வெள்ளி, 16 செப்டம்பர், 2016

வந்தே மாதரம் தேசபக்தியை ஊட்ட எழுதப்பட்ட பாடலா?



சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசபக்தர்களுக்கும், தூக்குக்கயிற்றில் தொங்கியவர்களுக்கும் உயிர்கொடுத்த மந்திரச்சொல் வந்தே மாதரம். தன்னிகரில்லா பாரதத் தாயின்மீது பக்தியையும் அன்பையும் தூண்டி எழுச்சியைத் தோற்றுவிக்கும் வந்தேமாதர தேசிய கீதத்தை முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் பாட மறுக்கிறார்களே ஏன்?| | என்பது இந்து முன்னணிää ஆர்எஸ்எஸ் சங்பரிவாரங்களின் நீண்டநாள் குற்றச்சாட்டுக்களுள் ஒன்றாக இருந்துவருகிறது.

வந்தே மாதரம் என்ற பாடல் வங்க மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்ட: ‘ஆநந்தமடம்’ என்ற நாவலில் வரக்கூடிய பாடலாகும். 1882ம் ஆண்டு எழுதப்பட்ட அந்த நாவலை 1908ம் ஆண்டு மஹேசகுமாரசர்மா என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அதற்கு முன்னுரை எழுதியவர் சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யர். வந்தே மாதரப் பாடலை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் பாரதியார். மறுபதிப்பாக 2000த்தில் வெளியிட்டவர் நல்லி குப்புசாமி செட்டியார்.

அந்த நாவல் 1770 கால கட்டங்களில் வங்கத்தில் ஏற்பட்ட நிகழ்வைக்கொண்டு எழுதப்பட்டதாக பங்கிம் சந்திர சட்டர்ஜி குறிப்பிடுகிறார். 1771ல் வங்கத்தில் கடுமையான பஞ்சம் ஏற்படுகிறது. பஞ்சத்தினால் பலர் மாண்டு போகிறார்கள். 1772ää 1773லும் பஞ்சம் தீரவில்லை. 1774ல் நல்ல மழை பெய்கிறது. ஈசன் கிருபையால் பெய்ததாக பங்கிம் சந்திரர் குறிப்பிடுகிறார். அது ஈசன் கிருபை என்றால் பஞ்சமும் ஈசன் கிருபைதானே? ஆனால் அன்றைக்கு வங்கத்தை ஆண்ட முஸ்லிம் அரசர்கள்தான் அந்தப் பஞ்சத்திற்குக் காரணம் என்று கூறி அந்த முஸ்லிம் அட்சியை ஒழிக்க வேண்டும் எனபதற்காக வை~;ணவ சந்தானம்’ என்ற படை அமைக்கப்படுகிறது. அந்தப் படைக்குக் குருவாக சத்யானந்தர் என்பவர் இருக்கிறார். அந்தப் படையில் பெரும்பாலும் பார்ப்பனர்களே இருக்கிறார்கள்.
மக்கள் அப்பொழுது நல்ல முட்டாள்களாக இருந்திருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. பஞ்சம் வந்தபோது பட்டினியால் மாண்ட மக்கள் நல்ல விளைச்சல் இருந்தபோது தின்னத் தெரியாமல் அதிகமாகத் தின்று அஜீரணத்தால் செத்துப் போகிறார்கள். அந்த முட்டாள் மக்களிடம் சென்று வி~;ணுபூஜை செய்கிறீர்களா என்று வை~;ணவ சந்தானப் படையினர் கேட்பார்களாம். அப்படிக் கேட்டுக் கொண்டே 20ää30 பேர் கூட்டமாகச் சேர்ந்து சென்று முஸ்லிம்கள் வீட்டைக் கொள்ளையடிப்பார்களாம். அவர்கள் வீடுகக்குத் தீ வைப்பார்களாம். கொள்ளையடித்த பொருட்களை புதிதாய் வந்த வி~;ணு பக்தர்களுக்குக் கொடுப்பார்களாம். அப்படித்தான் அவர்கள் படையில் ஆட்களைச் சேர்த்திருக்கிறார்கள்.

மகேந்திரன் என்பவன் நல்ல பணக்காரன். காயஸ்தா ஜாதியைச் சேர்ந்தவன். அவனிடம் ஏராளம் செல்வம் இருக்கிறது. அவனுடைய கிராமத்திலுள்ளோர் பலர் பஞ்சத்தால் மாண்டு போனார்கள். இவர்களுக்கு வேலை செய்ய ஆட்களில்லை. அதனால் அவன் பட்டணம் வருகிறான். வரும் வழியில் தனது மனைவி மற்றும் மகளைப் பிரிகிறான். அவனிடம் இருக்கும் பணத்தையும் செல்வத்தையும் வை~;ணவப் படைக்கு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுத்த எண்ணி அவனைப் படையில் சேர்க்கிறார்கள். அவன் அவர்களிடம் பல கேள்விகள் கேட்கிறான். அதன்மூலம் நமக்குப் பல உண்மைகள் புலப்படுகின்றன. அவனைப் பல இடங்களில் மூளைச் சலவை செய்கிறார்கள். ‘முஸ்லிம் ராஜா நிர்வாகத் திறமை இல்லாமல் இருப்பதாகவும் அதனால்தான் நாட்டில் மக்கள் பஞ்சத்தாலும் பட்;டினியாலும் துன்பப்படுகிறார்கள் என்றும் கூறி நமது மதம் போயிற்றுää ஜாதி போயிற்றுää மானம் போயிற்றுää குலம் போயிற்று என்று வெறுப்பேற்றி அந்தக் குடிகேடர்களை ஒழிக்க வேண்டும்’ என்று வெறி உண்டாக்குகிறார்கள்.

வந்தேமாதரம் என்ற பாடல் பாரதமாதாவைக் குறித்துப் பாடப்படுவதாகவும் தேசபக்தி உள்ளவர்கள் அனைவரும் அதனைப்பாட வேண்டும் என்றும் அவ்வாறு பாட மறுப்பவர்கள் தேசபக்தி அற்றவர்கள் என்றும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கும்பல் இன்னமும் சொல்லி வருகிறது. பாரதமாதா யார்ää அவள் வடிவம் என்ன என்பதைப்பற்றி ஆனந்தமடத்தில் மிகவும் தெளிவாகவே எந்தவித அய்யத்திற்கும் இடமின்றிக் கூறப்படுகிறது.


ஒரு மண்டபத்தில் திருமாலின் இடது தோளில் திருமகள் கூந்தல் அவிழ்ந்து தொங்க நூறிதழ்த் தாமரைப்பூ மாலையணிந்து அச்சத்தால் நடுங்கினவள்போல் நின்றாள். வலது தோளில் கலைமகள் வீணாபுஸ்தக வடிவெடுத்து ராகதாளங்கள் சூழ நின்றாள். திருமாலின் மடியிலே சர்வாங்க சுந்தரமான ஒரு மோகன வடிவம் திருமகளையும் கலைமகளையும் பழிக்கும் எழிலும் செல்வமும் வாய்ந்து வீற்றிருந்தது.

அது யார்? என்று மகேந்திரன் கேட்கிறான். அதுதான் மாதா என்கிறார்கள். அத்துடன் இன்னொரு மண்டபத்திற்கு மகேந்திரனை அழைத்துச் சென்று நல்ல அழகான ஆடைஆபரணங்கள் அணிந்த ஒரு வடிவத்தைக் காட்டுகிறார்கள். இது முன்பிருந்த மாதா என்கிறார்கள். இதுதான் நமது தாய்நாட்டின் வடிவம் என்கின்றனர். பின்னர் இருண்ட சுரங்கத்திற்கு அழைத்துச் சென்று மங்கலான வெளிச்சத்தில் கருமை வடிவமாய் செல்வத்தையெல்லாம் பறிகொடுத்துவிட்டு கட்டத் துணியுமின்றி நிர்வாணமாய் மண்டையோட்டை மாலையாய் அணிந்திருக்கும் ஒரு உருவத்தைக் காட்டுகிறார்கள். அதைப்பார்த்து பயந்துபோய் மகேந்திரன் ஷஷஅய்யோää காளீ|| என்று அலறுகிறான். ஆம்ää காளிதான் இப்படி ஆய்விட்டாள்;; அவள்தான் மாதா. அவளைக் காப்பாற்றத்தான் போராடுகிறோம். அவளை வணங்கி வந்தே மாதரம் சொல் என்கிறார்கள். அவனும் வந்தே மாதரம் என்கிறான். இதுதான் வந்தே மாதரம் பாடலின் வரலாறு.

திருமாலின் மடியில் அமர்ந்திருக்கும் காளி பராசக்திதான் பாரதமாதா வடிவம் என்பது மிகத் தெளிவாகவே அதில் சொல்லப்பட்டுள்ளது. அந்த மாதாவை வணங்கினால்தான் முஸ்லிம்களுக்குத் தேசப்பற்று இருப்பதாகவும் இல்லையேல் அவர்கள் தேசத்துரோகிகள் என்பதாகவும் இன்றும் ஆர்எஸ்எஸ் சங் பரிவார் கூறுவது எவ்வளவு கடைந்தெடுத்த மோசடி என்பது தெளிவாக விளங்குகிறது. உருவ வழிபாட்டையே ஏற்றுக் கொள்ளாத முஸ்லிம்கள் காளிதேவியின் உருவத்தை பாரதமாதாவாக ஏற்றுக்கொண்டு வந்தே மாதரம் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் அதனை எப்படி ஏற்றுக்கொள்வர்?

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடும் உணர்ச்சியை இந்த நாவல் ஊட்டுவதாகவும் வெள்ளையரின் ஆட்சியை எதிர்க்க இளைஞர்களுக்கு ஒரு வழி காண்பிக்கப்பட்டது என்று முன்னுரையிலும் பதிப்புரையிலும் திரும்பத் திரும்பக் கூறப்பட்டாலும் கதையில் எந்த இடத்திலும் வெள்ளையரை எதிர்க்க வேண்டும் என்ற உணர்ச்சி வெளிப்படவில்லை. நாவல் எழுதிய பங்கிம் சந்திரரேகூட அவ்வாறு எந்த இடத்திலும் கூறவில்லை. மாறாகää வெள்ளையர்கள் அரசின்மையினின்றும் காப்பாற்றினார்கள் என்றும்ää கதை நடந்த காலமான 1771 -1774 காலக்கட்டத்தை அரசின்மை மேலிட்டிருந்த காலமென்றும்ää அப்பொழுது இங்கிலீஸ்காரரின் அதிகாரம் ஏற்படவில்லை என்றும் இங்கிலீஸ்காரர் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் சட்டம் ஒழுங்கு சரியாய் நடப்பதாகவும் முஸ்லிம் - வெள்ளையர் ஆட்சியை ஒப்பிடும்போது நீதிநியாயமற்ற காலத்தையும் - நியாயம் நிறைந்த காலத்தையும் எப்படி ஒப்பிட்டுப் பேச முடியும்? என்றும் பங்கிம் சந்திரர் கேட்கிறார்.

அத்துடன் அந்தக் கதாசிரியர் கதையெழுதிய 1882 காலக்கட்டத்தில் வெள்ளையரை எதிர்க்க வேண்டும் என்ற உணர்ச்சி நாடு முழவதும் உருவாகி இருக்கிறது. முதல் சுதந்திரப்போர் என்று சொல்லப்படும் சிப்பாய்க் கலகம் நடந்தபோது பங்கிம் சந்திரர் 20 வயது இளைஞராக இருக்கிறார். அந்த வயதில் வரவேண்டிய அந்த தேசிய உணர்வு அவருக்கு வந்ததாகத் தெரியவில்லை. வெள்ளையரை எதிர்த்து நாடு முழவதும் நடந்த கிளர்ச்சிகள் தவறு என்பதைச் சுட்டிக்காட்ட எழுதப்பட்டதாகவே தெரிகிறது. அதனை பங்கிம் சந்திரர் முன்னுரையிலும் தெரிவிக்கிறார். கதையிலும் பல இடங்களில் அதனை வெளிப்படுத்துகிறார்.

வெள்ளைக்கார கேப்டன் ஒருவன் முஸ்லிம்களுக்கு ஆதரவாக வந்தபொழுது அவனைப் பிடித்து வைத்துக்கொண்டு பவாநந்தன் என்பவன் சொல்கிறான் ஷஷ காப்டன் துரை! உம்மை நாம் கொல்லோம்! ஆங்கிலேயர் எங்களுக்கு எதிரிகளல்லர்! நீங்கள் ஏன் துருக்கருக்கு ஆதரவாக வந்தீர்? நாங்கள் உங்களுடைய நண்பர்கள். ஆங்கிலேயருக்கு வெற்றி உண்டாவதாகுக! என்று சொல்கிறான். இன்னொரு இடத்தில் ஈஸ்வர கிருபையால் வாரன்ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாய் வந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை இரட்சிக்கும்பொருட்டே வந்திருக்கிறார்களென்றும் ஒரு இடத்தில் பங்கிம்சந்திரர் வெளிப்படுத்துகிறார்.



அதேநேரத்தில் முஸ்லிம்களை வெறுக்கக்கூடிய செய்திகள் ஏராளம் இருக்கிறது. அந்தப் படைவீரர்களின் குருவான ஸத்யானந்தரும் மகேந்திரனும் கைதுசெய்யப்படுகிறார்கள். அவர்களை மீட்க படைத்தளபதிகளுள் ஒருவன் பேசுகிறான் ஷஷ நாம் இந்த முஸ்லிம் அரசாட்சியாகிய பறவைக் குரம்பையைக் கலைத்து இந்தப் பதிதர்களாகிய யவனர்களின் நகரத்தைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்திவிட வேண்டும் என்றும் இந்தப் பன்றிக்கூட்டத்தைத் தீவைத்தெரித்து மாதாவாகிய ப10மியை புனிதமாக்கவேண்டும் என்று சங்கல்பித்திருக்கிறோமல்லவா? அந்தநாளும் வந்துவிட்டது. அந்த யவனபுரத்தைத் தூளாக்குவோம்! அந்தப் பன்றிக்கிடையை எரித்து நீறாக்கி ஆற்றுநீரில் கரைத்துவிடுவோம்! அந்தக் குருவிக்குரம்பையைக் கலைத்துக் காற்றில் சிதறடிப்போம்ää என்று வெறி உண்டாக்குகிறான். அவர்களது குருவையும் மகேந்திரனையும் விடுதலை செய்த பிறகு படைவீரர்கள் துருக்கரது வீடுகளுக்குத் தீ வைத்தனர் என்ற செய்தியும் இடம்பெற்றிருக்கிறது.
இடையில் கொஞ்சநாள் அவர்களது குரு காணாமல் போய்விடுகிறார். அவர் திரும்பிவந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தவுடன் பல வதந்திகள் பரவுகின்றன. அவர் இமயமலைச்சாரலுக்குச் சென்று தவமிருந்து திரும்பி வந்ததாகவும் ராஜ்யம் கிடைக்கப் போகிறதென்றும் பேசிக்கொண்டார்கள். அப்பொழுது பெருத்த ஆரவாரம் உண்டாயிற்று. ஷசிலர் கொல்லுங்கள்ää மொட்டைத்தலையரைக் கொல்லுங்கள் என்று கூச்சலிட்டனர். ஓருவன்ää அண்ணே! மசூதிகளை இடித்துத்தள்ளி ராதா மாதவ மந்திரத்தைக் கட்டும்படியான காலமும் வருமோ? என்பான். சிலர் வருணாசிரம தருமங்கள் நிலைதடுமாறி நிற்பது ஒழிந்து மீண்டும் வருணாச்சிரமம் நிலைக்கும் காலமும் வருமோ என்றும் பேசிக்கொண்டனர்.
இறுதியில் போரில் வெற்றி பெறுகிறார்கள். அப்பொழுது படைவீரர்கள் எங்கே என ஒருவன் வினவ மற்றொருவர் எல்லோரும் கொள்ளையடிக்கப் போயிருக்கிறார்கள். முசல்மான்களின் கிராமங்களையும் பட்டுத் தொழிற்சாலைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேர்வார்கள் என்கிறான். அப்படிப் போகும்வழியில் வழிப்போக்கர்களையும் வீட்டிலுள்ளவர்களையும் பிடித்துக்கொண்டு வந்தேமாதரம் சொல்லுங்கள்ää இல்லையேல் உங்களை அடித்துக் கொல்லுவோம் என்று மிரட்டுகிறார்கள். எதிரிலகப்பட்ட முகமதியர்களைத் துரத்தி அடித்தனர். சிலர் கூட்டங்;கூட்டமாகச் சேர்ந்து துருக்கத் தெருக்களுக்குத் தீ வைத்தனர். சொத்துக்களைக் கொள்ளையடித்தனர்.

இவையெல்லாம் அந்த நாவலில் வரும் முஸ்லிம் வெறுப்புக்கு உதாரணங்கள்.

வங்காளத்தில் முஸ்லிம் ராஜ்யம் ஒழிந்தபிறகு அந்தப்படையின் குருவான சத்யானந்தர் இந்துராஜ்யத்தை அமைக்கவேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார். அப்பொழுது திருமாலே வைத்தியர் உருவில் வந்து உன்னுடைய வேலை முடிந்து விட்டது. இனி புறப்படு என்று சொல்கிறார். மகாபிரபு! இன்னும் நான் இந்துராஜ்யத்தை அமைக்கவில்லையே! இப்பொழுது எப்படி வருவது? என்று கேட்கிறார். இப்பொழுது இந்துராஜ்யம் அமையாது. இந்துராஜ்யம் அமையும்வரை ஆங்கிலேயரே நமக்கு அரசராயிருப்பர். ஆங்கிலேயர் அரசராகாவிடில் ஆரிய சனாதன தருமத்தின் புனருத்தாரணம் நிறைவேறாது. என்று அந்த மகாபுரு~ர் சொல்கிறார். அத்துடன் நமது மக்களுக்கு வி~யஞானம் குறைவாக இருக்கிறது. ஆங்கிலேயர் ஞானத்தில் சிறந்தவராக விளங்குகிறார்கள். கற்பிப்பதிலும் வல்லவராக இருக்கிறார்கள். நமது தேசத்தார் ஆங்கிலேயரிடம் தத்துவங்களை அய்யந்திரிபறக் கற்பாராயின் சனாதனதர்மம் பரவுவதற்கு யாதோர் தடையும் இருக்காது. இந்துக்கள் அறிவிலும் திறனிலும் பெருமையடைகிறவரையில் ஆங்கிலேய அரசாட்சியே இங்கு நடக்கும். அந்த ஆங்கிலேயர்களை அரசாட்சியில் அமர்த்துவதற்காகவே இந்தக்கிளர்ச்சி நடந்தது என்று அந்தமகாபுரு~ர் சொல்கிறார்.

ஆங்கிலேயரை அரசாட்சியில் அமர்த்துவதற்காகவே இந்தக்கிளர்ச்சி நடந்ததாக அந்தக் கதையில் மிகத் தெளிவாகவே கூறப்பட்டிருந்தாலும் பார்ப்பனர்கள் திட்டமிட்டு வெள்ளையரை எதிர்க்கவேண்டும் என்ற உணர்ச்சியை இந்த நாவல் உருவாக்குவதாகக் கூறுவது கடைந்தெடுத்த பித்தலாட்டமாகும்.
முஸ்லிம்கள் வந்ததால் நிலைதடுமாறிப்போன வருணாசிரமத்தையும் சாதியையும் மீண்டும் நிலைபெறச் செய்ய வேண்டுமென்பதற்காகவே பார்ப்பனர்கள் பல காலம் முயன்றிருக்கிறார்கள். வருணாசிரமம் எப்பொழுதெல்லாம் தகர்க்கப்பட்டதோ அப்பொழுதெல்லாம் பார்ப்பனர்கள் ஏதாவதொரு வகையில் சூழ்ச்சிகள் செய்து வருணதர்மத்தை மீண்டும் புதுப்பித்திருக்கிறார்கள்.

பௌத்தமும் சமணமும் வருணதர்மத்தை ஒழித்தபோது அப்படித்தான் அவர்கள் அதனை மீட்டிருக்கிறார்கள். காரணம் பௌத்தர்களும் சமணர்களும் அஹிம்சாவாதிகளாக ஆயுதம் எதுவும் இல்லாதவர்களாக இருந்ததனால் அவர்களை மிகச் சுலபமாக வென்று அவர்களது சனாதன தருமத்தை ஆரியர்கள் நிலைநாட்டியிருக்கிறார்கள்.

ஆனால்ää முஸ்லிம்களிடம் அவர்களது வித்தை எதுவும் பயன்படவில்லை. காரணம் முஸலிம்கள் படைபலமும் ஆயுதபலமும் நிறைந்தவர்களாக இருந்திருக்கின்றனர். அதனால் அவர்களை சுலபத்தில் வெற்றி காண இயலவில்லை. ஆங்கிலேயர் வருகை அவர்களுக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்திருக்கிறது. அவர்களை வைத்து பார்ப்பனர்கள் பல காரியங்களைச் சாதித்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றில் நாம் பார்க்கிறோம்.

வருணாசிரமதர்மத்திலும் சாதியிலும் கைவைக்காமல் இருந்தால் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம் என்று ஆங்கிலேயரிடம் ஒப்பந்தம் செய்துகொண்டு ஆங்கிலேய அரசாங்கம் இங்கு வலுப்பெறுவதற்கு பார்ப்பனர்களே உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் வெள்ளை அரசாங்கம் 1833ல் உருவாக்கப்பட்ட பாராளுமன்றச்சட்டம் விதி 464ல்:

ஷஷ உயர்சாதியான் ஒருவன் கொடூரமான குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்தாலும்ää தன் மலம் மூத்திரம் ஆகியவற்றைத் தானே எடுக்க வேண்டியதில்லை. பட்டினியால் ஒரு பிடி அரிசியைத் திருடியிருந்தாலும் ஒரு பறையன் அந்த மேல்சாதியானின் மலம்ää மூத்திரம் ஆகியவற்றை எடு;க்கவேண்டும்|| என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.    (ஆதாரம்: : தமிழன் அயோத்திதாசப்பண்டிதர் வரலாறுää பக்கம்-68)

மனுதர்ம காலத்தில்கூட எழுதப்படாத சட்டத்தை வெள்ளையரை வைத்து எழுதிக்கொண்டார்களென்றால் அந்த வாய்ப்பை பார்ப்பனர்கள் நழுவ விடுவார்களா? அதனால்தான் வெள்ளையர் ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைத்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளையருக்கெதிராகக் கிளர்;சிகள் நடந்தபோது அது தவறு என்று சுட்டிக்காட்டி வெள்ளையர் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட கதையை எப்படியெல்லாம் தமக்கு சாதகமாக வளைத்திருக்கிறார்கள்?

அந்தக் கதையிலுள்ள வந்தேமாதரப்பாடல் தேசபக்தியை ஊட்டுகிறது என்று இன்னமும் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கையில் ஆட்சி வந்துவிட்டால் இந்தக் கதையில் வருவதைப்போல் வந்தேமாதரம் பாட மறுத்தால் குத்துவோம் கொல்லுவோம் முஸ்லிம்களின் சொத்துக்களைச் சூறையாடுவோம். வீடுகளைக் கொளுத்துவோம்ää பெண்களை மானபங்கப்படு;துவோம் என்று சொன்னாலும் சொல்வார்கள். வருணாசிரமத்தைப் பாதுகாப்போம்ää ஜாதியைப் பாதுகாப்போம் என்றும் சொல்லுவார்கள். அது தந்தை பெரியார் பிறந்தமண்ணில் எடுபடாது என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்கிறோம்.

பிராமணர் சங்கத்தின் கி .வீரமணிக்கு 20 கேள்விகள் , பதில்கள்

கி .வீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல எல்லா பகுத்தறிவுக்கும்தான்.

1. ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?

பதில் : பிராமணர்கள் ஜாதி பேதம் பார்க்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள் அல்லவா? அதற்கு எங்களுடைய நன்றி. பிறவியில் பேதம் ஏன் பார்க்க வேண்டும் என்பதை முதலில் நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்களா? முகத்தில் மனிதன் பிறக்க முடியுமா? தோளிலும் தொடையிலும் காலிலும் பிறப்புறுப்பு இருக்கிறதா? நீங்கள் பிராமணர்கள் என்றால் மற்றவர்களெல்லாம் சூத்திரர்கள் என்றுதானே பொருள்? சூத்திரன் என்றால் உழைக்கும் மக்களெல்லாம் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று மனுதர்மம் சொல்லுகிறதே! அந்த மனுதர்மத்தின்படிதானே நீங்கள் உங்களை பிராமணர் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்.
எல்லாம் கற்பனையாக இருக்கும்போது நீங்கள் உயர்ந்தவர்கள் என்பதே கற்பனைதான். உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள். நாங்கள் யாருக்கும் உயர்ந்தவர்கள் அல்ல. யாரும் எங்களுக்குத் தாழ்ந்தவர்களும் அல்ல என்பதை முதலில் ஒத்துக்கொள்ளுங்கள்.
இந்தப் பிறவி பேதத்தினால்தான் புலியைப் பார்த்துச் சூடு போட்டுக்கொண்ட பூனைபோல மற்றவர்களும் நாங்கள் உயர்ந்த ஜாதி என்று கூறிக் கொள்கிறார்கள். என்னதான் மற்றவர்கள் உயர்ந்த ஜாதி என்றாலும் எல்லா ஜாதிக்காரர்களையும் விட  பிராமணர்கள் உயர்ந்த ஜாதி என்கிற தத்துவம் இருக்கிறதல்லவா? முதலில் நீங்கள் உயர்ஜாதி இல்லை என்பதை ஒத்துக்கொண்டால் மற்றவர்களும் தாமாக அதனை விட்டுவிடுவார்கள். அதற்கு நீங்கள் தயாரா?

2. கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லைஇ அல்லா இல்லை என்று தைரியமாக கூறமுடியுமா?

பெரியார் சிலையில் இருக்கும் கடவுள் மறுப்பு வாசகத்தில் இந்து கடவுள் மட்டும் இல்லை. கிறிஸ்து இருக்கிறார். அல்லா இருக்கிறார் என்றா இருக்கிறது. கடவுள் இல்லை என்று நாங்கள் சொல்வது எந்தக் கடவுளுமே இல்லை என்ற பொருளில்தான். அதனை நீங்களும் தெரிந்துகொண்டே உங்களுக்கே உரிய சிண்டு முடியும் புத்தியோடு இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள்.

3. தியாகராஜர் ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?

தியாகராஜர் ஆராதனை முழுக்க முழுக்க சமஸ்கிருதத்தில் இசைக்கப்படுகிறது. தமிழ் நீசபாஷை என்ற தத்துவம் அங்கே நிலைநாட்டப்படுகிறது. அந்த மேடையில் தமிழில் பாடினார்கள் என்பதற்காக மேடை தீட்டாகிவட்டது என்று பார்ப்பன தீட்சதர் அந்த மேடையில் பாட மறுத்தார். காவிரி ஜலம் கொண்டு தீட்டுக்கழித்து அதன் பிறகு பாடினார் என்பது தமிழையும் தமிழரையும் இழிவுபடுத்தும் நிகழ்ச்சி.
தேவர் ஜெயந்தியை திராவிடர் கழகம் ஒருபோதும் ஆதரித்ததில்லை.

4. பிராமணன் பூணூலை அறுக்க துணிந்த உங்களுக்கு ஒரு கிறிஸ்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலை பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா?

முதலில் நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்கள். நீங்கள் இந்துவா? பிராமணரா? இந்து என்றால் நீங்கள் அணியும் பூணூலை அனைத்து இந்துக்களும் அணிகிறார்களா? அப்படி அணிய நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? அதற்கு உங்கள் வேதங்களிலும் ஆகமங்களிலும் இடம் உண்டா? என்பதைக் கூறுங்கள்.  இந்து இல்லை என்றால் நீங்கள் யார்? இந்து என்று சொல்லக்கூடிய மற்ற அனைவரையும் நீங்கள் இழிவுபடுத்துகிறீர்கள் என்பதுதானே அதன் பொருள். அவ்வாறு அனைத்து இந்துக்களையும் இழிவுபடுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
அடுத்து கிறிஸ்தவன் சிலுவை அணிகிறான் என்றால் அனைத்து கிறிஸ்தவனும் சிலுவை அணியலாம. முஸ்லிம் தொப்பி அணிய எந்த முஸ்லிமுக்கும் தடை இல்லை. அதுபோல சீக்கியன் என்பதற்கு அடையாளம் அவனது தலைப்பாகை. அதனை எல்லா சீக்கியனும் அணிகிறான். அப்படி இவர்கள் அணியும் சிலுவையாலோ தொப்பியாலோ தலைப்பாகையாலோ யாருக்கும் எந்த இழிவும் கிடையாது.
நீங்கள் பூணூல் அணிவது நாங்கள் பிராமணர்கள். எல்லோரையும் விட உயர்ந்தவர்கள் என்ற தத்துவத்தை நிலைநாட்டுகிறது. அது மற்றவர்களுக்கு அவமானம் இல்லையா?

5. தாலி அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும்இ அவர் கணவரும் திராவிட கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும்இ பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் உண்டா?

தாலியை அகற்றுவதோ தாலியை மாட்டுவதோ எங்களுடைய கொள்கை கிடையாது. ஆண் - பெண் சமத்துவம்தான் எங்களுடைய கொள்கை. பெண்ணுக்கு மட்டும் தாலி. ஆணுக்கு அது தேவையில்லை என்கிறபோது அது சமத்துவத்துக்கு எதிரானது என்பதால் அதனை எதிர்க்கிறோம். பெற்றோர் விருப்பத்துக்காகத் தாலி அணிந்துகொண்டு அதன் பிறகு ஆண் பெண் சமத்துவத்தைப் புரிந்துகொண்ட தம்பதியர் தாமாக விரும்பியே இவ்வளவு நாட்களாகத் தங்களது தாலியை அகற்றி வருகிறார்கள். எங்கள் இயக்கத் தோழர்கள் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கும் அணுகுமுறையை திடீர் என்று எதிர்ப்பவர்கள்தான் இந்துத்துவவாதிகள். அவர்களுக்கு தமிழ்நாட்டில் காலூன்ற வேறு பிரச்சனை இல்லாததால் இதனைக் கையிலெடுத்திருக்கிறார்கள். ஆண் பெண் சமத்துவத்துக்கு எதிரானவர்களுக்கும் ஜாதி வெறியர்களுக்கும் எங்கள் இயக்கத்தில் கண்டிப்பாக இடம் கிடையாது. அதில் தாலி அணிவது அணியாதது என்ற பேச்சுக்கே இடமில்லை.

6. எடுத்ததற்கெல்லாம் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த திராவிட கட்சிக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என்றும்இ உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்த கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரசாரம் செய்ய தைரியமுண்டா?

நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களா? முதலில் அதனைத் தெளிவுபடுத்துங்கள். கடவுள் நம்பிக்கை உள்ள பக்தர்கள் கோயிலுக்கு வருகிறபோது கடவுள் நம்பிக்கை உள்ள நீங்கள் அவர்கள் கைகளைத் தொட்டுக்கூட பிரசாதம் தருவதில்லையே ஏன்? கடவுள் நம்பிக்கை உள்ள அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் வருகின்றபொழுது அதனை நீங்கள் எதிர்ப்பது ஏன்? உங்களுக்கு கடவுள் நம்பிக்கை என்பதே கிடையாது. உங்களுக்கு இருப்பதெல்லாம் ஜாதி நம்பிக்iதான். நாங்கள் உயர் ஜாதி. மற்றவர்கள் தாழ்ந்த ஜாதி என்பதுதான். எங்களை உயர்ந்த ஜாதி என்று ஏற்றுக் கொள்கிறவர்கள் மட்டும்தான் கோயிலுக்கு வரவேண்டும். மற்றவர்கள் வரக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு துணிச்சல் உண்டா?
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். பிராமணர்கள் இனி எந்தக் கோயிலிலும் அர்ச்சகர் ஆவதற்கு தகுதி இல்லை என்ற சட்டம் வந்துவிட்டால் நீங்களே வெளியில் வந்து கோயிலில் இருப்பது கடவுள் அல்ல. அது வெறும் கல்தான் என்று பிரச்சாரம் செய்வீர்கள்.
அப்படியிருக்க கடவுள் நம்பிக்கை உள்ளவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எவர் ஆதரவாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு என்பதுதான் எங்கள் நிலையே தவிர இதில் கடவுள் நம்பிக்கை உள்ளவர் இல்லாதவர் என்ற பேச்சுக்கே இடமில்லை.

7. கடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ வெ ரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா? அல்லது அண்ணாதுரை இ காமராஜர்இஎம் ஜி ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர் அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும் உங்களிடம் திராணி இருக்கிறதா?

பெரியாருக்கு ஒரு வரலாற்றுச் சான்றுக்காக. எதிர்காலத் தலைமுறையினர் பெரியார் என்ற ஒருவர் இருந்தார். அவரால் பார்ப்பனரல்லாத சமுதாயம் கல்வி கற்றது வேலைக்குப் போனது. அவர் பகுத்தறிவுக் கருத்துக்களை மக்கள் மத்தியிலே பரப்பினார். மூடநம்பிக்கைகளை ஒழிக்கப் பாடுபட்டார் என்று எடுத்துக் காட்டுவதற்காகத்தான் அவருக்கு சிலை வைக்கப்படுகிறதே தவிர அவர் ஒரு கடவுள். அவரை வணங்கினால் இவை இவை நடக்கும் என்று கடவுள் சிலைகளைக்காட்டி நீங்கள் ஏமாற்றுவதுபோல் செய்வதற்கு அல்ல. அதனால்தான் அவரது சிலைக்கு அடியில் கடவுள் மறுப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
 வரலாற்றில் எத்தனையோ மன்னர்கள் சிறப்பாக ஆண்டிருந்தாலும் அவர்களைப்பற்றிய சான்றுகள் இல்லை. ஆனால் அந்த மன்னர்கள் கட்டி வைத்த கோயிலும் சிலைகளும் அப்படியே இருக்கின்றன. அந்த மன்னர்களுக்கு சிலைகள் இல்லை. அந்த மன்னர்களின் வாரிசுகளெல்லாம் காணாமல் போய் விட்டார்கள். ஆனால் அவர்கள் கட்டி வைத்த கோயிலில் இன்னமும் பார்ப்பனர்கள் மணியடித்து மக்களை மடையர்களாக்கி காசுபணம் சேர்த்து உண்டுகொழுத்து வருகிறார்கள் என்பது கண்கூடு.
அவர்கள் பெரியார் சிலைகளை எதிர்ப்பது என்பது தங்களுக்கு எதிராக பெரியார் என்ற ஒரு மனிதர் இருந்தார். என்ற வரலாற்றுச் சின்னமோ நினைவுச் சின்னமோ இருக்கக் கூடாது என்ற கெட்ட நோக்கத்தில்தான் பெரியாருக்கு சிலை வைப்பதை இப்படிக் கொச்சைப்படுத்துகிறார்கள். மற்ற தலைவர்களுக்கு சிலை வைப்பதும் அந்த அடிப்படையில்தான்.

8. பிராமணனை மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் பிராமணனைத்தவிற மற்றவர்கள் முட்டாள்கள்இ அறிவில்லாதவர்கள்இ மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது கூறுகிறீர்களா?

இந்தக் கேள்வியே மிகவும் அபத்தமானது. காலம் காலமாக நாங்கள் மட்டுமே அறிவாளிகள். மற்றவர்கள் அறிவில்லாதவர்கள். நாங்கள் மட்டுமே கல்வி கற்போம். மற்றவர்கள் கற்க உரிமையில்லை என்று சொல்லி மற்ற மக்களை கல்வியறிவற்றவர்களாக ஆக்கியதே உங்கள் கூட்டம்தானே!
மன்னர்களை மயக்கி நீங்கள் கல்வி கற்பதற்கு மட்டும் சமஸ்கிருத பல்கலைக்கழகங்களை உருவாக்கி பார்ப்பனரைத் தவிர யாருக்கும் அங்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்கியவர்கள் நீங்கள்தானே!
வெள்ளைக்காரன் வந்த பிறகு மற்ற மக்களுக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்று முயன்றபொழுது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்கள் நீங்கள்தானே! மராட்டியத்தில் பெறற்கரிய செல்வமாக இருந்த கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமே ஏகபோக உரிமையாக இருந்தது என்பதையும் மன்னர்கள்கூட இரவில்தான் கற்க முடியும் என்ற அளவிற்கு அச்சமூட்டுவதாக பார்ப்பனர்களின் செயல் இருந்தது என்று அம்பேத்கர் வரலாறு கூறுகிறது.
அதையும் மீறி எங்கள் மக்கள் படித்த பிறகு அரசு உயர் படிப்புக்களில் சேர எங்களுக்கு தகுதி இல்லை திறமை இல்லை என்றீர்கள். அதையும் மீறிப் படித்து வந்த பிறகு அரசு வேலைவாய்ப்புக்களில் சேர எங்கள் மக்களுக்கு தகுதி இல்லை திறமை இல்லை என்றீர்கள்.
இவ்வாறு மற்றவர்களுக்கெல்லாம் அறிவு இல்லை. எங்களுக்கு மட்டுமே அறிவு இருக்கிறது என்று கூறிவந்த கூட்;டத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள். இதை அப்படியே திசை மாற்றி நாங்கள்தான் உங்களுக்கு அறிவு இருப்பதாகவும் மற்றவர்களுக்கு அறிவு இல்லை என்று கூறுவதாகச் சொல்வதும் விசமத்தனமானது.

9. நாட்டில் நடந்துள்ள கொலைகள்இ கற்பழிப்புகள்இ திருட்டுகள்இ ஊழல்கள்இ கொள்ளைகள் இவற்றில் பிராமணனின் பங்கு எவ்வளவு சதவிகிதம்இ பிற ஜாதியர்கள்இ பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா?

உங்களது கொள்கை என்ன? அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதுதானே? அவனன்றி ஓரணுவும் அசையாது என்கிறபோது இந்தத் திருட்டுää கொலைää கற்பழிப்புää ஊழல்கள்ää கொள்ளைகள் அனைத்தும் எவன் செயல்? கடவுள் சிலையைத் திருடி விற்ற பார்ப்பனர்கள் இல்லையா? கடவுள் உண்டியல் எண்ணும்போது அதனைத த்pருடியவர்கள் பார்ப்பனர்கள் இல்லையா? அதனால்தானே உண்டியல் எண்ணும்போது கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படுகிறது? கடவுளைவிட அந்தக் கண்காணிப்புக் கேமராவுக்கு சக்தி அதிகம் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? கடவுள் பெயரில் இருந்த நிலம் சொத்துக்களைத் தன்னுடைய பெயரில் மாற்றிக்கொண்ட பார்ப்பனர்கள் யாரும் இல்லையா? கடவுளுடைய நகைகளை எடுத்து தன் பெண்டாட்டிக்கு நகை செய்து மாட்டிய பார்ப்பனர் இல்லையா? கோயில் வளாகத்திலேயே கோயில் மேலாளராக இருந்த சங்கரராமனைக் கொலை செய்த சங்கராச்சாரி பிராமணர் இல்லையா? பிராமணர்கள் ஊழலில் ஈடுபடுவது இல்லையா? கோயில் கருவறைக்குள்ளேயே கற்பழிப்பில் ஈடுபட்ட தேவநாதன் பார்ப்பான் இல்லையா? திருட்டுக் குற்றத்தில் ஒரு பார்ப்பனரும் கைதானது இல்லையா? பிராமணர் அனைவரும் ஒழுக்கமுள்ளவர்கள் போலவும் பிராமணரல்லாதார்தான் ஒழுக்கமற்றவர்கள் என்பதுபோலவும் எத்தனை நாளைக்குப் பேசுவீர்கள்?
நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர் பக்கம் பேசுகிறீர்களா? பிராமணர்களுக்காக மட்டும் பேசுகிறிர்களா? மேற்சொன்ன குற்றங்களைச் செய்தவர்களில் கடவுள் நம்பிக்கை உள்ளவர் எத்தனை சதவிகிதம்? கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எத்தனை சதவிகிதம் என்று கணக்கெடுத்துப் பார்ப்போமா? 99.9 சதவிகிதம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்தானே! அப்படியானால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களெல்லாம் ஒழுக்கங்கெட்டவர்கள் என்று அறிவிக்க பிராமணர் சங்கம் தயாரா?

10. கோவிலில் நுழைய அனுமதிஇ தெருவில் நடமாட தடைஇ தடுப்பு சுவர் கட்டுதல்இ இரட்டை டம்ப்ளர் முறைஇ கவுரவக் கொலைகள் இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்துவது எவ்வளவு சதவிகிதம் பிராமணர்கள்இ எவ்வளவு சதவிகிதம் பிராமணரல்லாதோர் என்ற விவரம் தங்களிடம் உள்ளதா? இவற்றை எல்லாம் உங்களால் பகிர்ந்து கொள்ள முடியுமா? எதிர்த்து குரல் எழுப்பும் ஆண்மை உண்டா?

பதில் : கோவிலில் நுழைய அனுமதிஇ தெருவில் நடமாட தடைஇ தடுப்பு சுவர் கட்டுதல்இ இரட்டை டம்ப்ளர் முறைஇ கவுரவக் கொலைகள் இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்துவது இதையெல்லாம் செய்பவர்கள் இந்துக்களா? இல்லையா? உங்களுக்கு ஒரு ஆபத்து என்று வருகிறபோது நாமெல்லாம் இந்துக்கள்! ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள் என்று கூவுவதும் இதுபோன்ற பிற்படுத்தப்பட்டவர் - தாழ்த்தப்பட்டவர் பிரச்சினை வருகிறபோது நாங்கள் வேறு அவர்கள் வேறு என்று சொல்வதும் பார்ப்பனத் தந்திரம் அல்லவா?
உன்னுடைய இந்து மதம்தானே ஜாதிக்கொரு கோயில் ஜாதிக்கொரு வழிபாட்டுமுறை ஜாதிக்கொரு திருவிழா என்று வைத்திருக்கிறது? நீங்கள் பார்ப்பனரல்லாதார் யாரையும் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. மற்ற மற்ற ஜாதியினர் தங்களுக்குக் கீழுள்ள ஜாதியினரை அனுமதிப்பதில்லை. நீங்கள் ஆணிவேர் என்றால் அவர்கள் சல்லிவேர். அவ்வளவுதான். இதில் நீங்கள் யோக்கியர்போல் நடிப்பது மகா மகா அயோக்கியத்தனம். எல்லாவற்றுக்கும் காரணம் இந்துமதம்தான் அந்த இந்துமதத்தை ஒழிக்க நீங்கள் முன் வருவீர்களா?

11. ஒரு பிராமண பெண் தலைமை ஏற்று நடத்தும் அ தி மு க கட்சி ஒரு திராவிட கட்சியாயிற்றே. இதை எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியம் உங்களிடம் உண்டா?

12. அந்த ஒரு பிராமண பெண்ணின் காலில் விழும் ஒரு மந்திரியையாவதுஇ சட்டசபை உறுப்பினரையாவதுஇ ஒரு கவுன்சிலரையாவது கேலி பேசும் ஆண்மை உங்களிடம் உண்டா?

இரண்டு கேள்விக்குமான பதில் : முதலில் அ.தி.மு.க என்பது அண்ணா திமுக அல்ல. அது ஒரு அக்கிரகார திமுக என்பதுதான் எங்கள் கொள்கை. அதனை எதிர்த்து நாங்கள் எவ்வளவோ பேசியும் எழுதியும் வருகிறோம். காலில் விழும் கலாச்சாரம் என்பது பார்ப்பனியக் கலாச்சாரம். திராவிடக் கலாச்சாரம் இல்லை என்பதையும் நாங்கள் பேசி எழுதி வருகிறோம். சுயமரியாதை அற்றவர்களின் சொரணை கெட்ட செயல்களை நாங்கள் ஒருபோதும் ஆதரிப்பதில்லை.

13. பிராமணர்களால் உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி சி எஸ்இ இன்போசிஸ்இ காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன்இ வேண்டாம் வேண்டாம்இ திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா?

இந்தக் கேள்வியும் முட்டாள்தனமானது. பார்ப்பனர்கள் மட்டுமே அறிவாளிகள். தகுதி திறமை உள்ளவர்கள் என்று கூறி வந்த நீங்களும் உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் உருவாக்கி நடத்தி வரும் நிறுவனங்களில் அந்த அறிவாளிகளான பார்ப்பனர்களுக்கு மட்டுமே வேலை தரப்படும் என்று கூறி நிறுவனத்தை நடத்த முடியுமா? பார்ப்பனர்கள் சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டு சோம்பேறியாக இருக்கின்ற காரணத்தால் தகுதியும் திறமையும் உள்ள தமிழர்களையும் திராவிடர்களையும் பணியில் அமர்த்தி வருகிறது மேற்சொன்ன நிறுவனங்கள். அங்கே போய் நீங்கள் தகுதி திறமை பார்ப்பனர்களாகிய எங்களுக்கு மட்டுமே இருக்கிறது. எங்களை வேலைக்கு அமர்த்தாமல் ஏன் பார்ப்பனர்களைத் திட்டும் திராவிடர்களுக்கு வேலை தருகிறீர்கள் என்று மறியல் போராட்டம் செய்வதுதானே!

14. பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விடு பார்ப்பானை கொல் என்ற உங்களால் அந்த பாம்பை உங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர முடியுமா?

இந்தப் பழமொழியே பெரியார் சொன்னது என்று கூறுவது தவறான வாதம். அது ஒரு வடநாட்டுப் பழமொழி.
பாம்பு கூட தனக்கு தொந்தரவு செய்கிறவரைத்தான் கடிக்கும். இல்லாவிட்டால் அது தன்போக்கில் சென்று விடும். ஆனால் இந்தப் பார்ப்பனர்களோ தங்களுக்கு தொண்டு செய்கின்ற விவசாயிகளைநெசவாளிகளை உழைப்பாளர்களை சூத்திரன் என்று சொல்லி இழிவுபடுத்தி அவர்களை முன்னேற விடாமல் செய்து வருகிறார்கள். எனவே பாம்பை விட ஆபத்தானவர்கள் பார்ப்பனர்கள். பாம்பை கழுத்தில் மாட்டிக்கொண்டு கூடத் திரியலாம். ஆனால் பார்ப்பனரோடு உறவு வைத்திருந்தால் அவன் எந்த நேரத்தில் கழுத்தறுப்பான் காலை வாறிவிடுவான் என்பது யாருக்கும் தெரியாது.

15. குங்குமம் வைத்தவரை நெற்றியில் என்ன காயம் ரத்தம் வந்திருக்கிறதே என்று கேலி பேசியவர் வைணவத்தை பரப்பிய ராமானுஜரைப்பற்றி எழுதுவதை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா?

ஒரு சூத்திரன் வேதத்தைக் காதுகளில் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று. வேதத்தைப் படிக்கும் சூத்திரனின் நாக்கை அறு. நெஞ்சில் தேக்கி வைத்திருந்தால் அவன் நெஞ்சைப்பிள என்று அநியாயம் செய்த அக்கிரஹாரக் கூட்டத்தின் ஆணவத்தைத் தோலுறிக்கின்ற வகையிலேதான் விளம்பரமே வருகிறது. நான் வேதம் சொல்லக் கூடாதா? என்று ஒரு தாழ்த்தப்பட்ட சிறுவன் கேட்கிறான். ராமானுஜர் அவனுக்கு வேதம் சொல்லித் தருகிறார். மதத்தில் புரட்சி செய்த மகான் என்றுதான் விளம்பரம் வருகிறது. இன்னும் உங்கள் வண்டவாளங்களையெல்லாம் தண்டவாளத்தில் ஏற்றுவதற்காகத்தான் இத்தொடரைக் கலைஞர் எழுதுவார் போல் தெரிகிறது. அதற்குள் நீங்கள் துள்ளிக்குதிக்காதீர்!

16. ஹிந்துக்கள் தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். ஹிந்துக்கள் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய நீங்கள்இ கிறிஸ்தவர்கள் மோதிரம் அகற்றும் போராட்டம் நடத்தும் ஆண்மை இருக்கிறதா?

ஹிந்துக்கள் தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் மோதிரம் அணிகிறார்கள் என்கிறீர்களே! இரண்டும் ஒன்றா? மோதிரம் அணியும் கிறிஸ்தவர்கள் பெண்ணுக்கு மட்டும் அணிவிப்பதில்லை. மணமகன் மணமகள் இருவருமே அணிகிறார்கள். ஆனால் இந்துக்கள் பெண்ணுக்கு மட்டும் தாலி அணிவித்து ஆணை பொலிகாளையாக அலைவதற்கு அனுமதிக்கிறது இந்து மதம். அது ஆணாதிக்க மனப்பான்மை. பெண்ணடிமைத்தனம் என்கிறோம் நாங்கள். அடுத்து நீங்கள் செய்யும் மோசடிப் பிரச்சாரம் என்னவென்றால் நாங்கள் ஏதோ தாலி அணிந்திருக்கிற எல்லாப் பெண்களையும் சாலைகளில் நின்றுகொண்டு வருகிற போகிற பெண்களது தாலியையெல்லாம் அறுப்பதுபோல பிரச்சாரம் செய்வது அயோக்கியத்தனமானது. எங்கள் வீட்டில் நடக்கும் திருமணங்கள் முதலில் பெற்றோரது விருப்பப்படி தாலி அணிந்து திருமணம் செய்தாலும் அந்தக் கணவன் மனைவி இருவரும் அதன் இழிவினை உணர்ந்து மனமுவந்து அகற்றிக் கொள்கிறார்கள். இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறது இந்துத்துவா பார்ப்பனக் கும்பல்.

ஈ வெ ரா கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்ற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்ற பயமா?

பெரியார் கொள்கைகளை யாரும் வெளியிடக்கூடாது என்பதோ பெரியார் கொள்கைகள் பரவக் கூடாது என்பதோ எங்கள் நோக்கம் அல்ல. அப்படி வெளியாட்கள் பெரியாரைப்பற்றி எழுதும்போது ஆதாரமில்லாமல் எழுதி பெரியார் கொள்கையைத் திரித்து வெளியிட்டு விடக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம்.
உதாரணத்திற்கு பாம்பையும் பார்ப்பனையும் கண்டால் பாம்பை விட்டுவிடு பார்ப்பானை அடி என்று பெரியார் சொன்னதாக தந்திடிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரெங்கராஜ் பாண்டே தெரிவித்தார். அது பெரியார் சொன்னது அல்ல. அது ஒரு வடநாட்டுப் பழமொழி என்று தமிழர் தலைவர் வீரமணி தெரிpத்தார். அதனை மறுத்து தந்தி டிவியில் காட்டப்பட்ட ஆதாரம் திராவிடர் கழகமோ அதன் பிரச்சார நிறுவனமோ வெளியிட்ட நூலில் இருந்து காட்டப்பட்டதில்லை. வேறு யாரோ எழுதி வெளியிட்ட புத்தகம். அது ஆதாரப்பூர்வமானதோ அதிகாரப்பூர்வமானதோ அல்ல. அதனால்தான் உண்மைக்கு மாறான தகவல் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பெரியாரைப் பற்றியும் அவரது கொள்கைகள் பற்றியும் திரிபுவாதங்கள் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் அதனை எதிர்க்கிறோம்.

19. பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்பு சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டைபற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?

பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம் என்றால் அது என்ன அடையாளம்? நாங்கள் பிராமணர்கள் என்று காட்டுவதற்கான அடையாளம்தானே! நீங்கள் பிராமணர்கள் என்றால் மற்றவர்கள் எல்லாம் யார்? சூத்திரர்கள்தானே! இழிஜாதிதானே! மனுதர்மத்தின்படி சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்தானே! அப்படி மற்றவர்களை தேவடியாள் பிள்ளை என்று சொல்வதற்கு உங்களுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும்? பூணூல் அணிந்திருப்பவனுக்குத்தான் தகுதி திறமை இருக்கிறது. எங்களுக்கு இல்லை என்று சொல்வதற்கு உள்ள அடையாளம்தானே அந்தப் பூணூல்? அந்தப் பூணூல் அணிந்தவன்தான் ஆண்டவனுக்கு அர்ச்சகனாக இருக்கலாம் மற்றவர்களுக்கு அந்த உரிமை இல்லை என்பதன் அடையாளம்தானே அந்தப் பூணூல்?
இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படி எங்கள் மக்களை இழிவுபடுத்துவீர்கள்?
அந்த இழிவை உணர்த்தி மக்களுக்குத் தன்மான உணர்ச்சியூட்டுவதற்கான அடையாளம்தான் கறுப்புச் சட்டை. நான் ஏன் சூத்திரனாக இருக்க வேண்டும்? நீ ஏன் பிராமணனாக இருக்க வேண்டும்? என்று கேள்வி கேட்க வைப்பது கறுப்புச்சட்டை. நான் ஏன் தற்குறியாக இருக்க வேண்டும்? பிராமணன் ஏன் கல்வியை ஏகபோக உரிமையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்க வைத்தது கறுப்புச்சட்டை. நீ மட்டும்தான் அர்ச்சகனாக இருக்க வேண்டுமா? நான் அர்ச்சகனாகக் கூடாதா? என்று கேட்க வைத்தது கறுப்புச்சட்டை.
எனவே, அந்தக் கறுப்புச்சட்டையோடு பூணூலை ஒப்பிடுவதே அபத்தமானது.

20. ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதை பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் நம்பி பொழப்பு நடத்துகிறீர்களே ..இது தேவையா ?

ஒருவருடைய நம்பிக்கை இன்னொருவரை இழிவுபடுத்தக்கூடாது. நான் பிறப்பால் உயர்ந்தவன் என்று நீங்கள் சொல்லுவது அடுத்தவரை இழிந்தவன் என்று உணர்த்துவது உங்களுக்குப் புரியவில்லையா? அடுத்தவரை இழிவுபடுத்துவதில் உங்களுக்கு என்ன அவ்வளவு மகிழ்ச்சி? கடவுளை நம்பிப் பிழைப்பு நடத்துபவர்கள் நீங்கள்தான். நாங்கள் அல்ல.

வியாழன், 15 செப்டம்பர், 2016

சுதந்தரம் பெற்ற நாட்டில் ஜாதி இருக்கலாமா?


 நமது நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் பட்ட கொடுமைகளுக்கு அளவே இல்லை. அவர்களுக்கு அறிவு வளர்ச்சி தடுக்கப்பட்டது. பெறற்கரிய புதையலாகக் கருதப்பட்ட கல்வி அளிக்கப்படவே இல்லை. அக்காலத்தில் கல்வி என்பது  வேதக் கல்வியே. அந்த வேதத்தை சூத்திரன் காதால் கேட்டால் காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்று. மனதிலே தங்க வைத்தால் அவன் நெஞ்சைப் பிள என்றெல்லாம் வேதங்களும் தர்மசாஸ்திரங்களும் கூறின. பார்ப்பனர்க்கு மட்டுமே கல்வி தாரை வார்க்கப்பட்டது. மன்னர்கள் எல்லாம் சமஸ்கிருத வேதபாடசாலைகளை ஏற்படுத்தி பார்ப்பனர்களுக்கு கொட்டியழுது அவர்களைக் கொழுக்க வைத்தனர்.
 வெள்ளைக்காரன் இங்கு வந்து மெக்காலே கல்வியைக் கொண்டு வந்த நேரத்தில் அந்தக் கல்வியையும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர்க்கு அளிக்க எதிர்ப்புத் தெரிவித்து அதனையும் பார்ப்பனர்களே அனுபவித்தனர். வெள்ளைக் காரனை நத்திக்கொண்டு குமாஸ்தா உத்தியோகம் முதல் ஜட்ஜ் உத்தியோகம் வரை பார்ப்பனர்களே எல்லாவற்றையும் தங்கள் வயிற்றிலேயே அறுத்துக் கொட்டிக் கொண்டனர்.
 ஜாதியும் தீண்டாமையும் இங்கு தலைவிரித்தாடியது. ஒரு மனிதனை இன்னொரு மனிதன் பார்த்தாலே பாவம். அவன் நிழல் பட்டால் தோஷம் என்ற கொடுமை இங்கு நீண்ட காலம் கோலோச்சியது. வெள்ளைக்காரனிடம் இம்மக்கள் அனுபவித்த கொடுமைகளைவிட பார்ப்பன உயர்ஜாதியினரிடம் அனுபவித்த கொடுமைகளே இங்கு அதிகம். சுதந்திரத்துக்குப் பாடுபட்டதாகச் சொல்லப்படும் தலைவர்களே தீண்டத் தகாதவர்களை மனிதர்களாகவே கருதவில்லை. சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று சொன்ன திலகரே தாழ்த்தப்பட்டவர்கள் காங்கிரஸ் மாநாட்டுப் பந்தலுக்குள்ளேயே நுழையக் கூடாது என்று சொன்னார்.
வ.வெ.சு அய்யர் போன்றவர்கள் பார்ப்பனப் பிள்ளைகளும் பார்ப்பனரல்லாத பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணக் கூடாது என்று பிரித்து வைத்தார். அப்படி பார்ப்பனப் பிள்ளைகளோடு பார்ப்பனரல்லாத பிள்ளைகள் ஒன்றாக உணவருந்தினார்கள் என்று கேள்விப்பட்டால் நான் பத்து நாட்கள் சாப்பிடாமல் இருப்பேன் என்று ஒரு பார்ப்பனர் சொன்னார். வெள்ளைக்காரன் கொண்டு வந்த இரயில்வே உணவகத்தில் பார்ப்பனர் சாப்பிடுவதற்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டது. அவர்கள் சாப்பிடுவதை பார்ப்பனரல்லாதார் பார்த்து விட்டால் அந்த உணவே விஷமாகிப் போய்விடும் என்றனர்.
 இந்த நிலையில்தான் நம்நாட்டில் உயர்வு தாழ்வு என்ற ஆணவம் மிகுந்திருக்கிறது. சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவ வேண்டும் என்று பாடுபட்ட தந்தை பெரியார் அவர்கள் வெள்ளைக்காரன் போவதற்குள் இந்த ஜாதிப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டாக வேண்டும் என்றார். ஆனால் அந்த ஜாதிப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்காமலேயே வெள்ளைக்காரன் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டுச் சென்று விட்டான்.
 சுதந்தரம் பெற்ற நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டை சுதந்திரம் பெற்ற நாடாகக் கருத முடியுமா என்று கேள்வி எழுப்பி இந்திய அரசியல் சட்டம் ஜாதியைப் பாதுகாக்கிறது என்று கூறி அந்த சட்டத்தை பல்லாயிரக் கணக்கானவர்களோடு கொளுத்தி சிறைவாசம் பெற்றார் தந்தை பெரியார்.
 ஆனால் இன்னமும் இந்த ஜாதிப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரவில்லை. ஒரே நாடு@ ஒரே மதம்@ ஒரே கலாச்சாரம் என்கிறார்கள். அந்த ஒரே மதத்தைச் சேர்ந்த ஒரு தாழ்த்தப்பட்டவன் அதே மதத்தைச் சேர்ந்த உயர்ஜாதிப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டால் உன்னுடைய கலாச்சாரம் வேறு@ என்னுடைய கலாச்சாரம் வேறு என்று சொல்லி இன்னமும் கவுரவக் கொலைகள் என்ற பெயரில் ஆணவக் கொலைகள் செய்து வருகின்றனர்.
 இதற்கு மூலகாரணமான ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறி தனது 95 வயதிலும் போராடிய பெரியார் பிறந்த மண்ணில் எந்த ஜாதி மிகவும் கொடுமைகளுக்கு ஆளானதோ அதே ஜாதிக் காரர்களைக் கொண்டு ஜாதி பெருமைக்குரியது. ஜாதி காப்பாற்றப்பட வேண்டும். ஜாதியின் காரணமாகக் கிடைத்துவரும் இட ஒதுக்கிடு தேவையற்றது என்று பேச வைக்கிறார்கள் என்று சொன்னால் மீண்டும் அந்தப் பார்ப்பனியக் கலாச்சாரத்தைத் திணிக்க முயல்கிறார்கள் என்றுதான் பொருள். அவர்களுடைய கனவை பெரியார் பிறந்த மண்ணில் நனவாக்க விட மாட்டோம் என்று இந்த சுதந்திர நாளில் அனைவரும் சூளுரைப்போம்.
 

முட்டாள் எழுதிய கதை

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் ஏதும் உண்டா?
மூன்றடி மண் கேட்டானாம். அதை அந்த மன்னன் கொடுத்த உடன்
உலகை ஒரு அடியாள் அளந்தானாம்.
இரண்டாம் அடியை வானத்தில் வைத்தானாம்.
மூன்றாம் அடியை வைக்க இடமில்லையே எங்கே வைப்பது என்று குள்ளப்பார்ப்பான் கேட்டானாம்.
என் தலையிலே வை என்று அந்த முட்டாள் மன்னன் சொன்னானாம்.
தலையிலே காலை வைத்து அந்த மன்னனை குள்ளப் பார்ப்பான் கொன்று அழித்தானாம்.
ஏன்யா அறிவுஜீவிகளே!
உலகத்தை ஒரே அடியில் அளப்பதற்கு அது என்ன தட்டையா? இன்று உலக உருண்டையில் குள்ளப் பார்ப்பான் நிற்பதுபோல ஒரு இடத்தில் நின்றுகொண்டு உலகத்தை அளப்பது என்றால் அவனது கால் முன்னூற்றி அறுபது டிகிரியிலும் சுற்றி வர வேண்டும்.
சுற்றி வருவதற்கு அது என்ன காலா? அல்லது பார்ப்பானது (பூ)நூலா?
காதில் வேண்டுமானால் பூ சுற்றலாம். காலைச் சுற்றி உலகை அளக்க முடியுமா?
அதற்குப் பிறகு அடுத்த அடியை வானத்தில் வைத்தானாம். வானத்தில் பட்டம் வேண்டுமானால் விடலாம். காலை வைக்க அது என்ன கூரையா? தகடா? தகரமா?
வானம் என்பது வெட்டவெளி. அதில் ராக்கெட் விடலாம். இப்படி கயிறு விடக்கூடாது. விண்வெளிப்பயணம் செய்பவர் ராக்கெட்டை விட்டு வெளியில் வந்தால் அந்தரத்தில்தான் மிதப்பார்களே தவிர எதிலேயும் நிலையாக நிற்க முடியாது.
அங்கே இரண்டாவது அடியை வைத்தான் என்று அள்ளிவிடுகிறான் பார்ப்பான்.
மூன்றாவது அடியை மாவலியின் தலையில் வைத்தான் என்றால் மாவலி எங்N நின்று கொண்டிருந்தான்?
பூமிää வானம் இரண்டையும் தாண்டி வேறு எங்காவது நின்றிருந்தால்தானே மூன்றாவது அடியை அவன் தலையிலே வைத்திருக்க முடியும்?
பூமியிலே நிற்பவன் தலையில் வாமணன் கால் வைப்பதென்றால் அப்படியே ரிவர்ஸ் அடித்துத்தானே வைக்க முடியும்?
வாமணன் என்ன கடவுளா? இல்லை சர்க்கஸ்காரனா?
இதை அறிவுள்ள எவனும் ஏற்றுக் கொள்வான?
நம்முடைய புராண இதிகாசங்களைக் கற்றுத்தான் வெளிநாட்டுக் காரனெல்லாம் அறிவியல் கண்டுபிடிப்புக்களைச் செய்கிறான் என்று கதை விடுகிறீர்களே! இதிலிருந்து எந்த அறிவியல் உண்மையை அவன் கண்டுபிடித்தான்? நீங்கள்தான் அவனுக்கு என்ன அறிவியல் விளக்கத்தைச் சொல்லுவீர்?
இந்தக் கதையை அவன் படித்தால் அவன் என்ன நினைப்பான்? இவர்களைவிட முட்டாள் உலகத்தில் வேறு யாருமில்லை என்றல்லவா? நினைப்பான்?
உலகம் தட்டை வானம் என்பது கூரையைப் போன்றது என்று கருதிய முட்டாள் எழுதிய கதையாகத்தானே இது இருக்க முடியும்?
அதை இன்றைக்கும் பரப்புகிறவர்கள் அயோக்கியர்களா? இல்லையா?
பகுத்தறிவுகொண்டு சிந்திப்பீர்!





புதன், 14 செப்டம்பர், 2016

பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடவில்லையா?

பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடவில்லையா? பித்தலாட்டமான பிரச்சாரத்துக்கு பதிலடி!
காலுக்குச் செருப்பும் தோளுக்குத் துண்டும் போடுவதற்கு உரிமைபெற்றுத் தந்தவர் தலைவர் தந்தை பெரியார். உலகிலுள்ள மற்ற சமுதாய மக்களைப் போல தமிழ்ச் சமுதாயத்தை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றும் பணிக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்கள். இன்று உலகெங்கிலுமுள்ள தமிழர்கள்; தங்களுடைய உயர்வுக்குத் தந்தை பெரியாரின் உழைப்பே காரணம் என நன்றி உணர்ச்சியுடன் நினைவுகூர்கிறார்கள். ஆனால் இன்று சிலர் தந்தை பெரியாரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்ற பிரச்சாரத்தைத் திட்டமிட்டு நடத்தி இளைஞர்களைக் குழப்பி வருகிறார்கள். இந்த சமுதாயத்தின் வளர்ச்சியையும் வாழ்வையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தடுத்து வைத்திருந்த இன எதிரிகளும் துரோகிகளும் செய்துவரும் பித்தலாட்டமான பிரச்சாரங்களுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞர்களையும் பலிகடா ஆக்கப் பார்க்கிறார்கள்.
 அண்ணல் அம்பேத்கரை திராவிடர் கழகத்தவர்களும் பெரியார் தொண்டர்களும் யாரும் குறைத்து மதிப்பிடுவதில்லை. தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதிலே எங்களுக்கு எந்த விதமான அய்யப்பாடும் கிடையாது. ஆனால் தாழ்த்தப்பட்ட அமைப்புக்களில் உள்ள சிலருக்கு பெரியார் என்றால் வேப்பங்காயாகக் கசக்கிறது. பெரியார் பாடுபட்டதால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பயன் கிடைத்தது என்பதை ஒத்துக்கொண்டால் இளைஞர்கள் பெரியார் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு விடுவார்கள். தாங்கள் தனிக் கம்பெனி நடத்தி பிழைப்பு நடத்த முடியாது என்று கருதக் கூடிய சிலர் அந்த அமைப்புக்களில் முன்னணியில் இருப்பதால் பெரியாருக்கு எதிரான பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்கள். அவர்கள் அம்பேத்கரையும் முழுமையாகப் படித்துப் புரிந்துகொண்டதில்லை. அவர் கொள்கையை ஏற்றுக் கொண்டு அதன்படி நடப்பதுமில்லை. அதனால்தான் அவர்கள் பெரியாருக்கு எதிராகப் பேசி வருகிறார்கள்.
 அண்ணல் அம்பேத்கர் சட்டத்தின்மூலம் இட ஒதுக்கீட்டுச்  சலுகைகயைப் பெற்றுத் தந்தார்கள் என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை. ஆனால் சென்னை மாகாணத்தில் அந்த இட ஒதுக்கீடு 1928 முதல் கம்யூனல் ஜி.ஓ. என்ற பெயரில் நடைமுறையில் இருந்து வந்தது. அந்த கம்யூனல் ஜி.ஓ மூலம் அனைத்து அரசுப் பணிகளிலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முன்னேறிய ஜாதியினர், பார்ப்பனர் உட்பட அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. சுதந்திரம் அடையும்வரை அதில் யாரும் கைவைக்க முடியவில்லை. சுதந்திரம் பெற்ற பிறகும்கூட ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் போன்றவர்கள் அந்த இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதில் உறுதியுடன் இருந்தார்கள். சுதந்திரம் அடைந்து குடியரசு நாடாக அறிவித்த உடன் அண்ணல் அம்பேத்கருடன் அரசியல் சட்ட வரைவுக்குழுவில் ஒரு உறுப்பினராக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி என்ற கில்லாடிப் பார்ப்பானால் சென்னை உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் செல்லாது என்று தீர்ப்பு வாங்கப்பட்டது.
 அப்பொழுது தமிழகத்தில் தந்தை பெரியாரும் அவர்தம் இயக்கத்தினரும் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் அன்று பிரதமராக இருந்த நேருவும் சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களும் அரசியல் சட்டத்தை முதல் முதலாகத் திருத்தி இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்தார்கள்.
 அவ்வாறு அந்த அரசியல் சட்டத் திருத்தம் வரவில்லையென்றால் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. இப்படி இந்திய அரசியல் சட்டத்தை முதல்முதல் திருத்தி இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்த பெரியாரால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பது நன்றி உணர்ச்சியற்ற தன்மையாகும். இவ்வாறு நன்றி உணர்ச்சியற்ற சிலர் இளைஞர்களுக்கும் அந்த நன்றி உணரச்சி வரக்கூடாது என்று கருதக் கூடியவர்கள் இதுபோன்ற பரப்புரைகளைச் செய்து வருகிறார்கள். தயவு செய்து அவர்களுக்கு உண்மையான வரலாற்றைச் சொல்லாவிட்டாலும் தவறான வரலாற்றைப் பதிவு செய்து வரலாற்றில் கரும்புள்ளி ஆகாதீர்கள் என்று கேட்டுக்கௌகிறோம். 

 'குல கல்வி திட்டம் எதிர்ப்பு' பிராமணர்கள் உட்பட அனைவரும் தங்களது குல தொழிலை செய்ய வேண்டும் என்ற ராசாசி அவர்களின் கருத்தை எதிர்த்து நடத்தப்பட்ட பொதுவான போராட்டம். இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் மட்டும் பலன் அடைந்தனர் என்பது முட்டாள் தனமான வாதம்”

இப்படியும் ஒரு பிரச்சாரம் தாழ்த்தப்பட்ட இளைஞர்களிடையே செய்யப்பட்டு வருகிறது.  இதில் உள்ள விசமத்தனத்தைப் பாருங்கள்ää குலக்கல்வித் திட்டம் என்பது என்ன?
“வண்ணான் மகன் துணி வெளுக்க வேண்டும். அம்பட்டன் மகன் முடிவெட்ட வேண்டும். சக்கிலியின் மகன் செருப்புத் தைக்க வேண்டும். குயவன் மகன் மண்பானை செய்ய வேண்டும்” என்பதுதான். இந்தத் திட்டம் அமுலாகி இருந்;தால் இந்த நவீன பார்ப்பனர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள்?. எங்காவது சுடுகாடு காத்துக்கொண்டு எவன் வீட்டிலாவது இழவு விழாதா? கால்பணம் முழத்துண்டு வாய்க்கரிசி கிடைக்காதா? என்று காத்துக் கிடக்க வேண்டும்? எவன் வீட்டு மாடாவது சாகாதா? செத்த மாட்டுக்கறி கிடைக்காதா? என்று ஏங்கித் தவி;க்க வேண்டும். ஒரு பழமொழி கூட உண்டு. எடச்சிக்கு மாடு செத்துப்போச்சின்னு கவலைää பறச்சிக்குக் கொழுப்பில்லயேன்னு கவலையென்ற பழமொழிகூட உண்டு.
இப்படிப்பட்ட நிலையிலிருந்து மாற்றி பள்ளன், பறையன், சக்கிலியன் எல்லாம்  டாக்டராக எஞ்சினியராக, வக்கீலாக,  நீதிபதியாக, கலெக்டராகவெல்லாம் எப்படி ஆக முடிந்தது?
மாணவன் என்ன தொழிலைச் செய்யவேண்டும்? என்பது பாடத்திட்டத்திலேயே இருந்தது.  ஒவ்வொரு தொழிலாளியின் படத்தையும் போட்டு ~இவன் குயவன் - மண்பாண்டம் செய்கிறான், இவன் ஆசாரி – மரவேலை செய்கிறான், இவன் வண்ணான் - துணி துவைக்கிறான் என்று படம் போட்டு ~ன்| விகுதி இட்டு விளித்து அய்யரை மட்டும் ~இவர் அய்யர் - நல்லவர், பாடம் படிக்கிறார்| என்று பாடப்புத்தகத்திலேயே இருக்கும்.
அந்தப் பிள்ளைகளெல்லாம் ஒழுங்காக அவனவன் அப்பன் தொழிலைத்தான் செய்கிறார்களா? என்று கவனிக்க வேண்டியது ஆசிரியரின் வேலை. மாடுமேய்த்து விட்டு, கல்லுடைத்து விட்டு, மண்சுமந்து அடுத்தநாள் பள்ளியில் வந்து ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு விடை தெரியாது திருதிரு வென விழிக்கும்போது அந்தப் பார்ப்பன வாத்தி சொல்லுவான் ~எண்டா சூத்திர முண்டம், நீயெல்லாம் ஏண்டா படிக்க வந்து என் உசிர வாங்குறே! போய் உங்கப்பன் தொழிலைச் செய்ய வேண்டியதுதானேடா| என்று ஜாதித் திமிரோடு சொல்லுவான்.
இதை அப்படியே விட்டிருந்தால் எவனாவது இன்று பி.ஏ. எம்.ஏ. பிஈ. எம்இ. எம்.பி.ஏ. எம்பிபிஎஸ். எம்டி. என்றெல்லாம் போட்டுக்கொண்டு திரியமுடியுமா? ஜீன்ஸ் பேண்ட டிசர்ட், கோட், சூட், எல்லாம் வந்திருக்குமா? உங்கள் வீட்டுப்பெண்கள், பட்டுப்புடவையும் நகையுமாக மினுக்கிக்கொண்டு திரியமுடியுமா?
அந்தக் கொடிய குலக்கல்வித் திட்டத்துக்கு ராஜாஜி கொடுத்த பெயர் என்ன தெரியுமா? தொழில் கல்வித் திட்டம். அத்தகைய தொழில்களைத்தான் நீங்கள் செய்துகொண்டிருக்க வேண்டும். உங்கள் ஜாதிக்குரிய தொழிலைத் தவிர்த்து வேறு தொழில்களைச் செய்ய உங்களுக்கு உரிமை இல்லை. அது அமுலாகி இருந்தால் உங்கள் ஆட்கள் இன்று யாராவது சிவில் இஞ்சினியர், மெக்கானிக்கல் எஞ்சினியர்ä,ஸாஃப்ட்வேர் எஞ்சினியர் என்றெல்லாம் ஜம்பம் அடிக்க முடியுமா?
அந்தக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த ராஜாஜி உங்களுக்கு நல்ல்ல்ல்;..லவர்? அதை ஒழித்த பெரியார் கெட்டவரா? பரவாயில்லை. பெரியார் அதை ஒழித்தார். அதனால் எங்களுக்கு மட்டும் நன்மை இல்லை. எல்லோரும் பலனடைந்தார்கள் என்றாவது உங்களையும் அறியாமல் ஒப்புக் கொண்டீர்களே! அது முட்டாள்தனமானது என்று நீங்கள் முட்டாளாக இருந்தாலும் உண்மையை முட்டாள்தனமாக உளறியதற்கு நன்றி! இப்பொழுதும் சொல்கிறோம். பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் போராடவில்லை. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட அனைவருக்கும்தான் போராடினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டும்தான் போராடினார் என்று நீங்களாக நினைத்துக் கொண்டிருந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் எல்லாம் நன்றியோடு இருப்பீர்கள் என்றா பெரியார் பாடுபட்டார்? நன்றி பாராத தொண்டுக்குச் சொந்தக் காரராயிற்றே!
நன்றி என்பதற்கு உங்கள் அகராதியில் இடம் உண்டா?
ஆயிரம் பேர் வெள்ளத்தில் சிக்கித் தத்தளிக்கும்; நேரத்தில் அனைவரையும் ஒருவர் துணிச்சலாகக் காப்பாற்றும்போது அவரால் காப்பாற்றப்பட்ட ஒருவர் ~இவர் என்ன பிரமாதமாக என்னை மட்டும் காப்பாற்றிவிட்டார்? ஆயிரம் பேரைக் காப்பாற்றும்போது அதிலே நானும் ஒருவனாக இருந்தேன். என்னை மட்டும் காப்பாற்றியிருந்தால் நான் அவருக்கு நன்றி சொல்வேன். இப்பொழுது அவருக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும்? என்று கேட்கிற நன்றி கெட்டவனுக்கும்  உங்களுக்கும் என்ன வேறுபாடு?
தமிழ்தேசியம் தமிழ்த் தேசியம் என்று பேசுகிறீர்களே! தாழ்த்தப்பட்டவரைத்தவிர பலனடைந்த மற்றவர்களெல்லாம் உங்களுக்குத் தமிழராகத் தெரியவி;லையா? ராஜாஜி தமிழரா? அவர் தமிழனென்றால் மற்ற தமிழனெல்லாம் படிக்கக் கூடாது என்று திட்டம் போட்டது ஏன்?
ராஜாஜியினுடைய முன்னோடி திலகர் இல்லையா? அவர்தானே கீழ்ஜாதிக் காரனெல்லாம் சட்டமன்றத்துக்குச் செல்வதும் மேல்படிப்புப் படிக்கத் தேவையில்லை என்றும் சொன்னார்? அவர் வழியில்தானே ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்? அந்த ராஜாஜிக்கும் திலகருக்கும் என்ன உறவு?
அந்த ராஜாஜி அவ்வளவு சுலபமாக அத்திட்டத்தை வாபஸ் வாங்கினாரா? பெரியார் நடத்திய போராட்டங்கள் சாதாரணமானதா? பிள்ளையார் படத்தைப் போட்டு உடைத்ததும் ராமன் படத்தைச் செருப்பால் அடித்ததும் அதற்காகத்தானே? காங்கிரஸ் தலைவர்களே எதிர்த்தாலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களே எதிர்த்தாலும் அத்திட்டத்தை வாபஸ் வாங்க மாட்டேன் என்று சொன்னவர்தானே உங்கள் ராஜாஜி?
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தபோது ஒரு வாக்கு வித்தியாசத்தில் ராஜாஜி வெற்றி பெற்றாரே! எப்படி என்று தெரியுமா? எந்தக் கட்சி அந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்ததோ அந்தக் கட்சித் தலைவரே அன்று சட்டமன்றத்துக்குச் செல்லவில்லை. சட்டமன்றத்துக்கு வெளியே ஒன்று சட்டமன்றத்துக்கு உள்ளே ஒன்று என்று நடந்து கொண்டு தங்கள் இனத்தவரின் ஆட்சிக்கு எதிராக ஓட்டுப்போடாமல் அந்த ஆட்சியைக் காப்பாற்றினாரே! அந்தத் தலைவர் தமிழரா? அவர் மட்டும் ஓட்டுப் போட்டிருந்தால் அன்றைக்கே ராஜாஜி பதவியைவிட்டு ஓடியிருப்பார். அப்படிச் செய்யாமல் அவர் ஆட்சி காப்பாற்றப்பட்டதே! எப்படி?
அதற்குப் பிறகு புதிய தெம்புடன் குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி அமுல்படுத்திய நேரத்தில் அது எப்படி ஒழிக்கப்பட்டது?
பார்ப்பனர்கள் மூன்று சதவிகிதம். திராவிடர் கழகத்துக் காரனும் மூன்று சதவிகிதம். ஒருவனுக்கு ஒருவன் என்று வைத்தாலும் பார்ப்பன இனத்தைப் பூண்டற்றுப் போகச் செய்யலாம். நாம் அழிந்தாலும் நம்முடைய இனத்தின் கல்விக்கண் திறக்கப்பட்டால் போதும் என்று பெட்ரோலும் தீப் பந்தமும் வைத்துக் கொள்ளுங்கள் தோழர்களே! என்று தன்னுடைய தோழர்களுக்கு ~சாகும் துணிச்சலைக் கொடுத்து| தான் சொல்லுகின்ற நேரத்தில் அக்கிரஹாரத்தைக் கொளுத்துங்கள் என்று உணர்ச்சியூட்டி அதற்கான வழிநடைப் படையை நடத்திவர் பெரியார் அல்லவா? அந்தப் படை சென்னையைச் சென்றடைவதற்குள் குலக்கல்வித் திட்டம் வாபஸ் வாங்கப் படவில்லையென்றால் அக்கிரஹாரத்தைக் கொளுத்துவோம் என்று சொன்னவர் பெரியார் அல்லவா?
அதற்குப் பிறகும் ராஜாஜி மசிந்தாரா? திட்டத்தை வாபஸ் வாங்கினாரா? இல்லையே! திட்டத்தை வாபஸ் வாங்காமலேயே உடல்நிலை சரியில்லையென்று கூறி பதவியை ராஜினாமா செய்தாரே தவிர திட்டத்தை வாபஸ் வாங்கவில்லையே! அந்த ராஜாஜி உங்களுக்கு நல்லவர்? பெரியார் துரோகியா?

“கணக்கு வழக்கு இன்றி தீண்டாமை அனுபவித்த 'நாடார்' சமூகத்துக்காக பெரியார் உழைத்ததை தான் இன்று அவர் ஏதோ 'தாழ்த்தப்பட்டோருக்காக' போராடினார் என்று சப்பை கட்டு கட்டுகின்றனர். முத்துராமலிங்க தேவர்ää ராஜாஜி உட்பட பலரும் பறையர்இநாடார் போன்றோருக்கு 'மதுரை மீனாட்சி அம்மன்' கோவிலுக்குள் நுழைய 'ஆலைய நுழைவு போராட்டம்' நடத்தியுள்ளனர். ஆனால்ää பெரியார் நாடாரை விடுத்து இன்று தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் யாருக்காகவும்ää எங்கேயும்ää எந்த காலத்திலும் ஒரு சிறு துரும்பையும் தூக்கி போட்டது இல்லை”.

இப்படியும் ஒரு பிரச்சாரத்தை தாழ்த்தப்பட்டோர் மத்தியிலே செய்து வருகிறது ஒரு கும்பல். பெரியார் ஒரு மனித உரிமைப் போராளி. யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களுக்காகப் போராடுவது அவருடைய கொள்கை. மானுட நேயத்தோடு அவர் நடத்திய போராட்டத்தைக் கொச்சைத் தனமாகப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றால் அது அவர்களது மன வக்கிரத்தையே காட்டுகிறது.
அவர்களே சொல்லுகிறார்கள் ~கணக்கு வழக்கின்றித் தீண்டாமையை அனுபவித்த நாடார்| சமூகம் என்று. அப்படிக் கணக்கு வழக்கின்றிக் கொடுமையை அனுபவித்த மக்களுக்காக் போராடுவது மிகப் பெரிய குற்றமா? அது மிகப்பெரும் மனிதநேயச் செயல் அல்லவா? நாடார்களை நீங்கள் மனிதர்களாகப் பார்க்கவில்லையா?
எப்படிக் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததால் எல்லோருக்கும் பயன் கிடைத்ததோ அப்படித்தான் வைக்கத்தில் நடந்த போராட்டத்தினால் தீண்டாமை எங்கேயும் எந்த வடிவத்திலும் இருக்கக் கூடாது என்கின்ற நிலை ஏற்பட்டு அந்த திருவிதாங்கூர் அரசாங்கமே இனி எங்கும் எந்த வடிவத்திலும் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட மாட்டாது என்று உத்தரவு போட்டது. அந்த உத்தரவில் என்ன நாடார்கள் மட்டும்தான் தெருவிலே நடக்கலாம். மற்ற தாழ்த்தப்பட்டவர் யாரும் நடக்கக் கூடாது என்றா இருந்தது?
அந்த உத்தரவிற்குப் பிறகுதான் சென்னை மாகாணத்தில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் தீண்டாமை ஒழிப்புக்கான தீர்மானத்தைக் கொண்டு வந்து நீதிக்கட்சி அரசால் அது நிறைவேற்றப்பட்டது. அதற்கெல்லாம் முன்னோடியான செயலாகத்தான் பெரியாரின் வைக்கம் போராட்டம் நடந்தது. அதனையே  கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால் இவர்களைவிட மனிதநேயத்துக்கு எதிரானவர்கள் யாராவது இருக்க முடியுமா?
இவர்கள் கூற்றுப்படியே எங்காவது பெரியார் தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினருக்காகப் போராடினார் என்றால் பள்ளனுக்குத்தானே போராடினார். பறையனுக்கா போராடினார்? எனவேää பெரியார் பறையர்களுக்கெல்லாம் எதிரி என்றுகூடப் பேசுவார்கள். அல்லது பள்ளனுக்கா போராடினார்? பறையனுக்குத்தானே போராடினார். அதனால் அவர் பள்ளனுக்கு எதிரி என்று பேசுவார்கள். இவர்களது சுயநலமும் வக்கிரபுத்தியும் அப்படி அவர்களைப் பேச வைக்கிறது.
முத்துராமலிங்கத் தேவரையும் இராஜாஜியையும் பாராட்டிப் பேசுகின்ற இவர்கள் பெரியாரை மட்டும் தாழ்த்திப் பேசுவது ஏன்? முத்துராமலிங்கத் தேவர் தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டவரா? அல்லது அவரது சமுதாயம் தீண்டாமையைக் கடைப்பிடிக்காத சமுதாயமா?
நாடார்களின் கோயில் நுழைவுப் போராட்டத்தை எதிர்த்தவர்கள் யார்? முழுக்க முழுக்க தேவர் சமுதாயம்தானே? திருச்செந்தூர் கோயிலிலாகட்டும்ä,திருவில்லிப்புத்தூர் கோயிலிலாகட்டும், சிவகாசி போன்ற கோயில்களிலாகட்டும் அக் கோயில்களெல்லாம் சேதுபதி மன்னர் கட்டுப்பாட்டில்தானே இருந்தது? அவர்கள்தானே நாடார்கள் கோயில் நுழைவை எதிர்த்து லண்டன் பிரிவி கவுன்சில்வரை வழக்குப் போட்டவர்கள்? மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் நாடாரை எதிர்த்தவர்கள் பார்ப்பனர்களும்  தேவர்களும்தானே?
பார்ப்பனர்களின் ஆலோசனையை ஏற்று அவர்கள் எடுத்துவைத்த ஸ்ருதி, ஸ்மிருதி, புராண - இதிகாசங்கள், மனுதர்மம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டுதானே வெள்ளைக்கார நீதிபதி நாடார்களுக்குக் கோயிலில் நுழைய உரிமை இல்லை என்றதோடு எந்தெந்த வருணத்தார் எந்தெந்த இடத்தில் நின்று கடவுளை வழிபடலாம் என்று தீர்ப்புச சொன்னான்? அப்படிச் சொன்னதில் நாடார்கள் கொடிமரம் வரை செல்லலாம் என்று தீர்ப்புச் சொன்னவன் தாழ்த்தப்பட்டவன் எங்கே நிற்கவேண்டும் என்று சொன்னான் தெரியுமா? கோயிலுக்குள்ளேயே தாழ்த்தப்பட்டவன் வரக்கூடாது. கோபுரம் எவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்தால் தெரிகிறதோ அவ்வளவு தொலைவிலிருந்துதான் வழிபட வேண்டும் என்று சொல்லப்பட்டதா? இல்லையா? இதற்கெல்லாம் காரணம் யார்? இந்நாட்டுப் பார்ப்பனர்கள் அல்லவா?  அந்தப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்த பெரியார் உங்களுக்கு எதிரியா?
அத்துடன் முத்துராமலிங்கத் தேவர் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் போராடியதாகச் சொல்லுகிறீர்களே! அது உண்மையானால் முதுகுளத்தூர் கலவரம் ஏன் நடந்தது? அதற்கு முன்பு அப்பகுதியில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை என்ன? அதனை எதிர்த்து முத்துராமலிங்கத் தேவர் செய்த காரியங்கள் என்ன? இம்மானுவேல் சேகரன் ஏன் கொல்லப்பட்டார்? இதற்கெல்லாம் நாணயமான பதிலை உங்களால் சொல்ல முடியுமா?
ஒருவேளை அங்கு நடந்த கொடுமைகள் பள்ளர்களுக்குத்தான் நடந்தது. பறையர்களுக்கு இல்லை. எனவே பள்ளர்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் கொடுமைகளே அல்ல பறையர்களுக்குக் கொடுமை நடந்தால்தான் அதனைக் கண்டிப்போம். எனவே அதனைக் கண்டிக்க மாட்டோம் என்று சொல்வீர்களா?
சாணார்களுக்கு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோ அத்தனை கட்டுப்பாடுகளும் இராமநாதபுரம் பகுதியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் விதிக்கப்பட்டதா? இல்லையா?
ஆண்கள் காலில் செருப்பு அணியக்கூடாது, வெயிலுக்கோ, மழைக்கோ  குடை பிடிக்கக்கூடாது,தோளில் துண்டு அணியக் கூடாது, திருமணங்களில் குதிரை மீதேறி ஊர்வலம் வரக்கூடாது, விருந்துகளில் நெய் ஊற்றிச் சாப்பிடக்கூடாது என்றும்
பெண்கள் மேலாடை அணியக்கூடாது, தங்கநகை அணியக் கூடாது, உலோகப் பாத்திரத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது, என்றும் இன்னும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டதா? இல்லையா?
அதை மீறியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்டார்களா? இல்லையா? விவசாய வேலை செய்யும்போது கொடுக்கின்ற கூலியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர போதவில்லை என்று கேட்கக்கூடாது என்றெல்லாம் கூடக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதா? இல்லையா?
அத்தகைய தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையின்போது தேவருக்கு நிகராக நாற்காலியில் கால்மேல் கால்போட்டுக் கொண்டு அம்ர்ந்திருந்தார், தேவருக்கு எதிரில் சிகரெட் பிடித்தார் என்பதால்தானே இம்மானுவேல் சேகரன் பரமக்குடி பேருந்து நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார்?
அந்த தேவர் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தாராம். பெரியார் ஒன்றும் செய்யவில்லையாம். எப்படி இருக்கிறது கதை?
நாடார்கள் கோயில் நுழைவு தொடர்பாக 1922ல் திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் விவாதம் வந்தபோது நாடார்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது இது சாஸ்திரத்துக்கு விரோதமானது என்று சொன்னவர் வைத்தியநாத அய்யர. அதனால்தான் பெரியார் அவரைக் கண்டிக்கும் வகையில் அப்பொழுதே இந்த ஜாதிகளைப் பாதுகாக்கும் மனுதர்மம், இராமாயணம், பாரதம், கீதை ஆகியவைகளைத் தீ வைத்துப் பொசுக்க வேண்டும் என்று சொன்னார்.
அப்படி நாடார்களின் கோயில் நுழைவையே ஏற்றுக் கொள்ளாத வைத்தியநாத அய்யர் போன்றவர்கள் மதுரைக் கோயிலில் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறதே, எப்படி?
வடபுலத்தில் அண்ணல் அம்பேத்கர் தீண்டாமைக்கு எதிராகப் போராடி வந்தார். பெரியாரின் வைக்கம் போராட்டம்தான் அம்பேத்கர் நடத்திய மகாத் குளப் போராட்டத்துக்கு உந்துசக்தியாக இருந்தது என்று அம்பேத்கரே சொல்லி இருக்கிறார். அந்த அண்ணல் அம்பேத்கர் இந்த உயர் ஜாதிக் காரர்களோடும் பார்ப்பனர்களோடும் போராடிப் பயனில்லை. அதனால் நான் மதம் மாறப் போகிறேன் என்று சொன்னார். அப்படி தாழ்த்தப்பட்டவர்களெல்லாம் மதம் மாறிவிட்டால் தங்களுக்கு அடிமைவேலை செய்ய ஆள் இல்லாமல் போய் விடுவார்களே என்பதால்தான் அவர்களை மதம் மாறவிடாமல் தடுத்து தங்கள் மதத்திலேயே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் எனறு ஏமாற்றுவதற்காக நடத்திய நாடகம்தான் இந்த மீனாட்சி கோயில் நுழைவு என்பது. அதில் கலந்துகொண்ட ராஜாஜி, முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்கள் தீண்டாமை ஒழிப்பு வீரர்கள், பெரியார் எதிரானவரா?
பெரியார் தமிழர் இல்லை என்கிறீர்கள். அப்படியானால் அம்பேத்கர் தமிழரா? அவரும் மகார்களைத்தான் பவுத்த மதத்துக்கு அழைத்துச் சென்றாரே தவிர அனைத்துத் தாழ்த்தப்பட்டோரையும் அவரால் அழைத்துச் செல்ல முடியவில்லை. மற்றவர்கள் யாரும் அம்பேத்கரை நம்பவில்லை. அதனால் அம்பேத்கர் மகார்களுக்கு மட்டும்தான் தலைவர். ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தலைவர் அல்ல என்று சொல்வீர்களா? என்னய்யா உங்கள் பித்தலாட்டம்?
சரி, தாழ்த்தப்பட்டோர் என்பவர்தான் யார்? பள்ளனா? பறையனா? சக்கிலியனா?
பள்ளன் பறையனை ஏற்றுக் கொள்வதில்லை. பறையன் பள்ளனை ஏற்றுக் கொள்வதில்லை. அந்த இரண்டு பேரும் சக்கிலியனை ஏற்றுக் கொள்வதில்லை. பள்ளனுக்கும் பறையனுக்கும் சேவை செய்ய புதிரை வண்ணான் என்ற பிரிவை வைத்து மற்ற மேல் ஜாதியார் உங்களை எப்படிக் கீழான நிலையில் நடத்துகிறார்களோ அதைவிடக் கீழான நிலையில் அந்தப் புதிரை வண்ணாரை நடத்துகிறீர்கள்.
அத்துடன் சக்கிலியனை தமிழன் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். நாங்கள் மனிதர் என்று சொல்கிறோம். அருந்ததியர்தான் சமுதாயத்திலேயே மிகமிகக் கீழான நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். மனிதாபிமானமற்ற முறையில் மனித மலத்தைத் தலையிலே சுமக்க வைக்கப்பட்டவர்கள் அவர்கள். அவர்களை உங்களோடு இணைத்துக் கொள்ளமாட்டோம் என்பதே மனிதத் தன்மையற்ற செயல்.
அத்தகைய மனிதத் தன்மையற்ற நீங்கள்தான் தனக்கு ~இனப்பற்றோ, ஜாதிப்பற்றோ, மொழிப்பற்றோ, நாட்டுப்பற்றோ எந்தப் பற்றும் இல்லை. எனக்கு இருப்பது மனிதப் பற்று ஒன்றுதான்| என்று சொன்ன பெரியாரை நாயக்கர் என்று முத்திரை குத்துகிறீர்கள்.
தன்னைப் பற்றிச் சொல்லுகின்றபோது பெரியார் இந்தப் பணியைச் செய்வதற்கு எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, வேறு யாரும் இப்பணியைச் செய்ய முன் வராததால் நானே எனது தோள்மீது போட்டுக்கொண்டு அதே பணியாய்  இருந்து வருகிறேன்| என்று சொல்லுகிறார். எதற்காக அப்படிச் சொல்லுகிறார்? ~உலகிலுள்ள மற்ற சமுதாய மக்களைப் போல மானமும் அறிவுமுள்ள சமுதாயமாக தமிழ்ச் சமுதாயத்தை மாற்ற வேண்டும்| என்பதற்காகச் சொல்லுகிறார்.
அப்படி மானஉணர்ச்சி தமிழனுக்கு வந்துவிடக் கூடாது என்று எண்ணுபவராகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள். அதனால்தான் பெரியாரை மானுட நேயராகப் பார்க்க முடியவில்லை. வெள்ளையரான ஆபிரஹாம் லிங்கன் கறுப்பர்களுக்காக உழைத்தபோது எந்தக் கறுப்பரும் வெள்ளையரான உங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. என்று சொல்லவில்லை.
ஆனால் தங்கள் இன்னல்களுக்கெல்லாம் காரணம் தலைவிதி என்றும், பாவம் என்றும், புண்ணியம் என்றும் மறுஜென்மம் என்றும் திக்குத் தெரியாமல் தவித்த  மக்களிடையே ~இது உன் தலைவிதியன்று, ஆதிக்கவாதிகள் செய்த சதி| என்று சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி சுயமரியாதை உணர்வூட்டிய பெரியாரை  நாயக்கர் என்ற வட்டத்துக்குள் அடைப்பது உங்களுடைய கோணல் புத்தியே தவிர வேறல்ல.
~~மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது@ கண்ணில் படக்கூடாது@ தெருவில் நடக்கக்கூடாது@ கோயிலுக்குள் போகக்கூடாது@ குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கிறவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, பூமிப்பிளவில் அமிழச்செய்யாமலோ, சண்டமாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது? என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும், அஹிம்சா தர்மத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? இம்மாதிரியான மக்கள் இன்னும் ஒரு நாட்டில் இருந்துகொண்டு உயிர் வாழ்வதைவிட அவர்கள் இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கிறீர்களா?| என்பதும் எனக்கு விளங்கவில்லை.
இம்மாதிரி மனித சமுதாயத்தை கொடுமைப்படுத்தி அடக்கி வைத்துக் கொண்டிருக்கிற நாடு சுயராஜ்யம் என்றோ, அரசியல் சுதந்திரம் என்றோ, பூரணவிடுதலை என்றோ வாயினால் உச்சரிக்கவாவது யோக்கியதை உடையதாகுமா? என்று கேட்கிறேன். சிலர் சுயராஜ்யம் வந்தால் இவை ஒழிந்துபோகும் என்று சமாதானம் சொல்லக்கூடும். அவர்களை நான் கேட்கிறேன். சுயராஜ்யம் மட்டுமல்ல தர்மராஜ்யமும் அவதார ராஜ்யமும் ராமராஜ்யமும் சத்தியராஜ்யமும் சத்திய சந்தன ராஜ்யமுமாகிய அரிச்சந்திர ராஜ்யமும் மற்றும் கடவுளே அரசாண்டதாகச் சொல்லும் அரசாட்சிகள் உள்ள காலத்தில்தானே இவைகள் உண்டாக்கப்பட்டதாகவும் இவற்றை சரிவரப் பரிபாலித்து வந்ததாகவும் இவை மகாக்கிரமமாக நடைபெற்று வந்ததாகவும் சொல்லப்படுகின்றன. அந்த ராஜ்யங்கள் வருமானால் இக்கொடுமைகள் குறையுமா? அதிகரிக்குமா? என்று கேட்கிறேன்.                              என்று தந்தை பெரியார் அவர்கள் பேசி 02-12-1928 லேயே குடியரசு இதழில் வெளிவந்தது.
பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னதற்கும் சுயராஜ்யம், அரசியல் சுதந்திரம், பூரண விடுதலை என்று பேசுவதற்கு முன் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்படி இல்லையேல் இந்நாட்டிற்கு சுதந்திரமே வேண்டாம் என்று சொன்னதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்த கொடுமைகளே காரணமாயிருக்கும் போது பெரியார் தாழ்த்தப்பட்டோருக்காக ஒரு துரும்பையும் தூக்கிப் போட்டதில்லை என்கின்ற பிரச்சாரம் அயோக்கியத் தனமானது.

"துணி விலை உயர்ந்ததுக்கு காரணம் பறைச்சி எல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சதால தான்இ வேலை இல்லா திண்டாட்டத்துக்கு காரணம் பள்ளன் எல்லாம் படிக்க ஆரம்பிச்சதால தான்இ அரிசி விலை உயர்ந்ததுக்கு காரணம் கள்ளு குடிக்கிறவன் எல்லாம் சோறு திங்கிரதால தான்" முரசொலி பத்திரிகையில் வெளியானது
தாழ்த்தப்பட்டோர் பற்றி இப்படி மிக உன்னதமான கருத்துகளை வைத்திருந்த பெரியார் அவர்களுக்காக எந்த ஒரு போராட்டத்தையும் எங்கும் எப்போதும் நடத்தியதே இல்லை. இது அதிர்ச்சி அளிக்க கூடிய மிகவும் கசப்பான உண்மை. இதில் இருந்து பெரியார் 'தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர்' என்று கூறி வந்தது சரி தானா என்று தீர்மானிப்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

இப்படியும் ஒரு குற்றச்சாட்டை தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபடுவதாகச் சொல்கிறவர்கள் சொல்லி வருகிறார்கள்.

ஆர்எஸ்எஸ் காரர்களும் பார்ப்பனர்களும் எப்படிப்பட்ட தில்லுமுல்லு திருகுதாள வேலைகளைச் செய்வார்களோ அப்படிப்பட்ட திருகுதாள வேலைதான் இது.
பெரியாருடைய பேச்சுக்கள் எழுத்துக்கள் 480 தலைப்புக்களிலும் பெரியார் களஞ்சியங்கள் 32 பாகங்களாகவும் பெரியார் சிந்தனைகள் 3 பாகங்களாகவும் குடியரசுத் தொகுப்புக்கள் 40க்கு மேலும் வந்துள்ளன. அதில் உள்ளதுதான் ஆதாரமானவை. அதிகாரப் பூர்வமானவை. அப்படி இல்லாமல் மற்ற பத்திரிகைகளில் வந்ததெல்லாம் எதுவும் உண்மையானவை என்று சொல்ல முடியாது.
பெரியார் இவ்வாறு சொன்னார் என்று நீங்கள் கூறுகின்ற காலக்கட்டம் எது?
1962ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் இப்படிப் பேசியதாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன. இவையெல்லாம் தேர்தலுக்காகச் செய்யப்படுகின்ற மலிவான அயோக்கியத்தனமான பிரச்சாரங்களாகும்.
அந்தக் காலக்கட்டமானது சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்ற காலமாகும். காமராசரின் பொற்கால ஆட்சியில் தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் கல்வி நீரோடை பெருகி அனைவரும் டாக்டர்களாகவும்ää இஞ்சினியர்களாகவும்ää ஆசிரியர்களாகவும்ää எப்பொழுதும் இல்லாத அளவுக்குப் பட்டமும் பதவிகளும் பெற்ற காலமாகும். தாழ்த்தப்பட்டவர்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களிலும் படித்தவர் எண்ணிக்கை அதிகமானது. ஏராளமான பள்ளிக் கூடங்கள்ää கல்லூரிகள்ää தொழிற்சாலைகள்ää அணைக்கட்டுகள் உருவாக்கப்பட்டன.
அப்படிப்பட்ட பொற்கால ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக தேர்தலில் இராஜாஜியோடு திமுகää கம்யூனிஸ்ட்ää தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்புää முஸ்லிம் கூட்டமைப்பு எல்லோரும் கூட்டுச் சேர்ந்து காமராசர் ஆட்சியை வீழ்த்தத் திட்டமிட்டனர். அந்த ஆட்சி மீது வேறு எந்தக் குற்றச்சாட்டையும் கூறமுயாதவர்கள் விலைவாசி ஏறிப்போச்சுää வேலையி;ல்லாத் திண்டாட்டம் பெருகிப் போச்சுää அரிசிவிலை கூடிப்போச்சு என்று கூச்சல்  போட்டார்கள்.
இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்தவர்கள்தான் திமுக, கம்யூனிஸ்ட், தாழ்த்தப்பட்டோர்ä,முஸ்லிம்கள் எல்லோருமே. ஆனால் தேர்தலுக்காகச் சந்தர்ப்பவசமாகக் கூட்டுச் சேர்ந்துவிட்டு காமராசர் ஆட்சியை வீழ்த்தி விட்டு இராஜாஜியை ஆட்சியில் அமர்த்த இவர்கள் துடித்தார்கள். இராஜாஜியும் நான் இராமன். இவர்களெல்லாம் குரங்குப்படைகள். என்று இவர்களை வர்ணித்தார்.
அந்த இராஜாஜி 1952ல் ஆட்சிக்கு வந்தபோது திருவான்மியூரில் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அவர்களிடம் பேசுகையில் நீங்களெல்லாம் உங்கள் பிள்ளைகளை அதிகம் படிக்க வைக்காதீர்கள். ஆரம்பக் கல்வி மட்டும் போதும். அத்துடன் துணிகளை சலவை செய்யும்போது கிழியாமல் துவைப்பது எப்படி? அழுக்குப்போகத் துவைப்பது எப்படி என்று கற்றுக்கொடுங்கள். அதற்கு உங்களுக்கு என்ன வசதி வேண்டுமானாலும் அரசாங்கம் செய்து தரும். அதை விடுத்து எல்லோரையும் படிக்க வைத்துவிட்டால் எல்லோருக்கும் எப்படி வேலை வழங்கமுடியும்? என்று கேட்டார் ராஜாஜி.
அப்படிப்பட்ட ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து விட்டு எலலோருக்கும்; கல்வியைக் கொடுத்தவர் காமராசர். ஒருவனுக்குப் படிப்பு என்பது மிகமிக அவசியமானது. அதுதான் அறிவைத்தரும். மானத்தைக் கொடுக்கும். தன்னம்பிக்கையை ஊட்டும். வளர்ச்சியைத் தரும். காலம் காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்திற்கு வெள்ளைக்காரன் காலத்தில் நீதிக்கட்சி அரசு கட்டிய பள்ளிகளையே இழுத்து மூடியவர் ராஜாஜி.
அந்த ராஜாஜியோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு கல்வி வள்ளலாம் காமராசரின் ஆட்சியை ஒழிக்கத் துணை போனவர்கள் காமராசருக்கு எதிராகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு காமராசர் ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. எனவே அந்த ஆட்சியை ஒழித்து விட்டு இராஜாஜியை ஆட்சியலமர்த்துங்கள் என்றும் அவர் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாத் திண்டாட்டத்தையே ஒழித்து விடுவார் என்று பிரச்சாரம் செய்து வந்தார்கள்.
இன்றைக்கும் கூட தினமணி, தினமலர், துக்ளக் போன்ற பத்திரிகைகளில் ராஜாஜி கொண்டு வந்த தொழிற்கல்வித் திட்டம் அமுலாகியிருந்தால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமே இருக்காது என்று எழுதி வருகிறார்கள். இராஜாஜியும் வேலையில்லாத் திண்டாட்டம் இல்லாமல் இருக்க வேண்டுமானால் ஆரம்பக் கல்வி மட்டும் கீழ்ஜாதி மக்களுக்குப் போதும் என்று சொன்னார்.
இதில் காமராசர் கொண்டு வந்த கல்வியினால் வந்த வேலையில்லாத் திண்டாட்டம் வளர்ச்சியின் அறிகுறியா? இராஜாஜியினுடைய குலக்கல்வித்திட்டம் வளர்ச்சியின் அறிகுறியா? தமிழ்த் தேசியவியாதிகளே! பதில் சொல்லுங்கள்.
இன்றைக்கே உங்களைப் போன்றவர்கள் அயோக்கியத்தனமாக இவ்வாறு எழுதும்போது அன்றைக்கும் எழுதியிருக்க மாட்டார்களா? இதில் எது தேவை எனறு உங்களால் நாணயமாகக் கூறமுடியுமா?
ஒரு அரசு மக்களுக்குக் கல்வியைக் கொடுக்க வேண்டியது மிகமிக முக்கியமானது. படித்த மக்கள் அனைவருக்கும் உடனடியாக வேலைவாய்ப்பு அளிப்பது என்பது சற்று இயலாத காரியம்தான். வேலைவாய்ப்பு   அளிக்க முடியாது என்பதைக் காரணமாகக் கூறி யாரும் படிக்காதீர் என்று சொன்ன இராஜாஜியும் அவரால் உருவாக்கப்பட்ட குலக்கல்வித் திட்டமும் சிறந்ததா? வேலையில்லாத் திண்டாட்டம் உருவானாலும் பரவாயில்லை. கல்வி மறுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கல்வி அளிக்கிறேன் என்று சொன்ன காமராசர் ஆட்சி சிறந்ததா? என்ற கேள்விக்கு நாணயமான பதிலை அளிக்காமல் அவர் ஆட்சியை ஒழிக்க தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு உட்பட இராஜாஜிக்குத் துணைபோனபோது பெரியார் இந்த வளர்ச்சியை காலமாற்றத்தை எடுத்துப் பேசி காமராசர் ஆட்சி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக படிக்கவே கூடாது என்று சொல்லப்பட்ட பறையனையெல்லாம் காமராசர் படிக்க வைத்திருக்கிறாரே, அவன் குலத்தொழிலையே செய்துகொண்டிருந்தால் வேலையில்லாத் திண்டாட்டம் என்று பேசுவீர்களா? அப்படிப் படிக்க வைத்த பறையனுக்கு தொழிற்சாலைகளையும் கல்விச்சாலைகளையும் உருவாக்கி வேலைவாய்ப்பைக் கொடுக்கக்  கொஞ்சம் காலம் ஆகத்தான் செய்யும். அதுவரை காத்திருக்க முடியாமல் அவர் ஆட்சியை ஒழிக்கத் துணைபோவது அறிவுடைமையா? என்ற பொருளில் அப்படிக் கேட்டிருக்கலாம்.
அதேபோல கீழ்ஜாதிப் பெண்களெல்லாம் ஒரு காலத்தில் ஜாக்கெட்டே போடாமல் இருந்தார்கள். காமராசரால் கல்வி அறிவு பெற்றவுடன் மான உணர்ச்சி பெற்று ஜாக்கெட் அணிய ஆரம்பித்தார்கள். இதுவும் காலமாற்றத்தின் அறிகுறி. அவர்கள் ஜாக்கெட்டே போடக்கூடாது என்று சொன்ன இந்துமதத்தின் காவலரான இராஜாஜியை ஆட்சியலமர்த்த அவர்களுக்குக் கல்வியையும் கொடுத்து மான உணர்சியை ஊட்டி ஜாக்கெட் அணியக் காரணமாக இருந்த காமராசரின் ஆட்சியை ஒழிக்கத் துணை போகலாமா? என்பதற்காக ஜாக்கெட்டே போட அனுமதி மறுக்கப்பட்ட பறைச்சிகளெல்லாம் காமராசர் ஆட்சியில் ஜாக்கெட் போடுவதன் வளர்ச்சியை எடுத்துச்சொல்லி விலைவாசி உயர்வு என்று பேசுவதன் பித்தலாட்டத்தை எடுத்துச் சொல்ல பெரியார் அப்படிப் பேசியிருக்கலாம்.
அது மட்டுமல்ல இந்துராஜ்யத்தில் மயிர்வரி, முலைவரி என்றெல்லாம் போட்டுக் கொடுமைப்படுத்திய இந்துமத அரசான திருவாங்கூர் சமஸ்தானம். அந்த இந்துமதத்தின் காவலரான இராஜாஜியை ஆட்சியலமர்த்த காமராசர் ஆட்சியில் வரிபோடுகிறார்கள். என்று கூச்சல் போட்டார்கள். அந்தப் பித்தலாட்டத்தையும் கூடப் பெரியார் அம்பலப்படுத்தினார். வரி போடாமல் எந்த அரசாங்கமும் மக்கள் நலத்திட்டங்களை அமுல்படுத்த முடியுமா? என்று இவர்களின் வண்டவாளங்களையெல்லாம் அம்பலப்படுத்தினார்.
அது மட்டுமல்ல, அன்று எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் படத்தை எடுத்துப்போட்டு ஏழைப் பங்காளர் வாழும் குடிசையைப் பாரீர்! என்று கூடத்தான் பிரச்சாரம் செய்தார்கள். அதனால் அந்த சத்தியமூர்த்தி பவன் காமராசருக்குச் சொந்தமானது என்று கூறமுடியுமா? அத்துடன் காமராசருக்கு ஸ்விஸ் வங்கியில் பணம் இருக்கிறது என்றும் பேசினார்கள். இதெல்லாம் உண்மையா?
இவ்வாறு எதிர்க்கட்சிகள் அன்று சொன்னதையெல்லாம் எடுத்துப்போட்டு பெரியாரைக் கொச்சைப்படுத்த நினைப்பது அயோக்கித்தனமானது.
பெரியார் பேசியதை எழுதியதை முழுவதும் சொல்லாமல் இடையிலுள்ள ஒன்றிரண்டு வார்த்தைகளை எடுத்துப்போட்டு பெரியார் எதற்காகச் சொன்னரோ அதற்கு நேர்மாறான பொருள் வருவதுபோல் பிரச்சாரம் செய்வது அன்றுமுதல் இன்றுவரை பார்ப்பனர்களுக்கும் அவர்களது பாதந்தாங்கிகளுக்கும் கைவந்த கலை.
அந்தத் திரிபுவாதமான பிரச்சாரங்களை இன்றைக்கும் செய்து பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரி என்று பேசுகின்ற உங்களைப் போன்ற அயோக்கியர்கள் இருக்கும்வரை தாழ்த்தப்பட்ட சமுதாயம் முன்னேறவே முன்னேறாது.

'இந்தி எதிர்ப்பு போராட்டம்':
பெரியாரின் இந்த போராட்டத்தின் நோக்கம் இந்தியால் தமிழ் கெட்டு விடும் இ அதை காப்பhற்ற வேண்டும் என்ற நோக்கம் இல்லை. பிராமணர்கள் பெரும்பான்மையானோர் இந்தி கற்று வைத்திருந்தனர்இ எனவே அவர் இந்தியை எதிர்த்துஇ ஆங்கிலத்தை வலியுறுத்தினார். இந்த போராட்டத்தால் தமிழுக்கோஇதமிழருக்கோ எந்த பலனும் இல்லை.

இப்படியும் ஒரு பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.

இதில் ஒரு உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். பிராமணர்கள் பெரும்பான்மையோர் இந்தி கற்றுவைத்திருந்தனர். எனவேää அவர் இந்தியை எதிர்த்து ஆங்கிலத்தை வலியுறுத்தினார் என்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆக பார்ப்பனர்களுக்கு நன்மை செய்வதற்காகவே இராஜாஜி இந்தியைத் திணித்தார். என்பதையும் அவர்கள் ஒத்துக் கொண்டுள்ளார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பெரியார் ஒன்றும் செய்யவில்லை என்று பித்தலாட்டமாகக் கூறுகிறார்களே! இந்த இந்தி எதிர்ப்பில் பலனடைபவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லையா?
தமிழையே படிக்கக் கூடாது என்ற சமுhயத்துக்கு முதல் முதல் கல்வி வாய்ப்பளிக்கும்போது தமிழே தடுமாறத்தானே செய்யும். அத்தகையவர்களிடம் இந்தியையும் கற்றுக்கொள் என்று சொன்னால் அவனால் தொடர்ந்து கல்வி கற்க முடியுமா? படிக்க முடியாமல் அவன் ஓடவேண்டும் என்கின்ற சதி அதில் இருக்கிறதா? இல்லையா?
பெரியார் இந்தியை எதிர்த்தது தமிழுக்கும் தமிழருக்கும் பலனனளிக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமல்லää இராஜாஜி இந்தியைத் திணித்ததன் நோக்கம் தமிழருக்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் கேட்டினை உருவாக்கி பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே. அதனைக் கண்டிக்கத்தான் பெரியார் இந்தி எதிர்ப்புப் போரினை நடத்தினார்.
பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தினர். தங்களது வேதää புராணää இதிகாசங்கள்ää ஸ்ருதிää ஸ்மிருதி அனைத்தையும் சமஸ்கிருதத்தில் எழுதிக்கொண்டனர். ஆனால் அந்த சமஸ்கிருதத்தை வேறு யாரும் படிக்கக் கூடாது என்று தடுத்து வைத்தனர். அதனால் அந்த சமஸ்கிருதம் பேசுவதற்கே ஆளில்லாமல் செத்தமொழி ஆனது.
அந்த செத்த மொழியை சிம்மாசனத்தில் அமர்த்த ஆசைப்பட்டனர் பார்ப்பனர்கள். வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போனபிறகு சமஸ்கிருதத்தை ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்று முயற்சித்தனர். இந்த நாட்டை இந்துநாடாக அறிவித்து வருணாசிரம தருமத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டு; என்று விரும்பிய ஆர்எஸ்எஸ் இயக்கம் இந்த நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாகக் கொண்டுவர விரும்பியது. உடனடியாக சமஸ்கிருதத்தைக் கொண்டு வரமுடியாது என்பதற்காக இடைக்காலமாக இந்தியை தேசியமொழியாக அங்கீகரிக்கலாம் என்பது ஆர்எஸ்எஸ் ஸின் திட்டம். அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவே இராஜாஜியும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார்.
சமஸ்கிருதம் ஆட்சிமொழி ஆக்கப்பட்டு மனுதருமம் நிலைநாட்டப்பட்டால் வருணாசிரமம் தலைதூக்காதா? அந்த வருணாசிரமம் தலைதூக்கினால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலை என்ன?
சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்று மனுதருமம் கூறவில்லையா? சூத்திரனுக்குக் கீழே வைக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டவர்களை மனுதருமம் சண்டாளன் என்று கூறவில்லையா? அந்த சண்டாளன் என்பவன் பிராமணப் பெண்ணுக்கும் சூத்திர ஆணுக்கும் விபச்சாரத்தில் பிறந்த பிள்ளை என்று கூறப்படவில்லையா?
நான்கு வருணங்களும் இன்று நாலாயிரம் ஜாதிகளாகப் பிரிந்து கிடப்பதற்குக் காரணம் ஒரு ஜாதி ஆணும் இன்னொரு ஜாதிப்பெண்ணும் விபச்சாரம் செய்ததால் வேறொரு ஜாதியாக மாறியது என்று மனுதருமம் கூறவில்லையா?
ஆக நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் விபச்சாரி பிள்ளைகள் என்று மனுதருமம் சொல்லுகிறது. அந்த மனுதருமம் இன்னும் இந்திய அரசியல் சட்மாக ஆக்கப் படவில்லையானாலும் ~இந்துலா| என்பதற்கு அடிப்படை மனுதருமம்தான் என்று இந்திய அரசியல் சட்டம் சொல்லுகிறது. இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நீக்கி விட்டு ஜாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அரசியல் சட்டத்தை மாற்றவேண்டும் என்று போராடி ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் அரசியல் சட்டத்தை எரித்து சிறையேகிய பெரியார் என்ன நாயக்கருக்கு மட்டுமா போராடினார்? மானமுள்ள அத்தனை பேருக்கும் போராடினார்.
மான உணர்ச்சியற்ற மாக்கள்தான் பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எதுவும் செய்யவில்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் எதுவும் செய்யவில்லை என்பார்கள்.
பெரியார் உண்மையில் தாழ்;த்தப்பட்டவர்களுக்காகவும் போராடவில்லை. பிற்படுத்தப் பட்டவர்களுக்காகவும் போராடவில்லை. மான உணர்ச்சியுள்ள மக்களுக்காக மட்டும்தான்; போராடினார்.
தீண்டாமை ஒழிய வேண்டுமானால் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். ஜாதி ஒழிக்கப்பட வேண்டுமானால் மதம் ஒழிக்கப்பட வேண்டும். மதம் ஒழிக்கப்பட வேண்டுமானால் பார்ப்பான் ஒழிக்கப்பட வேண்டும். இவைகளைப் பாதுகாக்கும் சாஸ்திரங்கள்ää புராணங்கள்ää இதிகாசங்கள்ää கீதைää மனுதருமம்ää சம்பிரதாயங்கள்ää மூடப்பழக்க வழக்கங்கள்ää ஆத்மாää மோட்சம்ää பிதிர்லோகம்ää மறுபிறப்புää பேய்ää பிசாசுää பில்லிää சூன்யம்ää அத்தனையும் ஒழிக்கப்பட வேண்டும் என்றுகூறி அதற்காகவே தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் கழித்து தன் இறுதி மூச்சு அடங்குகிறவரை பாடுபட்ட தலைவரை கொச்சைப் படுத்துகிறார்கள் என்றால் ஒன்று அவர்கள் நன்றியற்றவர்களாக இருக்க வேண்டும். அல்லது தன்மான உணர்ச்சியற்ற சுயநலக் கும்பலாக இருக்க வேண்டும்.
இந்த ஜாதி ஒழிக்கப் படுவதால் முதல் நன்மை யாருக்கு? பார்ப்பனருக்கா? அவர் அந்தணர்ää ஆண்டவனை விட மேலானவர் என்ற அந்தஸ்திலே இருக்கிறார். அதைவிட்டுவிட்டு அவர் எல்லோருடனும் சரிசமமான மனிதராக மாறுவதால் அவருக்கு நட்டமே! அடுத்து ஜாதி ஒழிவதால் வெள்ளாளருக்கு நன்மையா? முதலியாருக்கு நன்மையா? நாயுடுவுக்கு நாயக்கருக்கு என்ன நன்மை? செட்டியார்ää ரெட்டியார் யாருக்குத்தான் நன்மை? அல்லது நீங்கள் சொல்லுகிறீர்களேää தமிழ்ச்சாதிகள் அவர்களில் யாருக்காவது நன்மையிருக்கா?
அந்தத் தமிழ்ச்சாதிகள்தானே இன்றைக்கும் தாழ்த்தப்பட்டவர்களை அடிமையாய் நடத்துபவர்கள். நீங்கள் சொல்லுகிற தமிழர் அல்லாதவருக்கும் அடிமையாக இருந்துகொண்டு இந்தத் தாழ்த்தப்பட்டவர்களையும் அடிமைகளாக நடத்த அடியாள் படையாக இருந்து இந்த ஜாதியைப் பாதுகாப்பவர்கள் உங்கள் தமிழ்ச் சாதிகள்தானே!
அந்தத் தமிழ்ச்சாதிகள் தாழ்த்தப்பட்டவனும் தமிழன்தானே! அவனை மனிதனாகவாவது நடத்துவோம் என்றாவது ஒருநாள் நினைத்திருப்பார்களா? தருமபுரியிலே தமிழ்ச்சாதியான வன்னியப் பெண்ணைக் காதலித்தவன் தமிழ்ச்சாதியான தாழ்த்தப்பட்டவன்தானே? அதற்காக உங்கள் தமிழ்ச்சாதியான் அனைவரும் சேர்ந்து அந்தத் தமிழ்ச்சாதி தாழ்த்தப்பட்டவனின் வீட்டை இடித்துää கொளுத்தித் தரைமட்டமாக்கிää அவனது உடைமைகளை நாசப்படுத்தி கொடுமை புரிந்தார்களே! அப்பொழுது அவர்களுக்கு நாமும் அவர்களும் தமிழ்ச்சாதிதான். இப்படிச் செய்வதெல்லாம் தவறு என்று அவர்கள் புத்தியில் உறைக்காதது ஏன்?
அந்தத் தமிழ்ச்சாதிகள் பெரியாரின் சாதி ஒழிப்பை ஏற்றுக் கொள்கிறார்களா? அப்படி சாதி ஒழிந்தால் அவர்களும் தங்களுடைய உயர்ஜாதித் தன்மை போய்விடும் என்று ஜாதி ஒழிப்பை எதிர்;ப்பவர்கள்தானே?
பெரியார்தானே அய்யாää நீங்களெல்லாம் உயர்ஜாதி என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே! உண்மையில் மனுதர்மமும் இந்துமத சாஸ்திரங்களும் உங்களைச் சூத்திரன் என்று சொல்கிறது. சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று பொருள். அது மிகமிக இழிவானது. மானத்துக்கும் அறிவுக்கும் கேடானது. அந்த மானத்தையும் அறிவையும் காத்திடவே இன இழிவை ஒழித்திடவே நான் ஜாதியை ஒழிக்க நினைக்கிறேன். அந்த ஜாதியைப் பாதுகாக்க பார்ப்பனர்கள் அரசியல் சட்டத்தில் பல பிரிவுகளை உண்டாக்கி தங்களுடைய உயர்ஜாதித் தன்மையைப் பாதுகாக்க ஏற்பாடு செய்து கொண்டுவிட்டார்கள்.
அந்த இன இழிவை ஒழிக்க ஜாதியைப்; பாதுகாக்கும் சட்டத்தின் நகலைக் கொளுத்துகிறேன் என்று கொளுத்தினார்கள்.
ஆனால் அந்தத் தமிழ்;ச்சாதிகளுக்கும்கூட தனக்குக் கீழே தங்களை ஆண்டே என்று கூப்பிட தங்களுக்கும் கீழே ஒரு ஜாதி இருக்கிறது என்ற பெருமை கிடைக்கும்.
பிறகு இந்த ஜாதி ஒழிப்பினால் யாருக்குத்தான் உடனடி நன்மை? நாயிலும் கீழாய் பன்றியிலும் கேடாய் விலங்குகளுக்கு இருக்கும் உரிமைகூட இல்லாமல் அடித்தட்டில் அவதிப்பட்டானே தாழ்த்தப்பட்ட சகோதரன்ää அவனுக்குத்தான் உடனடி நன்மை. அவன் இந்த விலங்கு நிலையிலிருந்து மனித நிலைக்கு உயர்த்தப்படுகிறான். அந்த ஜாதி ஒழிப்பினுடைய முழுப்பயனையும் அடைபவன் இந்தத் தாழ்த்தப்பட்ட சகோதரன்தான்.
அப்படி விலங்கு நிலையிலிருந்து மனித நிலைக்கு உயர்த்தப் பாடுபட்ட பெரியாரால் தாழ்த்தப்பட்டவனுக்கு எந்த நன்மையும் இல்லை என்று சொல்கிறீர்கள் என்றால் உங்களைவிடக் கீழானவர்கள் கெடுபுத்தி உள்ளவர்கள் யாராவது இருக்க முடியுமா?
அவனுடைய ஜாதி இழிவு நீங்கக் கூடாது. என்றென்றைக்கும் உங்கள் தமிழ்ச்சாதிகளுக்கு அடிமையாக இருக்க வேண்டும் சுடுகாடுகூடத் தனியாக இருக்க வேண்டும் என்ற நிலை மாறக்கூடாது. உங்களுடைய தமிழ்ச்சாதிகளான வன்னியர்கள் இந்தத் தமிழ்ச்சாதியானான தாழ்த்தப்பட்டவனின் பிணத்தை எடுத்துச் செல்ல வழி விடக்கூட மாட்டார்கள். அந்த வன்னியரும் தாழ்த்தப்பட்டவரும் என்றென்றும் மோதிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணம் உள்ளவர்கள்தான் பெரியாரால் தாழ்த்தப்பட்டவனுக்கும் நன்மையில்லை. பிற்படுத்தப்பட்டவனுக்கும் நன்மையில்லை என்று கூறுவான்.
இன்னும் ஒருபடி மேலேபோய் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று போராடினாரே பெரியார், அதன் மூலமாகக் கிடைக்கின்ற பலன் உடனடியாகச் சென்று சேர்வது தாழ்த்தப்பட்டவனுக்கு இல்லையா? ஆண்டவன் சந்நிதியில் அடியெடுத்து வைக்கவே அருகதையற்றவர்கள் என்று இகழப்பட்ட தாழ்த்தப்பட்டவன் ஆலயத்துக்குள்ளும்; செல்லலாம். ஆண்டவனைத் தரிசிக்கலாம். அவனைத் தொட்டு வணங்கலாம் என்பது மாத்திரமல்ல எவனெல்லாம் இவனது கோயில் நுழைவு உரிமையை மறுத்தானோ அவனேகூட இவனிடம் பூஜைத்தட்டைக் கொடுத்து என் பெயரில் பூஜை செய்து ஆண்டவனிடம் ரெக்கமண்ட் செய்யுங்கோ என்று கேட்கக் கூடிய காலமும் உருவாகுமா? இல்லைய?
இவ்வளவு நன்மைகள் பெரியாரின் பேராட்டங்களால் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைத்திருக்கும்போது எந்த நன்மையுமில்லை என்று கூறுகிறீர்கள் என்றால் ஒன்று நீங்கள் கருத்துக் குருடாராய் இருக்க வேண்டும். அல்லது கடவுளைப் பரப்புகின்ற அயோக்கியன் செய்வதுபோல்; தவறான பிரச்சாரம் செய்கின்ற நீங்களும் அயோக்கியர்களாக இருக்க வேண்டும்.
பெரியாரைப் போல் இந்தக் கொள்கைகளுக்காகப் பாடுபட்டவர் யாராவது உலகில் இருக்கிறார்களா? தமிழ்த் தேசிய வியாதிகளில் யாராவது இருக்கிறார்களா?
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் விளக்குமா?
தயவு செய்து மக்களுக்கு உண்மையான வரலாற்றைச் சொல்லாவிட்டாலும் தவறான வரலாற்றைப் பதிவு செய்து வரலாற்றில் கரும்புள்ளி ஆகாதீர்கள் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.
  
ஈவேரா தாழ்த்தப்பட்டவர்களை உய்விக்க வந்தவரா? ~~கோயிலில் சூத்திரர்கள் எதுவரை போகிறார்களோ அதுவரை அரிஜனங்கள் செல்லலாம்|| என்று காந்தி சொன்னபோது சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? நடு சாதியான சூத்திரர்கள் கீழ்ஜாதியாவதை அனுமதிக்கக் கூடாது? என்றார். (வைக்கம் போராட்ட வரலாறு) என்பது இ.முன்னணியின் திரிபுவாதம்.
வைக்கம் போராட்ட வரலாறு என்ற நூலில்
~~காந்தியார் கோவில் பிரவேசத்தைப் பற்றிப் பேசும்போது அதுவும் சுயமரியாதைப் பிரச்சார நிர்ப்பந்தம் காரணமாக கோவில் பிரவேசத்தை அனுமதிக்க வேண்டி வந்தபோது
~~கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரை போகிறார்களோ அதுவரையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லலாம்|| என்று சொல்லி அனுமதித்ததால் அந்த அளவுக்குத்தான் நாடார் சமுதாயம் உட்பட கோவில் பிரவேசமில்லாத எல்லா மக்களுக்கும் அனுமதி கிடைத்தது.
அதன்மீது பெரியார் ஆத்திரப்பட்டு ~~தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா?
பறையன் கீழ்ஜாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?
இந்த அனுமதியானது நடுசாதியான சூத்திரர்கள் என்பவர்கள் இப்போது கீழ்ஜாதியாகவே ஆக்கப்பட்டு விட்டார்கள் ஆனதால் இதை நாம் அனுமதிக்கக் கூடாது. என்று வேகமாகப் பிரச்சாரம் செய்துவந்தார். இதன்மீது காந்தியார் மக்களை ஏமாற்ற வேறு ஒரு தந்திரம் செய்தார். அதாவது ~~இதுவரையில் இதற்குமுன் பிராமணர்களுக்கு என்று மாத்திரம் எந்த இடம் இருந்துவந்ததோ அந்த இடத்திற்குப் பிராமணர்களும் செல்லக்கூடாது@ மற்ற எல்லா சாதியாருக்கும் அனுமதிக்கப்பட்டிருந்த இடம் வரையிலுமேதான் பிராமணனும் செல்லலாம்|| என்று அபிப்பிராயம் கூறி அந்தப்படியே பல கோவில்களில் தடுப்புக்கட்டி தடைசெய்யப்பட்டது.
இதுபற்றி மதுரைக் கோவிலுக்குள் பெரியார் சில தோழர்களுடன் சென்று தடுக்கப்பட்ட இடத்தில் பல பார்ப்பனர்களும் பார்ப்பனத்திகளும் நிற்பதைக் கண்டு அங்கேயே அதுபற்றிக் கிளர்ச்சி செய்தார். பத்திரிகையில் எழுதினார் என்றாலும் அர்ச்சகர் என்ற பெயரில் பார்ப்பனர்களும் பார்ப்பனத்திகளும் உள் மண்டபத்தில் இருந்துதான் வணங்குகிறார்கள். இது எப்படியோ இருந்தாலும் கர்ப்பக்கிரகத்திற்குள் பார்ப்பனன்தான் சிலை இருக்கும் இடத்திற்குள் போகலாம். சூத்திரனோ பஞ்சமனோ போகக்கூடாது என்கிற சாதிமுறைää சாதிபேதமுறை இன்றும்தான் இருந்து வருகிறது.
சாதி ஒழிக்கப்படுவதால் பார்ப்பனர்களுடைய தூய்மை கெட்டுவிடுகிறது என்பதோää தங்கள்நிலைமை அசுத்தமாக்கப்படுகிறது என்பதோ அல்லவே அல்ல. மற்றென்னவென்றால்ää தங்களுக்கு இருந்துவரும் உயர்வும் தனி உரிமைகளும் பாடுபடாமல் பிறர் உழைப்பில் அனுபவிக்கும் சுகபோகமும்ää உயர்வாழ்வும் ஏகபோகமும் எல்லாம் அழிந்துபோகுமே என்கின்ற கவலைதான்.
இதை உத்தேசித்தேதான் சாதி என்பதில் எவ்வித தனிக்கடமையும் இல்லாமல் உயர்வு என்கின்ற உரிமையை மாத்திரம் அனுபவிக்கும்படி சட்டத்தால் பாதுகாப்பு ஏற்படுத்திக்கொண்டார்கள் இதற்குக் காரணம் காந்தியார் செய்த மோசடியும் சூழ்சியும் ஆன மாபெரும் துரோகம்தான். என்றுதான் வைக்கம் போராட்ட வரலாற்றில் இருக்கிறது.
இதில் பெரியாருடைய போராட்டம் என்பது சாதி உயர்வு தாழ்வு கூடாது. பார்ப்பான் பறையன் என்ற வித்தியாசம் கூடாது என்ற கோரிக்கைதானே தவிர சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா வேண்டாமா என்பதல்ல. உண்மை வரலாறு இப்படியிருக்க இ. முன்னணி இடையில் உள்ள ஒரே ஒரு  வரியை மட்டும் எடுத்துக்கொண்டு பெரியார் கருத்தைத் திரிபுவாதம் செய்வது அயோக்கியத்தனமானது.
அத்துடன் காந்தியாரைப்பற்றி பெரியார் சொல்லும் இன்னொரு கருத்து காந்தியின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது. தீண்டாமையை ஒழிக்க காந்தி பாடுபட்டார் என்று கூறப்படும் கருத்து எவ்வளவு போலித்தனமானது என்பது இதில் விளங்குகிறது.
~~நான் காங்கிரசில் இருந்தபோது சமுதாயத்துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது காந்தி தீண்டப்படாதவர்களை பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாவிட்டால் தனிக்கிணறு வெட்டிக்கொடு@ கோயிலுக்குள் விடாவிட்டால் தனிக்கோயில் கட்டிக்கொடு என்றார். பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை எதிர்த்தோம். கிணற்றில் தண்ணீர் எடுக்கப்படும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன் தண்ணீரில்லாமல் சாகட்டும். என்றேன். அவனுக்கு இழிவு நீங்க வேண்டுமென்பது முக்கியமே தவிர தண்ணீரல்ல என்றேன். என்று பெரியார் கூறுகிறார்.
சாதி இழிவு நீங்கவேண்டும். உயர்ஜாதி கீழ்ஜாதி என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் இதன் பொருளே தவிர தண்ணீர் வேண்டுமா வேண்டாமா என்பது அல்ல. அதேபோலத்தான் கோயில் நுழைவு என்பதும் பார்ப்பான்ää சூத்திரன் பஞ்சமன் பறையன் என்ற பேதம் இருக்கக் கூடாது என்பதற்காக கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தினால் பார்ப்பான் மட்டும் கருவறைவரை செல்லலாம். சூத்திரன் செல்லும் இடம் வரை பறைனும் செல்லலாம் என்பது ஜாதியைää பார்ப்பான் உயர்ந்தவன் மற்றவர்கள் கீழானவர்கள் என்ற தத்துவத்தைப் பாதுகாக்கிறது என்பதால் பெரியார் அதனை எதிர்க்கிறார்.
~~பார்ப்பான் என்பது மேல்சாதிக்காரன் என்கிற தத்துவத்தின்மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல்சாதிக்காரன் என்பது பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பது என்கிற தத்துவத்தின்மீது கட்டப்பட்டிருக்கின்றது. இதை நன்றாய் உணர்ந்து இந்தத் தத்துவ அடிப்படையை இடித்தெறிய முயன்றோமானால் பார்ப்பனர்கள் என்கிற வார்த்தையே நாட்டில் இல்லாமல் போய்விடும். பார்ப்பனர் மாத்திரமல்ல. ஒரு சாதிக்கு மற்றொரு சாதி மேல் என்கின்ற தத்துவமே அழிந்துவிடும்.. அது மாத்திரமல்ல சாதி முறையே அடியோடு அழிந்துவிடும்.||
இதனை இந்துமுன்னணி எப்படி திசை திருப்புகிறது பார்த்தீர்களா?
பெரியார் மூன்று மணிநேரம் பேசுவதை பத்திரிகைகள் நான்கு வரி போடுவதையும்ää திருத்தியும்ää மேல் கீழ் சம்பந்தங்களை விட்டுவிட்டுää தப்பர்த்தம் ஏற்படும் முறையில் மொட்டையாயும்ää தங்களுக்கு அனுகூலம் ஏற்படும் முறையிலும் பிரசுரித்து வருவதையும் 10-06-1942 விடுதலையில் பெரியார் எழுதினார். அதையேதான் இந்து முன்னணியும் இன்றளவும் செய்து வருகிறது. பெரியாருடைய முழுப் பேச்சையும் வெளியிட்டால் அதைப் படிக்கும் தங்கள் தொண்டர்கள் எங்கே பெரியார் சொல்வது உண்மைதான் என்று கருதி அதனை திருத்தியும்ää சுருக்கியும் தப்பான பொருள் ஏற்படும்படி செய்து வருகிறார்கள் என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டாகும்.

 

மகாமகா அயோக்கியன்



 தந்தை பெரியார் கடவுளைக்கற்பித்தவனை முட்டாள் என்றுதான் சொன்னார். மனிதனின் முட்டாள்தனத்தை வைத்து அவன் உயிரோடிருக்கும்வரை சுரண்டுவதற்கு சுயநலவாதிகளால் கற்பிக்கப்பட்ட ஒன்றுதான் கடவுள்.
 ஆனால் ஒரு மனிதன் இறந்தபிறகும் அவனது பிள்ளை பேரப்பிள்ளை காலத்திலும் அவர்களை சுரண்டவேண்டும் என்பதற்காகக் கற்பிக்கப்பட்டதுதான் ஆத்மா மோட்சம் நரகம் பிதிர்லோகம் மறுபிறப்பு திதி தெவசம் என்பதெல்லாம். அதனால்தான்
~~ஆத்மா மோட்சம் நரக பிதிர்லோகம் மறுபிறப்பு பேய் பிசாசு பில்லி சூன்யம் இவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன்@ நம்புகிறவன் மடையன் இவற்றால் பலன் அனுபவிப்பவன் மகாமகா அயோக்கியன்|| என்றார் தந்தை பெரியார்.
இறந்தவனுடைய மகன் தன்னுடைய தாய்க்கும் தகப்பனுக்கும் உயிரோடிருக்கும்போது சோறு போட்டானோ இல்லையோ துணிமணி வாங்கிக்கொடுத்தானோ இல்லையோ பெற்றோர் இறந்தபிறகு அய்யரை அழைத்து அவருக்குப்பிடித்த அல்லது அய்யரின் மனைவிக்கு என்னென்ன பிடிக்கிறதோ அதாவது அரிசி பருப்பு நெய் கத்திரக்காய் புடலங்காய் வேட்டி துணிமணி அனைத்தையும் வாங்கிக் கொடுத்து அய்யர் மந்திரம் சொல்லச்சொல்ல தானும் திருப்பிச் சொல்வார்.
அப்படி அய்யர் என்ன மந்திரம் சொல்கிறார்?
 ~~என்மே மாதா ப்ரலுலோபசரதி
 அனனவ் வ்ரதா தன்மேரேதஹா
 ப்தா வ்ருந்த்தாம் ஆபரண்யஹா அவபத்யநாம|| என்பதுதான் அந்த மந்திரம்.
இதன் பொருள் என்ன?
 நான் யாருக்குப் பிறந்தேன்? அப்பா யாரெனத் தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்ப வேண்டியுள்ளது. ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியைக் கொண்டுபோய்ச் சேர்ப்பீர்
 என்பதுதான் அதன் பொருள். இது இராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய இந்துமதம் எங்கே போகிறது? என்ற நூல் பக்கம் 157ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
 தந்தைக்கு கொடுக்கப்படும் திதியிலும் இதே போன்ற மந்திரம் சொல்லப்படுகிறது. 1970 காரவன் ஜூன் இதழில் இராமஅய்யர் என்பவர் அதற்குப் பொருள் எழுதியிருக்கிறார்.
~என் தாய் தன்னுடைய கணவருக்கு உண்மையாய் இராமல் சோரம்போய் பெருவிருப்புடன் பிறனின் விந்துவைப் பெற்றிருக்கலாம். என் தந்தை என அறியப்பட்டவர் அவ்விந்துவைத் தனதெனக் கருதியிருந்தார்.அதனால் நான் தரும் இந்த அவிசை அவர் அடையட்டும் என்பது பொருள்.
   (ஆதாரம் : மானமிகு சு.அறிவுக்கரசு எழுதிய இந்துää ஆத்மாää நாம் என்ற நூல்)
 இது எவ்வளவு பெரிய மானக்கேடு பார்த்தீர்களா? தன்னுடைய தந்தையும் தாயும் சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கின்ற மகனிடம் மகனைவிட்டே பெற்ற தாயை விபச்சாரி என்று நேரடியாகவே சொல்ல வைக்கிறான் பார்ப்பான்.
இது ஆரியக்கலாச்சாரத்தில் இருக்கும் பழக்கவழக்கம். மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஒருவர்கூட தன்னுடைய தகப்பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல.
பாண்டவர்களின் தகப்பனாகக் கூறப்படும் பாண்டுவுக்கு ஒரு சாபம் உண்டு. அவன் எந்தப் பெண்ணைக் கூடினாலும் அவன் தலை சுக்குநூறாக வெடித்து விடும் என்பதுதான் அது. அது தெரிந்தும் குந்திதேவியையும் மாத்ரியையும்; திருமணம் செய்து கொள்கிறான். தன் மனைவிகளுக்கு தன்னால் குழந்தை உண்டாக்க முடியாது என்பதால் குந்திதேவியை அழைத்து வேதமறிந்த பார்ப்பனரோடு கூடி ~புத்ரோற்பத்தி| செய்யுமாறு வேண்டுகிறான். நானும் எனது தாய்க்கு அவ்வாறுதான் பிறந்தேன் என்றும் கூறுகிறான்.
அதேபோல இராமனும் தசரதனுக்குப் பிறந்தவனல்ல. அசுவமேத யாகம் செய்து யாகப்புரோகிதர் மூலமாகப் பிறந்தவர்கள்தான் இராம லக்குமணர்கள். தாங்களும் தங்கள் உண்மையான தந்தைக்குப் பிறக்கவில்லை என்பதும் தெரியும். தங்கள் பிள்ளைகளும் தனக்குப்பிறக்கவில்லை என்பதும் தெரியும். அவர்களுக்கு உண்மையான தகப்பன்மார் யார் என்பதும் தெரியும். அப்படிப்பட்டவர்களுக்கு வேண்டுமானால் இந்த மந்திரம் பொருந்தலாம்.
 ஆனால்ää ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழுகின்ற தமிழர்களிடம் வந்து அவர்கள் கொடுக்கும் காசையும் பெற்றுக்கொண்டு அவர்களுடைய தாயை விபச்சாரி என்று சொல்லுகிறார்கள். அதையும் அர்த்தம் புரியாமல் தமிழனும் திருப்பிச் சொல்கிறான் என்றால் இதைவிட மானக்கேடு ஏதாவது இருக்க முடியுமா? 
 அந்த சொர்க்கத்திலாவது வருணபேதம் இல்லாமல் அனைவரும் சமமாக இருக்கிறார்களா என்றால் மகாபாரதம் சபா பருவத்தில் தருமனுக்கு நாரதன் கூறுவதாக வரும் செய்தி ~பிரம்ம சபையிலும் மற்ற மூன்று வருணத்தாருக்கும் எந்தவித முகச்சுளிப்பும் இன்றி சூத்திரன் பணிவிடை செய்வதாகக் கூறுகிறான்.
 சொர்க்கம் சென்றாலும் பரலோகம் சென்றாலும் ,வைகுண்டம், பிரம்மலோகம் எங்கு சென்றாலும் சூத்திரன் மற்ற வருணத்தானுக்குப் பணிவிடைதான் செய்ய வேண்டுமாம். இதற்காகத்தான் சொர்க்கம் செல்ல வேண்டுமா?
அந்த சொர்க்கம் செல்ல சூத்திரனுக்கு உரிமை உண்டா? சொர்க்கத்திற்கு செல்ல சூத்திரன் என்ன செய்ய வேண்டும்?
ஸ்ரீபாஷ்யம் அபசூத்ராதிஹிரணம் என்ற பகுதியில் இராமானுஜர்  சொல்வதாக இராமானுஜ தாத்தாச்சாரியார் தனது நூலில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
~~பகவானின் உருவத்தை நித்தமும் தியானித்து உபாஸனம் செய்பவர்களுக்குத்தான் மோட்சம். நான் சொல்வது பிராமணர்களுக்கு மட்டும்தான். பிராமணர் அல்லாத சூத்திரர்கள் மோட்சம் அடைய வேண்டும் என்றால் இந்தப்பிறவியை இப்படியே கழித்து அடுத்த ஜென்மாவில் ப்ராமணனாகப் பிறக்க பகவானை பிரார்த்திக்க வேண்டும். ஒருவேளை அடுத்த பிறவியில் பிராமணர்களாகப் பிறக்க அவர்களுக்கு ப்ராப்தம் கிடைக்குமானால் வேத உபநிஷத்துக்களைக் கற்று .. பகவானை தொடர்ந்து தியானித்து மோட்சம் பெறலாம்.|| என்று சூத்திரர்கள் சொர்க்கம் செல்லும் வழியை இராமானுஜர் கூறுகிறார்.
அந்த  புண்யமான சொர்க்கத்தை அடைய விரும்புகிற சூத்திரன் பிராமணர்களையே நன்கு பூஜிக்க வேண்டும் என்று மகாபாரதம் மார்க்கண்டேய ஸ்மாஸ்ய பருவம் கூறுகிறது.
அதேபோல பிராமண ஸ்திரீகளும் சூத்திரர்கள்தான். அவர்கள் அடுத்த ஜென்மாவில்  பிராமணனாகப் பிறக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் சொர்க்கத்தை அடைய முடியும் என்று இராமானுஜர் தனது பாஷ்யத்தில் கூறியுள்ளதாக இராமானுஜ தாத்தாச்சாரி எழுதுகிறார்.
                                    (இந்துமதம் எங்கே போகிறது? பக்கம் 121)
பிராமணப் பெண்களுக்கே சொர்க்கம் செல்ல உரிமையில்லாதபோது மற்ற பெண்கள் சொர்க்கம் செல்ல முடியுமா?
இன்று அறிவியல் முன்னேற்றத்தில் சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் சென்று ஆராய்ச்சி செய்கிறோம். புளுட்டோ கிரகத்திற்கு அனுப்பிய விண்கலம் ஒன்பது ஆண்டுகளுக்குப்பிறகுதான் அதனைச் சென்றடைய முடியும். அவ்வளவு தூரம் அறிவியல் ஆராய்ச்சி நடைபெறும் சூழலில் இந்த மதவாதிகள் சொல்லுகின்ற சொர்க்கம் நரகம், பரலோகம், பிரம்மலோகம், வைகுண்டம் எதையும் யாரும் பார்த்ததாக எந்த தகவலும் இ;ல்லை. இருந்தாலும் அதைப்பற்றிய பிரச்சாரங்களை மதவாதிகள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
அறிவியல் படித்ததாகச் சொல்லிக்கொள்ளும் படித்தவர்களும் அதை நம்பி அந்த இல்லாத சொர்க்கத்திற்கு போவதற்கே உரிமையில்லாத தந்தையும் தாயும் சென்றிருக்கிறார்கள் என்று நம்பி திதிää தெவசம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
சொர்க்கம் செல்ல சூத்திரர்களான பிற்படுத்தப்பட்ட ஆணுக்கே உரிமை இல்லை என்கிறபோது தாழ்த்தப்பட்டவர்கள் சொர்க்கம் செல்ல வழியுண்டா? அவர்கள் எப்பாடுபட்டாலும் சொர்க்கம் செல்ல சாஸ்திரத்தில் வழியில்லை என்பதால்தான் முன்பெல்லாம் பார்ப்பனர் அவர்களுக்கு தெவசம் செய்ய வரமாட்டார்.
 அவர்களுக்கு முடிவெட்டும் தொழிலாளிகூட முடிவெட்டமாட்டார் என்கிறபோது அய்யர் மட்டும் இளித்தவாயரா என்ன?
 அப்படிப்பட்ட தாழ்த்தப்பட்டவர் வீட்டுக்கே இன்று அய்யர் வந்து தோப்பனாருக்கு தெவசம் கொடுக்கச்சொல்லி தட்சணை வாங்கிட்டுப்போகிறார் என்றால் காசுக்காக பார்ப்பான் எதையும் செய்வான் என்பதுதானே இதன் பொருள்?
 அவன் வருமானத்திற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான். தன்மானமிழந்து தமிழன் அவனை அழைத்து அல்லது அவன் இருக்குமிடமான காவிரிக்கரைக்குச் சென்று திதி கொடுப்பது அவமானமில்லையா?
அதனால்தான் நமது மானமீட்பர் தந்தை பெரியார்
~~ஆத்மா, மோட்சம்,நரகம், பிதிர்லோகம், மறுபிறப்பு, பேய் பிசாசு,பில்லி சூன்யம் இவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன், நம்புகிறவன் மடையன், இவற்றால் பலன் அனுபவிப்பவன் மகாமகா அயோக்கியன்|என்று சொன்னார்
 தமிழர்களே! இதற்குப்பிறகும் அயோக்கியன் கற்பித்த திதி தெவசம் இவற்றை செய்து மகாமகா அயோக்கியன் பிழைக்க வழிசெய்து பக்தி என்ற போர்வையில் புத்தியை இழந்து அறிவையும் மானத்தையும் இழக்க வேண்டுமா? சிந்திப்பீர்! பகுத்தறிவு பெறுவீர்!!
                                   இவண் : ~பெல்| ம.ஆறுமுகம்.

பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார்

தொண்டு செய்து பழுத்தபழம் தூயதாடி மார்பில் விழும்ää மண்டைச்சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் என்று புரட்சிக்கவிஞர் அவர்களால் பாராட்டப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற தலைவர் தந்தை பெரியார் வயதில் அறிவில் முதியாராக இருந்தாலும் வாய்மைப்போர் நடத்துவதில் என்றும் இளைஞராக இருந்து இந்த சமுதாயத்தைத்திருத்தி உலிகிலுள்ள மற்ற சமுதாய மக்களைப்போல மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றுகின்ற பணியை தன் வாழ்நாள் முழுதும் செய்தார். அவர் வாழ்நாளில் தன்னுடைய இலட்சியங்கள் நிறைவேறுவதைப்பார்த்து விட்டு இறந்தாலும் இன்னும் அவருடைய கருத்துக்கள் நாட்டு மக்களுக்குத்தேவை என்பதை அனைவரும் உணர்கின்றனர்.
எனக்கு மொழிப்பற்றில்லை@ ஜாதிப்பற்றில்லை@ இனப்பற்றில்லை@ நாட்டுப்பற்றில்லை. எனக்கிருப்பதெல்லாம் மனிதப்பற்றே என்று சொல்லி இந்த சமுதாயத்திற்காகத் தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்த தலைவர் தந்தை பெரியார். நம்நாட்டில் நிலவும் தீண்டாமைக்கெதிராகவும் ஜாதிக்கு எதிராகவும் பெண்ணடிமைக்கெதிராகவும் கடுமையாகப் பாடுபட்டார். அவருடைய உழைப்பால் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் நிலவிய ஜாதி வெறியும் தீண்டாமைக் கொடுமையும் பெண்ணடிமைத்தனமும் மறைந்திருந்தாலும் அது இன்னும் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை.
மனிதனை மனிதன் தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் நிழல் பட்டால் தோஷம் என்ற நிலை உலகில் வேறு எங்கும் காணமுடியாத கொடுமையாகும். எனவே அதனை முற்றாக ஒழிப்பதுதான் மனிதாபிமானம் உடையவர் கடன் என்று அவர் உழைத்தார். ஆனால் இன்னமும் நாட்டின் பல பகுதிகளில் இரட்டைக்குவளை முறை இருக்கிறது. டீக்கடையில் ரெட்டக்குவள இன்னும் ஏனுங்க சாராயக்கடையில்கூட ஒத்தக் குவளங்க@ என்று பாடக்கூடிய அளவுக்கு தீண்டாமை நோய் முற்றிலும் ஒழியாமல் இருந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஜாதிக்கொரு வீதி@ ஜாதிக்கொரு சுடுகாடு என்ற நிலை நிலவி வருகிறது. செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக அய்ந்து தாழ்த்தப்பட்ட தோழர்களைக் கல்லாலேயே அடித்துக்கொலை செய்திருக்கிறார்கள் என்றால் பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார் என்பதையே அது இன்னும் உணர்த்துகிறது.
விடுதலை பெற்ற நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டை விடுதலை பெற்ற நாடாகக் கருத முடியுமா? என்று கேள்வி கேட்டார். ஆனால் ஜாதி தனது பிடிமானத்தை இன்னமும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. மணமக்கள் தேவை என்கின்ற விளம்பரங்களைப் பார்க்கின்ற பொழுது நமது நாட்டில் என்னென்ன ஜாதிகள் ஜாதிகளுக்குள் ஜாதிகள் உட்பிரிவுகள் குலம் கோத்திரம் எல்லாம் எப்படி வேரூன்றி இருக்கிறது என்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. எனவே அத்தகைய ஜாதி முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமானால் பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார்.
ஜாதியை ஒழிக்க பெரியார் சொன்ன வழிகளில் ஒன்று ஜாதிப் பட்டங்களைத் தூக்கி எரிய வேண்டும் என்பது. அவருடைய சிந்தனைகளை ஏற்றுக் கொண்ட தமிழகத்தில் இன்று பலரும் ஜாதிப் பட்டங்களைப் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்வதில் வெட்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் வட மாநிலங்களில் மிகப்பெரிய தலைவர்களாகக் கருதக்கூடிய அரசியல்வாதிகள்கூட சட்டர்ஜிää பானர்ஜிää முக்கர்ஜிää திரிபாதி என்ற ஜாதிப் பெயர்களால்தான் அடையாளம் காணப்படுகிறார்கள். எனவேää வடமாநிலங்களிலும் பெரியாருடைய தேவை அதிகமாக இருக்கிறது. எனவே பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார்.
மனிதசமுதாயம் முன்னேற ஜாதியும் தீண்டாமையும் ஒழிவது எப்படி முக்கியமோ அதைவிட முக்கியமானது மனிதகுலத்தில் சரிபகுதியாக இருக்கிற பெண்களின் அடிமைத்தனம் ஒழிவதும் மிகமிக முக்கியம் என்றார் பெரியார். ஆண்களைப் போலவே பெண்களும் அனைத்துத் துறைகளிலும் சரிசமமாக வாய்ப்புக்களைப்பெற வேண்டுமானால் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவது அவசியமாகும். ஆனால் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் 50 சதவிகிதம் அல்ல 33 சதவிகிதத்துக்கே நீண்ட காலம் போராட வேண்டிய அவலம் உள்ளது. எனவே பெண்ணுரிமை பெறுவதற்கும் பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார்.
பெண்கள் விடுதலை அடையாமல் இருப்பதற்கு அவர்களுக்கு நகைகளின் மீதும் உடைகளின் மீதும் இருக்கும் மோகமே அடிப்படைக்காரணமாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய பெரியார் பெண்கள் பிள்ளைபெறும் இயந்திரமாகவோää நகைமாட்டும் ஸ்டாண்டாகவோ இருக்கக்கூடாது என்றார். ஆனால் இன்னமும் பெண்களுக்கு அந்த நகைகளின்மீதும் ஆடை ஆபரணங்கள்மீதும் உள்ள மோகம் குறைந்ததாகத் தெரியவில்லை. அதன் காரணமாகவே இன்று வரதட்சணைக் கொடுமைகளும் நாட்டில் அதிகரித்து வருகிறது. இந்த மோகங்களையும் அடிமைத் தனங்களையும் ஒழித்து பெண்கள் உண்மையான விடுதலை பெற வேண்டுமானால் பெரியார் மிகமிகத் தேவைப்படுகிறார்.
எதையும் மகான் சொன்னார் என்பதற்காகவோ மகரிஷி சொன்னார் என்பதற்காகவோ அப்படியே நம்பிவிடாதே. உன்னுடைய அறிவு என்ன சொல்கிறதோ அதன்படி சிந்தித்து நட என்றார் பெரியார். ஆனால் இன்றைக்கு ஒரு மோசடிப்பேர்வழி சாமியார் என்ற போர்வையில் குண்டலினியோகத்தால் உங்களையெல்லாம் அந்தரத்தில் மிதக்கவிடப்போகிறேன் என்று சொன்னவுடன் அது எப்படி சாத்தியமாகும் என்று கூட சிந்திக்காமல் அவர் சொன்னபடி குதித்துக்குதித்துக் குப்புற விழுந்தார்களே தவிர யாரும் அந்தரத்தில் பறக்கவில்லை. அதே போல் கல்லுப்பிள்ளையார் பால்குடிக்கிறார் என்று செய்தி பரவியவுடன் அய்ஏஎஸ் அதிகாரிமுதல் அய்பிஎஸ் அதிகாரிகளும் டாக்டர்களும் எஞ்சினியர்களும்கூட பால் சொம்பைத்தூக்கிக் கொண்டு ஓடினார்களே தவிர பிள்ளையார் எப்படிப் பால் குடிப்பார் என்று கேட்கவில்லை. எனவே நாட்டு மக்கள் பகுத்தறிவு பெற பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார்.
நம்நாட்டு மக்களின் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது அவர்கள் மத்தியில் மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளே என்று சொன்ன பெரியார் அந்த முடைநாற்றமெடுக்கும் மூடநம்பிக்கையை முறியடிக்க தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்கள். ஆனாலும் இன்னமும் படித்தவர்கள் முதல் படிக்காத பாமரர்வரை நேர்த்திக்கடன் என்ற பெயரால் தலையில் தேங்காய் உடைப்பதும் பேய் ஓட்டுவதும் பிசாசு ஓட்டுவதும் என்ற செயல்களைச் செய்து வருவதும் திருவிழா தேர் போன்ற காரியங்களில் காசைக்கரியாக்குவதுமான செயல்;கள் நடைபெற்றே வருகின்றன. எனவே சமுதாய மக்கள் மூடநம்பிக்கை ஒழிந்து பகுத்தறிவுபெற்ற மக்களாக மாற பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார்.
நம்முடைய சமுதாயத்தில் உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி வேலைவாய்ப்புக்களில் மற்ற மக்களுக்கு இணையாக உயரும்வரை அவர்களுடைய மக்கள்தொகைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு வேண்டும் என்றார் பெரியார். அது இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. தப்பித்தவறி அந்நிறுவனங்களில் சேர்ந்து படிக்கச் சென்ற மாணவர்கள் அங்குள்ள ஆதிக்கசாதி ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் கேலி செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற தகவல் அனைவர் நெஞ்சையும் பிளப்பதாக உள்ளது. எனவே அனைத்து மக்களுக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் சமமான கல்வி கிடைக்க பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார்.
இந்துமதத்தில் முப்பத்தி முக்கோடி தேவர்கள் கின்னரர் கிம்புரடர் நந்தி நாரதர் சிவன் விஷ்ணு பிரம்மா காளியாயி மாரியாயி என்று எத்தனையோ எண்pலடங்காக் கடவுளர் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் பிள்ளையாரையும் இராமனையும் தேர்ந்தெடுத்து இராமனை செருப்பால் அடித்தார். இராமாயணத்தைக் கொளுத்தச்சொன்னார். அதேபோல் பிள்ளையார் சிலையைத் தெருவிலே  போட்டுடைத்தார். அவருடைய தொலைநோக்கு சிந்தனை எத்தகையது என்பதை இதிலிருந்து நாம் உணரலாம். மதவாதிகள் இன்று இந்த இரண்டு கடவுளரையும் வைத்துத்தான் நாட்டில் கலவரங்களை நடத்தி வருகிறார்கள். பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரால் மசூதி இருக்கும் தெருவழியாகச் சென்று மதக்கலவரத்தைத் தூண்டி வருகிறார்கள். அதேபோல இராமனை மய்யமாக வைத்து இந்திய அரசியலே நகர்த்தப்படுகிறது. தமிழகத்தின் நூற்றைம்பது ஆண்டுக்கனவான சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதற்காக அங்கே இராமன் கட்டிய பாலம் இருப்பதாகவும் அதனை இடிக்கக் கூடாது என்றும் மதவாதிகள் வழக்குப் போட்டார்கள். நீதிமன்றமும் அதற்கெல்லாம் ஆதாரம் எதையும் கேட்காமல் வெறும் நம்பிக்கை என்ற வாதத்தைக் கேட்டு சேது சமுத்திரத்திட்டத்துக்குத் தடை போட்டிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு பெரியார் அல்ல@ இன்னும் நூறு பெரியார் தேவை என்பது புலனாகிறது.
தந்தை பெரியாரின் நிறைவேறாத இறுதி ஆசையாகச் சொல்லப்படுவது அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது. வீதிகளில் ஒடுக்கப்பட்டவர் நடக்கக்கூடாது என்று சொன்ன ஜாதிப்பாம்பை தந்தை பெரியார் அடித்து விரட்டினார். அது அங்கிருந்து ஓடிவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க உரிமையில்லை என்று சொன்ன அந்த ஜாதிப்பாம்பை பெரியார் அடித்தார் அங்கிருந்தும் ஓட்டம் பிடித்தது. வேலைவாய்ப்புப்பெற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தகுதியில்லை என்று சொன்ன ஜாதித்திமிர் பிடித்த பாம்பை அவர் அடித்து விரட்ட அந்தப்பாம்பு அங்கிருந்தும் ஓடியது. கடைசியில் அந்தப் பாம்பு புகுந்து கொண்டு தன் நச்சுப்பல்லைக் காட்டும் இடமாக அமைந்திருப்பது கோயில் கர்ப்பக்கிரஹம் என்பதைக் கண்டுணர்ந்த பெரியார் அங்கிருந்தம் அந்தப் பாம்பை விரட்ட வேண்டுமானால் அங்கேயும் ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளே சென்று சாமியைத் தொட்டு வணங்கி பூஜை செய்யும் அர்ச்சகர் உரிமை வேண்டும் என்றார். அதற்கு தமிழக அரசு சட்டம் இயற்றி அதற்கான பயிற்சி கொடுத்து அவர்களைப் பணியில் அமர்தத் தயாராக இருந்தும் அவர்களுக்கான அர்ச்சகர் உரிமையைப் பெற விடாமல் அந்தப் பாம்ப தடுத்துக் கொண்டிருக்கிறது. எனவே அந்த ஜாதிப்பாம்பை மீண்டும் உயிர்பெற்றெழ விடாமல் அடிக்க வேண்டுமானால் பெரியாரின் கைத்தடிதான் அதற்குச் சரியான ஆயுதமாகும். எனவே சமுதாயத்தில் இன்னும் நிலவிக்கொண்டிருக்கும் அத்தனைக் கேடுகளையும் ஒழித்துக்கட்ட பெரியார் தேவைப்படுகிறார். தேவைப்படுகிறார் தேவைப்படுகிறார்

என்றும் தேவைப்படும் ஈரோட்டு ஏந்தல் தந்தை பெரியார்:


நவீன குலக்கல்வி :
தமிழகத்தை ஆண்ட நீதிக்கட்சி ஆட்சி கல்வி வேலைவாய்ப்புக்களில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்வில் ஏற்றம் கண்டனர். 1952ல் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற இராஜகோபாலாச்சாரி குலக்கல்வித் திட்டத்தை அமுல்படுத்தினார். அதன்படி அவரவர் குலத்தொழிலை அவரவர் செய்தால் போதும். அரை நேரம் படிப்பு அரை நேரம் குலத்தொழில் என்கின்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது. தந்தை பெரியார் அதனைக் கடுமையாக எதிர்த்ததன் மூலமாக குலக்கல்வித்திட்டம் அன்று ஒழிக்கப்பட்டது.
ஆனால் அதனை தொழிற்கல்வி என்றும் அதனை அமுல்படுத்தியிருந்தால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமே இருந்திருக்காது என்றும் இன்னமும் பேசுபவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மனப்பான்மை கொண்டவர்கள்தான் இன்று ஆட்சி அதிகாரத்திலே இருக்கிறார்கள். அவர்கள் கைகளில் ஆட்சி அதிகாரம் இருப்பதனால் இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை வேறு வடிவத்தில் திணிக்க முயலுகிறார்கள். புதிய கல்விக் கொள்கை என்பது அதனுடைய மறுவடிவமே. அதன்படி நவீனமான முறையில் குலக்கல்வி திணிக்கப்படுகிறது.
எட்டாம் வகுப்புவரை தேர்ச்சி என்ற திட்டத்தை மாற்றி அய்ந்தாம் வகுப்புவரை என்று ஆக்கி மாணவர்களின் கல்விக்கண் குருடாக்கப்படுகிறது. எட்டாம் வகுப்புக்கு மேல் தேர்ச்சி பெறாதவர்கள் தொழிற்கல்வி என்ற பெயரால் பாரம்பரியத் தொழில்களைக் கற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது இந்தப் புதிய கல்விக் கொள்கை. இதிலே பாதிக்கப்படப் போவது கிராமப்புறத்திலுள்ள தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகளும் நகர்ப்புறத்திலே உள்ள அடித்தட்டு உழைப்பாளிகளுடைய பிள்ளைகளும்தான்.
இது ஒரு நவீன குலக்கல்வித் திட்டம் என்பதனை சமூகநீதியில் நம்பிக்கை உள்ளவர்கள் சுட்டிக்காட்டி அதனைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தந்தை பெரியார் ஆவார். எனவே தந்தை பெரியார் அவர்கள் இப்பொழுது மேலும் அதிகமாகத் தேவைப்படுகிறார்.
சமஸ்கிருதத் திணிப்பு:
அத்தோடு 1938ல் தமிழ்நாட்டை ஆள்வதற்கு முதல்முறையாக வாய்ப்புக் கிடைத்தபொழுது இராஜகோபாலாச்சாரி இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். அதற்கு அவர் சொன்ன காரணம் சமஸ்கிருதத்தை தேசியமொழி ஆக்க வேண்டும். அதற்கு இடைக்காலமாக இந்தியை இப்பொழுது கட்டாயம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். ஆர்எஸ்எஸ் சினுடைய மொழிக் கொள்கையும் அதுதான். அதாவது சமஸ்கிருதமே இந்த நாட்டின் தேசியமொழியாக இருக்க வேண்டும். அதுவரை இடைக்காலமாக இந்தி இருக்கலாம் என்பதுதான்.
இந்தியை தேசியமொழியாக ஆக்க வேண்டும் என்று சொன்னதற்கு அதன் ஆதரவாளர்கள் சொன்ன காரணம் இந்திதான் இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படுகிறது. அதனால் அதனை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஆனால் அதற்கு நேர்மாறாக இந்தியாவில் உள்ள எந்த மாநில மக்களாலும் பேசப்படாத செத்தமொழியான சமஸ்கிருதத்தை இப்பொழுது தேசியமொழியாக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் முரண்பாட்டின் மொத்த வடிவமான ஆரியர்கள்.
அவர்கள்தான் இப்பொழுது சமஸ்கிருதத்தை தேசியமொழி ஆக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொன்னவர்கள் இப்பொழுது எதற்காக சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்கிறார்கள்? சமஸ்கிருதம் படித்தால் என்ன வேலை கிடைக்கும்? சமஸ்கிருதத்தின் மூலம் கிடைக்கக்கூடிய ஒரே வேலை அர்ச்சகர் பணிதான். அந்த வேலை அனைத்து ஜாதி மக்களுக்கும் கிடைக்குமா? என்றால் அதற்கும் பதில் இல்லை.
சமஸ்கிருதத்தை தேசிய மொழி ஆக்குவதனுடைய நோக்கம் அது ஆரியப் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கிறது. வருணாசிரமத்தை நிலைநாட்டும் சாஸ்திரங்கள்ää வேதää புராண இதிகாசங்கள் எல்லாம் சமஸ்கிருத்திலேதான் இருக்கிறது என்பதால்தான் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவத்தை உண்டாக்குகிறார்கள்.
அந்த சமஸ்கிருதத்தையும் அவர்கள் நிலைநாட்ட விரும்புகிற ஆரியப் பண்பாட்டையும் வருணாசிரமத்தையும் இங்குத் தலைகாட்ட விடாமல் செய்ய வேண்டுமானால் தந்தை பெரியார் இன்னும் முழு வீச்சில் தேவைப்படுகிறார்.
கடவுள் மத எதிர்ப்பு:
அதேபோல இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகள் கின்னரர் கிம்புருடர் என்று கோடிக்கணக்கில் கடவுள்கள் இருந்தாலும் தந்தை பெரியார் இரண்டு கடவுள்களை மிகவும் கடுமையாக எதிர்த்தார். ஒன்று பிள்ளையார். இன்னொன்று இராமன். ஏன் இந்த இரண்டு கடவுள்களை அதிகம் எதிர்த்தார் என்பதற்கு கண்கூடான சாட்சியமாகத்தான் பிள்ளையார் ஊர்வலம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பிள்ளையார் ஊர்வலம் நடத்துவதன் நோக்கம் பக்தியோ கடவுள் சக்தியோ அல்ல. மாறாக இஸ்லாமியர் வசிக்கும் தெருக்களிலும் மசூதி வழியாகவும் ஊர்வலமாகச் சென்று தாரை தப்பட்டை முழங்கி இஸ்லாமியருக்கு எதிரான முழக்கங்களைச் செய்து மதக்கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்பதுதான்.
அதேபோல இராமனுக்கு கோயில் கட்டுகிறோம் என்ற பெயரால் அயோத்தியிலிருந்த நானூறு ஆண்டு பழமைவாய்ந்த பாபர் மசூதியை இடித்து இன்றைக்கும் மதக்கலவரத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். தமிழகத்தின் தென்மாவட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்களின் நூற்றைம்பது ஆண்டுக்கனவான சேது சமுத்திரத்திட்டத்தை எதிர்க்கää  இல்லாத இராமன் பாலத்தை இருப்பதாகச் சொல்லி முட்டுக்கட்டை போட்டு வருபவர்கள் இராமபக்தர்கள்.
அதனால்தான் தந்தை பெரியார் மிகவும் தொலைநோக்கோடு அந்த இரு கடவுளர்களையும் கடுமையாக எதிர்த்தார்கள்.
அந்த மதவெறியர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால் பெரியார் மிகமிக அதிகம் தேவைப்படுகிறார்.
தீண்டாமை ஒழிப்பு:
நம்முடைய மக்களிடம் நிலவுகிற தீண்டாமைக் கொடுமை ஒழிய வேண்டுமானால் முதலில் ஜாதி ஒழிய வேண்டும். அந்த ஜாதி ஒழிய வேண்டுமானால் அந்த ஜாதியைப் பாதுகாக்கிற மதம் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டுமானால் அந்த மதத்தைப் பாதுகாக்கும் சாஸ்திர வேத புராண இதிகாசங்கள் ஒழிக்கப்பட வேண்டும். அவையெல்லாம் ஒழிய வேண்டுமானால் அவற்றைப் பாதுகாக்கிற கடவுள் ஒழிந்தாக வேண்டும் என்று பாடுபட்டவர் தந்தை பெரியார் அவர்கள்.
ஆனாலும் அந்தத் தீண்டாமைக் கொடுமை ஒழிந்தபாடில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால் அரியானா மாநிலத்தில் பசுவின் தோலை உறித்தார்கள் என்பதற்காக அய்ந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் ஜாதி வெறியர்களால் கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட்டார்கள். அதற்கு நாடெங்கும் கண்டனங்கள் வெடித்துக் கிளம்பின.
அதே நிலை இன்னும் நீடிக்கச் செய்வது வெட்கத்திலும் வெட்கப்பட வேண்டிய கேவலமான நிலை. வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லப்பட்ட மோடி ஆண்ட குஜராத் மாநிலத்தில் இறந்துபோன பசுவின் தோலை உறித்ததற்காக அவர்களைக் கட்டிவைத்து அடித்துச் சித்திரவதை செய்யும் காட்சிகளை ஊடகங்கள் வெளிப்படுத்தின.
இதனைப்பற்றிக் கருத்துக் கூறவந்த பிரதமர் மோடி அவர்கள் ~தலித்துக்களைத் தாக்காதீர்கள். அதற்குப் பதிலாக என்னைச் சுடுங்கள்| என்று கூறினார். அவர் சொல்லி முடித்து ஓரிரு நாட்களிலேயே ஆந்திராவில் அதேபோல தலித் இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்ற செய்தி வந்தது.
ஜாதி ஒழிப்பு:
அதேபோல ஜாதி ஒழிய வேண்டுமானால் அதற்கு மற்றொரு வழி கலப்பு மணமே என்று தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் கூறினார்கள். ஆனால் இன்று கலப்புமணம் புரியும் இளைஞர்களும் பெண்களும் கவுரவக்கொலை என்ற பெயரால்  ஜாதி ஆணவக்கொலை செய்யப்படுகின்றனர்.
இந்த தீண்டாமைக் கொடுமைகளும் ஜாதி ஆணவக் கொலைகளும் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமானால் அதற்கு பெரியார் மிகமிக அவசியம் தேவைப்படுகிறார்.
மேலும் கல்வி வேலைவாய்ப்புக்களில் உள்ள இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டவும் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களான அய்அய்டிää அய்அய்எம் போன்ற கல்வி நிறுவனங்களிலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களை நுழைய விடாமலும் செய்வதற்கு மிகப்பெரிய சதிவேலைகள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே இவற்றையெல்லாம் அடைவதற்கு தந்தை பெரியார் கொள்கைகளை அவனியெங்கும் கொண்டுசெல்ல அவரது 138வது பிறந்தநாளான செப்டம்பர் 17ல் உறுதியேற்போம்.
வாழ்க பெரியார்!                   வளர்க பகுத்தறிவு!!
     இவண்:
பெல் திராவிடர் தொழிலாளர் கழகம்ää திருச்சி 14.