புதன், 15 பிப்ரவரி, 2017


இந்துத்துவா கும்பலின் நச்சு விதைக்குப் பதிலடி  


நூல்


எலியினால் ஒரு தொல்லை. மருத்துவர்கள் உட்பட ஏழுபேர் பணிநீக்கம். எலிப்பொறி எலிமருந்து எலிவலை எல்லாம் பயன்படுத்தி எலிகளை உயிரோடோ உயிரில்லாமலோ பிடித்து அழிக்க நடவடிக்கை. எல்லாம் எங்கே? நம் தமிழகத்தில். அரசு மருத்துவமனையில் குழந்தையை எலி கடித்துவிட்டது. இதுதான் இவ்வளவுக்கும் காரணம்.


இதுபோல் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எலிகளால் தொல்லை. எலிகளை அழிக்க நடவடிக்கை. எங்கே? மராட்டியத்தில். எலிகளால் என்ன தொல்லை? எலிகளால் பிளேக் நோய் பரவுகிறது என்பதைக் கண்டுபிடித்த வெள்ளைக்காரன் எலிகளை அழிக்க உத்தரவிட்டான்.  இன்று எலிகளை அழிக்க தமிழகத்தில் உத்தரவிட்ட ஆட்சியாளர்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.

ஆனால் மராட்டியத்தில் எலிகளை அழித்தபோது ஒரே கொந்தளிப்பு. பிளேக் நோய்க்கு நீ என்ன காரணம் கண்டுபிடிப்பது. நாங்கதான் ஏற்கனவே கண்டுபிடிச்சு வச்சிருக்கோமே! அம்மையின்னா மாரியாத்தாää காலரான்னா காளியாத்தா, பிளேக்கின்னா பெரியாத்தான்னு ஏகப்பட்ட ஆத்தா இருக்க எலிதான் காரணமுன்னு நீ எப்படிச் சொல்லாம் என்று கேள்வி கேட்டார்கள். நம்முடைய தேசபக்தத் திலகம் பாலகங்காதர திலகர்( ஆமாங்க ஆர்எஸ்எஸ் காரங்க கொண்டாடும் அதே திலகர்தான்) ~

எலி நம்ம கணேசருடைய வாகனம். அந்த எலியையெல்லாம் வெள்ளக்காரன் அழிச்சுப்புட்டான்னா நம்ம கணேசர் எதில ஏறி பயணம் செய்வாரு? அதனால வெள்ளக்காரன வெரட்டுனும்முன்னாரு.

வெரட்டனுமுன்னு சொன்னத வெட்டனுமுன்னு சொன்னாருன்னு தப்பா நெனச்சிக்கிட்டோ என்னமோ அவரோட தொண்டர்கள் ரெண்டு வெள்ளக்காரன வெட்டிக் கொன்னுபுட்டானுங்க. அதனால திலகருக்கே தண்டன கெடச்சிது. அந்தக் காலத்தில திலகரால உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கணேசர் ஊர்வலம். அது மராட்டியத்தில் மட்டும் நடந்து வந்தது. தமிழ்நாட்டுக்குள்ள பல வருஷமா நுழைய முடியல. இப்பத்தான் ஒரு இருபது இருபத்தஞ்சு வருஷமா அம்பதடிப்பிள்ளையார்ää அறுபதடிப்பிள்ளையார்ää கார்கில் பிள்ளையார் கிரிக்கெட் பிள்ளையார்னு செஞ்சு அத ஆத்தில கரைக்கிறார்கள். கடலிலே கரைக்கிறார்கள்.  துலுக்கன் தெருவிலே போய் பத்துப்பைசா முறுக்கு பள்ளிவாசல நொறுக்குன்னு கோஷம் போடுறாங்க.

இதுனால என்ன பலன்? தேவையில்லாமல் மதக்கலவரம். தூண்டிவிடுறவன் எவனோ இருக்க அப்பாவிகள் உயிர் பலியாகுது. (அதில் எந்த மதத்துக்காரன் பலியானாலும் உயிர் உயிர்தானே?) நீர்நிலைகள் மாசுபடுது. அநாவசியமாப் போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஆகுது.

இதையெல்லாம் எந்தப் பத்திரிகைகாரனும் எதிர்த்து எழுத மாட்டான். தொலைக்காட்சிக் காரன் கேலி கிண்டல் செய்யமாட்டான்.

ஆனால் தமிழில் பத்திரிகை நடத்தி தமிழன் காசில் பிழைப்பு நடத்தும் தினமலர்க் கூட்டம் பெங்களுருவில் பல ஆண்டுகாலம் திறக்கப்படாமல் மூடிக்கிடந்த திருவள்ளுவர் சிலை முத்தமிழறிஞர் கலைஞரின் முயற்சியால் திறக்கப்பட்டபோது சிலை திறந்துவிட்டால் காவிரியில் தண்ணீர் வருமா? என்று கேலி செய்கிறது.

கலைஞரின் முயற்சியால் தமிழ் செம்மொழியானபோது வீட்டுக்குவீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா? என்று நக்கல் செய்தது.

அதே நேரத்தில் சமஸ்கிருதம் செம்மொழியானபோது சிண்டைத் தட்டிவிட்டு சிலாகித்து எழுதியது தினமலரும் துக்ளக்கும்
தினமணியும்.

 தமிழன் எல்லோரும் தமிழுக்கும் செம்மொழித் தகுதி வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்தார்களே தவிர யாரும்; சமஸ்கிருதம் செம்மொழியானால் இவர்களைப்போல் வக்கிரமாக வீட்டுக்குவீடு சிக்கன் பிரியாணி வருமா? அய்யர் வீட்டுக்கெல்லாம் வெஜ்.பிரியாணி வருமா? என்று கேட்டதில்லை.

ஆனால் அவர்கள் மட்டும் தமிழை தமிழனைக் கேலி செய்கிறார்கள். வெட்கமில்லாமல் தமிழன் அந்தப் பத்திரிகைகளை இன்னமும் காசுபோட்டு வாங்கிப் படித்துக் கொண்டுதானிருக்கிறான்.

இப்பொழுது நாம் கேட்கிறோம். பிள்ளையார் ஊர்வலம் நடத்துவதால் வீட்டுக்கு வீடு பிரியாணி வருமா? காவிரி உருவாக பிள்ளையார்தான் காரணம் என்று புராணத்தில் புளுகி வைத்தபடி அந்த பிள்ளையார் தன்னுடைய பொம்மையைக் கரைக்கவாவது காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடச்செய்வாரா? எதற்காக இந்த ஊர்வலம்? அதனால் என்ன பலன்?

         இவண் : திராவிடர் தொழிலாளர் கழகம்

இந்தத் துண்டறிக்கையை நாம் வெளியிடக் காரணம் பார்ப்பனர்களின் தமிழர் விரோதப் போக்கைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான்.

தினமலரில் தமிழ் செம்மொழியானால் என்ன பயன்? என்ற வினாவுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத்தறி நிற்காமல் இயங்கும். ஒருவேளை கஞ்சிக்கே வழியில்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும்

என்று தினமலர் வாரமலர் (13-06-2004) ல் எழுதுகிறான்.
13-06-2004 தினமலர் வாரமலரில் டவுட் தனபாலு          

அதனால என்னங்க. பெங்களுரில திருவள்ளுவர் சிலை திறந்து விட்டோமா இல்லையா? அதுக்கப்புறம் முப்போகமும் விளையாதா என்ன? என்று கிறுக்குகிறது.

தமிழர்களின் புத்தாண்டு தை முதல்நாள்தான் என்றால் ~கிடப்பது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில் வை என்கிறது கல்கி (27.08.2008)

தமிழ் படித்தால் இனிமேல் சட்டி சுரண்டுகிற வேலைக்குக்கூட லாயக்காக மாட்டோம் என்று துக்ளக் (23.06-2010) எழுதுகிறது.
தமிழில் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகை வைக்கச் சொன்னால் மொழி நக்சலைட்டுகள் என்று எழுதுகிறார்
துக்ளக் சோ.

செந்தமிழுக்கும் சங்கத் தமிழுக்கும் உரிய இடம் அருங்காட்சியகம்தான். அவற்றை அங்கேயே வைத்திடுக! செந்தமிழ் என்பது சிறிய மெழுகுவர்த்திதான். அதைக்கொண்டு அய்பிஎல் கிரிக்கெட் விளையாட்டுத்திடலுக்கு ஒளியூட்ட முனையும் வேலை பலிக்காது என்று தினமணி  (21-06-2010) எழுதுகிறது.

தமிழ், தமிழன், தமிழர் உரிமை, என்றால் பார்ப்பனர்க்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. தமிழன் மானத்தோடும் அறிவோடும் இருக்கக் கூடாது. காலங்காலமாக சூத்திரர்கள்- தேவடியாள் மக்கள் என்று இழிவுபடுத்தியும் சொரணைவராத கூட்டம் தந்தை பெரியாரால் அவர்தம் தொண்டினால் சொரணைபெற்று மானமும் அறிவும் பெற்று தன்மானத்தோடு கிளர்ந்தெழுவதைப் பொறுக்க முடியவில்லை அக்கூட்டத்தார்க்கு.

அதனால் தமிழ் என்று பேசுவதையோ, தமிழுக்கு செம்மொழி என்று கூறுவதையோ அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் இவ்வளவு வெறுப்பைக் கக்குகிறார்கள். அதே நேரத்தில் இந்தியாவில் பேசுவதற்கே நாதியற்ற சமஸ்கிருதம் செம்மொழி ஆனபோது இவ்வாறு அவர்கள் கூறவில்லை.

வந்தவர் வஞ்சகர் தமிழால் செழித்தார் வாழ்வில்  உயர்ந்தபின் தமிழையே பழித்தார்

என்ற புரட்சிக்கவிஞரின் வைரவரிகளை உண்மையாக்குவதுபோல் பார்ப்பனர்கள் நடந்துகொள்வதைத் தோலுறித்துக் காட்டுவதே நமது நோக்கம்.

~பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழ்மொழி பயின்றும் தமிழரெனச் சொல்லிக் கொண்டபோதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும் தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும் சங்கநூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்தில் அன்பும் பற்றும் கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியாய்க் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான்|

என்று பேரறிஞர் அண்ணா சொன்னதுதான் இதில் நிரூபணமாகிறது.

அத்துடன் இவர்கள் அனைவரும் பிள்ளையார் ஊர்வலத்தை ஆதரிப்பவர்கள். தினமலர் இராமசுப்பய்யரின் மகன் கோபால் அய்யர் திருச்சியில் அகில இந்திய விசுவஹிந்து பரிஷத் மாநாட்டை நடத்தியவர். இந்தப் பிள்ளையார் ஊர்வலத்திற்கு ஆதரவு திரட்டுபவர். பிள்ளையார் பெருமைகளை தினமலரில் விலாவாரியாக எழுதுபவர். தினமணி, கல்கி, துக்ளக் கூட்டம் அனைத்தும் விநாயகர் புராணம் பாடுபவர்களே!
அந்த விநாயகர் புராணம் என்ன கூறுகிறது?
தமிழ்நாட்டுக்கே காவிரியைக் கொண்டு வந்தவர் பிள்ளையார் என்கிறது.

எப்படி?

பரமசிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம். எங்கே? உலகத்தின் வடகோடி(?)யான கைலாயத்தில். அந்தக் கல்யாணத்தைக் காண முப்பத்தி முக்கோடி தேவர்கள், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகள், கின்னரர், கிம்புருடர், அஷ்டதிக்குப் பாலகர்கள், நந்தி, நாரதர் எல்லோரும் ஒரு இடத்தில் குவிந்துவிட அந்த பாரம் தாங்காமல் தென்கோடி(?)யான கன்னியாகுமரி உயர்ந்து வடகோடியான இமயமலை தாழ்ந்து விட்டதாம் தராசுத்தட்டு மாதிரி(உலகம் தட்டையா?).

இதனால் பயந்துபோன முனிவர்கள், ரிஷிகள், தேவர்களெல்லாம் பரமேஸ்வரனிடம் முறையிட பரமேஸ்வரன் கட்டைவிரல் உயரமுள்ள அகத்தியனை அனுப்பி சமப்படுத்தச் சொன்னானாம்.

அவன் சிவன் தலையில் அமர்ந்துள்ள அவனின் வைப்பாட்டி கங்காதேவியின் ஜலத்தைக் கமண்டலத்தில் பிடித்துக்கொண்டு உலகத்தை சமப்படுத்தப் புறபட்;டானாம். வரும் வழியில் குடகுமலையில் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தானாம். அங்கு காக்கை வடிவில் வந்த பிள்ளையார் அந்தக் கமண்டலத்தைத் தட்டிவிட அதுதான் ஆடுதாண்டுகாவிரியாய்ப் மாறி, அகண்ட காவிரியாய்ப் பெருகிவந்து தமிழ்நாட்டை வளப்படுத்தியதாம். அதுவும் என்றைக்கு? தன்னுடைய தாய்க்கும் தகப்பனுக்கும் திருமணம் நடக்கும் அன்றே இதனைச்  செய்தாராம் பிள்ளையார்.
ஒருவேளை திருமணத்திற்கு முன்பே பிள்ளையார் பிறந்துவிட்டாரா?
இந்தப் புராணங்களும் அப்படியே இருக்கிறது. இதனைப் பார்ப்பனர்களும் பத்திரிகைக்காரர்களும் பரப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். இதை நம்பி கோயில்கள்ää ஊர்வலங்கள் வெகுஜோராக நடக்கிறது.

எவனும் அந்தப் பிள்ளையாரிடம் போய் அந்தக் காலத்தில் காக்கை வடிவெடுத்துக் கமண்டலத்தைத் தட்டிவிட்டு காவிரியை பெருக்கெடுத்து ஓடச்செய்தாயாமே! இப்பொழுது குறைந்தபட்சம் பெருச்சாளி உருவெடுத்து கிருஷ்ணராஜசாகரிலும் கபினியிலும் போய் எவனும் அடைக்க முடியாத ஒரு ஓட்டையைப் போட்டு தஞ்சைத் தரணியைச் செழிக்க வைக்கக் கூடாதா? என்று கோரிக்கை வைப்பதில்லையே! ஏன்?

ஓ! பெரியார் சொன்னது நினைவுக்கு வருகிறதா? கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். பரப்புகிறவன் அயோக்கியன். வணங்குகிறவன் காட்டுமிராண்டி!

இதற்குப் பிறகும் பிள்ளையார் கோயில், பிள்ளையார் ஊர்வலம்ää அறுபதடிப் பிள்ளையார், அய்ம்பதடிப் பிள்ளையார் என்றால் தேசபக்தி, தெய்வபக்தி என்று சொல்பவன் எவனுக்காவது வெட்கம் இருக்கிறதா? என்றுதானே கேட்கத் தோன்றுகிறது?
இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தத்தான் இந்த துண்டறிக்கையை நாம் வெளியிட்டோம். இதற்கு அறிவுநாணயத்தோடு பதில் சொல்ல முடியாத இந்து முன்னணி கீழ்க்கண்டவாறு நக்கலடிக்கிறது.

இதற்கு இந்துமுன்னணியின் நக்கல்:

 1890 களில் மராட்டியப் பகுதிகளில் பிளேக் நோய் பரவியதால் அதனை ஒழிப்பதற்காக ரேண்ட் என்ற ஆங்கில அதிகாரி நியமிக்கப்பட்டான். அவனோ, நோய் பரவக் காரணமான எலிகளை ஒழிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கவும் பெண்களை மானபங்கப் படுத்தவும் ஆரம்பித்தான். பிளேக் ஒழிப்பு என்ற பெயரில் ராண்ட் செய்து வந்த அட்டூழியங்களை திலகர் கேசரி பத்திரிகையில் எழுதினார். அதையெல்லாம் படித்து வெகுண்டெழுந்த சபேர்கர் சகோதரர்கள் ரேண்டை சுட்டுக் கொன்றனர்.

அவர்களை கூலிக்கு மாரடிக்கும் எட்டப்பன் ஒருவன் காட்டிக்கொடுத்தான். அவனையும் சுட்டுக்கொன்றனர். ஆகவே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சபேர்கர் சகோதரர்கள் மூவரையும், மேலும் ஒருவரையும் சேர்த்து வெள்ளைக்காரன் ஒருசேரத் தூக்கிலிட்டான்.

வெள்ளைக்காரனைக் கண்டித்து எழுதியதற்காக தேசபக்தர் திலகர்மீது ராஜதுவேஷ வழக்குப்போட்டு வெள்ளைக்காரன் அவரை நாடு கடத்தினான். பிள்ளையாருக்கும் ராண்ட் கொலைக்கும் சம்மந்தமில்லை. திலகர் பிள்ளையார் சதுர்த்தியை 1889லேயே துவக்கிவிட்டார். ராண்ட் கொலை 1897ல்தான் நடந்தது. அந்நிய ஆக்கிரமிப்பாளனைக் கொலை செய்தவர்களை புரட்சிவீரர்களாக இன்றும் கொண்டாடி வருகிறார்கள்.

(ஆதாரம் : இடதுசாரி சிந்தனையாளரான சிவலை இளமதியின் ~~சரித்திரத்தை மாற்றிய சதிவழக்குகள்||)

இது ஒருபுறம் இருக்கட்டும். பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடினால் பிரியாணி வருமோ இல்லையோ பிள்ளையாரையும் இந்துமதத்தையும் விமர்சனம் செய்து மாரடிப்பவர்களுக்குக் கூலியாக  பிரியாணி  தேவைகளும் வீடுதேடி வந்துவிடும். கஜானா நிரம்பும் என்பது எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.



நம் கேள்விக்கு ஒழுங்காக பதில் சொல்ல வக்கில்லாதபோது இந்துமுன்னணி ஆர்எஸ்எஸ் கும்பல் எப்பொழுதும் பூசுகின்ற சேறுதான் கூலி வாங்குவதாகச் சொல்வது.

கிறிஸ்துவனிடமும் முஸ்லிமிடமும் கூலி வாங்கிக் கொண்டு இந்து மதத்தை மட்டும் கேலி செய்கிறாய் என்பது கையாலாகாதவன் புலம்பல்.

தந்தை பெரியார் கூலி வாங்கிக் கொண்டு பேசுகிறாய் என்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே பதில் சொல்லியிருக்கிறார். ~நான் கூலி வாங்கிக்கொண்டு பேசுவேன் என்று உனக்குத் தெரிந்திருக்கும்போது நீயும் கூலி தரவேண்டியதுதானே! அப்பொழுது உனக்கு மாரடிக்கிறோமா? மானத்தை வாங்குகிறோமா? என்று தெரியும் என்றார்.

ஆனால் அதனை எல்லாம் இலட்சியம் செய்யாத ஆரியக் கூட்டம் தொடர்ந்து அதே பாணியிலேயே பேசி வருகிறது.
எனவே அதற்கு பதிலடியாக கீழ்க்கண்ட இரண்டு துண்டறிக்கைகளை நாம் வெளியிட்டோம்.



மராட்டியத்தில் முகலாய ஆக்கிரமிப்பை எதிர்த்துத் தீரத்துடன் போராடி இந்துராஜ்யத்தை அமைத்தான் மாவீரன் சிவாஜி. ஓளரங்கசீப்பின் ரத, கஜ, துரக பதாதிகளை எதிர்த்து வெற்றிகண்ட சிவாஜி, பார்ப்பனர்களின் தர்ப்பைப்புல்லின் முன் மண்டியிட்டான். ஆம், முகலாயர்களை வெற்றிகொண்டு இந்து இராஜ்யம் அமைக்கப் பார்ப்பனர்களின் ஆலோசனையை வேண்டினான்.

அவர்கள் உடனடியாக, நீ சூத்திரன். மனுதர்மப்படி சத்ரியன்தான் ஆளவேண்டும். அதனால் உன்னை நாங்கள் சத்திரியனாக்க வேண்டும் என்று கூறி யாகங்களையும், வேள்விகளையும் செய்தார்கள். அதில் சிவாஜி தன்னுடைய எடைக்கு எடை வைரம், வைடூரியம் போன்ற நவரத்தினங்களைக் காணிக்கையாகக் கொடுத்து தங்கத்தால் பசுமாடு செய்து அதன் பின்புறம் நுழைந்து முன்புறம் வெளிவந்து அந்தப் பசு மாட்டையும் பார்ப்பனர்களுக்குத் தானம் செய்தான்.

அத்துடன் நாட்டிலுள்ள அத்தனை பிராமணர்களையும் அழைத்து அவ்வளவு பேருக்கும் மூன்றுவேளையும் வடித்துக் கொட்டிக் கொண்டிருந்தான். அதனால் தன்னுடைய படைவீரர்களுக்கே உணவு வழங்க முடியாமல் கொள்ளைக் காரனாக மாறினான் சிவாஜி என்கிறது வரலாறு.

அந்த சிவாஜிக்குப்பின், ஆட்சி மராத்தியப் பார்ப்பனர்களான பேஷ்வாக்கள் கைக்கு மாறியது. பேஷ்வாக்கள் ஆட்சியில் ஜாதிவெறி தாண்டவமாடியது. தீண்டாதவன் தெருவிலே நடப்பதால் ஏற்படும் தீட்டைப்போக்க இடுப்பிலே விளக்குமாற்றைக் கட்டிக்கொண்டு நடக்க வேண்டும். அவன் எச்சிலை உமிழ்ந்தால் தெரு தீட்டாகிவிடும் என்பதால் எச்சிலைத் துப்பக் கழுத்திலே கலயத்தைக் கட்டிக்கொண்டு நடக்க வேண்டும் என்ற கொடுமை நடந்தது.

இந்த சூழ்நிலையில்தான் வெள்ளைக்கார அதிகாரியான ரேண்ட், பிளேக் நோய்க்குக் காரணமான எலிகளை ஒழிக்க, பிராமணர்கள் குடியிருக்கும் அக்கிரஹாரத்தில் நுழைந்து சோதனை செய்தான். சொந்த நாட்டு மக்களை, ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களை இவர்கள் வணங்கும் அதே தெய்வத்தை வணங்குபவர்களையே தெருவில் நடக்க அனுமதிக்காதவர்கள், மாற்று மதக்காரனை மிலேச்சனான வெள்ளைக்காரனை அனுமதிப்பார்களா? அந்த வெறியின் காரணமாகத்தான் அந்த ரேண்ட் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இன்றைக்கும் தீண்டாமை தலைவிரித்தாடும் கிராமங்களில் தீண்டத்தகாதவன் தெருவில் நுழைந்தால் பிடித்துக் கட்டிவைத்துவிட்டு பெண்களைக் கையைப் பிடித்து இழுத்தான், திருட வந்தான் என்று சொல்வது வாடிக்கையாக இருக்கிறது. இதுபோலத்தான் பிளேக் நோயை ஒழிக்க வந்த வெள்ளைக்காரனைக் கொன்றுவிட்டு அவன்மீது பெண்களைக் கற்பழித்தான், கொள்ளையடித்தான் என்று பழிபோட்டார்கள்.

அந்த வெள்ளைக் காரனைச் சுட்டுக்கொன்றதற்குக் காரணம் ஜாதிவெறிதானே தவிர நாட்டுப்பற்றோ வேறு பற்றோ கிடையாது. அவர்களிடத்தில் அந்த ஜாதிவெறியை ஊட்டி அதன்மூலம் கொலை வெறியைத்தூண்டிய காரணத்துக்காகத்தான் திலகருக்குத் தண்டனை கிடைத்தது.

அந்தத் திலகரால் மக்களிடத்தில் மதவெறியை ஊட்டுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் பிள்ளையார் ஊர்வலம். அந்தப் பிள்ளையார் ஊர்வலம் தமிழ்நாட்டுக்குத் தேவையில்லாதது. அதனால் தேவையற்ற பிரச்சினைகள்தான் உருவாகுமே தவிர உழைக்கும் மக்களான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காதொடிந்த ஊசிமுனையளவும் நன்மையில்லை.

இதையெல்லாம் ஆதரிக்கும் தினமலர், துக்ளக் கூட்டம், தமிழ் செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா? திருவள்ளுவர் சிலை திறந்தால் காவிரியில் தண்ணீர் வருமா? என்று தமிழனுக்கு எதிராக, தமிழுக்கு எதிராக எழுதுகிறது. இதைப்பற்றி ஒரு வார்த்தையும் சொல்லாமல் நம்மைக் கேலி செய்வதிலிருந்தே இந்துமுன்னணி பிஜேபி ஆர்எஸ்எஸ் வகையறாவின் நோக்கமும் இதுதான் என்பது சொல்லாமலே விளங்கும்.

எனவே தமிழர்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

பார்ப்பனர்கள் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டதாகச் சொல்லப்படும் கதைகளெல்லாம் தங்களுடைய இனநலனைப் பாதுகாக்க அவர்களால் நடத்தப்பட்ட படுகொலைகளே! அதற்கு இன்னொரு உதாரணத்தையும் குறிப்பிட முடியும்.

வீரவாஞ்சி என்று தேசியவாதிகளால் கூறப்படும் வாஞ்சிநாதன் எதற்காக கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்றான்? அவனைச் சுட்டுக்கொன்றால் உடனே நாட்டுக்கு விடுதலை கிடைத்து விடும் என்றா சுட்டுக் கொன்றான்? இல்லையே! பார்ப்பன சனாதனதர்மத்தைக் கட்டிக்காக்கவே அவனைத் தான் சுட்டுக்கொன்றதாக அவனுடைய பாக்கெட்டில் கடிதம் எழுதி வைத்திருந்தான். அது என்ன சனாதன தர்மம்? ஆஷ் துரையால் எப்படி அந்த சனாதன தர்மம் கெட்டது?

கலெக்டர் ஆஷ் துரையும் அவனது மனைவியும் மணியாச்சி வழியாக காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ஒரு நிறைமாத கர்ப்பிணிப்பெண் புல்லுக்கட்டுத் தூக்கி வரும் வழியில் பிரசவ வேதனை ஏற்பட்டு கீழே விழுந்து துடித்துக்கொண்டிருக்கிறார்.

அந்தப் பெண்மணியைச் சுற்றிப் பெண்கள் கூட்டம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதே தவிர யாரும் அந்தப் பெண்ணைத் தொட்டுத் தூக்கவோ அவருக்கு உதவவோ முன்வரவில்லை.

அவ்வழியாக வந்த கலெக்டருடைய மனைவி காரை நிறுத்தச் சொல்லி என்னவென்று பார்க்கிறார். உதவியற்றுத் தவித்து வரும் அந்தப் பெண்ணுக்கு உதவிசெய்யாமல் வேடிக்கை பார்க்கிறீர்களே! உங்களுக்கெல்லாம் ஈவு இரக்கமில்லையா? என்று அந்தப் பெண்களைப் பார்த்துக் கேட்கிறார். அதற்கு அப்பெண்கள் ~ அந்தப் புல்லுக்கட்டுக்காரி ஒரு தீண்டத்தகாதவள். அவளை நாங்கள் தொடுவதால் தீட்டாகிவிடும். அதனால் தொடமாட்டோம் என்கிறார்கள்.

அந்தப் பெண் பிரசவ வேதனையில் இறந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு அது அவளுடைய தலைவிதி என்று விலகிவிடுவோம் என்று சிறிதும் மனிதாபிமானமன்றிக் கூற, இரக்கமுள்ள வெள்ளைக்காரப்பெண்மணியான கலெக்டரின் மனைவி டிரைவரின் உதவியுடன் அப் பெண்ணைத் தூக்கி காரில் ஏற்றி அக்கிரஹாரத்தின் வழியாகக் காரைச் செலுத்தச்செய்து மருத்துவனையில் சேர்த்து பிரசவம் பார்க்க உதவி செய்தாள்.

ஒரு தீண்டத்தகாத பெண்மணியை கலெக்டரின் மனைவி காரில் ஏற்றிக் கொண்டு அக்கிரஹாரம் வழியாகச் சென்றதனால் தங்களுடைய தெரு தீட்டாகவிட்டதாகவும், வெள்ளைக் காரனை இப்படியே வளரவிட்டால் நம்முடைய சனாதன தர்மத்தையெல்லாம் கெடுத்து விடுவான் என்பதாலும் ஆத்திரமடைந்த ஆக்கிரஹாரவாசிகளெல்லாம் ஒன்றுகூடி கலெக்டர் ஆஷ் தரையைக் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்த நேரத்தில் தாமாக முன்வந்து கலெக்டரைச் சுட்டுக் கொன்றவன்தான் வாஞ்சிநாதன்.

பார்ப்பனர்கள் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டதாகச் சொல்வதெல்லாம் இப்படிப்பட்ட செய்ல்கள்தானே தவிர வேறல்ல. இதே போன்றதுதான் பம்பாயில் ரேண்ட் கொலையும் என்பதில் அய்யமில்லை.

இந்த நாட்டுக்கு விடுதலைக்குப் பாடுபட்டதாகச் சொல்லப்படும் திலகர் அவர்கள், விடுதலைக்குப்பின் இந்த நாட்டுக்கு அரசியல் சட்டமாக மனுதர்மம்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார்.

பிராமணர்கள் சொற்படிதான் அரசுகள் இயங்கவேண்டும் என்பது மனுதர்மம். சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதும் மனுதர்மம். அவரவர் குலத்தொழிலை அவரவர் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்பதும் மனுதர்மம்.

அதன்படி ~எண்ணெய்க் கடைக்காரனும், வெற்றிலைபாக்குக் கடைக்காரனும், வண்ணார்களும் மற்றவர்களும் சட்டமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவது ஏன்? என்று தனக்குப் புரியவில்லை| என்றார் திலகர். அதே கருத்தைத்தான் வல்லபாய் பட்டேலும் கொண்டிருந்தார்.  

(ஆதாரம்: காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன? என்ற புத்தகத்தில் அண்ணல் அம்பேத்கர்|

இந்தத் திலகரையும் வல்லபாய் பட்டேலையும் ஆர்எஸ்எஸ் காரர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்கள். அந்தத் திலகரால் அறிமுகப் படுத்தப்பட்ட பிள்ளையார் ஊர்வலத்தை ஆர்எஸ்எஸ் இந்துமுன்னணி வகையறாக்கள் நடத்துவதன் நோக்கமும் அதுவாகத்தானே இருக்க முடியும்?

இதை நேரடியாகச் சொன்னால் தங்கள் பின்னால் அணிவகுக்கும் அப்பாவி பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் ஏமாற்று வார்த்தைகளுக்கு மயங்கமாட்டார்கள் என்பதால் இவர்களை அம்பலப்படுத்தும் நம்மை கூலிக்கு மாரடிப்பதாகக் கொச்சைப் படுத்துகிறார்கள்.

கூலிக்கு மாரடிப்பதை நிரூபித்தால் எங்கள் சங்கத்தைக் கலைத்து விடுகிறோம். இல்லையேல் நீங்கள் பிஎம்எஸ்எஸ்ஸைக் கலைத்து விடுவீர்களா? என்று சவால் விட்டோம். இதுவரை அவர்கள் அதனை நிரூபிக்கவும் இல்லை. அவர்கள் சங்கத்தைக் கலைக்கவும் இல்லை. மாறாக திரும்பத்திரும்ப அதே பொய்யைச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

இந்த மனுதர்மம்தான் நம் மக்களைக் கீழ்ஜாதியாக்கி, தேவடியாள் மக்கள் என்று கூறுகிறது: நம் மக்களைத் தீண்டத்தகாதவராக்கியது நம் மக்களுக்குக் கல்வியில்லாமலும் செல்வம் இல்லாமலும் செய்தது என்று அதனைக் கொளுத்தினார்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்.

பார்ப்பனரல்லாத நம் மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக காங்கிரசை விட்டு வெளியேறினார் பெரியார். வட்டமேசைமாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி ஒதுக்கீட்டுக்காகப்போராடி வென்றார் அம்பேத்கர். இராஜாஜி குலக்கல்வித்திட்டம் கொண்டுவந்தபோது பிள்ளையார் பொம்மையைப் போட்டு உடைத்தார் பெரியார்.

அதனால் நம் மக்களுக்குக் கல்வியறிவும், வேலைவாய்ப்பும் கிடைத்தது. ஜாதியை ஒழிக்க அரசியல் சட்டத்தைக் கொளுத்தி சிறையேகினார் பெரியார். பெரியாரின் போராட்டத்தால் பலனடைந்த மக்கள் கோடானுகோடி.

அதுபோல் ஆர்எஸ்எஸ் வகையறாக்கள் நடத்துகின்ற நிகழ்ச்சிகளால் என்ன பலன்? பாபர் மசூதியை இடித்தீர்கள். அதனால் நாட்டில் மதக்கலவரம். பல்லாயிரம்பேர் செத்தார்கள். வி.பி. சிங் மண்டல் கமிசனை அமல்படுத்தியபோது அத்வானி ரத யாத்திரை என்ற பெயரால் ரத்த யாத்திரை நடத்தி பலபேர் அதனால் பலியானார்கள். தென் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட சேது சமுத்திரக்கால்வாய்த் திட்டம் உங்களால் முடக்கப்பட்டுக் கிடக்கிறது.

இன்னும் பாபர் மசூதிபோன்று காசியிலும் மதுராவிலும் உள்ள மசூதிகள் இடிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறீர்கள். தொழுநோயாளிகளுக்குத் தொண்டு செய்த பாதிரியாரைக் கொலை செய்கிறீர்கள். மக்கள் பணிசெய்யும் கன்னியாஸ்திரிகளைக் கற்பழிக்கிறீர்கள். இதனால் நாட்டில் பதட்டமும் பயங்கரவாதமும்தானே அதிகரிக்கிறது?

அதேபோல பிள்ளையார் ஊர்வலம் நடத்துவதன் நோக்கம் என்ன? திலகரின் கூற்றுப்படி மனுதர்மத்தை அமுல்படுத்துவதா? கண்ட ஜாதிக்காரனும் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் செல்வதைத் தடுப்பதா?

கீழ்ஜாதிக்காரன் மேல்படிப்புப் படிக்கக் கூடாது என்பதற்காகவா? எதற்காக இந்தப் பிள்ளையார் ஊர்வலம்? அந்த மனுதர்மத்தின்படி ஆட்சி நடத்தியவர்கள் மராத்திய பேஷ்வாக்கள்.

அந்த பேஷ்வாக்கள் ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் கழுத்திலே கலயத்தைக் கட்டிக்கொண்டு அலைந்தார்களே! அதுபோல் இன்னமும் அலைய வேண்டுமா? இடுப்பிலே விளக்குமாற்றைக் கட்டிக்கொண்டு திரிய வேண்டுமா?
மனுதர்மத்தின்படியும் பார்ப்பனர்களின் ஆலோசனையின் படியும் ஆண்ட  சிவாஜியின் கதி என்ன ஆனது?

அத்தகைய சாம்ராஜ்யம்தான் இந்தியாவுக்கு வரவேண்டுமா? அறிவு நாணயத்துடன் பதில் சொல்லுமா இந்து முன்னணி?
இந்த இரண்டு துண்டறிக்கை வெளியிட்ட பிறகும் அதற்கு பதில் சொல்லாத இந்து முன்னணி நபர் மேலும் ஒரு துண்டறிக்கையை வெளியிடுகிறார். அது இதோ!

கூலிக்கு மாரடிப்பதுதான் குலத்தொழில்!

சந்தேகமென்ன ஆங்கிலேயனுக்கு அனுகூலமாக இருப்பதற்காகவே துவங்கப்பட்டதுதான் ஈவேரா ரூ உழ.  வெள்ளைக்காரன் அடியை வருடி, நாட்டைவிட்டுப்போகாதே, போகாதே என்று கதறினார்கள். நாட்டை விட்டு விட்டுப்போனாலும் சென்னை மாகாணத்தை மட்டுமாவது வைத்துக்கொள் என்றனர். வெள்ளையன் வெளியேறிய பின்பு காமராஜர் முதல் கடைசியாக அம்மா தூக்கியெறிந்த அஞ்சு லட்சத்தைக் கவ்விக்கொண்டு அஞ்சு வருஷம் காலில் விழுந்து கிடந்தார்கள்.

ஈவேரா தமிழர் தலைவரா? தான் கன்னடியன், கர்நாடகா பலிஜா வகுப்பைச் சேர்ந்தவன் என்று பெருமைபொங்கச் சொல்லிக் கொண்டவர். தமிழ் படித்தால் பகுத்தறிவின்றி பாமரனாக இருக்க வேண்டியதுதான். தமிழ் காட்டுமிராண்டி பாஷை. தமிழை எதற்குப் படிக்க வேண்டும்? தமிழைப் படித்தவர்கள் முற்போக்கு எதிரிகள். தமிழ் மொழியிலும், சமுதாயத்திலும் மானம் இருக்கிறதா? வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளிடமும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள் என்றவர்

((ஈவேரா சிந்தனைகள் இரண்டாம் தொகுதி) ஆனால் மகளாக வளர்த்து மனையாளாக ஆக்கிக்கொண்ட மணியம்மையிடம் ஆங்கிலத்தில் பேசினாரா? யாமறியோம் பராபரமே!

தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்காக உண்மையாகப் போராடிய அம்பேத்கார்ஜீயை ஆரிய ஸ்தாபனமான காங்கிரசுக்கு அடங்கிப் போனவர் என்று கொச்சைப் படுத்திய ஈவேராவை அம்பேத்கர்ஜியுடன் ஏன் ஜோடி சேர்க்க வேண்டும்?

 ஈவேரா தாழ்த்தப்பட்டவர்களை உய்விக்க வந்தவரா?

~~கோயிலில் சூத்திரர்கள் எதுவரை போகிறார்களோ அதுவரை அரிஜனங்கள் செல்லலாம்|| என்று காந்தி சொன்னபோது சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? நடு சாதியான சூத்திரர்கள் கீழ்ஜாதியாவதை அனுமதிக்கக் கூடாது? என்றார்.

 (வைக்கம் போராட்ட வரலாறு)

நம்மவர் என்று எழுதிப் பயனில்லை. உள்ளத்தில் தொடங்கி உதட்டில் வர வேண்டும். பறையர் குலப் பெண்கள் ரவிக்கை அணிவது பற்றி ஈவேரா கூறியதைப் படியுங்கள். ~~

துணிவிலை ஏறியதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கை போடுவதுதான். வேலையில்லாத்திண்டாட்டத்திற்குக் காரணம் பறையன்கள் எல்லாம் படித்துவிட்டதுதான|| இதனைப் பிரசுரித்து அம்பேத்கர் மாத இதழ் சூட்டுக்கோல் பகுதி நவ-டிச 1963 கண்டித்துள்ளது.

ஒரு விஷயத்தைப் பாராட்ட வேண்டு;ம். என்ன அது? கொடுப்பது யாரானாலும் வாங்கிய கூலிக்கு வஞ்சனையின்றி மாரடிப்பதைத்தான். அதிலும் 2G 3G டெக்னாலஜி எல்லாம் வந்து விட்டதாமே!

 இவண் : இந்துமுன்னணி!


இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் நஞ்சு கலந்தவை. திட்டமிட்டு பெரியாரையும் பெரியார் இயக்கத்தையும் உண்மைக்க மாறாகக் கொச்சைப்படுத்துபவை. பெரியார் சொன்ன கருத்துக்களில் முன்னாலும் பின்னாலும் உள்ள வரிகளை எடுத்து விட்டு இடையில் உள்ள ஒரு சொற்றொடரை வைத்து வார்த்தை விளையாட்டு நடத்தியிருக்கிறது இ.முன்னணி.

இவர்கள் கொள்கையை என்றைக்கும் வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டதில்லை. அவர்களுடைய செயல்தி;ட்டமும் கூட வெளிப்படையாக இருக்காது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதுதான் இவர்களது செயல்பாடு.

இவர்களின் உண்மையான கொள்கை என்பது மனுதர்மத்தைச் சட்டமாக்கி பார்ப்பனர்கள் கையில் ஆட்சியை ஒப்படைப்பதுதான். அதை;தான் திலகர் போன்றவர்கள் சொன்னார்கள். ஆர்எஸ்எஸ் சின் கொள்கையும் அதுதான். அதனை நாம் அம்பலப்படுத்தியதால் ஆத்திரம் தலைக்குமேல் ஏறுகிறது.

இவர்களுக்கு பக்தி என்பதெல்லாம் கிடையாது. கடவுள் நம்பிக்கையும் கிடையாது. ஆனால் மற்றவர்களை பக்தியுள்ளவர்களாக ஆக்குவதும் கடவுளை நம்பச்  சொல்லுவதும் இவர்கள் ஆதிக்கத்தைத் தக்கவைக்கவே ஆகும்.

 இதனை வெளிப்படையாக ஒத்துக்கொண்டால் தங்களுக்குப் பல்லக்குத்தூக்க ஆள் இல்லாமல் போய் விடுமே! நமக்கு ஆள் இல்லாமல் செய்வதில் இந்தப் பெரியாரின் தத்துவங்கள் காரணமாக இருக்கிறதே!எனவே, அந்தப் பெரியாரின் கருத்துக்களுக்கு பதில் சொன்னாலோ தம்முடைய கொள்கையை வெளிப்படையாகச் சொன்னாலோ தாங்கள் அம்பலப்பட்டுப் போய்விடுவோம் என்பதால் பெரியாரின்மீது சேற்றை வாரி இறைக்கிறது. மலத்தை அள்ளி வீசுகிறது.

அது எப்படி உள்ளது எனில் ஒருவர் வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது அதைக் கவரும் நோக்கில் ஜேப்படித்திருடன் ஒருவன் ~சார் உங்க சட்டையில ஏதோ அசிங்கமா ஒட்டிக்கிட்டிருக்கு| என்று சொல்லுவான். அருவருப்படைந்த அவர் பணப்பையைக் கீழே வைத்துவிட்டு அசிங்கத்தைத் துடைத்துக்கொண்டிருப்பார். உடனே ஜேப்படிக்காரன் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவான்.

நாம் ஆர்எஸ்எஸ் கும்பலின் வண்டவாளங்களைத் தோலுறிக்கும் போது அதனைத் திசைதிருப்பும் விதமாக  மலம் வீசும் ஜேப்படித் திருடனைப்போல் அசிங்கத்தை நம்மீது சுமத்தி நம்மைத் திசைதிருப்பி தன்னுடைய உண்மையான முகத்தை மறைக்கப் பார்க்கிறது இ.முன்னணிக்கும்பல்.

இதுபோன்ற அசிங்கங்கள் ஒன்றும் புதிதல்ல. பெரியார் தொடுத்த கணைகளைத் தாக்குப்பிடிக்க முடியாத கும்பல், அவர்மீது வீசாத மலமா? சாக்கடையா? அழுகிய முட்டையா? எத்தனையோ அசிங்கங்களை வாரி அவர்மீது எறிந்திருக்கிறார்கள். அந்த மலத்தைத் துடைக்காமலேயே தான் சொல்ல வேண்டிய கருத்தைச் சொல்லி முடித்து வீட்டிற்குப் போய் அதனைக் கழுவி சுத்தம் செய்தவர் பெரியார். எனவே, அதற்கெல்லாம் பயந்துகொண்டு ஆர்எஸ்எஸ்ஸை அம்பலப்படுத்துவைத நாம் நிறுத்தப் போவதில்லை.

ஆங்கிலேயனுக்கு அனுகூலமாக இருப்பதற்காகவே துவங்கப்பட்டதுதான் ஈவேரா ரூ உழ.  வெள்ளைக்காரன் அடியை வருடி, நாட்டைவிட்டுப்போகாதே, போகாதே என்று கதறினார்கள். நாட்டை விட்டு விட்டுப்போனாலும் சென்னை மாகாணத்தை மட்டுமாவது வைத்துக்கொள் என்றனர் என்கிறது இ.முன்னணி.


இவர்களுக்கு வரலாறும் தெரியவில்லை. ஒரு மண்ணும் புரியவில்லை என்பதுதான் இதிலிருந்து தெரிகிறது. பெரியார் எடுத்த எடுப்பிலேயே சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கவில்லை. அவர் முதன்முதல் சேர்ந்தது காங்கிரசில்தான். அந்தக் காங்கிரசை இப்படியா காலைவாருவது?

வெள்ளைக்காரன் என்றென்றும் இந்த நாட்டில் இருக்க வேண்டும். அவனுடைய ஆட்சி காருள்ளளவும் கடல் நீருள்ளளவும் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநாடுகளில் இராஜவிசுவாசத் தீர்மானம் நிரறவேற்றப்பட்டுத்தான் மற்ற கோரிக்கைகள் வைக்கப்படும். அந்தக் காங்கிரஸ் கட்சியைத் துவக்கியவனே ஆலன் ஆக்டெவியன் ஹ்யூம் என்கிற வெள்ளைக்காரன்தான். அதில் இந்தியர்களுக்கு உத்தியோகங்களில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அத் தீரமானங்களை ஏற்றுக்கொண்டு வெள்ளைக் காரன் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புக்களில் இடம் கொடுத்தான்.

அப்படி இடம் கொடுத்த நேரத்தில் அனைத்துப் பதவிகளையும் பார்ப்பனர்களே அனுபவித்தார்கள். கல்வி வேலைவாய்ப்பு எல்லாவற்றையும் பார்ப்பனர்களே கபளீகரம் செய்து கொண்டார்கள்.

அப்படிப் பார்ப்பனர்களே அனுபவித்துவரும் கல்வி வேலைவாய்ப்புக்களில் பார்ப்பனரல்லாதாருக்கும் வகுப்புவாரி உரிமை வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் நீதிக்கட்சி ஆகும். அந்த நீதிக்கட்சிக்கு 1938ல்தான் பெரியார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.

பிரிட்டிஷார் இதுவரை நம்மை ஆண்டது மனுதர்ம ஆட்சிப்பிரகாரம் என்பதில் என்ன சந்தேகம்? இவ்வளவு காலம் ஆட்சி செய்த வெள்ளைக்காரன் சாதிக்கட்டுப்பாட்டை ஒழிக்காதது பிரிட்டிஷார் செய்த தவறு என்றும் இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும் எனறு குடியரசு பத்திரிகையில் தலையங்கம் எழுதியதற்காக 1933ல் ஒன்பது மாத சிறையும் 300 ரூபாய் அபராதமும் அதைக் கட்டத்தவறினால் மேலும் ஒரு மாத சிறைத்தண்டனையும் வழங்கியது நீதிமன்றம் (வெள்ளையர் ஆட்சி) குடியரசு பத்திரிகையின் பதிப்பாளர் என்ற முறையில் அவரது தங்கை கண்ணம்மாளுக்கு ஆறுமாத சிறையும் 300 ரூபாய் அபராதமும் அதைக் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனையும் வழங்கியது பிரிட்டிஷ் அரசு.

~பிரிட்டிஷார் இந்தியாவில் நடத்தும் ஆட்சி தங்கள் சுரண்டலுக்காக ஆரியருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கூட்டுச் சுரண்டல் ஆட்சியாக இருக்கிறதல்லாமல் அநீதி நிநை;துமிருக்கிறது. ஆகவேதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிய வேண்டுமென்று கூறுவதைவிட பிரிட்டிஷ் - ஆரிய ஒப்பந்த ஏகாதிபத்தியம் ஒழிக என்று நாம் கூறுவது பொருத்தமுள்ளதாகும்| என்று பெரியார் கூறுகிறார். 188

~பிரிட்டிஷார் ஆரியர்களுக்கு ஏஜன்டுகள்போல் இருந்து ஆரியர் கொள்கையான மனுதர்ம சாஸ்திரத்தின்படியே நம்மை ஆளுகிறார்கள்| என்றும் 83

~வெள்ளையருக்காவது அவர்களின் சமீபத்திய கூட்டாளியான வர்க்கத்தாரான ஆரியர்களுக்காவது நமக்குத் தலைவர்களோ காவலர்களோ ஆக உரிமை இல்லை| என்றும் 52

~நம் நாட்டின் ஆட்சிமுறை நம் கையிலேயே இருக்கவேண்டும் என்பதும் நம்நாடு அந்நியரின் எவ்வித ஆதிக்கத்திற்கும், சுரண்டுதலுக்கும் உட்படாத உண்மையான முழு சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்பதும் நமது அடிப்படையான தத்துவமாகும். அந்நிய அட்சியும் அந்நிய ஆதிக்கமும் ஒழிய வேண்டும் என்றால் அதற்கு என்ன பொருள்? ஒரு வகுப்பு அல்லது ஒரு வர்க்கம், ஒரு சமயம், அல்லது ஒரு நாட்டைச் சேர்ந்த மக்களை மற்றொரு வர்க்கம் முதலியவற்றைச் சேர்ந்த மக்கள் ஆதிக்கமோ ஆட்சியோ செய்யக் கூடாது என்பதும்தானே கருத்தாக இருக்க வேண்டும்?

அப்படிக்கில்லாமல் தூரத்தில் இருக்கும் நாட்டானும் வர்க்கத்தானும் மாத்திரம் ஆட்சி செலுத்தக்கூடாது – சுரண்டக் கூடாது. ஆனால் அடுத்த நாட்டுக் காரனும் பக்கத்தில் இருக்கிற அந்நிய வர்க்கத்தானும் ஆதிக்கம் செலுத்துவதையும் சுரண்டுவதையும் மக்களைப் பிரித்து வைத்து சூழ்;சி செய்து கலவரம் உண்டாக்கி பாடுபடாமல் வாழ்வதையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மற்றும் இவைகளை இன்னும் அதிகமாகச் செய்வதற்கு ஏற்ற வசதிகளை செய்து கொள்வதற்கு இடம் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லத்தக்க காரியங்கள்தான் பூரண சுதந்திரம் என்றால் இதை யார் ஒப்புவார்கள்? இது ஒரு கூட்டத்தாருக்குத்தான் தங்கள் காரியங்களுக்குப் பூரண சுதந்திரம் என்றாகுமே தவிர ஒரு நாட்டுப் பெருங்குடி மக்களுக்குப் பூரண சுதந்திரமாகாது| என்று சொன்ன பெரியார்

~பிரிட்டிஷ் ஆதிக்கத்தினின்றும் அரசியல் விடுதலை, வடநாட்டுப் பனியாக்களின் சுரண்டலினின்றும் திராவிடத்திற்குப் பொருளியல் விடுதலை, பார்ப்பனியத்தின் பிடியினின்றும் திரவிடத்திற்கு சமூகவியல் விடுதலை ஆகிய மூன்று விடுதலைகளையும் பூரணமாகப் பெற்றுத் தனித்திராவிடத்தை மலரச் செய்வதே தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ளுமாறு மாணவர்களைக் கேட்டுக் கொள்ளுவதாகத் தீர்மானங்களை இயற்றியவர் பெரியார்.
தனித்திராவிட நாடு கிடைத்து விட்டால் புரோகிதம் செய்வது கிரிமினல் குற்றம் என்று  சட்டம் செய்யப்படும் என்றும் பேசியவர் பெரியார்.

பிரிட்டிஷ் காரன் இந்த நாட்டை விட்டுப் போவதற்கு முன் பிராமணர் பிராமணரல்லாதார் என்ற பிரச்சினைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்றும் பெரியார் சொன்னார்.
இவையெல்லாம் நிறைவேறிவிட்டால் உழைக்காமல் உண்டு ஊரை ஏய்த்துவரும் தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடுமே என்று அஞ்சிய பார்ப்பனக் கூட்டம் பெரியாரை பிரிட்டிஷாருக்கு வால் பிடித்தார் என்று பொய்ப்பிரச்சாரம் செய்தனர்.

பார்ப்பனர்களெல்லாம் ஒட்டுமொத்தமாக ஏதோ வெள்ளைக்காரனை விரட்ட வேண்டும் என்று ஒத்தைக் காலில் நின்றதுபோலவும் பெரியார் ஆட்சியாளர்களின் அடிவருடியாக இருந்தார் என்றும் எழுதுவது கடைந்தெடுத்த பித்தலாட்டம்.

  உண்மையில் வரலாறு முழுக்க ஆட்சியாளர்களை தம் வலையில் போட்டுக்கொண்டு மற்ற உழைக்கும் மக்கள் அனைவரையும் தமக்கு அடிமையாக்கி சுரண்டிப் பிழைத்த கூட்டம் வெள்ளைக்காரன் வந்த பிறகும் அவனது அடியை வருடி தங்கள ;தேவபாஷையான சமஸ்கிருதத்தை மறந்து மிலேச்ச பாஷையான ஆங்கிலத்தைப் படித்து வெள்ளைக் காரன் ஆட்சியில் அவனுக்கு அடுத்த இரண்டாமிடத்தில் அனைத்துப் பதவிகளையும் அனுபவித்த கூட்டம் பார்ப்பனக் கூட்டம். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வெற்றி பெற்று விடுவான் என்று கருதி அவனை வரவேற்க பார்ப்பனர்கள் தயாராகிவிட்டார்கள். எப்படியெனில் மயிலாப்பூரிலிருந்த பார்ப்பனர்களெல்லாம் ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

அந்த ஹிட்லரின் ஸ்வஸ்திக் சின்னத்தை தங்கள் சின்னமாகக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் சங்பரிவார்க்கூட்டம் இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலரான பெரியாரைக் கொச்சைப் படுத்துவது அநாகரிகமானது.

அதேபோல  காமராசர் முதல் ஜெயலலிதாவரை ஆதரித்ததையும் மிகப் பெரிய தவறு என்றும் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை திராவிடர் கழகம் ஆதரிப்பதுபோலவும் திரித்து எழுதுகிறது.

யார் ஆண்டாலும் அவர்களை ஆதரித்து அவர்களுடைய தயவைப் பெற்று தங்களை வளப்படுத்திக்கொண்டவர்கள் பார்ப்பனர்கள்தான். மன்னர் காலத்தில் எந்த மன்னர் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களைத் தங்கள் வலையில் போட்டு பட்டம் பதவிபெற்று மன்னர்களுக்கு மந்திரியாகவும், இராஜகுருவாகவும் பல உயர் பதவிகளையும் அனுபவித்தவர்கள் பார்ப்பனர்கள்தான். தங்களுடைய சுகபோக வாழ்வுக்கு எந்த மன்னர் ஒத்துவராவிட்டாலும் அவர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்து தன்னை இவ்வளவு காலமும் ஆதரித்த மன்னனையே ஒழித்துக்கட்ட  இவனுடைய இராணுவ இரகசியம் உட்பட அனைத்தையும் காட்டிக்கொடுத்து ஆட்சியைக் கவிழ்ப்பார்கள் பார்ப்பனர்கள்.

பின்னர் ஆட்சிக்கு வந்த எதிரி நாட்டுக்காரனையும் தங்கள் வலையில் சிக்கவைத்து அவனிடமும் முன்பு இருந்த மன்னனிடம் என்ன என்ன  அனுபவித்தார்களோ அத்தனை சுகங்களையும் இவனிடமும் அனுபவிப்பார்கள்.

அப்படிப்பட்ட பார்ப்பன இனத்துக்கு வால்பிடிக்கும் ஆர்எஸ்எஸ் இந்து முன்னணிக்கும்பல் பெரியாரை அது மாதிரி சொல்வது கடைந்தெடுத்த பித்தலாட்டம்.

ஆட்சியாளர்களாக யார் வந்தாலும் அவர்களை ஆதரிப்பதுதான் பெரியாரின் வேலை என்றால் இராஜாஜி இரண்டுமுறை ஆட்சிக்கு வந்தபோதும் அவரை எதிர்த்துப் போராடி சிறை சென்றாரே பெரியார்! அது ஏன்?

இராஜாஜி தன்னுடைய இனநலத்தைப் பாதுகாக்க இரண்டுமுறையும் திட்டங்களைத் தீட்டினார். சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ். அதே காரணத்தினால் இராஜாஜி  இந்தியைத் திணித்தபோது அதனை எதிர்த்து சிங்கமென கர்ஜித்துப் போராடி சிறைசென்ற செம்மல் தந்தை பெரியார்.

அதேபோல் 1952ல் பார்ப்பனரல்லாத மக்களின் கல்விக்கண்ணைக் குருடாக்கும் குலக்ல்வித்திட்டத்தைக் கொண்டு வந்தபோது வெகுண்டெழுந்து போராடி அவரை பதவியை விட்டே ஓடச்செய்தவர் தந்தை பெரியார்.

 இராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்;டத்தை இந்தக் காமராசரை வைத்துத்தானே பெரியார் முறியடித்தார். அப்படிச் செய்யாமல் இருந்திருந்தால் இப்பொழுதும் மன்னராட்சிக் காலம்போல் எல்லாவற்றையும் தங்கள் வயிற்றில் அறுத்துக் கொட்டிக் கொண்டிருக்கலாமே, அதனைக் கெடுத்தது இந்த ஈரோட்டுக் கிழவனல்லவா என்கின்ற ஆத்திரம் கொப்புளிக்கிறது.

அதேபோல தமிழ்நாட்டில் இருந்து வந்த 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது அதை எப்படியாவது காப்பாற்றியே ஆகவேண்டும் என்று முயற்சி எடுத்தவர் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள்.

யாருடைய சிந்தனையிலும் உதிக்காத 31(சி) என்கின்ற சட்டப் பிரிவை எடுத்துச்சொல்லி அதனை 9வது அட்டவணையில் வைக்கச் சொன்னவர் வீரமணி.

அப்பொழுது ஆட்சியிலிருந்த ஜெயலலிதாவைப் பயன்படுத்தித்தான் செய்ய முடியும். இவர் பாப்பாத்தியாச்சேää தமிழன் ஒருவன் ஆட்சிக்கு வந்தபிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்திருந்தால் இந்நேரம் தமிழர்கள் அனுபவித்து வந்த 69 சதவிகித இடஒதுக்கீடு காணாமல் போயிருக்கும். அனைத்து வேலை வாய்ப்புக்களும் பார்ப்பனர்களே அனுபவிக்கும் நிலை உருவாகும். அதைக் கெடுத்தவர் வீரமணியாயிற்றே, அதனால் அந்த நிலைப்பாட்டைக் கொச்சைப் படுத்துகிறது இ.முன்னணி.

அதைவிட மணியம்மையார் மீது இருக்கும் கோபத்துக்கு அளவே இல்லை. ஏராளமான வியாதிகளோடு தள்ளாடிய ஈரோட்டுக் கிழவன் 70 வயதிலேயே ஒழிந்துவிடுவான் என்று எதிர்பார்த்த அக்கிரஹாரக் கூட்டத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து சிறு பிள்ளையைப் பராமரிப்பதுபோல் பராமரித்து 95 வயதுவரையிலும் வாழச் செய்து குலக்கல்வித் திட்டத்தை ஒழித்துக்கட்டி இராமனைச் செருப்பாலடிக்கச் செய்து, பிள்ளையாரைப் போட்டு உடைக்க வைத்து, ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரித்து சிறையேகி, பார்ப்பனர்களின் ஏகபோகமாக இருந்த அர்ச்சகர் பதவிக்கு அனைத்து ஜாதியினரையும் நியமிக்கச் சட்டமியற்றச் செய்து, தங்கள் சிண்டைப்பிடித்து ஆட்டச்செய்தவர் மணியம்மை அல்லவா?

அவர் இந்த இயக்கத்திற்கு வந்த பிறகுதானே இவ்வளவும் நடத்திருக்கிறது  என்கின்ற ஆத்திரம். அதனால்தான் பெரியாரைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் அன்னை மணியம்மையார் அவர்கள் நினைவுக்கு வருகிறார்.  அதனால் ஆத்திரம் பீறிட மணியம்மையை தொடர்ந்து கொச்சைப் படுத்தி வருகிறது ஆரிய நச்சுக்கூடாரம்.

பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்தது பிள்ளை பெறவேண்டும் என்பதற்காகவோ தனது உடல் இன்பத்திற்காகவோ அல்ல. அப்படிப்பட்ட அவசியம் எதுவும் அவருக்குத் தேவைப்படவில்லை.

அவ்வாறு அவர் திருமணம் செய்வதாக இருந்தால் நாகம்மையார் மறைந்த உடனேயே திருமணம் செய்திருக்கலாம். அதனை யாரும் அப்பொழுது குறையும் சொல்ல முடியாது. அவருடைய தாயார் சின்னத்தாயம்மாளுடைய ஆசை அதுவாகத்தான் இருந்தது. அவர் சாவதற்குள் பெரியாருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

பார்க்கின்றவர்களிடமெல்லாம் ராமசாமியிடம் சொல்லி திருமணத்திற்கு சம்மதிக்கச் சொல்லுங்கள் என்பதையே அவர் கோரிக்கையாக வைத்து வருவார். ~~என் மகன் ராமனை சிறிது பார்த்துக்கொள்ளுங்கள் இளங்கன்று பயமறியாது என்பதுபோல் கண்டபடி திரிகிறான் என்று|| ஆவலாகச் சொல்லியே வருவார்கள். அந்தம்மாளுடைய ஆசை எனக்கு ஒரு கல்யாணம் செய்துவைத்து விட்டுச் சாக வேண்டும் என்பது. என்னுடைய கோரிக்கை, எனக்கு முன்னதாகவே அம்மையார் முடிவெய்திட வேண்டும் என்பது. என் இஷ்டம் நிறைவேறியது என்ற பெரியாரே தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.

நாகம்மையார் இறந்தது குறித்து பெரியார் எழுதிய அறிக்கை ஒரு இறவா இலக்கியம்போல் இன்னமும் கருதப்படுகிறது. மனதுக்குள் அளவிடற்கரிய துக்கம் இருந்தாலும் அதனைக்கூட தான் பொதுவாழ்வில் ஈடுபடுவதற்கு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு அதற்குப் பிறகு பதினாறு ஆண்டுகள் திருமணம் என்ற எண்ணம் இல்லாமல் தனது பொதுவாழ்வைத் தொடர்ந்தார்.

மணியம்மையும் பெரியாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பெரியாரிடம் வந்து சேர்ந்தவரல்லர். பெரியார் என்பவர் இந்த சமுதாயத்தின் சொத்து. அவர் பராமரிப்பின்றி யாருடைய கவனிப்புமின்றி தன்னுடைய உடலை வருத்திக் கொண்டு இந்த சமுதாயத்திற்குத் தொண்டு செய்து வருகிறார். அவரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது இந்த சமுதாயத்தின் நலனுக்கு மிகமிக அவசியமானது என்ற எண்ணத்தில் பெரியாருக்கு ஒரு தாதியாய்ää பணிப்பெண்ணாய்ää வேலைக்காரியாய் இருந்து அவரது உடல் நலனைக் காக்கும்பொருட்டு தன்னுடைய இளமையையுங்கூடத் தியாகம் செய்து பெரியாரைப் பாதுகாக்க வந்து சேர்ந்தவர்.

பெரியார் பொதுவாழ்வுக்கு வரும்போதே மிகப் பெரிய பணக்காரர். அத்துடன் பொதுமக்கள் தமக்களித்த நன்கொடைகளையெல்லாம் சேர்த்து இயக்கத்துக்கான சொத்தாக பாதுகாத்து வைத்திருந்தார். இந்த சொத்துக்களைப் பாதுகாத்து எதிர்காலத்தில் தமக்குப்பிறகு இயக்கம் தொய்வின்றி நடக்க ஒரு ஏற்பாடு செய்ய நினைத்தார்.

அதற்கு தனக்கு நம்பிக்கையான ஒருவரைத் தேடியபொழுது தனது முழு நம்பிக்கைக்கும் பாத்திரமாக அன்னை மணியம்மையார் பெரியாருக்குத் தோன்றினார். அவரை வாரிசாக்குவதற்கு அன்றைய சட்டதிட்டத்தின்படி வழியில்லை. அதனால் மனைவி என்ற பெயரில் சட்டப்படி ஒரு ஏற்பாடு செய்து அறக்கட்டளை ஏற்படுத்தி மணியம்மையார் மற்றும் இன்னும் சிலரையும் அதில் உறுப்பினராக்கி இயக்கத்துக்கு ஒரு பாதுகாப்பை உண்டாக்கினார் பெரியார்.

பெரியார் மணியம்மை திருமணம் என்பது இல்லற இன்பத்திற்காகவோ குழந்தைப்பெற்றுக்காகவோ அல்ல. அது முழுக்க முழுக்க இயக்கப் பாதுகாப்பை மய்யப்படுத்தியதே.
பெரியாரே சொல்லுகிறார் ~~இத்திருமணம் என்பது பிள்ளைப் பேற்றிற்காக செய்துகொள்ளப்பட்டதும் அல்ல@ இயற்கை இன்ப உணர்ச்சிக்காக செய்துகொள்ளப்பட்டதும் அல்ல என்பதோடு வாழ்க்கைத் துணைக்காகவே செய்துகொள்ளப்பட்டது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்|| என்கிறார்.

அண்ணாத்துரை போன்றவர்கள் அரசியலுக்குச் செல்ல வேண்டும் என்று பல ஆண்டுகளாக முடிவு செய்து அதற்கான சூழ்நிலையை எதிர்பார்த்திருந்தார்கள். பெரியார் மணியம்மை திருமணத்தை சாக்காக வைத்து பாமர மக்களிடையே அதனைத் திசைதிருப்பி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவக்கி அரசியலுக்குள் நுழைந்தார்கள்.

அப்படி இதைக் காரணம் காட்டி வெளியேறியவர்கள் எல்லாம் மீண்டும் பெரியாரிடம் வந்து சேர்ந்து மணியம்மை இல்லையென்றால் பெரியார் இவ்வளவு காலம் உயிர் வாழ்ந்திருக்க முடியாது என்பதனை ஒத்துக்கொண்டு மணியம்மைக்கு நன்றி சொன்னார்கள்.

இதனைக் கொச்சைப் படுத்துவதற்கு இந்து முன்னணி ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு எந்த அருகதையும் கிடையாது.

இந்து மதத்தில் கல்விக்குக் கடவுள் சரஸ்வதி என்கிறார்கள். அந்த சரஸ்வதியின் தகப்பன் பிரம்மா. அவனே தன்னுடைய மகளின் அழகில் மயங்கி அவளைத் திருமணம் செய்துகொள்ள எண்ணி அவளிடம் கேட்க அவள் மறுத்து மான் வடிவெடுத்துத் தப்பியோட பிரம்மாவும் ஆண்மான் உருவெடுத்து அவளைத்துரத்த சிவன் தலையிட்டு இருவருக்கும் திருமணம் செய்து வைத்தான் என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்தக் கடவுளர் கதையைச் சொல்லி இது அறிவுக்குப் பொருந்துமா? என்று கேட்டால் அதற்குப் பதிலாக பெரியார் மணியம்மை திருமணத்தைக்கூறிக் கொச்சைப் படுத்துவது என்பது இழிவான செயலாகும்.

பெரியார் தமிழர் தலைவர் என்பதில் என்ன அய்யம் இந்துமுன்னணியே!

திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலிகிலுள்ள மற்ற சமுதாய மக்களைப்போல மானமும் அறிவும் உள்ள மக்களாக ஆக்கும் பணியை செய்கிறேன். இந்தப் பணியை செய்வதற்கு எனக்கு அருகதை இருக்கிறதோ இல்லையோ, இந்தப் பணியை வேறு யாரும் செய்ய முன்வராததால் என்தோள்மீது போட்டுக்கொண்டு அதே வேலையாய் இருந்து வருகிறேன்| என்று சொன்ன பெரியார்
தனக்கு மொழிப்பற்றோ, இனப்பற்றோ, நாட்டுப்பற்றோ மதப்பற்றோ எந்தப் பற்றும் கிடையாது. தனக்கு இருப்பதெல்லாம் மனிதப்பற்றுத்தான் என்று அடித்துச் சொல்கிறார். ..

~~எனக்கு சிறுவயது முதற்கொண்டு ஜாதியோ மதமோ கிடையாது அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக்கொண்டிருந்திருப்பேன். அதுபோல கடவுளைப்பற்றியும் மனத்தில் ஒரு நம்பிக்கையோ பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ தண்டிப்பாரே என்று கருதியோ(எந்தக் காரியத்தையும); செய்யாமல் விட்டிருக்க மாட்டேன். . .

 ~~எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதி மதத்தையோ கடவுளையோ உண்மையாக நம்பியிருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன். எப்பொழுதிலிருந்து இவைகளில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றும் யோசித்து பார்த்திருக்கிறேன். கண்டுபிடிக்கவே முடியவில்லை|| என்று பெரியார் தன்னுடைய வரலாற்றில் எழுதுகிறார்.

அவர் தான் பிறந்த வரலாற்றைச் சொல்லுகின்றபொழுது தான் பலிஜ கன்னடிய வகுப்பில் பிறந்தவன் என்று சொல்கிறாரே தவிர அதனைப் பெருமையாகவோ மற்றவர்களை இழிவுபடுத்திப் பெருமைப்படும் விதத்திலோ சொல்லவில்லை. ஆனால் இழிவான புத்தியுள்ள இ.முன்னணி அவரை ஒரு ஜாதி வெறியராக ஜாதிப்பற்றாளராகக் காட்டி தன் பிறவிப் புத்தியை நிரூபிக்கிறது.

பெரியார் ஆங்கிலம் படிக்கச் சொன்னது ஏன்? தமிழினம் படிக்க வேண்டும். பட்டம் பதவி பெறவேண்டும். உயர்நிலையை அடைய வேண்டும் என்று கனவு காணுகிறார் பெரியார். அதற்காகவே தன்னுடைய வாழ்நாளைச் செலவழிக்கிறார். அவன் முன்னேற என்ன வழி என்று யோசித்தNபுhது பார்ப்பனர்கள் எப்படி முன்னேறினார்கள் என்பதையும் சிந்தித்துப் பார்க்கிறார்.

வெள்ளைக் காரனிடம் அண்டிப்பிழைத்து தங்கள் அக்கிரகாரத்தை வளப்படுத்த பார்ப்பனர் கையிலெடுத்த கருவி ஆங்கிலம். தங்கள் தேவபாஷையை மட்டும் படித்துக்கொண்டு கோயிலில் மந்திரம் மட்டும் சொல்லிக்கொண்டு திரிந்தால் வெள்ளைக்காரன்; சட்டி சுரண்டும் வேலைக்குக் கூட வைத்துக்கொள்ள மாட்டான் என்பதால் வெள்ளைக் காரனின் மிலேச்ச பாஷையைக் கற்றுக்கொண்டு தங்கள் சாதி ஆணவத்தைக் காப்பாற்றிக் கொண்டது ஆரியம்.

நம் தமிழனும் அவனைப் போல் ஆங்கிலம் படித்து அனைத்துப் பதவிகளையும் கைப்பற்ற வேண்டும். ஆங்கிலத்தின்மூலம் உலகிலுள்ள அனைத்து அறிவியல் கருத்துக்களையும் தெரிந்துகொண்டு உலகின் மூலைமுடுக்குகளிலும் சென்று உயர்ந்த பதவிகளில் அமரவேண்டும் என்று சொன்னவர் பெரியார். அப்படி தமிழன் ஆங்கிலம் கற்றதனால் இன்று உலகநாடுகள் அனைத்திலும் தமிழன் சென்று உயர்வாழ்வு வாழ்கிறானே!

கடல் தாண்டிச் செல்லக்கூடாது என்ற பார்ப்பனக்கூட்டமே இன்று ஆங்கிலம் கற்று அமெரிக்காவிலும் உலக நாடுகிளிலும் சென்று பீரும் பிராந்தியும் மாட்டுக்கறியும் பன்றிக்கறியும் தின்று கொழுத்துக் கிடக்கிறானே!

அவன் தன்னுடைய தேவபாஷையை மட்டும் கற்றுக்கொண்டு கிடந்திருந்தால் அத்திம்பேர் அமெரிக்காவில் இருக்கா: அம்மாமி ஆஸ்;திரேலியாவில் இருக்கா: புள்ளாண்டான் பிரான்சில் இருக்கான் என்று அக்கிரஹாரம் ஆனந்தக் கூத்தாட முடியுமா? இவா மாத்திரம் ஆங்கிலத்தைப் படித்து இதையெல்லாம் அனுபவிக்கும்பொழுது அதே முறையில் தமிழனையும் முன்னேற பெரியார் சொன்னது பஞ்சமாபாதகமா?

தமிழனுக்கு அதனால் நேர்ந்த கேடு என்ன? பார்ப்பனரின் வயிற்றெறிச்சல்தானே இதற்கெல்லாம் காரணம்?
அதேபோல் பெரியார் தமிழைக் காட்டுமிராண்டிபாஷை என்று சொல்லிவிட்டாராம். தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் அங்கலாய்க்கிறது அக்கிரஹாரம்.

பெரியாரைப் போல் தமிழுக்குத் தொண்டு செய்தவர் யாருமில்லை. அவர் எந்தப் பல்கலைக்கழகத்திலும் படித்துப் பட்டம் பெறவில்லை. நடுத்தரக் கல்வியைக்கூடக் கற்கவில்லை. ஆரம்பக் கல்வியையும் சரிவரக் கற்றாரா என்றால் அதுவும் இல்லை. அப்படிப்பட்ட பெரியார் கற்றறிந்த மேதைகள் புலவர்கள் மகான்கள் யாரும் சிந்திக்கக்கூட முயலாத அளவுக்கு தமிழுக்குத் தொண்டு செய்திருக்கிறார். அவருடைய மொழிச் சிந்தனை என்பது தமிழை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பது.

தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால்தான் அதனைக் கற்பது கடினமாக இருக்கிறது. நமது பிள்ளைகளும் வெளிநாட்டவர்களும் படிக்க மலைப்பாக இருக்கிறது. அதனை வெறும் 54 எழுத்தில் அடக்கிவிட்டால் அனைவரும் படிக்க வசதியாக இருக்கும் என்று மிகவும் அறிவுப்பூர்வமாகவும் அறிவியல் ரீதியாகவும் அனுபவப் பூர்வமாகவும் நிரூபித்தவர் பெரியார்.

அவர் சொன்ன அனைத்தையும் ஏற்றுக்கொண்டால் தமிழ்தான் இன்று உலகின் முதல் மொழியாக இருக்கும். அவர் சொன்ன ஏழு எழுத்துக்களை மட்டும் தமிழக அரசு அமுல்படுத்தும்போதே அதன் பயனை நாம் இன்று ஏராளம் அனுபவிக்கிறோம். கணிணி பயன்பாட்டுக்கு அது மிகமிகப் பயனுள்ளதாக இருக்கிறது.
அவர் தமிழைக் காட்டுமிராண்டிபாஷை என்று சொல்லி விட்டாராம். அதனால் அவர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரானவராம். கதைக்கிறது கைபர் போலன் கணவாய்க் கூட்டம்.

அதே நேரத்தில் தமிழ் நீஷபாஷை தமிழில் பேசினால் தீட்டு. குறிப்பிட்ட நேரத்தில் தமிழில் பேசினால் குளிக்க வேண்டும் என்று சொல்கின்ற சங்கராச்சாரி லோககுரு என்பதுதானே இவர்களின் நிலைப்பாடு?

திருவையாறு தியாகையர் விழாவில் தமிழ் வித்வான் ஒருவர் சித்திவிநாயகனே என்று தமிழில் பாடியதால் மேடை தீட்டாகிவிட்டது என்று அடுத்துப்பாட வந்த அய்யர் ஒருவர் அந்த மேடையை காவிரிஜலம் கொண்டு தீட்டுப்போக்கியபிறகுதான் பாடினார் என்பது பார்ப்பனர்கள் எந்ந அளவுக்கு தமிழ்மீது வெறுப்புக் கொண்டிருந்தார்கள் என்பதனை நாம் புரிந்துகொள்ளலாம்.

அதனை எதிர்த்துத்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குடியரசு ஏட்டில் தீட்டாயிடுத்து என்று தலையங்கம் தீட்டி தந்தை பெரியார் அவர்களின் பாராட்டைப் பெற்றார்கள்.
அந்த நிலையை ஆதரிக்கும் வகையில்தானே தினமலர்க்காரனும், தினமணி, கல்கி வகையறாக்களும், துக்ளக் சோவும் கருத்துச் சொல்கிறார்கள்?  இது தொடர்பாக நாம் ஒரு துண்டறிக்கை வெளியிட்டோம்.

அதனை இ.முன்னணி கண்டுகொள்ளவில்லை. அத்துண்டறிக்கை இதோ!


தமிழ் செம்மொழியானால் வீட்டுக்குவீடு பிரியாணி வருமா? என்று தினமலர் கேட்பதன் நோக்கம் என்ன? வணிகநிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு மொழி நக்சலியம் என்கிறது துக்ளக். தினமணியும் கல்கியும் இதே பாணியில் செய்திகளை வெளியிடுகிறது.

தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையில் இயக்குனராக இருந்து ஓய்வுபெற்ற நாகசாமி என்பவர் ~தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தின் கண்ணாடி| (The mirror of  Tamil and Sanskrit) என்ற பெயரில் ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதியுள்ளார். அந்த நூலில் செம்மொழி ஆவதற்கான தகுதி தமிழுக்கில்லை. தமிழைச் செம்மொழியாக வளர்த்தது சமஸ்கிருதம்தான். இலக்கியம், இலக்கணம், அறம், அரசுசட்டங்கள் அனைத்தும் சமஸ்கிருத்தில் இருந்துதான் தமிழ் பெற்றது என்று எழுதுகிறார்.

காஞ்சி சங்கராச்சாரி தமிழ் நீஷபாஷை என்கிறார். தமிழில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பேசினால் தீட்டு என்றும் அப்படிப் பேசிவிட்டால் உடனே குளிக்க வேண்டும் என்கிறார்.

தமிழ் நாட்டுக் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தினால் தீட்டாகிவிடும் என்று தமிழைக் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து வைத்திருக்க்றார்கள். ஆறுமுகசாமி என்ற தமிழ்ச் சிவனடியார் சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம், திருவாசகத்தினைப் பாடினால் தீட்டு என்று அடித்து விரட்டப்படுகிறார்.

இவர்கள் அனைவரது நோக்கமும் ஒன்றுதான். தமிழ் நீஷபாஷை என்பது. அதற்கென்று சிறப்பு ஒன்றும் கிடையாது. அதைப் பேசுபவர்கள் இழிவானவர்கள். என்ற கருத்துத்தான்.

அப்படித் தினமலர் கூறுவது சரியா? தவறா? பதில் நாணயமாக இல்லை.

பெரியார் தமிழைக் காட்டுமிராண்டிமொழி என்றார் என்று அதற்கு பதில் வருகிறது.

சங்கராச்சாரி தினமலர், துக்ளக், நாகசாமி கூட்டம் சொல்வது தமிழின்மீது இருந்த வெறுப்பின் காரணமாகத்தான்.  ஆனால் பெரியார் தமிழைக் காட்டுமிராண்டிமொழி என்று சொன்னது தமிழின்மீது  இருந்த பற்றின் காரணமாக, தமிழ் வளர்ச்சிக்கான கருவியாக இருக்க வேண்டும். தமிழ் மக்களின் வளர்ச்சிக்கான கருவியாகவும் தமிழனுக்கு சுயமரியாதை ஏற்படுத்தவுமான கருவியாக இருக்க வேண்டும் என்ற பற்றின் காரணமாகத்தான். அதனால்தான் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார். அது இன்று கணிணி பயன்படுத்துவோருக்கு மிக அருமையாகப் பயன்படுகிறது.

தமிழ்ப்புலவர்கள் மானமற்றவர்கள் என்றும் சொன்னார். அதற்கு ஒரு உதாரணம் பெரிய புராணத்திலே இருந்து சொல்கிறார். அதில் 63 நாயன்மார்களில் ஒருவன் இயற்பகை நாயனர் என்பவன். அவன் சிவனடியார் என்ற பெயரில் எவன் வந்து எதைக் கேட்டாலும் அதனைக் கொடுத்து விடுவான்.

அதுபோல் ஒருநாள் பார்ப்பன உருவில் வந்த சிவனடியார் இயற்பகைநாயனாரிடம் இன்று இரவு உன்னுடைய மனைவியை எனக்குக் கூட்டிக்கொடு என்கிறான். அதற்கு இயற்பகை உடனே சம்மதித்து தன்னுடைய உற்றார் உறவினர்கள் எல்லாம் தடுத்தும் அவர்களையெல்லாம் வெட்டிப்போட்டுவிட்டு தன்னுடைய மனைவியை அந்த சிவனடியாருக்குக் கூட்டிக் கொடுக்கிறான்.

இதனை மானமுள்ளவன் எவனாவது ஏற்றுக் கொள்ள முடியுமா? இதனை எழுதிய புலவன் மானமுள்ளவனா?  இதுபோன்ற இலக்கியங்கள் தமிழில் இருக்கலாமா? இதனைத் தீயிட்டுப் பொசுக்க வேண்டாமா? இதுபோன்ற கருத்துக்களைத் தாங்கியுள்ள மொழி காட்டுமிராண்டி மொழியல்லவா? அதிலிருந்து தமிழை மீட்டெடுக்க வேண்டாமா? என்ற கருத்தில்தான் தமிழைக் காட்டுமிராண்டிமொழி என்று சொன்னாரே தவிர சங்கராச்சாரிகளும் சவுண்டிகளும் தமிழை இழிவுபடுத்துவதனையும் இதனையும் ஒப்பிடுவது முழுப் பூசணிக்காயை பரிமாறின சோற்றுக்குள் மறைக்கும் செயல்தான்.

இப்பொழுதும் கேட்கிறோம். தினமலர்க்காரன் தமிழ் செம்மொழியானால் வீட்டுக்குவீடு பிரியாணி வருமா? என்று கேட்டானே! தமிழனுக்கு மதவெறியைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் இந்துமுன்னணியே! இதுபற்றி உன்னுடைய கருத்து என்ன?                                    

தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்காக உண்மையாகப் போராடிய அம்பேத்கார்ஜீயை ஆரிய ஸ்தாபனமான காங்கிரசுக்கு அடங்கிப் போனவர் என்று கொச்சைப் படுத்திய ஈவேராவை அம்பேத்கர்ஜியுடன் ஏன் ஜோடி சேர்க்க வேண்டும்?

இது ஆர்எஸ்எஸ்ஸின் இன்னொரு  திரிபுவாதம். தந்தை பெரியார் இயக்கமே பள்ளன் பறையன் கட்சி என்று அழைக்கப்படும் இயக்கம். தந்தை பெரியார் காலந்தொட்டு தமிழர் தலைவர் காலம்வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கேடயமாக இருப்பது திராவிடர் கழகமே.

தாழ்த்தப்பட்ட மக்கள் ஏராளம் அன்றும் இன்றும் திராவிடர் கழகத்தில் இணைந்து சமுதாய இழிவு ஒழிப்பப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அம்பேத்கரைப்பற்றி பெரியார் அவதூறாகப் பேசிவிட்டார் என்று சொல்லி விட்டால் அவர்களெல்லாம் பெரியாருக்கு எதிராகப் போய் விடுவார்களாம். ஆர்எஸ்எஸ் கனவு காண்கிறது!

அம்பேத்கர்ஜியுடன் பெரியாரை ஏன் ஜோடி சேர்க்க வேண்டும்? ஆஹா, அம்பேத்கர்மீது எவ்வளவு மரியாதை? எவ்வளவு கரிசனம்?
அம்பேத்கருடன் பெரியாரை ஜோடி சேர்க்காமல் வேறு யாரை ஜோடி சேர்ப்பது?

இன்றைக்கிருப்பதுபோல் அந்தக் காலக்கட்டத்தில் தகவல் தொடர்புகள் எதுவும் இல்லை. இருந்தாலும் சமுதாயத் துறையில் இருவரும் ஒரே கருத்துக்கொண்டவர்களாக இருந்தனர்.
பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் ஏதோ பெரிய கருத்து வேறுபாடு ஏராளம் இருப்பதுபோலவும் இந்த ஆர்எஸ்எஸ் காரர்கள்தான் அம்பேத்கரை முழுமையாக ஆதரித்ததுபோலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி தாழ்த்தப்பட்ட மக்களை ஏய்ப்பதுதான் இவர்களின் நோக்கமாகத் தெரிகிறது.

இன்று இத்தகைய விசமத்தனங்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களிலேயே ஒரு சிலர் பலியாவதும் தொடர்கிறது. இந்த நேரத்தில் இதையெல்லாம் அள்ளிவிட்டால் தாழ்த்தப் பட்டவர்களை பெரியாருக்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறது.

பெரியாரும் அம்பேத்கரும் பல விசயங்களில் ஒத்துப்போகிறவர்களாக இருந்தார்கள். தீண்டாமை, ஜாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, கடவுள், புராண, இதிகாசங்களைத் தோலுரித்தல் அனைத்திலும் இருவரும் ஒத்த கருத்துடையவர்களே!

இருவரும் இராமாயணப் பித்தலாட்டத்தை முறியடித்தவர்கள். இருவரும் கீதையின் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றியவர்கள். இருவருமே மனுதர்மத்தைத் தீவைத்துப் பொசுக்கியவர்கள். இருவரும். இன்றைய காலக்கட்டம் போல் உடனுக்குடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு இல்லாதபோதே இருவரும் ஒருவருக்கொருவர் கூடிப் பேசிக்கொள்ளாமலேயே பல விசயங்களில் ஒரே கருத்து உடையவர்களாக இருந்தனர்.

அம்பேத்கர் பேசிய பேச்சை எடுத்துப்போட்டு கீழே பெரியார் என்று போட்டாலும் பொருத்தமாக இருக்கும். பெரியார் பேசிய எழுதிய கருத்தை எடுத்துப்போட்டு அம்பேத்கர் என்று போட்டாலும் பொருத்தமாகவே இருக்கும்.

அதனால்தான் தலித் முரசு ஆசிரியர் புனிதபாண்டியன் அவர்கள் வடநாட்டுப் பெரியார் தென்னாட்டு அம்பேத்கர் என்ற நூலே வெளியிட்டுள்ளார். இருவரும் இந்துமதம் பற்றியும் ஒரே கருத்தையே கொண்டிருந்தனர்.

தந்தை பெரியாருடைய வைக்கம் போராட்டம்தான் தான் நடத்திய மகத் குளப்போராட்டத்துக்கு ஒரு உந்துசக்தியாக இருந்தது என்று சொன்ன அம்பேத்கருடன் பெரியாரை ஜோடி சேர்க்காமல் வேறு யாரை ஜோடி சேர்ப்பது?

மனுதர்மத்தைத் தீயிட்டுப் பொசுக்கியவர் அண்ணல் அம்பேத்கர். மனுதர்மம்தான் இந்த நாட்டுக்குச் சட்டமாக வரவேண்டும் என்று சொன்னவர் பாலகங்காதர திலகர். அந்தத் திலகரின் வழிகாட்டுதலோடு பிள்ளையார் ஊர்வலம் நடத்தும் இந்துமுன்னணியே! அந்தத் திலகரை அம்பேத்கரோடு ஜோடி சேர்க்கலாமா?

அம்பேத்கர் வட்டமேஜை மாநாட்டில் போராடிப் பெற்ற தனித்தொகுதி முறையை அன்றைய தாழ்த்தப்பட்ட தலைவரான எம்.சி. இராசா முதலில் ஆதரித்தார். அவருடைய மனதை மாற்றி அந்தத் தனித் தொகுதி முறையை எதிர்க்கத் தூண்டியவர் ஆர்எஸ்எஸ் தலைவரான டாக்டர் மூஞ்சே ஆவார். அவரை அம்பேத்கருடன் ஜோடி சேர்க்கலாமா?

ஈவேரா தாழ்த்தப்பட்டவர்களை உய்விக்க வந்தவரா? ~

~கோயிலில் சூத்திரர்கள் எதுவரை போகிறார்களோ அதுவரை அரிஜனங்கள் செல்லலாம்|| என்று காந்தி சொன்னபோது சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? நடு சாதியான சூத்திரர்கள் கீழ்ஜாதியாவதை அனுமதிக்கக் கூடாது? என்றார். (வைக்கம் போராட்ட வரலாறு) என்பது இ.முன்னணியின் திரிபுவாதம்.

~~மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது கண்ணில் படக்கூடாது@ தெருவில் நடக்கக்கூடாது கோயிலுக்குள் போகக்கூடாது குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கிறவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ பூமிப்பிளவில் அமிழச்செய்யாமலோ சண்டமாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது? என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும் சாந்தத்தோடும் அஹிம்சாதர்மத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? இம்மாதிரியான மக்கள் இன்னும் ஒரு நாட்டில் இருந்துகொண்டு உயிர் வாழ்வதைவிட அவர்கள் இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கிறீர்களா?|

 என்று பெரியார் தான் இயக்கம் ஆரம்பித்த காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை கண்டு வேதனைப்பட்டு விம்முகிறார்

அவரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானவராகச் சித்தரிப்பது இந்துமுன்னணியின் இழிவான தன்மை.

வைக்கம் போராட்ட வரலாறு என்ற நூலில்

~~காந்தியார் கோவில் பிரவேசத்தைப் பற்றிப் பேசும்போது அதுவும் சுயமரியாதைப் பிரச்சார நிர்ப்பந்தம் காரணமாக கோவில் பிரவேசத்தை அனுமதிக்க வேண்டி வந்தபோது

~~கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரை போகிறார்களோ அதுவரையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லலாம்|| என்று சொல்லி அனுமதித்ததால் அந்த அளவுக்குத்தான் நாடார் சமுதாயம் உட்பட கோவில் பிரவேசமில்லாத எல்லா மக்களுக்கும் அனுமதி கிடைத்தது.

அதன்மீது பெரியார் ஆத்திரப்பட்டு ~~தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா?

பறையன் கீழ்ஜாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?

இந்த அனுமதியானது நடுசாதியான சூத்திரர்கள் என்பவர்கள் இப்போது கீழ்ஜாதியாகவே ஆக்கப்பட்டு விட்டார்கள் ஆனதால் இதை நாம் அனுமதிக்கக் கூடாது. என்று வேகமாகப் பிரச்சாரம் செய்துவந்தார்.

இதன்மீது காந்தியார் மக்களை ஏமாற்ற வேறு ஒரு தந்திரம் செய்தார். அதாவது ~~இதுவரையில் இதற்குமுன் பிராமணர்களுக்கு என்று மாத்திரம் எந்த இடம் இருந்துவந்ததோ அந்த இடத்திற்குப் பிராமணர்களும் செல்லக்கூடாது@ மற்ற எல்லா சாதியாருக்கும் அனுமதிக்கப்பட்டிருந்த இடம் வரையிலுமேதான் பிராமணனும் செல்லலாம்|| என்று அபிப்பிராயம் கூறி அந்தப்படியே பல கோவில்களில் தடுப்புக்கட்டி தடைசெய்யப்பட்டது.

இதுபற்றி மதுரைக் கோவிலுக்குள் பெரியார் சில தோழர்களுடன் சென்று தடுக்கப்பட்ட இடத்தில் பல பார்ப்பனர்களும் பார்ப்பனத்திகளும் நிற்பதைக் கண்டு அங்கேயே அதுபற்றிக் கிளர்ச்சி செய்தார்.

பத்திரிகையில் எழுதினார் என்றாலும் அர்ச்சகர் என்ற பெயரில் பார்ப்பனர்களும் பார்ப்பனத்திகளும் உள் மண்டபத்தில் இருந்துதான் வணங்குகிறார்கள். இது எப்படியோ இருந்தாலும் கர்ப்பக்கிரகத்திற்குள் பார்ப்பனன்தான் சிலை இருக்கும் இடத்திற்குள் போகலாம். சூத்திரனோ பஞ்சமனோ போகக்கூடாது என்கிற சாதிமுறை சாதிபேதமுறை இன்றும்தான் இருந்து வருகிறது.

சாதி ஒழிக்கப்படுவதால் பார்ப்பனர்களுடைய தூய்மை கெட்டுவிடுகிறது என்பதோ தங்கள்நிலைமை அசுத்தமாக்கப்படுகிறது என்பதோ அல்லவே அல்ல. மற்றென்னவென்றால் தங்களுக்கு இருந்துவரும் உயர்வும் தனி உரிமைகளும் பாடுபடாமல் பிறர் உழைப்பில் அனுபவிக்கும் சுகபோகமும் உயர்வாழ்வும் ஏகபோகமும் எல்லாம் அழிந்துபோகுமே என்கின்ற கவலைதான்.

இதை உத்தேசித்தேதான் சாதி என்பதில் எவ்வித தனிக்கடமையும் இல்லாமல் உயர்வு என்கின்ற உரிமையை மாத்திரம் அனுபவிக்கும்படி சட்டத்தால் பாதுகாப்பு ஏற்படுத்திக்கொண்டார்கள் இதற்குக் காரணம் காந்தியார் செய்த மோசடியும் சூழ்சியும் ஆன மாபெரும் துரோகம்தான். என்றுதான் வைக்கம் போராட்ட வரலாற்றில் இருக்கிறது.

இதில் பெரியாருடைய போராட்டம் என்பது சாதி உயர்வு தாழ்வு கூடாது. பார்ப்பான் பறையன் என்ற வித்தியாசம் கூடாது என்ற கோரிக்கைதானே தவிர சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா வேண்டாமா என்பதல்ல. உண்மை வரலாறு இப்படியிருக்க  இ. முன்னணி இடையில் உள்ள ஒரே ஒரு  வரியை மட்டும் எடுத்துக்கொண்டு பெரியார் கருத்தைத் திரிபுவாதம் செய்வது அயோக்கியத்தனமானது.

அத்துடன் காந்தியாரைப்பற்றி பெரியார் சொல்லும் இன்னொரு கருத்து காந்தியின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது. தீண்டாமையை ஒழிக்க காந்தி பாடுபட்டார் என்று கூறப்படும் கருத்து எவ்வளவு போலித்தனமானது என்பது இதில் விளங்குகிறது.

~~நான் காங்கிரசில் இருந்தபோது சமுதாயத்துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது காந்தி தீண்டப்படாதவர்களை பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாவிட்டால் தனிக்கிணறு வெட்டிக்கொடு கோயிலுக்குள் விடாவிட்டால் தனிக்கோயில் கட்டிக்கொடு என்றார்.

பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை எதிர்த்தோம். கிணற்றில் தண்ணீர் எடுக்கப்படும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன் தண்ணீரில்லாமல் சாகட்டும். என்றேன். அவனுக்கு இழிவு நீங்க வேண்டுமென்பது முக்கியமே தவிர தண்ணீரல்ல என்றேன். என்று பெரியார் கூறுகிறார்.

சாதி இழிவு நீங்கவேண்டும். உயர்ஜாதி கீழ்ஜாதி என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் இதன் பொருளே தவிர தண்ணீர் வேண்டுமா வேண்டாமா என்பது அல்ல. அதேபோலத்தான் கோயில் நுழைவு என்பதும் பார்ப்பான் சூத்திரன் பஞ்சமன் பறையன் என்ற பேதம் இருக்கக் கூடாது என்பதற்காக கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தினால் பார்ப்பான் மட்டும் கருவறைவரை செல்லலாம். சூத்திரன் செல்லும் இடம வரை பறைனும் செல்லலாம் என்பது ஜாதியை பார்ப்பான் உயர்ந்தவன் மற்றவர்கள் கீழானவர்கள் என்ற தத்துவத்தைப் பாதுகாக்கிறது என்பதால் பெரியார் அதனை எதிர்க்கிறார்.

~~பார்ப்பான் என்பது மேல்சாதிக்காரன் என்கிற தத்துவத்தின்மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல்சாதிக்காரன் என்பது பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பது என்கிற தத்துவத்தின்மீது கட்டப்பட்டிருக்கின்றது. இதை நன்றாய் உணர்ந்து இந்தத் தத்துவ அடிப்படையை இடித்தெறிய முயன்றோமானால் பார்ப்பனர்கள் என்கிற வார்த்தையே நாட்டில் இல்லாமல் போய்விடும். பார்ப்பனர் மாத்திரமல்ல. ஒரு சாதிக்கு மற்றொரு சாதி மேல் என்கின்ற தத்துவமே அழிந்துவிடும்.. அது மாத்திரமல்ல சாதி முறையே அடியோடு அழிந்துவிடும்.||

இதனை இந்துமுன்னணி எப்படி திசை திருப்புகிறது பார்த்தீர்களா?

பெரியார் மூன்று மணிநேரம் பேசுவதை பத்திரிகைகள் நான்கு வரி போடுவதையும் திருத்தியும் மேல் கீழ் சம்பந்தங்களை விட்டுவிட்டுதப்பர்த்தம் ஏற்படும் முறையில் மொட்டையாயும் தங்களுக்கு அனுகூலம் ஏற்படும் முறையிலும் பிரசுரித்து வருவதையும் 10-06-1942 விடுதலையில் பெரியார் எழுதினார்.

அதையேதான் இந்து முன்னணியும் இன்றளவும் செய்து வருகிறது. பெரியாருடைய முழுப் பேச்சையும் வெளியிட்டால் அதைப் படிக்கும் தங்கள் தொண்டர்கள் எங்கே பெரியார் சொல்வது உண்மைதான் என்று கருதி அதனை திருத்தியும் சுருக்கியும் தப்பான பொருள் ஏற்படும்படி செய்து வருகிறார்கள் என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டாகும்.



முதல் வட்ட மேசை மாநாட்டில் அண்ணல் அம்பேத்கருடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரெட்டமலை சீனிவாசனும் கலந்துகொண்டார். பிரிட்டிஷ் மன்னரும்ää பிரதமரும் அவர்கள் இருவருக்கும் கைகுலுக்குகிறார்கள். ஒரே மேசைமுன் அமர்ந்து தேனீர் அருந்துகிறார்கள். ஆனால் இங்கே ஒரு கல்வியறிவற்ற மூடன் அம்பேத்கரின் கல்வியறிவின் கால்தூசுகூடப்பெறாத ஒரு பார்ப்பான் அவருக்குத் தண்ணீர் தர மறுக்கிறான். அவரிடம் கோப்புகளைக் கையில் கொடுத்தால் தீட்டு என்பதற்காகத் தூக்கி வீசுகிறான். இதில் யாருக்கு யார் அன்னியன்?
அந்த வட்ட மேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சட்டமன்றங்களிலும் பாராளுமன்றத்திலும் தனித் தொகுதி முறை வேண்டும். அவரவர் விகிதாச்சாரத்திற்கு ஏற்ற எண்ணிக்கையில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் அம்பேத்கரும் சீனிவாசனும். இந்த வட்ட மேசை மாநாட்டைப் புறக்கணித்த காந்தி இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்கிறார். அங்கே கலந்துகொண்டு வெள்ளையனே வெளியேறு என்று முழங்கவில்லை. எங்களுக்கு சுதந்திரம் கொடு என்று கேட்கவில்லை. அம்பேத்கருடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிறார். கிறிஸ்துவர்கள்ää முஸ்லிம்கள்ää சீக்கியர்களுக்கு அளித்த இட ஒதுக்கீட்டை எந்த மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொண்ட காந்தி தாழ்த்தப்பட்டவர்களுடைய இட ஒதுக்கீட்டை மாத்திரம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டால் அம்பேத்கரின் கோரிக்கையை ஆதரிப்பதாகத் தெரிவித்த காந்திää முஸ்லிம் தலைவர்களிடம் சென்று அம்பேத்கரின் கோரிக்கையை ஆதரிக்க வேண்டாம் என்கிறார். அதற்கு முஸ்லிம் தலைவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.
பிரிட்டிஷ் பிரதமர் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இரட்டை வாக்குரிமையை அமுல்படுத்த உறுதியளித்தார். அதாவது தாழ்த்தப்பட்டவர்களுடைய பிரதிநிதிகளைத் தாழ்த்தப்பட்டவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும். அதே தொகுதியில் பொது வேட்பாளருக்கும் தாழ்த்தப்பட்டோர் வாக்களிக்கவேண்டும் என்ற முறை அது. அதனால் தாழ்த்தப்பட்டவர்களின் உண்மையான பிரதிநிதி தே;ரந்தெடுக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டது.
இதனை ஏற்றுக்கொள்ளாத காந்தி அந்த உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். காந்தி இறந்துவிட்டால் நாடே ரணகளமாகும். அம்பேத்கர் மிரட்டப்படுகிறார். அரக்கன்ää துரோகிää பிரிட்டிஷாரின் கைக்கூலி என்றெல்லாம் அம்பேத்கர் தூற்றப்படுகிறார்.  காந்தியின் ஒரு உயிருக்காக ஆறு கோடி மக்களின் வாழ்வுரிமையை விட்டுக்கொடுக்காதீர் என்று பெரியார் தமிழ்நாட்டிலிருந்து தந்தியடிக்கிறார். நிலைமை அதற்கேற்றாற்போல் இல்லை. அம்பேத்கர் காந்தியின் உயிரைக் காப்பாற்ற அவரது விருப்பத்திற்கு மாறாக பூனா ஒப்பந்தத்தில் காந்தியுடன் கையெழுத்திடுகிறார். அதனால் இரட்டை வாக்குரிமை பறிபோகிறது. இன்று தாழ்த்தப்பட்டவர்களின் உண்மையான பிரதிநிதிகள் செல்ல முடியாது. உயர்ஜாதிக்காரர்களின் ஏவலாள்களும் அடிமைகளும் அரசியல் கட்சிகளின் ஏவலாட்களும்தான் சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் செல்ல முடியும். அதனால்தான் பெரியார் அம்பேத்கரை ஆரியஸ்தாபனமான காங்கிரசுக்கு அடங்கிப்போனவர் என்று கூறுகிறார். அதனைப் பின்னாளில் அம்பேத்கரே உணர்ந்தார்.
பார்ப்பனரல்லாதார் சட்டமன்றத்துக்குச் செல்வதை கடுமையாக எதிர்த்தவர் திலகர். வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் எடுத்த முடிவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்த எம்.சி.இராஜாää ஆர்எஸ்எஸ் தலைவரான மூஞ்சே வின் தூண்டுதலால் அதனை எதிர்க்கிறார். அம்பேத்கர் நடத்திய ~மூக்நாயக்| என்ற பத்திரிகைக்கான விளம்பரத்தை தனது பத்திரிகை தீட்டாகிவிடும் என்பதால்.  காசுகொடுத்தும் வெளியிட மறுத்துவிட்டது திலகர் நடத்திய ~கேசரி| என்ற பத்திரிகை. அந்தத் திலகர் வழிவந்த இ.முன்னணி பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் சிண்டுமுடிவது பார்ப்பனர்களுக்கே உரித்தான பிறவிப்புத்தி.
வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போவதாக இருந்தால் எங்களிடம்தான் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்றனர் பார்ப்பனர்கள். மனுதர்மம்தான் மீண்டும் சட்டமாக இருக்க வேண்டும் என்றார் திலகர். வருணாசிரம முறைப்படிதான் ஆட்சி அமைய வேண்டும் என்றார் காந்தி. இராஜகோபாலாச்சாரிää வல்லபாய் பட்டேல்ää சத்தியமூர்த்தி அய்யர்ää வ.வே.சு அய்யர்ää சில்வர் டங் சீனிவாச சாஸ்திரிää மண்ணுருண்டை மாளவியாää அன்னிபெசன்ட் அம்மையார் உட்பட அனைவருமே இந்த நாட்டிற்கு மனுதர்மம்தான் சட்டமாக வேண்டும் என்றனர். ஆர்எஸ்எஸ் தன்னுடைய செயல்திட்டத்தில் மனுதர்மத்தைத்தான் இந்த நாட்டின் சட்டமாக ஆக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மனுதர்மம் உழைக்கும் மக்களான சூத்திரர்களைத் தேவடியாள் பிள்ளை என்கிறது. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே@ படித்தால் நாக்கை அறு@ காதிலே கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று மனுவிற்குப்பின் வந்தவர்கள் தண்டனையைக் கடுமையாக ஆக்கினார்கள். நம்முடைய மக்கள் படிக்காதவர்களாகவும் ஏழைகளாகவும் கீழ்ஜாதியாகவும் இருப்பதற்குக் காரணம் இந்த மனுதர்மம்தான். அந்த மனுதர்மம் தீண்டத்தகாதவனை பிணத்துக்குச் சமமாகச் சொல்கிறது. பிணத்தைத் தொட்டால் தீட்டு@ குளிக்க வேண்டும். தீண்டத்தகாதவனைத் தொட்டாலும் உடுத்தியிருக்கும் உடையோடு குளிக்க வேண்டும் என்கிறது மனுதர்மம். அதனால் பெரியாரும் அம்பேத்கரும் அந்த மனுதர்மத்தைக் கொளுத்தினார்கள்.

பெரியாருடைய உழைப்பாலும் அம்பேத்கருடைய உழைப்பாலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறிவிட்டார்கள். அதற்குப் பெரியாரும் அம்பேத்கரும் பல போராட்டங்களை நடத்தினார்கள்.
இதுபோல ஆர்எஸ்எஸ் எதற்காகப் பாடுபட்டது? அதனுடைய உழைப்பால் யாருக்கு என்ன இலாபம் ஏற்பட்டது? அதனுடைய திட்டங்கள் என்ன? என்று கேட்டால் அதற்குப் பதில் சொல்வதில்லை. மாறாக மனுதர்மம்தான் எங்களுடைய சட்டம் என்பதை வெகுமக்களுக்குச் சொல்லாமல் இரகசியமாக வைத்திருந்தது. இதை வெளிப்படையாகச் சொன்னால் தங்களுக்குப் பல்லக்குத் தூக்கும் சுயமரியாதையற்ற ஜென்மங்களுக்கு சுயமரியாதை வந்து தாங்கள் தூக்கிய பல்லக்கைப் போட்டுவிட்டு தங்களுக்கு எதிராகத் திரும்பி விடுவார்கள் என்று அஞ்சுகிறது. இப்பொழுது திலகர் மூலம் அதனை அம்பலப்படுத்துவதால் நம்மீது சேற்றை வாரி இறைக்கிறது. இதற்கெல்லாம் பிறகு பதில் சொல்கிறோம். அதற்கு முன் நாங்கள் வைத்த வாதங்களுக்கு பதில் சொல்!
ஆர்எஸ்எஸ்ää இ.முன்னணிää பிஜேபிää பிஎம்எஸ் வகையறாக்கள் அமைக்க விரும்பும் இலட்சிய சமுதாயத்தில் திலகரின் கூற்றுப்படி மனுதர்மம் சட்டமாக இருக்குமா? அல்லது அம்பேத்கர் எழுதிய சட்டம் இருக்குமா? அங்கே பிராமணன்ää வைசியன்ää சத்திரியன்ää சூத்திரன்ää பஞ்சமன் இருப்பானா? அல்லது அனைவரும் சமமாக இருப்பார்களா? பார்ப்பான் இருப்பானா? பறையன் இருப்பானா? அங்கேää கோயிலுக்கு மணியடிப்பது யார்ää தெருக்கூட்டுவது யார்? செருப்புத் தைப்பது யார்? முடிவெட்டுவது யார்? விவசாயம் செய்வது யார்? தமிழுக்கும் தமிழனுக்கும் அங்கே என்ன அந்தஸ்து? தமிழைப் பற்றி பெரியார்  அதைச்சொன்னார் இதைச்சொன்னார் என்று நீட்டிமுழக்கும் அம்பிகள் வீட்டுப் பிள்ளைகளுக்கு தமிழரசன்ää தமிழரசி என்று பெயர் வைத்து தாங்களும் தமிழர்கள்தான் என்று நிரூபிப்பார்களா?; பிள்ளையார் ஊர்வலத்தால்ää பாபர் மசூதி இடிப்பால்ää ராமர் பாலத்தால்ää சேதுசமுத்திரத்திட்ட முடக்கத்தால்  இதுவரை நடந்த நன்மை என்ன?  பதில் சொல்லுமா இ.முன்னணி?
     


மனுதர்மம்தான் இந்த நாட்டின் சட்டமாக வேண்டும். பிராமணர் சொல்படிதான் அரசு நடக்க வேண்டும் என்று தேசபக்த திலகர் சொன்னார். அதனை அமுல்படுத்த ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புக்கள் முயற்சிக்கின்றன. குஜராத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு பாடத்திட்டத்தில் மனுதர்மம் பாடமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இதனை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தடுமாறிப் போயிருக்கும் இ.முன்னணிää பிஎம்எஸ் கும்பல் அதனைத் திசைதிருப்ப பெரியாரை மிகமிகக் கொச்சைப் படுத்தி வருகிறது. மனுதர்மம் சட்டமாக இருந்து பிராமணர்களின் சொல்படிதான் நம் நாட்டில் மன்னர்கள் ஆண்டார்கள். இந்துராஜ்யம் அமைத்த சிவாஜி ஆட்சிக்குப்பின் மராட்டியத்தின் நிலைமையை முன்பு தெரிவித்திருந்தோம். அந்த மனுதர்மம் மிக தீவிரமாக பிராமணர்களின் ஆலோசனையோடு அமுல்படுத்தப்பட்ட இடம் திருவாங்கூர் சமஸ்தானம் ஆகும். அங்கு மக்கள் நிலை எப்படி இருந்தது?
~~சாணார் இடையர் சாதி வணிகருடன் நாணாத காவேரி நல்ல துலுக்கப்பட்டர் முதல் சூத்திரர் பிரமார் தொல் வாணியர் பறையர் கம்மாளர்ääஈழர்ääகருமறவர் பரவர்வெம்மா  நசுராணி வேகாவண்டர் இடலையர்           சக்கிலியரோடு சாதி பதினெட்டும்     … என்று அரசனும் நம்பூதிரிகளும் தாழ்த்தப்பட்டவர்களாக ஒதுக்கிவைத்த பதினெட்டு இனங்களைப் பட்டியலிடுகிறது 200 ஆண்டுகளுக்குமுன்பு அய்யா வைகுண்டரால் எழுதப்பட்ட அகிலத்திரட்டு நூல்.
திருவாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த மேற்கண்ட 18 ஜாதிகளும் தாழ்த்தப்பட்டவைகளாகக் கருதப்பட்டன. அவர்களின் வாழ்வுரிமைகள் நசுக்கப்பட்டன. மேன்மக்கள் வசிக்கும் தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடமாடக்கூடாது. மீறி நடந்தால் கொடும் தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆண்கள் முழங்காலுக்குக் கீழும் இடுப்புக்கு மேலும் வேட்டியணியக் கூடாது. செருப்பு அணியக்கூடாது. வெயில் மழைக்குக் குடைபிடிக்கக் கூடாது. ஒரு நாடார் அல்லது ஈழவர் பிராமணரிடம் இருந்து 36 அடி தூரத்திலும் நாயரிடமிருந்து 60 அடி தூரத்திலும் நின்று கீழே குனிந்துதான் பேச வேண்டும். இன்னும் பல கொடுமைகள். பெண்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு அளவேயில்லை. நாமெல்லாம் நாகரிக சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா? என்று கேட்கக் கூடிய அளவுக்கு அதன் கொடூரம் நீண்டிருந்தது. உலகில் எங்குமே நடக்காத கொடுமை இது. சொல்லவேää எழுதவே கூசுகிறது.   பெண்கள் இடுப்பில் குடங்களை சுமக்கக் கூடாது. தலையில்தான் சுமக்க வேண்டும். மார்பகங்களை ஆடை அணிந்து மறைக்கக் கூடாது. இடுப்புக்குக் கீழ்தான் ஆடை உடுத்த வேண்டும். பதினாறு முதல் முப்பத்தைந்து வயது வரையில் உள்ள பெண்கள் கட்டாயம் ~முலைவரி| செலுத்த வேண்டும். வரியைச் செலுத்த இயலாத பெண்களின் கூந்தலைக் கொண்டே மரங்களில் கட்டிவைத்து அடித்து உதைத்தனர். கூந்தலில் உலக்கையைச் சுற்றிக்கட்டி முதுகில் பெரிய பாறாங்கல்லை ஏற்றி குனிந்த நிலையில் பல நாட்கள் நிற்க வைத்து பலர் சாகடிக்கப்பட்டனர். ~முலைவரி| கட்ட இயலாமல்; தங்கள் மார்புகளை அறுத்தெறிந்த பெண்கள் பற்றிய பதிவுகள் திருவாங்கூர் சமஸ்தானத்தில் பதிவாகியுள்ளது|| (தென் மாவட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவரும் அந்த மக்களால் கடவுளாக வணங்கப்படும் அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு  நூலில் இருந்து)
அத்துடன் இந்த சாணார் குலப் பெண்கள் மேலாடை(ஜாக்கெட்) அணிய உரிமை வேண்டும் என்பதற்காக திருவாங்கூர் சமஸ்தானத்தில் தோள் சேலைப் போராட்டம் என்று பெயரில் முப்பந்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து போராடியதன் அடிப்படையில்தான் பெண்கள் ஜாக்கெட் அல்லது முண்டு அணிய உரிமை கிடைத்தது என்று வரலாறு சொல்கிறது.
இவ்வளவு கொடுமைகளும் மனுதர்மத்தின்படி பார்ப்பனர்களின் ஆலோசனையோடு நடந்த ஆட்சியில் நடந்துள்ளது. இந்த மனுதர்மத்தைச் சட்டமாக ஆக்க வேண்டுமாம். அதன்படி பிராமணர்களின் ஆலோசனையோடு அரசு நடக்க வேண்டுமாம். இந்த மனுதர்மத்தின்படி ஆட்சி நடத்தப்பட் வேண்டுமா என்று கேட்டால் அதற்குப் பதில் சொல்ல வக்கில்லாத இ.முன்னணிää பெரியார் பறைச்சிகள் ஜாக்கெட் போட்டதால்தான் துணிவிலை ஏறிப்போச்சு என்று சொன்னார் என்று அவிழ்த்து விடுகிறது. பெரியாரின் பேச்சும் எழுத்தும் 480 தலைப்புக்களிலும் பெரியார் களஞ்சியம் 32ää குடியரசு களஞ்சியம் 42 தொகுதிகள்ää பெரியார் சிந்தனைகள் 3 பாகம்ää வாழ்க்கை வரலாறு 2 பாகம் வெளிவந்துள்ளது. அவற்றில் அப்படி சொன்னதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இ.முன்னணியே! வீண்புரளியைக் கிளப்பி உன் உண்மை உருவத்தை மறைக்க நினைக்காதே! மனுதர்மத்தை சட்டமாக்குவது உன்னுடைய செயல்தி;ட்டத்தில் இருக்கிறதா? இல்லையா?

1952ல் தமிழகத்தை ஆண்டு இராஜகோபாலாச்சாரி குலக்கல்வித்திட்டம் என்ற பெயரில் அரை நேரம் படிப்பு அரைநேரம் அவரவர் குலத்தொழில் செய்ய வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். இது உண்மை வரலாறு. புராணமல்ல. புராணங்களை வரலாறாகச் சித்தரிக்கும் சிறு நரிக்கூட்டம் தன்னுடைய நரித்தனத்தைக் காட்டுகிறது.
சிரித்திடும் அந்த நரிக்கூட்டம் தலையில் வைத்துக் கொண்டாடும் திலகர் பெருமான் “தொடக்கக் கல்விக்குப்பின் இடைநிலைக் கல்வியைத் தொடர வேண்டாம் என்று தீண்டத்தகாத மக்களுக்கு ஆலோசனை கூறினார் இதன்மூலம் தீண்டத்தகாத மக்களின் ஜாதித் தொழில்களை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பதை நம்பிய திலகர் அவர்களுக்கு உயர் கல்வி அளிக்கப்படுவதை எதிர்த்தார்”  அத்துடன்
எண்ணெய்க் கடைக்காரர்களும் புகையிலைக் கடைக்காரர்களும் வண்ணார்களும் மற்றவர்களும் (பார்ப்பனரல்லாதாரை இப்படித்தான் அவர் வர்ணித்தார்) சட்டமன்றத்துக்குச் செல்ல ஆசைப்படுவது ஏன் என்று தனக்குப் புரியவில்லை என்றார். அவரது கருத்துப்படி இவர்களது வேலை சட்டத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே தவிர சட்டங்களை இயற்றும் அதிகாரத்துக்கு ஆசைப்படுவது அன்று என்பதாகும். (அண்ணல் அம்பேத்கர் எழுதிய~காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்தது என்ன?| என்ற நூல் பக்கம் 254)
இதன் தொடர்ச்சியாகத்தான் திலகருடன் ஒத்த கருத்துள்ளவரான ராஜாஜி தமிழகத்தில் 1952ல் ஆட்சிக்கு வந்து குலக்கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்து தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் (மட்டும்) ஒருவேளை படிப்புää ஒருவேளை அவனவன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார் என்பதையும் கவனிக்க வேண்டும். (இதுமட்டும் அமுலாகியிருந்தால்; இப்பொழுது நாம் என்ன வேலை செய்து கொண்டிருப்போம்?)
அந்தக் குலக்கல்வித்திட்டதை இன்னமும் ஆதரிக்கும் கூட்டம்தான் தினமணிää தினமலர்ää துக்ளக்ää கல்கி வகையறாக்கள். அந்தக் குலக்கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் வேலையில்லாத் திண்டாட்டமே இருக்காது என்று இன்னமும் அவர்கள் எழுதுகிறார்கள்.
அது உண்மையா? வண்ணான் வண்ணானாகவே இருந்தால்ää சக்கிலியன் செருப்பு மட்டும் தைத்துக் கொண்டிருந்தால்ää விவசாயி விவசாயத்தை மட்டும் நம்பியிருந்தால் இன்று குப்பன் மகன் சுப்பன் கம்ப்யூட்டர் எஞ்சினியராகி நாசாவில் விஞ்ஞானியாக இருக்க முடியுமா?
அந்தக் குப்பன் மகன் சுப்பன் படிக்கக் காரணமாக இருந்தவர் காமராஜர் அல்லவா? அந்தக் காமராஜருடைய ஆட்சியை வீழ்த்த இராஜாஜியின் பின்னால் சென்றவர்கள் திமுகää கம்யூனிஸ்டää முஸ்லிம் லீக்ää தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு. அப்பொழுது காமராசர் ஆட்சியை வீழ்த்த அவர்கள் சொன்ன காரணம் விலைவாசி உயர்ந்து விட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டது என்ற பிரச்சாரம்.
தாழ்த்தப்பட்டோரைப் படிக்கவே கூடாது என்று சொன்னவன் பின்னால் சென்று தாழ்த்தப்பட்டவன் படிப்பதற்குக் காரணமான காமராசரை ஒழிக்க உறுதுணையாக இருக்கிறீர்களே! இந்தக் காமராசர் இல்லையென்றால் நீங்கள் படித்திருக்கவே முடியாதே! அப்பொழுது இந்த வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லையே. எல்லோரும் படித்தவுடன் உடனடியாக வேலை தரமுடியுமா? அந்தப் படிப்புக் கொடுத்த காமராசர் வேண்டுமா? படிக்கக் கூடாது என்ற ராஜாஜி வேண்டுமா? என்று பெரியார் கேட்டார்.
அதுபோல இந்துமதம் கொடிகட்டிப் பறந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்ட பெண்கள் ரவிக்கை அணியவே கூடாது என்று சட்டம் போட்டு அப்படி ஜாக்கெட் போட்டால் வரியும் போட்டது இந்துமதப் பார்ப்பனக் கூட்டம். அந்தத் தடைகளெல்லாம் உடைக்கப்பட்டு மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று சொன்ன பெரியாரால் கல்வி கற்று மான உணர்வு பெற்ற பெண்கள் ஜாக்கெட் அணியக் காரணமான படிப்பைக் கொடுத்தவர் காமராசர். அவரது ஆட்சியை ஒழிக்க நீங்களெல்லாம் இராஜாஜிக்குத் துணையாக இருக்கலாமா? என்று கேட்டவர் பெரியார்.
அந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் காமராசர் ஆட்சியைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்று சொன்னதை ஏதோ பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகப் பேசிவிட்டார் என்பதுபோல எழுதி சிண்டு முடியும் வேலையில் பலமுறை இறங்கி மூக்குடைபட்ட சிறுநரி மீண்டும் தனது வாலை நீட்டுகிறது. அதன் வால் ஒட்ட நறுக்கப்படும். அந்த நரியின் தந்திரத்துக்கு யாரும் இரையாக மாட்டார்கள் என்பதை எச்சரிக்கிறோம்.
இந்தக் கேள்விக்கும் இந்து முன்னணி பதில் சொல்லவில்லை. அடுத்து இன்று உலக முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் தொழிலாளர் தினமாகக் கடைப்பிடித்து வருவது மே தினமாகும். தமிழ்நாட்டில் 1932 லேயே தமிழர்களை மேதினத்தைக் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டவர் தந்தை பெரியார் அவர்கள். அப்பொழுதிலிருந்து மேதினம் தமிழகத்தில் தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இதனை சங்பரிவார் அமைப்புக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த மே தினம் என்பது அன்னிய கலாச்சாரத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுவது. நம்முடைய பாரத கலாச்சாரத்திற்கு அது ஏற்புடையதல்ல. விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்று கொண்டாடி வருகிறார்கள்.
அது தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ல் வருவதாகச் சொல்லி ஆண்டுதோறும் ஆர்எஸ்எஸ் ஸின் தொழிற்சங்கமான பிஎம்எஸ் கொண்டாடி வருகிறது. இது தந்தை பெரியார் பிறந்தநாளில் அதனைக் கொச்சைப்படுத்த அல்லது இருட்டிப்புச் செய்ய மனுதர்மக் கூட்டம் செய்துள்ள ஏற்பாடு என்பதை நாம் பல ஆண்டுகளாக அம்பலப்படுத்தி வருகிறோம். பாபர் மசூதியை இடிக்க அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6அய்த் தேர்ந்தெடுத்து இடித்ததுபோல் பெரியார் பிறந்தநாளைக் கொச்சைப்படுத்த செப்டம்பர் 17அய்த் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று நாம் குற்றச்சாட்டு வைத்து வருகிறோம். அதற்கு அறிவுப்பூர்வமாக இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. அந்த வகையில் தற்பொழுது அவர்களது இரட்டை வேடத்தைத் தோலுரிக்க கீழ்க்கண்ட துண்டறிக்கையை வெளியிட்டோம்.


அகில உலக அளவில் தொழிலாளர்களின் வேலை நேரம் எட்டு மணியாக வருவதற்குக் காரணமாக இருந்த சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை ஆர்எஸ்எஸ் சங் பரிவார் அமைப்புக்கள்  ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்குப் பதிலாக விஸ்வகர்மா ஜெயந்தி என்பார்கள். சர்வதேச தொழிலாளர் தினத்தை ஏற்றுக்கொள்ளாத இவர்கள் சர்வதேச கூட்டுறவு தினத்தைக்கொண்டாட வேண்டும் என்கிறார்கள். இந்த முரண்பாடு ஏன் என்று கடந்த ஆண்டே கேட்டும் அதற்கு இதுவரை பதிலில்லை. ஆனால் மீண்டும் அதைப்பற்றி எழுதி அதற்கு பரிசு வழங்கவேண்டும் என்பது முரண்பாடானதா இல்லையா? நமக்கெல்லாம் குழந்தைகள் தினம் என்றால் நேரு பிறந்தநாளான நவம்பர் 14 தான். அவர் குழந்தைகளின் மீது மிகவும் பிரியமாக இருந்ததால் அதனை; கொண்டாடி வருகிறோம். ஆனால் ஆர்எஸ்எஸ் சங்பரிவார்க் கும்பல் அதனை ஏற்றுக் கொள்ளாமல் கிருஷ்ணஜெயந்தியை குழந்தைகள் தினமாகக் கொண்டாட வேண்டும் என்கிறது. கிருஷ்ணனைப்போல் ஒரு குழந்தை இருந்தால் அதனை எந்தப் பெற்றோராவது ஏற்றுக் கொள்வார்களா? சின்ன வயதில் வெண்ணெய் திருடினான். பெரிய வயதில் பெண்ணைத் திருடினான். பெண்கள் குளிக்கும்போது அவர்கள் ஆடையை எடுத்து மரத்தின்மீது ஏறி வைத்துக்கொண்டு ஆடையில்லாமல் குளிக்கும் பெண்களெல்லாம் குளத்தை விட்டு வெளியே வந்து கைகள் இரண்டையும் உயர்த்தி கிருஷ்ணா! எங்கள் ஆடையைக் கொடு| என்று கேட்டால்தான் தருவேன் என்கிறான். பெண்களும் அவ்வாறே செய்து ஆடையை வாங்கிச் செல்கிறார்கள். இதையெல்லாம் ஒரு குழந்தைக்குக் கற்றுக் கொடுத்தால் குழந்தையிடம் ஒழுக்கம் வருமா? (இதுபோல் இன்னும் நிறைய இருக்கு) கிருஷ்ணன் செய்தால் லீலை. மற்றவன் செய்தால் லோலாயா?
நம் நாட்டில் ஆசிரியர் தினம் என்றால் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணனின் பிறந்தநாள்தான். ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்ததால் அவருடைய பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். ஆனால் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புக்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் துரோணாச்சாரியார் பிறந்தநாள்தான் ஆசிரியர்தினம் என்று கூறி வருகிறார்கள். யார் இந்த துரோணாச்சாரி? அதனைக் கொண்டாடுவதன் தத்துவம் என்ன? மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் துரியோதனர்களுக்கும் வில்வித்தை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் துரோணாச்சாரி. இவரிடம் ஏகலைவன் என்ற வேடன் வில்வித்தை கற்றுக்கொள்ளச் செல்லுகிறான். ஆனால் துரோணாச்சாரி மனுதர்மத்தின்படி வில்வித்தையினை சத்திரியர்களுக்குத்தான் கற்றுத்தர முடியுமே தவிர சூத்திரனான உனக்குக் கற்றுத்தர முடியாது என்று கூறி மறுத்துவிட்டார். அவன் தானாகவே வில்வித்தை கற்றுக்கொண்டு அர்ஜூனனைவிட சிறப்பாக வில்வித்தையில் தேர்ச்சி பெற்றுவிட்டான். இதையறிந்த துரோணாச்சாரி அவனுடைய வித்தை அவனுக்குப் பயன்படக்கூடாது என்பதால் குருதட்சணையாக அவனுடைய கட்டைவிரலைக் காணிக்கையாகப் பெற்று அவனை முடமாக்கிவிட்டான். இதனுடைய பொருள் சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மத்தின்படி அவரவர் குலத்தொழிலை அவரவர் செய்ய வேண்டுமே தவிர அடுத்தவர் தொழிலைச் செய்ய முயலக்கூடாது என்பதுதான். இதுபோன்று மனுதர்மத்தை இந்த நாட்டில் அமுல்படுத்தி இந்துராஜ்யம் அமைத்து பிராமணன்தான் ஆண்டவனை விட உயர்ந்தவன். மற்ற மக்கள் அவனை வணங்கவேண்டும் என்ற தத்துவத்தைப் போதிப்பதுதான் விஸ்வகர்மா ஜெயந்தி என்பதன் தத்துவம் ஆகும். இந்நிலையை சுயமரியாதை உள்ள யாரும்ஏற்றுக்கொள்ள முடியுமா?
என்பதுதான் அந்தத் துண்டறிக்கை. செப்டம்பர் 17ல் கூட்டம் போட்ட ஆர்எஸ்எஸ்ஸின் தொழிற்சங்கம் இதில் ஒரு வரியைக்கூடää ஒரு வார்த்தையைக்கூட மறுக்கவில்லை. மாறாக உண்மைக்கு மாறாகப் பல செய்திகளை அவிழ்த்து விட்டது. அதனை அடுத்த நாள் கூட்டம் போட்டு நாம் அம்பலப்படுத்தினோம்.
இந்த பிஎம்எஸ் சங்கத்துக்கும் சங் பரிவார் அமைப்புக்களுக்கும் எந்த உறவும் இல்லை என்று இராமன்மேல் அடித்துச் சத்தியம் செய்து வருகிறது அந்தப் புரட்டல்கூட்டம். அந்தக் கூட்டம் மறுபடியும் ஒரு துண்டறிக்கையை வெளியிட்டது. அது இதோ:
ஊர்ஐடுனுசுநுN’ளு னுயுலுரூ வுநுயுஊர்நுசு’ளு னுயுலு
நமது தேசத்தில் தொன்றுதொட்டு கலாச்சார ரீதியான பல்வேறு தினங்கள் திருவிழாக்கள் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அவைää அரசால் மக்களின் விருப்பத்திற்கெதிராக மாற்றம் செய்யப்பட்டும் உள்ளன. சமீபத்திய உதாரணம் சித்திரை வருஷப்பிறப்பு. ஒரு விஷயம் தெளிவுபடுத்துகிறோம். மக்கள் கொண்டாடும் விழாக்களைத்தான் இந்து அமைப்பக்கள் விமரிசையாகக் கொண்டாடுகின்றன. மாறாக மக்கள்மீது எதையும் திணிப்பதில்லை.
காஷ்மீரத்து பிராமணர் (குஊ) நேரு பிறப்பதற்கு 500 ஆண்டுகள் முன்பாகவே துவாபர யுகத்தில் யாதவ குலத்தில் (டீஊ) அவதரித்தவன் கரிய நிறக் கண்ணன்.. இன்றைக்கும் பெயர் தெரியாத குழந்தையை வாடா கண்ணா! என்று கூப்பிடும் வழக்கம் உள்ளது. கோகுலாஷ்டமியன்று குழந்தையின் சின்னக் கால்களை வாசல் முதல் வீட்டுஉள்வரை வரைந்து குழந்தைகளை கிருஷ்ணன் வேஷத்தால் அலங்கரித்து காலங்காலமாக மக்கள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகின்றனர். மாறாக நேருவின் பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக அறிவித்தது அரசுதான். காரணம் குழந்தைகள் என்றால் அவருக்கப் பிரியமாம். அவருக்கு மட்டுமா? அனைவருக்கம்தான். கருப்புச்சட்டையின் (குஊ) பாசத்தை மெச்சுகிறோம்.
துரோணாச்சாரி (குஊ) பிறந்தநாளை யாரும் கொண்டாடுவதில்லை. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளைக் கொண்டாட அவரிடம் கேட்டபோதுää ஆசிரியர்களைப் Nபுhற்றும் தினமாக இருக்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதி கொடுத்தார். அதுமதல் செப் -5 ஐ ஆசிரியர் தினமாக ஆக்கியதும் அரசுதான். அவருக்கு முன்பாகவே இந்நாட்டில் இலட்சக்கணக்கான குருமார்களும் ää ஆயிரக்கணக்கான மகான்களும் தோன்றி வழிகாட்டி உள்ளார்கள். அவர்கள் அனைவரின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக நான்கு வேதங்களை வகுத்துக் கொடுத்தää பதினெட்டு புராணங்களை எழுதிய மகாபாரதத்தையும் பகவத்கீதையையும் வழங்கிய வியாசரின் பிறந்ததினமான ஆடி பௌர்ணமியை நாடு முழுவதிலும் உள்ள குருகுலங்கள்ää கலைகள் கற்றுத் தரும் கூடங்கள் மடாலயங்கள் மற்றும் மக்களும் குருபூர்ணிமா என்றும் கொண்டாடி வருகின்றனர்.
வியாசர் பிராமின் இல்லீங்கோ! மீன்பிடிக்கும் செம்படவர் குலத்தில் (டீஊ) பிறந்தவர்.
விலைமாதர் இல்லங்களில் நாட்டஞ்செலுத்தியவர் ஈவேரா. சுயநலவாழ்வில் மைனராய்ää காலியாய்ää சீமானாய் இருந்தவர். கட்டிய மனைவி இருக்க காவிரி ஆற்று மணலில் நிலாக் காலங்களில் விலைமாதருடன் கூத்தடித்தவர். (சாமி சிதம்பரனாரால் எழுதப்பட்டு ஈவேராவால் சரிபார்க்கப்பட்ட புத்தகம்- தமிழர் தலைவர்) அவரது பிறந்தநாளை என்ன தினமாகக் கொண்டாடினால் பொருத்தமாக இருக்குமோ?
18ந்தேதி காலை மெயின்கேட்டில் விஸவகர்மா விஸ்வகர்மா என்ற நாமாவளி ஒலித்துக்கொண்டிருந்தது. சரி என்று எண்ண ஆரம்பித்தால்ää 15 நிமிடத்தில் 39 தடவைதான் எண்ண முடிந்தது. அதிகமாகக்கூட இருக்கலாம். கடைசியில் அது ஈவேரா பிறந்தநாள் மீட்டிங்காம். அவர் பெயரை 7 தடவைதான் சொன்னார்கள்.  ழுNஐழுN. அதாங்க வெங்காயம்!
இவண் : இந்துமுன்னணி.
இதற்கு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் பதில்.


