ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

நாடி ஜோஸ்யம்


ஒரு குடும்பத்தில் அம்மா அவங்க தங்கச்சி அவங்க பிள்ளைங்க என நாலு பேரு நாடி ஜோஸ்யம் பாக்கப் போனாங்களாம்
முன் ஜென்மத்தப் பத்தி சொன்ன ஜோஸ்யரு
ஒருத்தரு முன் பிறவியில சேர மன்னர் குடும்பத்தில இளவரசியாப் பொறந்தீங்கன்னாராம்
இன்னொருத்தரு சோழ மன்னர் குடும்பத்து இளவரசியாம்
மூனாவது நபர் பாண்டிய மன்னர் குடும்பத்து இளவரசியாம்
கடைசிப் பொண்ணு பல்லவ வம்சத்து இளவரசியாம்
ஏம்பா எல்லோருமே மன்னர் குடும்பத்துல இளவரசியாத்தான் பொறந்தாங்களா?
இந்த மன்னர்கள் எல்லாம் எத்தனை வருஷத்துக்கு முன்ன ஆண்டாங்க?
இத்தனை வருஷம் கழிச்சா இவங்க இந்தப் பிறவி எடுத்திருக்காங்க?
யாருமே ஏழை வீட்டில பிறக்கலயா?
ஒருத்தரும் பிச்சைக்காரன் வீட்டில பிறக்கலயா?
எப்படியெல்லாம் ஏமாத்துறான் பாரு?
ஒருத்தர ஏமாத்தனும்னா அவங்களை ரொம்பப் புகழனும்கிற சித்தாந்தத்த நல்லாப் புரிஞ்சுக்கிட்டு ஏமாத்தறான் பாருங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக