புதன், 1 பிப்ரவரி, 2017

viduthalai

விஜயபாரதத்தின் ‘கட்டுக்கதைகள்!’

‘துக்ளக்‘ என்றாலும் சரிஇ ‘விஜயபாரத’மாக இருந்தாலும் சரிஇ ‘தினமல ராக’ இருந்தாலும் சரி... இவை வெவ்வேறு பெயர்களில் உலவி வந்தாலும் இவற்றின் மய்யப்புள்ளி என்பது பார்ப்பனத்தனம்தான்!

இதற்குப் பெரிய ஆய்வுகள் எல்லாம் தேவைப்படாது. ஆழமாகக்கூடப் போகத் தேவையில்லை; மேலோட்டமாகப் பார்த்தாலே போதும் - போதுமான புரிதல் தானாகவே வந்துவிடும்.

எடுத்துக்காட்டாக காஞ்சி சங்கராச்சாரியாரை எடுத்துக் கொள்ளலாம். கொலை வழக்குக் காரணமாக சிறைக் கொட்டடியில் தள்ளப்பட்டவர். சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்பார்கள். அந்த நிலையிலாவது குறைந்தபட்சம் ‘ஜெகத்குரு’ இருக்க வேண்டாமா?

ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிந்திருந்தும்இ பெண்கள் விடயத்தில் மிகவும் கீழ்த்தரமாக நடக்கக்கூடியவர் (அக்கிரகாரப் பெண் எழுத்தாளரான அனுராதா ரமணன் பேட்டி ஒன்று போதாதா?) என்ற நிலையிலும் ‘‘மகா பெரியவாள்’’ என்றுதானே எழுதுகிறார்கள். ‘ஜெகத்குரு’ என்றுதானே தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுகிறார்கள்.

‘துக்ளக்‘ இதழின் பின் அட்டையில்இ ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதத்துக்கு முழு பக்க விளம்பரம் என்றால்இ சாதாரணமா?

அந்த விளம்பர வாசகங்கள் என்னென்ன?

ஹிந்துத்துவா என்றால் என்ன?

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!

இப்படி ஒரு கேள்வி - பதில் விளம்பரத்தில்.

உண்மையிலேயே இந்த விடை சரியானதுதானா? எல்லோரும் இன்புற்றிருக்க நினைக்கக் கூடியதா ஹிந்துத்துவம்!

ஒருவர் படும் கஷ்டத்துக்கும்இ துன்பத்துக்கும் காரணமே முன் ஜென்ம வினைதான் - தலை எழுத்துதான் என்று ஏழ்மைக்கும்இ இன்னலுக்கும் வக்காலத்து வாங்கும் இந்து மதம் எல்லோரும் இன்புற்றிருக்க நினைக்கக் கூடியதுதானா?

அடுத்த கேள்வி - பதில்: தமிழன் - ஹிந்து என்ன வேறுபாடு?

ஒரு வேறுபாடும் இல்லை. தமிழன்தான் ஹிந்துஇ ஹிந்துதான் தமிழன்!

இந்தப் பதிலிலாவது அறிவு நாணயம் உண்டா? ஹிந்து என்று தமிழன் தன்னை ஒத்துக்கொண்டால்இ ஹிந்து மதத்தின் வருண தர்மத்தை ஒத்துக்கொண்டுதானே ஆகவேண்டும்? அப்படி ஒத்துக்கொண்டால்இ ஒட்டுமொத்த தமிழர்கள் அனைவரும் சூத்திரர்கள் ஆகமாட்டார்களா?

சூத்திரன் என்றால் கவுரவப் பட்டமா? பார்ப்பனர்களின் வைப்பாட்டி மகன் என்ற பட்டம்தானே ‘நிகர லாபம்!’

பார்ப்பானும் தன்னைத் தமிழன் என்று ஒத்துக்கொள்வதாக விவாதத் திற்காகவே ஒத்துக்கொள்ளலாம். கோவில் கருவறைக்குள் பார்ப்பானாக பிறந்தவன் மட்டும் தானே செல்ல முடியும்? மற்ற தமிழர்கள் ஆகமப் பயிற்சி பெற்றிருந்தாலும் கோவில் கருவறைக்குள் நுழைய முடியாதே! அப்படி நுழைந்தால்இ சாமி செத்துப் போய்விடும். தோஷம் பட்டுவிடும் என்று கூறி உச்சநீதிமன்றத்துக்கு ஓடுவோர் யார்?

தமிழர்கள் எல்லோரும் இந்துதான் - சம தகுதி உடையவர்கள்தான் - சகோதரர்கள்தான் என்று ஒத்துக்கொண்டால்இ அர்ச்சகர்ப் பிரச்சினையில் சிவாச்சாரியார்கள் உச்சநீதிமன்றத்துக்கு ஓடுவானேன்? அதனை ‘துக்ளக்‘இ ‘விஜயபாரதம்‘ வகையறாக்கள் என்றாவது எதிர்த்தது உண்டா?

‘துக்ளக்‘கும்இ ‘விஜயபாரதமும்‘இ ‘தினமலரும்‘ அறிவு நாணயத்துடன் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.

பார்ப்பான் தமிழன் என்றால்இ எந்தப் பார்ப்பானாகிலும் சமஸ்கிருதத் தைத் தவிர தமிழில் பெயர் சூட்டிக் கொள்வதுண்டா? கோவிலுக்குள் வழிபாட்டு மொழி சமஸ்கிருதம்தான் இருக்கவேண்டும் என்று ‘துக்ளக்‘ சோ எழுதியது ஏன்?

மொழிக்கு முக்கியமல்ல - ஒலிக்குத்தான் முக்கியத்துவம் என்று கட வுளுக்கே உள்நோக்கம் கற்பிக்கும் பம்மாத்து ஏன்? தமிழில் வழிபட்டால் பொருள் இருக்கும்இ அருள் இருக்காது என்று ‘கண்டுபிடித்துச்‘ சொன்ன வர்தானே திருவாளர் சோ.ராமசாமி அய்யர்வாள்.

ஒரு தமிழனைக் காஞ்சி மடத்தின் பீடத்தில் ஒரே ஒரு நாழி அமர்த்தச் சொல்லுங்கள் பார்க்கலாம். காஞ்சி மடத்துக்கு சுப்பிரமணியசாமி சென்றால் பெரியவாளுக்கு(?)ப் பக்கத்தில் சமமாக நாற்காலி போட்டு உட்காரலாம். மாண்புமிகு மத்திய அமைச்சரான பொன்.இராதாகிருஷ்ணன் தரையில் தானே உட்கார முடிகிறது. இதுதான் ஹிந்து மதத்தில் தாண்டவமாடும் சமத்துவ சங்கீர்த்தனமா?

அடுத்த கேள்வி: ‘தனித்தமிழ் நாடு’ கோஷம்பற்றி...?

தனித்தமிழ்நாடு பேசினால் அது தேச விரோதம் - காஷ்மீர்முதல் குமரிவரை பாரதம் ஒரே நாடு... ஒரே மக்கள்... ஒரே பண்பாடு.

இதாவது உண்மையா? இந்தியா முழுமையும் உள்ள மக்கள் ஒரே பண்பாட்டைச் சேர்ந்தவர்கள்தானா? உண்ணும் உணவுஇ உடுக்கும் உடைஇ உறையுள்வரை வேறுபடுவது இல்லையா? பல இனங்கள்இ பல மொழிகள்இ பல பண்பாடுகள்இ பல்வேறு பருவ நிலைகள் கொண்ட ஒரு துணைக் கண்டம்தான் இந்தியாவே தவிரஇ ஒரே நாடுஇ ஒரே மக்கள்இ ஒரே பண்பாடு என்பது பார்ப்பனர்களுக்கே உரித்தான தகடுதத்தம்.

தங்களுக்கென்று இருந்த மொழியான சமஸ்கிருதம் செத்துச் சுண்ணாம்பாகி விட்டது. தங்களுக்கென்று சொல்லிக் கொள்ள ஒரு நாடு கிடையாது. அதனால்இ மற்றவர்களுக்கென்று இருக்கிற நாட்டையோஇ மொழியையோ அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. அதற்குத்தான் ‘பாரதம்‘ ஒரே நாடு என்கிற மாய்மாலம். இந்தியா என்றுகூட சொல்லமாட்டார்கள். ‘பாரதம்‘ என்றே பசப்புவார்கள் பார்ப்பனர்கள்.

அடுத்த கேள்விஇ தீண்டாமைபற்றி...?

ஹிந்து அனைவருமே சோதரர்கள். ஹிந்து எவருமே தாழ்ந்தவராகார்இ ஹிந்துக்களைக் காப்பது என்பது என் விரதம். சரிசமமானமே எனது மந்திரம்.

இவையெல்லாம் ஊரை ஏமாற்றும் வக்கணைச் சொற்கள்தான்.

தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்ன மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி என்பவர்தான்இ பார்ப்பனக் கூட்டத்துக்கு ‘‘மஹா பெரியவாள்!’’ இந்த இலட்சணத்தில் தீண்டாமையை எதிர்ப்பதுபோலப் பாசாங்கு செய்வது யாரை ஏமாற்றிட?

மற்றொரு கேள்விஇ தமிழகம் பகுத்தறிவாளர்கள் பூமியா?

ஆமாம். சிறீ ராமானுஜரும்இ சிறீராமனும்இ சிறீவள்ளலாரும்இ ஆழ்வார் களும்இ நாயன்மார்களும் பகுத்தறிவாளர்களே! என்கிறது ‘விஜயபாரதம்.

ஆகா பகுத்தறிவுக்கு எவ்வளவுப் பெரிய சான்று! வாயாலேயா சிரிக்க முடியும்?

இவர்களைப்பற்றிக் கேள்வி கேட்பதுதானே பகுத்தறிவு - அதனை ஏற்றுக்கொள்கிறார்களா? இராமன் பிறப்பே ஆபாசம்தானே - (மூல நூலான வால்மீகி ராமாயணக் கதைப்படி) மறுக்க முடியுமா? வெட்டுண்ட குதிரைகளோடு தசரதன் பத்தினிகள் இரவுகளைக் கழிக்கவில்லையா? அதற்குப் பின் புரோகிதப் பார்ப்பனர்களிடம் தசரதனின் மனைவிகள் ஒப்படைக்கப்படவில்லையா? இதைப்பற்றி எல்லாம் விவரித்துச் சொல்லவேண்டுமா?

தவம் செய்த சம்பூகன் சூத்திரன் என்று சொல்லி வாளால் வெட்டிக் கொன்றானே ராமன் அது என்ன தர்மம்? குலதர்மம் தானே? வள்ளலாரை இந்தக் கூட்டத்தோடு இணைக்கவேண்டாம். ஆன்மீகவாதியாக இருந்து இறுதி காலத்தில் சனாதனத்துக்கு விடை கொடுத்து அனுப்பியவர் ஆயிற்றே வள்ளலார்.

அடுத்த கேள்வி என்ன தெரியுமா? எம்மதமும் சம்மதமா? அதற்கான பதில் என்ன தெரியுமா?

சம்மதம்தான். அதனால்இ அவரவர்கள் அவர்களின் மதநெறிகளின்படி வாழ்வது நல்லதுதானே! அதனால் மத மாற்றமும்இ மதக் கலவரங்களும் இல்லாமல் போகுமே என்கிறது ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜய பாரதம்‘.

இது உண்மை என்றால்இ இந்தியா ஒரே நாடுஇ ஒரே கலாச்சாரம் இந்துக் கலாச்சாரம் என்று கோஷம் போடுவானேன்! குஜராத்தில் முஸ்லிம்களை எதிர்த்துக் கலகம் செயது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆயிரக் கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்தது ஏன்? பாபர் மசூதியை இடித்தது ஏன்?

இந்தியாவில் உள்ள பிற மதத்தவர்களும் ராமனையும்இ கிருஷ்ண னையும்தான் வணங்கவேண்டும் என்று வற்புறுத்துவானேன்?

பேச நா இரண்டுடையோன் ஆரியப் பார்ப்பான் என்ற ஆபிடுயூபே கூற்றுதான் நூற்றுக்கு நூறு உண்மை.

திராவிடத் தமிழர்களே! இந்த ஆரியக் கூட்டத்திடம் எச்சரிக்கையாக இருக்கவும். இந்தப் பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிக்கவும்.

தமிழா தமிழனாக இரு! இரு!!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக