புதன், 14 பிப்ரவரி, 2018

தீண்டாமைக்கு ஆதாரம் இல்லை என்று கூறுவது யாரை ஏமாற்ற?

நேற்று 13-02-2018 நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியில் தோழர் வே.மதிமாறன் அவர்கள் மிகவம் அறிவார்ந்த வினா ஒன்றைத் தொடுத்தார்

அதாவது

 எல்லோரும் இந்து என்று சொல்கிறீர்களே
இராம கோபாலனும் இந்துதான்
அர்ச்சுன் சம்பத்தும் இந்துதான்

இருவரும் காஞசி சங்கராச்சாரியாரைக் காண வரும்போது இராம கோபாலனுக்கு தொட்டு பிரசாதம் வழங்கும் சங்கராச்சாரி அர்ச்சுன் சம்பத்துக்கு தொடாமல் அவர் கை தன் மேல் பட்டு விடாதபடி ஒரு அடி உயரத்திற்கு தூக்கி பிரசாதம் வழங்குவவதும் அதனை அர்ச்சுன் சம்பத் மிகவும் பணிவாக குனிந்து பவ்யமாக வாங்குவது ஏன்? என்று கேட்டார்

அதற்கு பதில் சொல்ல வந்த பாஜக எஸ்ஆர் சேகர் என்பவர்

காஞ்சி மடத்திற்கென்று சில விதிமுறைகள் இருக்கிறது. அந்த விதிமுறையின்படி சங்கராச்சாரியார் நடந்துகொண்டார் என்று தெரிவித்தார்

அந்த விதிமுறை என்பது என்ன?

அதுதானே தீண்டாமை என்பது?

இராமகோபாலன் பிராமணர் என்பதால் தொட்டு பிரசாதம் வழங்குவதும் அர்ச்சுன் சம்பத்தை தொடாமல் வழங்குவதும் அந்தத் தீண்டாமையின் அடிப்படையில்தானே

தீண்டாமை சேமகரமானது என்று சொன்னவர்தானே சங்கராச்சாரியார்?

அந்தத் தீண்டாமையை சாஸ்திர விதிகளின்படிதானே சங்கராச்சாரி கடைப்பிடிக்கிறார்?

அவரே தீண்டாமையைக் கடைப்பிடிக்கும்போது மற்றவர்கள் அவருக்கு சப்பைக்கட்டு கட்டுவது ஏன்?

இந்து மத சாஸ்திரங்களில் தீண்டாமைக்கு ஆதாரம் இல்லை என்று கூறுவது யாரை ஏமாற்ற?

அப்படி ஆதாரம் இல்லை என்று கூறுபவர்கள்
தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் சங்கராச்சாரியைக் கண்டிக்காமல் வக்காலத்து வாங்குவது ஏன்?

இது ஊரை ஏமாற்றத்;தானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக