புதன், 14 செப்டம்பர், 2016

பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடவில்லையா?

பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடவில்லையா? பித்தலாட்டமான பிரச்சாரத்துக்கு பதிலடி!
காலுக்குச் செருப்பும் தோளுக்குத் துண்டும் போடுவதற்கு உரிமைபெற்றுத் தந்தவர் தலைவர் தந்தை பெரியார். உலகிலுள்ள மற்ற சமுதாய மக்களைப் போல தமிழ்ச் சமுதாயத்தை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றும் பணிக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்கள். இன்று உலகெங்கிலுமுள்ள தமிழர்கள்; தங்களுடைய உயர்வுக்குத் தந்தை பெரியாரின் உழைப்பே காரணம் என நன்றி உணர்ச்சியுடன் நினைவுகூர்கிறார்கள். ஆனால் இன்று சிலர் தந்தை பெரியாரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்ற பிரச்சாரத்தைத் திட்டமிட்டு நடத்தி இளைஞர்களைக் குழப்பி வருகிறார்கள். இந்த சமுதாயத்தின் வளர்ச்சியையும் வாழ்வையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தடுத்து வைத்திருந்த இன எதிரிகளும் துரோகிகளும் செய்துவரும் பித்தலாட்டமான பிரச்சாரங்களுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞர்களையும் பலிகடா ஆக்கப் பார்க்கிறார்கள்.
 அண்ணல் அம்பேத்கரை திராவிடர் கழகத்தவர்களும் பெரியார் தொண்டர்களும் யாரும் குறைத்து மதிப்பிடுவதில்லை. தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதிலே எங்களுக்கு எந்த விதமான அய்யப்பாடும் கிடையாது. ஆனால் தாழ்த்தப்பட்ட அமைப்புக்களில் உள்ள சிலருக்கு பெரியார் என்றால் வேப்பங்காயாகக் கசக்கிறது. பெரியார் பாடுபட்டதால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பயன் கிடைத்தது என்பதை ஒத்துக்கொண்டால் இளைஞர்கள் பெரியார் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு விடுவார்கள். தாங்கள் தனிக் கம்பெனி நடத்தி பிழைப்பு நடத்த முடியாது என்று கருதக் கூடிய சிலர் அந்த அமைப்புக்களில் முன்னணியில் இருப்பதால் பெரியாருக்கு எதிரான பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்கள். அவர்கள் அம்பேத்கரையும் முழுமையாகப் படித்துப் புரிந்துகொண்டதில்லை. அவர் கொள்கையை ஏற்றுக் கொண்டு அதன்படி நடப்பதுமில்லை. அதனால்தான் அவர்கள் பெரியாருக்கு எதிராகப் பேசி வருகிறார்கள்.
 அண்ணல் அம்பேத்கர் சட்டத்தின்மூலம் இட ஒதுக்கீட்டுச்  சலுகைகயைப் பெற்றுத் தந்தார்கள் என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை. ஆனால் சென்னை மாகாணத்தில் அந்த இட ஒதுக்கீடு 1928 முதல் கம்யூனல் ஜி.ஓ. என்ற பெயரில் நடைமுறையில் இருந்து வந்தது. அந்த கம்யூனல் ஜி.ஓ மூலம் அனைத்து அரசுப் பணிகளிலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முன்னேறிய ஜாதியினர், பார்ப்பனர் உட்பட அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. சுதந்திரம் அடையும்வரை அதில் யாரும் கைவைக்க முடியவில்லை. சுதந்திரம் பெற்ற பிறகும்கூட ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் போன்றவர்கள் அந்த இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதில் உறுதியுடன் இருந்தார்கள். சுதந்திரம் அடைந்து குடியரசு நாடாக அறிவித்த உடன் அண்ணல் அம்பேத்கருடன் அரசியல் சட்ட வரைவுக்குழுவில் ஒரு உறுப்பினராக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி என்ற கில்லாடிப் பார்ப்பானால் சென்னை உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் செல்லாது என்று தீர்ப்பு வாங்கப்பட்டது.
 அப்பொழுது தமிழகத்தில் தந்தை பெரியாரும் அவர்தம் இயக்கத்தினரும் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் அன்று பிரதமராக இருந்த நேருவும் சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களும் அரசியல் சட்டத்தை முதல் முதலாகத் திருத்தி இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்தார்கள்.
 அவ்வாறு அந்த அரசியல் சட்டத் திருத்தம் வரவில்லையென்றால் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. இப்படி இந்திய அரசியல் சட்டத்தை முதல்முதல் திருத்தி இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்த பெரியாரால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பது நன்றி உணர்ச்சியற்ற தன்மையாகும். இவ்வாறு நன்றி உணர்ச்சியற்ற சிலர் இளைஞர்களுக்கும் அந்த நன்றி உணரச்சி வரக்கூடாது என்று கருதக் கூடியவர்கள் இதுபோன்ற பரப்புரைகளைச் செய்து வருகிறார்கள். தயவு செய்து அவர்களுக்கு உண்மையான வரலாற்றைச் சொல்லாவிட்டாலும் தவறான வரலாற்றைப் பதிவு செய்து வரலாற்றில் கரும்புள்ளி ஆகாதீர்கள் என்று கேட்டுக்கௌகிறோம். 

 'குல கல்வி திட்டம் எதிர்ப்பு' பிராமணர்கள் உட்பட அனைவரும் தங்களது குல தொழிலை செய்ய வேண்டும் என்ற ராசாசி அவர்களின் கருத்தை எதிர்த்து நடத்தப்பட்ட பொதுவான போராட்டம். இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் மட்டும் பலன் அடைந்தனர் என்பது முட்டாள் தனமான வாதம்”

இப்படியும் ஒரு பிரச்சாரம் தாழ்த்தப்பட்ட இளைஞர்களிடையே செய்யப்பட்டு வருகிறது.  இதில் உள்ள விசமத்தனத்தைப் பாருங்கள்ää குலக்கல்வித் திட்டம் என்பது என்ன?
“வண்ணான் மகன் துணி வெளுக்க வேண்டும். அம்பட்டன் மகன் முடிவெட்ட வேண்டும். சக்கிலியின் மகன் செருப்புத் தைக்க வேண்டும். குயவன் மகன் மண்பானை செய்ய வேண்டும்” என்பதுதான். இந்தத் திட்டம் அமுலாகி இருந்;தால் இந்த நவீன பார்ப்பனர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள்?. எங்காவது சுடுகாடு காத்துக்கொண்டு எவன் வீட்டிலாவது இழவு விழாதா? கால்பணம் முழத்துண்டு வாய்க்கரிசி கிடைக்காதா? என்று காத்துக் கிடக்க வேண்டும்? எவன் வீட்டு மாடாவது சாகாதா? செத்த மாட்டுக்கறி கிடைக்காதா? என்று ஏங்கித் தவி;க்க வேண்டும். ஒரு பழமொழி கூட உண்டு. எடச்சிக்கு மாடு செத்துப்போச்சின்னு கவலைää பறச்சிக்குக் கொழுப்பில்லயேன்னு கவலையென்ற பழமொழிகூட உண்டு.
இப்படிப்பட்ட நிலையிலிருந்து மாற்றி பள்ளன், பறையன், சக்கிலியன் எல்லாம்  டாக்டராக எஞ்சினியராக, வக்கீலாக,  நீதிபதியாக, கலெக்டராகவெல்லாம் எப்படி ஆக முடிந்தது?
மாணவன் என்ன தொழிலைச் செய்யவேண்டும்? என்பது பாடத்திட்டத்திலேயே இருந்தது.  ஒவ்வொரு தொழிலாளியின் படத்தையும் போட்டு ~இவன் குயவன் - மண்பாண்டம் செய்கிறான், இவன் ஆசாரி – மரவேலை செய்கிறான், இவன் வண்ணான் - துணி துவைக்கிறான் என்று படம் போட்டு ~ன்| விகுதி இட்டு விளித்து அய்யரை மட்டும் ~இவர் அய்யர் - நல்லவர், பாடம் படிக்கிறார்| என்று பாடப்புத்தகத்திலேயே இருக்கும்.
அந்தப் பிள்ளைகளெல்லாம் ஒழுங்காக அவனவன் அப்பன் தொழிலைத்தான் செய்கிறார்களா? என்று கவனிக்க வேண்டியது ஆசிரியரின் வேலை. மாடுமேய்த்து விட்டு, கல்லுடைத்து விட்டு, மண்சுமந்து அடுத்தநாள் பள்ளியில் வந்து ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு விடை தெரியாது திருதிரு வென விழிக்கும்போது அந்தப் பார்ப்பன வாத்தி சொல்லுவான் ~எண்டா சூத்திர முண்டம், நீயெல்லாம் ஏண்டா படிக்க வந்து என் உசிர வாங்குறே! போய் உங்கப்பன் தொழிலைச் செய்ய வேண்டியதுதானேடா| என்று ஜாதித் திமிரோடு சொல்லுவான்.
இதை அப்படியே விட்டிருந்தால் எவனாவது இன்று பி.ஏ. எம்.ஏ. பிஈ. எம்இ. எம்.பி.ஏ. எம்பிபிஎஸ். எம்டி. என்றெல்லாம் போட்டுக்கொண்டு திரியமுடியுமா? ஜீன்ஸ் பேண்ட டிசர்ட், கோட், சூட், எல்லாம் வந்திருக்குமா? உங்கள் வீட்டுப்பெண்கள், பட்டுப்புடவையும் நகையுமாக மினுக்கிக்கொண்டு திரியமுடியுமா?
அந்தக் கொடிய குலக்கல்வித் திட்டத்துக்கு ராஜாஜி கொடுத்த பெயர் என்ன தெரியுமா? தொழில் கல்வித் திட்டம். அத்தகைய தொழில்களைத்தான் நீங்கள் செய்துகொண்டிருக்க வேண்டும். உங்கள் ஜாதிக்குரிய தொழிலைத் தவிர்த்து வேறு தொழில்களைச் செய்ய உங்களுக்கு உரிமை இல்லை. அது அமுலாகி இருந்தால் உங்கள் ஆட்கள் இன்று யாராவது சிவில் இஞ்சினியர், மெக்கானிக்கல் எஞ்சினியர்ä,ஸாஃப்ட்வேர் எஞ்சினியர் என்றெல்லாம் ஜம்பம் அடிக்க முடியுமா?
அந்தக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த ராஜாஜி உங்களுக்கு நல்ல்ல்ல்;..லவர்? அதை ஒழித்த பெரியார் கெட்டவரா? பரவாயில்லை. பெரியார் அதை ஒழித்தார். அதனால் எங்களுக்கு மட்டும் நன்மை இல்லை. எல்லோரும் பலனடைந்தார்கள் என்றாவது உங்களையும் அறியாமல் ஒப்புக் கொண்டீர்களே! அது முட்டாள்தனமானது என்று நீங்கள் முட்டாளாக இருந்தாலும் உண்மையை முட்டாள்தனமாக உளறியதற்கு நன்றி! இப்பொழுதும் சொல்கிறோம். பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் போராடவில்லை. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட அனைவருக்கும்தான் போராடினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டும்தான் போராடினார் என்று நீங்களாக நினைத்துக் கொண்டிருந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் எல்லாம் நன்றியோடு இருப்பீர்கள் என்றா பெரியார் பாடுபட்டார்? நன்றி பாராத தொண்டுக்குச் சொந்தக் காரராயிற்றே!
நன்றி என்பதற்கு உங்கள் அகராதியில் இடம் உண்டா?
ஆயிரம் பேர் வெள்ளத்தில் சிக்கித் தத்தளிக்கும்; நேரத்தில் அனைவரையும் ஒருவர் துணிச்சலாகக் காப்பாற்றும்போது அவரால் காப்பாற்றப்பட்ட ஒருவர் ~இவர் என்ன பிரமாதமாக என்னை மட்டும் காப்பாற்றிவிட்டார்? ஆயிரம் பேரைக் காப்பாற்றும்போது அதிலே நானும் ஒருவனாக இருந்தேன். என்னை மட்டும் காப்பாற்றியிருந்தால் நான் அவருக்கு நன்றி சொல்வேன். இப்பொழுது அவருக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும்? என்று கேட்கிற நன்றி கெட்டவனுக்கும்  உங்களுக்கும் என்ன வேறுபாடு?
தமிழ்தேசியம் தமிழ்த் தேசியம் என்று பேசுகிறீர்களே! தாழ்த்தப்பட்டவரைத்தவிர பலனடைந்த மற்றவர்களெல்லாம் உங்களுக்குத் தமிழராகத் தெரியவி;லையா? ராஜாஜி தமிழரா? அவர் தமிழனென்றால் மற்ற தமிழனெல்லாம் படிக்கக் கூடாது என்று திட்டம் போட்டது ஏன்?
ராஜாஜியினுடைய முன்னோடி திலகர் இல்லையா? அவர்தானே கீழ்ஜாதிக் காரனெல்லாம் சட்டமன்றத்துக்குச் செல்வதும் மேல்படிப்புப் படிக்கத் தேவையில்லை என்றும் சொன்னார்? அவர் வழியில்தானே ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்? அந்த ராஜாஜிக்கும் திலகருக்கும் என்ன உறவு?
அந்த ராஜாஜி அவ்வளவு சுலபமாக அத்திட்டத்தை வாபஸ் வாங்கினாரா? பெரியார் நடத்திய போராட்டங்கள் சாதாரணமானதா? பிள்ளையார் படத்தைப் போட்டு உடைத்ததும் ராமன் படத்தைச் செருப்பால் அடித்ததும் அதற்காகத்தானே? காங்கிரஸ் தலைவர்களே எதிர்த்தாலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களே எதிர்த்தாலும் அத்திட்டத்தை வாபஸ் வாங்க மாட்டேன் என்று சொன்னவர்தானே உங்கள் ராஜாஜி?
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தபோது ஒரு வாக்கு வித்தியாசத்தில் ராஜாஜி வெற்றி பெற்றாரே! எப்படி என்று தெரியுமா? எந்தக் கட்சி அந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்ததோ அந்தக் கட்சித் தலைவரே அன்று சட்டமன்றத்துக்குச் செல்லவில்லை. சட்டமன்றத்துக்கு வெளியே ஒன்று சட்டமன்றத்துக்கு உள்ளே ஒன்று என்று நடந்து கொண்டு தங்கள் இனத்தவரின் ஆட்சிக்கு எதிராக ஓட்டுப்போடாமல் அந்த ஆட்சியைக் காப்பாற்றினாரே! அந்தத் தலைவர் தமிழரா? அவர் மட்டும் ஓட்டுப் போட்டிருந்தால் அன்றைக்கே ராஜாஜி பதவியைவிட்டு ஓடியிருப்பார். அப்படிச் செய்யாமல் அவர் ஆட்சி காப்பாற்றப்பட்டதே! எப்படி?
அதற்குப் பிறகு புதிய தெம்புடன் குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி அமுல்படுத்திய நேரத்தில் அது எப்படி ஒழிக்கப்பட்டது?
பார்ப்பனர்கள் மூன்று சதவிகிதம். திராவிடர் கழகத்துக் காரனும் மூன்று சதவிகிதம். ஒருவனுக்கு ஒருவன் என்று வைத்தாலும் பார்ப்பன இனத்தைப் பூண்டற்றுப் போகச் செய்யலாம். நாம் அழிந்தாலும் நம்முடைய இனத்தின் கல்விக்கண் திறக்கப்பட்டால் போதும் என்று பெட்ரோலும் தீப் பந்தமும் வைத்துக் கொள்ளுங்கள் தோழர்களே! என்று தன்னுடைய தோழர்களுக்கு ~சாகும் துணிச்சலைக் கொடுத்து| தான் சொல்லுகின்ற நேரத்தில் அக்கிரஹாரத்தைக் கொளுத்துங்கள் என்று உணர்ச்சியூட்டி அதற்கான வழிநடைப் படையை நடத்திவர் பெரியார் அல்லவா? அந்தப் படை சென்னையைச் சென்றடைவதற்குள் குலக்கல்வித் திட்டம் வாபஸ் வாங்கப் படவில்லையென்றால் அக்கிரஹாரத்தைக் கொளுத்துவோம் என்று சொன்னவர் பெரியார் அல்லவா?
அதற்குப் பிறகும் ராஜாஜி மசிந்தாரா? திட்டத்தை வாபஸ் வாங்கினாரா? இல்லையே! திட்டத்தை வாபஸ் வாங்காமலேயே உடல்நிலை சரியில்லையென்று கூறி பதவியை ராஜினாமா செய்தாரே தவிர திட்டத்தை வாபஸ் வாங்கவில்லையே! அந்த ராஜாஜி உங்களுக்கு நல்லவர்? பெரியார் துரோகியா?

“கணக்கு வழக்கு இன்றி தீண்டாமை அனுபவித்த 'நாடார்' சமூகத்துக்காக பெரியார் உழைத்ததை தான் இன்று அவர் ஏதோ 'தாழ்த்தப்பட்டோருக்காக' போராடினார் என்று சப்பை கட்டு கட்டுகின்றனர். முத்துராமலிங்க தேவர்ää ராஜாஜி உட்பட பலரும் பறையர்இநாடார் போன்றோருக்கு 'மதுரை மீனாட்சி அம்மன்' கோவிலுக்குள் நுழைய 'ஆலைய நுழைவு போராட்டம்' நடத்தியுள்ளனர். ஆனால்ää பெரியார் நாடாரை விடுத்து இன்று தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் யாருக்காகவும்ää எங்கேயும்ää எந்த காலத்திலும் ஒரு சிறு துரும்பையும் தூக்கி போட்டது இல்லை”.

இப்படியும் ஒரு பிரச்சாரத்தை தாழ்த்தப்பட்டோர் மத்தியிலே செய்து வருகிறது ஒரு கும்பல். பெரியார் ஒரு மனித உரிமைப் போராளி. யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களுக்காகப் போராடுவது அவருடைய கொள்கை. மானுட நேயத்தோடு அவர் நடத்திய போராட்டத்தைக் கொச்சைத் தனமாகப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றால் அது அவர்களது மன வக்கிரத்தையே காட்டுகிறது.
அவர்களே சொல்லுகிறார்கள் ~கணக்கு வழக்கின்றித் தீண்டாமையை அனுபவித்த நாடார்| சமூகம் என்று. அப்படிக் கணக்கு வழக்கின்றிக் கொடுமையை அனுபவித்த மக்களுக்காக் போராடுவது மிகப் பெரிய குற்றமா? அது மிகப்பெரும் மனிதநேயச் செயல் அல்லவா? நாடார்களை நீங்கள் மனிதர்களாகப் பார்க்கவில்லையா?
எப்படிக் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததால் எல்லோருக்கும் பயன் கிடைத்ததோ அப்படித்தான் வைக்கத்தில் நடந்த போராட்டத்தினால் தீண்டாமை எங்கேயும் எந்த வடிவத்திலும் இருக்கக் கூடாது என்கின்ற நிலை ஏற்பட்டு அந்த திருவிதாங்கூர் அரசாங்கமே இனி எங்கும் எந்த வடிவத்திலும் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட மாட்டாது என்று உத்தரவு போட்டது. அந்த உத்தரவில் என்ன நாடார்கள் மட்டும்தான் தெருவிலே நடக்கலாம். மற்ற தாழ்த்தப்பட்டவர் யாரும் நடக்கக் கூடாது என்றா இருந்தது?
அந்த உத்தரவிற்குப் பிறகுதான் சென்னை மாகாணத்தில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் தீண்டாமை ஒழிப்புக்கான தீர்மானத்தைக் கொண்டு வந்து நீதிக்கட்சி அரசால் அது நிறைவேற்றப்பட்டது. அதற்கெல்லாம் முன்னோடியான செயலாகத்தான் பெரியாரின் வைக்கம் போராட்டம் நடந்தது. அதனையே  கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால் இவர்களைவிட மனிதநேயத்துக்கு எதிரானவர்கள் யாராவது இருக்க முடியுமா?
இவர்கள் கூற்றுப்படியே எங்காவது பெரியார் தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினருக்காகப் போராடினார் என்றால் பள்ளனுக்குத்தானே போராடினார். பறையனுக்கா போராடினார்? எனவேää பெரியார் பறையர்களுக்கெல்லாம் எதிரி என்றுகூடப் பேசுவார்கள். அல்லது பள்ளனுக்கா போராடினார்? பறையனுக்குத்தானே போராடினார். அதனால் அவர் பள்ளனுக்கு எதிரி என்று பேசுவார்கள். இவர்களது சுயநலமும் வக்கிரபுத்தியும் அப்படி அவர்களைப் பேச வைக்கிறது.
முத்துராமலிங்கத் தேவரையும் இராஜாஜியையும் பாராட்டிப் பேசுகின்ற இவர்கள் பெரியாரை மட்டும் தாழ்த்திப் பேசுவது ஏன்? முத்துராமலிங்கத் தேவர் தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டவரா? அல்லது அவரது சமுதாயம் தீண்டாமையைக் கடைப்பிடிக்காத சமுதாயமா?
நாடார்களின் கோயில் நுழைவுப் போராட்டத்தை எதிர்த்தவர்கள் யார்? முழுக்க முழுக்க தேவர் சமுதாயம்தானே? திருச்செந்தூர் கோயிலிலாகட்டும்ä,திருவில்லிப்புத்தூர் கோயிலிலாகட்டும், சிவகாசி போன்ற கோயில்களிலாகட்டும் அக் கோயில்களெல்லாம் சேதுபதி மன்னர் கட்டுப்பாட்டில்தானே இருந்தது? அவர்கள்தானே நாடார்கள் கோயில் நுழைவை எதிர்த்து லண்டன் பிரிவி கவுன்சில்வரை வழக்குப் போட்டவர்கள்? மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் நாடாரை எதிர்த்தவர்கள் பார்ப்பனர்களும்  தேவர்களும்தானே?
பார்ப்பனர்களின் ஆலோசனையை ஏற்று அவர்கள் எடுத்துவைத்த ஸ்ருதி, ஸ்மிருதி, புராண - இதிகாசங்கள், மனுதர்மம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டுதானே வெள்ளைக்கார நீதிபதி நாடார்களுக்குக் கோயிலில் நுழைய உரிமை இல்லை என்றதோடு எந்தெந்த வருணத்தார் எந்தெந்த இடத்தில் நின்று கடவுளை வழிபடலாம் என்று தீர்ப்புச சொன்னான்? அப்படிச் சொன்னதில் நாடார்கள் கொடிமரம் வரை செல்லலாம் என்று தீர்ப்புச் சொன்னவன் தாழ்த்தப்பட்டவன் எங்கே நிற்கவேண்டும் என்று சொன்னான் தெரியுமா? கோயிலுக்குள்ளேயே தாழ்த்தப்பட்டவன் வரக்கூடாது. கோபுரம் எவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்தால் தெரிகிறதோ அவ்வளவு தொலைவிலிருந்துதான் வழிபட வேண்டும் என்று சொல்லப்பட்டதா? இல்லையா? இதற்கெல்லாம் காரணம் யார்? இந்நாட்டுப் பார்ப்பனர்கள் அல்லவா?  அந்தப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்த பெரியார் உங்களுக்கு எதிரியா?
அத்துடன் முத்துராமலிங்கத் தேவர் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் போராடியதாகச் சொல்லுகிறீர்களே! அது உண்மையானால் முதுகுளத்தூர் கலவரம் ஏன் நடந்தது? அதற்கு முன்பு அப்பகுதியில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை என்ன? அதனை எதிர்த்து முத்துராமலிங்கத் தேவர் செய்த காரியங்கள் என்ன? இம்மானுவேல் சேகரன் ஏன் கொல்லப்பட்டார்? இதற்கெல்லாம் நாணயமான பதிலை உங்களால் சொல்ல முடியுமா?
ஒருவேளை அங்கு நடந்த கொடுமைகள் பள்ளர்களுக்குத்தான் நடந்தது. பறையர்களுக்கு இல்லை. எனவே பள்ளர்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் கொடுமைகளே அல்ல பறையர்களுக்குக் கொடுமை நடந்தால்தான் அதனைக் கண்டிப்போம். எனவே அதனைக் கண்டிக்க மாட்டோம் என்று சொல்வீர்களா?
சாணார்களுக்கு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோ அத்தனை கட்டுப்பாடுகளும் இராமநாதபுரம் பகுதியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் விதிக்கப்பட்டதா? இல்லையா?
ஆண்கள் காலில் செருப்பு அணியக்கூடாது, வெயிலுக்கோ, மழைக்கோ  குடை பிடிக்கக்கூடாது,தோளில் துண்டு அணியக் கூடாது, திருமணங்களில் குதிரை மீதேறி ஊர்வலம் வரக்கூடாது, விருந்துகளில் நெய் ஊற்றிச் சாப்பிடக்கூடாது என்றும்
பெண்கள் மேலாடை அணியக்கூடாது, தங்கநகை அணியக் கூடாது, உலோகப் பாத்திரத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது, என்றும் இன்னும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டதா? இல்லையா?
அதை மீறியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்டார்களா? இல்லையா? விவசாய வேலை செய்யும்போது கொடுக்கின்ற கூலியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர போதவில்லை என்று கேட்கக்கூடாது என்றெல்லாம் கூடக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதா? இல்லையா?
அத்தகைய தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையின்போது தேவருக்கு நிகராக நாற்காலியில் கால்மேல் கால்போட்டுக் கொண்டு அம்ர்ந்திருந்தார், தேவருக்கு எதிரில் சிகரெட் பிடித்தார் என்பதால்தானே இம்மானுவேல் சேகரன் பரமக்குடி பேருந்து நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார்?
அந்த தேவர் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தாராம். பெரியார் ஒன்றும் செய்யவில்லையாம். எப்படி இருக்கிறது கதை?
நாடார்கள் கோயில் நுழைவு தொடர்பாக 1922ல் திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் விவாதம் வந்தபோது நாடார்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது இது சாஸ்திரத்துக்கு விரோதமானது என்று சொன்னவர் வைத்தியநாத அய்யர. அதனால்தான் பெரியார் அவரைக் கண்டிக்கும் வகையில் அப்பொழுதே இந்த ஜாதிகளைப் பாதுகாக்கும் மனுதர்மம், இராமாயணம், பாரதம், கீதை ஆகியவைகளைத் தீ வைத்துப் பொசுக்க வேண்டும் என்று சொன்னார்.
அப்படி நாடார்களின் கோயில் நுழைவையே ஏற்றுக் கொள்ளாத வைத்தியநாத அய்யர் போன்றவர்கள் மதுரைக் கோயிலில் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறதே, எப்படி?
வடபுலத்தில் அண்ணல் அம்பேத்கர் தீண்டாமைக்கு எதிராகப் போராடி வந்தார். பெரியாரின் வைக்கம் போராட்டம்தான் அம்பேத்கர் நடத்திய மகாத் குளப் போராட்டத்துக்கு உந்துசக்தியாக இருந்தது என்று அம்பேத்கரே சொல்லி இருக்கிறார். அந்த அண்ணல் அம்பேத்கர் இந்த உயர் ஜாதிக் காரர்களோடும் பார்ப்பனர்களோடும் போராடிப் பயனில்லை. அதனால் நான் மதம் மாறப் போகிறேன் என்று சொன்னார். அப்படி தாழ்த்தப்பட்டவர்களெல்லாம் மதம் மாறிவிட்டால் தங்களுக்கு அடிமைவேலை செய்ய ஆள் இல்லாமல் போய் விடுவார்களே என்பதால்தான் அவர்களை மதம் மாறவிடாமல் தடுத்து தங்கள் மதத்திலேயே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் எனறு ஏமாற்றுவதற்காக நடத்திய நாடகம்தான் இந்த மீனாட்சி கோயில் நுழைவு என்பது. அதில் கலந்துகொண்ட ராஜாஜி, முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்கள் தீண்டாமை ஒழிப்பு வீரர்கள், பெரியார் எதிரானவரா?
பெரியார் தமிழர் இல்லை என்கிறீர்கள். அப்படியானால் அம்பேத்கர் தமிழரா? அவரும் மகார்களைத்தான் பவுத்த மதத்துக்கு அழைத்துச் சென்றாரே தவிர அனைத்துத் தாழ்த்தப்பட்டோரையும் அவரால் அழைத்துச் செல்ல முடியவில்லை. மற்றவர்கள் யாரும் அம்பேத்கரை நம்பவில்லை. அதனால் அம்பேத்கர் மகார்களுக்கு மட்டும்தான் தலைவர். ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தலைவர் அல்ல என்று சொல்வீர்களா? என்னய்யா உங்கள் பித்தலாட்டம்?
சரி, தாழ்த்தப்பட்டோர் என்பவர்தான் யார்? பள்ளனா? பறையனா? சக்கிலியனா?
பள்ளன் பறையனை ஏற்றுக் கொள்வதில்லை. பறையன் பள்ளனை ஏற்றுக் கொள்வதில்லை. அந்த இரண்டு பேரும் சக்கிலியனை ஏற்றுக் கொள்வதில்லை. பள்ளனுக்கும் பறையனுக்கும் சேவை செய்ய புதிரை வண்ணான் என்ற பிரிவை வைத்து மற்ற மேல் ஜாதியார் உங்களை எப்படிக் கீழான நிலையில் நடத்துகிறார்களோ அதைவிடக் கீழான நிலையில் அந்தப் புதிரை வண்ணாரை நடத்துகிறீர்கள்.
அத்துடன் சக்கிலியனை தமிழன் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். நாங்கள் மனிதர் என்று சொல்கிறோம். அருந்ததியர்தான் சமுதாயத்திலேயே மிகமிகக் கீழான நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். மனிதாபிமானமற்ற முறையில் மனித மலத்தைத் தலையிலே சுமக்க வைக்கப்பட்டவர்கள் அவர்கள். அவர்களை உங்களோடு இணைத்துக் கொள்ளமாட்டோம் என்பதே மனிதத் தன்மையற்ற செயல்.
அத்தகைய மனிதத் தன்மையற்ற நீங்கள்தான் தனக்கு ~இனப்பற்றோ, ஜாதிப்பற்றோ, மொழிப்பற்றோ, நாட்டுப்பற்றோ எந்தப் பற்றும் இல்லை. எனக்கு இருப்பது மனிதப் பற்று ஒன்றுதான்| என்று சொன்ன பெரியாரை நாயக்கர் என்று முத்திரை குத்துகிறீர்கள்.
தன்னைப் பற்றிச் சொல்லுகின்றபோது பெரியார் இந்தப் பணியைச் செய்வதற்கு எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, வேறு யாரும் இப்பணியைச் செய்ய முன் வராததால் நானே எனது தோள்மீது போட்டுக்கொண்டு அதே பணியாய்  இருந்து வருகிறேன்| என்று சொல்லுகிறார். எதற்காக அப்படிச் சொல்லுகிறார்? ~உலகிலுள்ள மற்ற சமுதாய மக்களைப் போல மானமும் அறிவுமுள்ள சமுதாயமாக தமிழ்ச் சமுதாயத்தை மாற்ற வேண்டும்| என்பதற்காகச் சொல்லுகிறார்.
அப்படி மானஉணர்ச்சி தமிழனுக்கு வந்துவிடக் கூடாது என்று எண்ணுபவராகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள். அதனால்தான் பெரியாரை மானுட நேயராகப் பார்க்க முடியவில்லை. வெள்ளையரான ஆபிரஹாம் லிங்கன் கறுப்பர்களுக்காக உழைத்தபோது எந்தக் கறுப்பரும் வெள்ளையரான உங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. என்று சொல்லவில்லை.
ஆனால் தங்கள் இன்னல்களுக்கெல்லாம் காரணம் தலைவிதி என்றும், பாவம் என்றும், புண்ணியம் என்றும் மறுஜென்மம் என்றும் திக்குத் தெரியாமல் தவித்த  மக்களிடையே ~இது உன் தலைவிதியன்று, ஆதிக்கவாதிகள் செய்த சதி| என்று சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி சுயமரியாதை உணர்வூட்டிய பெரியாரை  நாயக்கர் என்ற வட்டத்துக்குள் அடைப்பது உங்களுடைய கோணல் புத்தியே தவிர வேறல்ல.
~~மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது@ கண்ணில் படக்கூடாது@ தெருவில் நடக்கக்கூடாது@ கோயிலுக்குள் போகக்கூடாது@ குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கிறவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, பூமிப்பிளவில் அமிழச்செய்யாமலோ, சண்டமாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது? என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும், அஹிம்சா தர்மத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? இம்மாதிரியான மக்கள் இன்னும் ஒரு நாட்டில் இருந்துகொண்டு உயிர் வாழ்வதைவிட அவர்கள் இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கிறீர்களா?| என்பதும் எனக்கு விளங்கவில்லை.
இம்மாதிரி மனித சமுதாயத்தை கொடுமைப்படுத்தி அடக்கி வைத்துக் கொண்டிருக்கிற நாடு சுயராஜ்யம் என்றோ, அரசியல் சுதந்திரம் என்றோ, பூரணவிடுதலை என்றோ வாயினால் உச்சரிக்கவாவது யோக்கியதை உடையதாகுமா? என்று கேட்கிறேன். சிலர் சுயராஜ்யம் வந்தால் இவை ஒழிந்துபோகும் என்று சமாதானம் சொல்லக்கூடும். அவர்களை நான் கேட்கிறேன். சுயராஜ்யம் மட்டுமல்ல தர்மராஜ்யமும் அவதார ராஜ்யமும் ராமராஜ்யமும் சத்தியராஜ்யமும் சத்திய சந்தன ராஜ்யமுமாகிய அரிச்சந்திர ராஜ்யமும் மற்றும் கடவுளே அரசாண்டதாகச் சொல்லும் அரசாட்சிகள் உள்ள காலத்தில்தானே இவைகள் உண்டாக்கப்பட்டதாகவும் இவற்றை சரிவரப் பரிபாலித்து வந்ததாகவும் இவை மகாக்கிரமமாக நடைபெற்று வந்ததாகவும் சொல்லப்படுகின்றன. அந்த ராஜ்யங்கள் வருமானால் இக்கொடுமைகள் குறையுமா? அதிகரிக்குமா? என்று கேட்கிறேன்.                              என்று தந்தை பெரியார் அவர்கள் பேசி 02-12-1928 லேயே குடியரசு இதழில் வெளிவந்தது.
பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னதற்கும் சுயராஜ்யம், அரசியல் சுதந்திரம், பூரண விடுதலை என்று பேசுவதற்கு முன் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்படி இல்லையேல் இந்நாட்டிற்கு சுதந்திரமே வேண்டாம் என்று சொன்னதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்த கொடுமைகளே காரணமாயிருக்கும் போது பெரியார் தாழ்த்தப்பட்டோருக்காக ஒரு துரும்பையும் தூக்கிப் போட்டதில்லை என்கின்ற பிரச்சாரம் அயோக்கியத் தனமானது.

"துணி விலை உயர்ந்ததுக்கு காரணம் பறைச்சி எல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சதால தான்இ வேலை இல்லா திண்டாட்டத்துக்கு காரணம் பள்ளன் எல்லாம் படிக்க ஆரம்பிச்சதால தான்இ அரிசி விலை உயர்ந்ததுக்கு காரணம் கள்ளு குடிக்கிறவன் எல்லாம் சோறு திங்கிரதால தான்" முரசொலி பத்திரிகையில் வெளியானது
தாழ்த்தப்பட்டோர் பற்றி இப்படி மிக உன்னதமான கருத்துகளை வைத்திருந்த பெரியார் அவர்களுக்காக எந்த ஒரு போராட்டத்தையும் எங்கும் எப்போதும் நடத்தியதே இல்லை. இது அதிர்ச்சி அளிக்க கூடிய மிகவும் கசப்பான உண்மை. இதில் இருந்து பெரியார் 'தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர்' என்று கூறி வந்தது சரி தானா என்று தீர்மானிப்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

இப்படியும் ஒரு குற்றச்சாட்டை தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபடுவதாகச் சொல்கிறவர்கள் சொல்லி வருகிறார்கள்.

ஆர்எஸ்எஸ் காரர்களும் பார்ப்பனர்களும் எப்படிப்பட்ட தில்லுமுல்லு திருகுதாள வேலைகளைச் செய்வார்களோ அப்படிப்பட்ட திருகுதாள வேலைதான் இது.
பெரியாருடைய பேச்சுக்கள் எழுத்துக்கள் 480 தலைப்புக்களிலும் பெரியார் களஞ்சியங்கள் 32 பாகங்களாகவும் பெரியார் சிந்தனைகள் 3 பாகங்களாகவும் குடியரசுத் தொகுப்புக்கள் 40க்கு மேலும் வந்துள்ளன. அதில் உள்ளதுதான் ஆதாரமானவை. அதிகாரப் பூர்வமானவை. அப்படி இல்லாமல் மற்ற பத்திரிகைகளில் வந்ததெல்லாம் எதுவும் உண்மையானவை என்று சொல்ல முடியாது.
பெரியார் இவ்வாறு சொன்னார் என்று நீங்கள் கூறுகின்ற காலக்கட்டம் எது?
1962ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் இப்படிப் பேசியதாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன. இவையெல்லாம் தேர்தலுக்காகச் செய்யப்படுகின்ற மலிவான அயோக்கியத்தனமான பிரச்சாரங்களாகும்.
அந்தக் காலக்கட்டமானது சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்ற காலமாகும். காமராசரின் பொற்கால ஆட்சியில் தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் கல்வி நீரோடை பெருகி அனைவரும் டாக்டர்களாகவும்ää இஞ்சினியர்களாகவும்ää ஆசிரியர்களாகவும்ää எப்பொழுதும் இல்லாத அளவுக்குப் பட்டமும் பதவிகளும் பெற்ற காலமாகும். தாழ்த்தப்பட்டவர்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களிலும் படித்தவர் எண்ணிக்கை அதிகமானது. ஏராளமான பள்ளிக் கூடங்கள்ää கல்லூரிகள்ää தொழிற்சாலைகள்ää அணைக்கட்டுகள் உருவாக்கப்பட்டன.
அப்படிப்பட்ட பொற்கால ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக தேர்தலில் இராஜாஜியோடு திமுகää கம்யூனிஸ்ட்ää தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்புää முஸ்லிம் கூட்டமைப்பு எல்லோரும் கூட்டுச் சேர்ந்து காமராசர் ஆட்சியை வீழ்த்தத் திட்டமிட்டனர். அந்த ஆட்சி மீது வேறு எந்தக் குற்றச்சாட்டையும் கூறமுயாதவர்கள் விலைவாசி ஏறிப்போச்சுää வேலையி;ல்லாத் திண்டாட்டம் பெருகிப் போச்சுää அரிசிவிலை கூடிப்போச்சு என்று கூச்சல்  போட்டார்கள்.
இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்தவர்கள்தான் திமுக, கம்யூனிஸ்ட், தாழ்த்தப்பட்டோர்ä,முஸ்லிம்கள் எல்லோருமே. ஆனால் தேர்தலுக்காகச் சந்தர்ப்பவசமாகக் கூட்டுச் சேர்ந்துவிட்டு காமராசர் ஆட்சியை வீழ்த்தி விட்டு இராஜாஜியை ஆட்சியில் அமர்த்த இவர்கள் துடித்தார்கள். இராஜாஜியும் நான் இராமன். இவர்களெல்லாம் குரங்குப்படைகள். என்று இவர்களை வர்ணித்தார்.
அந்த இராஜாஜி 1952ல் ஆட்சிக்கு வந்தபோது திருவான்மியூரில் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அவர்களிடம் பேசுகையில் நீங்களெல்லாம் உங்கள் பிள்ளைகளை அதிகம் படிக்க வைக்காதீர்கள். ஆரம்பக் கல்வி மட்டும் போதும். அத்துடன் துணிகளை சலவை செய்யும்போது கிழியாமல் துவைப்பது எப்படி? அழுக்குப்போகத் துவைப்பது எப்படி என்று கற்றுக்கொடுங்கள். அதற்கு உங்களுக்கு என்ன வசதி வேண்டுமானாலும் அரசாங்கம் செய்து தரும். அதை விடுத்து எல்லோரையும் படிக்க வைத்துவிட்டால் எல்லோருக்கும் எப்படி வேலை வழங்கமுடியும்? என்று கேட்டார் ராஜாஜி.
அப்படிப்பட்ட ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து விட்டு எலலோருக்கும்; கல்வியைக் கொடுத்தவர் காமராசர். ஒருவனுக்குப் படிப்பு என்பது மிகமிக அவசியமானது. அதுதான் அறிவைத்தரும். மானத்தைக் கொடுக்கும். தன்னம்பிக்கையை ஊட்டும். வளர்ச்சியைத் தரும். காலம் காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்திற்கு வெள்ளைக்காரன் காலத்தில் நீதிக்கட்சி அரசு கட்டிய பள்ளிகளையே இழுத்து மூடியவர் ராஜாஜி.
அந்த ராஜாஜியோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு கல்வி வள்ளலாம் காமராசரின் ஆட்சியை ஒழிக்கத் துணை போனவர்கள் காமராசருக்கு எதிராகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு காமராசர் ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. எனவே அந்த ஆட்சியை ஒழித்து விட்டு இராஜாஜியை ஆட்சியலமர்த்துங்கள் என்றும் அவர் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாத் திண்டாட்டத்தையே ஒழித்து விடுவார் என்று பிரச்சாரம் செய்து வந்தார்கள்.
இன்றைக்கும் கூட தினமணி, தினமலர், துக்ளக் போன்ற பத்திரிகைகளில் ராஜாஜி கொண்டு வந்த தொழிற்கல்வித் திட்டம் அமுலாகியிருந்தால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமே இருக்காது என்று எழுதி வருகிறார்கள். இராஜாஜியும் வேலையில்லாத் திண்டாட்டம் இல்லாமல் இருக்க வேண்டுமானால் ஆரம்பக் கல்வி மட்டும் கீழ்ஜாதி மக்களுக்குப் போதும் என்று சொன்னார்.
இதில் காமராசர் கொண்டு வந்த கல்வியினால் வந்த வேலையில்லாத் திண்டாட்டம் வளர்ச்சியின் அறிகுறியா? இராஜாஜியினுடைய குலக்கல்வித்திட்டம் வளர்ச்சியின் அறிகுறியா? தமிழ்த் தேசியவியாதிகளே! பதில் சொல்லுங்கள்.
இன்றைக்கே உங்களைப் போன்றவர்கள் அயோக்கியத்தனமாக இவ்வாறு எழுதும்போது அன்றைக்கும் எழுதியிருக்க மாட்டார்களா? இதில் எது தேவை எனறு உங்களால் நாணயமாகக் கூறமுடியுமா?
ஒரு அரசு மக்களுக்குக் கல்வியைக் கொடுக்க வேண்டியது மிகமிக முக்கியமானது. படித்த மக்கள் அனைவருக்கும் உடனடியாக வேலைவாய்ப்பு அளிப்பது என்பது சற்று இயலாத காரியம்தான். வேலைவாய்ப்பு   அளிக்க முடியாது என்பதைக் காரணமாகக் கூறி யாரும் படிக்காதீர் என்று சொன்ன இராஜாஜியும் அவரால் உருவாக்கப்பட்ட குலக்கல்வித் திட்டமும் சிறந்ததா? வேலையில்லாத் திண்டாட்டம் உருவானாலும் பரவாயில்லை. கல்வி மறுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கல்வி அளிக்கிறேன் என்று சொன்ன காமராசர் ஆட்சி சிறந்ததா? என்ற கேள்விக்கு நாணயமான பதிலை அளிக்காமல் அவர் ஆட்சியை ஒழிக்க தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு உட்பட இராஜாஜிக்குத் துணைபோனபோது பெரியார் இந்த வளர்ச்சியை காலமாற்றத்தை எடுத்துப் பேசி காமராசர் ஆட்சி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக படிக்கவே கூடாது என்று சொல்லப்பட்ட பறையனையெல்லாம் காமராசர் படிக்க வைத்திருக்கிறாரே, அவன் குலத்தொழிலையே செய்துகொண்டிருந்தால் வேலையில்லாத் திண்டாட்டம் என்று பேசுவீர்களா? அப்படிப் படிக்க வைத்த பறையனுக்கு தொழிற்சாலைகளையும் கல்விச்சாலைகளையும் உருவாக்கி வேலைவாய்ப்பைக் கொடுக்கக்  கொஞ்சம் காலம் ஆகத்தான் செய்யும். அதுவரை காத்திருக்க முடியாமல் அவர் ஆட்சியை ஒழிக்கத் துணைபோவது அறிவுடைமையா? என்ற பொருளில் அப்படிக் கேட்டிருக்கலாம்.
அதேபோல கீழ்ஜாதிப் பெண்களெல்லாம் ஒரு காலத்தில் ஜாக்கெட்டே போடாமல் இருந்தார்கள். காமராசரால் கல்வி அறிவு பெற்றவுடன் மான உணர்ச்சி பெற்று ஜாக்கெட் அணிய ஆரம்பித்தார்கள். இதுவும் காலமாற்றத்தின் அறிகுறி. அவர்கள் ஜாக்கெட்டே போடக்கூடாது என்று சொன்ன இந்துமதத்தின் காவலரான இராஜாஜியை ஆட்சியலமர்த்த அவர்களுக்குக் கல்வியையும் கொடுத்து மான உணர்சியை ஊட்டி ஜாக்கெட் அணியக் காரணமாக இருந்த காமராசரின் ஆட்சியை ஒழிக்கத் துணை போகலாமா? என்பதற்காக ஜாக்கெட்டே போட அனுமதி மறுக்கப்பட்ட பறைச்சிகளெல்லாம் காமராசர் ஆட்சியில் ஜாக்கெட் போடுவதன் வளர்ச்சியை எடுத்துச்சொல்லி விலைவாசி உயர்வு என்று பேசுவதன் பித்தலாட்டத்தை எடுத்துச் சொல்ல பெரியார் அப்படிப் பேசியிருக்கலாம்.
அது மட்டுமல்ல இந்துராஜ்யத்தில் மயிர்வரி, முலைவரி என்றெல்லாம் போட்டுக் கொடுமைப்படுத்திய இந்துமத அரசான திருவாங்கூர் சமஸ்தானம். அந்த இந்துமதத்தின் காவலரான இராஜாஜியை ஆட்சியலமர்த்த காமராசர் ஆட்சியில் வரிபோடுகிறார்கள். என்று கூச்சல் போட்டார்கள். அந்தப் பித்தலாட்டத்தையும் கூடப் பெரியார் அம்பலப்படுத்தினார். வரி போடாமல் எந்த அரசாங்கமும் மக்கள் நலத்திட்டங்களை அமுல்படுத்த முடியுமா? என்று இவர்களின் வண்டவாளங்களையெல்லாம் அம்பலப்படுத்தினார்.
அது மட்டுமல்ல, அன்று எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் படத்தை எடுத்துப்போட்டு ஏழைப் பங்காளர் வாழும் குடிசையைப் பாரீர்! என்று கூடத்தான் பிரச்சாரம் செய்தார்கள். அதனால் அந்த சத்தியமூர்த்தி பவன் காமராசருக்குச் சொந்தமானது என்று கூறமுடியுமா? அத்துடன் காமராசருக்கு ஸ்விஸ் வங்கியில் பணம் இருக்கிறது என்றும் பேசினார்கள். இதெல்லாம் உண்மையா?
இவ்வாறு எதிர்க்கட்சிகள் அன்று சொன்னதையெல்லாம் எடுத்துப்போட்டு பெரியாரைக் கொச்சைப்படுத்த நினைப்பது அயோக்கித்தனமானது.
பெரியார் பேசியதை எழுதியதை முழுவதும் சொல்லாமல் இடையிலுள்ள ஒன்றிரண்டு வார்த்தைகளை எடுத்துப்போட்டு பெரியார் எதற்காகச் சொன்னரோ அதற்கு நேர்மாறான பொருள் வருவதுபோல் பிரச்சாரம் செய்வது அன்றுமுதல் இன்றுவரை பார்ப்பனர்களுக்கும் அவர்களது பாதந்தாங்கிகளுக்கும் கைவந்த கலை.
அந்தத் திரிபுவாதமான பிரச்சாரங்களை இன்றைக்கும் செய்து பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரி என்று பேசுகின்ற உங்களைப் போன்ற அயோக்கியர்கள் இருக்கும்வரை தாழ்த்தப்பட்ட சமுதாயம் முன்னேறவே முன்னேறாது.

'இந்தி எதிர்ப்பு போராட்டம்':
பெரியாரின் இந்த போராட்டத்தின் நோக்கம் இந்தியால் தமிழ் கெட்டு விடும் இ அதை காப்பhற்ற வேண்டும் என்ற நோக்கம் இல்லை. பிராமணர்கள் பெரும்பான்மையானோர் இந்தி கற்று வைத்திருந்தனர்இ எனவே அவர் இந்தியை எதிர்த்துஇ ஆங்கிலத்தை வலியுறுத்தினார். இந்த போராட்டத்தால் தமிழுக்கோஇதமிழருக்கோ எந்த பலனும் இல்லை.

இப்படியும் ஒரு பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.

இதில் ஒரு உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். பிராமணர்கள் பெரும்பான்மையோர் இந்தி கற்றுவைத்திருந்தனர். எனவேää அவர் இந்தியை எதிர்த்து ஆங்கிலத்தை வலியுறுத்தினார் என்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆக பார்ப்பனர்களுக்கு நன்மை செய்வதற்காகவே இராஜாஜி இந்தியைத் திணித்தார். என்பதையும் அவர்கள் ஒத்துக் கொண்டுள்ளார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பெரியார் ஒன்றும் செய்யவில்லை என்று பித்தலாட்டமாகக் கூறுகிறார்களே! இந்த இந்தி எதிர்ப்பில் பலனடைபவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லையா?
தமிழையே படிக்கக் கூடாது என்ற சமுhயத்துக்கு முதல் முதல் கல்வி வாய்ப்பளிக்கும்போது தமிழே தடுமாறத்தானே செய்யும். அத்தகையவர்களிடம் இந்தியையும் கற்றுக்கொள் என்று சொன்னால் அவனால் தொடர்ந்து கல்வி கற்க முடியுமா? படிக்க முடியாமல் அவன் ஓடவேண்டும் என்கின்ற சதி அதில் இருக்கிறதா? இல்லையா?
பெரியார் இந்தியை எதிர்த்தது தமிழுக்கும் தமிழருக்கும் பலனனளிக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமல்லää இராஜாஜி இந்தியைத் திணித்ததன் நோக்கம் தமிழருக்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் கேட்டினை உருவாக்கி பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே. அதனைக் கண்டிக்கத்தான் பெரியார் இந்தி எதிர்ப்புப் போரினை நடத்தினார்.
பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தினர். தங்களது வேதää புராணää இதிகாசங்கள்ää ஸ்ருதிää ஸ்மிருதி அனைத்தையும் சமஸ்கிருதத்தில் எழுதிக்கொண்டனர். ஆனால் அந்த சமஸ்கிருதத்தை வேறு யாரும் படிக்கக் கூடாது என்று தடுத்து வைத்தனர். அதனால் அந்த சமஸ்கிருதம் பேசுவதற்கே ஆளில்லாமல் செத்தமொழி ஆனது.
அந்த செத்த மொழியை சிம்மாசனத்தில் அமர்த்த ஆசைப்பட்டனர் பார்ப்பனர்கள். வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போனபிறகு சமஸ்கிருதத்தை ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்று முயற்சித்தனர். இந்த நாட்டை இந்துநாடாக அறிவித்து வருணாசிரம தருமத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டு; என்று விரும்பிய ஆர்எஸ்எஸ் இயக்கம் இந்த நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாகக் கொண்டுவர விரும்பியது. உடனடியாக சமஸ்கிருதத்தைக் கொண்டு வரமுடியாது என்பதற்காக இடைக்காலமாக இந்தியை தேசியமொழியாக அங்கீகரிக்கலாம் என்பது ஆர்எஸ்எஸ் ஸின் திட்டம். அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவே இராஜாஜியும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார்.
சமஸ்கிருதம் ஆட்சிமொழி ஆக்கப்பட்டு மனுதருமம் நிலைநாட்டப்பட்டால் வருணாசிரமம் தலைதூக்காதா? அந்த வருணாசிரமம் தலைதூக்கினால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலை என்ன?
சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்று மனுதருமம் கூறவில்லையா? சூத்திரனுக்குக் கீழே வைக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டவர்களை மனுதருமம் சண்டாளன் என்று கூறவில்லையா? அந்த சண்டாளன் என்பவன் பிராமணப் பெண்ணுக்கும் சூத்திர ஆணுக்கும் விபச்சாரத்தில் பிறந்த பிள்ளை என்று கூறப்படவில்லையா?
நான்கு வருணங்களும் இன்று நாலாயிரம் ஜாதிகளாகப் பிரிந்து கிடப்பதற்குக் காரணம் ஒரு ஜாதி ஆணும் இன்னொரு ஜாதிப்பெண்ணும் விபச்சாரம் செய்ததால் வேறொரு ஜாதியாக மாறியது என்று மனுதருமம் கூறவில்லையா?
ஆக நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் விபச்சாரி பிள்ளைகள் என்று மனுதருமம் சொல்லுகிறது. அந்த மனுதருமம் இன்னும் இந்திய அரசியல் சட்மாக ஆக்கப் படவில்லையானாலும் ~இந்துலா| என்பதற்கு அடிப்படை மனுதருமம்தான் என்று இந்திய அரசியல் சட்டம் சொல்லுகிறது. இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நீக்கி விட்டு ஜாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அரசியல் சட்டத்தை மாற்றவேண்டும் என்று போராடி ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் அரசியல் சட்டத்தை எரித்து சிறையேகிய பெரியார் என்ன நாயக்கருக்கு மட்டுமா போராடினார்? மானமுள்ள அத்தனை பேருக்கும் போராடினார்.
மான உணர்ச்சியற்ற மாக்கள்தான் பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எதுவும் செய்யவில்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் எதுவும் செய்யவில்லை என்பார்கள்.
பெரியார் உண்மையில் தாழ்;த்தப்பட்டவர்களுக்காகவும் போராடவில்லை. பிற்படுத்தப் பட்டவர்களுக்காகவும் போராடவில்லை. மான உணர்ச்சியுள்ள மக்களுக்காக மட்டும்தான்; போராடினார்.
தீண்டாமை ஒழிய வேண்டுமானால் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். ஜாதி ஒழிக்கப்பட வேண்டுமானால் மதம் ஒழிக்கப்பட வேண்டும். மதம் ஒழிக்கப்பட வேண்டுமானால் பார்ப்பான் ஒழிக்கப்பட வேண்டும். இவைகளைப் பாதுகாக்கும் சாஸ்திரங்கள்ää புராணங்கள்ää இதிகாசங்கள்ää கீதைää மனுதருமம்ää சம்பிரதாயங்கள்ää மூடப்பழக்க வழக்கங்கள்ää ஆத்மாää மோட்சம்ää பிதிர்லோகம்ää மறுபிறப்புää பேய்ää பிசாசுää பில்லிää சூன்யம்ää அத்தனையும் ஒழிக்கப்பட வேண்டும் என்றுகூறி அதற்காகவே தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் கழித்து தன் இறுதி மூச்சு அடங்குகிறவரை பாடுபட்ட தலைவரை கொச்சைப் படுத்துகிறார்கள் என்றால் ஒன்று அவர்கள் நன்றியற்றவர்களாக இருக்க வேண்டும். அல்லது தன்மான உணர்ச்சியற்ற சுயநலக் கும்பலாக இருக்க வேண்டும்.
இந்த ஜாதி ஒழிக்கப் படுவதால் முதல் நன்மை யாருக்கு? பார்ப்பனருக்கா? அவர் அந்தணர்ää ஆண்டவனை விட மேலானவர் என்ற அந்தஸ்திலே இருக்கிறார். அதைவிட்டுவிட்டு அவர் எல்லோருடனும் சரிசமமான மனிதராக மாறுவதால் அவருக்கு நட்டமே! அடுத்து ஜாதி ஒழிவதால் வெள்ளாளருக்கு நன்மையா? முதலியாருக்கு நன்மையா? நாயுடுவுக்கு நாயக்கருக்கு என்ன நன்மை? செட்டியார்ää ரெட்டியார் யாருக்குத்தான் நன்மை? அல்லது நீங்கள் சொல்லுகிறீர்களேää தமிழ்ச்சாதிகள் அவர்களில் யாருக்காவது நன்மையிருக்கா?
அந்தத் தமிழ்ச்சாதிகள்தானே இன்றைக்கும் தாழ்த்தப்பட்டவர்களை அடிமையாய் நடத்துபவர்கள். நீங்கள் சொல்லுகிற தமிழர் அல்லாதவருக்கும் அடிமையாக இருந்துகொண்டு இந்தத் தாழ்த்தப்பட்டவர்களையும் அடிமைகளாக நடத்த அடியாள் படையாக இருந்து இந்த ஜாதியைப் பாதுகாப்பவர்கள் உங்கள் தமிழ்ச் சாதிகள்தானே!
அந்தத் தமிழ்ச்சாதிகள் தாழ்த்தப்பட்டவனும் தமிழன்தானே! அவனை மனிதனாகவாவது நடத்துவோம் என்றாவது ஒருநாள் நினைத்திருப்பார்களா? தருமபுரியிலே தமிழ்ச்சாதியான வன்னியப் பெண்ணைக் காதலித்தவன் தமிழ்ச்சாதியான தாழ்த்தப்பட்டவன்தானே? அதற்காக உங்கள் தமிழ்ச்சாதியான் அனைவரும் சேர்ந்து அந்தத் தமிழ்ச்சாதி தாழ்த்தப்பட்டவனின் வீட்டை இடித்துää கொளுத்தித் தரைமட்டமாக்கிää அவனது உடைமைகளை நாசப்படுத்தி கொடுமை புரிந்தார்களே! அப்பொழுது அவர்களுக்கு நாமும் அவர்களும் தமிழ்ச்சாதிதான். இப்படிச் செய்வதெல்லாம் தவறு என்று அவர்கள் புத்தியில் உறைக்காதது ஏன்?
அந்தத் தமிழ்ச்சாதிகள் பெரியாரின் சாதி ஒழிப்பை ஏற்றுக் கொள்கிறார்களா? அப்படி சாதி ஒழிந்தால் அவர்களும் தங்களுடைய உயர்ஜாதித் தன்மை போய்விடும் என்று ஜாதி ஒழிப்பை எதிர்;ப்பவர்கள்தானே?
பெரியார்தானே அய்யாää நீங்களெல்லாம் உயர்ஜாதி என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே! உண்மையில் மனுதர்மமும் இந்துமத சாஸ்திரங்களும் உங்களைச் சூத்திரன் என்று சொல்கிறது. சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று பொருள். அது மிகமிக இழிவானது. மானத்துக்கும் அறிவுக்கும் கேடானது. அந்த மானத்தையும் அறிவையும் காத்திடவே இன இழிவை ஒழித்திடவே நான் ஜாதியை ஒழிக்க நினைக்கிறேன். அந்த ஜாதியைப் பாதுகாக்க பார்ப்பனர்கள் அரசியல் சட்டத்தில் பல பிரிவுகளை உண்டாக்கி தங்களுடைய உயர்ஜாதித் தன்மையைப் பாதுகாக்க ஏற்பாடு செய்து கொண்டுவிட்டார்கள்.
அந்த இன இழிவை ஒழிக்க ஜாதியைப்; பாதுகாக்கும் சட்டத்தின் நகலைக் கொளுத்துகிறேன் என்று கொளுத்தினார்கள்.
ஆனால் அந்தத் தமிழ்;ச்சாதிகளுக்கும்கூட தனக்குக் கீழே தங்களை ஆண்டே என்று கூப்பிட தங்களுக்கும் கீழே ஒரு ஜாதி இருக்கிறது என்ற பெருமை கிடைக்கும்.
பிறகு இந்த ஜாதி ஒழிப்பினால் யாருக்குத்தான் உடனடி நன்மை? நாயிலும் கீழாய் பன்றியிலும் கேடாய் விலங்குகளுக்கு இருக்கும் உரிமைகூட இல்லாமல் அடித்தட்டில் அவதிப்பட்டானே தாழ்த்தப்பட்ட சகோதரன்ää அவனுக்குத்தான் உடனடி நன்மை. அவன் இந்த விலங்கு நிலையிலிருந்து மனித நிலைக்கு உயர்த்தப்படுகிறான். அந்த ஜாதி ஒழிப்பினுடைய முழுப்பயனையும் அடைபவன் இந்தத் தாழ்த்தப்பட்ட சகோதரன்தான்.
அப்படி விலங்கு நிலையிலிருந்து மனித நிலைக்கு உயர்த்தப் பாடுபட்ட பெரியாரால் தாழ்த்தப்பட்டவனுக்கு எந்த நன்மையும் இல்லை என்று சொல்கிறீர்கள் என்றால் உங்களைவிடக் கீழானவர்கள் கெடுபுத்தி உள்ளவர்கள் யாராவது இருக்க முடியுமா?
அவனுடைய ஜாதி இழிவு நீங்கக் கூடாது. என்றென்றைக்கும் உங்கள் தமிழ்ச்சாதிகளுக்கு அடிமையாக இருக்க வேண்டும் சுடுகாடுகூடத் தனியாக இருக்க வேண்டும் என்ற நிலை மாறக்கூடாது. உங்களுடைய தமிழ்ச்சாதிகளான வன்னியர்கள் இந்தத் தமிழ்ச்சாதியானான தாழ்த்தப்பட்டவனின் பிணத்தை எடுத்துச் செல்ல வழி விடக்கூட மாட்டார்கள். அந்த வன்னியரும் தாழ்த்தப்பட்டவரும் என்றென்றும் மோதிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணம் உள்ளவர்கள்தான் பெரியாரால் தாழ்த்தப்பட்டவனுக்கும் நன்மையில்லை. பிற்படுத்தப்பட்டவனுக்கும் நன்மையில்லை என்று கூறுவான்.
இன்னும் ஒருபடி மேலேபோய் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று போராடினாரே பெரியார், அதன் மூலமாகக் கிடைக்கின்ற பலன் உடனடியாகச் சென்று சேர்வது தாழ்த்தப்பட்டவனுக்கு இல்லையா? ஆண்டவன் சந்நிதியில் அடியெடுத்து வைக்கவே அருகதையற்றவர்கள் என்று இகழப்பட்ட தாழ்த்தப்பட்டவன் ஆலயத்துக்குள்ளும்; செல்லலாம். ஆண்டவனைத் தரிசிக்கலாம். அவனைத் தொட்டு வணங்கலாம் என்பது மாத்திரமல்ல எவனெல்லாம் இவனது கோயில் நுழைவு உரிமையை மறுத்தானோ அவனேகூட இவனிடம் பூஜைத்தட்டைக் கொடுத்து என் பெயரில் பூஜை செய்து ஆண்டவனிடம் ரெக்கமண்ட் செய்யுங்கோ என்று கேட்கக் கூடிய காலமும் உருவாகுமா? இல்லைய?
இவ்வளவு நன்மைகள் பெரியாரின் பேராட்டங்களால் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைத்திருக்கும்போது எந்த நன்மையுமில்லை என்று கூறுகிறீர்கள் என்றால் ஒன்று நீங்கள் கருத்துக் குருடாராய் இருக்க வேண்டும். அல்லது கடவுளைப் பரப்புகின்ற அயோக்கியன் செய்வதுபோல்; தவறான பிரச்சாரம் செய்கின்ற நீங்களும் அயோக்கியர்களாக இருக்க வேண்டும்.
பெரியாரைப் போல் இந்தக் கொள்கைகளுக்காகப் பாடுபட்டவர் யாராவது உலகில் இருக்கிறார்களா? தமிழ்த் தேசிய வியாதிகளில் யாராவது இருக்கிறார்களா?
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் விளக்குமா?
தயவு செய்து மக்களுக்கு உண்மையான வரலாற்றைச் சொல்லாவிட்டாலும் தவறான வரலாற்றைப் பதிவு செய்து வரலாற்றில் கரும்புள்ளி ஆகாதீர்கள் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.
  
ஈவேரா தாழ்த்தப்பட்டவர்களை உய்விக்க வந்தவரா? ~~கோயிலில் சூத்திரர்கள் எதுவரை போகிறார்களோ அதுவரை அரிஜனங்கள் செல்லலாம்|| என்று காந்தி சொன்னபோது சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? நடு சாதியான சூத்திரர்கள் கீழ்ஜாதியாவதை அனுமதிக்கக் கூடாது? என்றார். (வைக்கம் போராட்ட வரலாறு) என்பது இ.முன்னணியின் திரிபுவாதம்.
வைக்கம் போராட்ட வரலாறு என்ற நூலில்
~~காந்தியார் கோவில் பிரவேசத்தைப் பற்றிப் பேசும்போது அதுவும் சுயமரியாதைப் பிரச்சார நிர்ப்பந்தம் காரணமாக கோவில் பிரவேசத்தை அனுமதிக்க வேண்டி வந்தபோது
~~கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரை போகிறார்களோ அதுவரையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லலாம்|| என்று சொல்லி அனுமதித்ததால் அந்த அளவுக்குத்தான் நாடார் சமுதாயம் உட்பட கோவில் பிரவேசமில்லாத எல்லா மக்களுக்கும் அனுமதி கிடைத்தது.
அதன்மீது பெரியார் ஆத்திரப்பட்டு ~~தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா?
பறையன் கீழ்ஜாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?
இந்த அனுமதியானது நடுசாதியான சூத்திரர்கள் என்பவர்கள் இப்போது கீழ்ஜாதியாகவே ஆக்கப்பட்டு விட்டார்கள் ஆனதால் இதை நாம் அனுமதிக்கக் கூடாது. என்று வேகமாகப் பிரச்சாரம் செய்துவந்தார். இதன்மீது காந்தியார் மக்களை ஏமாற்ற வேறு ஒரு தந்திரம் செய்தார். அதாவது ~~இதுவரையில் இதற்குமுன் பிராமணர்களுக்கு என்று மாத்திரம் எந்த இடம் இருந்துவந்ததோ அந்த இடத்திற்குப் பிராமணர்களும் செல்லக்கூடாது@ மற்ற எல்லா சாதியாருக்கும் அனுமதிக்கப்பட்டிருந்த இடம் வரையிலுமேதான் பிராமணனும் செல்லலாம்|| என்று அபிப்பிராயம் கூறி அந்தப்படியே பல கோவில்களில் தடுப்புக்கட்டி தடைசெய்யப்பட்டது.
இதுபற்றி மதுரைக் கோவிலுக்குள் பெரியார் சில தோழர்களுடன் சென்று தடுக்கப்பட்ட இடத்தில் பல பார்ப்பனர்களும் பார்ப்பனத்திகளும் நிற்பதைக் கண்டு அங்கேயே அதுபற்றிக் கிளர்ச்சி செய்தார். பத்திரிகையில் எழுதினார் என்றாலும் அர்ச்சகர் என்ற பெயரில் பார்ப்பனர்களும் பார்ப்பனத்திகளும் உள் மண்டபத்தில் இருந்துதான் வணங்குகிறார்கள். இது எப்படியோ இருந்தாலும் கர்ப்பக்கிரகத்திற்குள் பார்ப்பனன்தான் சிலை இருக்கும் இடத்திற்குள் போகலாம். சூத்திரனோ பஞ்சமனோ போகக்கூடாது என்கிற சாதிமுறைää சாதிபேதமுறை இன்றும்தான் இருந்து வருகிறது.
சாதி ஒழிக்கப்படுவதால் பார்ப்பனர்களுடைய தூய்மை கெட்டுவிடுகிறது என்பதோää தங்கள்நிலைமை அசுத்தமாக்கப்படுகிறது என்பதோ அல்லவே அல்ல. மற்றென்னவென்றால்ää தங்களுக்கு இருந்துவரும் உயர்வும் தனி உரிமைகளும் பாடுபடாமல் பிறர் உழைப்பில் அனுபவிக்கும் சுகபோகமும்ää உயர்வாழ்வும் ஏகபோகமும் எல்லாம் அழிந்துபோகுமே என்கின்ற கவலைதான்.
இதை உத்தேசித்தேதான் சாதி என்பதில் எவ்வித தனிக்கடமையும் இல்லாமல் உயர்வு என்கின்ற உரிமையை மாத்திரம் அனுபவிக்கும்படி சட்டத்தால் பாதுகாப்பு ஏற்படுத்திக்கொண்டார்கள் இதற்குக் காரணம் காந்தியார் செய்த மோசடியும் சூழ்சியும் ஆன மாபெரும் துரோகம்தான். என்றுதான் வைக்கம் போராட்ட வரலாற்றில் இருக்கிறது.
இதில் பெரியாருடைய போராட்டம் என்பது சாதி உயர்வு தாழ்வு கூடாது. பார்ப்பான் பறையன் என்ற வித்தியாசம் கூடாது என்ற கோரிக்கைதானே தவிர சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா வேண்டாமா என்பதல்ல. உண்மை வரலாறு இப்படியிருக்க இ. முன்னணி இடையில் உள்ள ஒரே ஒரு  வரியை மட்டும் எடுத்துக்கொண்டு பெரியார் கருத்தைத் திரிபுவாதம் செய்வது அயோக்கியத்தனமானது.
அத்துடன் காந்தியாரைப்பற்றி பெரியார் சொல்லும் இன்னொரு கருத்து காந்தியின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது. தீண்டாமையை ஒழிக்க காந்தி பாடுபட்டார் என்று கூறப்படும் கருத்து எவ்வளவு போலித்தனமானது என்பது இதில் விளங்குகிறது.
~~நான் காங்கிரசில் இருந்தபோது சமுதாயத்துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது காந்தி தீண்டப்படாதவர்களை பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாவிட்டால் தனிக்கிணறு வெட்டிக்கொடு@ கோயிலுக்குள் விடாவிட்டால் தனிக்கோயில் கட்டிக்கொடு என்றார். பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை எதிர்த்தோம். கிணற்றில் தண்ணீர் எடுக்கப்படும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன் தண்ணீரில்லாமல் சாகட்டும். என்றேன். அவனுக்கு இழிவு நீங்க வேண்டுமென்பது முக்கியமே தவிர தண்ணீரல்ல என்றேன். என்று பெரியார் கூறுகிறார்.
சாதி இழிவு நீங்கவேண்டும். உயர்ஜாதி கீழ்ஜாதி என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் இதன் பொருளே தவிர தண்ணீர் வேண்டுமா வேண்டாமா என்பது அல்ல. அதேபோலத்தான் கோயில் நுழைவு என்பதும் பார்ப்பான்ää சூத்திரன் பஞ்சமன் பறையன் என்ற பேதம் இருக்கக் கூடாது என்பதற்காக கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தினால் பார்ப்பான் மட்டும் கருவறைவரை செல்லலாம். சூத்திரன் செல்லும் இடம் வரை பறைனும் செல்லலாம் என்பது ஜாதியைää பார்ப்பான் உயர்ந்தவன் மற்றவர்கள் கீழானவர்கள் என்ற தத்துவத்தைப் பாதுகாக்கிறது என்பதால் பெரியார் அதனை எதிர்க்கிறார்.
~~பார்ப்பான் என்பது மேல்சாதிக்காரன் என்கிற தத்துவத்தின்மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல்சாதிக்காரன் என்பது பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பது என்கிற தத்துவத்தின்மீது கட்டப்பட்டிருக்கின்றது. இதை நன்றாய் உணர்ந்து இந்தத் தத்துவ அடிப்படையை இடித்தெறிய முயன்றோமானால் பார்ப்பனர்கள் என்கிற வார்த்தையே நாட்டில் இல்லாமல் போய்விடும். பார்ப்பனர் மாத்திரமல்ல. ஒரு சாதிக்கு மற்றொரு சாதி மேல் என்கின்ற தத்துவமே அழிந்துவிடும்.. அது மாத்திரமல்ல சாதி முறையே அடியோடு அழிந்துவிடும்.||
இதனை இந்துமுன்னணி எப்படி திசை திருப்புகிறது பார்த்தீர்களா?
பெரியார் மூன்று மணிநேரம் பேசுவதை பத்திரிகைகள் நான்கு வரி போடுவதையும்ää திருத்தியும்ää மேல் கீழ் சம்பந்தங்களை விட்டுவிட்டுää தப்பர்த்தம் ஏற்படும் முறையில் மொட்டையாயும்ää தங்களுக்கு அனுகூலம் ஏற்படும் முறையிலும் பிரசுரித்து வருவதையும் 10-06-1942 விடுதலையில் பெரியார் எழுதினார். அதையேதான் இந்து முன்னணியும் இன்றளவும் செய்து வருகிறது. பெரியாருடைய முழுப் பேச்சையும் வெளியிட்டால் அதைப் படிக்கும் தங்கள் தொண்டர்கள் எங்கே பெரியார் சொல்வது உண்மைதான் என்று கருதி அதனை திருத்தியும்ää சுருக்கியும் தப்பான பொருள் ஏற்படும்படி செய்து வருகிறார்கள் என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டாகும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக