செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

இவர் தான் வீரமணி!



இவர் தான் வீரமணி!
- பேரா. முனைவர் ந.க.மங்களமுருகேசன்
இந்திய வரலாற்றில் - முகலாயர் காலத்தில் மேவார் என்னும் பகுதியை ஆட்சி செலுத்திய ராணா சங்ரம்சங்கா எனும் ராஜபுத்திர வீரரை Fragment of a Soldier என்பார்கள் உடல் முழுவதும் 18 போர்த் தழும்புகள். போரில் சில உறுப்புகளை இழந்தவர்.
அதுபோல் நம் தமிழர் தலைவர் இன்று உழைத்து வரும் உழைப்பின் பின்புலம் பலரும் அறியாத ஒன்று. இந்த நிலையிலும் அவர் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் பதவி சுகம் தேடாமல் - தமிழ் மக்களுக்கு உழைத்து வருவது வியப்பாக இருக்கிறது.
பத்து வயதில் மேடையேறிப் பகுத்தறிவு முழக்கம் செய்தவர் - பட்டமேற்படிப்பில் பதக்கம் தங்கத்தில் பல்கலையில் பெற்றவர். ஒரு பத்துப்பதினைந்து ஆண்டுகள் நீதி மன்றப் படிக்கட்டு ஏறிப்புகழ்மிக்க வழக் கறிஞர் என்ற தான் பெற்ற பெருமையை நிலை நாட்டி இருந்தால் போதும் - கடலூரிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகி - உச்சநீதிமன்ற நீதிபதியாய் உயர்ந்திருக்க வேண்டியவர். இன்று உச்ச நீதிமன்றம் உயர் வகுப்பார் மன்றமாய் இருக்கிறது. தாழ்த்தப்பட்டவர் ஒருவர் கூட உச்சநீதிமன்ற நீதிபதியாகவில்லை என்று குரல் கொடுக்கிறார்.
நீதிமன்றத் தலைமைப் பொறுப்பான நீதிபதி பொறுப்பை விட்டுத் தள்ளுங்கள் - வழக்கறிஞராய் இருந்திருந்திருந்தால் வசதி - வாய்ப்பு - பங்களா - சொத்து சுகம் என்று குவித்திருக்க முடியும்.
தந்தை பெரியாரே, விடுதலை ஆசிரியர் பொறுப்பை ஏற்க முன்வந்தபோது மன மாரப்பாராட்டிச் சொன்ன வார்த்தைகளில். தினமும் நல்ல வருவாய் ஈட்டும் வக்கீல் தொழிலை விட்டு, விடுதலை ஆசிரியர் பொறுப்பை ஏற்கச் சொன்னபோது ஏற்றுக்கொண்டதைப் பாராட்டி எழுதியது இன்றும் விடுதலை ஏட்டின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நாம் தொடக்கத்தில் குறிப்பிட்டோமே திக்ஷீணீரீனீமீஸீt ஷீயீ ணீ ஷிஷீறீபீவீமீக்ஷீ என்று அதற்கும் தமிழர் தலைவருக்கும் என்ன சம்பந்தம்? என்ன தொடர்பு? என்று கேட்கலாம்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தனிமையில் உரையாடுகையில் ஆசிரியரைக் குறித்து வியந்து சொன்னவை இந்தப் பிறந்த நாள் வேளையில் நினைவுக்கு வருகின்றன.
அவருடைய உடலில் ‘மருத்துவரின் கத்தி படாத இடமே இல்லை’ என்று கூறு மளவிற்கு பல்வேறு நோய்த்தாக்கங் களுக்கு ஆளான போதிலும் தளர்ச்சியோ, சோர்வோ, அதைப்பொருட்படுத்தாது உழைத்து வரு வதைக் கேள்விப்படுகையில் வியப்படை கிறோம்.
நாளெல்லாம் மேடையில் முழங்கு கிறாரே, அதுவும் குறைந்தது அரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை முழங்குகிறாரே! இவருடைய தொண் டையில் டான்சில் தொந்தரவு ஏற்பட்டுச் சிகிச்சை பெற்றுள்ளார்.
அடுத்து குடல் இறக்கம் ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் அன்று மாலையே ஒரு கூட்டத்தில் பங் கேற்றார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
மூன்றாவது பாதிப்பு பைல்ஸ் எனும் நோய்த் தாக்கம். அதற்கும் சிகிச்சை பெற்றிருக்கிறார்.
ரிப் எனும் விலா எலும்பிலே ஏற்பட்ட பழுதுக்கும் சிகிச்சை பெற்றிருக்கிறார்.
நெருக்கடி காலத்தில் சிறைப்பட்ட வரைக் காவலர் தாக்கியதில் மூக்கில் ஏற்பட்ட வலி 1975இல் தொடங்கியது, பல நாட்கள் தொல்லை தந்து சிறைக்கொடு மையை நினைவில் பதியச்செய்திருக்கிறது.
இதைத் தவிர கண் சிகிச்சைகள் எல்லாம் சர்வ சாதாரணம்.
ஆனால் இதய அறுவைச் சிகிச்சை ஒருமுறை இருமுறை அல்ல - நான்கு முறை. அதிலும் இதய அறுவைச் சிகிச்சையின் போது பேச்சுவராத நிலையிலிருந்து மீண்டவர் இன்று மூச்சுப்பிடிக்க முழங்கு கிறார். இந்தக் கோளாறு ஏற்பட்டபின் மீண்டவர், இதுபோல் நிலையிலிருந்து மீளலாம் எனக்கவிஞர் வாலிக்குத் தேறுதல் சொல்லித் தேற்றியதை மேடையிலேயே வாலி சொல்லிப் பெருமைப்பட்டார். இத் தனைக்கும் மேலே இப்போது தோள்பட்டை வலி. இதிலிருந்தும் மீண்டு வந்து மீண்டும் தொண்டாற்றும் மனவலிமை உண்டு.
இவையெல்லாம் இயற்கை அளித்த சோதனைகள். திருவில்லிப்புத்தூர் மம்சா புரத்திலே உயிருக்கே உலை வைக்கப் பார்த்தனரே அதிலிருந்தும் மீண்டு துணிவு டன் வந்தவர், தொண்டறம் தொடர்கிறார்.
அரசியல்வாதியல்லாத சமூக சீர்த்திருத்த வாதி - பெரியார் கொடுத்த அறிவு மட்டுமே போதும் என்று மனநிறைவோடு குறிப்பிடும் தமிழர் தலைவர் அய்ம்பது முறை கைதாகி இருக்கிறார்.
1956இல் இராமன் படத்தை எரித்த தற்காகக் கைது செய்யப்பட்டவர். 50ஆவது முறையாக 2016இல் கைது ஆனார். இவர் கைதான அய்ம்பது முறையும் காராக்கிரகம் ஏறிய அய்ம்பது முறையும் தனிப்பட்ட காரணங்கள் எதன் பொருட்டாவது உண்டா? இல்லை, சமூகநலம், சமூகநலம், சமூகநலம் என்பதன் பொருட்டுத்தான்.
1960இல் தேசப்பட எரிப்பு, 1974இல் இராவண லீலா, 31..1.1976 முதல் 23.1.1977 வரை மிசாச் சட்டத்தின் கீழ் கைது! நாகம்மை யாரைக் குறித்து அவதூறு எழுதிய ஆஸ்தான கவிக்கு எதிர்ப்பு, மனுசாத்திர எரிப்பு, மண்டல் குழுப் பரிந்துரை நிறைவேற்றம்.
தமிழக மீனவர்களுக்கு, ஈழத் தமிழர் களுக்கு, காவிரி நீருக்கு, புதிய கல்வித் திட்ட எதிர்ப்பின் பொருட்டு என்று கைதுகள் அத்தனையிலும் தமிழ்ச் சமூக நலன் தவிர வேறு ஒன்றுமில்லை.
கைதானவர் முதலில் திராவிடர் கழகச் பொதுச் செயலாளர், பின்னர் திராவிட கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆனால் கைதாகிய அத்தனை வேளைகளிலும் தொண்டர்களை விட்டுத் தனியே சிறையில் சுகம் தேடியதில்லை. தொண்டர்களோடு தொண்டராய் இருந்திருக்கிறார்.
90களில் மண்டல்குழு அறிக்கை நிறைவேற்றம் பற்றிப் போராடியவர்களைக் கைது செய்து சிறைக்கு அனுப்பியது அன்றைய அரசு. இதய அறுவைச் சிகிச்சையிலிருந்து மீண்டு வந்த வேளை. சென்னையில் கைதானவரை வேலூர் சிறைக்குக் கொண்டு சென்றனர்.
இவர் சிறைப்பட்டபோது, அப்போது கைது செய்த காவல்துறை அதிகாரி, “இதய நோய்க்கச் சிகிச்சை பெற்றவர் என்பதால் இவருடைய காரிலே வேண்டுமானால் வேலூர் சிறைக்கு வரலாம்” என்ற போதும், காவல்துறை வேனிலேயே பயணித்து வேலூரில் சிறைப்பட்டார்.
வேலூரில் சிறைப்பட்டவர் தம் குடும் பத்தினருக்கு இட்ட முதல் கட்டளை - தன்னை யாரும் காணச் சிறைக்கு வரக்கூடாது என்பது.
எல்லாவற்றிற்கும் மேலே இவருடைய அண்ணன் கடலூரிலே இருந்தார். அவ ரையும் தன்னைக் காண வரக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார். வேலூரில் சிறைப்பட்ட காலம் முழுவதும் குடும்பத் தினர் எவரும் பார்க்கவில்லை. அது மட்டு மல்லாது சிறையில் மற்ற கைதிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ அந்த உணவைத் தவிரத் தனக்கென்று தனி உணவு ஏதும் கூடாது என்று கண்டிப்பாக இருந்த தையும் இங்கே சொல்ல வேண்டும்.
திராவிட இயக்கம் - திராவிடர் கழகம், கண்டிப்பும், ஒழுக்கமும் உள்ள இயக்கம் என்பதைச் சிறையிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந் திடுவார்.
வேலூரில் சிறைப்புகுந்தபோது தன் உடன் கைது ஆன தோழர்களுக்கு விதித்த முதல் கட்டளை.
“சிறையில் எவரும் பீடி, சிகரெட் பிடிக்கக்கூடாது. எப்படியாவது கொண்டு வந்து குடிப்பதும் கூடாது. அப்படிக் கட்டுப் பாட்டோடு இருக்க இயலாதவர்கள் எழுதிக்கொடுத்துவிட்டு சிறையை விட்டு வெளியே போய்விடுங்கள்” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
இதன் விளைவு திராவிடர் கழகத் தோழர்கள் சிறைப்பட்டவர்கள் தலைவர் கட்டளையைச் சிரமேற்கொண்டு சிறை யிலிருந்தனர். இதனால் புகை பிடிக்கிற பழக்கத்தையே விட்டு விட்டவர்கள் - முழுக்க முழுக்க விட்டுவிட்டவர்கள் பலர்.
இதே போல் சிறையில் என்ன கொடுக்கப்படுகிறதோ, அந்த உணவை உண்ணும் காட்சியை உடனிருந்து நேரில் காணும் வாய்ப்பு இருமுறை கிடைத்தது.
தளபதி ஸ்டாலின், பேராசிரியர் சுப.வீர பாண்டியன் ஆகியோருடன் பாரதிதாசன் சாலையில் சமூகக்கூடம் ஒன்றில் உடன் கைதானபோதும், ஆயிரம் விளக்கில் சமூகக்கூடத்தில் கைதாகி வைத்திருந்த போதும் எல்லோரும் சாப்பிட்ட சாம்பார் சோறு, தயிர் சோறும் தான் சாப்பிட்ட தலைவர் அவர்.
இவ்வளவு துன்பங்களையும் துயரங் களையும் ஏற்றுத் தமிழ்ச்சமுதாய நலனுக்கு உழைக்கும் இவர்தான் வீரமணி.
இது போராட்டக்களத்தில் நாம் கண்ட தமிழர் தலைவர் குறித்த பார்வை.
கல்விப்பணியில் அவர் கால் பதித்தது, காலமெல்லாம் நிலைத்து நிற்கும் வீரமணி அவர்களின் பெயரை மட்டுமல்ல, தந்தை பெரியாரின் பணியையும் காட்டும் அருஞ் செயல்.
பட்டியல் போட்டால் 43 நிறுவனங்கள் ஆம்! ஒன்றல்ல இரண்டல்ல 43 நிறுவ னங்கள். திருச்சியில் பெரியார் பயிற்சி நிறுவனம். நாகம்மை பயிற்சி நிறுவனம், பெரியார் தொடக்கப்பள்ளி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல் நிலைப்பள்ளி, நாகம்மையார் குழந்தைகள் இல்லம், பெரி யார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் பள்ளி, பெரியார் நூற்றாண்டு மழலையர் பள்ளி, பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி, சாமி கைவல்யம் முதியோர் இல்லம் என்று பெயர் கூறித் தொண்டறம் நிகழ்த்துகின்றன.
இவை மட்டும்தானா? சோழநாட்டில் தஞ்சைத் தரணியில் வல்லத்தில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, பெரியார் - மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சமூகத் தொடர் கல்விக் கல்லூரி, பெரியார் வணிகவியல் பயிற்சி மய்யம் (வல்லம்), வல்லத்தில் பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, பெரியார் மருத்துவ மனை குடும்ப நல மய்யம், மரபு சாரா கற்றல் ஆய்வு கல்வியகம், பெரியார் உயிரி தொழில்நுட்ப - உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம் என்று பட்டியல் நீளும்.
சென்னையில் ஏராளமான நிறுவனங்கள். இவை தவிர ஜெயங்கொண்டம், சோழங்க நல்லூர் ஆகியவற்றிலும் தந்தை பெரியார் பெயர் கூறும் சமூகப் பணி மய்யங்கள் என்று கூறிக்கொண்டே செல்லலாம்.
பெரியார் உலகமயமாகிறார் என்பதில் தொடக்கமாக, புதுடில்லியிலே தந்தை பெரியார் இந்திய மயமானார் என்பதன் எடுத்துக்காட்டு ‘புதுடில்லி பெரியார் மய்யம்’.
தந்தை பெரியார், அன்னை மணியம் மையார் மறைந்த பின் இயக்கத்தை அறப்போர் வழியிலும், சமூகப்பணி வழியிலும் செயலாற்றி முன் எடுத்துச் செல்லும் வீரமணி, வீரமணி என்ன செய்து விட்டார் என்று கேட்போர் வாய்மூடும் வண்ணம் ஆற்றும் பணிகளைப் பயன் பெற்றோர் குடும்பமே வாழ்த்துகிறது, பாராட்டுகிறது, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்! பாராட்டுவோருடன் இணைந்து வாழ்த்து மழை பொழிகிறது! வாழ்க பெரியார். வளர்க ஆசிரியர் வீரமணியின் தொண்டு!

புதன், 22 பிப்ரவரி, 2017

ஊன்றிப் படித்து உண்மையை உணர்க!
நிகழ்கால நடப்புகளும் - நமது நிலைப்பாடும்!

கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்

தமிழ்நாட்டின் முதலமைச்சராகவிருந்த செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பின் (5.12.2016) தமிழ் நாட்டின் அரசியல் அரங்கிலும், ஆட்சி மன்றத்திலும் பல்வேறு வகைகளிலும் வேக வேகமாகக் காய்கள் நகர்த்தப்படுகின்றன.
குறிப்பாக ஜெயலலிதா என்ற பார்ப்பன அம்மையார் மறைந்த நிலையில், மறுபடியும் முதலமைச்சர் என்ற ஆட்சி அதிகார பீடத்தில் அமர்வதற்கு இன் னொரு பார்ப்பனர் அமைய வாய்ப்பற்றுப் போன நிலையில், பார்ப்பன சக்திகள், பார்ப்பன ஊடகங்கள் அ.இ.அ.தி.மு.க.வில் சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டன. ஒரு பார்ப்பனப் பெண்ணுக்கு விளம்பரத் தோள்களைக் கொடுத்துத் தூக்கி நிறுத்துகின்றன. பாரதீய ஜனதா என்ற பார்ப்பனக் கட்சியோ, திராவிட இயக்கங்களுக்குத் தாங்கள்தான் மாற்று என்று கரிசனம் காட்டத் தொடங்கிற்று. அ.இ.அ.தி.மு.க. - பி.ஜே.பி. ஆகிய இரண்டு கட்சிகளின் லட்சியங்களும் ஒன்று என்று மத்திய அமைச்சர் திரு.வெங்கையா நாயுடு கசிந்துருகிக் கருத்தும் தெரிவித்தார்.
இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி தாய்க்கழகத்தின் தலைவர் என்ற முறையில் திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வாயிலாக (‘விடுதலை’, 8.12.2016) அ.இ.அ.தி.மு.க.வினருக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றினை விடுவித்தார்.
‘‘அ.தி.மு.க. சகோதரர்களே, எச்சரிக்கை! சிண்டு முடிந்திடுவோரை, உங்கள்மீது திடீர் அனுதாபம் - அளவற்ற ஆதரவு தருவதுபோல் நாடகம் போடுவோரை விழிப்போடு புரிந்துகொள்ளுங்கள். அக்கட்சியின் கட்டுக்கோப்பை - கட்டுப்பாட்டை மற வாதீர்!’’ என்று திராவிடர் இயக்க உணர்வோடு எச்சரித்தார்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆட்சி என்பது தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இயக்கக் கட்சிகளிடம்தான் கடந்த 1967 முதல் தொடர்ந்து இருந்து வருகிறது. இதில் ஒன்றை பலகீனப்படுத்தி, அந்த இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று பி.ஜே.பி. கருதித்தான் தன் சித்து வேலையையும் நடத்தியது. பி.ஜே.பி.க்கு அதற்கான சக்தி தமிழ்நாட்டில் இல்லை என்றாலும், அ.இ.அ.தி.மு.க.வுக்குள் ஒரு பிளவை ஏற் படுத்தி, ஒன்றைத் தன் கைக்குள் போட்டுக் கொண்டு மறைமுக ஆட்சியை நடத்தலாம் என்பதுதான் பி.ஜே.பி.யின் திட்டம். இந்த நிலையை கழகத் தலைவர் வெளிப்படுத்தினார்.
அதன்பிறகு 27.12.2016 அன்று மற்றொரு அறிக்கையினையும் கழகத் தலைவர் வெளியிட்டார்.
‘‘தமிழ்நாட்டில் ஏதோ ‘சூன்யம்‘ ஏற்பட்டு விட்ட தாகவும், அதை நிரப்பத் தங்களால்தான் முடியும்; அதற் காகவே புது ‘அவதாரம்‘ எடுத்துள்ளவர்கள் போலும் நித்தம் நித்தம் சிலர் உளறுவதும், அதை ஏதோ பிர கடனம் போல ஆசைக் கனவுகளை பகலிலே கண்டு அறிவித்து மகிழுவதுமாக உள்ளனர்’’ என்று கூறியதுடன்,
தந்தை பெரியார் சொல்லும் ஒரு கருத்தினையும் நினைவூட்டினார். ‘‘இந்நாட்டில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை. அரசியல் பெயரில், போர்வைக்குள் நடைபெற்றவை அத் தனையும் ஆரிய - திராவிட இனப்போராட்டமே!’’ என்று தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு பொருத்தமாக எடுத்துக்காட்டப்பட்டிருந்தது அவ்வறிக்கையில்.
‘‘(அந்தக் கனவுகளை) அப்பட்டமாக ஆரிய ஏடுகளும், மக்கள் ஆதரவைப் பெற்று இந்தப் பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத நிலையில் குறுக்கு வழி அரசியலில், லாட்டரியில் பரிசு விழாதா என்று கனவு காணும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கட்சிகளும் தலையிடுகின்றன - பிரச்சினையாக்க முயலுகின்றன’’ என்றும் இரண்டாவது அறிக்கையிலும் முக்கியமாக வலியுறுத்தியுள்ளார்.
தொடக்கம் முதல் இன்றுவரை பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். மத்திய அரசுகளின் திரைமறைவு நடவடிக்கையை அடையாளப்படுத்தி, எச்சரிக்கை எச்சரிக்கை என்று வலியுறுத்தி வந்துள்ளார் ஆசிரியர்.
தொடக்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தெரிவித்த கருத்துகளை மேலோட்டமாகப் பார்த்தவர் கள்கூட, பிறகு அதனை வழிமொழிகிற வகையில் கருத்துகளை வெளியிட ஆரம்பித்தனர் என்பதுதான் உண்மை. போகப் போகப் புரியும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் கழகத் தலைவர். அதுதான் இப்பொழுது நடந்தும் வருகிறது!
இந்தப் பிரச்சினையில் தி.மு.க.மீது எந்தவித உரசலோ, விமர்சனமோ வைக்கவில்லை - திரா விடர் கழகத் தலைவர். இன்னும் சொல்லப்போனால், இந்தக் காலகட்டத்தில் தி.மு.க. நடந்துகொண்டுவரும் - மேற்கொள்ளும் அணுகுமுறையை மிகவும் உயர்வாகப் பாராட்டி தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் 27 ஆம் தேதி அறிக்கையில் அவர் தெரிவித்த கருத்து கவனிக்கத்தக்கது.
‘‘தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான தி.மு.க. மிகுந்த முதிர்ச்சியுடன் - குறுக்கு வழிகளில் எதற்கும் ஆசைப்படாமல் கண்ணியத்துடன் அரசி யல் நடத்துவது - பாராட்டுக்குரியது. எதிர்க்கட்சி என்ற முறையில் உரிய அளவு - தன் கருத்துகளை வெளியிட்டு வருகிறது.
கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம் வீழ்ந்த துண்ணா திறக்கும்
வானகம் கையுறினும் வேண்டாம் விழுமியோர்
மானம் மழுங்கா வரின் (நாலடியார்)
என்ற பழைய பாட்டு நியதிப்படி -
இடப்பக்கம் வேட்டையில் வீழ்ந்தால் புலி அதனை உண்ணாதாம்; வலப்பக்கம் வீழ்ந்தால்தான் உண்ணும் என்பது எப்படியோ - வேட்டையில் கூட ஒரு நியதி உண்டு.
குறுக்கு வழியில் எந்த முயற்சியும் தேவை என்று எண்ணாத திண்மைதான் உண்மையான ஜனநாயகவாதிகள் என்பதை உலகுக்கு அவர் களை அடையாளம் காட்டும்.
ஆக்கபூர்வ எதிர்க்கட்சி பணியை அந்த இயக் கம் - தனது கடமை வழுவாது - அதன் பண்பட்ட எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்குகிறது.’’ (‘விடுதலை’, 27.12.2016)
உண்மை நிலை இவ்வாறு இருக்க - தி.மு.க.வுக்கு இதில் என்ன பிரச்சினை? என்ன சங்கடம்?
பெரியார் மண்ணில் திராவிட இயக்கம் தவிர்த்த மூன்றாவது சக்தியாக காவிகள் காலூன்றக் கூடாது என்பதில் தி.மு.க.வுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாதே - இருக்கவும் கூடாதே!
இன்னும் சொல்லப்போனால் தி.மு.க.வே கூட இந்தக் கருத்தை வெளிப்படையாக தெரிவித்திருந்தால், அதன் திராவிட இயக்க உணர்வுக்காக  பொதுத் தளத்தில் அது சிறப்பாகவே உயர்ந்திருக்கும்.
இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு, ஆளுநர் எப்படியெல்லாம் நடந்து வருகின்றனர் - அதைப்பற்றிய கருத்துகளைக் கூற தி.மு.க. ஏன் தயங்கவேண்டும்?
அப்படியொரு கருத்தை முன்வைக்க முன்வரா விட்டாலும், தாய்க்கழகமான திராவிடர் கழகத் தலைவர் அந்தக் கருத்தை வலியுறுத்தியது கண்டு மகிழ்ந்திருக்க வேண்டும்.
ஆனால், நடந்தது என்ன? திராவிடர் கழகத்தைச் சங்கடப்படுத்தவேண்டும் என்று நினைத்துக் கொண்டு கழகத்தால் விலக்கப்பட்ட சிலரை அழைத்துக் கூட்டம் நடத்தியதை நினைக்கும்பொழுது இப்பொழுதுகூட ‘‘சிரிப்புதான்’’ வருகிறது!
இது என்ன சிறு குழந்தை விளையாட்டு!
எவ்வளவோ நிலைக்கு உயர வேண்டியவர்கள் இப்படி ஒரு சிந்தனைக்கும், செயலுக்கும் ஆளாகி விட்டார்களே என்ற வருத்தம் - அவர்மீது கொண்ட அக்கறையின் காரணமாகவே திராவிடர் கழகத் தலைவருக்கு ஏற்பட்டது என்பதுதான் உண்மை.
கடந்த 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் நடை பெற்ற அமளி - துமளிகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் சட்டம் அறிந்தவர் என்ற முறையில் தம் கருத்தினைத் தெரிவித்தார்.
சட்டப்பேரவைக்குள் சபாநாயகரின் முடிவுதான் இறுதியானது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே! எந்த முறையில் வாக்கெடுப்பு என்பது எல்லாம் அவரின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்பது பலமுறை சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு, அமைச்சர்களாக இருந்தவர்களுக்குத் தெரியாததா?
குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதில்லை - தேர்தல்மூலம்தான் அதனை ஈடேற்ற விருப்பம் என்பதில் தி.மு.க.வுக்கு தெளிவு இருக்கும்பொழுது தேவையில்லாமல் தி.முக.. இதில் அதீதமாக ஏன் நடந்துகொள்ளவேண்டும்? அதனால் தி.மு.க.வுக்கு என்ன லாபம்? லாபமில்லாததோடு மட்டுமல்லாமல், வீணான கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டது தானே மிச்சம்.
வேடிக்கைப் பார்த்துக் கொண்டல்லவா - சம்பந்தப் பட்டவர்கள் (பாதிக்கப்பட்டவர்கள்) இருந்தனர்!
பொதுவானவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை அலட்சியப்படுத்திவிட முடியாதே! நாமாகத் தேடிக்கொண்ட வீண் பழி இது!
வடநாட்டு தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் தி.மு.க.வைப்பற்றித் தூற்றித் தூற்றி செய்திகளையும், கருத்துகளையும் வெளியிடும் நிலைக்கு நாம் ஏன் ஆளாகவேண்டும்?
இதற்குமுன் சட்டமன்றத்தில் பலமுறை அமளிகள் நடந்ததுண்டு. குறிப்பாக 1988 இல் இந்த முறை அதற்கு நேர்மாறானது என்ற அடிப்படையில் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டும் தலைமைப் பண்பைப்பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார் (‘விடுதலை’, 18.2.2017).
1988 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜானகி அணிக்கும், ஜெயலலிதா அணிக்கும் பலப்பரீட்சை நடந்தபோது கலைஞர் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? அந்தப் பொருளில்தான் திராவிடர் கழகத் தலைவர் தம் அறிக்கையில் இப்பொழுது சுட்டிக்காட்டியிருந்தார்.
இப்பொழுது தமிழ்நாடு சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைவர் எப்படி அறிக்கை வெளியிட்டுள்ளாரோ - அதே முறையில்தான் அன்றைக்கும் அறிக்கை வெளியிட்டு இருந்தார். சபாநாயகருக்குரிய உரிமை குறித்தும் தெளிவுபடுத்தி இருந்தார் (‘விடுதலை’, 8.1.1988).
செய்தியாளர்கள் தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் பாராட்டத்தகுந்ததுதானா?
செய்தியாளர்: நீங்கள் வருத்தம் தெரிவித்திருந்தாலும், திராவிட கட்சிகளுக்கு தாய் கட்சியாக உள்ள தி.க.வின் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைவர் கலைஞர் வழி நடத்தாததே சட்டசபையில் இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் என்று தெரிவித்து இருக்கிறாரே?
மு.க.ஸ்டாலின்: திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் ஒரு மூத்த தலைவர். அவரை தலைவர் கலைஞர் மட்டுமல்ல, தலைவரைப் பின்பற்றி நடக்கும் நாங்களும் மிகவும் மதிக்கிறோம். ஆகவே, நாங்கள் மிகவும் மதிக்கும் ஒருவர் வைத்துள்ள குற்றச்சாட்டுபற்றி நான் விமர்சித்து அவருக்குரிய மதிப்பை குறைக்க விரும்பவில்லை (‘முரசொலி’, 21.2.2017, பக்கம் 4).
திராவிடர் கழகத் தலைவர் வைத்த குற்றச்சாட்டு சரியானதல்ல என்ற சொல்லி, அதற்கான காரணத்தையும் விளக்குவதுதான் சரியான விமர்சன முறை. அப்படி செய்திருந்தால், அதன்மூலம் திராவிடர் கழகத் தலைவரின் மதிப்பு எப்படி குறைந்து போகும்?
நாங்கள் மதிக்கும் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் -  நாங்கள் மதிக்கும் ஒரு மூத்த தலைவர் - நான் விமர்சித்து அவருக்குரிய மதிப்பை குறைக்க விரும்பவில்லை என்றால் என்ன பொருள்?
பதில் கருத்தைச் சொல்லியிருந்தால் கண்டிப்பாக திராவிடர் கழகத் தலைவரின் மதிப்புக் குறையப் போவதில்லை. மாறாக மதிப்புக் குறையும் என்றால், மதிப்பில்லா முறையில் வார்த்தைகளை கருத்துகளைக் கையாள நேரிடும் என்பதுதானே அதன் பொருள்.
மாறுபட்ட கருத்தைச் சொன்னால், அதனை ஏற்கும் பக்குவம் உள்ளவர்தான் - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதுபோன்ற மூத்த தலைவர் அய்யா வீரமணி.
ஆனால், அவர் சொன்ன பதிலில்தான் சுற்றி வளைத்து, திராவிடர் கழகத் தலைவரை அவமதிக்கும் பொருள் பொதிந்திருக்கிறது என்பது வருத்தமான ஒன்றாகும்.
திராவிடர் கழகம் ஒரு சமுதாய புரட்சி இயக்கம் - தி.மு.க. தேர்தலில் போட்டியிடும் அரசியல் அமைப்பு. இந்த நிலையில், ஒரு சில நேரங்களில் கருத்து மாறுபாடு ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாததுதான்!
இதற்கு முன்பும் பல நேரங்களில் நிகழ்ந்ததுண்டு. விமர்சனங்கள் கடுமையாகக்கூட இருந்திருக்கின்றன. அதேநேரத்தில், மதிப்பைக் குறைக்கும் பேச்சுக்கே, வார்த்தைக்கே இடமில்லை.
அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுகூட தொழிற்கல்லூரிகளுக்கு மனு போடும் தகுதி மார்க்கை 50 சதவிகிதத்திலிருந்து 55 சதவிகிதமாக உயர்த்தியபோது, அதனைக் கண்டித்து ‘விடுதலை’யில் தலையங்கம் தீட்டினார் ஆசிரியர் கி.வீரமணி.
அதனை ஏற்றுக்கொண்டு, ஏற்கெனவே விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு இருந்தும், அவற்றையெல்லாம் அழித்து விட்டு, புது விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன என்பது எதைக் காட்டுகிறது?
தவறு என்று சுட்டிக்காட்டுவது தாய்க்கழகத்தின் கடமையல்லவா! அண்ணாவை ஏற்போர் இதனையும் ஏற்க வேண்டாமா?
‘‘வீரமணி எங்கு இருந்தாலும் பெரியார் கொள்கையை விட்டுக் கொடுக்கமாட்டார்.’’ (‘குமுதம்‘ இதழ் பேட்டி, 3.12.1998).
‘‘பா.ஜ.க.வை ஆதரித்தால்கூட வீரமணி எங்களை மன்னித்து விடுவார். ஏனெனில், ஏற்கெனவே அவர் அ.தி.மு.க.வை மன்னித்திருக்கிறார்.’’ (‘முரசொலி’, 14.4.1998, முதற்பக்கம்).
இப்படிப் பேட்டி கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள்தான்.
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்மீது பற்றும், அவர்தம் எதிர்காலத்தைப்பற்றிய நல் விருப்பமும் கொண்டவர் திராவிடர் கழகத் தலைவர் என்பது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
தி.மு.க. தலைமைப் பொறுப்புக்கு மு.க.ஸ்டாலினை நான் முன்மொழிவேன் என்று தி.மு.க. தலைவர் அவர்களின் அறிவிப்பினை ஏற்று, ‘‘கலைஞர் அறிவிப்பு - காலச் சிலாசாசனம்!’’ என்று அறிக்கை கொடுத்து உச்சி மோந்தவர் திராவிடர் கழகத் தலைவர் (‘விடுதலை’, 8.1.2013).
இப்படி தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியதற்காக - அவரின் சகோதரரால்  ‘‘அரசியல் விபச்சாரம் செய்கிறார் வீரமணி’’ என்ற அசிங்கமான கூடா விமர்சனத்துக்கு ஆளானவர்தான் அய்யா வீரமணி. அதற்கு எதிர்வினையாக எந்த ஒரு சொல்லையும் சொல்லவில்லை தமிழர் தலைவர் - அது அவருடைய பெருந்தன்மை.
அதெல்லாம் தெரிந்திருந்துமா ஆசிரியர் அவர்களின்மீது ஆத்திரமும், அவமதிக்கும் மறைமுக சொல்லாடல்களும்?
முகநூலிலும், வாட்ஸ் அப்-களிலும் அசிங்க அசிங்கமாக மலத்தைத் தோய்த்து பதிவு செய்பவர்கள் யார்? யார்? அவர்கள் ‘‘உறவு முறையில்’’  - யார் யாருக்குச் சொந்தம் - எத்தகையவர்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா?
தி.மு.க. என்று சொல்லிக் கொண்டு தந்தை பெரியார் ஆசிரியர் வீரமணி, பகுத்தறிவுக் கொள்கைகளைப்பற்றி எல்லாம் நாராசமான நடையில் எழுதப்படுவதெல்லாம் தி.மு.க. தலைமைக்குத் தெரியாதா?
இழிவுகளையும், வசவுகளையும் சந்தித்து சந்தித்து, அவற்றை எருவாக்கி வளர்ந்ததுதான் திராவிடர் இயக்கம்!  தந்தை பெரியாருக்கும், அவர்தம் தொண்டர்களுக்கும் அவை எல்லாம் சந்தனமாலைகளே! தோழர்கள் கோபத்தோடு தலைவரிடம் இவற்றைக் கூறும்போதுகூட, ‘‘பந்தை அடியுங்கள் - காலை அடிக்கவேண்டாம்‘’ என்ற அறவுரை அறிவுரையைத்தான் கூறுகிறார் தமிழர் தலைவர்.
இப்பொழுதுகூட எங்கள் நிலை என்ன தெரியுமா? அ.தி.மு.க.வா - பி.ஜே.பி.யா? என்று கேட்டால், அ.தி.மு.க.தான்; தி.மு.க.வா - அ.தி.மு.க.வா? என்று கேட்டால், எங்கள் ஆதரவும், அரவணைப்பும் தி.மு.க.வுக்குத்தான்!  திராவிடர் கழகம் - கிளைக் கழகமல்ல: தாய்க்கழகம்!
தமிழ்நாட்டு உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் வலிமை வாய்ந்த தி.மு.க. தவறான அணுகுமுறைத் தடத்தில் கால் வைத்து தேவையில்லாத கெட்ட பெயரை விலைக்கு வாங்குகிறதே - இதுவரை சம்பாதித்து வைத்துள்ள மக்களின் நல்லபிப்பிராயத்தை இழக்கிறதே என்ற வலியின் அடிப்படையில்தான் தாய்க்கழகம் ‘தவிப்பு’ உணர்வோடு ‘கடிந்து’ கொள்கிறது. இதனைப் புரிந்துகொள்ளும் பக்குவம் வேண்டாமா?
இன்னொன்றும் முக்கியம் - திராவிர் கழகம் தனித்தன்மையான சமூகப் புரட்சி இயக்கம்! தனது கருத்தைத் தனித்தன்மையோடு கூறும் தகைமை கொண்டது.
‘குடிஅரசு’ முதல் இதழ் தலையங்கத்தில் (2.5.1925) தந்தை பெரியார் குறிப்பிட்டார்களே,
‘‘நகுதற் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண் மேற் சென்றிடித்தற் பொருட்டு’’ என்ற கருத்துதான் எங்களின் என்றென்றுமான நிலைப்பாடு! ஆறுவது சினம்!


.
 


Read more: http://viduthalai.in/e-paper/138501.html#ixzz4ZTmZkbFM

திங்கள், 20 பிப்ரவரி, 2017

மானமிகு தோழர் கி.வீரமணி

மானமிகு தோழர் கி.வீரமணி <3
¨ பத்து வயதிலே பொது வாழ்வுக்கு வந்து மூடநம்பிக்கைக்கும், பார்ப்பன ஆதிக்கத்திற்கும் எதிராய் முழங்கியவர்.
¨ “தட்டுத்தடங்கலின்றி சரளமாக, பார்ப்பன ஆதிக்கத்தையும், ஏமாற்றுப் புராணப் புளுகையும், ஆபாசங்களையும், கடவுளையும் கிழி கிழி என்று கிழிப்பதை வாய்பிளந்து கொண்டு நானும் பார்த்தேன் - கேட்டேன்!” என்று எழுத்தாளர் ஜெயகாந்தனால் வியந்து பாராட்டப்பட்டவர்.
¨ “திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர்” என்று அண்ணாவால் புகழப்பட்டவர்.
¨ பதினொரு வயதிலே பெரியாரைச் சந்தித்து இயக்கப் பணி ஆற்றியவர்.
¨ மாணவர் பருவத்திலே ‘முழக்கம்’, ‘புதுமை’ என்ற கையெழுத்து ஏடுகளை நடத்தியவர்.
¨ பதினொரு வயதில் திருமணத்தில் வாழ்த்துரை வழங்கியவர்.
¨ பன்னிரண்டு வயதில் பொதுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்.
¨ பதிமூன்று வயதில் மாநாட்டுக் கொடி ஏற்றியவர்!
¨ பதினான்கு வயதில் படத் திறப்பாளர்!
¨ 21 வயதில் கலைஞர் வரவேற்புரையாற்ற, 11 வயதுச் சிறுவனாய் திருவாரூரில் சிறப்புரை ஆற்றிய பெருமைக்குரியவர்.
¨ பதினொரு வயதிலே பல இடங்களுக்கும் சிறப்புப் பேச்சாளராய்ச் சென்றவர்.
¨ அய்யா - அண்ணா கருத்து வேறுபாடு களைய 11 வயதில் அண்ணாவிடம் தூது சென்ற சிறுவன் என்ற வரலாற்றுச் சாதனைக்குரியவர்.
¨ பதினாறு வயதிலே மாநாட்டுப் பொறுப்பாளராய் மாநாடு நடத்தியவர் (1950)
¨ 11 வயதில் பத்திரிகை தலையங்கத்தில்
பாராட்டப்பட்டவர்.
¨ ஊர் ஊராய்ப் பிரச்சாரம் செய்துக்கொண்டே உயர் மதிப்பெண்கள் பெற்றவர்.
¨ வறுமையை வென்று வாகை சூடியவர்.
¨ துணை வேந்தரை உரையால் உருகச் செய்தவர்.
¨ பல்கலைக்கழகப் பரிசுகளை யாரும் பெறாத வகையில் பெற்று சாதனை புரிந்தவர்.
¨ கார் வேண்டாம் என்று பேருந்தில் சென்றவர்.
¨ அண்ணா பெறாத முழு உரிமையை அய்யாவிடம் பெற்றவர்.
¨ மிசா கொடுமையில் மீண்டு வந்தவர்.
¨ அய்யாவின் சரியான வாரிசாய் சரித்திரம் படைப்பவர்.
¨ இயக்க வாழ்வே தன் வாழ்வு எனக் கொண்டவர்.
¨ 9,000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை விலக்கவும், பிற்பட்டோர் இடஒதுக்கீடு
50 சதவீதம் ஆக உயரவும், நுழைவுத் தேர்வு நீக்கப்படவும் காரணமானவர்.
¨ 69 சதவீதம் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அரசியல் சாசனத்தில் சேர்க்கச் செய்தவர்.
¨ மண்டல் குழு பரிந்துரையை அமுல்படுத்தச் செய்து மத்திய அரசில் பிற்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்கச் செய்தவர்.
¨ ஜாதி ஒழிப்புக்கு பெரும்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தவர்.
¨ ஜாதி, மதம், இனம், மொழியற்ற மணவுறவுகளை தன் குடும்பத்தில் நிகழ்த்தி,
“யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்ற பழந்தமிழர் உயர் வாழ்வை வாழ்ந்து காட்டுபவர்.
¨ பொய் வழக்காட மறுத்த வழக்கறிஞர்.
¨ மாற்றுக் கொள்கையாளரை மதிக்கும் மாண்பாளர்.
¨ காட்சிக்கு எளியவர்! எல்லோரிடமும் எளிதில் பழகுபவர்.
¨ எடைக்கு எடை தங்கம் பெற்று அதைப் பொதுப்பணிக்கு அளித்த உலகின் ஒரே தலைவர்.
¨ “இந்தியா எங்கும் வழிகாட்ட வாருங்கள்” என்று தலைவர்களால் அழைக்கப்படுபவர்.
¨ கீதையின் கீழ்த்தரத்தை கிழித்து தோரணமாய்த் தொங்கவிட்டவர்.
¨ வாழ்வியல் சிந்தனைகளை வையகம் வியக்க, இரண்டாவது வள்ளுவமாய் வழங்கி வருபவர்.
¨ 75 ஆண்டுக் கால பொதுவாழ்விற்கு உரியவர்.
உலகிலேயே அதிக நேரம் பேசியவர், எழுதியவர், பிரச்சார பயணம் மேற்கொண்டவர்.
¨ மூன்று முறை இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நிலையில் 84 வயதிலும் ஓயாது உழைப்பவர்.
¨ யார் இவர்?
¨ அவர்தான் அய்யாவின் அசல் வாரிசான தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்! இத்தகு ஒருவரை, உலகில் நீங்கள் அறிந்ததுண்டா? உலகில்தான் வேறொருவர் உண்டா? ஆதிக்கம் அழிக்கவும், சமத்துவம் கிடைக்கவும், ஒடுக்கப்பட்டோர் உயர்வு பெற, உரிமை பெறவும் அதுதானே வழி! சிந்திப்பீர்; செயல்படுவீர்!
- மஞ்சை வசந்தன்

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

தீண்டாமைக்கு இந்துமத சாஸ்திரங்களிலோ புனித நூல்களிலோ ஆதாரம் இல்லையா?

             அணிந்துரை

இது ஒரு சிறு வெளியீடு சிற்றுளிபோல. இந்துமத வர்ணாஸ்ரமப் பாறையைப் பிளந்து தூள்தூளாக்கும் வல்லமையுடன் வடித்துத் தரப்பட்டுள்ள நூல். பொய் ஒன்றைத் திரும்பத்திரும்பக் கூறச்செய்து மெய்போல ஆக்கிடலாம் என முயலும் பிற்போக்குத் தனமான இந்துமதப் பாதுகாவலர்களின் முகத்திரையைக் கிழித்து அவர்களை அம்மணப்படுத்தும் அற்புத வெளியீடு.

திருச்சித் தோழர் பெல் ம.ஆறுமுகம் எழுதியுள்ளார். அவர் வாழும் இடங்களில் பிற்போக்காளர் எடுத்திடும் நடவடிக்கைகளுக்கெல்லாம் எதிர் வினையாற்றிடும் அற்புதமான ஆற்றலுள்ள போர் மறவர். அவருடைய ஆக்கங்கள் அச்சில் வருவது முன்பே நிகழ்ந்ததுதான். அந்த வகையில் படைக்கலன்களின் பட்டறையில் இதுவும் இணைகிறது. பாராட்டுக்கள்.

மனிதனை மனிதன் தொடக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கும் மதம் உலகிலேயே இந்துமதம்தான். அப்படியிருக்க இந்துமத நூல்களில் தீண்டாமை குறிக்கப்படவில்லையெனச் சுயநலமிகள் கூறுவதை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளார். இதில் வாதத் திறமையுள்ள தேர்ந்த வழக்குரைஞர் கூடத் தோற்றுப் போகும் வகையில் மிக நேர்த்தியாகப் பல தரவுகளின் அடிப்படையில் தமது வாதங்களை அடுக்கடுக்காக தெரிவித்துத் தனித்து மிளிர்கிறார்.

தீண்டாமை பாவம் - கடவுளுக்கும் மனித குலத்திற்கும் எதிரானது என காந்தியார் கூறியதாக இந்திய நாட்டின் உள்நாட்டுக் கடித உறையில் அச்சிட்டனர் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னே! கடவுளே உண்டாக்கின நால்வருணக் கொடுமையால் உருவானது தீண்டாமை எனும்போது கடவுளும் உடந்தைதானே?
பாவம் செய்தது கடவுளும்தானே? அதனால்தானே இன்னமும் இந்தியாவில் தீண்டாமைக் கொடுமைகள்? கூடாது இக்கொடுமைகள் எனக் கூறக் காணோமே இந்து மதத்துக்கு வக்காலத்துப் போட்டு சப்பைக் கட்டுக் கட்டுபவர்கள்?
இந்தக் கேள்விகள் அனைவர் மனத்திலும் பொறியாகக் கிளப்பிடும் வகையில் வெளிவந்துள்ள இந்நூல் அனைவர் இடையேயும் பரவலாகப் பரப்பப்பட வேண்டும். அனைவரும் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டும்.

இப்பொறி பெருந்தீயாகப் பரவி தீண்டாமைக் கொடுமைகளைச் சுட்டெரித்திட வேண்டும் என்பது எனது ஆசை.
மானமிகு பெல் ம.ஆறுமுகம் இத்தகைய தீக்கங்குகளை அவ்வப்பொழுது எறிந்து கொண்டே இருக்க வேண்டும்.
நூல்கள் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.

தோழமையுடன்
                                                                   சு.அறிவுக்கரசு                        

                                                       செயலவைத் தலைவர்         
                                                            திராவிடர் கழகம்


             
                       













என்னுரை

நம் புண்ணியத் திருநாட்டில் ஆடு நடக்கலாம் மாடு நடக்கலாம் பன்றி நாய் பூனை யாவும் தாராளமாய் நடக்கலாம். ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் நடக்கக் கூடாது என்கின்ற கொடுமை இன்று நேற்றல்ல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நடந்துகொண்டே இருக்கிறது. நாகரிகமற்ற காலத்தில்தான் அது நடந்தது என்றால் நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் இக்காலக்கட்டத்திலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நிமிடமும்ää ஒவ்வொரு நொடியும் நம் நாட்டில் தீண்டாமைக் கொடுமைகள்  நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

வேறு எங்கும் இல்லாத தீண்டாமை நம் நாட்டில் மட்டும் நடக்கிறதே வேறு எந்த மதத்திலும் இல்லாத கொடுமை இந்து மதத்தில் மட்டும் இருக்கிறதே என்று யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதைத் தவறு என்றும் உணர்வதாகத் தெரியவில்லை. தவறு என்று சொல்பவர்கூட மனதாரச் சொல்வதாகத் தெரியவில்லை.
எந்த மக்கள் அக்கொடுமைகளுக்கு ஆளானார்களோ அம் மக்களை ஏமாற்றுகின்ற வகையிலேயே மேலும் மேலும் பேசிக்கொண்டு வருகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இந்துமதம்தான் என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். ஒரு நோய்க்குக் காரணம் இன்ன கிருமிதான் எனபதை ஒத்துக் கொண்டால்தானே அக்கிருமியை ஒழிக்க நடவடிக்கை எடுக்க முடியும்? அதனை ஒத்துக் கொள்ளாவிட்டால் அக்கிருமி ஒழிக்கப்படாமல் நோய் மேலும் மேலும் பரவிக் கொண்டுதானே இருக்கும்?
தீண்டாமைக்கு இந்து மதம்தான் காரணம் என்பதை ஒத்துக் கொண்டால்தானே அதனை ஒழிப்பதற்கும் அவர்கள் முன் வருவார்கள்? அதுதானே உண்மையான தீண்டாமை ஒழிப்பாக இருக்க முடியும்?

தீண்டாமைக்கு இந்து மதத்தில் ஆதாரமில்லை எனச் சொல்லி விட்டால் தீண்டாமை ஒழிந்து விடுமா? இதனை இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்காகப் புறப்பட்ட புண்ணியவான்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். நான் பணியாற்றும் நிறுவனத்தில் இந்துமத அமைப்புக்கள் இதுபோன்ற ஏமாற்று வேலையை அடிக்கடி செய்து வருவார்கள். அவ்வப்பொழுது அதற்கு நாம் பதிலடி கொடுத்தாலும் அதனை  அறிவுப் பூர்வமாக மறுக்காமல் மீண்டும் மீண்டும் அதனை சொல்லிக்கொண்டே வருவார்கள்.


அப்படித்தான் தீண்டாமைக்கு இந்துமத சாஸ்திரங்களிலோ புனித நூல்களிலோ ஆதாரம் இல்லை என திரு. இராம கோபாலன் அவர்கள் சொன்னதாக 2008ம் ஆண்டிலேயே இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் துண்டறிக்கை வெளியட்டார்;கள். அதனை மறுத்து இந்துமத சாஸ்திரங்களில் தீண்டாமைக்கான ஆதாரங்களை அப்பொழுதே நாங்கள் வெளியிட்டோம். அதற்கான மறுப்பை அவர்கள் இதுவரையிலும் வெளியிடவில்லை.
அதனை மறுக்காமலேயே ஆறு அண்டுகள் கழித்து மீண்டும் அதேபோல ஒரு துண்டறிக்கையினை அவர்களது தொழிற்சங்கத்தின் பேரால் வெளியிட்டார்கள்.
2008ம் ஆண்டிலேயே புத்தகம் வெளியிடக் கூடிய அளவிற்கு ஆதாரங்களைத் திரட்டி இருந்தாலும் ஒரு தயக்கம் நிலவி வந்தது. நாம் புத்தகம் வெளியிடுவது சரியாக வருமா? மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு ஆதரவு இருக்கும்? என்றெல்லாம் அய்யம் எழுந்தது.
2012ம் ஆண்டு இந்துத்துவா கும்பலின் நச்சு விதைக்கு பதிலடி என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டோம். அது அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
திராவிடர் கழகத் துணைத்தலைவர் மானமிகு கவிஞர். கலி.பூங்குன்றன் அவர்கள் அதற்கு அணிந்துரை தந்து ஊக்குவித்தார்கள். திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு அறிவுக்கரசு அவர்கள் அதனை வெளியிட்டு நம்மை மேலும் ஊக்குவித்தார்கள்.

தற்பொழுதும் இந்து மதக் காவலர்கள் சொன்ன பொய்யையே மீண்டும் மீண்டும் சொல்லி வருவதால் பழைய தொகுப்புக்களை மீண்டும் தேடி எடுத்து தற்போதுள்ள நிகழ்வுகளையும் அத்துடன் இணைத்து புத்தகமாக வெளியிடத் துணிவு பெற்றோம்.
இதற்கு அய்யா அறிவுக்கரசு அவர்களிடம் அணிந்துரை எழுதித்தரக் கேட்டவுடன் மனமுவந்து தன்னுடைய வேலைப்பளுவை யெல்லாம் ஒதுக்கி வைத்து அணிந்துரை வழங்கியதுடன் மேலும் என்னுடைய எழுத்துப் பணிக்கு ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.

எனவேää இத்தகைய பணிகளுக்கு என்னை ஊக்குவித்து வரும் அய்யா கலி.பூங்குன்றன் அவர்களுக்கும்ää அய்யா அறிவுக்கரசு அவர்களுக்கும் நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டவனாகின்றேன்.

என்னுடன் பணியாற்றி எனது எழுத்துக்களுக்கு உறுதுணையாக இருந்து புத்தகம் வருவதற்கும் உதவியாக இருக்கக் கூடிய திருவெறும்பூர் ஒன்றிய தி.க தலைவர் வ.மாரியப்பன்ää செயலாளர் இரா.தமிழ்ச்சுடர்ää பெல் தி.தொ.க தோழர்கள் செ.பா.செல்வம்ää தோழர் ஆண்டிராசுää கிருட்டிண குமார் ஆ.அசோக்குமார்ää சுதர்சன் ஆகியோருக்கும் என்னுடைய அனைத்து பெரியாரியல் பணிகளுக்கும் உறுதுணையாக இருந்துவரும் தோழர் சி.மேகநாதன்ää கவிஞர் இனியன் ஆகியோருக்கும் பெல் தோழர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எப்பொழுதும் உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பையும் நாடுகிறேன். அனைவரும் இதனை வாங்கிப் படித்து மற்றவர்களையும் படிக்கச் செய்து இந்நாட்டில் நிலவும் தீண்டாமையை ஒழித்துக்கட்ட முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                                 என்றும் நட்புடன்
பெல் ம.ஆறுமுகம்.



Image result for ramagopalan images

கொடுமையிலும் மிகப் பெரிய கொடுமை
“உலகத்திலுள்ள கொடுமைகள் எல்லாவற்றிலும் இந்தியாவில் மக்களை மக்கள் தீண்டாமை என்கிற இழிவு சம்மந்தமாகச் செய்து வரும் கொடுமையே மிகப்பெரியதாகும். அதற்குச் சமமாக வேறு எந்தக் கொடுமையையும் கூற முடியாது. இது எல்லா மக்களாலும் சமூக இயல்வாதிகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட விசயமாகும். ஆனால் அத்தீண்டாமையை ஒழிக்க உருப்படியான வழியில் எந்தவொரு முயற்சியையும் இதுவரை யாரும் செய்யாமலேயே வெறும் வாய்ப்பந்தல் போட்டு மக்களை ஏமாற்றி காலங் கழித்து வருகின்றனர்”  என்றார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் அடிமைத்தனங்கள் நிலவி வருவது உண்மையென்றாலும் இந்தப் புண்ணிய(?) பாரதபூமியில்தான் மனிதனை மனிதன் தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம்ää நிழல் பட்டால் தோஷம் என்ற நிலை நிலவுகிறது.

ஆடு மாடு நாய் பன்றி யாவும் நடமாடும் வீதிகளில் ஆறறிவு படைத்த மனிதன் நடக்கவே கூடாது என்ற நிலை இந்த நாட்டிலன்றி வேறு எங்கும் காண முடியாது. இந்த விலங்குகளெல்லாம் இறங்கி நீந்தும் நீர்நிலைகளில் தாகத்திற்குத் தண்ணீர் அருந்தக்கூட அனுமதி மறுக்கப்பட்ட மக்கள் கூட்டம் இந்த நாட்டில்தான் உண்டு.

மலத்தை ஒரு மனிதன் மிதித்து விட்டால் மலம் பட்ட இடத்தை மட்டும் கழுவினால் போதும். ஆனால் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தானாகத் தொட்டாலும் தெரியாமல் உடல் பட்டுவிட்டாலும் உடுத்தியிருக்கும் உடையுடன் குளிக்க வேண்டும் என்ற கொடுமை வேறு எங்காவது உண்டு என்று யாராலும் கூற முடியாது.

உண்ணுகின்ற உணவும் தாங்கள் விரும்பியபடி உண்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டதில்லை. உடுத்துகின்ற துணிகள்கூட நல்ல விதமாக அணிந்து கொள்ளவும் ஆபரணங்கள் அணியவும் இவர்கள் அனுமதிக்கப்பட்டதில்லை. கல்வி கற்கவும் செல்வம் சேர்க்கவும் பல்லாயிரம் ஆண்டுகளாய் அவர்கள் அனுமதிக்கப்பட்டதில்லை.

தாங்கள் விரும்புகின்ற கடவுளை வணங்குவதற்குக்கூட இவர்களுக்கு அனுமதி கிடையாது. தங்கள் பிள்ளைகளுக்கு தாங்கள் நல்ல பெயர்கள் வைத்து அழைப்பதற்குக்கூட அனுமதியில்லை. இன்னும் பல சொல்லொணாத் துயர்களை இந்நாட்டுத் தீண்டத்தகாத மக்கள் அனுபவித்த கொடுமைகளைப் போல வேறு எந்த நாட்டு அடிமையும் அனுபவித்ததாக எவரும் ஒப்பிட்டுக் கூறிட முடியாது.

தீண்டத்தகாதவர்களை உயர்ஜாதியினர் தங்களைப் போன்ற மனிதராகவே கருதியதில்லை. தனக்கு இருக்கும் ஆடுää மாடுää வீடுää நிலம் போன்று அவர்களும் ஒரு சொத்தாகவே மதிக்கப்பட்டார்கள். ஒரு நிலச்சுவான்தார் தன்னுடைய நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்யும்போது இந்த நிலத்தில் உள்ள மரம்ää செடிää கொடி அனைத்தும் மற்றும் நிலத்திற்கு அடியிலுள்ள செல்வங்களும் மேற்படியாருக்கு சொந்தம் என்று அதனை அவரே முழுவதும் ஆண்டு அனுபவித்துக் கொள்ளலாம் என்றும் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த நிலத்தில் காலங்காலமாக எனக்கு அடிமையாக இருந்து உழைத்த பறையர் குடும்பத்தினர் நூறு பேihயும் உங்களுக்கு கிரயசாசனமாக எழுதித் தருகிறேன் என்று ஒப்பந்தம் போடுவார்.

அதுபோல ஒரு பண்ணையாரிடம் வேலை செய்த தீண்டத்தகாதவர்கள் அவரது கொடுமை தாங்காமல் தப்பி ஓடிவிட்டால் அவர்களைப் பிடித்துத் தரச்சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு அவர்களை கொத்தடிமைகளை மீட்பதுபோல மீட்டுத் தந்த வரலாறும் இங்குதான் நடந்தது.

அதுபோல மன்னர் குடும்பத்தில் யாராவது ஒருவர் நோய்வாய்ப்பட்டாலோ மன்னர் பதவி ஏற்றாலோ அரண்மனை கட்டினாலோ கோயில்கள் கட்டினாலோ ஆடு மாடுகளைப் பலி கொடுப்பது போல தீண்டத் தகாதவர்களையும் நரபலி கொடுத்திருக்கிறார்கள் என்பதும் இந்த நாட்டு மக்களின் மறைக்கப்பட்ட வரலாறு சொல்கிறது.

தீண்டாமையின் கொடுமை பற்றி டொமினிக் லேப்பியர், லேரி காலின்ஸ் ஆகியோர் எழுதிய ~நள்ளிரவில் சுதந்திரம்| என்ற நூலில் உள்ளவற்றைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

“இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினராகத் தீண்டத்தகாதோர் இருந்தனர். முற்பிறவியில் செய்த பாவங்களால் சபிக்கப்பட்டு எந்த சாதியிலும் சேர்க்கப்படாமல் ஒதுக்கப்பட்டவர்கள் என்று இவர்கள் கருதப்பட்டனர். கருப்புத் தோல் கெஞ்சிப்பணியும் குணம் கிழிந்துபோன ஆடை ஆகியவற்றால் இவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களின் பெயரைச் சொல்வதுகூட இழிவாகக் கருதப்பட்டது. அவர்களின் லேசான தீண்டல்கூட சாதி இந்துவைத் தீட்டாக்கி விடும். சடங்கு முறைகளுடன் குளித்தே இந்தத் தீட்டு நீக்கப்பட்டது.

 பிராமணர்கள் வசிக்கும் பகுதியில் அவர்கள் காலடி படுவதுகூடத் தீட்டாகக் கருதப்பட்டது. சாதி இந்து ஒருவர் வரும்போது எதிரே வரும் தீண்டத்தகாதோரின் நிழல்கூட அந்தப் பாதையில் விழக்கூடாது. அந்த அளவுக்கு அவர்கள் ஒதுங்கிச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டனர். இந்தியாவின் சில பகுதிகளில்ää தீண்டத்தகாதோர் இரவு நேரங்களில் மட்டுமே குடிசைகளிலிருந்து வெளியே வர அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் காணத் தகாதோராகக் கருதப்பட்டனர்.

தீண்டத்தகாதோர் முன்னிலையில் எந்த இந்துவும் உணவருந்த மாட்டார். அவ்ரகளால் கொண்டு வரப்பட்ட தண்ணீரை அருந்த மாட்டார். அவர்கள் தொட்ட பாத்திரத்தைத் தொட மாட்டார். பல இந்துக் கோயில்கள் அவர்களுக்குப் பூட்டப்பட்டிருந்தன. அவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் அனுமதிக்கப்படவில்லை. மரணத்தில்கூட அவர்கள் பறையர்கள் என்று ஒதுக்கியே வைக்கப்பட்டனர். பொதுவான சுடுகாட்டைப் பயன்படுத்த தீண்டத்தகாதோர் அனுமதிக்கப்படவில்லை. உடல் தகனத்துக்குத் தேவையான கட்டைகளை வாங்க முடியாத அளவுக்கு அவர்கள் பரம ஏழைகள் என்பதால் அவர்களின் உடல்களைத் தீயுண்ணுவதை விட கழுகுகள் உண்பதுதான் அதிகம்.

இந்தியாவில் இன்னமும் சில பகுதிகளில் அடிமைகள் போல இவர்கள் வேலை செய்த பண்ணைகளுடன் சேர்த்து விற்கவும் வாங்கவும் பட்டார்கள். பொதுவாக தீண்டத்தகாதோரில் ஒரு இளைஞன் ஒரு எருதின் விலைக்குச் சமமாக விற்கப்பட்டான். சமூக வளர்ச்சி காணும் நாட்டில் இவர்கள் ஒரே ஒரு உரிமையை மட்டும் அனுபவித்தார்கள். அதாவது புனிதமான பசு தொற்று நோய்க்குப் பலியாகி விட்டால் அதனை வண்டியில் ஏற்றி செல்லும் தீண்டத்தகாதோர் அந்த அழுகிப் போன மாட்டிறைச்சியை அவர்களைப் போன்ற மற்றவர்களுக்கு விற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்”

                   (நள்ளிரவில் சுதந்திரம் பக்கம் 154.)

கறுப்பர் வெள்ளையர் என்பது கூட நிறத்தால் அடையாளப்படுத்த முடியும். ஆனால் தோற்றத்தில் மற்ற மக்களிடமிருந்து எந்த வேறுபாடும் இல்லாத அந்த மக்களை மேல் ஜாதி மேல்வருணத்தார் ஒதுக்கி வைத்ததற்கு எந்தவித நியாயமான காரணத்தையும் யாரும் கூற முடியாது. அந்தக் கறுப்பர் இனத்தவரை வெள்ளையர் திருமணம் செய்துகொள்ள எந்தத் தடையும் இல்லை. வெள்ளையரை கறுப்பர் திருமணம் செய்து பிள்ளைகள் பெற்றுக்கொண்டு இனிமையாகக் குடும்பம் நடத்தி வருவதை பல நாடுகளில் நாம் காண்கிறோம்.

ஆனால் இங்குதான் விரும்பிய ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து வாழ்வதை இந்த சமுதாயம் அனுமதிப்பதில்லை. வெட்டுவது குத்துவது கொல்லுவது தீவைத்துக் கொளுத்துவது எல்லாம் இந்தத் திருமணத்தினால் இந்நாட்டில் அன்றாடச் செய்திகள். மற்ற மற்ற ஜாதியினருடன் திருமண உறவை மறுக்காத சமுதாயம் இத்தீண்டாத சமுதாயத்தினருடன் மட்டும் திருமண உறவு வைத்துக் கொள்வதை 2017ல்கூட விரும்புவதில்லை.

இந்தக் கொடுமைகள் அனுபவிக்க என்ன காரணம் என்பதை அம்மக்களும் அறிவதில்லை. அக்கொடுமையினைப் புரியும் ஆதிக்கவாதிகளும் நியாயமான காரணத்தைக் கூறமுடியவில்லை.

இம்மக்களால் சமுதாயத்திற்கு ஏதாவது கேடு சூழ்ந்ததா? அவமானம் நேர்ந்ததா? பாதிப்பு நிகழ்ந்ததா? யாராலும் ஆம் என்று கூற முடியாது. சமுதாயத்திற்குப் பயன்படாதவர்களா? தேவையில்லாத காரியம் ஏதாவது செய்கிறார்களா? எந்த அறிவாளியும் அதனை நிரூபிக்க முடியாது.

இத்தீண்டாதவர்கள்தான் இச்சமுதாயத்திற்கு மிகமிக அத்தியாவசியமான பணியைச் செய்தவர்கள். இன்றும் செய்து வருகிறவர்கள். இவர்கள் தங்கள் பணியைச் செய்யவில்லை என்றால் நாடு நகரமெல்லாம் நாறிவிடும். எவனும் செருப்பின்றி நடக்க முடியாது. செத்துப்போன மனிதனும் ஆடுமாடுகளும் அப்புறப்படுத்த ஆளில்லாமல் வீதிகளில் நாற்றமெடுத்துக் கிடக்கும். உண்ண உணவும் எவனுக்கும் தின்னக் கிடைக்காது.

இவ்வளவு அத்தியாவசியமான பணிகளைச் செய்யும் மக்களைத் தீண்டத் தகாதவர்களாக நடத்துபவர்கள் யார்?
இவர்களது உழைப்பால் பலன் ஏதும் பெறாதவர்களா என்றால் அதுதான் இல்லை. இவ்வளவு பலன்களையும் யார் அனுபவிக்கிறார்களோ அவர்கள்தான் இவர்களைத் தீண்டத் தகாதவர்கள் என்கிறார்கள்.

இவர்களை இவ்வாறு கொடுமைப் படுத்துபவர்கள் வேறு நாட்டினரா? இல்லவே இல்லை. இப்பாரத தேசத்தவர்தான் இவ்வளவு கொடுமைகளையும் புரிபவர்கள்.

இம்மக்களை இவ்வாறு ஒதுக்கி வைத்தவர் வேறு மதத்தினரா என்றால் இம்மக்களை இந்துமதத்தவர் என்று கூறும் அதே இந்துக்கள்தான் இவ்வளவு கொடுமைகளையும் செய்து வருபவர்கள்.

சரி, அறிவு வளர்ச்சியில்லாத காலத்தில்தான் இவ்வாறு நடத்தினார்கள் என்றால் அறிவும் அறிவியலும் வளர்ச்சியடைந்த இந்தக் காலத்திலாவது இது நடைபெறாமலிருக்கிறதா என்றால் இன்னும் இந்திய தேசத்தில் பல்வேறு பகுதிகளிலும் நடந்துகொண்டுதான் வருகிறது.

உலகில் நடந்த பல கொடுமைகளுக்கும் பரிகாரம் நடந்திருக்கிறது. பல்வேறு நாடுகளில் நடந்த கொடுமைகள் தடுக்கப்பட்டிருக்கிறது. கொடுமைகள் புரிந்தவர்கள் திருந்திவிட்டார்கள். அதனை நியாயப்படுத்துவதில்லை.

கொடுமைக்காரர்கள் யார்?

ஆனால் இந்நாட்டில் நடந்த அந்தக் கொடுமைக்கு மட்டும் இன்னும் பரிகாரம் கிடைக்கவில்லை. அக்கொடுமைகள் தடுக்கப்படவில்லை. கொடுமைக்காரர்கள் இன்னும் திருந்தியபாடில்லை என்பது மாத்திரமல்ல அதனை இன்னும் நியாயப் படுத்தவும் செய்கிறார்கள். அக்கொடுமைகளுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்றுக் கொள்ளாதது மாத்திரமல்லாது அதற்கெல்லாம் காரணம் தாங்கள் கிடையாது என்பதோடு வேறு யாரையோ காரணம்கூறித் தப்பிக்கவும் பார்க்கிறார்கள்.
இத்தீண்டாமையை எதிர்ப்பதாகச் சொல்பவர்கள் அத்தீண்டாமைக்கான காரணத்தை நியாயமாகச் சொல்லாமல் வேறு எப்படியோ இங்கு வந்து புகுந்துவிட்டது என்பதுபோல் பேசியும் எழுதியும் இந்நாட்டு மக்களை நம்பச் சொல்கிறார்கள்.
அத்தகையவர்களில் ஒருவர்தான் இந்துமுன்னணியின் மாநில அமைப்பாளர் திரு.இராம.கோபாலன் ஆவார்.

அவர் மாத்திரமல்ல,இந்துத்துவா சிந்தனைகளில் மூழ்கிக்கிடக்கும் இல.கணேசன் போன்றவர்கள்ää சோ.இராமசாமி போன்றவர்கள் எல்லோருமே இந்துமதத்தில் தீண்டாமையே இல்லை என்றும் தீண்டாமைக்கு ஆதாரமே இல்லை என்றும் முழுப்பூசணிக்காயையும் பரிமாறின சோற்றுக்குள் மறைக்கப் பார்க்கிறார்கள்.

இந்துமதத்தில் தீண்டாமையும் இல்லை@ தீண்டாமைக்கு ஆதாரமும் இல்லை என்றால் இந்துமதத்தில் மட்டும் தீண்டாமை எப்படி வந்து புகுந்தது? இந்துக்கள் என்பவர்கள் மட்டும் தீண்டாமையைக் கடைப்பிடிப்பது ஏன்? வேறு எங்காவது இருந்திருந்து அது இங்கு வந்து புகுந்து விட்டது என்றால் இந்து மதத்தைத்தவிர வேறு மதத்திலும் இருக்க வேண்டுமா? இல்லையா?
ஒருவர் தனக்குச் சம்மந்தமில்லாத ஒரு பொருளைப் பயன்படுத்துகிறார் என்றால் ஒன்று அவர் அப்பொருளை விலைகொடுத்து வாங்கி இருக்க வேண்டும். அல்லது அதனை யாரிடமிருந்தாவது திருடி இருக்க வேண்டும்.
நான்தான் இப்பொருளைப் பயன்படுத்துகிறேன். ஆனால் இப்பொருள் எப்படி இங்கு வந்தது என்று எனக்குத் தெரியாது. எனவேää அதில் ஏதாவது கோளாறு என்றால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. அந்தக் கோளாறை நான் சரி செய்ய மாட்டேன்  என்று சொல்கிறார் என்றால் ஒன்று அவர் பொய் சொல்லுகிறார் என்று பொருள். அல்லது அவர் நாணயமற்றவர் என்றுதான் பொருள். இதுபோன்ற ஒரு கருத்தைத்தான் இராம.கோபாலனும் சொல்லுகிறார்.

தீண்டாமைக்கு இந்துமத சாஸ்திரங்களில் ஆதாரம் இல்லையா?  ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி பிஎம்எஸ் பிஜேபி ஆகியவற்றின் பித்தலாட்டமான பிரச்சாரம்:

“தீண்டாமை என்பது ஆதியில் இல்லை. இடையில் எப்படியோ வந்து புகுந்துவிட்டது. இந்து மதத்தின் எந்த சாஸ்திரத்திலும் புனித நூலிலும் தீண்டாமை குறிப்பிடப்படவில்ல.” என்று இராம.கோபாலன் அய்யர்வாள் ~இந்துமித்திரன்| என்ற இதழில் எழுதியிருப்பதாக பெல் நிறுவனத்தில் இந்துமுன்னணிக்காரர்கள் துண்டறிக்கை ஒட்டியிருந்தார்கள்.

அத்துடன் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்து அதன் கொள்கைகளை தொழிலாளர் மத்தியில் பரப்பி தொழிலாளர்களுக்கு மதவெறி ஊட்டுவதற்காக பாரதீய மஸ்தூர் சங்கம் என்ற தொழிற்சங்கத்தைத் துவக்கியவர் தத்தோபந்த் தெங்கடி என்பவர். அவருடைய நினைவுநாளில் பெல் நிறுவனத்தில் அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு துண்டறிக்கை வெளியிட்டார்கள். அதில்

“தெங்கடிஜியும் அம்பேத்காரும் பல நாட்கள் சமுதாயப் பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகவம் அம்பேத்கர் அவர்கள் இந்துமதக் கோட்பாடுகள் எதிலும் தீண்டாமை சொல்லப்படவில்லை என்பதை ஹிந்து சன்னியாசிகள் துறவியர் ஒன்று கூடி பகிரங்கமாக அறிவித்திட வேண்டும் என்று விரும்பியதாகவும் அதனை ஏற்று சமுதாயத்தில் நிலவி வரும் தீண்டாமைக் கொடுமைக்கு சாஸ்திர அங்கீகாரம் கிடையாது என தீர்மானம் இயற்றப்பட்டதாகவும் பிஹெச்இஎல்;   லில் 13-10-2014 ல் துண்டறிக்கை வெளியிட்டார்கள்.

அவர்கள் துண்டறிக்கை வெளியிட்ட அதே வாரத்தில் ராஞ்சியில் நடந்த மதவிழா ஒன்றில் பூரி சங்கராச்சாரி நிச்சலானந்தா பேசும்போது “பகவத் கீதை 16வது அத்தியாயத்தில் வர்ணாஸ்ரமம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நான்கு வர்ணங்கள் மனித குலத்தின் நன்மைக்காக உருவாக்கப்பட்டவைகள்.  அவரவர்கள் அவரவர்க்கான பணியைச் செய்வதே சிறப்பான ஒன்றாகும். இதற்காகத்தான் வர்ணமுறையை உருவாக்கினார்கள்.

ஆனால் இந்த வர்ண முறையை மீறி அதற்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக தற்போது நடந்து வருகிறது. அதாவது சனாதனிகள் கோயிலுக்குள் நுழையத் தடை இல்லை. ஆனால் சூத்திரர்கள் தலித்துகள் எப்படி கோயிலுக்குள் நுழையலாம்? வர்ணாஸ்ரமக் கொள்கையின்படி தூய்மையானவர்கள் மாத்திரமே கோயிலுக்குள் நுழைய முடியும். அப்படி இருக்க தூய்மைப் படுத்தும் பணியில் உள்ளவர்கள் கோயிலுக்குள் நுழைய எப்படி அனுமதிக்க முடியும்? இது அவர்களாகவே புரிந்துகொண்டு  கோவிலுக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும். இது சாஸ்திரத்திலும் கூறப்பட்டுள்ளது” என்று பேசியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மத்தியப்பிரதேச ஆளுனர் ராம்நரேஷ் மற்றும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்தியப்பிரதேச ஆளுனர் ராம்நரேஷ் கூறியதாவது:

“சங்கராச்சாரியாரின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை. அவர் சாஸ்திரத்தை மேற்கோள் காட்டிப் பேசினார்” என்று கூறியிருந்தார்.
சிருங்கேரி சங்கராச்சாரி; கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் “உலகத்திலேயே மிக உயர்ந்த சோப்புப் போட்டுக் குளித்தாலும் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை அவர்கள் அணிந்து கொண்டாலும் தீண்டத்தகாதவர்களின் உடலில் உள்ள அழுக்கு வேண்டுமானால் போகுமே தவிர அவர்கள் பிறவியில் உள்ள அழுக்கு நீங்காது” என்று சொன்னவராவார்.

இந்துமத சாஸ்திரங்களில் தீண்டாமைக்கு ஆதாரம் இல்லை என்று சொல்லுகின்ற இராமகோபாலன்கள் தெங்கடிகள் இல கணேசன்கள் இந்த தீண்டாமை வெறி பிடித்த சங்கராச்சாரிகளை எதிர்த்து குரல் கொடுக்க மாட்டார்கள்.

சங்கராச்சாரி சொல்கிற மாதிரி கீதையில் தீண்டாமைக்கான ஆதாரம் இருப்பதை இவர்கள் ஒத்துக் கொண்டு அந்த கீதையைக் கொளுத்த முன்வர மாட்டார்கள். மாறாக அந்த கீதையை புனித நூலாகவும் அதைச் சொன்ன கிருஷ்ணனை பகவானாகவும் வணங்குபவர்கள்தான் இவர்கள்.

தீண்டாமைக்கு சாஸ்திர அங்கீகாரம் இல்லை என்று தீர்மானம் இயற்றியதாகச் சொல்லப்படும் சாதுக்கள் சன்னியாசிகள் துறவியர் யார் யார் என்பதையும் இவர்கள் கூறமாட்டார்கள். அந்த துறவியரும் சன்னியாசிகளும் இந்த சங்கராச்சாரிகளின் இந்தப் போக்கைக் கண்டிப்பார்களா என்ற கேள்விக்கும் விடையில்லை.

இந்த சங்கராச்சாரியின் கூற்றை ஆதரிக்கிற ஆளுநரையும் இவர்கள் கண்டிக்க மாட்டார்கள். அந்த சங்கராச்சாரியுடன் பாஜக பிரதமரான மோடியும் மிக நெருக்கமாக இருப்பவர்தான். அந்த மோடியையும் இவர்கள் கொஞ்சமும் எதிர்க்க மாட்டார்கள்.
அத்துடன் அம்பேத்கரின் வரலாற்றையே புரட்டி எழுதுகின்ற வேலையையும் பிஎம்எஸ் அந்தத் துண்டறிக்கையில் செய்திருந்தது.

அதாவது “1952 பொதுத்தேர்தலில் குருஜி கோல்வால்கரின் ஆலோசனையின் பேரில் அம்பேத்கர் போட்டியிட்ட பாம்பே வடகிழக்குத் தொகுதியில் தெங்கடிஜி அம்பேத்கருக்காக தேர்தல் பணி செய்தார். இத் தேர்தலில் காங்கிரஸ் பல முறைகேடுகளைச் செய்து அம்பேத்கரைத் தோற்கடித்தது.. முறைகேடுகளை ஆதாரங்களுடன் திரட்டி தெங்கடிஜி தேர்தல் ஆணையத்திற்குப் புகார் மனு அனுப்பினார். பின் பல மாதம் கழித்து விசாரணை செய்த தேர்தல் அதிகாரி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக அறிவித்தார்.

1954ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அம்பேத்கர்ஜி பண்டாரா தொகுதியில் போட்டியிட்டார். அவருடைய அதிகாரப்பூர்வமான தேர்தல் ஏஜன்டாக அம்பேத்கர் தெங்கடியை நியமித்தார்” என்று அவர்கள் தண்டறிக்கை ஒட்டியிருந்தார்கள்.

இது எவ்வளவு பெரிய வரலாற்றுப் புரட்டு என்பதனை அம்பேத்கரது உண்மை வரலாற்றைப் படித்தவர்களால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அம்பேத்கரது வரலாறே தெரியாமல் அவரது கொள்கைகளையும் புரிந்துகொள்ளாமல் பாமரத்தனமாக அம்பேத்கர் பெயரை மட்டும் உச்சரிக்கின்ற அப்பாவி தாழ்த்தப்பட்ட இளைஞன் என்ன நினைப்பானென்றால் ~இருந்தாலும் இருக்கும்தெங்கடிஜி அம்பேத்கருக்குத் தேர்தல் பணி செய்தாலும் செய்திருப்பார். அவரை தேர்தல் ஏஜன்டாக அம்பேத்கர் நியமித்தாலும் நியமித்திருப்பார் என்று கருதி ஆர்எஸ்எஸ் காரர்கள் சொல்லக் கூடிய புளுகுகளை நம்பினாலும் நம்புவார்கள். அதன் பலன் என்னவாகும் எனில் அம்பேத்கரை ஆதரித்த இவர்களை நாம் ஆதரித்தால் என்ன என்ற சிந்தனை இளைஞர்களிடையே உருவானாலும் உருவாகலாம். அப்படிப்பட்ட எண்ணத்தை உருவாக்கி அந்த அறுவடையைச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற வரலாற்றுப் புரட்டுகளை ஆர்எஸ்எஸ் கும்பல் செய்து வருகிறது.


ஆனால் உண்மை நிலை என்ன தெரியுமா?

புளுகு நம்பர் 1: 1952 பொதுத் தேர்தலில் குருஜி கோல்வால்கரின் ஆலோசனையுடன் தெங்கடிஜி அம்பேத்கருக்குத் தேர்தல் பணி செய்தார் என்பதாகும். ஆனால் உண்மை என்ன தெரியுமா?
இதோ தனஞ்செய்கீர் எழுதிய அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு (மொழிபெயர்ப்பு க.முகிலன்) பக்கம் 652 இவ்வாறு கூறுகிறது: ~தீண்டப்படாத சாதிகள் பேரவையானது தேர்தலில் காங்கிரசுää இந்து மகாசபைää கம்யூனிஸ்டு கட்சி ஆகிய எவற்றுடனும் உடன்பாடு வைத்துக்கொள்ளாது என்று அறிவித்தது|
இந்துமகாசபை என்றால் யார் என்று இந்தக்கால இளசுகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைய பிஜேபியின் அன்றைய பெயர். அது ஆர்எஸ்எஸால் வழி நடத்தப்பட்டது. இந்துமகாசபா என்ற பெயர் பின்னாளில் ஜனசங்கமாக மாறியது. அந்த ஜனசங்கம்தான் இன்று பிஜேபி யாக உருவெடுத்துள்ளது.
ஆக பந்தியிலேயே உட்கார அம்பேத்கர் இவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. அப்படியிருக்க தெங்கடிஜி பந்தியில் உட்கார்ந்து இலைகளின் ஓட்டையை எண்ணிக் கொண்டிருந்தார் என்கிறது பிஎம்எஸ்.

புளுகு நம்பர் 2 : காங்கிரஸ் கட்சி தேர்தலில் பல முறைகேடுகளைச் செய்து அம்பேத்கரைத் தோற்கடித்தது. தெங்கடிஜி ஆதாரங்களைத் திரட்டி தேர்தல் ஆணைத்திற்குப் புகார் அளித்தார். தேர்தல் அதிகாரி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்று அறிவித்தார்.
இதன் நிலை என்ன தெரியுமா? அதே நூல் பக்கம் 662 இவ்வாறு கூறுகிறது: அம்பேத்கரும் அவருடன் இரட்டை உறுப்பினர் தொகுதியில் அவருடன் இணைந்து போட்டியிட்ட சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அசோக் மேத்தாவும் முறைகேடு குறித்து வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கில் அம்பேத்கரே வாதிட்டார். ஆயினும் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தேர்தல் அதிகாரி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்று அறிவித்தார் என்று புளுகுகிறது பிஎம்எஸ். அடுத்து 1954ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டு சேராமல் சுயேச்சை வேட்பாளருடன் இணைந்து போட்டியிடத்தான் விரும்பினாரே தவிர இந்துமகாசபா என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படியிருக்க புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது பிஎம்எஸ்.

அத்துடன் அம்பேத்கருடன் தெங்கடி பல நாட்கள் சமுதாயப் பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளைப் பற்றியும் விவாதித்ததாகவும் அப்போது அம்பேத்கர் ஹிந்து மதத்தின் கோட்பாடுகள் எதிலும் திண்டாமை இல்லை என்று ஹிந்து சன்னியாசிகள்துறவியர்கள் ஒன்றுகூடி பகிரங்கமாக அறிவித்திட வேண்டும் என்று விரும்பியதாகவும் அதனை ஏற்று சமுதாயத்தில் நிலவி வரும் தீண்டாமைக் கொடுமைக்கு சாஸ்திர அங்கீகாரம் கிடையாது என்று தீர்மானம் இயற்றியதாகவும் அந்தத் துண்டறிக்கையில் மேலும் ஒரு வரலாற்றுத் திரிபை செய்திருந்தது பிஎம்எஸ்.

வரலாற்றுத் திரிபு

பல்வேறு தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளான அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சமுதாயத்தில் நிலவி வரும் தீண்டாமைக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். இதற்கெல்லாம் சற்றும் அசைந்து கொடுக்காத இந்து மதத்தவர்களால் மனம் நொந்து போன நிலையில் ~பிறக்கும்போது இந்துவாகப் பிறந்தேன் ஆனால் சாகும்போது இந்துவாகச் சாக மாட்டேன்| என்று அறிவித்து தானும் தன்னைச் சேர்ந்தவர்களும் இந்து மதத்தைவிட்டு வேறு மதத்திற்கு மதம் மாறப்;போவதாக அறிவித்தார்.

ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் தங்கள் மதத்தில் சேர வருமாறு அம்பேத்கருக்கு அழைப்பு விடுத்தனர். தீண்டத்தகாதவர்கள் வேறு மதத்தை நாடிப் புகலிடம் தேட வேண்டியிருக்கும் என்று அம்பேத்கர் அறிவித்தவுடன் அவரது முயற்சிக்குப் பலரும் உள்நோக்கம் கற்பிக்க ஆரம்பித்தனர். அப்பொழுது அவர்களைப்பார்த்து “உங்களுடைய மதம்தான் எங்களுடைய மதம் எனில் உங்களுடைய உரிமைகளும் எங்களுடைய உரிமைகளும் சமமாக இருக்க வேண்டும். ஆனால் உண்மை நிலை அப்படியா இருக்கிறது? இல்லையே! அவ்வாறிருக்கும்போது நீங்கள் எட்டி உதைப்பதையும் அவமதிப்பதையும் பொறுத்துக் கொண்டு எந்த அடிப்படையில் எங்களை இந்து மதத்தில் இருக்கச் சொல்கிறீர்கள்? ஒரே மதத்தைப் பின்பற்றும் இரண்டு பேர்களிடையே வேறுபாடு காட்டும் மதம் ஒருதலைச் சார்பானதல்லவா? தன்னைப் பின்பற்றுகின்ற கோடிக்கணக்கானவர்களை கிரிமினல் குற்றம் செய்தவர்கள் போலவும் நாயினும் இழிந்தவர்களாகவும் நடத்தி தாங்க முடியாத இயலாமைகளை அவர்கள் மீது திணித்துத் துன்புறுத்துகின்ற மதம் எவ்வகையிலும் ஒரு மதமன்று. இக்கொடிய அமைப்பைப் போற்றுகின்ற எதுவும் மதம் என எப்படிப் பெயர் பெற முடியும்?” என்று முழங்கினார் அம்பேத்கர்.

அத்துடன் “செத்த பிறகு இந்த உலகத்தையோ அல்லது மேலுலகத்தையோ யாராவது பார்த்திருக்கிறார்களா? மூன்று மேல் வருணத்தாருக்கும் தொண்டூழியம் செய்வதன் மூலம் சூத்திரனுக்கு மோட்சம் கிடைக்கிறது என்று இந்துமத நூல்கள் பரப்பியிருப்பது கடைந்தெடுத்த கயமைத்தனம் அல்லவா?” என்று கேட்ட அம்பேத்கர் மதமாற்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்தவர்களிடம்

~சாதி இந்துக்களின் மனமாற்றத்திற்காக நான் இன்னும் அய்ந்து முதல் பத்து ஆண்டுகள் வரை காத்திருக்க முடியும். ஆனால் இதற்கிடையில் ~கேசரி| பத்திரிகை வட்டத்தாரால் (கேசரி என்ற பத்திரிகை திலகரால் தொடங்கப்பட்டது) மிகச் சிறந்த இந்துவாகக் கருதப்படுகின்ற தீண்டப்படாதவரான கே.கே.சகத் தை மராட்டிய சித்பவன் பார்ப்பனர்கள் சங்கராச்சாரியார் பதவியில் ஓராண்டுக் காலத்திற்கு அமர்த்த வேண்டும். மனம் மாறியதற்கும் சமத்துவத்தை ஏற்றுக்கொண்டதற்கும் அடையாளமாக ஒரு நூறு சித்பவன் பார்ப்பனக் குடும்பங்கள் புதிய சகத் சங்கராச்சாரியின் காலில் விழுந்து வணங்க வேண்டும்” என்று அம்பேத்கர் கூறினார்.

அப்படி அவர் அறிவித்து இருபது ஆண்டுகள் கழித்தும் அந்த நிலை உருவாகவில்லை. அதனால்தான் 1956ம் ஆண்டு அக்டோபர் மாதம் பல இலட்சம் மக்களுடன் புத்த மார்க்கத்தில் இணைந்தார்.
இது நாள் வரையிலும் அம்பேத்கரின் கோரிக்கை நிறைவேற்றப்படாததோடு சங்கராச்சாரிப் பொறுப்பில் உள்ளவரே தீண்டாமைக்கு சாஸ்திரத்தில் இடம் உண்டு என்று முழங்குகிறார். தலித்துகளும் சூத்திரர்களும் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்கிறார்.

சாமியார்கள், சங்கராச்சாரியார்கள், ஜீயர்களின் யோக்கியதை
சங்கராச்சாரியாராகக்கூட வேண்டாம் ஒரு சமையல்காரராகக்கூட சங்கர மடத்திற்குள் ஒரு தாழ்த்தப்பட்டவனோ பிற்படுத்தப்பட்டவனோ கூட நுழைய முடியாத நிலைதான் இன்னும் நிலவுகிறது. காஞ்சி சங்கர மடத்தில் மாத்திரமல்லாது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலிலும் பார்ப்பனர் நுழைவதற்கு ஒரு வழியும் பார்ப்பனரல்லாதார் நுழைவதற்கு வேறொரு வழியும் வைத்து 2017லும் நிலவுகிறது.

சீரங்கம் அரங்கநாதர் கோயிலிலும் எந்த ஒரு தீண்டத்தகாதவனும் அல்லது பிற்படுத்தப்பட்டவனும்கூட ஒரு சமையல்காரராகக் கூட நுழைய முடியவில்லை. ஜீயரை சங்கராச்சாரி ஏற்றுக் கொள்ள மாட்டார். சங்கராச்சாரியை ஜீயர் ஏற்றுக் கொள்ள மாட்டார். ஆனால் இரண்டு பேருமே தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில் ஒன்றாக இருக்கிறார்கள்.

ஒருமுறை சீரங்கத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தியபொழுது அவர்களை அங்கே நுழையக் கூடாது என்று அங்குள்ள பார்ப்பனர்கள் திட்டமிட்டு கோயிலில் நுழையவரும் தாழ்த்தப்பட்டவர்கள்மீது பெண்களைப் பயன்படுத்தி மிளகாய்ப் பொடியைத் தூவி அவர்களைக் கட்டையால் அடித்து விரட்டினார்கள் பார்ப்பனர்கள். அப்பொழுது அந்தக் கலவரத்திற்குக் காரணம் பெண்கள்தான் என்பதை அறிந்த காவல்துறையினர் தடியடி நடத்தி பெண்களை விரட்டி அடித்தனர்.

இதனைக் கேள்வியுற்ற சந்திரசேகரேந்திர சங்கராச்சாரி கண்ணீர் விட்டு அழுதாராம். எதற்காக? தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் நுழைய விடவில்லையே என்பதற்காகவா? இல்லையில்லை. அவர்களை நுழைய விடாமல் மிளகாய்ப்பொடி தூவிய பொம்பளை ரவுடிகளை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தார்களே என்றுதான் அவர் கண்ணீர் சிந்தினார் என்று ~இந்துமதம் எங்கே போகிறது?| என்ற நூலில் அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரி குறிப்பிடுகிறார்.

ஆக அவர்களுக்குள் எவ்வளவதான் இணக்கமில்லை என்று சொன்னாலும் தீண்டாமை விசயத்தில் அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள்.

அதேபோல பூரி சங்கராச்சாரி நம்ம ஊர் காஞ்சி சங்கராச்சாரியை சங்கராச்சாரியாராகவே அங்கீகரிக்க மாட்டார். காஞ்சிமடம் ஆதிசங்கரரால் கட்டப்பட்டது அல்ல என்று சொல்லக் கூடியவர்தான் பூரி சங்கராச்சாரி. அப்படிப்பட்ட பூரி சங்கராச்சாரிக்கும் காஞ்சி சங்கராச்சாரிக்கும் தீண்டாமை விசயத்தில் ஒரே கருத்துத்தான்.
இப்படிப்பட்ட ஜீயர் சங்கராச்சாரி போன்றவர்கள்தான் இன்று இந்துமதத்தின் அத்தாரிட்டியாகக் கருதப்படக்கூடியவர்கள். அவர்களே இன்னும் தீண்டாமையை அங்கீகரிக்கின்ற பொழுது சங்பரிவார்க்கூட்டம் ஹிந்து சன்னியாசிகள், துறவியர்கள் ஒன்றுகூடி சமுதாயத்தில் நிலவி வரும் தீண்டாமைக் கொடுமைக்கு சாஸ்திர அங்கீகாரம் கிடையாது என்று தீர்மானம் இயற்றியதாக புருடா விடுகிறது.

அப்படியானால் அவர்கள் சொல்லும் ஹிந்து சன்னியாசிகள் துறவியர்கள் பட்டியலில் இந்த காஞ்சி சங்கராச்சாரி பூரி சங்கராச்சாரி சீரங்கம் ஜீயர் யாரும் வர மாட்டார்களா?
வேறு யார் யாரெல்லாம் ஹிந்து சன்னியாசிகளää; துறவியர் பட்டியலில் வருவார்கள்?

அந்த சன்னியாசிகள் துறவிகள் எப்பொழுது அதனை அறிவித்தார்கள்? அவர்கள் அறிவித்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன? அதற்குப் பிறகாவது அந்தத் தீண்டாமை ஒழிந்து விட்டதா? அந்த சன்னியாசிகள் துறவியர்கள் அத்தீண்டாமையை ஒழிக்க எடுத்த நடவடிக்கை என்ன?

சாதாரண பொதுமக்களிடம்கூட வேண்டாம். இத்தகைய பெரிய மனிதர்களையாவது திருத்த அந்த சன்னியாசிகள் முயற்சித்திருக்க வேண்டாமா? இவ்வளவு நாள் போனது போகட்டும். இப்பொழுது இந்த பூரி சங்கராச்சாரி சொல்லியிருக்கிறாரே அதனை மத்தியப்பிரதேச ஆளுனரும் ஆமோதித்திருக்கிறாரே! அந்த இரண்டுபேர் மீதும் அந்த சன்னியாசிகளும் துறவிகளும் நடவடிக்கை எடுப்பார்களா? அந்த சன்னியாசிகள் துறவியர்கள் இப்பொழுதும் இருக்கிறார்களா? அல்லது இறந்துவிட்டார்களா? அவர்கள் உயிரோடு இருக்கும்போதே எவ்வளவு தீண்டாமைக் கொடுமைகள் நடந்தேறுகின்றன?

ஜெகஜீவன்ராம் ஜித்தன்ராம் மான்ஜிக்கு ஏற்பட்ட அவமானம்

இந்தியாவின் முப்படைகளுக்கும் தளபதியாக விளங்கிய இந்தியப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் காசியிலுள்ள இந்து பல்கலைக்கழகத்தில்  சம்பூர்ணானந்த் என்பவரது சிலையைத் திறந்தார் என்பதற்காக அந்த சிலைக்கே கங்கை நீரை ஊற்றித் தீட்டுப் போக்கினார்களே! அப்பொழுது அந்த சன்னியாசிகள்ää துறவிகள் எங்கே போயிருந்தார்கள்? என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

அது கடந்த காலம். அதை விட்டு விடுவோம். இப்பொழுது 2014லிலும் பீகார் முதலமைச்சர் ஜித்தன்ராம் மஞ்ஜி கோயிலுக்குள் சென்று கடவுளை வழிபட்டார் என்பதற்காக அந்தக் கோயிலில் தீட்டுப் போக்கியிருக்கிறார்களே அர்ச்சகப் பார்ப்பனர்கள்?
ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதி அமர்ந்த நாற்காலியில் உயர்ஜாதி நீதிபதி ஒருவன் அமரமாட்டேன் என்று அடம் பிடித்து அந்த நாற்காலியை கங்கை நீர்கொண்டு சுத்தம் செய்து அதன்பிறகு அமர்ந்தானே!

பிரதமராகவே இருந்தாலும் பாதுகாப்பு மந்திரியாக இருந்தாலும் ஒரு மாநிலத்தை ஆளும் முதலமைச்சராகவே இருந்தாலும் நீதிபதியாகவே இருந்தாலும் நீங்கள் தீண்டத்தகாதவர்தான். அடுத்த வேளைச் சோற்றுக்கே வழியில்லாவிட்டாலும் அழுக்கு வேட்டியைத் துவைத்துக்கட்ட வக்கில்லாவிட்டாலும் ஒரு பரதேசிப் பார்ப்பானைவிட நீங்களெல்லாம் கீழானவர்கள்தான் என்கின்ற மனப்பான்மை இருக்கிறதே அந்தத் திமிர்த்தனத்தை ஒழித்துக்கட்ட ஆர்எஸ்எஸ் சங்பரிவார்க் கும்பல் செய்தது என்ன?

தீண்டாமை அதிகாரப் பூர்வமாக அட்டாணிக்கால் போட்டு கோயிலுக்குள் அதன் கருவறைக்குள் உட்கார்ந்திருக்கிறதே! அதை மாற்றியமைக்க ஆர்எஸ்எஸ் கும்பல் செய்தது என்ன? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரானால் இத் தீண்டாமைக் கொடுமை ஒழிந்துபோகுமே! அந்தச் சட்டத்திற்குத் தடை வாங்கியிருக்கிறார்களே திமிர் பிடித்த பார்ப்பனர்கள் அந்தத் தடையை உடைக்க இதுவரை ஒரு துரும்பையாவது அசைத்ததுண்டா ஆர்எஸ்எஸ் கும்பல்?

தனிப்பட்ட நபர்களுக்கு நேர்ந்த அவமானமாக இதைக் கருத முடியாது. சமுதாயத்தில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகத்தான் இவற்றையெல்லாம் கருத வேண்டும். மக்கள் மனங்களில் மண்டிக்கிடக்கும் மத சாஸ்திர சம்பிரதாயங்கள்தான் இதற்கெல்லாம் காரணம். மக்கள் மனதை சுத்தப்படுத்துகின்ற வேலையை ஆர்எஸ்எஸ் கும்பல் ஒருபோதும் செய்யாது. மாறாக அந்த மக்களை தங்கள் பக்கம் ஈர்த்து வைத்துக்கொண்டு மதவெறியை ஊட்டி பார்ப்பன ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கம்.

அதற்காக எத்தகைய பொய்யையும் அவிழ்த்து விடுவார்கள் என்பதற்கு ஒரு அடையாளம்தான் அம்பேத்கருடன் ஆர்எஸ்எஸ் காரரான தெங்கடிஜியை இணைத்து வைத்துப் பேசுவதும் ஆகும். இறந்துபோன மனிதர் மீண்டும் பிறந்து வந்து சாட்சி சொல்லப் போகிறாரா என்ன என்கின்ற எண்ணத்தில் இதுபோன்ற பொய்களை அவர்கள் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவர் மீண்டும் பிறந்து வரவேண்டிய அவசியமே இல்லை. அவரது பேச்சுக்களும் எழுத்துக்களும் காலம் காலமாக நிலைத்து நின்று இவர்களின் முகத்திரையைக் கிழித்துக்கொண்டே இருக்கும். அதனை நாம் தொடர்ந்து செய்வோம்.

தீண்டாமை ஒழிய வழி!

வேறு ஒன்றும் ஆர்எஸ்எஸ் காரர்கள் செய்ய வேண்டியதில்லை. அம்பேத்கர் அய்ந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு நான் காத்திருக்கத் தயார். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவரை சங்கராச்சாரியாக்கி அவர் காலில் ஒரு நூறு பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விழுந்து வணங்கத் தயாரா? என்று கேட்டாரேஅதை மாத்திரமாவது செய்து காட்ட சங் பரிவார்க் கும்பல் தயாரா?

தீண்டாமையை அவர்களே கடைப்பிடித்தாலும் தீண்டாமையின் கொடுமையினை அவர்களால் நியாயப்படுத்த முடியவில்லை. ஆனாலும் அதனைப் போக்கவும் அவர்கள் முன் வருவதில்லை. ஒப்புக்காக நாங்களும் தீண்டாமையை ஏற்றுக் கொள்வதில்லை. அதனை ஒழிக்கவே பாடுபடுகிறோம் என்று பசப்புகிறார்கள். ஆனால் அதனை ஒழிக்க உருப்படியான எதனையும் அவர்கள் செய்வதுமில்லை.

இவர்கள்தான் இந்துமதத்தைப் பாதுகாப்பதற்காகவே தாங்கள் அவதாரம் எடுத்துள்ளதாகக் கூறி வருகிறார்கள்.
அந்த இந்துமதமே தீண்டாமை என்கின்ற அடித்தளத்தில் கட்டப்பட்ட ஒரு கட்டிடம்தானே! இந்துமதம் என்ற ஒன்று தனியாகக் கிடையாது. அதனை தோற்றுவித்தது யார்? அதன் காலம் என்ன? அதன் கோட்பாடு என்ன? என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.

ஜாதிகளின் தொகுப்புத்தான் இந்துமதம். அந்த ஜாதிகள்தான் தீண்டாமைக்கு ஆதாரம். அந்த ஜாதிகளை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது. அந்த ஜாதிக்கு ஆதாரம் இந்துமதம். அந்த இந்துமதம் இருக்கின்ற வரையும் ஜாதிகளை ஒழிக்க முடியாது. அந்த இந்துமதத்;திற்கு அடிப்படை வருணாசிரமதர்மம். அந்த வருணாசிரமம் ஒழிக்கப்படாமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது.

இவர்கள் எல்லோருமே வருணாசிரம தர்மத்தைக் காக்க வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள். தீண்டாமையை ஒழிக்கப் புறப்பட்ட காந்திகூட வருணாசிரமம் நல்லது. அது பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவர்தான்.

தந்தை பெரியார் அவர்களுக்கு காந்தியாரிடம் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்குக் காரணமே காந்தியாரின் இந்த வருணாசிரம ஆதரவுதான். வருணாசிரமத்தை அப்படியே வைத்துக்கொண்டு தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதனை காந்தியாரிடமே பெரியார் அவர்கள் நேருக்குநேர் வாதம் செய்திருக்கிறார்கள்.

அதே கொள்கையைக் கொண்டவர்கள்தான் இந்த இராம.கோபாலன் இல.கணேசன் போன்ற ஆர்எஸ்எஸ் காரர்களும். இவர்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகள் அல்ல. எல்லாம் தெரிந்திருந்தும் தெரியாததுபோல் நடிக்கும் ஏமாற்றுப் பேர்வழிகள்.
தொடாதே தீண்டாதே கிட்ட நெருங்காதே என்று கீழ்ஜாதி மக்களை இவர்கள் செய்த கொடுமை தாங்காமல் தங்களைத் தொட்டுத் தீண்டிய அன்பு பாராட்டிய எல்லா உதவிகளையும் செய்த கிறிஸ்தவ மதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் அத்தீண்டத்தகாதவர்கள் மாறியதை இந்த இந்துமதக் காவலர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தீண்டாமைக் கொடுமை தாங்காமல் எல்லாத் தீண்டத்தகாதவர்களும் மதம் மாறிவிட்டால் அத் தீண்டத்தகாதவர் செய்த துப்புரவுப் பணியை யார் செய்வார்கள்? யார் தங்களது மலத்தைத் தலையில் சுமப்பார்கள்? தங்களுக்கு செருப்புத் தைத்துக் கொடுப்பது யார்? தங்கள் வீட்டில் இறந்த கிழடுகளை யார் அப்புறப்படுத்திப் புதைப்பது? எரிப்பது? தங்கள் வீட்டில் இறந்த ஆடுமாடுகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்வது யார்? என்று கவலைப்படுகின்ற இவர்கள் அத்தீண்டத்தகாத மக்களை அப்படியே இந்துமதத்தில் தக்க வைத்துக் காலம்காலமாக அவர்கள் தொண்டூழியம் செய்து அடிமைப்பட்டது போதாதென்று மேலும் அத்தொழில்களைச் செய்து காலம் காலத்திற்கு அவர்கள் துன்பத்தில் உழல வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில்தான் இந்த இராம.கோபாலன்களும்ää இல கணேசன்களும் தந்திர வார்த்தையைக் கூறுகிறார்கள்.

இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டால் அந்த மக்களைத் தங்கள் மதத்திலேயே தக்க வைத்துக் கொள்ள முடியாதல்லவா? அதனால்தான் இந்துமத்தில் தீண்டாமையே இல்லை. அத்தீண்டாமைக்கு இந்துமத சாஸ்திரத்தில் இடமேயில்லை என்று பசப்புகிறார்கள்.

பெரிய மனிதர்களின் தீண்டாமைவெறி!

இந்த இராம.கோபாலன் இல.கணேசன் கும்பல் காஞ்சி சங்கராச்சாரிமீது மிகுந்த மரியாதை கொண்டவர்கள். இந்துமதத்தின் அத்தாரிட்டியே அந்த சங்கராச்சாரிதான் என்ற கருத்துக் கொண்டவர்கள்தான் இவர்கள். அந்த சங்கராச்சாரி தீண்டாமை குறித்து என்ன கருத்துக் கொண்டிருந்தார்?

~~தீண்டாமை ஷேமகரமானது| என்று தெய்வத்தின் குரல் என்ற நூலில் எழுதவில்லையா? தீண்டாமையை ஒழிக்கப்போவதாகப் பேசி வந்த காந்தியாரிடமே சங்கராச்சாரியார் ~தீண்டாமை சாஸ்திர சம்மதமானது@ அதனை ஒழிக்க நான் சம்மதிக்க மாட்டேன்| என்று கூறி கும்பகோணத்திற்கு வந்த காந்தியாருக்கு தனது சீடர்களை விட்டு கறுப்புக் கொடி காட்டச் செய்தாரேஅவருக்கு சாஸ்திரம் தெரியாதா?

இன்றைக்கு அந்த சங்கர மடத்தின் தலைவராக இருக்கிற சுப்பிரமணிய சங்கராச்சாரி காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளரைப் போட்டுத்தள்ளி விட்டு ஜெயிலுக்குப் போனபோதுகூட வேறு ஜாதிக்காரன் சமைத்ததைச் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்ததால் பார்ப்பன கான்ஸ்டபிளை விட்டு சமைக்கச் செய்து அதனைச் சாப்பிட்டாரே! அது தீண்டாமை இல்லையா? ஏன் இன்னமும் அந்த சங்கர மடத்தில் ஒரு பியூனாகக்கூட ஒரு தாழ்த்தப்பட்டவன் அனுமதிக்கப் படுவதில்லையே! அது தீண்டாமை இல்லையா?

இந்த நாட்டின் முதல் குடிமகன் என்ற குடியரசுத்தலைவராக மிக உயர்ந்த பதவியில் இருந்த வி.வி.கிரி வெளிநாட்டுக்குச் செல்லும்போது அந்த நாட்டுக்காரன் சமைத்ததைச் சாப்பிடக் கூடாது என்பதற்காக கூடவே ஒரு பார்ப்பன சமையல்காரரை அழைத்துச் சென்றாரே அது தீண்டாமை இல்லையா?அவருக்கு சாஸ்திரம் தெரியாதா?

இந்த இராம.கோபாலன்கள் உயர்வாகப் போற்றுகின்ற இன்னொரு மனிதர் திலகர். அவர் தீண்டாமையை ஒழிக்கக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் மாநாடு முடிந்த அடுத்தநாள் சமூகசீர்திருத்த மாநாடு நடத்தியவர்களை எதிர்த்துத் தாக்குதல் நடத்தியவர்தான் அந்தத் திலகர். சமூக சீர்திருத்தம் என்பதையே ஏற்றுக் கொள்ளாதவர்தான் திலகர். தாழ்த்தப்பட்டவர்களை காங்கிரஸ் மாநாடு நடந்த பந்தலுக்கு உள்ளேயே அனுமதிக்கக் கூடாது என்றவர்தான் அந்தத் திலகர்.

பூனாவில் கிறிஸ்தவ மிஷினரி நடத்திய ஒரு விழாவில் பங்குகொண்ட திலகர் கிறிஸ்தவப் பாதிரியார் அனைவருக்கும் வழங்கிய தேநீரையும் பிஸ்கட்டையும் உண்டார் என்பதற்காக சாதிவிலக்கம் செய்யப்பட்டார். அப்படி சாதிவிலக்கம் செய்ததை எதிர்த்துப் பேசாமல் அதற்குப் பரிகாரம் செய்தவர் திலகர்.

அவர் வங்காளத்துக்குச் செல்லுகின்றபொழுது அங்குள்ள வங்கத்துப் பிராமணர் சமைத்ததையே உண்ண மாட்டாராம். மகாராட்டிரத்திலிருந்து மராட்டிய பிராமணர் ஒருவரை உடன் அழத்துச் சென்று அவரைச் சமைக்கச் சொல்லி அதை;தான் சாப்பிடுவாராம் அந்தத் திலகர் பெருமான். இது தீண்டாமை இல்லையா? அந்தத் திலகருக்கு சாஸ்திரம் தெரியாதா?

பாரதீய மஸ்தூர் சங்கத்தைத் துவக்கியவர் தெங்கடி. அவர் ஆர்எஸ்எஸ் தலைவரான குரு கோல்வால்கரின் ஆலோசனையின் பேரில் திலகரின் பிறந்தநாளான ஜூலை 23ந் தேதி அந்த சங்கத்தைத் துவக்கினதாகப் பெருமைபடப் பேசுவார்கள்.

அந்த தெங்கடி தீண்டாமையை ஒழிக்க அம்பேத்கருடன் சேர்ந்து பாடுபட்டது போன்ற தோற்றத்தை ஆர்எஸ்எஸ் கும்பல் உருவாக்குகிறதே! உண்மை என்ன? திலகரைப் பெருமையாகக் கருதுகின்றவர்கள் திலகர் அம்பேத்கருக்கு என்ன செய்தார் என்பதையும் வெளி உலகுக்குச் சொல்ல வேண்டும் அல்லவா?
1920ல் அண்ணல் அம்பேத்கர் ~மூக் நாயக்| என்ற பத்திரிகையைத் துவக்குகிறார். அந்தப் பத்திரிகை வெளிவருவது பற்றி காசுகொடுத்து விளம்பரம் கொடுத்தபொழுது திலகர் நடத்திய ~கேசரி| என்ற பத்திரிகை அதனை வெளியிட மறுத்து விட்டது. ஒரு தீண்டத்தகாதவன் நடத்துகின்ற பத்திரிகைக்கு விளம்பரம் வெளியிடுவதே தீட்டு என்று கருதியது அந்த கேசரி.
இவர்கள் திலகரையும் தலைவராக ஏற்றுக் கொள்வார்களாம்.

அம்பேத்கரையும் இவர்கள் மதித்து தீண்டாமையை ஒழிக்க உதவினார்களாம். எவ்வளவு இரட்டைவேடம்?

காஞ்சி சுப்பிரமணிய சங்கராச்சாரியை 2014ல் இரண்டு பேர் சந்திக்கிறார்கள். இரண்டுபேருமே பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். ஒருவர் அமைச்சர். இன்னொருவர் அமைச்சருமல்ல. கட்சியின் எந்தப் பதவியிலும் இல்லாதவர். பதவியில் இல்லாதவர் சங்கராச்சாரியைச் சந்திக்கச் சென்றபோது அவருக்கு நாற்காலி போட்டு தனக்குச் சமமாக அமர வைத்த சங்கராச்சாரி பாஜக வின் மாநிலத் தலைவராக இருந்து மத்திய அமைச்சரான ஒருவருக்கு நாற்காலி கூடத் தராமல் தரையில் உட்கார வைத்துப் பேசுகிறார்.

நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டவர் சு.சாமி. தரையில் உட்கார வைக்கப்பட்டவர் பொன் இராதா கிருஷ்ணன். சு.சாமியின் முதுகில் பூணூல் தொங்குகிறது. பொன்னாருக்கு அது இல்லை. இது தீண்டாமை இல்லையா? ஜாதித்திமிர் இல்லையா? இராம கோபாலன் விளக்குவாரா? இதற்குக் காரணமாக இருப்பது எது?
பார்ப்பனர்கள் சாப்பிடுவதை மற்றவர்கள் பார்த்தால் தீட்டு என்று கூறி யாரும் பார்க்காதபடி பார்ப்பனர்கள் சாப்பிட்டு வந்தார்களே! அதுவும் தீண்டாமைதானே? வெள்ளைக்காரன் கண்டுபிடித்த இரயில் நம் நாட்டிற்கு வந்தபோது இரயில்வே உணவகங்களில் பிராமணாள் சாப்பிடும் இடம் என்று தனியாக இடம் ஒதுக்கி மற்றவர்கள் பார்க்காதபடி அமர்ந்து சாப்பிட்டார்களே பார்ப்பனர்கள், அது தீண்டாமை இல்லையா? வெள்ளைக் காரனையே உங்களுக்கு ஆதரவாக இழுத்து இத்தகைய சலுகைகளைப் பெற்றது எப்படி?

~நீங்கள் எங்கள் மதத்திலும் ஜாதியிலும் சாஸ்திரத்திலும் கைவைக்காமல் இருந்தால் வெள்ளையர் ஆட்சிக்கு முழு ஒத்துழைப்புத் தருகிறோம் என்று கூறி உங்களுடைய ஜாதி உயர்வை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளவில்லையா?
1833ல் விக்டோரியா மகாராணியோடு ஏற்பட்ட உடன்படிக்கையின்படி எழுதப்பட்ட அரசியல் சட்டத்தில் பார்ப்பனர்களுக்கென்று தனிச் சலுகைகள் பெற்றது எப்படி?

ஒரு கொடிய குற்றம் புரிந்த பார்ப்பான் ஜெயிலுக்குப் போனாலும் ஜெயிலில் அவனுடைய மலத்தை அவனே எடுத்துப் போட வேண்டியதில்லை. ஆனால் உணவுக்கு வழியில்லாமல் ஒரு கவளம் உணவைத் திருடிவிட்டு ஜெயிலில் இருக்கும் பறையன் அந்தப் பார்ப்பானுடைய மலத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று சிறை விதிகளில் எழுதிக்கொள்ளவில்லையா?

அனைத்துக் கைதிகளும் இடுப்பில் அரைஞாண் கயிறு உட்பட அனைத்தும் நீக்கப்பட வேண்டும் என்று இருந்தாலும் பார்ப்பனக் கைதியிடம் பூணூலை அப்புறப்படுத்தக்கூடாது என்று பார்ப்பானுக்கு சலுகை பெற்றது எப்படி?
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்கூட பார்ப்பானுக்குத் தனி வார்டு ஒதுக்கிக்கொண்டது எப்படி?

எல்லாம் உங்கள் சாஸ்திரங்களைக் காட்டித்தானே?
1871ல் திருச்செந்தூர்க் கோயிலில் கோயில் நுழைவு உரிமை வேண்டும் என்று நாடார்கள் தொடர்ந்த வழக்கில் எந்த எந்த ஜாதிக்காரன் எந்த இடத்தில் நின்று கடவுளை வழிபட வேண்டும் என்று வெள்ளைக்கார நீதிபதியையே தீர்ப்புச் சொல்ல வைத்தீர்களே! மதுரை மீனாட்சி கோயிலிலும் நாடார்கள் நுழைவதற்கு அனுமதியில்லை என்று இலண்டன் பிரிவி கவுன்சிலிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டதே! அவையெல்லாம் உங்கள் சாஸ்திரங்களை மீறக்கூடாது என்று வெள்ளைக்காரர்களுடன் நீங்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி சாஸ்திரங்களைப் பார்த்து வழங்கப்பட்ட தீர்ப்புக்கள்தானே?

மகாராஷ்டிரா மாநிலம் மகாத் நகராட்சிக்குச் சொந்தமான குளத்தில் அண்ணல் அம்பேத்கரும் அவர்தம் தொண்டர்களும் நீர் அருந்தினார்கள் என்பதற்காக அந்தக் குளம் தீட்டாகி விட்டதாகக் கூறி ஆயிரத்தி எட்டுக் குடங்களில் மாட்டுச்சாணம்ää மாட்டின் சிறுநீர்ää பால்ää தயிர் என அனைத்தையும் கலந்து அதனைக் குளத்தில் கரைத்து தீட்டுப் போக்கினார்களேää அது தீண்டாமை இல்லையா?

உங்கள் பெரிய புராணத்தில் நடராசரைத் தரிசனம் செய்ய வந்த நந்தனாரை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தது தீண்டாமை இல்லையா?

இப்படி ஏராளமான உதாரணங்கள் உங்கள் இந்து மதத்தில் தீண்டாமைக்கான ஆதாரம் இருக்கும்போது இந்துமத சாஸ்திரங்களில் தீண்டாமைக்கு ஆதாரமே இல்லை என்பது வடிகட்டின பித்தலாட்டம் இல்லையா?
ஒரு குற்றவாளியைக் கூட ஆதாரம் இல்லாமல் தண்டிக்கக் கூடாது என்கிறபோது ஆதாரமே இல்லாத தீண்டாமையை இவ்வளவு நாள் கடைப்பிடித்தது கிரிமினல் குற்றம் இல்லையா?
அவ்வாறு ஆதாரம் இல்லை என்று நீங்கள் கூறுவதை ஒத்துக்கொண்டால் அப்படி ஆதாரம் எதுவும் இல்லாமலேயே தீண்டாமையைக் கடைப்பிடித்து இந்திய சமுதாயத்தில் நான்கில் ஒரு பகுதி மக்களைக் கொடுமைப்படுத்திய கூட்டத்திற்கு என்ன தண்டனை விதிப்பது?
இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் யார் பொறுப்பு?
இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் யார் பொறுப்பேற்பது? பொறுப்பேற்காதது மட்டுமல்லாது இன்னமும் அதனை நியாயப்படுத்தவும் பாதுகாக்கவும் முனைகின்றார்களே! அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம்?
இன்று உலகில்; பல தீவிரவாதச் செயல் நடந்துகொண்டிருக்கிறது. பல குண்டுவெடிப்புக்கள்ää விமானக் கடத்தல்கள் போன்ற செயல்கள் நடக்கின்றன. ஆனால் அதனைச் செய்தவர்கள் தாங்கள்தான் என்று பொறுப்பேற்றுக் கொள்வார்கள். இன்னின்ன காரணங்களால் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தினோம். எங்களுக்கு இன்னின்ன கோரிக்கைகள். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். இந்தக் காரணத்தால் நாங்கள் விமானத்தைக் கடத்தினோம். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டும் என்று மிரட்டவாவது செய்வார்கள்.
ஆனால் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக இந்த நாட்டுக்குச் சொந்தக் காரர்களான ஆதிகுடிகளை மண்ணின் மைந்தர்களை மிருகங்களையும்விட மிகமிகக் கேவலப்படுத்தி அந்த சமுதாயத்தின் வளர்ச்சியையே தடுத்ததோடு இன்னமும் அந்தக் கொடுமைகன் தொடர்ந்து கொண்டிருக்கிறதே அந்தக் கொடுமைக்கு யார் பொறுப்பு? யார் அந்தத் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள் குற்றவாளிகளா? இல்லையா?
இதற்கெல்லாம் இராம.கோபாலன்கள் பதில் சொல்வார்களா?
அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆவார்கள். அவர்கள் இருவரும் தீண்டாமை ஒழிய வேண்டும் என்றும் ஜாதி ஒழிய வேண்டும் என்றும் தங்கள ;வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்கள்.
தந்தை பெரியாருடைய தத்துவங்களை யாரும் திரிபுவாதம் செய்துவிடக் கூடாது என்பதில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு அய்யா வீரமணி அவர்கள் கண்ணுங்கருத்துமாக இருந்து பாதுகாத்து வருகிறார்கள். ஆனால் அண்ணல் அம்பேத்கருடைய கருத்துக்களைப் பாதுகாக்கவும் அவருடைய சிந்தனைகளில் யாரும் திரிபுவாதம் செய்துவிடாமலும் பாதுகாக்கக்கூடிய தலைமையோ அமைப்போ முறையாக இல்லாததால் யார் யாரோ அம்பேத்கருக்கு விழா எடுத்து அவருடைய கொள்கைக்கு நேர் எதிரான செயல்களைச் செய்துவருகிறார்கள்.
ஆர்எஸ்எஸ் சங்க் பரிவார் இந்துமுன்னணிää பாஜக கும்பலைச் சேர்ந்தவர்கள்கூட அம்பேத்கருக்கு விழா எடுக்கிறோம் என்று சொல்லி அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து நாங்களும் அம்பேத்கரை மதிக்கிறோம் என்று ஏமாற்றி தாழ்த்தப்பட்ட மக்களை தங்கள் அமைப்புக்களுக்குள் சேர்த்து தங்களுக்கு அடியாட்களாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.
அப்படிப் பயன்படுத்துபவர்கள் அம்பேத்கருடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில்லை. மக்களிடமும் அதனைக் கொண்டு செல்வதில்லை.
அம்பேத்கர் தீண்டாமை குறித்து என்ன கூறுகிறார்?
~ஒரு இந்து தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறான் எனில் அதற்குக் காரணம் இந்துமதம் அவனுக்கு அவ்வாறு கட்டளை இட்டிருப்பதுதான். தீண்டாதோரை நிலைபெற்றுள்ள கட்டுக்கோப்பினை எதிர்த்துத் தீண்டாதோர் புரட்சி செய்யாத வண்ணம் இந்துக்கள் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றியும் சட்டவிரோதமாகவும் கடைப்பிடிப்பதற்குக் காரணம் இந்துமதக் கட்டுப்பாடு தெய்வீகமானது@ அதனால் அது புனிதமானது என்று சொல்வதோடு மட்டுமல்ல இந்தக் கட்டுப்பாட்டினை எல்லா இயன்ற வழிகளிலும் பேணிக்காப்பது கடமை என்று விதித்திருப்பதுதான். அவர்கள் மனிதாபிமானக் குரலுக்கும் செவிசாய்ப்பதில்லை என்றால் அதற்குக் காரணம் அவர்கள் தீண்டாதோரை மனிதர்களாகவே கருதக் கூடாது என்று இந்துமதம் கட்டளை இட்டிருப்பதுதான். தீண்டாதோரை அடிப்பதுää அவர்கள் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதுää தீயிட்டுக்கொளுத்துவதுää மற்றும் பல்வேறு கொடுமைகளை அவர்களுக்கு இழைப்பது ஆகிய செயல்களை கொஞ்சமும் மன உறுத்தலின்றிச் செய்வதற்குக் காரணம் இந்துமதம் அவர்களுக்கு இந்த சமூகக் கட்டுக் கோப்பினைக் காப்பாற்ற எந்தவிதப் பாவத்தையும் செய்வது தவறல்ல என்று போதிப்பதுதான்|| என்று கூறுகிறார்.
இந்துமதம் எங்கே போகிறது? என்ற நூலில்
அவ்வாறு தீண்டத்தகாதோரை மனிதர்களாகவே கருதக்கூடாது என்று இந்துமதம் ஏன் கூறுகிறது? நாம் கூறுவதைவிட அக்கிரஹாரவாசியான அக்கினிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரி ~இந்துமதம் எங்கே போகிறது?| என்ற நூலில் கூறுகிறார். கேளுங்கள்.
~சூத்திரர்களைத் தனியாகப் பிரித்து வைத்த பிராமணர்கள் அனைத்து வகைகளிலும் பிராமணரல்லாதாரைக் கொடுமைப் படுத்தினார்கள். இப்படிச் செய்வதற்கு அவர்களது கையில் கசங்காமல் இருந்த மனுஸ்மிருதிதான் ரொம்ப உதவியாக இருந்தது.
மனு மூலம் சூத்திரர்களைக் கெடுபிடி செய்த பிராமணர்கள் இந்தக் கொடுமைக்கு அதிகமான கொடுமைகளை இன்னொரு பிரிவினருக்குச் செய்தார்கள். யாருக்கு? சத்திரியர்களுக்கா? இல்லை. வைசியர்களுக்கா? இல்லை. சண்டாளர்களுக்கு.
சண்டாளர்களா? யாரவர்கள்?
மனு கூற்றுப்படி சண்டாளர்கள் யார் என்பதை என் எழுத்தில் கூற முடியவில்லை. என்னிடம் மகாத்மா கூறியதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.
~யார் அந்தச் சண்டாளர்கள்? துரோகம் செய்தவனைää கொலை பாதகனைää பத்தினிகளை வேட்டையாடுபவனை பொதுவாகச் சண்டாளர்கள் என்று கூறுவார்கள். ஆனால் மனு யாரைச் சண்டாளர்கள் என்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்குக் கீழ்ப்பட்டவர்கள்ää எல்லா விதத்திலும் ஒடுக்கப்பட வேண்டியவர்கள்ää வருணபேதத்தின் கடைசிக் கூட்டத்தினர்ää இப்படியாக அருவருப்புடன் வருணிக்கப்படும் தலித்துகளைத்தான் மனு தனது அகராதியில் பஞ்சமர்களென்றும் சண்டாளர்களென்றும் குறிப்பிட்டார்| என்று கூறுகிற தாத்தாச்சாரி காந்தியைச் சந்தித்த நிகழ்ச்சியைக் கூறுகிறார்.
தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்திற்காக காந்தி கும்பகோணம் வந்தாராம். அப்போது இளைஞராக இருந்த தாத்தாச்சாரி உட்பட சில இளைஞர்கள் “தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடும் காந்தியாரேää திரும்பிப் போங்கள்! சனாதன தருமத்தை எதிர்க்காதீர்கள்” என்று முழக்கமிட்டு காந்திக்குக் கறுப்புக்கொடி காட்டினார்களாம்.
அந்த எதிர்ப்பை மீறி காந்தி அவர்கள் கூட்டத்தில் பேசிவிட்டு அவருக்குக் கறுப்புக்கொடி காட்டிய தாத்தாச்சாரி உள்ளிட்ட இளைஞர்களைக் கூப்பிட்டுää ஏன் கறுப்புக்கொடி காட்டுகிறீர்கள் என்று கேட்டாராம்.. இவர்கள் போராட்டம்பற்றிக் கூறிய உடன் “நீங்கள் மனுஸ்மிருதியைப் படித்ததில்லையா? மனுவில் பஞ்சமர்களைச் சண்டாளர்கள் என்று அபாண்ட வார்த்தைகளால் குறிப்பிட்டுள்ளார்கள்” என்று கூறிய காந்தி ää சண்டாளர்கள் சூத்திர ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்தவர்கள். அவர்களின் தகப்பனார் யார்? தாயார் யார்? என எண்ணிப் பாருங்கள். இதெல்லாம் புஸ்தகத்தில்தான் உள்ளது. நானாகச் சொல்லவில்லை. இவர்களைத்தான் நீங்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்துள்ளீர்கள்.” என்று காந்தி கூறியதாகக் கூறும் தாத்தாச்சாரிää பிராமணää சத்திரிய வைசியää சூத்திர என்று பிரிக்கப்பட்ட வருணதருமத்தில் வருணக்கலப்புää சாதிக்கலப்பு ஏற்படாமல் நிலையான சமுதாயம் (ளுவயடிடந் ளழஉநைவல) அமைய பிராமணர்கள் செய்த சூழ்ச்சியினை விவரிக்கிறார்.
அவ்வாறு காந்தியை எதிர்த்து தாத்தாச்சாரியும் அவரைப் போன்ற இளைஞர்களும் போராடியதற்கு என்ன காரணம்?
அந்நிகழ்ச்சி நடந்தது 1925 காலக்கட்டம். அந்தக் காலக்கட்டத்தில்தான் காந்தி அடிகள் காஞ்சி சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியை சந்தித்து தீண்டாமையை ஒழிக்க ஆதரவு கோரியபோது “தீண்டாமை சாஸ்திர சம்மதமானது. தீண்டாமை ஷேமகரமானது. எனவேää தீண்டாமையை ஒழிக்க நான் சம்மதிக்க மாட்டேன்” என்று மறுத்துவிட்டார் சங்கராச்சாரி. வைசிய வருணத்தவரான காந்தியுடன் அவர் உரையாட தேர்ந்தெடுத்த இடம் ஒரு மாட்டுக் கொட்டகை என்பதும் அங்கு பேசினால் தீட்டு இல்லை என்பதாலும்தான் சங்கராச்சாரி அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து காந்தியிடம் உரையாடினார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தந்தை பெரியார்  உள்ளிட்ட சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் காந்தியாரின் தீண்டாமை ஒழிப்புக்கு செல்வாக்கு ஏற்படவேää பார்ப்பனர்கள்  இந்துமகாசபை என்ற அமைப்பை உருவாக்கி மக்களை ஏய்க்க தீண்டாமை ஒழிய வேண்டும் என்று தீர்மானம் இயற்றுவார்கள். அதே ஆசாமிகள் வருணாசிரமசபை என்ற ஒன்று கூட்டி தீண்டாமை வேத சம்மதமென்றும்  மனுதர்ம விதியென்றும் வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அதற்கு விரோதமாய் இருக்கும் காந்தியை ஒழிக்க வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றுவார்கள். கும்பகோணத்திலும் அப்போது இந்துமகாசபை துவக்கப்பட்டு அதில் தீண்டாமை சாஸ்திர சம்மதமானது என்றும் அதை ஒழிக்கக் கூடாது என்றும் தீர்மானம் இயற்றி அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில்தான் தாத்தாச்சாரி போன்ற இளைஞர்கள் காந்தியை எதிர்த்துக் கறுப்புக்கொடி காட்டுகிறார்கள். அவ்வாறு தீர்மானம் இயற்றி இருப்பதைக் கண்டித்துப் பெரியார் குடியரசு ஏட்டில்      (13-12-1925) எழுதியிருக்கிறார்கள் என விடுதலை வரலாற்றுச் சுவடுகள் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.(13-07-2008)
தாழ்த்தப்பட்ட மக்களைப் பஞ்சமர் என்றும் அவர்ணஸ்தர் என்றும் சண்டாளர் என்றும் இpழிவுபடுத்துவது இந்துமதம். ஆரியர்கள் ஏற்படுத்திய நான்கு வருணத்தையும் ஏற்றுக் கொள்ளாத இந்நாட்டின் பூர்வகுடிகள்தான் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்களை வேசிப்பிள்ளைகள் என்று இழிவுபடுத்தி கீழ்மைப்படுத்துவது அயோக்கியத்தனம். அதனை அண்ணல் அம்பேத்கர் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார்கள்.
“சூத்திர ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் கூடாவொழுக்கத்தில் பிறந்த பிள்ளைகள்தான் சண்டாளர்கள் என்று மனு கூறியுள்ளார். இது உண்மையாக இருக்க முடியுமா? அப்படி உண்மையாக இருக்குமானால் பிராமணப் பெண்கள் தனது ஒழுக்கத்தில் உறுதியற்றவர்களாக இருந்தார்கள் என்றாகி விடும். இது நம்ப முடியாததாகும். சண்டாளர்களின் மக்கள் தொகையை வைத்துப் பார்க்கும்போது ஒவ்வொரு பிராமணப் பெண்ணும் ஒரு சூத்திர ஆடவனுக்கு காமக்கிழத்தியாக இருந்தால்கூட சண்டாளர்களின் கணக்கைச் சரிக்கட்ட முடியாமல் போய்விடும்.
“இந்த நாட்டின் எண்ணற்ற மக்களின் தோற்றத்திற்கு இழிவைக் கற்பித்து அவர்களின் சமூக ஒழுக்க இழிவிற்கு வழிவகுத்திருக்கிறது” என்று மனுவைச் சாடும் அம்பேத்கர் “இந்த மக்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ்ந்திருக்கிற சூழ்நிலையில் அவர்களுடைய சாதியின் தோற்றம் கலப்பினால் உண்டானது என்று கூறுவது தவறானது என்று கூறுகிறார் அம்பேத்கர். இது மக்களின் குறிப்பாகப் பெண்களின் நடத்தையைக் கேவலப்படுத்திக் காட்டுகிறது” என்றும் அம்பேத்கர் எழுதுகிறார்.                                           (ஆதாரம் : அம்பேத்கர் எழுத்தும் பேச்சும்ää தொகுதி 8ää பக்கம் 306)
பார்ப்பனப் பித்தலாட்டம்
மனுதர்மத்தில் பிரம்மாவின் முகத்தில் பிராமணனும்ää தோளில் சத்திரியனும்ää தொடையில் வைசியனும்ää காலில் சூத்திரனும் பிறந்ததாக எழுதப்பட்டிருக்கிறது. பஞ்சமர்கள் எங்கே பிறந்தார்கள் என்று எழுதப்படவில்லை. இதுபற்றித் தந்தை பெரியாரிடம் கேட்டதற்கு அவர்கள்தான் ஒரு தாய்க்கு இயற்கையாக எங்கே பிறக்க வேண்டுமோ அங்கே முறையாகப் பிறந்தார்கள் என்று கூறினாராம்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அந்த மனுதர்மம் பற்றி

முகத்தில் பிறப்பாருண்டோ முட்டாளே!                                                    தோளில் பிறப்பாருண்டோ தொழும்பனே!                                          இடையில் பிறப்பாருண்டோ எருமையே!                                             காலில் பிறப்பாருண்டோ கழுதையே!                                                  நான்முகன் ஒருவன் உண்டோ கூறடா நாயே!                                    புளுகடா புகன்றவை அனைத்தும் போக்கிலியே!

என்று பிறப்புப் பற்றிய பார்ப்பனப் புரட்டைச் சாடுகிறார்.
கைபர் போலன் கணவாய் வழியாக ஆடுமாடு மேய்க்க வந்த ஆரியக்கூட்டம் இந்நாட்டு உழைக்கும் மக்களை சூத்திரன் என்று பிரித்து வைத்து பார்ப்பானின் வைப்பாட்டி பிள்ளைகள் என்று இழிவுபடுத்தியது மட்டுமல்லாமல் சமுதாயத்துக்கு மிகவும் அத்தியாவசியமான பணிகளான பிணம் சுடுதல் மலம் எடுத்தல் உழவு செய்தல்ää செருப்புத்தைத்தல் போன்ற அத்தியாவசியமான தொழில்களைச் செய்து வந்தோரை பஞ்சமர் என்றும் அவர்ணஸ்தர் என்றும் புலையர் என்றும் தீயர் என்றும் தஸ்யூக்கள் என்றும் இழிவுபடுத்தி மிகமிகக் கேவலமாக நடத்தி வந்தார்கள். இந்தச் சொற்கள் எல்லாம் வேத புராண இதிகாசங்களிலும்ää ஸ்ருதிää ஸ்மிருதிகளிலும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.
மனுதர்மத்தில் தீண்டாமைக்கான ஆதாரம்:
மனுதர்மத்தில் சண்டாளர் என்ற சொல் பல சுலோகங்களில்  இடம்பெற்றுள்ளது.
“வீடு முதலானவற்றிற்கு சண்டாளர்களால் அசுத்தம் நேரிடுகின்றபொழுது விலக்குதல்ää மெழுகுதல்ää கோமூத்திரம் தெளித்தல்ää கொஞ்சம் மேல்மண்ணை எடுத்துப் போடுதல்ää பசுமாட்டை ஒருநாள் வசிக்கும்படிச் செய்தல் இவ்வைந்தினாலும் அப்பூமி பரிசுத்தப்படுகிறது” (மனு அத்தியாயம் 5 சுலோகம் 134)
மனுதர்மத்தில் சூத்திரன் கெட்டியான சுட்டசெங்கல்ää ஓடு ஆகியவைகளால் வீடு கட்டிக் கொள்ளக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. இதுபோன்ற வீட்டை பிராமணரும் மற்ற மூன்று வர்ணத்தாருமே கட்டிக் கொள்ள முடியும். அந்த வீட்டைக் கட்டுகின்ற கட்டுமானத் தொழிலைச் செய்கின்றவர்களில் இக்காலத்திலும்கூட பார்ப்பனர் யாரும் ஈடுபடுவது கிடையாது. முழுக்க முழுக்க தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் இப்பொழுதும் அப்பணியைச் செய்து வருகிறார்கள். அவ்வாறு அம்மக்கள் வேலை செய்வதால் அந்த வீடு தீட்டாகி வீடுமாம். அந்தத் தீட்டைப் போக்கத்தான் மேற்சொன்ன மனு(அ)தர்ம ஸ்லோகத்தின்படி தீட்டுப் போக்கப்படுகிறது.
மனிதன் நுழைந்ததால் தீட்டு ஏற்படுகிறது. அந்தத் தீட்டு மாட்டு மூத்திரத்தால் போக்கப்படுகிறது. மாட்டை ஒருநாள் அந்த வீட்டில் வசிக்கச் செய்வதால் அத்தீட்டுப் போக்கப்படுகிறது என்று மனு சொல்கிறது என்கின்ற பொழுது மாட்டைவிட மனிதன் இழிவுபடுத்தப்படுகிறானா? இல்லையா?
இதனை அறியாத பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று புதிய வீடு கட்டும்போது பார்ப்பனரை அழைத்து பசுமாட்டை வீட்டுக்குள் விட்டு அந்த மூத்திரத்தை கோமியம் என்ற பெயரில் வீடெல்லாம் தெளித்து பூஜை செய்கிறார்கள். அதற்குப் பார்ப்பனர் சொல்லுகின்ற காரணம் கணபதி ஹோமம் செய்து கடவுள் அனுக்கிரஹத்தைப் பெற்றுத் தருகிறோம். சரஸ்வதி கடாட்சம்ää லட்சுமிகடாட்சம் பெற்றுத் தருகிறோம் என்பதாகும். இப்படிச் செய்தால்தான் லட்சுமியும் சரஸ்வதியும் அந்த வீட்டில் வசிப்பார்கள். அவர்களுடைய அருள் கிடைக்கும் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். ஆனால் மனுதர்ம சாஸ்திரத்தின்படி அது தீட்டுப் போக்குகின்ற வேலைதான். இதனை வெளிப்படையாகச் சொன்னால் பார்ப்பனரல்லாதாருக்கு சொரணை வந்துவிடும் என்பதாலும் தங்களுடைய பிழைப்புப் போய்விடும் என்பதாலும் பார்ப்பனர் எவரும் அதன் பொருளை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்.
இந்தத் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் எவருக்கும் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஓட்டு வீடோ மச்சு வீடோ மாடி வீடோ எதுவும் கிடையாது. காரணம் அவர்கள் அதுபோன்ற வீடுகள் கட்டிக்கொள்ளக் கூடாது என்று சாஸ்திரத்தின் பேரால் தடுக்கப்பட்டார்கள்.
இன்றைக்கு எல்லோரும் அதுபோன்ற வீடுகள் கட்டிக் கொள்கிறார்கள் என்றால் அதற்கெல்லாம் காரணம் என்ன? அவர்களுக்குக் கல்வி கிடைத்துள்ளது. நல்ல உத்தியோகம் கிடைத்துள்ளது. நல்ல வசதி ஏற்பட்டுள்ளது என்றால் அதற்கெல்லாம் இந்த லட்சுமியும் சரசுவதியுமா காரணம்?
கல்வி மறுக்கப்பட்ட மக்களாகிய இவர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த பெரியாரும் அம்பேத்கரும் கல்வி வள்ளல் காமராசரும் அல்லவா காரணம்? நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த சரசுவதியும் லட்சுமியும் எங்கே போயிருந்தார்கள்? ஏன் இம்மக்களுக்குப் படிப்பு இல்லை? நல்ல உத்தியோகம் இல்லை? இதைப்பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
அப்படிச் சிந்திக்க மறந்த மக்கள் அல்லது சிந்திக்க மறுக்கின்ற மக்கள் உண்மையில் தங்கள் உயர்வுக்குக் காரணமானவர்களை மறந்து விட்டு தங்களுக்கு இந்தக் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்கவே கூடாது என்று கருதக்கூடிய பார்ப்பனரை அழைத்து கிரஹப்பிரவேசம் என்ற பேரில் இந்த பூஜையினைச் செய்கிறார்கள்.
அதனுடைய உண்மையான பொருள் தங்கள் இனத்தவர் வேலை செய்ததால் தீட்டாகி விட்டது என்பதும் அந்தத் தீட்டைப் போக்கவே பார்ப்பனர் இந்த பூஜை செய்கிறார். அப்படிச் செய்வதுதான் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதாகும்
இதனை அறியாமல் தங்களுடைய இனத்தவரையே இழிவுபடுத்தும் காரியத்தை இதுவரை தங்களை இழிவுபடுத்தி வந்த கும்பலை வைத்துச் செய்துவருகிறார்கள்.
இவ்வாறு சுயமரியாதை அற்ற மக்கள் பார்ப்பன சடங்குகளில் மூழ்கிக்கிடக்கின்ற காரணத்தால்தான் இராம கோபாலன் போன்றவர்கள் சாஸ்திரங்களிலும் புராணங்களிலும்  புனித நூல்களிலும் தீண்டாமை குறிப்பிடப்படவில்லை என்று முழுப்பூசணிக்காயை பரிமாறின சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்கள்.
ஆனால் இந்துமத சாஸ்திரங்களில் ஏராளமான இடங்களில் தீண்டாமை வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
மனுதர்மம் அத்தியாயம்ää சுலோகம் 79 இவ்வாறு கூறுகிறது.
“பதிதர்ää சண்டாளர்ää மூர்க்கர்ää பொருள் முதலியவற்றால் கர்வமடைந்தவர்கள்ää வண்ணான் முதலிய தாழ்ந்த சாதியார்ää செம்படவர் இவர்களுடன் ஒரு மரத்தின் நிழலில்கூட ஒருமித்து வசிக்கக்கூடாது” என்கிறது.
அத்துடன்
“சண்டாளன்ää ஊர்ப்பன்றிää கோழிää நாய்ää மாதவிடாய் ஆன ஸ்திரீ இவர்கள் பிராமணன் புசிக்கும்போது பாராமலிருக்கும்படி செய்ய வேண்டியது”
என்று தாழ்த்தப்பட்டவர்களைப் பன்றிää நாய்ää கோழி ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அவற்றுக்கு  சமமாய்க் கூறி இழிவுபடுத்துகிறது.
மனுதர்மத்தில் பறையன் என்ற சொல் நேரடியாகவே கூறப்பட்டுள்ளது.
“பறையன்ää தூமையானவள் (மாதவிலக்கானவள்)ää கணவன் இறந்தபிறகு பிள்ளைபெற்றவள்ää பிணம்ää பிணத்தைத் தொட்டவன்ää இவர்களைத் தெரியாமல் தொட்டுவிட்டால் தீட்டு உண்டாகிறது. அவ்வாறு தொட்டுவிட்டால் அவன் குளிப்பதன்மூலம் பரிசுத்தனாகிறான்” என்று மனு அத்தியாயம் எட்டு சுலோகம் 85) கூறி தாழ்த்தப்பட்டவனை பிணத்துக்குச் சமமாகக் கூறுகிறது.
“சூத்திரன் ராசாவாயிருக்கும் ராச்சியத்திலும்ää தருமம் (வருணாசிரமம்) அறியாதவர்கள்ää பாஷாண்டிகள்ää இவர்கள் வசிக்கும்படியான கிராமத்திலும்ää சமீபத்தில் சண்டாளர்கள் வசிக்கின்ற கிராமத்திலும் (பிராமணர்) வாசஞ்செய்யப்படாது” என்று மனு அத்-4ää சுலோகம் 61 கூறுகிறது.
சூத்திரன் ராசாவாக இருந்தால் அவனை ஒழித்துவிட வேண்டும்ää சாதியை கடைப்பிடிக்காதவர்களை ஒழித்துவிட வேண்டும்ää சண்டாளர்களை அதாவது தாழ்த்தப்பட்டவர்களை ஊருக்கு ஒதுக்குப்புறமாக தொலைதூரத்திற்குத் துரத்திவிட வேண்டும்ää அருகிலேயே நெருங்கவிடக் கூடாது என்பது இதன் பொருள்.
இந்த சுலோகத்தின்படிதான் தாழ்த்தப்பட்டவர்களின் குடியிருப்புக்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக அமைந்துள்ளன.
தீண்டத்தகாதார் அனுபவித்த கொடுமைகள்:
ஈராயிரம் ஆண்டுகளுக்குமேல் தீண்டத்தகாதவர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு அளவே இல்லை. இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வோர் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்த கொடுமைகள் உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் வேறு எந்த மக்களும் அனுபவித்திராத கொடுமைகளாகும்.
அண்ணல் அம்பேத்கர் தீண்டத்தகாதவர் அனுபவித்த கொடுமைகளைப் பட்டியலிடுகிறார்.
1) தீண்டத்தகாதோர் இந்துக்கள் வசிக்கும் இடத்துக்கு அப்பால் வசிக்க வேண்டும். இவ்விதியை மீறுவது குற்றமாகும்.
2) தீண்டாதோர் இருக்கும் பகுதி தெற்குத் திசையில் இருக்க வேண்டும். ஏனெனில்ää தெற்குதான் நான்கு திசைகளில் அமங்கலமானது. இந்த விதியை மீறி நடப்பது குற்றமாகும்.
3) தீண்டாதோர் தீட்டு ஏற்படுத்தும் தூரம் அல்லது நிழல் தீட்டு பற்றிய விதிகளை பின்பற்ற வேண்டும். இவ்விதியை மீறுவது குற்றமாகும்.
4) தீண்டத்தகாதோர் நிலம்ää கால்நடைகள் போன்ற செல்வங்கள் சேர்ப்பது குற்றமாகும்.
5) தீண்டத்தகாத சமுதாயத்தினர் ஓட்டுக்கூரை உள்ள வீடு கட்டுவது குற்றமாகும்.
6) தீண்டத்தகாத சமுதாயத்தினர் சுத்தமான உடை உடுத்துவதுää செருப்பு அணிவதுää கைக்கடிகாரம் அல்லது தங்க நகை அணிவது குற்றமாகும்.
7) தீண்டத்தகாத சமுதாயத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு கம்பீரமாக ஒலிக்கும் பெயர்களை வைப்பது குற்றமாகும். அவர்களின் பெயர் இழிவைக் குறிப்பதாக இருக்க வேண்டும்.
8) தீண்டத்தகாத சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஓர் இந்துவின் முன்னால் நாற்காலியில் உட்காருவது குற்றம்.
9) தீண்டத்தகாத சமுதாயத்தினர் கிராமத்தின் வழியே குதிரையின்மீதோää பல்லக்கிலோ அமர்ந்து செல்வது குற்றம்.
10) தீண்டத்தகாத சமுதாயத்தினர் கிராமத்தின் வழியே தங்கள் ஊர்வலத்தை நடத்திச் செல்வது குற்றம்.
11) தீண்டத்தகாத சமுதாயத்தினர் இந்துவுக்கு வணக்கம் தெரிவிக்காமலிருப்பது குற்றம்.
12) தீண்டத்தகாத சமுதாயத்தினர் பண்பட்ட மொழியொன்றைப் பேசுவது குற்றம்.
13) தீண்டத்தகாத சமுதாயத்தினர் யாரேனும் இந்துக்கள் உண்ணாவிரதமிருக்கிற புனிதநாளிலும்ää உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு உணவு உண்ணப்போகும் நேரத்திலும் செல்ல நேர்ந்தால் பேசிக்கொண்டு செல்வது குற்றம். ஏனெனில் அவர்கள் மூச்சுக்காற்று ஊரின் காற்றையும் இந்துக்களின் உணவையும் மாசுபடுத்துவதாகக் கருதப்படுகிறது.
14) தீண்டத்தகாத ஒருவர் தீண்டத்தக்கவரின் புறச்சின்னங்கள் எதையும் அணிந்து தன்னைத் தீண்டத்தக்கவர்போல் காட்டிக் கொள்வது குற்றம்.
15) தீண்டாதவர் தன்னுடைய தாழ்ந்த அந்தஸ்துக்குத் தக்கவாறு நடந்துகொண்டு பொதுமக்கள் அவரை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வண்ணம் பின்வருவன போன்ற புறச்சின்னங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
அ) இழிவான பெயரைக் கொண்டிருப்பது.
ஆ) சுத்தமான உடை அணியாதிருப்பது.
இ) வீட்டுக்கு ஓட்டுக்கூரை இல்லாதிருப்பது.
ஈ) வெள்ளிää தங்கநகை அணியாதிருப்பது.
  இந்த விதிகளில் எதையும் மீறுவது குற்றமாகும் என்று எழுதும் பாபாசாகேப் அம்பேத்கர் எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த விதிகளை மீறியவர்கள் என்ன என்ன தண்டணைகளை அனுபவித்தார்கள் என்பதையும் அந்தக் காலக்கட்டத்தில் பத்திரிகைகளில் வந்த செய்திகளை வைத்து ஆதாரப்பூர்வமாக எழுதுகிறார்.
1928 பிப்ரவரி 26ந்தேதி பிரதாப் என்ற இதழில் வந்ததாக ஒரு செய்தியை அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
“ஜோத்பூர் சமஸ்தானத்தில் சண்டயல் என்ற இடத்தில் தாழ்த்தப்பட்டோர் அல்வா சாப்பிடுவதற்கு உரிமை இல்லாதவர்கள் என்று நினைக்கும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன் ஒரு திருமணத்தில் அல்வா தயாரித்துப் பரிமாறப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் அல்வா சாப்பிடுவது தங்களை அவமானப்படுத்துவதாக நினைத்த உயர்ஜாதி இந்துக்கள் அவர்களுக்கு இருநூறு ரூபாய் அபராதம் விதித்தார்கள்.”
 1931 நவம்பர் 3ந்தேதி சம்யசம்வாத் என்ற இதழிலிருந்து ஒரு செய்தி:
“டில்லிக்கருகே  திருமணக்குழு ஒன்று மணப்பெண்ணை பல்லக்கில் தூக்கிக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். உயர்ஜாதி இந்துக்கள் இது தங்களை அவமானப்படுத்துவதாகக் கருதினார்கள். அவர்கள் திருமணக் குழுவைத் தடுத்து நிறுத்தி இரண்டு நாட்கள் உணவும் தண்ணீரும் தராமல் வைத்திருந்தார்கள். பின்னர் அங்கு காவல்துறையினர் வந்து அவர்களை மீட்டனர்”
என்று அண்ணல் அம்பேத்கர் பதிவுசெய்கிறார். இன்னும் இதுபோல ஏராளமான நிகழ்வுகளை அம்பேத்கர் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இந்துமதம் அரசமதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு மனுதர்மத்தின்படி பிராமணர்களின் ஆலோசனையோடு ஆட்சி நடந்த பகுதி திருவாங்கூர் சமஸ்தானமாகும். அங்கு நடந்த தீண்டாமைக் கொடுமைகள் அளவற்றவை. அந்த சமஸ்தானத்தில் நடந்த ஒரு நிகழ்வை மட்டும் இங்கு சுட்டிக்காட்டுகிறோம்.
அங்கு வசித்த ஈழவ இன மக்கள் உயர்ஜாதி மக்களால் மிகமிக இழிவாக நடத்தப்பட்டார்கள். அந்த இனத்தைச் சேர்ந்த பெண்கள் வயதுக்கு வந்த பிறகு தங்கள் மார்பை மறைக்க ஜாக்கெட் அணியக் கூடாது என்று சட்டம் போட்டு அந்தச் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தியது திருவாங்கூர் சமஸ்தானம். அங்கு அதிகாரிகளாக இருந்தவர்கள் பார்ப்பனர்களும் மேல்ஜாதிக்காரர்களும்தான். அந்த சட்டத்தை மீறி எந்தப் பெண்ணாவது ஜாக்கெட் அணிந்தால் அவர்களைக் கட்டி வைத்து அடிப்பதோடு அவர்களுக்கு ~முலைவரி| என்ற ஒரு வரியையும் போட்டு கொடுமைப்படுத்தினார்கள். ஒரு பெண்ணிடம் அந்த அதிகாரிகள் முலைவரி கேட்டு மிரட்டிய நிலையில் வரி கொடுக்க வழியில்லாததால் அந்தப் பெண் தன்னுடைய மார்பை அறுத்து வாழை இலையில் வைத்து அந்த அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு இறந்து போனார். அந்த ஊர் ~முலைச்சிப்பறம்பு| என்ற பெயரில் இன்னமும் கேரளாவில் இருப்பதாக நாராயணகுருவின் வாழ்க்கை வரலாறு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
அண்ணல் அம்பேத்கர் அவர்களே வெளிநாடு சென்று படித்து வந்து பரோடா சமஸ்தானத்தில் இராணுவச் செயலாளராகப் பணியாற்றியபோது அவரை இன்னார் என்று தெரிந்துகொண்டவர்கள் அவருக்கு குடியிருக்க உணவு விடுதிகளிலோää தங்கும் விடுதிகளிலோ இடம் தர மறுத்துவிட்டார்கள். ஒரு பார்சி நடத்தும் சத்திரத்தில் தனது சாதியைக் கூறாமல் தீண்டத்தக்கவர்போல் காட்டிக்கொண்டு சாதியை மறைத்துத் தங்குகிறார். சில நாட்களிலேயே அந்தப் பார்சிக்கு அம்பேத்கர் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்று தெரிந்துவிடுகிறது. உடனே அவர்கள் தங்கள் சத்திரத்தின் புனிதம் கெட்டுவிட்டதாகக்கூறி அம்பேத்கரின் சாமான்களையெல்லாம் தூக்கி வெளியில் எரிந்துவிடுகிறார்கள்.
அம்பேத்கர் ஒரு மரத்தடியில் நின்று தேம்பித் தேம்பி அழுகிறார்.
எவ்வளவோ எதிர்ப்புக்களைத் தனது வாழ்நாளில் சந்தித்திருந்தாலும்ää அமெரிக்காவிலும்ää இலண்டனிலும் சென்று கல்வி கற்று மன்னரின் இராணுவச் செயலாளராகப் பணியாற்றிய நிலையிலும் படிப்பறிவில்லாத அறிவற்ற ஜனங்கள் மேல்ஜாதி என்கின்ற ஆணவத்தில் தன்னிடம் நடந்துகொண்ட முறையை எண்ணிப் பார்க்கிறார். படித்த பட்;டம்பெற்ற தனக்கே இந்த நிலையென்றால்ää கல்வி அறிவு மறுக்கப்பட்டுää சேரிகளிலும் ஒதுக்குப் புறங்களிலும் ஒதுக்கப்பட்டுää புறக்கணிக்கப்பட்ட தன்னுடைய மக்களின் நிலையை எண்ணிப் பார்த்த அவருக்கு கண்ணிலிருந்து பொலபொலவெனக் கண்ணீர் கொட்டுகிறது.
இதுபோன்ற அவமானங்களெல்லாம் இராம. கோபாலன்களுக்கு எங்கே தெரியப் போகிறது? அதனால்தான் தீண்டாமை என்பதை உடையில்பட்ட தூசுபோல நினைத்து இந்துமதத்தில் தீண்டாமையே இல்லையென்ற தோற்றத்தை உருவாக்க முயலுகிறார்.
தீண்டாமைக்கு அம்பேத்கர் காட்டும் ஆதாரம்:
இவ்வளவு கொடுமைகளும் தாழ்த்தப்பட்டவர்கள் அனுபவிப்பதற்குக் காரணம் தீண்டாமைää தீண்டாதோர் குறித்து இந்துக்களின் கடமையாக மனுதர்மம் வெளிப்படுத்தும் விதிகள்தான் காரணம் என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மிகவும் ஆணித்தரமாகவும் ஆதாரபூர்வமாகவும் சுட்டிக் காட்டுகிறார்.
1) ~பிரம்மத்தின் வாய்ää தோள்; தொடைää பாதங்கள் ஆகியவற்ற்pலிருந்து தோன்றியவர்களின் சமுதாயத்திற்கு வெளியில் உள்ள எல்லா இனக் குழுக்களும்ää அவர்கள் மிலேச்சர்களின் (நாகரிகமற்றவர்களின்) மொழியைப் பேசினாலும் ஆரியர்களின் மொழியைப் பேசினாலும் அவர்கள் தஸ்யூக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். (மனு அத்-10ää சுலோகம் 45)
2) இவர்கள் அனைவரும் பட்டணத்துக்கும் ஊருக்கு வெளியிலும் மரத்தடிää தோப்புää மயானத்துக்குச் சமீபமான இடம்ää மலைää பூந்தோட்டம் இவைகளில் அனைவருக்கும் இவர்கள் இன்ன தொழிலாளி என்று தெரியும்படி தன் தொழிலைச் செய்துகொண்டு வசிக்க வேண்டும். (மனு அத்-10ää சுலோகம் 50)
3) ஆனால் சண்டாளர்களும் ஸ்வாபவர்களும் வசிக்குமிடம் கிராமத்திற்கு வெளியே இருக்க வேண்டும். அவர்களுடைய செல்வம் நாய்களும் கழுதைகளும் ஆகும். (மனு அத்-10ää சுலோகம் 51)
4) அவர்களின் உடைகள் இறந்தவர்களின் துணிகளே ஆகும். தங்கள் உணவை உடைந்த தட்டுக்களில் இருந்து அவர்கள் உண்பார்கள். கரும் இரும்பே அவர்களது அணிகலன். அவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குத் திரிந்துகொண்டே இருக்க வேண்டும். (மனு அத்-10ää சுலோகம் 52)
5) சமயக் கடமைகளை நிறைவேற்றுபவர்கள் அவர்களுடன் உடலுறவை நாடக்கூடாது. அவர்களின் திருமணங்கள் அவர்களுக்குச் சமமானவர்களுடனேயே இருக்கும். (மனு அத்-10ää சுலோகம் 53)
6) அவர்களின் உணவு அவர்களுக்கு (ஆரியர் தவிர) மற்றவர்களால் உடைந்த தட்டில் கொடுக்கப்படும். இரவில் அவர்கள் கிராமங்களிலும் நகரங்களிலும் நடந்துசெல்லக் கூடாது. (மனு அத்-10ää சுலோகம் 54)
7) பகலில் அவர்கள் மன்னனின் கட்டளைப்படி அடையாளக் குறிகளுடன் தங்கள் வேலைகளைச் செய்ய வேண்டும். உறவினர் இல்லாத மனிதர்களின் சவங்களை அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும். இது முடிவான விதியாகும். (மனு அத்-10ää சுலோகம் 65)
8) மன்னனின் உத்தரவுப்படி அவர்கள் குற்றவாளிகளுக்கு சட்டத்தின்படி மரணதண்டனையை நிறைவேற்றுவார்கள். அந்தக் குற்றவாளிகளின் துணிகள்ää படுக்கைகள்ää அணிகலன்கள் ஆகியவற்றை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். (மனு அத்-10ää சுலோகம் 56)
9) மிகத் தாழ்ந்த சாதிப்பெண்ணுடன் தொடர்பு கொண்டவன் கொல்லப்படுவான் (விஷ்ணுபுராணம் அத்-5ää சுலோகம் 43)
10) ஒரு சண்டாளன் அல்லது வேறு தாழ்ந்த சாதியைச் சேர்ந்த தீண்டத்தகாதவன் வேண்டுமென்றே இருபிறப்பாளர்களாலேயே தீண்டத் தகுந்த (இருபிறப்புச் சாதியைச் சேர்ந்த) ஒருவனைத் தொட்டுவிட்டால் அப்படிச் செய்தவன் கொல்லப்படுவான்.
மனுவின் இந்த விதிகளைப் படிப்பவர்கள்  எவரேனும் இந்துமதம்தான் தீண்டாமையை நிரந்தரமாக்கியது என்பதையும்ää தீண்டாதோரைப் பொறுத்த அளவில் இந்துக்களின் மனச்சாட்சியற்ற தன்மைக்கும் சட்டவிரோத மனப்பான்மைக்கும் பொறுப்பு என்பதையும் மறுக்க முடியுமா?
ஏற்கனவே விவரித்தபடி இந்துக்களால் தீண்டாதோர் அனுபவித்து வந்த கொடுமைகளுடன் இந்த பத்து விதிகளை ஒப்பிட்டால் இந்துக்கள் மேற்கண்ட செயல்களை இந்த விதிகளைப் பின்பற்றித்தான் செய்து வந்துள்ளார்கள் என்பது விளங்கும். ஒரு இந்து தீண்டாதானைத் தீண்டாமல் இருப்பதற்கும் தீண்டாதான் தீண்டினால் குற்றம் என்று கருதுவதற்கும் மேற்கண்ட விதிகளான
சமயக் கடமைகளை நிறைவேற்றுபவர்கள் அவர்களுடன் உடலுறவை நாடக்கூடாது. அவர்களின் திருமணங்கள் அவர்களுக்குச் சமமானவர்களுடனேயே இருக்கும். (மனு அத்-10ää சுலோகம் 43)
ஒரு சண்டாளன் அல்லது வேறு தாழ்ந்த சாதியைச் சேர்ந்த தீண்டத்தகாதவன் வேண்டுமென்றே இருபிறப்பாளர்களாலேயே தீண்டத் தகுந்த (இருபிறப்புச் சாதியைச் சேர்ந்த) ஒருவனைத் தொட்டுவிட்டால் அப்படிச் செய்தவன் கொல்லப்படுவான்.
ஆகிய விதிகளின்படிதான்.
இந்துக்கள் தீண்டாதோரை ஒதுக்கியே வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுவது மேற்கண்ட 3வது விதியான
சண்டாளர்களும் ஸ்வாபவர்களும் வசிக்குமிடம் கிராமத்திற்கு வெளியே இருக்க வேண்டும். அவர்களுடைய செல்வம் நாய்களும் கழுதைகளும் ஆகும். (மனு அத்-10ää சுலோகம் 51)
என்ற விதியின்படிதான். தீண்டாதோர் சொத்து சேர்ப்பதை இந்துக்கள் சகிக்காது இருப்பதற்குக் காரணமும் இந்த விதியின்படிதான்.

தீண்டாதோர் ஆடை அணிகலன்கள் அணியக்கூடாது என்பதற்குக் காரணம் 8வது விதியான
மன்னனின் உத்தரவுப்படி அவர்கள் குற்றவாளிகளுக்கு சட்டத்தின்படி மரணதண்டனையை நிறைவேற்றுவார்கள். அந்தக் குற்றவாளிகளின் துணிகள்ää படுக்கைகள்ää அணிகலன்கள் ஆகியவற்றை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். (மனு அத்-10ää சுலோகம் 56)

என்ற விதியின்படிதான்.

உண்மையில் இந்த விசயத்தைக் கஷ்டப்பட்டு அலசத் தேவையில்லை. தீண்டாதாரின் இந்த துரதிர்ஷ்டத்திற்குக் காரணம் இந்துமதமும் அதன் போதனைகளும்தான் தலையாய பொறுப்பு என்பதை மறுப்பதற்கு இடமில்லை
(அண்ணல் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 9 பக்கம் 137ää138)
என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மிக ஆணித்தரமாக இந்துமதம்தான் தீண்டாமைக்குக் காரணம் என்பதை அடித்துச் சொல்கிறார்.

ஆனால் இந்துமதத்தைக் காப்பாற்றப் புறப்பட்டதாகச் சொல்லிக் கொள்ளும் இராம கோபாலன்ää இல.கணேசன் போன்றவர்கள் இந்தத் தீண்டாமையை நியாயப்படுத்த முடியாமல் தீண்டாமைக்கு இந்துமத சாஸ்திரங்களில் ஆதாரம் இல்லை என்று அப்பட்டமாகப் பொய் சொல்லுகிறார்கள்.

தீண்டாமைக்கு ஆதாரமாக தந்தை பெரியார் காட்டும் காரணம்:
;இந்துமதம் என்பதே தீண்டாமையின்மீது கட்டப்பட்டதுதான். இந்துமதத்திலுள்ள அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் வருகின்றபொழுது பார்ப்பனர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று அற்குத் தடை வாங்குகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்ன?

பார்ப்பனரைத்தவிர பிற ஜாதியார் ஆண்டவன் சிலையைத் தொட்டுவிட்டால் அது தீட்டாகிவிடும் என்பதுதான். அதற்கு அவர்கள் ஆகமங்களையும் வேதங்களையும் ஸ்ருதிää ஸ்மிருதி போன்றவற்றைக் கராரணம் காட்டுகிறார்கள்.
 “வைகானச ஆகமத்தில்” உள்ள பிருகு சம்ஹிதையின் கிரியாதிகாரம் பற்றிய 24வது அத்தியாயத்தில் தரப்பட்டிருக்கும் பிராயச்சித்தம் மீதான ஒரு குறிப்பு:

1.அர்ச்சக அன்யாத்லி ஜைஹி ஸ்புருஷ்டே சுத்தோடை ரபிஷ்சாயேத்
சபத்பிஹி சத்ரியைஹி ஸ்புருஷடே காலாசைஹி ஸ்னபாயேத்தரிம்.
பொதுவழிபாட்டுக்குரியதான கோயில்களில் கடவுளின் உருவத்தையோää சிலையையோ அல்லது பிற இதுபோன்ற உருவத்தையோ (கோயில் சடங்குகளை அதிகாரப்பூர்வமாக நடத்தி வைப்பவரான) அர்ச்சகர் தவிரää பிற பிராமணன் எவனாவது தொட்டுவிட்டானானால்ää பின்னர் அந்தச் சிலையோ அல்லது உருவமோ தூய நீரினால் சம்ப்ரோட்சணம் செய்யப்பட வேண்டும்.
சத்திரியர்களால் (போர்வீரர்ää (ராஜ) சாதி) தொடப்பட்டு விட்டதானால்ää பின்னர் ஏழு கலசங்களை வைத்து முறைப்படி வணங்கியபின்ää சம்ப்ரோட்சணம் செய்யப்பட வேண்டும்.
2. ஸ்டிபாயேத் வைஸ்யா சமஸ்பர்ஷாய் சதுர்விம் சதிபிஸ்ததா.
சாந்திஹோமம் சா ஜூஹ_யாத் சக்திதோ போஜ யேத்த்விஜன்.
வைசியர்களால் (வர்த்தக சமூகம்) தொடப்பட்டு விட்டதானால்ää பின்னர் இருபத்தி நாலு கலசங்களை வைத்துää முறைப்படி வணங்கியபின் பிம்பங்களுக்குச் சம்ப்ரோட்சணம் செய்யப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து சாந்திஹோமமும் பிராமணபோஜனமும் செய்யப்பட வேண்டும்.

3. அஷ்டோத்ர சதாய்ஹி சூத்ரைஹி சமஸ்புர்சே ஸ்னாபயேத் தடோ.
மகாசாந்திம் ததா ஹ_த்வா பிராமணானி போஜயேத்.
ஸ்புர்வைஹி அனுலோனயஹி சூத்ரோத பிராயஸ் சமாச்சரேத்.
சூத்திரர்களால் (நாலாவதான உழைக்கும் சமூகம்) தொடப்பட்டு விட்;டதானால்ää பின்னர் நூற்றியெட்டுக் கலசங்களை வைத்துää முறைப்படி வணங்கியபின்ää பிம்பங்களுக்குச் சம்ப்ரோட்சணம் செய்யப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து மகாசாந்தி ஹோமமும்ää பிராமணபோஜனமும் செய்யப்பட வேண்டும். அனுலோமர்களால் தொடப்பட்டு விட்டதானால்ää பின்னர் பிராயச்சித்தம்ää சூத்திர ஸ்பர்ஷத்துக்கு விதிக்கப்பட்டிருப்பதுபோல் செய்யப்பட வேண்டும்.
(அனுலோமர் : தீண்டத்தகாதவர்)

இதிலே சூழ்ச்சியாக இன்றைக்கும்கூட பார்ப்பனர்கள் சொல்லுகின்ற காரணம் மற்ற ஜாதிக்காரர் மட்டுமல்ல அர்ச்சகர் தவிர பிற பார்ப்பனர்கள் தொட்டுவிட்டாலும் தீட்டு என்று புகுத்தி வைத்திருக்கிறார்கள். அது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் தெரியுமா? மற்றவர் தொட்டுவிட்டால் தீட்டு என்பவர்கள் அந்தத் தீட்டைப் போக்குவதற்கு பரிகாரம் வைத்திருக்கிறார்கள் பாருங்கள். அதிலேதான் அவர்களது சூழ்ச்சி இருக்கிறது. அதிலே ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று சொல்லக்கூடிய அளவுக்கு பேதங்களைப் புகுத்தி இருக்கிறார்கள்.

பார்ப்பன சூழ்ச்சி நரித்தந்திரம் அதில்தான் அடங்கியிருக்கிறது. அர்ச்சகன் அதே ஜாதியானதால்ää அவர்களைப் பொறுத்து ஒரு குறிப்பை அதில் இணைத்துக் கொள்வதால் அவர்களுக்கு நட்டம் எதுவும் இல்லை. பொதுவாக அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டதுபோல் ஒரு பிரமை ஏற்படுத்த அது உதவும் என்பதால்தான் அதனைப் புகுத்தியுள்ளார்கள்.

இதில் கவனிக்கப்பட வேண்டியதுää நாலு சாதியினரும்ää நாலாஞ்சாதியினரும் இழிந்த அனுலோமசாதியினரும் அதில் தனித்தனியாகக் குறிப்பிடப் பட்டிருப்பதும்ää பிராமணரால் தீட்டு ஏற்பட்டு விட்டால்ää வெறும் தண்ணீர் ஊற்றிவிட்டால்ää சிலை மீண்டும் புனிதமாகிவிடும் என்பதும்ää அதே காரியத்தை சத்திரியன் செய்தால் ஏழு கலசம் வைக்கவும்ää வைசியன் செய்துவிட்டால் 24 கலசமும் சாந்திஹோமமும்ää பிராமணர்க்குப் போஜனமும் நடத்தப்பட வேண்டும். என்றும்ää சூத்திரன் செய்துவிட்டால் 108 கலசமும்ää மகாசாந்தி ஹோமமும்ää பிராமணப் போஜனமும் செய்விக்கப்பட வேண்டும் என்பதும் சாதி தர்மத்தைக் கட்டிக் காக்கும் ஏற்பாடு என்பதோடு தீட்டு என்பதற்கான ஆதாரமாகவும் இந்த ஆகமம் விளங்கவில்லையா?
~தீட்டு|ப்பட்டு விட்டால் அதற்குப் பரிகாரம் பிராயச்சித்தம் சாதிக்குச் சாதி வேறுபடுவானேன்?

(ஆதாரம் : தந்தை பெரியார் எழுதிய ~கோயில் பகிஷ்காரம் ஏன்?| என்ற நூல்)

இந்த ஆகமவிதியின்படிதான் மகாராஷ்டிரா மாநிலம் மகாத் நகராட்சிக்குச் சொந்தமான குளத்தில் அண்ணல் அம்பேத்கரும் அவர்தம் தொண்டர்களும் நீர் அருந்தினார்கள் என்பதற்காக அந்தக் குளம் தீட்டாகி விட்டதாகக் கூறி ஆயிரத்தி எட்டுக் குடங்களில் மாட்டுச்சாணம்ää மாட்டின் சிறுநீர்ää பால்ää தயிர் என அனைத்தையும் கலந்து அதனைக் குளத்தில் கரைத்து தீட்டுப் போக்கினார்கள்ää அது தீண்டாமை இல்லையா?
பார்ப்பனர்களின் பித்தலாட்டம்:

இதுபோல இன்னும் பல ஆதாரங்கள் தீண்டாமைக்கு இந்துமத சாஸ்திரங்களில் புதைந்து கிடக்கிறபோது அதையெல்லாம் மறைத்துவிட்டு இராம கோபாலன்கள் தீண்டாமைக்கு இந்துமத சாஸ்திரங்களில் ஆதாரமே இல்லை என்பது இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் நமது மக்களைப் பாமரர்களாக நினைத்துக் கொண்டு எதைச் சொன்னாலும் இம்மக்கள் நம்புவார்கள் என்ற எண்ணம்தானே? படிப்பறிவில்லாத காலத்தில் பாமரனாக இருந்தபோது இந்த சமுதாயம் உங்கள் பித்தலாட்டத்தை நம்பி இருக்கலாம். தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் பெருந்தலைவர் காமராசரும் எங்களுக்குக் கல்வி கிடைக்கப் பாடுபட்டு அந்த உரிமையைப் பெற்றுத் தந்துள்ள காலத்தில் இந்த பித்தலாட்டம் எடுபடாது என இராம.கோபாலன்களுக்கும் இல.கணேசன்களுக்கும் தெங்கடிஜிக்களுக்கும் எச்சரிக்க விரும்புகிறோம்.

இந்தத் தீணடாமைதான் இந்துமதத்தின் ஆணிவேர். இந்தத் தீண்டாமையின் கொடுமையை மனிதாபிமானமுள்ள எவராலும் நியாயப்படுத்த முடியாது.

அதனையே நியாயப் படுத்தியவர்கள்தான் திலகர் போன்றவர்கள். அந்தத் திலகரை வழிகாட்டியாகக் கொண்டவர்கள்தான் இராம.கோபாலனும்ää இல.கணேசன்ää சோ.ராமசாமிää தெங்கடி போன்றவர்கள்.

இவர்களால் நடமாடும் தெய்வம் என்று வணங்கப்படுபவர் சங்கராச்சாரி. இவர்தான் தனது தெய்வத்தின் குரல் என்ற நூலில் தீண்டாமை சேமகரமானது என்று எழுதியவர்.
அவர்கள் வழிவந்த இராம கோபாலன்கள் இந்துமதத்தைக் காப்பாற்றப் புறப்பட்டதாகத் தம்பட்;டமடிப்பவர்கள். இந்த நாட்டில் பிராமணர்கள் செய்த கொடுமையினால்தான் பிராமணரல்லாதார் அனைவருமே கல்வி மறுக்கப்பட்டுää வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் நலிவுற்று இருந்தார்கள் என்ற வரலாற்றை ஒத்துகொண்டால் தங்களுடைய ஆதிக்கம் பறிபோய்விடுமே என்பதால் அதனைத் திசைதிருப்பி முஸ்லிம்களால்தான் இந்த நாடு கெட்டுப்போனதாகவும் அவர்கள்தான் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் அவர்கள்தான் இந்த நாட்டின் எதிரிகள் என்றும் மதவெறியைத் தூண்டி குளிர்காய்ந்து வருகிறார்கள்.

அந்த இஸ்லாமியர்களை எதிர்த்து நேரடியாகப் போராடுவதற்கு பார்ப்பனர்களால் இயலாது. அதற்கு மதவெறியைத் தூண்டிவிட வேண்டும். பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை அதற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு. அதனால் அந்தத் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில்தான் தீண்டாமையை நாங்களும் ஒழிக்கப் புறப்பட்டுள்ளோம் என்று ஏமாற்றுகிறார்கள்.
அந்தத் தீண்டாமையை ஒழிக்க வேண்டுமானால் ஜாதியை  ஒழிக்க வேண்டும். அந்த ஜாதியை ஒழிக்க வேண்டுமானால் வருணாசிரமத்தை ஒழிக்க வேண்டும். அந்த வருணாசிரமத்தை ஒழிக்க வேண்டுமானால் அவற்றைப் பாதுகாக்கின்ற மனுதர்மத்தையும் புராணங்களையும்ää இதிகாசங்களையும்ää சாஸ்திரங்களையும்ää சடங்குகளையும் ஒழிக்க வேண்டும்ää இந்த சடங்குகளையும் சாஸ்திரங்களையும் ஒழித்து விட்டால் இவர்களது இந்து மதமே ஒழிந்துவிடும். அப்படி இந்துமதம் ஒழிந்துவிட்டால் இவர்கள் பார்ப்பான் என்கின்ற உயர்ந்த அந்தஸ்து ஒழிந்துவிடும். அப்படி ஒழிந்துவிட்டால் உழைக்காமலேயே உண்டு கொழுக்கும் அந்த வாய்ப்புப் பறிபோய்விடும்.

பார்ப்பனர்கள் வயலில் இறங்கி வேலைசெய்வதில்லை. உழவுத்தொழில் பாவம் என்று மனுதர்மத்தில் எழுதி வைத்துக் கொண்டார்கள். அதனால் ஏர்பிடிக்கும் பார்ப்பானை அவர்கள் சாதிவிலக்கம் செய்து வைத்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு முனைமுறியாமல் பச்சரிசியும் பருப்பும் நெய்யும் காய்கறியும் பழங்களும் நோகாமல் கிடைக்கிறது.

அவர்கள் சித்தாள் வேலை செய்வதில்லை. கொத்தனார் வேலை பார்;ப்பதில்லை. ஆனாலும் அவர்கள் குடியிருக்க மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும் சொகுசாகக் கிடைக்கிறது.
அவர்கள் நெசவு நெய்வதில்லை. ஆனாலும் பட்டும் பீதாம்பரமும் நகைகளும் அணிகலனும் அலுங்காமல் கிடைக்கிறது. அவர்கள் முடிவெட்டுபவனையும் துணிவெளுப்பவனையும் இழிவாகச் சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கு அழுக்கில்லாத துணியும் அழகான முகமும் கிடைத்து விடுகிறது. அவர்கள் செருப்புத் தைப்பதில்லை. ஆனால் கம்பீரமாக ஷ_வும் பாதணிகளும் கணக்காகக் கிடைத்து விடுகிறது. இவர்கள் வீட்டுச் சாக்கடைப் பக்கம் வந்தாலே நாற்றம் குடலைப்பிடுங்கும். அவர்களுக்குச் சம்மந்தமில்லாத யாரோ வந்து அதனைச் சுத்தம் செய்து கொடுத்து விடுகிறார்கள். அவர்கள் செத்தாலும் நாறிப்போகாமல் அவர்களை எறிக்கப் புதைக்க ஏராளமானவர் இருக்கிறார்கள்.

விதைக்காமல் விளையும் கழனி என்று சொல்வதுபோல் எதுவுமே செய்யாமல் அனைத்துவித சுகபோகங்களையும் ஆண்டு அனுபவிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இந்த ஜாதிதானே?
அந்த ஜாதி ஒழிந்துவிட்டால் இந்த சுகபோகங்களெல்லாம் எப்படித் தானாகக் கிடைக்கும்?

பார்ப்பனர்களிலும் ஏழைகள் இருக்கிறார்கள். அவர்களும் வறுமையில் வாடுகிறார்கள். அதனால் பொருளாதார அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இன்று சிலபேர் பேசி வருகிறார்கள். எவ்வளவு ஏழையாக இருந்தாலும்ää வறுமையில் வாடினாலும் பிச்சை எடுத்து உண்டாலும் உண்பார்களே தவிர இன்னமும் வயலில் பயிர் நடுவதற்குää களை பறிப்பதற்கு எந்த பார்ப்பனப் பெண்ணும் வரமாட்டார். எந்தப் பார்ப்பானும் ஏர் பிடிக்க வரமாட்டான். சித்தாள் வேலைக்கும் கொத்தனார் வேலைக்கும் வர மனம் இடம் தராது.

சொர்க்க வாழ்வு வாழ்ந்து வரும் இவர்கள் தங்களுக்கு இவ்வளவு வசதிகளையும் வாய்ப்புக்களையும் உருவாக்கித் தரும் மக்களை எப்படி நடத்துகிறார்கள்? சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும் கேவலப்படு:த்துகிறார்கள். இவர்களுக்காக உழைக்கும் மக்களுக்கு இவர்களைப்போல் சுகபோகம் கிடைப்பதில்லை. அவர்களுக்குக் கிடைக்கும் வாழ்வு நரகவாழ்வு. அதனால்தான் அண்ணல் அம்பேத்கர் சொன்னார் ~இந்துமதம் உயர்ஜாதி மக்களின் சொர்க்கம்@ கீழ்ஜாதி மக்களின் நரகம்| என்று.

அந்த நரக வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைப் பற்றி அவர்கள் கொஞ்சமும் சிந்திப்பதில்லை. அந்த நரகவாழ்வைப் போக்க வேண்டும் என்று இந்தப் பார்ப்பனர்கள் முயற்சிப்பதில்லை. ஜாதியையும்ää தீண்டாமையையும் ஒரு கொடுமையாகவே அவர்கள் உணருவதில்லை.

ஆனால் தீண்டாமையை ஒழிக்கப் போவதாக மட்டும் பம்மாத்து வேலை செய்வார்கள்.

மதவெறி ஊட்டப்படும் தீண்டத்தகாதவர்கள்
ஆனால் இந்த ஜாதியையும் தீண்டாமையையும் பாதுகாக்கின்ற மனுதர்மத்தை இந்த நாட்டின் சட்டமாக ஆக்க வேண்டும் என்று சொல்பவர்கள் இந்த நாட்டின் ஆர்எஸ்எஸ்ää இந்து முன்னணிää விஸ்வ ஹிந்து பரிஷத்ää போன்ற சங் பரிவார் அமைப்புக்கள்.
இந்த அமைப்புக்களுக்கெல்லாம் முன்னோடியான திலகர் பெருமான் அவர்கள் இந்திய நாடு சுதந்திரம் அடைந்த உடன் இந்த நாட்டு அரசியல் சட்டமாக மனுதர்மம்தான் ஆக்கப்பட வேண்டும் என்றவர்.  அதனைக் கொள்கையாகக் கொண்டதுதான் ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி ஆகிய அமைப்புக்கள். ஆர்எஸ்எஸ்ஸின் ஊர்வலங்களில் மனுதர்மம் அலங்கரித்து எடுத்துச் செல்லப்படுகின்றது. பிஜேபியினுடைய வழக்கறிஞர் அணியில் மனுதர்மத்தை சட்டமாக ஆக்கப்பட வேண்டும் என்று தீர்மானங்கள் இயற்றப்படுகின்றன. பிஜேபி அரசாங்கம் 1996 முதல் இந்த நாட்டை ஆண்டபொழுது அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக வெங்கடாஜலய்யா என்பவர் தலைமையில் ஒரு குழு அமைத்து இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று முயற்சித்தது.

அந்தத் திலகர்பெருமானால் அறிமுகம் செய்யப்பட்ட பிள்ளையார் ஊர்வலத்தை தமிழ்நாட்டில் நடத்தி மதக்கலவரத்தைத் தூண்டுவதற்குக் காரணமாக இருப்பவர்தான் இராம.கோபாலன். ஊர்வலத்தை இஸ்லாமியர் அதிகம் இருக்கும் தெருக்கள் வழியாகச் செல்ல வேண்டும் என்றும் மசூதிகள் வழியாகச் செல்ல வேண்டும் என்றும் அடம் பிடிக்கும் சிறுபிள்ளைத்தனமான செயலைச் செய்பவர்தான் இராம.கோபாலன். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மசூதி வழியாகத்தான் செல்லுவேன் என்று அடம் பிடிப்பதும் காவல்துறை கைது செய்வதும் ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையான ஒன்று.

அந்த ஊர்வலம் செல்லுகின்றபொழுது அதில் மேளதாளம் இசைத்துக் கொண்டு செல்வார்கள். இஸ்லாமியர் சில இடங்களில் மேளம் அடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். அப்படி எதிர்க்கின்றபொழுது மேளம் அடித்து வரும்

தாழ்த்தப்பட்டவர்களைத் தூண்டிவிட்டு இஸ்லாமியருக்கு எதிராக அவர்களை வன்முறைக்களத்தில் பயன்படுத்தி வருவது இந்துமுன்னணி இராம.கோபாலன் வகையறாக்கள்.
அந்தத் தீண்டத்தகாதவர்களிடம் இந்துமதத்தில் உள்ள தீண்டாமை காரணமாக அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை எடுத்துச் செல்லுகின்றபொழுது ~இஸ்லாமியர் வாழும் தெருக்களிலும் மசூதியிலும் மேளம் அடிக்க இயலவில்லை என்று ஆத்திரப்படும் தீண்டத்தகாத மக்களே! உங்களை இந்துக்கள் என்று சொல்லுகின்ற மக்களே இந்துக்களான உங்களை அவர்கள் வீதியில் நடக்க அனுமதிக்கிறார்களா? என்று அவர்களது சிந்தனையைத் தூண்டுகின்றபொழுதுதான் இராம கோபாலன்கள் நாங்களும் தீண்டாமையை ஒழிக்கப் பாடுபடுகிறோம் என்று ஏமாற்றுகிறார்கள்.

இராமகோபாலனின் ஏமாற்றுத் தந்திரம்:
தீண்டாமையை ஒழிக்க இராம கோபாலன் ஒரு அய்டியா சொல்கிறார் பாருங்கள். அது தீண்டாமையை ஒழிக்கவா? பாதுகாக்கவா? என்பது புரியும்.

அதாவது ~பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அரிஜன தம்பதியரை வீட்டுக்கு அழைத்து அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டுää நமது சகோதரி வீட்டுக்கு வந்துபோகும்போது எப்படி உபசரிப்போமோ அப்படி உபசரித்து அனுப்ப வேண்டும்| என்று அய்டியா சொல்லுகிறார்.

இதுதான் தீண்டாமையை ஒழிக்க இராம.கோபாலன் சொல்லும் அய்டியா. இதனால் எப்படி தீண்டாமை ஒழியும் என்பதுதான் நமக்கு விளங்கவில்லை.

தீண்டத்தகாதவன்தான் பார்ப்பான் வீட்டில் சாப்பிட மாட்டேன் என்று சொல்கிறானா? அவர்களுக்கு பார்ப்பான் சாப்பாடு போடுவதால் எப்படி தீண்டாமை ஒழியும்? தீண்டத்தகாதவர் வீட்டுக்கு நாமெல்லாம் செல்லுவோம். அங்கே தாழ்த்தப்பட்ட சகோதரியைச் சமைக்கச் சொல்லி பார்ப்பனர்கள் எல்லாம் சாப்பிடுவோம் என்று பார்ப்பனர்களிடம் சொன்னாலாவது ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பார்ப்பனர் வீட்டில் தீண்டத்தகாதவருக்கு சாப்பாடு போட்டால் தீண்டாமை ஒழியும் என்று சொல்கிறாரே அதுதான் நமக்குப் புரியவில்லை.
இவர்கள் பிராமணராகவே இருப்பார்கள். தீண்டத்தகாதவன் தீண்டத்தகாதவனாகவே இருப்பான். அதற்கான ஏறபாட்டைத்தான் இராம.கோபாலன் சொல்கிறார்.

தீண்டத்தகாதவனுக்கு மனுதர்மம் அளித்திருக்கும் ஒரே உரிமை பிச்சை எடுத்து உண்பதுதான். மனு அத்தியாயம் 10 சுலோகம் 54ன்படி பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் தீண்டத்தகாதவர்களுக்கு உடைந்த தட்டில் உணவளிக்க வேண்டும் என்று கூறுகிறது.
இதன்படி பிச்சை எடுத்து உண்பதுதான் ஆறுகோடி தீண்டத்தகாத மக்களின் முதன்மையான வாழ்க்கை ஆதாரமாக இருந்ததாக அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார். மேலும் கிராமத்தில் வழக்கமான உணவு நேரத்துக்குப்பின் சென்று பார்த்தால் தீண்டத்தகாதவர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று இதைச் சொல்லிக்கொண்டு பிச்சை கேட்பதைக் காணலாம் என்று அம்பேத்கர் கூறுகிறார்.
அந்த உரிமையை நிலைநாட்டத்தான் இராம கோபாலன் அரிஜன தம்பதியை அழைத்து பண்டிகை நாட்களில் உணவு வழங்கவேண்டும் என்கிறாரா? இதில் ஒன்றும் புதுமை இருப்பதாகத் தெரியவில்லையே! பொதுவாகவே கிராமங்களில் தன்னிடம் வேலைசெய்யும் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்து அவர்களது பண்ணையார்கள் சாப்பாடு போட்டு துணிமணி வாங்கிக் கொடுத்து அனுப்புவது காலம் காலமாக நடந்து வருவதுதான். இது எப்படித் தீண்டாமையை ஒழிக்கும் என்று இராம கோபாலனுக்கு உதித்ததோ தெரியவில்லை.

இதிலிருந்து ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. தீண்டாமை ஏதோ தீண்டத்தகாதவரின் தவறினால் அல்லது குறைபாட்டினால்தான் ஏற்பட்டதுபோலவும் தீண்டத்தகாதவர்கள்தான் அவர்களது நிலைமைக்குக் காரணம் என்பதுபோலவும் சீர்திருத்தப்பட வேண்டியவர்கள் தீண்டத்தகாதவர்களே தவிர உயர்ஜாதி இந்துக்களைத் திருத்துவதற்கு ஏதுமில்லை. அவன் மனம் பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுக்கரீதியாக மிகவும் நன்றாக இருக்கிறார்கள். அவன் முழுமை படைத்தவன் அவனிடம் எந்தக் குறையுமில்லை. அவன் பாவி அல்ல என்று தீண்டாதோரை கண்டு வருந்துவதாகக் கூறும் அனைவரும் கூறுவதாக அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். அதைப் போல தீண்டத்தகாத தம்பதியரை அழைத்து ஒருவேளை உணவு போட்டுவிட்;டால் தீண்டாமை ஒழிந்துவிடும் என்று இராம கோபாலன் சொல்கிறார்.
இன்னமும்கூட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் இல்லங்களில் நடக்கும் திருமணம் போன்ற சடங்குகளைச் செய்ய வரும் பார்ப்பனர்ää சமைக்காத பச்சரிசிää காய்கறிää கிழங்குää பழவகைகளைத்தான் வாங்கிச் செல்வாரே தவிர சமைத்த பொருளையோ புழுங்கலரிசியையோ கூட வாங்கிச் செல்லுவதில்லை. திருமண வீட்டில் பதினாறு வகைப் பதார்த்தங்களோடு சுவையான நெய்ää வடை பாயாசத்தோடு உணவு பரிமாறப்பட்டாலும் சடங்கு நடத்தவரும் எந்தப் பார்ப்பானும் அந்தப் பந்தியில் அமர்ந்து சாப்பிடுவதில்லை. தீண்டத்தகாதவன் வீட்டில் சாப்பிட்டால் எந்தப் பார்ப்பானாவது இறந்து விடுவானா? சாப்பாடு விஷம் ஆகி விடுமா? பிறகு ஏன் அவர்கள் தீண்டத்தகாதவன் வீட்டில் சாப்பிட மறுக்கிறான்? அதுதானே தீண்டாமை என்பது?

அந்தப் பர்ப்பனர்களுக்கு பார்ப்பனரல்லாதார் இல்லங்களிலே சென்று சாப்பிடுங்கள் என்று கோரிக்கையை விடுக்காமல் அரிஜன தம்பதியை அழைத்து விருந்து கொடுக்க வேண்டும் என்பது 21ம் நூற்றாண்டின் தலைசிறந்த நகைச்சுவை என்றுதான் சொல்ல வேண்டும். இராம.கோபாலன்கள் குறைந்தபட்சம் சங்கர மடத்தில் சமையல்காரனாக தாழ்த்தப்பட்ட சகோதரனை நியமிக்க வேண்டும் என்று போராடினாலாவது நாம்கூட அவருடன் அப்போராட்டத்தில் கலந்துகொள்ளலாம். இன்னமும் தீண்டாமையைப் பாதுகாக்கின்ற ஒரு மடமாக சங்கர மடம் விளங்கிக் கெண்டிருக்கிறது. அங்கு மீதமாகும் சாப்பாட்டைக்கூட மண்ணில் போட்டுப் புதைப்பார்களே தவிர பார்ப்பனரல்லாதாருக்கு அதனைச் சாப்பிடக் கொடுக்க மாட்டார்கன். இப்படி அப்பட்டமாக தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் மடத்தைக் கண்டித்து ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டார்கள்.

ஆனால் இந்துமதத்தைக் காக்கப் புறப்பட்டதாக சவடாலடிக்கும் இவர்கள் தீண்டாமைக்கு சாஸ்திரங்களில் இடமில்லை என்றும் தீண்டாமையை நாங்கள் ஒழித்து விடுவோம் என்றும் ஏமாற்றுகின்றார்கள்.

இராம கோபாலன் தமிழ்நாட்டில் இந்துமுன்னணி என்ற அமைப்பிற்குத் தலைமை தாங்குகிறார். அகில இந்திய அளவில் விஷ்வ இந்து பரிஷத் பஜ்ரங்தள் போன்ற அமைப்புக்களின் பெயரால் இந்துத்துவாவைக் காக்கப் புறப்பட்டதாகக் கூறிக்கொள்பவர்கள் இயக்கம் வைத்திருக்கிறார்கள். அந்த விஷ்வ இந்து பரிஷத்தினுடைய தலைவராக இருக்கிற அசோக் சிங்கால் தீண்டாமை குறித்து என்ன கூறுகிறார் தெரியுமா?
ஹரியானா மாநிலத்தில் இறந்துபோன பசுமாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக அய்ந்து தலித் இளைஞர்களை மதவெறியர்கள் கல்லாலேயே அடித்துக் கொன்று விட்டார்கள். ஒரு பசுவின் உயிரைவிடத் தாழ்த்தப்பட்டவன் உயிர் ஒன்றும் பெரிதல்ல என்று எக்காளமிட்டது அந்த மதவெறிக்கூட்டம்.
அப்பொழுது தீண்டாமை குறித்துக் கருத்துச் சொன்ன விஷ்வ ஹிந்த பரிஷத்தின் அகில உலகத் தலைவர் அசோக் சிங்கால் ஒரு பொன்மொழியை உதிர்த்தார். “தீண்டாமை கொடுமையானதுதான். அதற்காகத் தீண்டத்தகாதவர்கள் மதம் மாறுவது கூடாது. ஒரு இந்து தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார் எனில் அது அவரது பிறப்புரிமை. அவரை நான் ஒன்றும் குறை சொல்ல மாட்டேன்” என்று திருவாய் மலர்ந்தார்.

இதே கருத்தைக் கொண்டவர்தான் இராம.கோபாலன். இப்படிப்பட்டவர்களை இராம.கோபாலன் குறைகூற மாட்டார். தீண்டாமை சேமகராமனது என்று சொல்கின்ற சங்கராச்சாரியை இவர்கள் நடமாடும் தெய்வம் என்பார்கள். உலகத்திலேயே மிக உயர்ந்த சோப்புப் போட்டுக் குளித்தாலும் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக்கொண்டாலும் அவர்களது உடலிலுள்ள அழுக்கு வேண்டுமானால் போகலாமே தவிர அவர்களது பிறவியிலுள்ள அழுக்குப் போகாது என்று சொன்ன பூரி சங்கராச்சாரியை இராம.கோபாலன்கள் எதிர்த்துப் பேச மாட்டார்கள்.

அதே போல இன்னமும் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் மக்களிடம் சென்று தீண்டாமைக்கு இந்துமத சாஸ்திரங்களில் ஆதாரமில்லை. எனவேää தீண்டாமையைக் கடைப்பிடிக்காதீர்! என்று சொல்ல மாட்டார்கள். தருமபுரியில் ஒரு உயர்ஜாதி இந்துப் பெண்ணை தாழ்த்தப்பட்டவன் காதலித்தான் என்பதற்காக மூன்று கிராமங்களைத் தீவைத்துக் கொளுத்தி வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கினார்களேää அந்த ஊருக்கெல்லாம் சென்று தீண்டத்தகாதவன் என்பதற்கு ஆதாரம் இல்லை. அவனும் இந்துதான். இந்தப் பெண்ணும் இந்துதான். எனவேää அவர்கள் திருமணம் செய்து கொள்வது தவறு இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.

சங்கர் தயாள் சர்மா குடியரசுத் தலைவராக இருந்தபொழுது ஒவ்வொரு வாரமும் திருப்பதி கோயிலுக்கு வந்து தரிசித்து விட்டுச் செல்வார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான நிருவாகம் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தது. அவருக்குப் பிறகு மாண்பமை கே.ஆர் நாராயணன் அவர்கள் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார்கள். அவர் எங்கே சங்கர் தயாள் சர்மா போல திருப்பதிக்கு வந்துவிடப் போகிறாரோ என்ற அச்சத்தில் அவசர அவசரமாக திருப்பதி தேவஸ்தானம் இனி எந்த விஅய்பிக்களுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பதில்லை என்று தீர்மானம் போட்டது. இந்திய நாட்டின் முதல் குடிமகனாகக் கருதப்படும் குடியரசுத்தலைவராக இருந்தாலும் தீண்டத்தகாதவன் தீண்டத்தகாதவன்தான் என்பதுதானே அதன் பொருள்?

அந்த திருப்பதி தேவஸ்தானத்தை எதிர்த்து இராம.கோபாலன் கண்டனக்குரல் எழுப்பியதுண்டா? கிடையாது. தீண்டாமைக்கு இந்துமத சாஸ்திரங்களில் ஆதாரம் இல்லையென்றால் திருப்பதி தேவஸ்தானம் ஏன் அப்படித் தீர்மானம் இயற்றியது? அவர்கள் என்ன சாஸ்திரங்களைப்பற்றி அறியாதவர்களா?

தீண்டாமைக்கு ஆதாரம் இல்லை என்று தீண்டத்தகாதவர் மத்தியில் மாத்திரம் சொல்லி அவர்களை ஏமாற்றுவார்கள். ஏனெனில் அந்தத் தீண்டத்தகாத மனிதனை வைத்து இஸ்லாமியருக்கு எதிரான வன்முறையில் அடியாட்களாகப் பயன்படுத்தலாம் என்கிற கெட்ட எண்ணமே இதற்குக் காரணம்.

நம் நாட்டிலுள்ள இஸ்லாமியர் யாரும் அரேபியாவிலிருந்தோ துபாயிலிருந்தோ வந்தவர்களல்ல. நம்நாட்டில் பிறந்து இந்து மதத்தால் கீழ் ஜாதியாக்கப்பட்டு தீண்டத்தகாதவர்களாய் இழிவாக நடத்தப்பட்ட கொடுமை தாங்காமல் இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள்தான் அவர்கள். அதாவது இன்னமும் இந்துவாக இருக்கிற தாழ்த்தப்பட்ட இனத்தவனுடைய உறவினர்தான் அவர்கள். அவர்களெல்லாம் மதம் மாறிச் சென்றுவிட்டதால் தங்களுக்குத் தொண்டூழியம் செய்யும் அடிமைகளின் எண்ணிக்கை குறைந்துபோனதே என்கிற ஆத்திரத்தில் அவர்களைக் குத்த வேண்டும் கொல்ல வேண்டும்ää ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற வெறி பிறக்கிறது. அந்த வெறியில் தாமே களத்தில் நின்று அவர்களை எதிர்ப்பதற்குப் பதிலாக அவர்களது இனத்தவரைக் கொண்டே அவர்களைத் தாக்குவது மிகமிக எளிதல்லவா? அதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்களை ஏய்க்க முஸ்லிம்களுக்கு எதிரான வெறியைத் தூண்டி விடுகிறார்கள்.

முகமதியர்கள் இந்தியாவின்மீது படையெடுத்து வந்ததாகவும் இந்தியாவிலுள்ள செல்வங்களையெல்லாம் கொள்ளையடித்துச் சென்று விட்டதாகவும்ää இங்கு ஆட்சியைப் பிடித்து இந்துக்களையெல்லாம் இஸ்லாமியர் கொடுமைப்படுத்தியதாகவும் இந்துக்கள்மீது இஸ்லாமிய மன்னர்கள் வரிமேல் வரிபோட்டுக் கொடுமைப்படுத்தியதாகவும் வெறியினை ஏற்படுத்தி மதவெறியைத் தூண்டிக் குளிர்காய்வார்கள்.
அவர்களை எதிர்த்து யாரும் கேள்வி கேட்டுவிடாதபடி அம்மக்களை மதபோதை மதுபோதை ஆகிய போதையிலேயே ஆழ்த்தி வைத்திருப்பார்கள்.

முஸ்லிம்கள் நடத்திய ஆக்கிரமிப்புக்களோ கொலைகளோ கொள்ளைகளோ ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும்தான் நடந்திருக்க வாய்ப்புள்ளது. முன்னூறு ஆண்டுகளுக்கு மேல் இந்த நாட்டை ஆண்ட இஸ்லாமியர் நினத்திருந்தால் இந்த நாட்டு மக்கள் அனைவரையுமே கத்திமுனையில் மதமாற்றம் செய்திருக்க முடியும். அப்படி இல்லாமல் விருப்பப் பட்டவர்களை மட்டுமே தங்களுடைய மதத்தில் சேர்த்துக்கொண்டார்களே தவிர அனைவரையும் அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை. பார்ப்பனர் இந்த நாட்டுச் செல்வத்தைக் கொள்ளையடித்ததைவிட அதிகமாக எந்த முஸ்லிமும் இந்த நாட்டைக் கொள்ளையடித்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே கொள்ளையடித்திருந்தாலும் அதனை எந்த முஸ்லிமும் கடந்த காலத்தில் நிகழ்ந்த ஆக்கிரமிப்புக்களையோ கொள்ளைகளையோ கொடுமைகளையோ இன்று ஆதரித்துப் பேசுபவர் யாரும் கிடையாது.

ஆனால் இந்துமதத்தின் ஜாதிக் கொடுமைகளுக்குää தீண்டாமைக் கொடுமைகளுக்கு யாரும் இன்றுவரை பொறுப்பேற்றுக் கொள்ளாததோடு ஜாதியை இன்னமும் கடைப்பிடித்துக்கொண்டு தீண்டாமையையும் கடைப்பிடித்து வருபவர்கள் உயர்ஜாதி இந்துக்கள் ஆவார்கள். அந்தத் தீண்டாமையை இன்னமும் நியாயப்படுத்தியும் வருகிறார்கள்.

தீண்டாமை கொடுமையானது என்றால் அதனைக் கடைப்பிடிப்பவர்களும் கொடியவர்கள்தானே? அப்படியானால் அந்தக் கொடியவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது? எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இந்தத் தீண்டாமைக் கொடுமைக்கு அம்மக்கள் ஆளாகி இருப்பார்கள்.
ஒரு முன்னூறு ஆண்டுக்காலம் இஸ்லாமியர்களால் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறிக்கொண்டு முஸ்லிம் சமுதாயத்தையே அழிக்க வேண்டும் என்ற வெறியைத் தூண்டிவிடும் இராம.கோபாலன் அவர்களே! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டுக் கிடந்த மக்கள் கிளர்ந்தெழுந்தால் நீங்கள் என்ன ஆவீர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். அப்படிக் கிளர்ந்து எழுந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவர்களை ஏமாற்ற இந்துமத சாஸ்திரத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு ஆதாரம் இல்லை என்று கதை விடுகிறீர்கள்.

தீண்டாமைக்கு இந்துமத்தில் ஆதாரம் இல்லை என்றால் அது எப்படி வந்து புகுந்தது என்பதையாவது கூறமுடியுமா? உங்கள் மதம்தான் அர்த்தமுள்ள இந்துமதம் ஆயிற்றே! அதில் எப்படி யாருக்கும் தெரியாமல் தீண்டாமை உள்ளே புகுந்தது என்பதைக் கூறமுடியுமா? உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மதத்திலும் உங்கள் மனத்திலும் தீண்டாமையைப் புகுத்தியவன் இஸ்லாமியனா? கிறிஸ்துவனா? ஆங்கிலேயனா? ஜப்பான்காரனா? சீனாக்காரனா? யார் இந்தத் தீண்டாமையை உங்கள் மதத்தில் புகுத்தியது?
நீங்கள் புகன்றவை அனைத்தும் புளுகுகள் என்பதனை ஆதாரங்களோடு எடுத்து வைத்திருக்கிறோம். அதனை உங்களால் மறுக்க முடியுமா?

மனுதர்மத்தில் உள்ளதையும் சாஸ்திரங்களில் உள்ளதையும் ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொல்லி இருக்கிறோம். அந்த மனுதர்மம் ஜாதியையும் தீண்டாமையையும் பாதுகாக்கிறது என்பதனால்தான் ஜாதியையும் தீண்டாமையையும் ஒழிக்க உண்மையிலேயே பாடுபட்ட தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் அந்த மனுதர்மத்திற்குத் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.

எனவேää தீண்டாமைய ஒழிக்க வேண்டுமானால் அதற்கு ஆதாரமாக உள்ள ஜாதியை ஒழிக்க வேண்டும். ஜாதியை ஒழிக்க வேண்டுமானால் அதனைப் பாதுகாக்கின்ற மனுதர்மம்ää இராமாயணம்ää மகாபாரதம்ää பகவத் கீதை ஆகியவற்றைக் கொளுத்த வேண்டும் என்று சொல்லுகின்றபொழுது பார்ப்பனரல்லாத மக்களே கூட மிகவும் புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு ~இப்பவெல்லாம் எங்க சார் மனுதர்மம் இருக்கிறது? அது செல்லரித்த ஏடுகளில்தான் இருக்கிறது| என்று வியாக்கியானம் செய்கிறார்கள்.
அவர்களைத்தான் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் ~படித்த பாமரர்| என்பார்.

மனுதர்மம் எங்கே இருக்கிறது?

குஜராத் மாநிலத்தில் மனுதர்மம் பாடப்புத்தகத்திலே இடம் பெற்றிருக்கிறது. ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்திலே மனுவுக்கு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தில் ~இந்துலா| என்பதற்கு அடிப்படை மனுதர்மம்தான்.
அந்த மனுதர்மத்தின்படி இன்று நாட்டில் பல வழக்குகளில் தீர்ப்புக்கள் சொல்லப்பட்டு வருகின்றன.

1980களில் சூத்திரன் சன்னியாசம் வாங்கக்கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது இந்த மனுதர்மத்தின் அடிப்படையில்தான்.

இராஜஸ்தான் மாநிலத்தில் பன்வாரிதேவி என்ற பழங்குடி இனப்பெண் சமூகநல ஊழியராகப் பணியாற்றினார். அந்த மாநிலத்தில் உயர்ஜாதியினரிடையே நடந்த குழந்தைத் திருமணத்தைப் பற்றி காவல்துறைக்கு புகார் கொடுத்து அதனைத் தடுத்து நிறுத்தினார். அதனால் ஆத்திரமடைந்த மேல்ஜாதிக் கும்பலைச்சேர்ந்த அய்ந்துபேர் பன்வாரிதேவியை பாலியல் வன்கொடுமை செய்து கொடுமைப்படுத்தினர். இது வழக்கு மன்றம் சென்றபொழுது நீதிபதிகள் என்ன தீர்ப்புச் சொன்னார்கள் தெரியுமா?

~ஒரு கீழ்ஜாதிப் பெண்ணை உயர்ஜாதிக்காரர்கள் கற்பழித்திருப்பார்கள் என்பதை நம்ப முடியாது| என்று தீர்ப்பளித்து அய்வரையும் விடுதலை செய்தார்கள். ஜனநாயக நாட்டிலேயே இதுபோன்ற தீர்ப்புக்கள் வழங்கப்படுகிறது என்று சொன்னால் மன்னராட்சிக்காலத்தில் மனுதர்மம் கோலோச்சிய காலத்தில் எப்படிப்பட்ட கொடுமைகளெல்லாம் நடந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. அந்தப் பன்வாரிதேவி இன்னமும் அதற்கு கண்கண்ட உதாரணமாக உயிருடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

அந்த மனுதர்மத்தைப் பார்த்து இன்னும் பல வழக்குகளில் தீர்ப்புக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. 2008 இறுதியில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கு வந்தது. அதாவது ஒரு உயர்ஜாதி ஆணும் தாழ்ந்த ஜாதிப்பெண்ணும் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்குப் பிறந்த குழந்தை என்ன ஜாதி என்பது வழக்கு.

அந்த வழக்கில் ஆணினுடைய சாதிதான் பிள்ளைக்கும் இருக்க வேண்டும். கீழ்ஜாதி ஆணுக்கும் மேல்ஜாதிப் பெண்ணுக்கும் பிள்ளை பிறந்தால் அது கீழ்ஜாதி என்றும்ää மேல்ஜாதி ஆணுக்கும் கீழ்ஜாதிப்பெண்ணுக்கும் குழந்தை பிறந்தால் அது மேல்ஜாதிதான் என்றும் மனுதர்மத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி அந்த வழக்கில் குழந்தையின் தந்தை மேல்ஜாதியாக இருப்பதால் அந்தக் குழந்தையும் மேல்ஜாதிதான் என்றும் தீர்ப்பளித்து அந்தப் பிள்ளைக்கு தாழ்த்தப்பட்டவர்க்கான இடஒதுக்கீட்டின் பலன்களைப் பெற உரிமையில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதுபோன்ற வழக்குகளுக்கு இந்துலா தான் அடிப்படை என்பதை யாராலும் மறுக்க முடியாது. இத்தகைய மனுநீதியை சுயராஜ்யம் வந்தால் சட்டமாகவே ஆக்க வேண்டும் என்று கூறியவர்தான் இந்துத்வாவின் முன்னோடியான பாலகங்காதர திலகர் அவர்கள்.
இவரைப்பற்றி மேற்கோளாக அடிக்கடி கூறப்படுவது ~சுயராஜ்யம் எனது பிறப்புரிமை| என்று கூறி இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டவர் என்பதாகும். அந்தத் திலகர்பெருமான் அவர்களது சுயராஜ்யம் என்பதற்கு மகாராஷ்டிர அரசின் கல்வித்துறை 1994ல் வெளியிட்ட ~சத்திரபதி சாகு – சமூக ஜனநாயகத்தின் தூண்| என்ற நூலில் 363 மற்றும் 364ம் பக்கங்களில்

~நமது சட்டம் மனுஸ்மிருதிதான். என்று கூறிய திலகர்ää கற்றறிந்தவர் மற்றும் பிராமணர்களின் ஆலோசனையுடன்தான் அரசன் ஆட்சி நடத்த வேண்டும்| என்று கூறி சுயராஜ்யத்தின் சட்டமாக மனுஸ்மிருதிதான் இருக்க வேண்டும் என்று திலகர் விரும்பினார் என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பம்பாய் மாகாண சட்டமன்ற மேலவைக்;கு பல்வேறுபட்ட தொழில் செய்பவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்ற கருத்தை எதிர்த்து திலகர் கடுமையான மொழியில் வாதம் செய்தார்.
தொடக்கக் கல்விக்குப் பின் இடைநிலைக் கல்வியைத் தொடரவேண்டாம் என்று தீண்டத்தகாத மக்களுக்கு ஆலோசனை கூறினார். இதன்மூலம் தீண்டத்தகாத ஜாதி மக்கள் அவரவர் ஜாதித் தொழில்களையே செய்ய வேண்டும் என்று கூறிய திலகர் அவர்களுக்கு உயர் கல்வி அளிக்கப்படுவதை எதிர்த்தார்.
அந்தத் திலகருடைய வழியில்தான் 1952ல் சென்னை மாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்ற இராஜாஜி

குலக்கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்தார். தந்தை பெரியாரின் பேரெதிர்ப்பால்தான் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
அந்தத் திலகரை குருநாதராகக் கொண்ட இராம கோபாலன் தீண்டாமையை ஒழிக்கப் போவதாகக் கூறுவதெல்லாம் தீண்டத்தகாத மக்களை என்றென்றும் தீண்டாமைச் சகதியில் ஆழ்த்தி வைத்து பார்ப்பன மேல்ஜாதித் தன்மையைப் பாதுகாக்கவே.

ஜாதியை அப்படியே வைத்துக்கொண்டு தீண்டாமையை ஒருபோதும் ஒழித்துவிட முடியாது. அந்த ஜாதியை ஒழிக்க இராம. கோபாலன்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள். குறைந்தபட்சம் தங்கள் முதுகில் அணிந்திருக்கும் பூணூலைக்கூடத் தூக்கியெறிய சம்மதிக்க மாட்டார்கள்.

 ~இந்தியச்சேரி – தீண்டாமையின் மையம்|

அந்த ஜாதி இந்தியா முழுவதும் சிற்றூர்ää பேரூர்ää நகரங்கள்ää மாநகரங்கள் எங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் ஜாதிக்கான கட்டுமானம் கிராமங்களில் இன்னும் கெட்டியாகவே அமைந்துள்ளது. கிராம அமைப்பு முறையே இன்னமும் ஜாதி அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

ஊருக்கு நடுவே கோயில். கோயிலைச் சுற்றி அக்கிரஹாரம். அதற்கு வெளியே உயர் ஜாதியினரின் குடியிருப்பு. அதற்கு வெளியே தொழிலாளிகள் என்று சொல்லக்கூடிய பிற்படுத்தப்பட்ட மக்கள். அதற்கு வெளியே முடிதிருத்துவோர்ää சலவைத்தொழிலாளி என்று சொல்லக்கூடிய ஜாதியினரின் குடியிருப்பு. அதனை அடுத்து ஊருக்கு ஒதுக்குப் புறமாக தீண்டத்தகாதவர் வசிக்கும் சேரிப்பகுதி.
இதுதான் இந்தியா முழுமைக்குமான கிராம அமைப்புமுறை. இங்குதான் ஜாதி முழுவதுமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால்தான் இராம கோபாலன் போன்றோரும் ஆர்எஸ்எஸ் சங் பரிவாரைச் சேர்ந்தவர்களும் காந்தியம் பேசுவோரும் ~கிராமங்களில்தான் இந்தியப் பண்பாடே அமைந்துள்ளது. அந்தக் கிராமங்களைப் பாதுகாப்பதன் மூலமே இந்தியப் பண்பாட்டைப் பாதுகாக்க முடியும்| என்கிறார்கள்.

கிராம அமைப்பைப் பாதுகாப்பது என்பது ஜாதி அமைப்பைப் பாதுகாப்பதே! அங்குதான் எந்த ஜாதிக்காரனையும் எளிதில் அடையாளம் காணமுடியும். ஜாதியைப் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால் இவர்களின் குட்டு அம்பலப்பட்டுப் போகும் என்பதால்தான் இவர்கள் கிராமங்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள்.

கிராமங்களைப் பாதுகாப்பதாகச் சொன்னாலும் ஜாதியைப் பாதுகாப்பதாகச் சொன்னாலும் இரண்டும் ஒன்றுதான்.
இந்தக் கிராம அமைப்பைப் பற்றி அண்ணல் அம்பேத்கர் என்ன கூறுகிறார்?

~இந்தக் கிராமக்குடியரசில் ஜனநாயகத்துக்கு இடமேயில்லை. இதில் சமத்துவத்துக்கு இடமே இல்லை. இந்தியக் கிராமம் குடியரசின் எல்லாத் தத்துவங்களையும் மறுப்பதாக உள்ளது. இது ஒரு குடியரசு என்றால் தீண்டத்தக்கவர்களால்

தீண்டத்தக்கவர்களுக்காக நடத்தப்படும் தீண்டத்தக்கவர்களின் குடியரசாகும். இது தீண்டாதவர்களைச் சுரண்டி வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட ஒருவகைக் காலனி ஆதிக்கமாகும். இங்கு தீண்டாதவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை. அவர்கள் வாழ்வதெல்லாம் காத்திருக்கவும்ää பணிசெய்யவும்ää பணிந்து நடக்கவுமே ஆகும். செய்வதற்கு அல்லது செத்து மடிவதற்கே அவர்கள் உள்ளனர். அவர்கள் கிராமக் குடியரசிற்கு வெளியே உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு உரிமைகள் இல்லை. குடியரசு என்று கூறப்படுகின்ற அதற்கு வெளியில் உள்ளவர்கள் என்பதால் அவர்கள் இந்து சமூகத்திற்கு வெளியே உள்ளனர். இது ஒரு விஷச்சக்கரம். ஆனால் இது மறுக்க முடியாத உண்மை| என்று அண்ணல் அம்பேத்கர் ~இந்தியச்சேரி – தீண்டாமையின் மையம்| என்ற கட்டுரையில் மிகத் தெளிவாகக் கூறுகிறார்.

கிராமங்களில் தீண்டத்தகாதவர் யாருக்கும் எந்த உரிமையும் வழங்கப்படுவதில்லை. கோயில்களில் நடத்தப்படும் திருவிழாவுக்கு தீண்டத்தகாதவர்களிடம் வரி வசூல் செய்வதில்லை. காரணம் வரி வசூல் செய்யப்பட்டால் அவர்களுக்கும் மற்றவர்களைப்போல் உரிமைகள் வழங்கவேண்டும் என்பதாலும் அவர்களும் உரிமை வேண்டும் என்று கேட்பார்கள் என்பதாலும்தான் அவர்களிடம் வரி எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

கிராமங்களில் இன்னமும் தனித்தனி கோயில்கள்ää அதற்கு தனித்தனித் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. எல்லோருக்கும் பொதுவான கோயில் இருந்தாலும் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி மண்டகப்படிகள் நடத்தப்படும். அந்தப் பொதுக் கோயிலுக்குத் தாழ்த்தப்பட்டவர்கள் செல்ல முடியாது. தங்களுக்கும் மற்றவர்களுக்கு உள்ள உரிமை வேண்டும் என்ற தாழ்த்தப்பட்டவர்கள் போராடுகின்ற பொழுதுதான் ஜாதி மோதல்கள் அங்கே உருவாகின்றன.

கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களின் குடியிருப்புக்கள் தனியாக இருப்பதால் அவர்களை எளிதில் அடையாளம் கண்டு ஒதுக்கி வைக்க முடியும். தெருவுக்குள் செருப்புப் போட்டு நடக்கக் கூடாது என்பதும் தேனீர்க்கடைகளில் இரட்டை டம்ளர் முறையைப் பராமரிப்பதும் இதன்மூலம் சுலபமாகிறது.

கிராமங்கள் அப்படியே பாதுகாக்கப்படுவதால்தான் ஜாதியும் இனனும் பாதுகாப்புடன் இருந்து வருகிறது. இதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் கிராமங்களை முற்றிலும் ஒழித்துவிட்டு மக்கள் அனைவரையும் நகர்ப்புறங்களில் குடியமர்த்த வேண்டும் என்றார். ஜாதிக்கென்று தெருக்கள் இருப்பதை முற்றிலும் ஒழித்து சமத்துவபுரங்களை அமைக்க வேண்டும் என்றார். அவரது அந்தக் கனவை நனவாக்கத்தான் தமிழகத்தை அய்ந்துமுறை முதல்வராக இருந்து ஆட்சி செய்த கலைஞர் அவர்கள் தமிழகம் முழுவதும் 240 சமத்துவபுரங்களை உருவாக்கினார். அங்கு மக்கள் எந்தவித ஜாதி ஏற்றத் தாழ்வுமின்றி வாழ வழிவகை செய்தார்கள். 2014 தேர்தல் அறிக்கையிலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடெங்கிலும் இதுபோன்ற சமத்துவபுரங்களை அமைப்போம் என்று திமுக குறிப்பிட்டுள்ளது. அதுபோல் நரேந்திர மோடி பிரதமரானால் நாடு பூராவும் நாங்கள் சமத்துவபுரங்களை உருவாக்குவோம் என்று கூறுவார்களா?

மோடி ஆளும் மாநிலத்தில் பஞ்சாயத்து தண்ணீர்க் குழாய்களிலேயே இந்த நேரத்தில் பிராமணர் தண்ணீர் பிடிக்கலாம்ää இந்த நேரத்தில் வைசியர் தண்ணீர் பிடிக்கலாம்ää இந்த நேரத்தில் சூத்திரர் தண்ணீர் பிடிக்கலாம்ää இந்த நேரத்தில்தான் தீண்டத்தகாதவர் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஜாதிக்கும் நேரம் ஒதுக்கித் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதுதான் இந்துராஜ்யம் என்கிறார்கள். அத்தகையை இந்துராஜ்யத்தை உருவாக்கப் பாடுபடும் இராம.கோபாலன் தீண்டாமைக்கு இந்துமதத்தில் ஆதாரம் இல்லை என்பது இமயமலையையே இல்லை என்பது போன்றதாகும்.
குஜராத்தில் தாழ்த்தப்பட்டோர் நிலை:

அப்படிப்பட்ட குஜராத் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்று கதை விட்டு பல கோடி ரூபாய்களை விளம்பரத்திற்காக வாறி இறைத்து மோடி அவர்களை பிரதமராக்கியிருக்கிறது பாஜக. அந்த மோடி ஆட்சி செய்த குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை என்ன?

1) நவ்ஷ்ர்ஜான் என்ற அமைப்பு 2010ஆம் ஆண்டு 1589 கிராமங்களை ஆய்வு செய்தது. அவற்றில் 90 விழுக்காடு கிராமங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது.

2) நாட்டைத் தூய்மைப்படுத்தும் அர்ச்சகர்கள் என்று மேடையில் புகழும் மோடியின் அரசின் கீழ் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அரசு வேலைகூடக் கிடையாது. பெரும்பாலானவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான். ஊதியமோ நாளொன்றுக்கு 50 முதல் 100 ரூபாய்தான்.

3) முடிவெட்டுவதற்குக் கூட ஜாதி பார்க்கும் குஜராத்தின் ஜாதி இந்துக்கள் கொடுக்கும் மன உளைச்சல் தாங்க முடியாமல் 200 குடும்பங்கள் பௌத்தத்திற்கு மாறியிருக்கின்றார்கள்.
4) தலித் குழந்தைகள் துப்புரவு வேலை செய்யப் பணிக்கப் படுகிறார்கள்.

5) ஒரு தலித் மைனர் பெண் வன்புணர்ச்சிக்குள்ளானதைக் கண்டித்து தலித் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் காவல்துறை லத்தி சார்ஜ் செய்கிறது.

6) ஒரு தலித் குடும்பத்தை ஊரைவிட்டுக் காலி செய்யச் சொன்னது ஆதிக்க சாதிப் பஞ்சாயத்து.

7) குஜராத் மற்றும் ராஜஸ்தானில் செய்யப்பட்ட ஆய்வு ää 90 விழுக்காடு தலித் குழந்தைகள் மருத்துவத்தின்போதும் 80 விழுக்காடு குழந்தைகள் ரத்தப் பரிசோதனை போன்ற மருத்துவப் பரிசோதனைகளில் பாகுபாடுகளுக்கு உள்ளாகின்றனர் என்று தெரிவிக்கின்றது.

8) 2010ஆம் ஆண்டு யுனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வில் 1298 தடவை மருந்து வழங்கப்பட்ட குழந்தைகள் 1181 தடவை பாகுபாடுகளுக்கு உள்ளாகிறார்கள் என்று தெரிவிக்கின்றது.
9) தலித் மக்களுக்கு மோடியின் குஜராத்தில் குடிக்கத் தண்ணீர் இல்லை. இது குறித்துக் குரல் கொடுத்தால் மக்களின் முதல்வாரன மோடிக்கு களங்கம் ஏற்படும். இதன் காரணமாக எங்களை அவர்கள் தாக்கக் கூடும் என்பதால் மவுனம் காத்தாகச் சொல்கிறார்கள்.
இன்னும் அச்சில் ஏறாத இங்கே பட்டியலிடப்படாத பொதுவெளிக்கு வராத கொடுமைகள் ஏராளம் குஜராத்தில் உண்டு.

கடந்த 60 ஆண்டுகளில் ஏற்பட்ட சமூக மாற்றம் குறித்து ஆய்வு
அத்துடன் இந்தியா சுதந்திரமடைந்து 64 ஆண்டுகள் ஆனபிறது இந்தியாவில் தீண்டாமை குறித்த ஒரு கணக்கெடுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த மெரிலேண்ட் பல்கலைக் கழகத்தின் சமூகப் பொருளாதார ஆய்வு மய்யம் இந்திய மனிதவள மேம்பாட்டு மய்யத்துடன் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியது.
இதில் பல்வேறு இனää மொழிää மத மக்கள் வாழும் நாடான இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் ஏற்பட்ட சமூக மாற்றம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தீண்டாமைக் கொடுமை நாடெங்கிலும் தலைவிரித்து ஆடுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று குறிப்படப் பட்டு இருப்பினும் அந்தப் பாவச் செயலை நான்கில் ஒரு இந்தியன் செய்துகொண்டுதான் இருக்கிறான். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து இந்த ஆய்வை நடத்தினர். இந்த ஆய்வின் முடிவில் தீண்டாமையை இன்றளவும் கடைப்பிடிப்பதில் முதலிடம் வகிப்பவர்கள் பார்ப்பனர்கள் என்று தெரிய வந்துள்ளது.

ஆய்வின்போது கேட்கப்பட்ட நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு 54 விழுக்காட்டினர் ஆம் என்றே கூறியுள்ளனர். இல்லை என்று கூறிய பார்ப்பனர்களில் பொது இடங்களில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லை என்றாலும் எனது வீட்டில் ஆச்சாரம் கடைப்பிடிக்கப் படுகிறது. இதர சாதியினரை எங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று பதில் அளித்தனர்.

இந்து மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் தாழ்த்தப்பட்டவராக இருப்பின் நாங்கள் முற்றிலும் அனுமதிக்கவே மாட்டோம் என்று கூறியுள்ளனர். இதே வேளையில் ஜெயின் சமூகத்தினரும் தீண்டாமையைக் கடைப்பிடிப்பவராக உள்ளனர். தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்களில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் கூட அடங்குவர். இந்தியாவில் மட்டுமே இந்த மதத்தவர்களிடம் தீண்டாமை நிலவி வருகிறது. இவர்கள் இந்து மதத்திலிருந்து பிரிந்து சென்ற காரணத்தால் இப்பழக்கம் இவர்களிடையே தென்படுகிறது.
பார்ப்பனர் வீட்டில் பிறக்கும் ஒருவனுக்கு அவனை வளர்க்கும் முறையிலேயே தீண்டாமை மனதளவில் அவன் உடன் பிறந்த ஒன்றாகி விடுகிறது. இந்தக் காரணத்தால் அவன் பொதுவிலும் தீண்டாமையைக் கடைப்பிடிக்கத் தயங்குவதில்லை. தென் மாநிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் உயர் சாதியினரக்கென தனி வழிபாட்டு இடங்களும் தாழ்த்தப்பட் மக்களுக்கு எனத் தனி வழிபாட்டு இடங்களும் உள்ளன என்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த அளவுக்கு தீண்டாமை கடைப்பிடிக்கப் படுகிறது என்ற புள்ளி விவரங்களையும் அந்த அறிக்கையில் ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். (விடுதலை 3-12-2014)

சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த புண்ணிய பூமியில் திண்டாமை இந்த அளவிற்குத் தாண்டவமாடுகின்றபொழுது “தெங்கடிஜியும் அம்பேத்காரும் பல நாட்கள் சமுதாயப் பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகவம் அம்பேத்கர் அவர்கள் இந்துமதக் கோட்பாடுகள் எதிலும் தீண்டாமை சொல்லப்படவில்லை என்பதை ஹிந்து சன்னியாசிகள் துறவியர் ஒன்று கூடி பகிரங்கமாக அறிவித்திட வேண்டும் என்று விரும்பியதாகவும் அதனை ஏற்று சமுதாயத்தில் நிலவி வரும் தீண்டாமைக் கொடுமைக்கு சாஸ்திர அங்கீகாரம் கிடையாது என தீர்மானம் இயற்றப்பட்டதாகவும் ஆர்எஸ்எஸ் புளுகுகிறது.
தீண்டாமைக்கு ஆதாரம் இல்லையென்றால் அதனை ஒழிக்கவேண்டிய அவசியம் இல்லையே! ஆதாரமே இல்லாத தீண்டாமையை ஒழிக்க இராம.கோபாலன் வழிசொல்கிறார் என்றால் திருடனே திருட்டை ஒழிக்க வழிசொல்லுவது போலத்தான். நான் திருடவே இல்லை. திருடியதற்கான ஆதாரமே இல்லை என்று சொல்கின்ற திருடனே நானே திருட்டை ஒழிக்க வழிசொல்லுகிறேன் என்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது இராம.கோபாலன் சொல்வதும்.

தீண்டாமையை ஒழிக்க உண்மையான வழிகாட்டும் தலைவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்:

தீண்டாமையை ஒழிக்க உண்மையான வழிகளைச் சொன்னவர்கள் அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும்தான். இந்த விசயத்தில் பெரியார் சொன்னதை எடுத்துப்போட்டு கீழே அம்பேத்கர் என்று போட்டாலும்ää அம்பேத்கர் சொன்னதை எடுத்துப் போட்டு கீழே பெரியார் என்று போட்டாலும் அது மிகவும் சரியாக இருக்கும். இரண்டுபேரும் சமூக விஞ்ஞானிகள். சமுதாயத்தில் நிலவும் நோயைத் தடுக்க சரியான வழிமுறையைக் கண்டவர்கள்.

“சாதியும் தீண்டாமையும் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஒரே ஒருங்கிணைந்த முறையாகும். சாதி இந்துக்கள் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள் எனில் அதற்குக் காரணம் அவர்கள் சாதியில் நம்பிக்கை வைத்திருப்பதுதான். இந்தக் கருத்தை வைத்துப் பார்த்தால் சாதியை அழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கலாம் என்று நம்புவது சற்றும் பயனற்றது. சாதியும் தீண்டாமையும் வௌ;வேறானவை என்ற கருத்துத் தவறானது. இரண்டும் ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாதவை. சாதிமுறையின் நீட்சியே தீண்டாமை. இரண்டும் பிரிந்து நிற்கமுடியாது. இரண்டும் சேர்ந்தே நிற்கின்றன. சேர்ந்தேதான் வீழும்” என்று சாதியை ஒழிக்காமல் தீண்டாமைய ஒழிக்க முடியாது என்பதை அண்ணல் அம்பேத்கர் மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்.
ஜாதி ஒழிப்பையே மய்யமாக வைத்துப் போராடி வந்த பெரியார் அண்ணல் அம்பேத்கரின் ‘ஜாதியை ஒழிக்க வழி” என்ற புத்தகத்தை தமிழில் வெளியிட்டார்கள். முதன்முதலில் தமிழில் வெளிவந்த அம்பேத்கருடைய புத்தகமும் இதுதான். அதனைச் செய்தவர் பெரியார்தான்.

அண்ணல் அம்பேத்கர் போலவே பெரியாரும் கூறுவதைப் பார்ப்போம்.

“தீண்டாமை என்பது ஜாதி காரணமாக ஏற்பட்டதே தவிர அதற்கு வேறு காரணமோää ஆதாரமோ இல்லை. தீண்டாமை என்பது ஒரு ஜாதியானை மற்றொரு ஜாதியான் தொடக்கூடாது என்பதற்குத்தான் நாம் பயன்படுத்துகின்றோமே ஒழிய மற்றெதற்குத் தீண்டாமையைப் பயன்படுத்துகின்றோம்? அதுவும் அப்படிப் பயன்படுத்துவதும் இந்துக்கள் என்னும் இந்து மதத்தாருக்குள் இருந்து வருகிறதே ஒழிய மற்ற யாருக்குள் இருந்து வருகிறது? ஆகவே தீண்டாமை என்பது இந்து மதத்தின் காரணமாக இந்துக்கள் என்பாருக்குள் மாத்திரம் ஜாதி காரணமாக மேல்ஜாதி – கீழ்ஜாதி என்பவர்களுக்குள் மாத்திரம் இருந்துவரும் காரியமே தவிரää தீண்டாமை மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்பட்டதல்ல. ஆகவேää ஜாதியை வைத்துக் கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதும்ää இந்துமதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை போக வேண்டும் என்பதும் மாபெரும் முட்டாள்தனமாகுமே தவிரää சிறிதும் அறிவுடைமை ஆகாது” என்று பெரியார் கூறுகிறார்.

தந்தை பெரியார் அவர்கள் அந்த ஜாதியை ஒழிப்பதற்கான வழிமுறைகளை தனது வாழ்நாள் முழுவதும் மக்களிடம் எடுத்துக்கூறி வந்தார். ஜாதி ஒழிப்புக்கான வழிமுறை குறித்து 10.1.1947ல் விடுதலை ஏட்டில் அவர்

“ஜாதியை ஒழிப்பதற்கு பல அடிப்படையான முறைகள் இருக்கின்றன. சாதிப்பட்டங்கள் சட்டப்பூர்வமாகத் தடுக்கப்பட வேண்டும். புதிதாக மணம் புரிவோர் அத்தனைபேரும் கலப்பு மணங்கள் செய்யுமாறு தூண்டக்கூடிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஒரே வகுப்பில் ஒரே சாதிப்பிரிவில் திருமணம் செய்பவர்களுக்குப் பல கஷ்டமான நிபந்தனைகளையும் கட்டுத் திட்டங்களையும் விதித்து அத்தகைய திருமணம் செய்பவர்களுக்கு சமுதாயத்தில் செல்வாக்கில்லாமல் செய்ய வேண்டும். சாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறிää உடைää பூணூல் முதலிய சின்னங்களையும் சட்டப் பூர்வமாகத் தடுக்க வேண்டும். காவல்துறைப் பதவிகளைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தரவேண்டும். தாழ்த்தப்பட்டவர்களை அக்கிரஹாரத்தில் குடியிருக்கச் செய்ய வேண்டும். தீண்டாமையைப் பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கென தனியாகச் சேரி இருப்பதை ஒழிக்க வேண்டும்.”

என்று எழுதுகிறார்.

இந்திய அரசியல் சட்டம் 1950ல் அமுலுக்கு வந்தது. அதனை இயற்றிய அண்ணல் அம்பேத்கர் அவர்களால் தனது இலட்சியமான ஜாதி ஒழிப்பை வலியுறுத்தி சட்டம் எழுத இயலவில்லை. அதனால் குறைந்தபட்சம் தீண்டாமை ஒழிப்பையாவது சட்டப்படி தடுக்க வழிகாண வேண்டும் என்பதால்தான் ~இந்திய அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது. அதனை எந்த வடிவத்தில் கடைப்பிடித்தாலும் சட்டப்படி குற்றம்| என்று சட்டம் இயற்றினார்.
இதன்மூலம் தீண்டாமை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும் அது முற்றிலும் ஒழிக்கப்படவில்லை. காரணம்ää அந்தத் தீண்டாமைக்கு அடிப்படையான ஜாதி ஒழிக்கப்படாமல் அப்படியே இருப்பதால்தான். ஜாதியைப் பாதுகாக்கும் பல பிரிவுகள் இந்திய அரசியல் சட்டத்தில் பல இடங்களில் உள்ளன.

அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் ஜாதியைப் பாதுகாக்கும் சட்டத்தைக் கொளுத்திவிட்டு 1957 நவம்பர் 26ந்தேதி பல்லாயிரம் தொண்டர்களுடன் சிறையேகினார். சிறையிலேயே பல தோழர்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்தார்கள் என்பது வரலாறு.
அத்துடன் தந்தை பெரியார் அவர்கள் 1973 டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் சென்னையில் நடந்த சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில்; “இந்திய அரசியல் சட்டத்தில் 17வது பிரிவில் உள்ள தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதில் ~தீண்டாமை| என்ற சொல்லை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக ~ஜாதி| என்று போடுவதோடு அதில் நுஒpடயயெவழைn என்ற குறிப்புகளின் கீழ் ஊயளவந inஉடரனநள ரவெழரஉhயடிடைவைல யடளழ என்றும் சேர்க்கப்பட வேண்டும்” என்று நிறைவேற்றிய தீர்மானம் ஜாதியை அரசியல் சட்டப் பூர்வமாக ஒழிக்கும் நடவடிக்கையாகும்.

இந்த ஜாதியைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே இயக்கம் நடத்தி வருபவர்கள் இராம.கோபாலன்கள். அவர்கள் தங்களை உயர்ந்த ஜாதி என்று அழைத்துக் கொள்பவர்கள். அவர்கள் உயர்ந்த ஜாதி என்கிற போது மற்றவர்கள் தாழ்ந்த ஜாதிதானே! இந்த உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி இருந்தால் தீண்டாமையும் இருக்கும் அல்லவா? இந்த உயர்ஜாதி மனப்பான்மை இருக்கும்வரை தீண்டாமையும் இருக்கும் அல்லவா?

“தன்னை உயர்ந்த ஜாதியாகவும் இன்னொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் ஒரு மனநோயாளி” என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

அந்த உயர்ஜாதி மனப்பான்மை உள்ள மன நோயாளியாகத்தான் இராம.கோபாலன். தெங்கடி போன்றவர்கள் இருக்கிறார்களே தவிர  உண்மையில் தீண்டாமையை ஒழிக்க இவர்கள் முன்வர மாட்டார்கள். தீண்டாமையை ஒழிப்பதாக வெறும் வாய்ப்பந்தல் போட்டு மக்களை ஏமாற்றி காலம் கழித்து வருகின்றனர்.
இந்த தெங்கடிஜிää இராம.கோபாலன்ää இல.கணேசன் வரிசையில் பிஜேபி அரசாங்கம் பாரத ரத்னா விருது வழங்கியுள்ள மதன் மோகன் மாளவியா அவர்கள் 1930 களில் தமிழ்நாட்டுக்கு வந்து சென்னையில் வேதமறிந்த பார்ப்பனர்கள் மத்தியில் பேசும்போது இந்துமத வேதங்களில் தீண்டாமைக்கு விதியில்லை என்று கூறினாராம்.  அந்த வேதமறிந்த பார்ப்பனர்கள் தீண்டாமைக்கு ஆதாரமாக சமஸ்கிருத்தில் அச்சிடப்பட்ட புத்தகத்தைத் தூக்கிக் காட்டினவுடன் மாளவியா வாயடைத்துப் போனாராம். அதுபோல் இந்த இராம.கோபாலன்களை வாயடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்கதாகவே இப்புத்தகத்தை வெளியிடுகிறோம்.
அவர்களிடம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கட்டுரையைப் புத்தக வடிவில் கொண்டு வந்துள்ளோம். அதனை வாங்கிப் பலரும் படிப்பதோடு மற்றவர்களுக்கும் கொடுத்துப் படிக்கச் செய்து தீண்டாமையை ஒழிக்க ஆக்கப்பூர்வமான வழிகளில் ஈடுபட வேண்டும் என்றும் இராம.கோபாலன் போன்றவர்களிடமும் ஆர்எஸ்எஸ் சங் பரிவார்களிடமும் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!