புதன், 14 செப்டம்பர், 2016

மகாமகா அயோக்கியன்



 தந்தை பெரியார் கடவுளைக்கற்பித்தவனை முட்டாள் என்றுதான் சொன்னார். மனிதனின் முட்டாள்தனத்தை வைத்து அவன் உயிரோடிருக்கும்வரை சுரண்டுவதற்கு சுயநலவாதிகளால் கற்பிக்கப்பட்ட ஒன்றுதான் கடவுள்.
 ஆனால் ஒரு மனிதன் இறந்தபிறகும் அவனது பிள்ளை பேரப்பிள்ளை காலத்திலும் அவர்களை சுரண்டவேண்டும் என்பதற்காகக் கற்பிக்கப்பட்டதுதான் ஆத்மா மோட்சம் நரகம் பிதிர்லோகம் மறுபிறப்பு திதி தெவசம் என்பதெல்லாம். அதனால்தான்
~~ஆத்மா மோட்சம் நரக பிதிர்லோகம் மறுபிறப்பு பேய் பிசாசு பில்லி சூன்யம் இவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன்@ நம்புகிறவன் மடையன் இவற்றால் பலன் அனுபவிப்பவன் மகாமகா அயோக்கியன்|| என்றார் தந்தை பெரியார்.
இறந்தவனுடைய மகன் தன்னுடைய தாய்க்கும் தகப்பனுக்கும் உயிரோடிருக்கும்போது சோறு போட்டானோ இல்லையோ துணிமணி வாங்கிக்கொடுத்தானோ இல்லையோ பெற்றோர் இறந்தபிறகு அய்யரை அழைத்து அவருக்குப்பிடித்த அல்லது அய்யரின் மனைவிக்கு என்னென்ன பிடிக்கிறதோ அதாவது அரிசி பருப்பு நெய் கத்திரக்காய் புடலங்காய் வேட்டி துணிமணி அனைத்தையும் வாங்கிக் கொடுத்து அய்யர் மந்திரம் சொல்லச்சொல்ல தானும் திருப்பிச் சொல்வார்.
அப்படி அய்யர் என்ன மந்திரம் சொல்கிறார்?
 ~~என்மே மாதா ப்ரலுலோபசரதி
 அனனவ் வ்ரதா தன்மேரேதஹா
 ப்தா வ்ருந்த்தாம் ஆபரண்யஹா அவபத்யநாம|| என்பதுதான் அந்த மந்திரம்.
இதன் பொருள் என்ன?
 நான் யாருக்குப் பிறந்தேன்? அப்பா யாரெனத் தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்ப வேண்டியுள்ளது. ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியைக் கொண்டுபோய்ச் சேர்ப்பீர்
 என்பதுதான் அதன் பொருள். இது இராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய இந்துமதம் எங்கே போகிறது? என்ற நூல் பக்கம் 157ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
 தந்தைக்கு கொடுக்கப்படும் திதியிலும் இதே போன்ற மந்திரம் சொல்லப்படுகிறது. 1970 காரவன் ஜூன் இதழில் இராமஅய்யர் என்பவர் அதற்குப் பொருள் எழுதியிருக்கிறார்.
~என் தாய் தன்னுடைய கணவருக்கு உண்மையாய் இராமல் சோரம்போய் பெருவிருப்புடன் பிறனின் விந்துவைப் பெற்றிருக்கலாம். என் தந்தை என அறியப்பட்டவர் அவ்விந்துவைத் தனதெனக் கருதியிருந்தார்.அதனால் நான் தரும் இந்த அவிசை அவர் அடையட்டும் என்பது பொருள்.
   (ஆதாரம் : மானமிகு சு.அறிவுக்கரசு எழுதிய இந்துää ஆத்மாää நாம் என்ற நூல்)
 இது எவ்வளவு பெரிய மானக்கேடு பார்த்தீர்களா? தன்னுடைய தந்தையும் தாயும் சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கின்ற மகனிடம் மகனைவிட்டே பெற்ற தாயை விபச்சாரி என்று நேரடியாகவே சொல்ல வைக்கிறான் பார்ப்பான்.
இது ஆரியக்கலாச்சாரத்தில் இருக்கும் பழக்கவழக்கம். மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஒருவர்கூட தன்னுடைய தகப்பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல.
பாண்டவர்களின் தகப்பனாகக் கூறப்படும் பாண்டுவுக்கு ஒரு சாபம் உண்டு. அவன் எந்தப் பெண்ணைக் கூடினாலும் அவன் தலை சுக்குநூறாக வெடித்து விடும் என்பதுதான் அது. அது தெரிந்தும் குந்திதேவியையும் மாத்ரியையும்; திருமணம் செய்து கொள்கிறான். தன் மனைவிகளுக்கு தன்னால் குழந்தை உண்டாக்க முடியாது என்பதால் குந்திதேவியை அழைத்து வேதமறிந்த பார்ப்பனரோடு கூடி ~புத்ரோற்பத்தி| செய்யுமாறு வேண்டுகிறான். நானும் எனது தாய்க்கு அவ்வாறுதான் பிறந்தேன் என்றும் கூறுகிறான்.
அதேபோல இராமனும் தசரதனுக்குப் பிறந்தவனல்ல. அசுவமேத யாகம் செய்து யாகப்புரோகிதர் மூலமாகப் பிறந்தவர்கள்தான் இராம லக்குமணர்கள். தாங்களும் தங்கள் உண்மையான தந்தைக்குப் பிறக்கவில்லை என்பதும் தெரியும். தங்கள் பிள்ளைகளும் தனக்குப்பிறக்கவில்லை என்பதும் தெரியும். அவர்களுக்கு உண்மையான தகப்பன்மார் யார் என்பதும் தெரியும். அப்படிப்பட்டவர்களுக்கு வேண்டுமானால் இந்த மந்திரம் பொருந்தலாம்.
 ஆனால்ää ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழுகின்ற தமிழர்களிடம் வந்து அவர்கள் கொடுக்கும் காசையும் பெற்றுக்கொண்டு அவர்களுடைய தாயை விபச்சாரி என்று சொல்லுகிறார்கள். அதையும் அர்த்தம் புரியாமல் தமிழனும் திருப்பிச் சொல்கிறான் என்றால் இதைவிட மானக்கேடு ஏதாவது இருக்க முடியுமா? 
 அந்த சொர்க்கத்திலாவது வருணபேதம் இல்லாமல் அனைவரும் சமமாக இருக்கிறார்களா என்றால் மகாபாரதம் சபா பருவத்தில் தருமனுக்கு நாரதன் கூறுவதாக வரும் செய்தி ~பிரம்ம சபையிலும் மற்ற மூன்று வருணத்தாருக்கும் எந்தவித முகச்சுளிப்பும் இன்றி சூத்திரன் பணிவிடை செய்வதாகக் கூறுகிறான்.
 சொர்க்கம் சென்றாலும் பரலோகம் சென்றாலும் ,வைகுண்டம், பிரம்மலோகம் எங்கு சென்றாலும் சூத்திரன் மற்ற வருணத்தானுக்குப் பணிவிடைதான் செய்ய வேண்டுமாம். இதற்காகத்தான் சொர்க்கம் செல்ல வேண்டுமா?
அந்த சொர்க்கம் செல்ல சூத்திரனுக்கு உரிமை உண்டா? சொர்க்கத்திற்கு செல்ல சூத்திரன் என்ன செய்ய வேண்டும்?
ஸ்ரீபாஷ்யம் அபசூத்ராதிஹிரணம் என்ற பகுதியில் இராமானுஜர்  சொல்வதாக இராமானுஜ தாத்தாச்சாரியார் தனது நூலில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
~~பகவானின் உருவத்தை நித்தமும் தியானித்து உபாஸனம் செய்பவர்களுக்குத்தான் மோட்சம். நான் சொல்வது பிராமணர்களுக்கு மட்டும்தான். பிராமணர் அல்லாத சூத்திரர்கள் மோட்சம் அடைய வேண்டும் என்றால் இந்தப்பிறவியை இப்படியே கழித்து அடுத்த ஜென்மாவில் ப்ராமணனாகப் பிறக்க பகவானை பிரார்த்திக்க வேண்டும். ஒருவேளை அடுத்த பிறவியில் பிராமணர்களாகப் பிறக்க அவர்களுக்கு ப்ராப்தம் கிடைக்குமானால் வேத உபநிஷத்துக்களைக் கற்று .. பகவானை தொடர்ந்து தியானித்து மோட்சம் பெறலாம்.|| என்று சூத்திரர்கள் சொர்க்கம் செல்லும் வழியை இராமானுஜர் கூறுகிறார்.
அந்த  புண்யமான சொர்க்கத்தை அடைய விரும்புகிற சூத்திரன் பிராமணர்களையே நன்கு பூஜிக்க வேண்டும் என்று மகாபாரதம் மார்க்கண்டேய ஸ்மாஸ்ய பருவம் கூறுகிறது.
அதேபோல பிராமண ஸ்திரீகளும் சூத்திரர்கள்தான். அவர்கள் அடுத்த ஜென்மாவில்  பிராமணனாகப் பிறக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் சொர்க்கத்தை அடைய முடியும் என்று இராமானுஜர் தனது பாஷ்யத்தில் கூறியுள்ளதாக இராமானுஜ தாத்தாச்சாரி எழுதுகிறார்.
                                    (இந்துமதம் எங்கே போகிறது? பக்கம் 121)
பிராமணப் பெண்களுக்கே சொர்க்கம் செல்ல உரிமையில்லாதபோது மற்ற பெண்கள் சொர்க்கம் செல்ல முடியுமா?
இன்று அறிவியல் முன்னேற்றத்தில் சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் சென்று ஆராய்ச்சி செய்கிறோம். புளுட்டோ கிரகத்திற்கு அனுப்பிய விண்கலம் ஒன்பது ஆண்டுகளுக்குப்பிறகுதான் அதனைச் சென்றடைய முடியும். அவ்வளவு தூரம் அறிவியல் ஆராய்ச்சி நடைபெறும் சூழலில் இந்த மதவாதிகள் சொல்லுகின்ற சொர்க்கம் நரகம், பரலோகம், பிரம்மலோகம், வைகுண்டம் எதையும் யாரும் பார்த்ததாக எந்த தகவலும் இ;ல்லை. இருந்தாலும் அதைப்பற்றிய பிரச்சாரங்களை மதவாதிகள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
அறிவியல் படித்ததாகச் சொல்லிக்கொள்ளும் படித்தவர்களும் அதை நம்பி அந்த இல்லாத சொர்க்கத்திற்கு போவதற்கே உரிமையில்லாத தந்தையும் தாயும் சென்றிருக்கிறார்கள் என்று நம்பி திதிää தெவசம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
சொர்க்கம் செல்ல சூத்திரர்களான பிற்படுத்தப்பட்ட ஆணுக்கே உரிமை இல்லை என்கிறபோது தாழ்த்தப்பட்டவர்கள் சொர்க்கம் செல்ல வழியுண்டா? அவர்கள் எப்பாடுபட்டாலும் சொர்க்கம் செல்ல சாஸ்திரத்தில் வழியில்லை என்பதால்தான் முன்பெல்லாம் பார்ப்பனர் அவர்களுக்கு தெவசம் செய்ய வரமாட்டார்.
 அவர்களுக்கு முடிவெட்டும் தொழிலாளிகூட முடிவெட்டமாட்டார் என்கிறபோது அய்யர் மட்டும் இளித்தவாயரா என்ன?
 அப்படிப்பட்ட தாழ்த்தப்பட்டவர் வீட்டுக்கே இன்று அய்யர் வந்து தோப்பனாருக்கு தெவசம் கொடுக்கச்சொல்லி தட்சணை வாங்கிட்டுப்போகிறார் என்றால் காசுக்காக பார்ப்பான் எதையும் செய்வான் என்பதுதானே இதன் பொருள்?
 அவன் வருமானத்திற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான். தன்மானமிழந்து தமிழன் அவனை அழைத்து அல்லது அவன் இருக்குமிடமான காவிரிக்கரைக்குச் சென்று திதி கொடுப்பது அவமானமில்லையா?
அதனால்தான் நமது மானமீட்பர் தந்தை பெரியார்
~~ஆத்மா, மோட்சம்,நரகம், பிதிர்லோகம், மறுபிறப்பு, பேய் பிசாசு,பில்லி சூன்யம் இவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன், நம்புகிறவன் மடையன், இவற்றால் பலன் அனுபவிப்பவன் மகாமகா அயோக்கியன்|என்று சொன்னார்
 தமிழர்களே! இதற்குப்பிறகும் அயோக்கியன் கற்பித்த திதி தெவசம் இவற்றை செய்து மகாமகா அயோக்கியன் பிழைக்க வழிசெய்து பக்தி என்ற போர்வையில் புத்தியை இழந்து அறிவையும் மானத்தையும் இழக்க வேண்டுமா? சிந்திப்பீர்! பகுத்தறிவு பெறுவீர்!!
                                   இவண் : ~பெல்| ம.ஆறுமுகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக