செவ்வாய், 15 மார்ச், 2016

டிஜிட்டல் இந்தியா!


திருவிழாக் கூட்டத்தில் திருடப் போன கும்பலில் ஒருத்தன் மட்டும் மாட்டிக் கொண்டு தர்ம அடி வாங்கினால் மற்ற திருடனெல்லாம் என்ன செய்வான் தெரியுமா? தர்ம அடி கொடுப்பவர்களை விடவும் வேகமாக சத்தம் போட்டு “ ஏண்டா படவா ராஸ்கல், எவ்வளவு தைரியமிருந்தால் இப்படிப் பட்டப் பகலில் பிக்பாக்கெட் அடிப்பே?” என்று மத்தவங்களைவிட பலமாவே அடிப்பாங்க. பார்க்கிறவங்களுக்கு “ ஆஹா, இவன் ரொம்ப யோக்கியன் போல இருக்கு, நம்மளவிட வேகமா அடிக்கிறான”; என்று வெள்ளேந்தியா நினைப்பாங்க. அவங்களப் பாத்து இந்தக் கூட்டுக் களவாணிப்பய என்ன செய்வான் தெரியுமா? “சார் இவன சும்மா விடப்புடாது சார், போலீஸ்ல புடுச்சிக் குடுத்து உள்ள போட்டு முட்டிக்கு முட்டி தட்டச் சொல்லனும் சார்” என்று கூப்பிடுவான். அந்த அப்பாவி பொது ஜனம் தனக்கு தலைக்கு மேல வேலை இருக்குதுன்னு சாக்குச் சொல்லிட்டு நழுவிடும். இந்தக் கூட்டுக் களவாணி நைசாத் தன்னோட ஆளை கும்பலிலிருந்து வெளிய கொண்டு வந்திடுவான்.

இந்தக் கதை எதுக்குன்னு கேட்கிறிங்களா?
                          ஆர்எஸ்எஸ் சின்னா ரெடி ஃபார் சோசியல் சர்வீஸ் ன்னு சொல்லி கதை விடுவாங்க. அந்த ஆர்எஸ்எஸ்ஸோட சித்தாந்தத்தை மக்களிடம் கொண்டு செல்ல பல்வேறு பெயர்களில் அமைப்புக்கள். அரசியலில் பிஜேபி. மாணவர்களிடம் ஏபிவிபி, விவசாயிகளிடம் கிசான்சங், வழக்கறிஞர்கிளிடம் அனிருத்தரர பாரத், சாமியார்களிடம் விஸ்வ ஹிந்து பரிஷத், தொழிலாளர்களிடம் பாரதீய மஸ்தூர் சங். எல்லோருக்கும் ஒரே தலைமைதான்.

அந்தத் தலைமையின் கீழ சமுதாய சேவை செய்வதாக மக்களிடம் பரவி மக்களை மூளைச்சலவை செய்வாங்க. எந்த சமுதாயத்துக்குச் சேவை என்று யாரும் கேள்வி கேட்கப்படாது. பிராமணர் மட்டும்தான் அறிவாளிகள். அவர்களிடம் ஆட்சியைக் கொடுத்து விட்டால் நாடே ஆகா, ஓகோ என்று ஆகிவிடும். சூத்திரராக இருந்தாலும் பிராமணர் ஆலோசனையோடு ஆட்சி நடத்தனும் என்ற திட்டம்தான் அவர்களோட திட்டம்.


அப்படி பிராமண ஆலோசனையோடு ஆட்சிக்கு வந்த சூத்திர மோடி இந்திவை டிஜிட்டல் இந்தியவா மாத்தப் போறாராம். டிஜிட்டல் இந்தியான்னா என்னான்னு ஒருத்தர் அப்பாவித்தனமாக் கேட்டாரு. அது வேற ஒன்னும் இல்லீங்க ஒரு மூணு இலட்ச ரூபாய் விவசாயக் கடன வாங்கி ஒழுங்கா தவணை கட்டிக்கிட்டிருக்கிற விவசாயி வருமானமில்லாததனால ரெண்டு தவணை கடனைக் கட்டல. அவரை போலீசு காட்டுமிராண்டித்தனமாத் தாக்கி தரதரன்னு தெருவில இழுத்துட்டுப்போகும். அது சாதா இந்தியா. ஆனா ஏழாயிரம் கோடி கடன வாங்கிட்டு யாருக்கும் தெரியாம விஜய மல்லய்யா என்கிற கோடீஸ்வரன் இந்தியவ விட்டே ஓடிப்போவான். அது அரசாங்கத்துக்கும் தெரியாது. போலீசுக்கும் தெரியாது. அதுக்குப் பேரு டிஜிட்டல் இந்தியான்னாரு விவரம் தெரிஞ்ச ஒருத்தரு.


அந்த டிஜிட்டல் இந்தியாவ உருவாக்குறதாச் சொல்லி ஆட்சியப் பிடிச்ச மோடிஜி, அருன்ஜெட்லி மூலமா ரெண்டு பட்ஜெட்டப் போட்டுட்டாரு. ரெண்டு பட்ஜெட்லயும் நம்மள மாதிரி மாசச் சம்பளம் வாங்கிக்கிட்டு ஒழுங்கா வருமான வரி செலுத்தறவங்களுக்கு வருமானவரி உச்சவரம்ப ஒரு பைசாக் கூட ஏத்தல. அது மாத்திரமில்ல. குதிரை கீழே தள்ளினதுமில்லாம குழியும் பறிச்சதாம்னு சொல்லுவாங்கல்ல, அது மாதிரி நம்மளோட வருங்கால வைப்பு நிதிக்கும் அறுபது சதவீதத்துக்கு வரி போட்டாங்க. இது யாரோட மூளையில உதிச்சதுன்னு தெரியல. இதை எதிர்த்து நாடே கொந்தளிச்சது. நாடாளுமன்றமே முடங்கியது. வேற வழியில்லாம ஆர்எஸ்எஸ் கும்பல் இப்போதைக்கு கொஞ்சம் பின்வாங்கியது.


இதை தொழிலாளிக்காகவே பாடுபடறதாச் சொல்ற BMS நியாயப் படுத்த முடியுமா? அதை நியாயப் படுத்தினா வரப்போற பங்குபெறும் சங்கத் தேர்தலில ஏமாத்தி ஓட்டு வாங்க முடியுமா? அதனாலதான் கும்பலில் மாட்டிக்கிட்ட தன்னோட சகாவ மீட்டு வெளியில கொண்டுவர்ற கூட்டுக் களவாணி மாதிரி வேறு யாரும் சத்தம் போடுறதுக்கு முன்னால முதல் முதலா கேட் மீட்டிங் போட்டு அதிகமாச் சத்தம் போட்டாங்க. அந்தச் சத்தம் பாராளுமன்றம் வரைக்கும் கேட்டு அருன் ஜெட்லி காதக் கிழிச்சதால வருங்கால வைப்புநிதிக்கான வரியை ரத்து பண்ணிட்டாங்கன்னு கூவுது.
அதை எல்லாரும் கட்டாயமா நம்பி வர்ற பங்குபெறும் தேர்தலில BMS க்கு ஓட்டுப் போட்டுருங்க. இல்லாட்டி நீங்களெல்லாம் தேசவிரோதின்னு முத்திரை குத்தி காராக்கிரகத்துல அடைக்கிற சூழ்நிலை உருவாகிடும். எச்சரிக்கையா இருங்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக