ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

பார்ப்பனர்களின் காவிப்பொய்



பார்ப்பனர்கள் தந்தை பெரியாரை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தலாம் என்று திட்டமிட்டுக் கொண்டே இருப்பான்கள் போல் தெரிகிறது
கேடி ராகவன் என்ற பார்ப்பான் இப்பொழுது புதிதாக யாரும் இதுவரை சொல்லாத ஒரு அவதூறை பெரியார் மிது சுமத்துகிறான்
தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறியதற்கு வேறு ஒன்றும் காரணம் இல்லையாம்
எல்லாம் பதவி ஆசைதானாம் காங்கிரசில் பதவி கிடைக்காததால்தான் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினாராம்.
அதற்கு அருள்மொழி பதில் சொன்னாங்க
பெரியார் பொதுவாழ்க்கைக்கு வருவதற்கு முன்பே 29 பதவிகளை வகித்து அனைத்துப் பதவிகளையும் தூக்கி எறிந்து விட்டு வந்தார் காங்கிரசில் வந்தும் மாகாண காங்கிரஸ் செயலாளராகவும் மாகாண தலைவராகவும் பதவி வகித்தார். அவர் பதவிக்காக காங்கிரசை விட்டு வெளியேறினார் என்பது தவறானது என்றார்
இது ராகவன் பார்ப்பான் மட்டுமல்ல
ஆதாரமில்லாமல் பொய் சொல்வது காவிக் கூட்டத்துக்கே உரிய கைவந்த கலை
ஒருமுறை விஜயபாரதம் இதழில் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறியதற்கு என்ன காரணம் சொன்னார்கள் தெரியுமா?
பெரியார் வகுப்புரிமைக்காகவோ சேரன்மாதேவிப் போராட்டத்திற்காகவோ காங்கிரசை விட்டு வெளியேறவில்லை
ஒருமுறை பெரியார் காங்கிரஸ் கட்சியின் செலவில் ரஷ்யாவுக்குப் போனார்
உடன் ராமநாதன் என்பவரை அழைத்துப் போனார்
வரும்போது ராமநாதனை ஜெர்மனியிலேயே விட்டுவிட்டு வந்து விட்டார்
இங்கே வந்த உடன் காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் ரஷ்யா சென்று வந்ததற்கான கணக்கை கேட்பதற்கு எல்லோரும் தயாராக இருந்தார்கள்
கணக்கு காட்ட முடியாததால் காங்கிரஸ் ஒழிக பார்ப்பான் ஒழிக என்று கோசம் போட்டுக்கொண்டு கூட்டத்திலிருந்து வெளியேறினார்
என்று அந்த விஜயபாரதத்தில் எழுதினான்
இது எவ்வளவு பெரிய ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பதை பெரியார் வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்
பெரியார் அவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறியது 1925ல்
ரஷ்யாவுக்கு சென்று வந்தது 1932ல்
1925ல் நடந்த சம்பவத்துக்கு 1932ல் நடந்த செயல்தான் காரணம் என்று எழுதுகிறான் என்றால் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்
இத்தகைய பொய்களை காவிக் கூட்டத்திடம் அவிழ்த்து விட்டால் ஏன்? எதற்கு என்று கேட்காமல் அப்படியே நம்புவான்
எதையும் ஆதாரத்தோடு பேசும் பெரியார் தொண்டர்களிடம் இது எடுபடுமா?
அப்படி விஜயபாரதம் அவிழ்த்து விட்ட பொய்யைப் போலவே இந்த ராகவன் பயலும் எதையோ அவிழ்த்து விடுவான் போலத் தெரிகிறது
இவர்கள் எவ்வளவதான் கோயபல்ஸ் பொய் சொன்னாலும் தந்தை பெரியார் என்ற இமயத்தை போர்வை கொண்டு மறைக்க முடியாது என்று மட்டும் எச்சரிக்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக