ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது.


காலத்தை வீணடிக்கும் மூடநம்பிக்கை....
நல்ல செயல் செய்யக் கூடாத நாட்கள்....
இராகுகாலம் 1 மாதத்திற்கு 1.30 X 30=45
ஒரு ஆண்டிற்கு 540 மணி
எமகண்டம் 1 மாதத்திற்கு 1.30x30=45
ஒரு ஆண்டிற்கு 540 மணி
அஷ்டமி (மாதத்திற்கு 2 நாள்)
ஒரு ஆண்டிற்கு 48x12=576 மணி
நவமி (மாதத்திற்கு 2 நாள்)
ஒரு ஆண்டிற்கு 48x12=576 மணி
மரணயோகம் 1 மாதத்திற்கு 1.30x30=45
ஒரு ஆண்டிற்கு 540 மணி
கரிநாள் (மாதத்தில் 3 நாட்கள்)
ஒரு ஆண்டிற்கு 864 மணி
பிரதமை (பாட்டிமை மாதம் 2 நாட்கள்)
ஒரு ஆண்டிற்கு 48x12=576 மணி
சூரிய கிரகணம் ஒரு ஆண்டிற்கு
ஒரு நாள் 24 மணி
சந்திரகிரகணம் ஒரு ஆண்டிற்கு
ஒரு நாள் 24 மணி
மதம் சார்ந்த பண்டிகை ஆண்டிற்கு
33 நாட்கள் ஒரு ஆண்டிற்கு 33x24=792 மணி
ஆக, மொத்தம் 5052 மணி
(5052/24 மணி = 210 நாட்கள்)
ஆக ஆண்டிற்கு 365 நாட்களில் 210 நாட்கள் வீண்.
நம்பிக்கை என்ற பேரால் விலை மதிக்கமுடியாத நம் நேரம் வீணடிக்கப்படுகிறது.
நம் மூளையில் இடப்பட்ட இந்த விலங்கை உடை. சாதனை படை.
காலம் பொன் போன்றது,
கடமை கண் போன்றது.

*கேள்விகள் பத்து*


*கேள்விகள் பத்து*
ஒன்று;
கடவுள் இருப்பதாகப் பிறர் சொல்லி நம்புகிற நீங்கள், அவர் தோன்றியது ஏன்? எப்படி? எப்போது? என்றெல்லாம் நீங்களாகவே கேள்விகள் கேட்டு, உங்கள் சுய அறிவால் விடை தேட முயன்றதுண்டா?
இரண்டு:
நீங்கள் நம்புகிற கடவுளின் படைப்பில் உயிர்களுக்கு விளையும் நன்மைகள் அதிகமா, தீமைகளா என்று ஆராய்ந்து பட்டியலிட்டதுண்டா?
மூன்று:
‘நாம் பாவம் செய்தோம்; தண்டிக்கப்படுகிறோம்’ என்று உணர்கிற அறிவு வாய்த்த பிறகு ஒரு மனிதர் தண்டிக்கப்படுவதில் நியாயம் இருக்கிறது. மழலைகளையும் மழலை மனம் கொண்டவர்களையும் கடவுள் தண்டிக்கிறார் என்றால், அவரை எப்படி உங்களால் போற்றி வணங்க முடிகிறது?
நான்கு:
மனிதர்களில் சிலரைக் கடவுளின் அவதாரம் என்கிறீர்கள். அவர்களின் சிறுநீர் இனிக்குமா? அவர்கள் வெளியேற்றும் மலம் கமகமக்குமா? அவர்கள் செத்தால், சடலம் புழுத்து நாறிப் புழுக்கள் நெளியாமல், மலர்கள் மலர்ந்து மணம் பரப்புமா?
எரித்தால் சாம்பல் ஆகாமல், பூத உடலோடு மாயமாய் மறைந்து ‘சொர்க்கம்’ சேர்வார்களா?
ஐந்து:
கடவுள், தான் விரும்பிய மனித உருவிலோ, பிற உயிர்களின் உருவிலோ உங்கள் முன்பு காட்சியளித்து, “நான்தான் கடவுள்” என்றால் நம்புவீர்களா?
நம்பாத உங்களை நம்ப வைக்கக் கடவுள் கையாளும் உத்தி என்னவாக இருக்கும்?
ஆறு:
கடவுளுக்குக் கோயில் கட்டுகிறீர்கள்; விழாக்கள் எடுக்கிறீர்கள். விதம் விதமாய் வழிபடுகிறீர்கள். கடவுளும் மனிதனைப் போலப் புகழ்ச்சிக்கு மயங்குபவர் என்று நீங்கள் நம்புவது சரியா?
‘அவரைப் புகழ்வது, எங்கள் மனதைச் சுத்தப்படுத்த” என்று நீங்கள் சமாளிப்பீர்கள். நாம் கேட்கிறோம். புகழ்வதால் மனம் தூய்மை பெறுமா? அவரைப் புகழ்ந்து, அவர் உத்தரவு போட்டால்தான் நாம் திருந்துவோமா?
ஏழு:
உங்கள் வேண்டுதல் கடவுளைச் சென்று சேர்கிறது என்பதை எப்படி நம்புகிறீர்கள்? அதற்கு முன்னுதாரணம் ஏதும் உண்டா?
எட்டு:
கடவுளுக்கு நீங்கள் செலுத்தும் காணிக்கைகள், படையல்கள் எல்லாம் சில மனிதர்கள் வசம் சேர்கின்றன என்பது தெரிந்திருந்தும், தொடர்ந்து ஏமாறுகிறீர்களே, கடவுளின் பெயரால் ஏமாற்றப்படுவதைப் பெருமையாகக் கருதுகிறீர்களா?
ஒன்பது;
கடவுள், இந்த மண்ணுலகில் உங்களைப் பிறக்கச் செய்ததற்காக நன்றி சொல்கிறீர்கள். அதே கடவுள்தான், உங்களை மரணமடையச் செய்கிறார். அந்த மரணம் பற்றிய நினைப்புதான் உங்களைச் செத்துச் செத்துப் பிழைக்க வைக்கிறது. இதை அறியாதவரா நீங்கள்? அறிந்தும் அவருக்கு நன்றி சொல்லித் துதி பாடுகிறீர்களே, இது அறிவுடைமை ஆகுமா?
பத்து:
நீங்கள் என்னை மனம் போனபடி திட்டினாலும், திரும்பத் திரும்ப மேற்கண்ட கேள்விகளைப் படித்தீர்கள். இது உண்மை. உண்மையைச் சொல்லுங்கள்.....
கடவுளின் ‘இருப்பு’ பற்றித் தீவிரமாய்ச் சிந்திக்கத் தொடங்கிவிட்டீர்கள்தானே?

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

அப்பாடக்கர்

அப்பா டக்கர் என்ற சொல் வழக்கு உருவான கதை!
பெரிய அப்பா டக்கரான்னு சொல்வோம்ல
அதைத்தான் பெரிய மயிரான்னு சொல்லிட்டேன்னு பிக்பாஸில் காயத்ரி ஒரு வெளக்கம் குடுத்தாள்
அவளுக்கு அதன் அர்த்தம் தெரியும்.
அதுவும் சேரி பிகேவியர் என்ற வார்த்தைக்கு இணையான தொணியில் சொன்னது தான்
அப்புடின்னா பெரிய அப்பா டக்கர்னா என்ன?
பார்ப்பனர்கள் தங்களைப் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்வார்கள்.
அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டவர்களில் முக்கியமானவர் குஜராத் மாநிலம் பாவ்நகரில் லோஹனா என்ற சத்ரிய வம்சத்தில் பிறந்த தக்கர் பாபா.
காந்தியின் தீண்டாமை எதிர்ப்பு கொள்கையால் கவரப்பட்டு அந்த மக்களுக்கு சேவை செய்வதையே தனது வாழ்நாள் கடமையாக ஏற்று செயலாற்றியவர்.1890 களிலேயே பொறியாளர் பட்டம் பெற்றவர்.ரயில்வேயில் பொறியாளராக பணியாற்றியவர்.
ரயில்வே கழிவுகளை அகற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும்,அவர்கள் கந்துவட்டி காரர்களிடம் சிக்கியதை மீட்கவும் போராடியவர்.குஜராத்தின் பில் ஆதிவாசிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக ஆதிம் சேவா சங் என்ற அமைப்பை ஏற்படுத்தி உதவியவர்
காந்தியின் ஹரிசன சேவா சங்கத்தின் செயலாளராக 1932ல் பொறுப்பேற்று இந்தியா முழுமையும் பயணித்தவர்.இவரது சேவை காந்தியை பெரிதும் ஈர்த்தது
ஹரிசன மாணவர்களுக்காக சென்னை தி.நகரில் 1946ல் தொழிற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டு காந்தி அதற்கு அடிக்கல் நாட்டி தக்கர் பாபா வித்யாலயா எனப் பெயரிட்டார். திநகர் பார்ப்பனர்கள் இதை கேலி பேசினர். பாபா அதற்கு எதிராக பேசினார். அவரை ஒடுக்கப்பட்ட மக்கள் அப்பா தக்கர் என்று அழைப்பார்கள்.
அந்த தக்கர் பாபா தான் அப்பா டக்கர் ஆனார்.
அவரை மையமாக வைத்து பார்ப்பனர்கள் தலித் மக்களை கேலியாகக் கூப்பிடும் சொல் தான் அப்பாடக்கர்.
கமலஹாசனிடம் இதைச் சொல்லி
இந்த காயத்ரி நாயை முதலில் வெளியேற்றுங்கள்
வன்மம் கொண்ட சிறுக்கி
படத்தில் உள்ள தக்கர் பாபா தான் ஒடுக்கப்பட்ட மக்களால் அப்பா டக்கர் என அன்போடு அழைக்கப்பட்டவர்
சென்னையில் ஆட்டோகாரரிடம் தக்கர் பாபா ஸ்கூலுக்கு போகச் சொன்னா தெரியாது.அப்பாடக்கர் ஸ்கூலான்னு கேப்பாங்க.

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

அம்மாவின் புடவையும், அப்பாவின் சில்லறையும்!


உலகில் உள்ள சுமார் 2 கோடி உயிர் இனங் களில் ஒரே யொரு ஒற்றை இனம் தான் ஹோமோ சேபி யன்ஸ் எனப்படும் நமது மனித இனம் என்பது உண்மை. எனவே உலகில் உள்ள சுமார் 700 கோடி மனிதர் களும் ஒருவரே.
இன்றைய உலகில் விஞ்ஞானம்மிக மிக வளர்ந்திருக்கிறது. சரி! விஞ்ஞானப்பூர்வ மனோ பாவம் அதே அளவு வளர்ந்திருக்கிறதா? இல்லை! அதுவும் இந்தியா போன்ற பழம்பிரதேசங்களில் மூட நம்பிக்கைகள் கொடிகட்டி பறப்பதை கண்கூடாகவே காண முடிகிறது. நமது நாட்டில் மெத்தப் படித்த பலமேதாவிகள் கூட சூரியனையும் சேர்த்துத்தான் “நவக்கிரகம்” என்று நம்புகிறார்கள்! வழிபடுகிறார்கள்! ஆனால் உண்மை அதுவா? இல்லை! சூரியன் ஒரு நட்சத்திரம்! அதேபோல “ராகுகால” நம்பிக்கை! பூமத்திய ரேகையையொட்டி பூமியின் சுற்றளவு சுமார் 40ஆயிரம் கிலோ மீட்டர். அந்த தூரத்தை 24 மணி நேரத்தில் பூமிதன்னைத்தானே சுற்றுவதன் மூலமாக கடக்கிறது என்றால், ஒரு நிமிடத்தில் அது கடக்கும் தூரம் சுமார் 27 கி.மீ.மேற்கிலிருந்து கிழக்காக பூமி சுழல்வதால், இந்தியாவைப் பொறுத்தமட்டில் முதலில் வரும் கொல்கத்தாவிற்கும் தொடர்ந்து வரும் மும்பைக்கும் உள்ளகால வித்தியாசம் ஒரு மணி நேரம்.அதே போல் சென்னைக்கும் நீலகிரிக்கும்உள்ள நேர வித்தியாசம் 15 நிமிடங்கள். இதில் ராகுகாலம் என்று நாம் குறிப்பிடும் ஒன்றரை மணி நேர காலவரம்பு சென்னைக்கும் நீலகிரிக்கும் எப்படி ஒரு சேரப் பொருந்தும்?
அதே போல நட்சத்திரங்கள் பற்றிநம்முடைய பஞ்சாங்கங்கள் குறிப்பிடும்செய்தியும் கணிப்பும் அறிவியல் பூர்வமற்ற அப்பட்டமான கேலிக்கூத்துகளே! “அம்மாவின் புடவையை மடிக்க முடியாது அப்பாவின் சில்லறையை எண்ணமுடியாது! அது என்ன?” என்ற விடு கதைக்கு விடையாக “வானத்தையும் நட்சத்திரத்தையும்” குறிப்பிடுவார்கள். அதையேஇன்றைய விண்ணியற்பியல் விஞ்ஞானம்பொய்யாக்கிவிடும் போலும்! பிர பஞ்சத்திலுள்ள மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை 1019 (லட்சம் கோடி கோடி)என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக் கிறார்கள். அதில் ஒரு 27 நட்சத்திரங் களையும் இல்லாத ராகு, கேது உள்ளிட்ட சில கிரகங்களையும் வைத்துக்கொண்டு நம்முடைய பிறப்புக்கும் அவைகளுக்கும் ஒரு முடிச்சு போடுகிறார்கள் நம் ‘‘பெரியவர்கள்’’ “விண்வெளியிலுள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் இவற்றுக்கும் மனித வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
ஆகவே ஜோதிடம் என்பது விஞ்ஞான பூர்வமற்ற ஒரு அபத்தமே!” என்றுஆணி அடித்தாற்போல தெளிவுபடுத்தி யவர்தான் அண்மையில் நோபல் பரிசுபெற்ற அமெரிக்கவாழ் இந்திய விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் என்பதை இங்கே பதிவு செய்தாக வேண்டும்! அந்த ஜோதிடத்தை, விஞ்ஞானப் பூர்வமானது என்று நிரூபிப்பதற்கும் பல்கலைக்கழகங்களில் ஒருபாடமாக வைப்பதற்கும் வளர்ப்பதற்கும் இன்று எவ்வளவு போராட்டங்கள் என்ப என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.பூமியிலிருந்து 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள சூரியனிடமிருந்து வெளிச்சம் நமக்கு வந்து சேர எடுத்துக் கொள்ளும் நேரம் சுமார் 8 நிமிடங்கள். அப்படியென்றால் நம்மை அடைய சுமார் 4 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் வெளிச்சத்தை தரும் “பிராக்சிமா சென்டூரி” என்ற நட்சத்திரம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள்.
இத்தனைக்கும் அந்த நட்சத்திரம்தான் சூரிய குடும்பத்துக்கு மிகமிக அருகில் இருக்கும் நட்சத்திரம். இதுபோன்ற விஷய ஞானமோ, நட்சத்திரம் என்பது அடிப்படையில் ஒரு நெருப்புக்கோளம் என்ற தெளிவோஇல்லாமல், நமது முன்னோர்களில் சிலர், அவர்களுக்கு வாய்த்த அரைகுறையான அறிவைக் கொண்டு கற்பிதம் செய்து வைத்ததை இந்த விஞ்ஞான யுகத்தில் நாம் ஏற்பது எப்படி சரியாகும்?இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் படிக்காதவர்களிடம் மட்டுமல்ல படித்தவர்களிடமும் இருக்கிறது. படிப்புக்கும் பகுத்தறிவுச் சிந்தனைக்கும் சம்பந்தம் இல்லாத ஒரு கல்வி முறைதான் நமது நாட்டில் நடப்பிலுள்ளது. ஆன்மீகக்கருத்துகளுக்கு இடம் தருகிற பாட நூல்கள் ஏன் நாத்திகக் கருத்துகளுக்கு இடம்தரக்கூடாது? அப்படி இடம் தந்தால்ஒரு இருபதே ஆண்டுகளில் இந்த சமுதாயத்தை விஞ்ஞானப் பூர்வமாகச்சிந்திக்கிறமனித நேயப் பொதுவுடைமைச் சமுதாயமாக மாற்றிக்காட்ட முடியும். அந்த அடிப்படையில் இருபத் தோராம் நூற்றாண்டில் பயணம் செய்யும் மனித சமுதாயத்துக்கு ஒரு பத்து கேள்வி பதில்கள் தேவையான சிந்தனைத் தெளிவைத் தரக்கூடும்.
1. நாம் வாழும் இந்த பூமியின் வயது என்ன? 460 கோடி ஆண்டுகள்.
2. முதல் உயிரினம் முதன் முதலாக பூமியில் எப்போது தோன்றியது?(சைனோ பைட்டா பாசி போன்றது) 360 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக.
3. கடவுள் தான் மனிதனை படைத்தார்என்று எல்லா மதங்களும் சொல்கின்றன.மனிதன் திடீரென்று படைக்கப்பட்ட வனல்ல பரிணாம வளர்ச்சிப்படி உருவானவன் என்று டார்வின் கொள்கை கூறுகிறது! இரண்டில் எது சரி?டார்வின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையே சரி. சைனோ பைட்டா பாசி போன்ற முதல் உயிரிலிருந்து“நீர்வாழ் உயிர்கள்” தோன்றின.நீர்வாழ் உயிரினங்களிலிருந்து “நில நீர் வாழ்வன” தோன்றின. நிலநீர் வாழ்வன உயிரினத்திலிருந்து “ஊர்வன” தோன்றின. இவ்விரண்டுஇனங்களுக்கும் இணைப்பாக தண்ணீர்ப்பாம்பு, ஆமை போன்றவற்றை குறிப்பிட லாம். ஊர்வன உயிரினங்கள் “பறப்பன” வாக பரிணாம வளர்ச்சி அடைய இணைப்பாக உருவான உயிரினம் பறக்கும் பல்லி!
அதேபோல் “பறப்பன” உயிரினம்“பாலூட்டி” இனமாக வளர்ச்சியுற்ற போதுஇணைப்பாகத் தோன்றிய உயிரினம் வவ்வால்கள் எனலாம். ஏனென்றால் வவ்வால்கள் பறக்கவும் செய்யும் குட்டிபோட்டு பால் கொடுக்கவும் செய்யும்;அந்த பாலூட்டிகள் இனத்தில் பலப் பல உயிர்கள்தோன்றிய பிறகு நாம் “ஹோமோ சேபியன்ஸ்” தோன்றினோம். இப்படி டார்வின் முன்வைத்த“பரிணாம வளர்ச்சிக் கொள்கை” நிரூபணமானதொரு உண்மை. ஆனால் கடவுள் மனிதனைப் படைத்தார் என்று மதங்கள் காலங்காலமாகச் சொல்லி வருவது விஞ்ஞானப்பூர்வமாக எந்தவிதத்திலும் நிரூபிக்கப்படாத அப்பட்டமான கற்பனையே!
4)டார்வின், வாலஸ் போன்றோர் முன்வைத்த பரிணாம வளர்ச்சிக் கொள்கைப்படி நம்மிலிருந்து (ஹோமா சேபியன்ஸ்) ஏன் புதிதாக ஒரு இனம் தற்காலத்தில் தோன்றவே இல்லை?
பரிணாம வளர்ச்சி மாற்றம்என்பது நீண்டகால இடைவெளியில் தேவைகளின் நிர்ப்பந்தத்தால் நிகழ்வது! உதாரணமாக 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியகொரில்லா இனத்திலிருந்து உயிரியல் ரீதி யாக கொஞ்சமே வேறுபடும்சிம்பன்சி இனம் தோன்ற காலம்எடுத்துக் கொண்ட இடைவெளி ஆண்டுகள் 25 லட்சம்! ஆனால் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மனித இனத்தின் முன்னோடி இனமான “ஹோமோ எபிலிஸ்” 17.5 லட்சம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய“ஹோமோ எரக்டஸ்” - அந்த இனத்திலிருந்து பரிணாமம் பெற்ற நாம் அதாவது “ஹோமோ சேபியன்ஸ்” தோன்றி5 லட்சம் ஆண்டுகள் கூட முடியவில்லை. ஆகவே “ஹோமோசே பியன்ஸ்” எனப்படும் நமது மனிதஇனத்திலிருந்து புதிதாக ஒரு வளர்ந்த இனம் பரிணாமம் பெறசில லட்சம் ஆண்டுகள் ஆகக் கூடும்.
ஆனால் பாலின செல்களில் (செக்ஸ் செல்கள்) இருந்து உயிர்கள் தோன்றுவதற்கு மாறாக உடல் செல்களிலிருந்தே (சோமாடிக் செல்கள்) உயிர்களை இனப் பெருக்கம் செய்யும் “குளோனிங் முறை” போன்ற மரபணுவியல் விஞ்ஞானத்தின் அபார வளர்ச்சி இயல்பாக நடக்க வேண்டிய மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை அதன் போக்கில் விடாமல், மனிதஇனமாகிய நாமே வெகு வேகமாக முந்திக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதை மறந்து விடக்கூடாது!
5) சுமார் 360 கோடி ஆண்டுக்கு முன்னால் தோன்றியது போல் புதிதாக ஒரு உயிரினம் பூமியில்இன்று ஏன் தானாகத் தோன்ற வில்லை? (இனப்பெருக்க முறை யில் மட்டும்தானே தோன்றுகிறது?)இந்த பூமியில் முதல் உயிரி தானாக தோன்றிய போது காற்று மண்டலத்தில் ஹைட்ரஜன், நைட் ரஜன், கரியமில வாயு, மீத்தேன் போன்ற வாயுக்கள் இருந்தன. ஆக்சிஜன் மட்டும் கொஞ்சம் கூட கிடையாது. ஆனால் இப்போது ஆக்சிஜன் இருக்கிறது.
அது உயிரி தோற்றத்தை முற்று முழுதாகத்தடுத்து விடுவதால் புதிய உயிரினம் தானாகத் தோன்றவில்லை. (அல்டேன்/ஒபரின், மில்லர்/ஊரே ஆய்வுகள்) இனப்பெருக்க முறையில் மட்டுமே தோன்றுகிறது!
6. சூரியன் என்பது யாது?13 லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கிவிடும் விஸ்தாரமான பரும அளவு கொண்ட ஒரு நட்சத்திரம். ஹைட்ரஜன், ஹீலியம் அணுக்கள்கொண்ட நெருப்புக்கோளம். உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கு மான மூலசக்தி! அதன் உட்புற வெப்பநிலை லட்சம் டிகிரி சென்டி கிரேடு. வெளிப்புற வெப்ப நிலை 6000. இந்த மாபெரும் நெருப்புக்கோளமான சூரியனை பகவானாக்கிசூரிய வாகனத்தை குதிரைகள் இழுத்து செல்லும் புராண அபத்தத்தை என்னவென்று சொல்ல?
7.விண்வெளியிலுள்ள மொத்த நட்சத்திரம் எத்தனை?10இன் மடங்கு 19 நட்சத்திர ங்கள். (லட்சம் கோடி கோடி நட்சத்திரம்) எண்ணிப் பார்க்கவே நமக்கு தலை சுற்றவில்லையா? 8. பூமியில் உள்ளது போல் வேறுகிரகங்களில் உயிர்கள் வாழ்கிறதா?வாழலாம்.
கோடி நட்சத்திர த்திற்கு ஒரு கிரகம் இருந்து, அதில்உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தால் கூட லட்சம் கோடி கிரகங்களில் (10ன் மடங்கு 12) பூமியைப் போல உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் அதைக் கண்டறிய நமது விஞ்ஞானம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது.
9. பிரபஞ்சத்திற்கு எல்லை கண்டறியப்பட்டுள்ளதா? ஏறக்குறைய 1250 கோடி ஒளிஆண்டுகள் தூரம் பிரபஞ்சத்தின் எல்லை என்று டாஃப்ளர் விளை வின்படி கணித்துள்ளார்கள் விஞ்ஞானிகள். அதாவது பூமி தோன்று வதற்கும் (460 கோடி ஆண்டுகள்) முன்னால் பிரபஞ்சத்தின் ஒரு முனையிலிருந்து புறப்பட்ட வெளிச்சம் நொடிக்கு 3 லட்சம் கி.மீ.வேகத்தில் பயணம் செய்துகூடஇன்னும் நம்மை வந்தடைய வில்லை. அதாவது ஒரு ஒளி ஆண்டு என்பது சுமார் 10 லட்சம் கோடி கி.மீ. அப்படியென்றால் பிரபஞ்சத்தின் எல்லை சுமார் 1250 கோடி ஒளி ஆண்டுகள் தூரம்.
அதாவது சுமார் 125 கோடி கோடி கோடி கி.மீ. இதைவிட நமக்கு ஆச்சரியம் தரும் விஷயம் வேறெது? சிந்தித்து பாருங்கள்! அந்த பிரபஞ்சத்திற்கும் அப்பால்என்ன என்று ஒரு கேள்வி போட்டால் தலை சுற்றலைத் தவிர எதுவுமே மிஞ்சாது!
10. மறுபிறப்பு என்பது உண்டா?இதயம், கார்னியா (கண்), சிறுநீரகம், கல்லீரல் போன்ற மாற்றக் கூடிய உடல் உறுப்புகளை - இல்லாதவர்களுக்கு, பழுதடைந்தவர் களுக்கு தானம் செய்பவர்கள்தான் மறுபிறப்பு அடைபவர்கள் எனச்சொல்லலாம். மற்றபடி மறுபிறப்புஎன்பதெல்லாம் வெறும் கற்பனை தான்!இவை போன்ற அடிப்படை யான, தெரிந்து கொள்ள வேண்டிய அறிவியல் உண்மைகளை ஒவ் வொரு மனிதனும் கட்டாயம் அறியச்செய்ய வேண்டும். ஆனால், இன்று விஞ்ஞானப்பூர்வ மனோபாவத்துக்கு நேர் எதிரான புராணக் குப்பைகளை பாடத் திட்டங்களில் புகுத்தும் ” கல்வித்திட்டத்தை யல்லவா நடைமுறைப்படுத்த எத்தனிக்கிறது?
நமது மனித இனம் “ஹோமோ சேபியன்ஸ்” மிகச் சரியாக 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக் காவில் தோன்றி 2.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆசியாவில் குடிபெயர்ந்தது என்பதை மனித மண்டையோடுகள், எலும்புக் கூடுகள் இவைகளை “ஐசோடோப் டேடிங்” முறையில் ஆய்வு செய்து தெளிவாக கணக்கிடுகிறது இன்றைய நவீன விஞ்ஞானம்! ?
நன்றி
அம்மாவின் புடவையும், அப்பாவின் சில்லறையும்!
ஆரணி மு. பாண்டியன் நெடுஞ்செழியன்

புதன், 16 ஆகஸ்ட், 2017

மாடு தீண்டலாம் உங்கள ஆடு தீண்டலாம் – நாங்க
மனுசன் மட்டும் தீண்டக்கூடாதா?
நாடு என்பதா இதை நரகமென்பதா? – இங்கே
சேரியெல்லாம் சிறைகளானதே.
கோட்டை கட்டினோம் கோயில் மேளம் கொட்டினோம் – சவக்
குழிகள் கூட நாங்க வெட்டினோம்
கோட்டைவிட்டும் கோயில் விட்டும் தூர நிற்கிறோம் -புதைக்கும்
சுடுகாடும் இல்ல நாங்க தவிக்கிறோம்
பாரதத்தாய் மேனியிலே பாதி உடல் சீழ்பிடித்தால்
மீதி உடல் நோயில்லாமல் வாழுமோ? – இந்த
ஜாதிபேதம் எந்த நாளில் வீழுமோ?
தோட்டிகளாக ஈனத் துளும்பர்களாக – மலம்
தோள் சுமக்கும் அடிமைகளாக
உயிரிருந்தும் சவங்களாக உணர்விருந்தும் ஜடங்களாக
உழலுகின்றோம் நடைபிணமாக
தாயே சுதந்திரமே தாழ்த்தப்பட்ட சேரிமகன்
வீட்டில் என்று வந்து குடி ஏறுவாய்? – அதையே
தீட்டு என்றா நீயும்கூட எண்ணுவாய்?
எந்த நாட்டிலும் இந்த இழிவு இல்லையே
சொந்த நாட்டில் அன்னியரானோம்
உழுவதற்கு நிலமுமில்லை அழுவதற்கு உரிமையில்லை
தொழுவதற்கா பூமியில் பிறந்தோம்?
மனிதர்களைப் புழுவாக்கி மகிழுகின்ற கேவலத்தை
மனுநீதி என்ரு பெயர் சூட்டினார் – இங்கே
மனித நீதியை சிறையில் பூட்டினார்.
-எழுதியவர் அய்யா தலித் சுப்பையா....
இந்த பாடலை பாட முடிந்தவர்கள் பாடலாய் பாடி சமூக வலை தளங்களில் பரப்புங்கள் தோழர்களே....

இந்தப் புளுகு கந்தபுராணத்திலும் இல்லை

இந்து தமிழின் இழிசெயல்
கர்ப்பிணியாக இருந்த வாஞ்சிநாதனின் மனைவியை முத்துராமலிங்கம் அவர்கள் தனது மாட்;டு வண்டியில் வைத்து காப்பாற்றினார் அவரது மகளைக் காப்பாற்ற 25000 பணமும் கொடுத்தார் என்று எழுதியது இந்து தமிழ் நாளிதழ் (15.08.2017)
வாஞ்சிநாதன் இறந்தபோது முத்துராமலிங்கத்தின் வயது மூன்றுதான். அந்த மூன்று வயதில் எப்படி மாட்டு வண்டியை ஓட்டியிருப்பார். அந்த அமi;iயாரைக் காப்பாற்றியிருப்பார் 25000 பணமும் கொடுத்திருப்பார் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டவுடன் இந்துவுக்கு திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல் ஆகிவிட்டது.
ஆதாரம் இல்லாமல் செய்தியை வெளியிட்டுவிட்டோமே அது தெரியாமல் நடந்துவிட்டது. இனிமேல் அதுபோல நடக்காமல் எச்சரிக்கையாக இருக்கிறோம் என்று சொல்ல மனமின்றி ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்யைச் சொல்வதுபோல மேலும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டுள்ளது இந்து.
வாஞ்சிநாதனின் மனைவியை வண்டியில் வைத்து ஓட்டிச் சென்றதும் அவருக்கு அடைக்கலம் கொடுத்ததும் குழந்தையைக் காப்பாற்ற டீக்கடைக்காரரிடம் 25000 ரூபாய் கொடுத்ததும் முத்துராமலிங்கத் தேவர் அல்ல அவரது தந்தை உக்கிரபாண்டித் தேவர்தான் என்று கதையை அவிழ்த்து விடுகிறது.
அதற்கு ஏதாவது ஆதாரம் ஏதாவது காட்டியிருக்கிறதா? என்றால் எதுவும் இல்லை. முத்துராமலிங்கம்தான் நாட்டுப்பற்று தேசவிடுதலை என்று அலைந்ததாகவும் நேதாஜியின் படையில் சேர்ந்ததாகவும் அவரது வரலாறு சொல்கிறதே தவிர அவரது தந்தை உக்கிரவாண்டித் தேவருக்கு அப்படிப்பட்ட நாட்டுப்பற்றோ சமுதாயப்பற்றோ இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை
மாறாக உக்கிரவாண்டித் தேவர் ஊதாரி என்றும் ஆடம்பர வாழ்வில் நாட்டம் கொண்டு சொத்துக்களை எல்லாம் அழித்து கடன்காரர் ஆனார் என்றும்தான் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள பட்டத்தி மைந்தன் கூறுகிறார்.
கடன்காரராகி சொத்துக்களையும் இழக்கும் தருவாயில் கோர்ட் மூலமாகத்தான் அவரது ஊதாரித்தனம் தடுத்து நிறுத்தப்பட்டது சொத்துக்களும் காப்பாற்றப்பட்டது என்று அந்நூலில் அவர் எழுதுகிறார். அத்துடன் அரசாங்கமே வாஞ்சிநாதனின் மனைவிக்கு அடைக்கலம் தருபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளதாக அதே இந்து நாளிதழ் கூறுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் அரசாங்கத்தை எதிர்த்துக்கொண்டு வாஞ்சிநாதனின் மனைவிக்கு அடைக்கலம் கொடுத்தார் உக்கிரவாண்டித் தேவர் என்று சொல்லும் இந்து கடனில் மூழ்கித்தவித்த அவர் இருபத்தைந்தாயிரம் பணமும் கொடுத்தார் என்று எழுதுகிறது என்றால் அப்படி எழுதுவதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும் அல்லவா? அது இந்துவிற்குத்தான் இருக்கிறது. அந்த அளவிற்கு சமுதாயப் பற்று உள்ளவராக உக்கிரவாண்டித்தேவர் இருந்தாரா என்பதற்கு எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை
ஆக தென்னை மரத்தில் ஏன் ஏறினாய் என்றால் புல் பறிக்கத்தான் என்று சொன்னானாமே ஒரு பக்காத்திருடன் அதுபோல முத்துராமலிங்கத்தைப்பற்றி எழுதிவிட்டு அது தவறு என்பதை நிரூபித்தவுடன் இல்லையில்லை அவரல்ல அது அவருடைய அப்பா என்று கதை விடுகிறது
தேவரைப்பற்றிய செய்தியை இப்படித் திரிக்கும் இந்து வாஞ்சிநாதனுக்குப் பேரனே இல்லை அவருடைய மகள் அவர் உயிருடன் இருக்கும்போதே பிறந்து இறந்துவிட்டார் என்று வாஞ்சிநாதனின் தம்பி பேரன் சொல்லி இருப்பதைக் கண்டுகொள்ளவில்லை
இந்தப் புளுகு கந்தபுராணத்திலும் இல்லை என்பார்கள்
அந்தக் கந்த புராணத்தையே உண்மை என்று சொல்லும் இந்து ஆரியக்கூட்டமல்லவா? இதையும் சொல்லும் இதற்கு மேலும் சொல்லும்
நாம்தான் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

தமிழ் இந்து நாளிதழின் தகிடுதத்தம்

தமிழ் இந்து நாளிதழின் தகிடுதத்தம்அன்றைக்கு தாத்தா செய்தது தப்புத்தானே..!” - பாட்டிக்காக வருந்தும் வீரன் வாஞ்சிநாதனின் பேரன்

குள.சண்முகசுந்தரம்
    ளுரடிளஉசiடிந

லட்சுமி - வாஞ்சிநாதன் - ஜெயகிருஷ்ணன்

Pரடிடiளாநன :  15 யுரப 2017   10:33 ஐளுவு
ருpனயவநன :  16 யுரப 2017   10:43 ஐளுவு

சுதந்திர வேள்விக்கு தனது உயிரையே தானமாகத் தந்த வீரன் வாஞ்சிநாதன். வாஞ்சியைத் தவிர்த்துவிட்டு சுதந்திரப் போராட்ட வரலாற்றை பேசவோ எழுதவோ முடியாது. ஆனால்இ ‘அத்தகைய மாவீரனுக்கு இந்த தேசம் உரிய அங்கீகாரம் தந்ததா?’ என்று கேள்வி எழுப்புகிறது வாஞ்சிநாதனின் வாரிசு!

வ.உ.சிதம்பரம் பிள்ளைஇ சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோரை சிறையில் அடைத்தார் என்பதற்காக பிரிட்டீஷ் கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கோர்ட் ஆஷ் துரையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தன்னுயிரையும் போக்கிக் கொண்ட வீரன் வாஞ்சிநாதன். அவரது தியாகத்தைப் போற்றஇ அவர் பிறந்த செங்கோட்டையில் சிலை வைத்திருக்கிறோம். ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்ற ஊரான மணியாச்சிக்கு ’வாஞ்சி மணியாச்சி’ என்று பெயர் வைத்திருக்கிறோம். இவ்வளவுதான் வாஞ்சிநாதனுக்கு நாம் செய்திருக்கும் கைம்மாறு.

தனிமையில் வாஞ்சி மகள்

வாஞ்சிநாதனுக்கு ஒரே ஒரு மகள்; பெயர் லட்சுமி. வாஞ்சிநாதனின் உயிர் பிரிகையில் அவரது மனைவி பொன்னம்மாளின் வயிற்றில் லட்சுமி ஏழுமாதக் குழந்தை. அண்மையில் 106 வயதைக் கடந்திருக்கும் லட்சுமி திருச்சி துவாக்குடி அருகே எட்டடிவயல் கிராமத்தில் வசிக்கிறார். இவருக்கு மூன்று மகள்கள்இ இரண்டு மகன்கள். ஒரு பையன் இறந்துவிடஇ மற்ற பிள்ளைகள் ஆளுக்கொரு திசையில். தள்ளாத வயதில் லட்சுமியின் வாழ்க்கை தனிமையில்!

லட்சுமியின் மகன்களில் மூத்தவர் மதியழகன் என்கிற இரா.ஜெயகிருஷ்ணன். சித்த வைத்தியரான இவர்இ ‘வான்புகழ் வாஞ்சியார் இயக்கம்’ என்ற அமைப்பின் மூலம் இயற்கை விவசாயம் உள்ளிட்டவை குறித்துப் பிரச்சாரம் செய்துவருகிறார். 1972-லிருந்து மக்கள் பிரச்சினைகளுக்காக 53 முறை சிறை சென்றிருக்கும் இவருக்குஇ வாஞ்சிநாதனின் தியாகத்தை இந்த நாடு முறையாகப் போற்றவில்லை என்ற கோபத்தைவிட தாத்தா வாஞ்சிநாதன் மீதுதான் அளவு கடந்த கோபம்.

தாத்தா செய்தது தப்புத்தானே

உங்கள் தாத்தாவை ‘கொலைகாரன்’ என்று அடிக்கடி சொல்வீர்களாமே? என்ற கேள்வியோடு ஜெயகிருஷ்ணனிடம் பேசினோம். “அப்படி எல்லாம் சொல்லல.. ஆனாலும் அன்றைக்கு தாத்தா செய்தது தப்புத்தானே. கட்டுன மனைவி கர்ப்பிணியா இருக்கையிலஇ அவருக்கான பாதுகாப்பு ஏற்பாட்டை எல்லாம் செஞ்சு வெச்சுட்டுல்ல இவரு துப்பாக்கிய கையில எடுத்துருக்கணும்! இவரு பாட்டுக்கு ஆஷ் துரையை சுட்டுட்டு தானும் போய்ச்சேர்ந்துட்டாரு. அதுக்கப்புறம் எங்க பாட்டி என்ன பாடு பட்டுருக்கா தெரியுமா?

தாத்தா செஞ்ச காரியத்தாலஇ எங்க பாட்டியைக் காட்டிக்குடுக்குறவங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம்னு அறிவிச்சுது பிரிட்டீஷ் சர்க்கார். ‘அவங்களுக்கு அடைக்கலம் குடுக்கிறவங்களோட சொத்துக்களை பறிமுதல் செஞ்சு சிறையில் அடைப்போம்’னு அறிவிச்சாங்க. இதுக்குப் பயந்துக்கிட்டு எங்க தாத்தாவோட அப்பா ரகுபதி ஐயர்இ எங்க பாட்டியை வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லி துரத்திட்டார்.

அடைக்கலம் கொடுத்த தேவர்

வயித்துல பிள்ளையோட நிற்கதியா நின்ன எங்க பாட்டி பொன்னம்மாளுக்கு அடைக்கலம் கொடுத்துஇ தாயையும் மகளையும் வெள்ளை ஆட்சியரின் பார்வையிலிருந்து மறைத்து பாதுகாத்தது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தந்தை உக்கிரபாண்டியத் தேவர்.

எதைப்பற்றியும் கவலைப்படாம பாட்டிய தன்னோட கூட்டு வண்டியில ஏத்திக்கிட்டு கிளம்புனவருஇ மூணு மாசமா பாட்டியை கூட்டு வண்டியில வெச்சுச்கிட்டே சுத்திருக்காரு. நல்லபடியாஇ பாட்டிக்கு எங்கம்மா பொறந்ததும் கந்தர்வக்கோட்டையில டீக்கடைக்காரர் ஒருத்தர்க்கிட்ட 25 ஆயிரத்தைக் குடுத்து எங்கம்மாவ ஒப்படைச்சிட்டாரு. மயிலாப்பூர் கச்சேரிரோட்டுல ஒரு வீட்டைப் பிடிச்சு பாட்டியையும் மறைவா தங்கவெச்சிருக்காரு.

பிற்பாடுஇ வாஞ்சிநாதன் மனைவிக்கும் அவரது மகளுக்கும் தேவையான உதவிகளைத் தனது தந்தையின் வழியில் நின்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் செய்திருக்கிறார்.

ஒருவேளைஇ பாட்டியை போலீஸ் கைது செய்தாலும் வாஞ்சியின் வாரிசு பிழைக்க வேண்டும் என்பதற்காக இருவரையும் பிரித்து வைத்த தேவர்இ பிறந்த பிள்ளை இறந்துவிட்டதாக பாட்டியிடம் சொல்லிவிட்டார். பிறக்கும்போதே எனது அம்மாவும் பாட்டியும் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்கக் காரணம் தாத்தா வாஞ்சிநாதனின் பொறுப்பற்ற செயல்தானே. அம்மாவுக்கு திருமணம் ஆனப்பத்தான் தனது மகள் உயிரோடு இருப்பதே பாட்டிக்குத் தெரியும். அம்மாவுக்குத் திருமணம் ஆனதும் எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவார் தேவர். அவரை மாமான்னுதான் கூப்பிடுவேன்.

வயிற்றில் ஏழு மாதக் குழந்தையுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த எங்க பாட்டியை சொந்த வீடும் கண்டுக்கல; இனத்தாரும் அவருக்குக் கைகுடுக்கல. சுதந்திரம் அடைஞ்ச பின்னாடி தேவரையும் காமராஜரையும் வ.உ.சி-யையும் அவங்கவங்க சாதிக்காரங்க கையிலெடுத்துக் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. ஆனாஇ சுப்பிரமணிய சிவாஇ வ.வே.சு.ஐயர்இ வாஞ்சிநாதன் இவங்களை எல்லாம் அவங்களோட இனம் கொண்டாடாம விட்டது துரதிருஷ்டம்தானே!” என்று ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தார் ஜெயகிருஷ்ணன்.

கொள்ளைக்காரங்க கையில் தேசம்

தொடர்ந்துஇ தேசத்தின் இப்போதைய நிலவரம் குறித்த தனது ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினார். “எம்.ஜி.ஆர். ஆட்சியில் செங்கோட்டையில தாத்தாவுக்கு சிலை வைச்சாங்க. அந்த ஊரு பஸ் ஸ்டாண்டுக்குஇ காஞ்சியில பொறந்த அண்ணாதுரை பெயரை வைக்கும்போதுகூட வாஞ்சிநாதன் ஞாபகத்துக்கு வரல. இதையெல்லாம் யாருய்யா கேக்குறது? ஆனாஇ நான் இவ்வளவு பேசுறேன்.. எங்க அம்மாஇ ஓட்டு மெஷின்ல உதய சூரியன் இல்லைன்னு சொல்லி ஓட்டே போடாமா வந்த புண்ணியவதி.

தாத்தா வாஞ்சிநாதன் உள்ளிட்டவங்க போராடிப் பெற்ற சுதந்திரம் இன்னைக்கி படாதபாடு படுது. சுருக்கமா சொல்லணும்னாஇ வெள்ளக்காரங்க கையிலிருந்த இந்த தேசம் இப்ப கொள்ளைக்காரங்க கையில் சிக்கியிருக்கு. வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு லெட்சுமணப் பெருமாளும் வாஞ்சிநாதன் வாரிசு ஜெயகிருஷ்ணனும் தெருவுல சித்தா எண்ணெய் வித்துட்டு திரியுறோம். ஆனாஇ எட்டப்பனின் வாரிசுகளை எம்.எல்.ஏ.இ எம்.பி-ன்னு கவுரவிக்குது இந்த நாடு. இதுக்கு மேல இந்த தேசத்தைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கு?” ஜெயகிருஷ்ணனின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விடைபெற்றோம்!

கட்டுரையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது..

இந்தத் திருத்தம் என்ன வென்றால் முதல்நாள் வெளிவந்த கட்டுரையில் (15-08-2017)வாஞ்சிநாதனின் மனைவியை மாட்டு வண்டியில் வைத்து அழைத்துச் சென்றவர் முத்துராமலிங்கத் தேவர் என்று இருந்தது

வாஞ்சிநாதன் இறந்தபோது முத்துராமலிங்கத் தேவருக்கு மூன்று வயதுதான். மூன்று வயதிலேயே எப்படி முத்துராமலிங்கத்தேவர் இந்தக் காரியத்தைச் செய்திருக்க முடியும் என்று பலரும் விமர்சனம் செய்த நிலையில் அது முத்துராமலிங்கத் தேவர் அல்ல அவரடைய அப்பா உக்கிபாண்டித் தேவர் என்று மாற்றப்பட்டுள்ளது

இந்தத் திருத்தப்பட்ட கடடுரையிலும் ஒரு தவறு வாஞ்சிநாதனின் மனைவியைக் காட்டிக் கொடுப்பவருக்கு பத்தாயிரம் பரிசு என்று இருப்பதற்குப் பதிலாக பத்தாயிரம் அபராதம் என்று இருக்கிறது

முத்துராமலிங்கத் தேவருக்கு பெருமை சேர்ப்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை இப்படி அவர் அப்பாவைப்பற்றி எழுத வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானது ஏன்?

எங்கே தவறு?

வாஞ்சிநாதனின் கடைசிக் கடிதம்


7.6.1911 - வாஞ்சிநாதனின் கடைசிக் கடிதம்:

ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை (George V) முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும்பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை.

இப்படிக்கு,

R. வாஞ்சி அய்யர்

R. Vanchi Aiyar of Shencotta

ஆதாரம்:
முனைவர் ஆ. இரா. வேங்கடாசலபதி, ஆஷ் அடிச்சுவட்டில் ...
http://www.kalachuvadu.com/issue-118/page12.asp

வாஞ்சி, ஆஷ், வேங்கடாசலபதி:
http://www.jeyamohan.in/?p=4488

பிபிசி பேரா. சலபதி செவ்வியும், ஆஷ் படங்களும்:
http://www.ndpfront.com/?p=21599

சனி, 12 ஆகஸ்ட், 2017

Radha's Charanamritam [Archive] - Brahminsnet.com - Forum

www.brahminsnet.com › ... › Anmikam, Bhakthi, Pooja
Translate this page
Dec 11, 2014 - 1 post - ‎1 author

பிருந்தாவனத்தில்  ஒருநாள் கிருஷ்ணனுக்கு  உடம்பு  சரியாக  இல்லை வைத்தியர்களால்  குணப்படுத்த முடியவில்லை. நாரதர்முதலானோர் கவலை கொண்டனர் இது மருந்தினால்குணமாகும் வ்யாதியல்லகிருஷ்ணனின் மேல் உண்மையான,  அளவற்றஅளவுகடந்த,  எல்லையில்லாத,   அதிஉன்னத,அன்பு கொண்டவர் யாரேனும்  இருந்தால் அவர்கள்பாதத்தை கழுவிய நீரை கண்ணன் அருந்தினால்தான்  குணமாகும்இதற்கு சரணாம்ருதம் என்று  பெயர்

ஆனால் ஒரு கண்டிஷன்.   கண்ணன்  மேல் உண்மையான  மேன்மையான அன்புகுறைந்தவர்கள்  எவரேனும் இப்படி சரணாம்ருதம் தந்துஅதை கிருஷ்ணன் பருகினால் கிஷ்ணனுக்கு வியாதியும்குணமாகாதுஎவர்  சரணாம்ருதம்கொடுத்தாரோ அவர்கள்  நரகத்துக்கு சென்று உழலநேரிடும். எல்லா  கோபியருக்கும்  கிருஷ்ணன்  மீது  கொள்ளை  கொள்ளையாக  அன்புஇருந்தாலும் ஒருவேளை  என்னுடையஅன்புபாசம்நேசம்காதல்  மற்றவளுடையதைவிட  குறைந்துகம்மியாக இருந்துவிட்ட தென்றால்??? --- கிருஷ்ணனுக்கு  குணமாகாமல்  போய்விடுமே  என்றகவலை  இருந்ததால் பயந்தனர்சரணாம்ருதம்கொடுக்க  யோசித்தனர்சந்தேகம்  இருந்தது. 

கிருஷ்ணன்  அங்கு  வியாதியால்  துன்பப்பட்டுகொண்டிருக்கிறானே என்ற கவலை வேறு அவர்களுக்கு. 
இந்த  விஷயம் ராதையின் காதில் விழுந்த அடுத்தகணம்.  “இங்கு வாருங்கள் உடனே  நான் கொடுக்கிறேன்என்று  தனது பாதம் கழுவியநீரை கொடுத்தாள். அனேக கோபியர்கள் அவளை  வாட்டிவதைத்தனர்.

என்ன  காரியம் செய்தாய் , முட்டாள்  ராதாஅவசரப்பட்டுவிட்டாயே. ஒருவேளை  கிருஷ்ணனுக்கு  குணமாகாவிட்டால்?  நரகம் செல்ல நீயே வழி தேடிக் கொண்டாயா?.”   

எனக்கு நரகம் செல்ல தயக்கம் இல்லை. ஒருவேளை  கிருஷ்ணன் வியாதி  என்  முயற்சியால் நீங்கினால்அதற்கு  நான் ஏன் உதவக்கூடாது? கிருஷ்ணன் உடல்  நிலை  சரியாகவேண்டி நான்  எந்த நரகத்துக்கு வேண்டுமானாலும்  போகதயார்”  என்றாள்  ராதா 

கதையில்  இனி  நான்  சொல்ல என்ன இருக்கிறது உங்களுக்கே தெரியுமே!! கிருஷ்ணன்  அடுத்த  நிமிஷமேகுணமானான்ஒருவேளை ராதையின் தூயஅன்பையும் உண்மைக் காதலையும்  டுத்துக்காட்ட அந்தமாயாவி போட்ட திட்டமா இந்த "வியாதிநாடகம் !!!