சனி, 11 மார்ச், 2017

மனுதர்மத்தை - அண்ணல் அம்பேத்கர் எரித்தது ஏன்?

மனுதர்மத்தை - அண்ணல் அம்பேத்கர் எரித்தது ஏன்?


பொசுங்கட்டும் மனுதர்மம்!



மனுதர்மத்தை - அண்ணல் அம்பேத்கர் எரித்தது ஏன்?




மநுஸ்மிருதியிலும் இவை போன்ற நூல்களிலும் கூறப்பட்டுள்ள விசயங்கள் நாகரிகமற்றவையாகவும் இழிவினும் இழிவானவையாகவும் உள்ளன. இதைக் கணக்கிலெடுத்துக் கொண்டு  அவற்றை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தக் கண்டனத்துக்கு அறி குறியாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தத் தீர்மானிக்கிறோம் என்று முழக்கமிட்டு மகாராஷ்டிரா மாநிலம் மகத் நகரில் கூடிய சத்யா கிரகிகளின் மாநாடு அம்பேத்கர் தலை மையில் மநுஸ்மிருதியை எரித்த நாள் 1927 டிசம்பர் 25.


மகத் நகரின் சவுதார் குளம் ஜாதி இந்துக்களும் எல்லா ஜாதியினரின் விலங் குகளும் புழங்குவதற்குரியது. தலித்து களுக்கோ புழங்குரிமை இல்லை. இத்தடையை நீக்குவதென 1924இல் நகரசபை எடுத்த முடிவை நிறைவேற்ற ஜாதி இந்துக்கள் விடவில்லை. 1927 மார்ச் 19இ20இல் மகத்தில் கூடிய மாநாட்டில் பங்கேற்ற தலித்துகளும் தலித் அல்லாதார் சிலரும் இரண்டாம்நாள் காலை அம் பேத்கர் தலைமையில் அந்தக் குளத்தில் நீரருந்திஇ நூற்றாண்டுக்காலத் தடையை உடைத்தனர். ஆத்திரமடைந்த ஜாதி இந்துக்கள் தலித்துகள் அடுத்ததாக வீரேஸ்வர் கோயிலுக்குள்ளும் நுழையப் போவதாக வதந்தியைக் கிளப்பி வன் முறையை ஏவினர். எமக்குள்ள இயல்பான உரிமைகளை நிலைநாட்டவே இந்தக் குளத்தில் இறங்கினோம். மற்றபடி இந்தத் தண்ணீர் அசாதாரண சிறப்பினை உடையதென நாங்கள் கருதவில்லை என்றார் அம்பேத்கர். ஜாதி இந்துக்களோ 108 கலயங்களில் பால் தயிர் மாட்டு மூத்திரம் சாணக்கழிசலை குளத்தில் ஊற்றி பரிகாரித்துத் தீட்டு கழித்தனர்.


இதனிடையே மகத் நகரசபை தலித் துகளை குளத்தில் புழங்கவிடும் முந்தைய தீர்மானத்தை 1927 ஆகஸ்ட் 4 இல் ரத்து செய்தது. நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வந்த தலித்துகள் அங்கொரு சத்தியாகிரகத்தை 1927 டிசம்பர் 25, 26 தேதிகளில் நடத்துவதென தீர்மானித்தனர். மகத் சத்தியாக்கிரகம் வெறும் தண்ணீருக் கானது அல்ல என்பதை உணர்ந்த ஜாதி இந்துக்கள், நீதிமன்றத் தடையாணை பெற்றனர். இடம், தண்ணீர், மளிகைப் பொருட்களை வழங்க மறுத்தனர். ஆனால் ஃபதேகான் என்பவரது இடத்தில் திட்டமிட்டபடி மாநாடு தொடங்கியது! “இருண்டகாலத்தில் இயற்றப்பட்ட சாஸ்திரங்களுக்கும் ஸ்மிருதிகளுக்கும் நாம் கட்டுப்பட்டிருக்க வேண்டியதில்லை!” என்கிற அம்பேத்கரின் பதிலுரையால் மக்கள் ஆவேசமுற்றனர். சகஸ்திரபுத்தே என்கிற பிராமணர், சூத்திரர்களுக்கான நியதிகள் குறித்து மநுஸ்மிருதியில் கூறப் பட்டுள்ளதை படித்துக் காட்டி அம்பேத் கர்தான் கருத்துக்கு வலு சேர்த்தார். இந்தப் பின்னணியிலேயே மநுஸ்மிருதி எரிக் கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளில் முன்னின்ற தோழர் ராம்சந்திர பாபாஜி மோரே பின்னாளில் தீரமிக்க மார்க் சிஸ்ட்டாக வாழ்ந்தவர். இறுதி வரையிலும் அம்பேத்கருடன் மாறாத்தோழமை கொண் டிருந்தவர். மநுஸ்மிருதியை கொளுத்தி சாம்பலை கடலில் கரைத்துவிட வேண்டும் என்கிற முதல் கலகக்குரல் 17.10.1927இல் காட்பாடியில் நடந்த ஆதிதிராவிடர் மாநாட்டில் எம்.சி. ராஜாவிடமிருந்து வெடித்தது. மகத்துக்கும் முன்னதாகவே 4.12.1927இல் குடியாத்தத்தில் கூடிய சுயமரியாதைக்காரர் மாநாட்டில் ஜே.எஸ்.கண்ணப்பர் மநுஸ்மிருதியைக் கொளுத்தினார். மகத்தில் மநுஸ்மிருதி எரிக்கப்பட்டதால் நாடே அதிர்ந்தது. காலவழிக்கொழிந்து போன மநுஸ் மிருதியை எரித்திருக்க வேண்டுமா என்ற தந்திரமான கேள்விக்கு, இந்த அங்க லாய்ப்பே அதன் இருப்பை உணர்த்துகிறது என்றார் அம்பேத்கர். இந்த எரிப்பினால் என்ன கிடைத்தது என்ற கேள்விக்கு அந்நியத்துணி எரிப்பினால் காந்திக்கு எது கிடைத்ததோ அதுவே என்றார். நிம்மதியிழந்த பார்ப்பன பத்திரிகைகளால் பீமாசுரன் என்று இகழப்பட்ட அம்பேத்கர் சொன்னார்: மநுஸ்மிருதி எரிப்பு முற்றிலும் திட்டமிடப்பட்ட நிகழ்வே. நூற் றாண்டுகளாக எங்களுக்கு இழைக் கப்பட்டு வரும் அநீதியின் சின்னமாக மநுஸ்மிரு தியைக் கருதியதாலேயே எரித்தோம். அதன் போதனையின் காரணமாகவே நாங்கள் கொத்தி யெடுக்கும் கோரக் கொடுமைக்கு, வன்னெஞ்ச வறுமைக்கு உள்ளா கியுள்ளோம்.


எனவே அதற்கு எதிராக வரிந்து கட்டினோம். உயிர்களைப் பணயம் வைத்துப் போராட்டத்தில் இறங்கினோம் நினைத்ததைச் செய்து முடித்தோம்... விலங்குகளை பலியிடும் யாகங்களை நடத்தி, தட்சணையாகப் பொருள் ஈட்டு வதே வேதமதம்; அதை எதிர்த்தெழுந்த பவுத்தம். அசோகரால் மகதத்தின் அரச மதமாக்கப்பட்டதால் உயிர்ப்பலி தடுக் கப்பட்டது. அரசு ரீதியான ஆதரவுகளை இழந்த பார்ப்பனர்கள் 140 ஆண்டுகள் புரோகிதத்தையும் வருமானத்தையும் அந்தஸ்தையும் இழந்தனர்.  உயிர்ப் பலியிலும் சோம யாகத்திலும் நம் பிக்கையுள்ள சாமவேதி பார்ப்பனனாகிய புஷ்யமித்திர சுங்கன் அசோகரது வழிவந்த பிருகத்ரதனைக் கொன்று கி.மு.185இல் ஆட்சியைக் கைப்பற்றினான்.


ஒவ்வொரு பிக்குவின் தலைக்கும் 100 பொற்காசுகள் விலைவைத்து கொல்லுவ தாயிருந்தது - அவனது பவுத்த வெறுப்பு. பார்ப்பனீயத்தின் வெற்றியாக அம்பேத் கரால் சுட்டப்படும் இவனது ஆட்சிக் காலத்தில் சுமதி பார்கவா என்பவரால் கி.மு. 170- கி.மு.150-க்குள் எழுதப்பட்டதே மநுஸ்மிருதி.


பூமியின் கடவுள்களாக பிராமணர் களை விதந்துரைத்த மநுஸ்மிருதி மற்றவர்களை கீழ்நிலைப்படுத்தியது. யாகங்களால் ஆயுளை நீட்டிக்கவும் ஆட்சியை விரிவாக்கவும் முடியும் என்கிற கட்டுக்கதைகளுக்கு இரையான சத்திரிய மன்னர்களால் அது நாடெங்கும் பரவியது. இத்தனைக்கும் அது பரசுராமனால் கொல் லப்பட்ட சத்திரியர்களின் விதவைகள் -  பார்ப்பனர்களுடன் கூடியதால் முறையற்று பிறந்தவர்களென இழிவுபடுத்தியது. பட்டத்து மகிஷியைக் கன்னி கழிப்ப தையும் பார்ப்பனர்களின் உரிமையாக்கியது அது. பெண்கள் அனைவரையும் சூத்திரர் களையும் உயிர் வாழ்தலுக்கும் சுதந் திரத்துக்கும் மகிழ்ச்சியை நாடும் வாழ் விற்கும் உரிமையற்றவர்களாக மநுஸ்மிருதி மாற்றியதை அம்பலப்படுத்திய அம்பேத் கர் அதை கொளுத்துவதற்குத் தலைமை யேற்றது பொருத்தமானதுதான். ஒரு குறியீட்டுரீதியான எதிர்ப்பாக மநுஸ் மிருதியை எரித்த போராட்டத்தை “குடிமக்கள் யாவரும் சமம்” என்கிற ஓர் அரசியல் சட்டத்தை உருவாக்கித் தருவது வரை அம்பேத்கர் முன்னெடுத்தார்.


அதேவேளையில் மநுஸ்மிருதிக்கு எதிராகக் கனன்றெரியும் நெருப்பின் உக்கிரத்தில்தான் இந்தச் சமத்துவத்தை எட்டமுடியும் என்று எச்சரித்தும் வந்தார். ஆர்.எஸ்.எஸ் மநுஸ்மிருதியை பகவான் மநு அருளிய சட்டமெனப் போற்றுகிறது. அதேவேளையில் அரவணைத்து நெரிக் கும் தந்திரத்தோடு அது மநுஸ்மிருதியை கொளுத்திய அம்பேத்கரை வணங்கு வதாகவும் பசப்புகிறது.


பட்டியல் ஜாதிகளின் பெயருக்கு முன்னே இந்து என்கிற சொல்லைச் சேர்க்கும் அது தலித்துகள் இந்துக்களல்ல என நிறுவிய அம்பேத்கரை அவமதிக் கிறது. இந்த மோசடியை ஜோடிப்பதற்கான நூல்களைப் புளுகியுள்ள பிஜய் சங்கர் சாஸ்திரி முற்காலத்தில் பிராமண சத்திரிய உயர் ஜாதியினரான இவர்கள் இஸ்லா மியராக மாற மறுத்ததால் வந்தேறிகளால் மலமள்ளும் இழிநிலைக்குத் தாழ்த்தப் பட்டனர் என்று திரிக்கிறார்.


அது மட்டுமல்லாது மநுஸ்மிருதியை உயர்ஜாதியினரின் புனிதநூலென அம் பேத்கரே சொல்லியிருப்பதால் முன்னாள் உயர்ஜாதியினரான தலித்துகளும் மநுஸ் மிருதியை ஏற்கவேண்டும் என்றும் வாதிடுகிறார் - எப்படி தந்திரம்.


- மின்சாரம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக