் ஆக வேண்டும் என்றால் இந்நிறுவனம் இங்கு அமைவதற்குக் காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளுக்கு விடலாமே!
நாட்டில் இன்னும் மதவாத செயல்கள் தலைவிரித்தாடுகின்றதே. சகிப்பின்மை பற்றி பாராளுமன்றமே முடங்கும் அளவுக்கு நாட்டில் பிரச்சினை எழுந்துள்ள நிலையில் அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதுபோல் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை விடத்தான் வேண்டுமா?

அனைத்து உறுப்பினர்களும் இதனை ஒத்துக் கொள்ளாமல் ஒரு சிலர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள் என்கிறபோது பெரும்பான்மை என்று கூறி இதனை அமுல்படுத்துவது சரியாக இருக்குமா என்பதை பணிக்குழு உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் நிர்வாகம் கொடுக்கும் நெருக்கடிக்கு இடம் தர வேண்டாம் என்றும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக திராவிட இயக்கத்தைச் சார்ந்த பணிக்குழு உறுப்பினர்கள் இதனைப் பரிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று உரிமையுடன் கேட்டு;கொள்கிறோம்.



உயர்திரு நா.சக்திநாகலிங்;கம் அவர்கள்                      14.12.2013                 பணிக்குழு உறுப்பினர்;                                                                                    
  பெல் அய்என்டியுசி                                          
  பாரத மிகுமின் நிறுவனம்ää                                                          
  திருச்சி -14.

மதிப்பிற்குரிய அய்யா, வணக்கம்!
தொழிலாளர்களின் அமோக ஆதரவுடன் பணிக்குழுவில் தாங்கள் ஆற்றி வரும் பணியினை வெகுவாகப் பாராட்டுகிறோம். தொழிலாளர் நலனில் அக்கறையுடன் தாங்கள் செய்துவரும் பணிகளுக்கு என்றென்றும் எங்கள் ஆதரவு உண்டு.

இவ்வாண்டு (2014) நமது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறைபற்றி எங்களது ஆலோசனைகளைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம் நமது திருச்சி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வழங்கப்பட்ட விடுமுறையில் விநாயகர் சதுர்த்தி இதுவரை இடம் பெற்றதில்லை. இவ்வாண்டு எப்படியோ அது இடம் பெற்றுள்ளது. அது தொழிலாளர் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

எனவே, அது குறித்து எங்கள் கருத்தினை தாங்கள் பரிசீலிக்குமாறு வேண்டுகிறோம். விநாயகர் சதுர்த்தியினை நமது ஊழியர்களில் குறிப்பாக இந்துக்களேகூட அதிகம் கொண்டாடுவதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. அதனால் அன்று வழங்கப்படும் விடுமுறை எல்லோருக்கும் பயனுடையதாக இருக்காது.

அத்துடன் இந்தக் காலக்கட்டத்தில் விநாயகரை வைத்து மதவாதிகள் நாடெங்கிலும் மதக்கலவரத்தைத் தூண்டி வருகிறார்கள். இதனால் சமூக நல்லிணக்கம் கெடுவதுடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் நாட்டில் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை விடுவது அத்தகைய மதவாதிகளுக்கும் மதவெறியைத் தூண்டிக் குளிர்காய நினைப்பவர்களுக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி விடும்.

அத்துடன் விடுமுறைப்பணி (ர்ழடனையல றுழசம) சிலருக்குக் கிடைக்கும் என்றாலும் அது எல்லோருக்கும் கிடைப்பதற்கான வழிமுறைகள் இல்லை. உற்பத்திப்பிரிவில் பணியாற்றக்கூடிய ஒருசிலர் மட்டுமே அதனால் பயனடைவர். அலுவலகஙகளிலும் மற்ற பல துறைகளிலும் பணியாற்றக்கூடிய எந்த ஊழியருக்கும் அதனால் பயனில்லை. உற்பத்தித்துறையிலும்  நிர்வாகம் நினைத்தால் மட்டுமே அனைவருக்கும் விடுமுறைப்பணி கிடைக்கும்.

ஆனால் அதற்குப் பதிலாக ஒரு விருப்ப விடுப்பு வழங்கப்படுமேயானால் ஊழியர்கள் எப்பொழுது தங்களுக்கு விடுப்புத் தேவையோ அப்பொழுது எடுத்துக்கொள்ளலாம். கடைநிலை ஊழியர் முதல் நிர்வாக இயக்குனர் வரை அனைவருக்கும் அது பயன்படும். அனைத்து விடுப்புக்களுடனும் இணைந்து எடுக்கக் கூடியது விருப்ப விடுப்பு மற்றும் அரைநாள் சாதாரண விடுப்பு   (1/2 DAY CL) அத்துடன் ஈட்டிய விடுப்பு அல்லது மருத்துவ விடுப்பு, தொகுப்பு விடுப்பு ஆகியவை எடுக்கும்போது சனி மற்றும் திங்கள் கிழமைகளின் இடையில் வரும் ஞாயிற்;றுக் கிழமையும் அதனால் அடிபடும். விருப்ப விடுப்பு இருந்தால் அதில் ஒரு விடுப்பு பாதுகாக்கப்படும்.

எனவேää இவ்வளவு பயனுள்ள விருப்ப விடுப்பினை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே அனைத்து ஊழியர்களுக்கும் நன்மை தரும் என்பதால் இவ்வாண்டு அறிவிக்கப்பட்டுள்ள விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ரத்து செய்து விட்டு அனைவருக்கும் பயனுள்ள விருப்ப விடுப்பினை வழங்கவும் பழைய நடைமுறையே தொடரவும் நடவடிக்கை எடுத்தால் அனைத்து ஊழியர்களும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள் என்ற ஆலோசனையை முன்வைக்கிறோம்

அதற்கு ஆவன செய்யுமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி!
           இப்படிக்கு

ம.ஆறுமுகம்
தலைவர்

செ.பா.செல்வம்
பொதுச்செயலாளர்

நகல் :
1) அனைத்து பணிக்குழு உறுப்பினர்கள்



பிள்ளையார் விடுமுறையை ரத்து செய்து அனைவருக்கும் பயன்படக் கூடிய விருப்ப விடுப்புக் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்


National & Festival holidays for the year 2016 


S.NO
FESTIVAL NAME
DATE
DAY
1
PONGAL
15.01.2016
FRIDAY
2
THIRUVALLUVAR DAY
16.01.2016
SATURDAY
3
REPUBLIC DAY
26.01.2016
TUESDAY
4
GOOD FRIDAY
25.03.2016
FRIDAY
5
TAMIL NEW YEAR DAY
14.04.2016
THURSDAY
6
INDEPENDENCE DAY
15.08.2016
MONDAY
7
VINAYAKAR CHATHURTHI
05.09.2016
MONDAY
8
BAKRID
13.09.2016
TUESDAY
9
AYUDHA POOJA
10.10.2016
MONDAY
10
DEEPAVALI
29.10.2016
SATURDAY

NOTE: In addition, TWO (2) Optional Holidays may be availed by the employees after obtaining prior permission of the Competent authority.

National & Festival holidays for the year 2017 


S.NO
FESTIVAL NAME
DATE
DAY
1
PONGAL
14.01.2017
SATURDAY
2
REPUBLIC DAY
26.01.2017
THURSDAY
3
TAMIL NEW YEAR DAY
14.04.2017
FRIDAY
4
MAY DAY
01.05.2017
MONDAY
5
INDEPENDENCE DAY
15.08.2017
TUESDAY
6
VINAYAKAR CHATHURTHI
25.08.2017
FRIDAY
7
BAKRID
02.09.2017
SATURDAY
8
AYUDHA POOJA
29.09.2017
FRIDAY
9
GANDHIJAYANTHI
02.10.2017
MONDAY
10
DEEPAVALI
18.10.2017
WEDNESDAY
11
CHRISTMAS
25.12.2017
MONDAY

NOTE: In addition, ONE (01) Optional Holidays may be availed by the employees after obtaining prior permission of the Competent authority.

2014ம் ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை விடப்பட்டது. அதனால் என்ன விளைவுகள் வரும் என்பதை எடுத்துச்சொல்லி திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக அனைத்துப் பணிக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் கொடுத்து நேரிலும் பேசினோம். நாம் எடுத்துக் கூறிய காரணத்தின் நியாயத்தை உணர்ந்துகொண்ட அனைத்துப் பணிக்குழு உறுப்பினர்களும் 2015ம் ஆண்டில் விடுமுறைப் பட்டியலில் இருந்து விநாயகர் சதுர்த்தியை நீக்கி விட்டார்கள். நமது சார்பாக அனைவருக்கும் நன்றி தெரிவித்தோம்.

ஆனால் 2016ம் ஆண்டிற்கான விடுமுறைப் பட்டியலில் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை அறிவித்திருந்தார்கள். அப்பொழுது கேட்டதற்கு வழக்கமாக விடப்படும் விடுமுறைகள் எல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் வருவதால் இந்த ஆண்டு பிள்ளையார் சதுர்த்திக்கு விடுமுறை அறிவித்துள்ளோம். அடுத்த ஆண்டு இதனை மாற்றி விடுகிறோம் என்றார்கள். ஆனால் தற்பொழுதும் 2017ம் ஆண்டு விடுமுறைப் பட்டியலிலும் அதே பிள்ளையார் சதுர்த்தி இடம் பெற்றிருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியது.

திமுக, அண்ணா திமுக, ஐஎன்டியுசி சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இடம் பெறும் பணிக்குழுவில் பிள்ளையாருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது தொடர வேண்டுமா? நிறுவனம் ஆரம்பித்ததிலிருந்து இடம் பெறாத பிள்ளையார் இப்பொழுது மட்டும் தொடர்ச்சியாக இடம் பெறுவது நியாயமா?

2014ல் கேட்டபொழுது 4 விருப்ப விடுப்பு வருகிறது. அதனால்தான் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டது என்றார்கள். 2015ல் அதை நீக்கியவர்கள் மீண்டும் 2016ல் காரணமில்லாமல் சேர்த்தார்கள். இந்த ஆண்டு 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 11 நாட்கள் விடுமுறை எதற்காக? 10 நாள் மட்டுமே விடுமுறை இருந்தால் 2 விருப்ப விடுப்பு கிடைக்கும் அல்லவா?

விருப்ப விடுப்புக்கள் இருந்தால் எவ்வளவு நன்மை என்பதனை அனைத்து ஊழியர்களும் அறிவார்கள். தொடர்ச்சியான ஈட்டிய விடுப்பு அல்லது தொகுப்பு விடுப்பு எடுக்கப்படும்போது விருப்ப விடுப்பு இருந்தால் ஈட்டிய விடுப்பும் தொகுப்பு விடுப்பும் பாதுகாக்கப்படும். அவை இரண்டும் நமக்கு ஒரு சேமிப்பு. பணி ஓய்வின்போது பணமாகக் கிடைக்கும்போது  எவ்வளவு கூடுதல் தொகை கிடைக்கும் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

தெரிந்திருந்தும் Holiday Work கிடைக்கும் என்பதால் விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு ஒத்துக்கொண்டோம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத சப்பைக்கட்டு.  Holiday Work எத்தனை பேருக்குக் கிடைக்கும்? 2000 பேருக்குக் Holiday Work  கிடைக்காது. ஆனால் விருப்ப விடுப்பு தொழிலாளி அதிகாரி என அனைத்துப் பணியாளர்களுக்கும் கிடைக்கும்.

எல்லோருக்கும் பயனுள்ள விருப்ப விடுப்பை ஒழித்து விட்டு ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படக் கூடிய விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பது மதவெறியர்களுக்கு வேண்டுமானால் இனிக்கலாமே தவிர மற்றவர்களுக்கு அதனால் எந்தப் பலனும் இல்லை. எனவேää இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. பணிக்குழு உறுப்பினர்கள் மீண்டும் கலந்து பேசி அதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

உங்களுக்கு பக்தி என்பதுகூட இருக்கலாம். அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் பிள்ளையார் என்பது இன்றைக்கு அரசியலுக்குப் பயன்படக்கூடிய ஒரு கருவியே தவிர அதனைப் பயன்படுத்துபவர்கள் யாரும் பக்திக்காகப் பயன்படுத்துவதில்லை. தமிழர்களுக்கோ தமிழர் பண்பாட்டிற்கோ சிறிதும் தொடர்பில்லாத வடநாட்டிலிருந்து தமிழர்மீது திணிக்கப்பட்ட பண்பாட்டுத் திணிப்பின் ஒரு வடிவம்தான் பிள்ளையார். பிள்ளையாரைப் பற்றிப் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் கதைகளெல்லாம் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் சம்மந்தமில்லாதது என்றாலும் அதனைப் பற்றிச் சொல்லப்படும் ஒரே ஒரு கருத்தைப் பதிவு செய்வது அனைவருக்கும் பயனளிக்கும் என்று கருதுகிறோம்.

பிள்ளையாரை புராணங்கள் முருகனின் அண்ணன் என்கிறது. அண்ணனான பிள்ளையாருக்கு தமிழ்நாட்டில் கோயில்கள் இருக்கிறது. ஊர்வலம் நடக்கிறது. கணபதிää கணேசன் என்றெல்லாம் நம் தமிழர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் தம்பியான முருகனுக்கு வடநாட்டில் எங்காவது கோயில் உண்டா? திருவிழா உண்டா? குறைந்தபட்சம் தமிழர்கள் கணபதிää கணேசன் என பெயர் வைத்திருப்பதைப் போல வடநாட்டான் யாருக்காவது முருகன்ää வேலன்ää பழனி என்கின்ற பெயர்கள் இருக்கிறதா?

இதிலிருந்தே இந்தப் பிள்ளையார் என்பது தமிழர்களுக்கு சம்மந்தமில்லாத கடவுள் என்பதும் வடநாட்டிலிருந்து தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது என்பதும் புரியவில்லையா?

தமிழனுடைய மொழி வடநாட்டானால் அழிக்கப்படுகிறது. தமிழனுடைய கலாச்சாரம் வடநாட்டானால் ஒழிக்கப்படுகிறது. பக்தியில்கூட தமிழனின் வழிபாடு அழிக்கப்பட்டு வடநாட்டானுடைய கடவுள்களைத் தமிழன் தலையில் கட்டி தமிழனை மேலும் வடநாட்டானுக்கு அடிமையாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு பணிக்குழு உறுப்பினர்கள் பலியாவதோடு அனைத்துத் தொழிலாளர்களையும் பலிகடாவாக்க வேண்டுமா? என்பதைச் சிந்தித்து இந்தப் பிள்ளையார் விடுமுறையை ரத்து செய்து அனைவருக்கும் பயன்படக் கூடிய விருப்ப விடுப்புக் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று பணிக்குழு உறுப்பினர்களை உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

சமச்சீர் கல்வியை ஒழித்து விட்டு எல்லோரும் CBSE க்கு மாறிவிட்டால் எல்லோருக்கும் IIT,IIM,AIMS நிறுவனங்களில் இடம் கிடைக்குமா?



ஒரு காலத்தில் கல்வி என்பது வேத இதிகாச புராணங்கள் மட்டும்தான். அந்தக் கல்வி என்பது பார்ப்பனரல்லாத யாருக்கும் தரப்படவில்லை.

 சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே. சூத்திரன் படித்தால் நாக்கை அறு. காதில் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று. நெஞ்சில் தேக்கி வைத்திருந்தால் நெஞ்சைப்பிள என்ற காட்டுமிராண்டித்தனமான சட்டத்தைப் போட்டிருந்தார்கள். பார்ப்பனருக்கு மட்டுமே கல்வி வழங்கப்பட்டது.

 ராஜேந்திர சோழன் காலத்திலே எண்ணாயிரம் என்ற கிராமத்தில் சமஸ்கிருதப் பாடசாலையில் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்கள் படிக்க வசதி செய்து தரப்பட்டது. அதற்காக ஆயிரக்கணக்கான வேலி நிலங்களை ராசேந்திர சோழன் பார்ப்பனர்களுக்கு வழங்கியிருந்தான். அதனால்தான் அவனது ஆயிரமாவது பதவியேற்பு ஆண்டுவிழாவை RSS தமிழ்நாட்டில் கொண்டாடியது.

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கன் பத்தாயிரம் பேர் படிக்க சமஸ்கிருதப்பாடசாலை அமைத்தான்.

அதில் பார்ப்பனர் மட்டுமே படித்து வந்தனர். அவனது ஆட்சிக் காலத்தில் ஒரு சூத்திரன் வேதத்துக்குப் பொருள் கேட்டான் என்பதால் அவனது ஆசனவாயில் பழுக்கக் காய்ச்சின இரும்பைச் சொருகி சூத்திரன் வேதத்துக்குப் பொருள் கேட்டால் அதற்கு இதுதான் பொருள் என்றான் மன்னனின் தலைமை ஆலோசகன்.

இப்படிக் கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்விக் கண்ணைக் கொடுத்தவர் காமராசர். அதன்மூலம் ஓரளவு தமிழன் கல்வி அறிவு பெற்றாலும் தமிழகத்தில் பல்வேறு கல்வி முறைகள் இருந்தன. CBSE, Anglo indian, Matriculation,  Secondary Board என்று பல்வேறு பாடத்திட்டத்தால் கல்வியில் ஏற்றத்தாழ்வு நிலவியது. அதனை மாற்றியமைத்து எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி முறையைக் கொண்டுவந்து சமமான சீரான கல்வித் திட்டத்தை கலைஞர் அரசு கொண்டு வந்தது. அதனால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இனத்துப் பிள்ளைகள் பலரும் பயன்பெற்றார்கள். மருத்துவக் கல்லூரியிலும், பொறியியல் கல்லூரியிலும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்துப் பிள்ளைகள் ஏராளமான அளவில் சேர்ந்தார்கள்.

எல்லோருக்கும் கல்வி கொடுப்பதை ஏற்காதவர்கள் பார்ப்பனர்கள். அனைவரும் சமமாக இருப்பதையும் ஏற்காதவர்கள் அவர்கள். மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறையைப் புகுத்தி பார்ப்பனர் மட்டுமே ஆக்கிரமித்திருந்த மருத்துவக் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் நுழைவதா? என்ற ஆத்திரத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அதனைப் பயன்படுத்தி சமச்சீர் கல்வியை ஒழிக்கப் பார்த்தார்கள்.

நீதிமன்றம் சென்றும் மூக்குடைபட்டு சமச்சீர் பாடத்திட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதால் வேறு வழியில்லாமல் இன்று நாடு முழுவதும் சமச்சீர் பாடத்திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆர்எஸ்எஸ் கும்பல் பெல் நிறுவனத்திலும் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்கிறது. எல்லோரையும் CBSE பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்கச் சொல்கிறது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் தமிழ் படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தி படித்தால் வடநாட்டில் வேலைகிடைக்கும் என்று இந்தியைப் படிக்கச் சொல்கிறார்கள். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் வடநாட்டுக்காரனெல்லாம் ஏன் தமிழ்நாட்டில் வந்து பானிபூரி விற்கிறான் என்றால் அதற்கு எவனும் பதில் சொல்வதில்லை.

தமிழில் வணக்கம் என்பதுகூட மறைந்து நமஸ்காரம்ஜி என்று பேச ஆரம்பித்து விட்டான்கள். அண்ணா, தம்பி, மாமா, மச்சான் என்று உறவுமுறை சொல்லி அழைத்த தமிழன் வயதில் மூத்தவர்களை அய்யா என்று அழைத்தான். அதையெல்லாம் அழித்து விட்டு இப்பொழுது யாரைப் பார்த்தாலும் ஜி போட ஆரம்பித்து விட்டான்.

இந்த இலட்சணத்தில் சமச்சீர் கல்வியை ஒழித்து விட்டு எல்லோரும் CBSE க்கு மாறிவிட்டால் எல்லோருக்கும் IIT,IIM,AIMS நிறுவனங்களில் இடம் கிடைக்குமா? மிகவும் தகுதி திறமையோடு படித்து வந்த ரோஹித் வெமுலா போன்ற மாணவர்களையே படாதபாடு படுத்தி தற்கொலை செய்ய வைக்கிறது காவிக்கும்பல். IIT யில் பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர் பலர் தற்கொலை செய்துகொண்டு சாகின்றனர்.

இந்நிலையில் சமச்சீர் கல்வியை ஒழித்துவிட்டு CBSE க்கு மாற்றச் சொல்ல BMS; க்கு அதிகாரத்தைக் கொடுத்தது யார்? MATRICULATION பள்ளியை CBSE க்கு மாற்றச் சொல்லும் BMS; பாய்லர் பிளான்ட் பெண்கள் மற்றும் ஆண்கள் பள்ளியையும் இராமகிருஷ்ணா பள்ளியையும் CBSE க்கு; மாற்றச் சொல்லிக் கேட்கவில்லையே ஏன்?  சாமியார்கள் கோபித்துக்கொள்வார்கள் என்பதாலா? பங்குபெறும் சங்கமாக ஆவதற்கு முன்பே இப்படிப்பட்ட நிலையை எடுக்கிறதென்றால் பங்குபெறும் சங்கமானால் தமிழர்களை முழுக்க வடநாட்டானுக்கும் பார்ப்பானுக்கும் அடிமைப்படுத்த மாட்டார்களா? தோழர்களே! எச்சரிக்கை!

சமச்சீர் கல்வியை ஒழித்துக்கட்டச் சொல்வது அறிவுள்ளவன் செய்யும் செயலா?



Matriculation School ma;  CBSE School Mf ஆக மாற்றச் சொல்லி விட்டு நாங்க ஒன்னும் சமச்சீர் கல்வியைக் குறைத்து மதிப்பிடவில்லை என்றுBMS  சொல்வது பித்தலாட்டம்.  RSK யில் இடம் கிடைக்கவில்லை என்றால் அங்கே இடங்களை அதிகப்படுத்து! அனைவருக்கும் இடம் கொடு என்று கேட்காமல் சமச்சீர் கல்வியை ஒழித்துக்கட்டச் சொல்வது அறிவுள்ளவன் செய்யும் செயலா?

 பங்குபெறும் சங்கங்கள் அதற்கான முயற்சி எடுத்து LCS ஊழியர் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் இடம் வாங்கிக் கொடுத்து விட்டார்களா? இல்லையா? தொழிலாளிகள் மீது ரொம்ப அக்கறை உள்ளவன்போல நடிக்க எதையாவது உளறிக் கொட்டிவிட்டு மாட்டிக் கொண்ட உடன் ரொம்ப ரொம்ப யோக்கியன் மாதிரி நடிக்கிறதுதான் உன் பரம்பரைப்புத்தி.

இதைச்சொன்னால் நாங்கள் யாருக்கோ கூலிக்கு மாரடிக்கிறோம் என்கிறாய். யாரிடம் கூலிபெற்றோம்? உன்னைப் போல அம்பானியிடமும் அதானியிடமுமா கூலிபெற்றோம்? எங்களது சொந்த செலவில் எங்கள் வீட்டு சோற்றைத் தின்றுவிட்டு சமுதாயப்பணி செய்கிற எங்களைப்பார்த்து கூலிக்கு மாரடிப்பவர்கள் என்பது பித்தலாட்டம்.

ஏற்கனவே நாங்கள் சவால் விட்டோம் “நாங்கள் கூலி வாங்குவதை நீ நிரூபித்தால் எங்கள் சங்கத்தைக் கலைத்து விடுகிறோம். இல்லையென்றால் உனது சங்கத்தைக் கலைத்துவிடத் தயாரா? என்று கேட்டோம். அதனை இன்னும் நீ நிரூபிக்கவும் இல்லை. உங்கள் சங்கத்தைக் கலைக்கவும் இல்லை. அதெல்லாம் மானம்ää ரோஷம் உள்ளவன் செயல் என்கிறாயா?

உன்னுடைய BMS திலகர் பிறந்தநாளில் தொடங்கப்பட்டதாகப் பெருமையாகக் கூறுகிறீர்களே! அந்தத் திலகர் என்ன கூறினார்?
தொடக்கக் கல்விக்குப்பின் இடைநிலைக் கல்வியைத் தொடர வேண்டாம் என்று தீண்டத் தகாத மக்களுக்குக் திலகர் ஆலோசனை கூறினார். இதன்மூலம் தீண்டத் தகாத மக்களின் ஜாதித் தொழில்களை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பதை நம்பிய திலகர்ää அவர்களுக்கு உயர் கல்வி அளிக்கப்படுவதை எதிர்த்தார். இவ்வாறு பார்ப்பனர் மட்டுமே படிக்க வேண்டும். பார்ப்பனரல்லாதார் தொடக்கக் கல்விக்கு மேல் படிக்கக் கூடாது என்று சொல்லும் பார்ப்பனக் கூட்டத்துக்குக் கைக்கூலியாக இருக்கும் நீங்களா எங்களைப் பார்த்து கூலிக்கு மாரடிக்கிறோம் என்பது?

அடுத்து விவேகானந்தருக்கு விழா எடுக்கிறீர்களே! அவர் என்ன தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களெல்லாம் IIT, AIMS, NITஎல்லாவற்றிலும் சேர்ந்து படிக்க வேண்டும் என்கிறாரா?
~ஸகஜம்கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத்| என்ற கீதை வாக்கியத்தைச் சொல்லி மீனவன் மீனவனாகவும், குயவன் குயவனாகவும், விவசாயி விவசாயியாகவும்தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறாரா? இல்லையா? (ஆதாரம் : பெல் நிர்வாகம் வழங்கிய பாரதமே உயிர்த்தெழு)

அதே நூலில் ஒரு சக்கிலியன் ஒரு பிராமணனைப் பார்த்து ~உங்களால் செருப்புத் தைக்க முடியுமா? என்னால்தான் நாட்டை ஆள முடியுமா?| என்று கேட்பதுபோல் கேட்டு செருப்புத் தைப்பவனுக்கு நாட்டை ஆள்வதைப் பெருமையாகச் சொல்லாமல் செருப்புத் தைப்பதைப் பெருமையாகச் சொல்கிறாரே!
அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி தன் மகனை IIT,AIMS,IIM எல்லாவற்றிலும் சேர்ந்து படிக்கவைக்க உன்னுடைய RSSஒத்துக் கொள்கிறதா?

அங்கே பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வந்தபோது உன்னுடைய RSS குடும்ப அமைப்பான ABVP என்ன செய்தது?

நீங்களெல்லாம் படிக்க இங்கே வந்துவிட்டால் செருப்புத் தைப்பது யார்? வீதி கூட்டுவது யார்? என்று கூறி வீதியில் விளக்குமாற்றைப் பிடித்துக்கொண்டு போராடவில்லையா?

அப்படிப்பட்ட அமைப்பின் கைக்கூலியான நீ ஏதோ அனைத்துத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் மேல்படிப்புக்காக உருகுவதுபோல் நடிப்பது யாரை ஏமாற்ற?

இதற்கு ரொம்ப ரோஷமாகப் பதில் சொல்லும் நீ ஏற்கனவேBJP க்கும் உனக்கும் சம்மந்தமில்லை என்று சொன்னபோது BJP சார்பாக ரங்கராஜன் குமாரமங்கலம், சுகுமாறன் நம்பியார், லலிதா குமாரமங்கலம் எல்லோரும் தேர்தலில் நின்றபோது வாயிற்கூட்டம் ஏற்பாடு செய்து கொடுத்தாயா? இல்லையா? என்று கேட்டதற்கு ஏன் இதுவரை பதில் சொல்லவில்லை?

அவர்களிடம் வாங்கிய கூலி இன்னும் உங்கள் வாயில் அடைத்துக் கொண்டிருக்கிறதா?

1997க்குப் பிறகு இதுவரை ஒரு தேர்தலிலும் ஜெயிக்காத நீங்கள் உங்கள் அலுவலகத்தை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு இருப்பது ஏன்? நிர்வாகம் இழுத்துப் பூட்டி உங்களை வீதியில் துரத்திய பிறகு எதைக் காட்டி அந்த அலுவலகத்தை கூலியாக மீண்டும் பெற்றாய்? உனக்கு மானம் வெட்கம் சூடு சொரணை ஒழுக்கம் நாணயம் ஏதாவது ஒரு குண்டூசி முனையளவாவது இருந்தால் அந்த அலுவலகத்தைக் காலி செய்து விட்டு மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று அதன் பிறகு அந்த அலுவலகத்தைப் பயன்படுத்து.