துரோணாச்சாரி பிறந்தநாள்தான் ஆசிரியர்தினம் என்று தவறாகச் சொல்லி விட்டோமாம். வியாசர் பிறந்தநாள்தான் ஆசிரியர் தினமாம். அந்த வியாசர் யார்? அவன் எப்படிப்பிறந்தான்? அவனுடைய அப்பா- அம்மா யார்? அவனுக்கும் கல்விக்கும் என்ன சம்மந்தம்?
பராசர் என்ற முனிவர் இருபத்தேழு நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரம் உச்சமாகிற காலத்தில் ஒரு பெண்ணைக் கூடினால் அதன்மூலம் பிறக்கும் பிள்ளை வீரியத்துடன் இருக்கும் என்று கருதிää நகரத்திற்கு வந்தார். குறுக்கே யமுனையைக் கடக் வேண்டி இருந்தது. தண்ணீர் கரை புரண்டு ஓடியது. அங்கே படகு ஓட்டிக் கொண்டிருக்கிறாள் மீனவப் பெண்ணான மச்சகந்தி. மச்சகந்தியிடம் உதவி கேட்டார். படகில் பாரம் இல்லை என்று கூறி அவள் மறுக்க தான் பாரத்துக்குச் சரியாய் இருப்பேன் என்று கூறி பயணம் செய்கிறான். அப்பொழுது அந்த நட்சத்திரம் உச்சத்துக்கு வர மச்சகந்தியிடம் தன் கொரிக்கையைத் தெரிவிக்கிறான். அவள் தான் வயசுக்கு வராதவள் என்றும் தன் உடம்பில் மீன் வாடை அடிப்பதாகவும் பகல் பொழுது  என்றும் படகிலே செல்லுகிறபடியால் படகு கவிழ்ந்து ஆபத்தில் முடியும் என்றும்  மச்சகந்தி மறுக்க நதிக்கு நடுவே ஒரு திட்டு உருவாக்கி அவளை வயசுக்கு வரவைத்து அவளுடம்பில் பரிமள வாசம் ஏற்படுத்தி அவளைக்கூடி ஒரு பிள்ளையைப் பெற்று மீண்டும் அவளைக் கன்னியாக்கிவிட்டுச் சென்றுவிட்டான். அதன்மூலம் ஜடாமுடியுடன் மான்தோல் புலித்தோலுடன் ஒருவன் பிறந்தானாம். அவன்தான் வேதவியாசராம்.
அந்த மச்சகந்தியை சந்தன மகாராஜா என்பவன் மணந்து அவன்மூலம் சித்திரவீரியன் என் மகன் பிpறந்தான். அவனும் இறந்துபோனதால் குடும்பம் வம்சமில்லாமல் போய்விடும் என்பதால் பராசருக்கும் தனக்கும் பிறந்த வேதவியாசரை தனது மருமகள்களான அம்பாää அம்பாலிகா ஆகிய இரு விதவைப் பெண்களுடன் கூடிப் பிள்ளையுண்டாக்கச் சொன்னாளாம் அவனுடைய தாய் மச்சகந்தி;. அவனுடைய விகாரமான தோற்றத்தைக் கண்டு அம்பா கண்ணை மூடிக்கொண்டாளாம். அதனால் பிறந்த திருதராஷ்டிரன் குருடனாகப் பிறந்தானாம். அதன்பிறகு அம்பிகையைக் கூடியபோது அவள் நடுங்கியபடியே அவனுடன் கூடினாளாம். அதனால் உடல் விகாரத்துடன் பாண்டு பிறந்தானாம். அந்தப் பாண்டு குந்தி தேவியைக் கல்யாணம் செய்தானாம். அவள் சூரியனுடன் கூடி கர்ணனைப்  பெற்றாளாம். எமதர்மனுடன் கூடி தர்மராஜனைப் பெற்றாளாம்.
இப்படிப் பாண்டவர்கள் அய்வரும் வௌ;வேறு தேவர்களுக்குப் பிறந்தாலும் பாண்டுவின் பெயரை இனிஷியலாகப் போட்டுக்கொண்டார்கள். இதி;ல் ஒரு வெட்கக்கேடு சூரியனின் மகன் இந்திரனாம். அந்தச் சூரியனிடம் கர்ணனைப் பெற்றாளாம். மகனான இந்திரனிடம் அர்ஜூனனைப் பெற்றாளாம். இதுதான் பாரதக் கலாச்சாரமாம். இந்த மகாபாரதத்தில் ஒருவன்கூட ஒழுங்காக அவனவன் அப்பா அம்மாவுக்குப் பிறந்ததாகக் கதையில்லை. இவர்கள் பிறந்ததையெல்லாம் கொண்டாடி மக்கள் இழிவைச் சுமக்க வேண்டுமா? இதனால் நீங்கள் போதிக்கும் தத்துவம் என்ன? தமிழனுக்கு இதனால் ஏற்படப் போகும் நன்மை என்ன?
இந்தத் தத்துவம்தான் 5000 ஆண்டுகளாய் உழைக்கும் சூத்திர மக்களுக்குச் செல்வம் சேர்க்க உரிமையில்லாமல்ää கல்விகற்கவும் உரிமையில்லாமல்ää ஆயுதம் ஏந்தவும் வழியில்லாமல் செய்தது. பிற்படு;த்;தப்பட்டவனை சூத்திரன் என்றும் பார்ப்பானின் வைப்பாட்டிமகன் தாழ்த்தப்பட்டவனை பஞ்சமன் என்றும் ஆக்கி வைத்து அவனைப் பிணத்துக்குச் சமமாக வைத்திருந்தது. அந்த தர்மத்தைச் சட்டமாக ஆக்க வேண்டும் என்று சொல்கிறாயா? கிருஷ்ணனும் இராமனும் பிராமணனைத்தான் கடவுளாக வணங்குகிறார்கள். அதனால் தேவடியாள் மக்களாகிய நீங்கள் பிராமணர்களாகிய எங்களைத்தான் வணங்கவேண்டும் என்கிறாயா? தமிழர்களாகிய நாங்கள் படிக்கக் கூடாது! படித்தால் நாக்கை அறுக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அந்த சாஸ்திரங்களை மீறி இதுவரை படித்துப் பட்டம்பெற்று உயர் பதவி வகிக்கும் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட மக்களின் நாக்கை அறுக்க வேண்டும் என்கிறாயா? படித்ததை மனதிலே நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்கிறாயா?
நீ சொல்லக்கூடிய இராமராஜ்யம்ää கிருஷ்ணஜெயந்திää விஸ்வகர்மா ஜெயந்திää வியாசர் ஜெயந்தி எல்லா ஜெயந்தியும் எங்கள் மக்களுக்குக் கல்வி புகட்டச் சொல்லவில்லை. பெரியார் எங்கள் மக்களைப் படிக்கச் சொன்னார்: நல்ல பதவிக்குச் செல்ல எங்;களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார். இராஜாஜி எங்களைப் படிக்க வேண்டாம் என்றார். அவனவன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்றார். இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து நாங்கள் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தினார் பெரியார். நீங்கள் போற்றிப் பாராட்டும் திலகரும் கீழ்ஜாதிக்காரனுக்குப் படிப்பு எதற்கு என்றார். இப்பொழுது நீ என்னதான் சொல்ல வருகிறாய்? நாங்கள் படிப்பது தவறு என்கிறாயா? வேலைக்குப் போவது தவறு என்கிறாயா? திலகர் கூற்றுப்படி எங்களை சட்டமன்றத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் செல்லக்கூடாது என்கிறாயா? என்னதான் சொல்ல வருகிறாய்? அறிவுநாணயத்தோடுபதில்சொல்!                       இவண் : திராவிடர் தொழிலாளர் கழகம்.
இதற்கும் இந்து முன்னணி பதில் சொல்லவில்லை. இதுகுறித்து மேலும் நமது விளக்கம்.
இதன் மூலம் இந்து முன்னணி சொல்ல வருவது என்னவென்றால் அரசின் திட்டங்களை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு முன்பிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வரும் விழாக்களைத்தான் நாங்கள் கொண்டாடுகிறோம் என்பதாகும்.
ஆர்எஸ்எஸ் பிஎம்எஸ் எல்லாம் அதைத்தான் சொல்கிறது. சட்டத்தை இயற்றுவதற்கு அரசுக்கோ அரசனுக்கோ அதிகாரம் இல்லை. ரிஷிகளும் முனிவர்களும்தான் சட்டங்களை இயற்றுவார்கள். அந்த சட்டங்களை ஏற்றுக்கொண்டு மக்களை அதன்படி வழிநடத்துபவன்தான் அரசன் என்பதுதான் அது.
தந்தை பெரியார் இதனைக் கடுமையாகச் சாடினார். நமக்கு சட்டங்களையும் சாஸ்திரங்களையும் எழுதியவன் யாரடா என்றால் ரிஷிகள்ää முனிவர்கள்ää நாரதர்ää பராசரர்ää என்றெல்லாம் சொல்கிறார்களே! அவன் சொல்படிதான் இந்துசட்டங்கள் இருக்க வேண்டும் என்கிறார்களே! இதில் கொஞ்சமாவது அறிவுக்கோ ஆராய்ச்சிக்கோ இடமிருக்கிறதா? இந்த ரிஷிகளும் முனிவர்களும் எந்தக் காலத்தில்  வாழ்ந்தார்கள்? இவர்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இவர்களெல்லாம் யாருக்கு எப்படிப் பிறந்தார்கள்? இதில் எவனாவது ஒருவன் மனிதனுக்குப் பிறந்தான் என்று புராணங்கள் சொல்கிறதா?
கலைக்கோட்டு ரிஷி மானுக்கும்ää காங்கேயர் கழுதைக்கும்ää சுகர் கிளிக்கும்ää அஸ்வத்தாமன் குதிரைக்கும் ஜம்புகர் நரிக்கும்ää அகஸ்தியர் குடத்திற்கும்ää மாண்டவியர் தவளைக்கும்ää சவுனகர் நாய்க்கும் கணாதர் கோட்டானுக்கும் பிறந்தவன் என்றுதானே உன்னுடைய புராணங்கள் சொல்கின்றன. குறைந்தபட்சம் மனிதனால் எழுதப்பட்டதான சட்டமாவது நமக்கு இருக்க வேண்டாமா? இவன்கள் எழுதியதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நாமெல்லாம் காட்டுமிராண்டிகளா? என்று கேட்டார் பெரியார்.
இதைத்தான் இ.முன்னணியும் சொல்கிறது.
எங்களுக்கு என்ன அரசாங்கம் சொல்வது? நாங்கள் என்ன அதனைக் கடைப்பிடிப்பது? எங்களுடைய ராஜ்யத்தில் இவையெல்லாம் இருக்காது. அம்பேத்கர் என்ற தாழ்த்தப்பட்டவன் சட்டத்தை எழுதினால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வதா? சூத்திரன் சட்டத்துக்குப் பொருள் சொல்லும் நாடே சேற்றில் அகப்பட்ட பசுப்போல அழிந்துவிடும் என்று மனுதர்மம் சொல்லும்போது ஒரு பஞ்சமன் எழுதிய சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வோமா? என்பதுதான் இதன் உள்ளடக்கம். மனுதர்மம்தான் இந்த நாட்டின் சட்டமாக இருக்கவேண்டும் என்பதுதான் இவர்கள் கொள்கை. அதனால்தான் திலகர் பிறந்தநாளில் இவர்கள் சங்கம் ஆரம்பிக்கிறார்கள். அவரால் கொண்டுவரப்பட்ட பிள்ளையார் ஊர்வலத்தை மக்கள்மீது திணிக்கிறார்கள்.
மக்கள் கொண்டாடும் விழாக்களைத்தான் இந்து அமைப்புக்கள் விமரிசையாகக் கொண்டாடுகின்றன என்பது எவ்வளவு பொய்யானது என்பதற்கு பிள்ளையார் ஊர்வலமே உதாரணமாகாதா?
மக்கள் என்றாவது பிள்ளையார் சதுர்த்தியன்று அய்ம்பதடி அறுபதடி என்று பிள்ளையார் பொம்மை செய்து அதை மசூதி வழியாக ஊர்வலமாக எடுத்துச்சென்று பத்துப்பைசா முறுக்கு பள்ளி வாசலை நொறுக்கு என்று கூச்சல் போட்டு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும்படி கடலிலும் ஆற்றிலும் கொண்டுபோய்க் கரைத்திருக்கிறார்களா?
ஒரு ரூபாய்ää இரண்டு ரூபாய்க்குப் பிள்ளையார் பொம்மை வாங்கி வீட்டிலுள்ள கிணற்றில் போட்டு வீட்டுக்குள்ளேயே கொண்டாடி வந்த விழாவை வீதிக்குக் கொண்டுவந்து மதவெறியைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தும் நயவஞ்சகச் செயலுக்கு மக்கள்மீது பழியைப் போடுவதுதான் அறிவுநாணயமா?
மேலும் இ.முன்னணிக்காரரின் வார்த்தைஜாலங்களைப் பாருங்கள். நேரு குஊ யாம். கண்ணன் டீஊ யாம். கண்ணன் எவனாக இருந்தால் என்ன? அவன் எப்படிப் பிறந்தான் என்பதுகூட நமக்குப் பிரச்சினையில்லை. அவனால் சொல்லப்பட்டதாகக் கூறப்படும் தத்துவம் என்ன?
~நான்கு வருணங்களையும் நானே படைத்தேன். நான்தான் நான்கு வருணங்களையும் படைத்தவனாக இருந்தாலும் என்னால்கூட அதனை மாற்ற முடியாது| என்பதுதானே அது?
அந்தத் தத்துவம்தானே நம்மை இழிஜாதியாய்ச் சூத்திரனாய்ப் பஞ்சமனாய் ஆக்கியது? இதற்காகத்தானே நாம் அதனை எதிர்க்கிறோம். டீஊ சொல்லி விட்டான் என்பதற்காக நாம் அதனை ஏற்றுக்கொண்டு சூத்திரனாய்ப் பஞ்சமனாய் இருந்து பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாய் இருக்க வேண்டுமா?
அடுத்து அந்தக் கண்ணன் செய்யும் லீலைகளை இந்தக் கால இளைஞன் செய்தால் ஏற்றுக் கொள்வீர்களாää கண்ணன் செய்தால் லீலை. இந்தக்கால இளைஞன் செய்தால் லோலாயா? என்று கேட்டதற்கு எந்தப் பதிலையும் காணோம்.
அடுத்து துரோணாச்சாரி பிறந்தநாளை யாரும் கொண்டாடுவதில்லை என்கிறது இ.முன்னணி! ஏன் அதனைக் கொண்டாடுவதில்லை? அவன்தானே ஆசிரியர்? அவன்தானே குரு? அவனைவிட்டு வியாசரை ஏன் பிடித்தீர்கள்?
துரோணாச்சாரி என்றால் நேரடியாகக் கேள்வி வரும் அவன் சூத்திரனுக்கு வில்வித்தை கற்றுத்தர மறுத்தவன். உழைப்புக்கு ஆதாரமான கட்டைவிரலை ஏகலைவனிடமிருந்து பெற்று அவன் கற்ற கலை அவனுக்குப் பயன்படாமல் செய்த ஜாதி வெறியன் என்பது எளிதில் விளங்கிவிடும். அதனை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட அப்பாவிகள் புரிந்துகொண்டால் தங்களுக்குப் பலக்குத் தூக்க ஆளில்லாமல் போய்விடும் என்பதால் வியாசரைப் பிடித்திருக்கிறார்கள். அந்த வியாசர் எப்படி டீஊ ஆவார்? அவனுடைய அப்பன் யார்? பராசரர்தானே! பராசரர் டீஊ யா? உன்னுடைய மனுதர்மம் என்ன சொல்கிறது? மேல்ஜாதிக்கார ஆணுக்கும் கீழ்ஜாதிக்காரப் பெண்ணுக்கும் பிறக்கும் பிள்ளை மேல்ஜாதி என்றுதானே சொல்கிறது? அண்மையில் நீதிமன்றத் தீர்ப்புக்கூட இது தொடர்பாக வந்துள்ளதே! அப்புறம் எப்படி அம்மாவுடைய ஜாதியில் வியாசரைச் சேர்த்தீர்கள்?
அம்பேத்கர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.
உங்களுக்கு மகாபாரதம் தேவைப்பட்டது. வியாசரைப் பயன்படுத்திக் கொண்டீர்கள். இராமாயணம் தேவைப்பட்டது. வால்மீகியைப் பயன்படுத்திக் கொண்டீர்கள். அதுபோல் உங்களுக்கு ஒரு அரசியல் சட்;டம் தேவைப்பட்டது. என்னைப் பயன்படுத்திக்கொண்டீர்கள்| என்று அம்பேத்கர் சொன்னது சரிதானே!
அதன்மூலம் சொல்லப்படும் தத்துவம் என்ன என்பதுதான் முக்கியமே தவிர அது யாரால் சொல்லப்பட்டது? என்பது அல்ல.
அடுத்து வியாசரின் பிறந்ததினமான ஆடி பௌர்ணமியை நாடு முழுவதிலும் உள்ள குருகுலங்கள் கலைகள் கற்றுத்தரும் கூடங்கள்ää மடாலயங்கள் வியாசர் பிறந்தநாளைக் கொண்டாடி வருவதாகக் கூறுகிறார். ஆடிமாதம் என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். இதனை எப்படி நாடு முழுதிலும் உள்ளவர்கள் கொண்டாடியிருக்க முடியும்? குருகுலங்களிலும் கலைகள் கற்றுத் தரும் கூடங்கிளிலும் யாருக்குக் கற்றுத்தரப்பட்டன? சூத்திர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் அங்கு கலைகள் கற்றுத்தரப்பட்டதா? இதையெல்லாம் இ.முன்னணி விளக்குமா?
இந்து மத வேத புராண இதிகாசங்களையும்ää அதன் ஆபாசங்களையும் அக்குவேறு ஆணிவேராகக் கிழித்தவர் தந்தை பெரியார் அவர்கள். புராணங்களிலுள்ள ஆபாசங்களையும் கடவுளர்களின் லீலைகளையும் மறுக்க வக்கில்லாத இந்துமுன்னணிக் கூட்டம் தந்தை பெரியாரை ஒழுக்கக் கேடானவராகச் சித்தரிக்க முனைகிறது. தந்தை பெரியாரையும் அவரது பொது வாழ்வையும் நன்கு உணர்ந்தவர்கள் அவரது நாணயத்திலும் நேர்மையிலும் ஒழுக்கத்திலும் எந்தக் குறையும் கண்டதில்லை.
அவர் பொதுவாழ்விற்கு வருவதற்கு முன்பு அவரிடம் வெற்றிலை பாக்குப் போடுதல் சிகரெட் பிடித்தல் போன்ற பழக்கங்கள் இருந்திருக்கின்றன. அவர் பொதுவாழ்வுக்கு வந்த உடன் ஒரே பகலில் அப்பழக்கங்களைக் கைவிட்டதாக சாமி சிதம்பரனார் அவர்கள் இவர்கள் கூறும் அதே தமிழர் தலைவர் நூலில் தெரிவிக்கிறார்.
அதேபோல் அவர் இளைஞராய்ää மைனராய் இருந்த காலத்தில் சுற்றுச்சூழல் எதுவும் அவரை பாதித்ததில்லை என்றும் சாமி சிதம்பரானார் எழுதுகிறார்.
பெரியார் ஒன்றும் பஞ்சைப்பராரிக்கு மகனாகப் பிறக்கவில்லை. குடிக்கக் கூழில்லாமல்ää குந்தக் குடிசையில்லாமல் கட்டத் துணியில்லாமல் அலைந்தவரில்லை. ஈரோட்டிலேயே மிக அதிக வசதி படைத்த செல்வச்சீமானுக்கு மகனாகப் பிறந்தவர். அனைத்து வசதிகளையும் அனுபவித்தவர்.
உங்களுடைய இந்து மதத்தில் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள். நமக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது. பண்பாடு இருக்கிறது. பாரம்பரியம் இருக்கின்றது. அதனைக் காப்பாற்றுவதுதான் ஆர்எஸ்எஸ் இந்து முன்ன்ணயின் வேலை என்கிறீர்கள்.
நீங்கள் சொல்லும் அந்தப் பண்பாடு பாரதப் பண்பாடுதானே! பாரதம் என்பது மகாபாரதம்தானே! அந்த மகாபாரதம் கூறும் கலாச்சாரம் பண்பாடு எது? அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்பதுதானே?
இந்துமதம் என்பதே ஜாதிகளின் தொகுப்புத்தானே! ஜாதிகள் எது எதற்கெல்லாம் இருக்கிறது?
பிச்சை எடுப்பதற்கென்று ஒரு ஜாதி@ திருடுவதெற்கென்று ஒரு ஜாதிää விபச்சாரம் செய்வதற்கென்று ஒரு ஜாதி@ அதுவும் பரம்பரை பரம்பரையாக இருக்க வேண்டும். அவரவருக்குரிய தொழிலைச் செய்ய வேண்டும். பொட்டுக்கட்டிக் கொண்டு கடவுளைக் கணவனாக வரித்து கனதனவான்களுக்கு சுகபோகம் கொடுக்க வேண்டும் என்பதுதானே அவர்களின் ஜாதித் தொழில்?
அந்த தேவதாசி முறையை ஒழித்தவர் தந்தை பெரியார் அல்லவா? இந்தப் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும்@ தேவதாசி முறை சாஸ்திரப்படி சம்மதமானதுää சட்டத்தை மீறி ஜெயிலுக்குப் போவேனே தவிரää சாஸ்திரத்தை மீறி நான் நரகத்துக்;குப் போக மாட்டேன் என்று சொல்லி அந்த தேவதாசி முறையைப் பாதுகாக்கப் பாடுபட்டவர் சத்தியமூர்த்தி அய்யர் அல்லவா?
அதனை டாக்டர் முத்துலட்சுமிரெட்டி அவர்கள் தந்தை பெரியாரின் ஆலோசனையுடன் சென்னை மாகாண சட்டமன்றத்தில் வாதாடி ஒழித்துக்கட்டவில்லையானால் இன்றும் அது நம் நாட்டில் உன் இந்துமதம் பாதுகாத்து வந்தாலும் வரலாமே!
அந்த இந்து மதத்தின்படி அவர் சிறு வயது வாலிபராக இருந்தபொழுது சிற்றின்பத்தில் நாட்டங்கொண்டவராக இருந்திருக்கலாம். அதுவும் நீ சொல்வதுபோல கட்டிய மனைவியிருக்க அவருக்கு துரோகம் செய்துவிட்டு அவருக்குத் தெரியாமல் செல்லவில்லை. நண்பர்களுடன் காவிரி ஆற்று மணலில் உல்லாசமாக இருந்தார் என்றுதான் சாமி சிதம்பரனார் சொல்கிறார். எந்த ஒரு சாதாரண மனிதனும் வெட்டவெளியில் ஆற்று மணலில் நண்பர்களுடன் உல்லாசமாய் இருந்தார் என்று சொல்லப்படுவது ஆடல் பாடல் கொண்டாட்டமாய் இருந்திருக்கலாமே தவிர வேறு மாதிரியான காரியம் நடந்திருக்க வாய்ப்பில்லை. அத்துடன் அது நாகம்மையாருக்குத் தெரியாமல் நடக்கவில்லை. நண்பர்களுடன் ஆற்று மணலுக்குச் செல்வதற்கு சாப்பாடு நாகம்மையார்தான் சமைத்து அனுப்புவாராம். அவர் மகிழ்ச்சியாக இருப்பதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாமே தவிர பெரியார் ஒழுக்கக் கேடாய் நடந்தார் என்று கருதுவதற்கு இடமில்லை.
ஏனெனில் அந்தக் காலத்தில் தாசிகள் என்பவர்கள் ஆடல் பாடலில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். பெரியாருக்குத் தெரிந்த தாசி ஒருவர் மைசூர் அரண்மனைக்கு நாட்டியமாடச் செல்கிறார். அங்கு சென்று அவரது நாட்டியத்தை ரசிக்க பெரியார் விரும்புகிறார். ஆனால் அந்த அரண்மனைக்குள் அரச பையில் கச்சேரிக்குச் செல்ல வேண்டுமானால் முன் அனுமதிபெறற் பெரிய மனிதர்கள்தான் செல்ல மடியும். மற்றவர்கள்உள்ளே போக முடியாது. இவரோ முன் அனுமதி பெறிவில்லை. அனுமதிச் சீட்டின்றி வாயிலோன் அவரை செல்ல அனுமதிக்கவில்லை. உடனேää கச்சேரிக்குச் செல்பவர்களிடம் ஒரு ஜோடி தாளத்தை வாங்கிக்கொண்டு நாட்டியக்குழுவோடு உள்ளே சென்று இறுதிவரை இருந்து நாட்டியத்தை பார்த்து ரசித்து விட்டு வருகிறார்.
இப்படித்தான் அவருடைய இளமைக்காலம் சென்றிருக்கிறதே தவிர நீ சொல்வதுபோல அவர் ஒழுக்கக் கேடானவர் என்று சொல்வதற்கு இதில் ஒன்றுமில்லை.
அத்துடன் பெரியார் அவர்கள் என்றைக்கும் சுற்றுச் சூழலுக்கு அடிமையானதில்லை. அதை அவரே சொல்கிறார் பார்ப்போம்@
~~எனது நல்ல வாலிபப் பருவத்தில் 20 முதல் 32 வயது வரையில் சகபாடிகள் ஏறக்குறைய அந்தரங்க சகபாடிகள் எல்லோரும் மது அருந்துபவர்கள் ஆவார்கள். அது மாத்திரமா? என்னிடத்தில் அதிக காதல் உள்ள சர்க்கார் அதிகாரிகள்ää ஜமீன்தார்கள்ää மிராசுதார்கள் ஆகியவர்களும் மது அருந்துபவராக இருந்தார்கள். மேற்கண்ட வயதில் அநேகமாக இரவெல்லாம் இந்தக் கூட்டத்தாருடனேயே கோலாகலமாய் இருந்துää காலை ஆறு மணிக்கு கொத்துச் சாவியை எடுத்துக்கொண்டு கடைதிறக்கப் போய்விடுவேன். ஒரு ராத்திரிக்கு 4 பாட்டில் 5 பாட்டில் உடைபடும். எனக்கும் மாதத்தில் இந்தச் செலவு 40ää 50 ரூபாய் ஆகும். என் வீட்டில் சதா 4ää 2 பாட்டில்கள் இருக்கும். நானே என் கையால் டம்ளரில் ஊற்றி சோடா கலந்துகொடுப்பேன். சிலர் அதிகம் குடித்து விட்டுப் போதையில் என்மீது துப்புவார்கள். ஒரு காலத்தில் ஒரு டிப்டி கலெக்டரும்ää ஒரு சால்ட் அஸிஸ்ட்டென்;ட் கமிஷனரும் நான் ஊற்றிக் கொடுத்ததையே சாப்பிட்டுää என்னைப் பிடித்துக் கீழே தள்ளிää என் வாயில் பலவந்தமாக ஊற்றினார்கள். அப்படி எல்லாம் இருந்தும் என்னை அந்தச் சகவாசமும் சுற்றுச் சார்பும் அது (மது அருந்தினால்) எப்படி இருக்கும் என்ற யோசிக்கக்கூடத் தோன்றவில்லை. என் மனைவியாருக்கும் என்மீது அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டு என் வாயை ஊதிக் காட்டச் சொல்வார்கள். நான் கிராக்கி செய்வேன். பலாத்காரத்தால் என் வாயை முகர்ந்து பார்த்து திருப்தி அடைவார்கள்|| என்று பெரியார் கூறுகிறார்.
அக்கிரஹாரக் கூட்டத்தால் லோககுரு என்று அழைக்கப்படும் சங்கராச்சாரி முற்றும் துறந்த முனிவர் என்று வேடம் போட்டுக்கொண்டு 70 வயதில் ஹார்லிக்ஸ் சியாமளாää சீரங்கம் உஷா என்று உஜார் பண்ணினது மாதிரியோää உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் அனுராதா ரமணனை அம்மா என்ற பத்திரிகை நடத்தச் சொல்லி அழைத்து அம்மாவாக்க முயற்சித்து அம்பலப்பட்டுப்போன சங்கராச்சாரிபோல ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலையவில்லை.
உன்னுடைய கடவுள்களின் யோக்கியதை எத்தனையோ இதுபோன்ற சமாச்சாரங்கள் இருந்தாலும் சீரங்கம் ரெங்கநாதரை ஆண்டுதோறும் பல்லக்கில் தூக்கி வைத்து உறையூர் துலுக்க நாச்சியாரிடம் விட்டுவிட்டு இரவு முழுக்க காவல் காத்து தூக்கிச் செல்லும் அசிங்கமான வேலையைச் செய்து அதைப் பெருமைபடச் சொல்லும் நீங்கள் இதைப்பற்றிப் பேசக்கூடாது.
நீங்கள் பாரதத்தின் ஏகபத்தினிவிரதனாகக் கொண்டாடும் இராமன் உண்மையில் ஏகபத்தினி விரதனா? பெரியாரோடு அம்பேத்கர்ஜியை ஏன் ஜோடி சேர்க்க வேண்டும் என்கிறாயே! இராமனின் வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் பெரியார் ஏற்றியதுபோலவே அண்ணல் அம்பேத்கரும் ஏற்றுகிறாரேää அதனால்தான் அம்பேத்கரோடு பெரியாரை ஜோடி சேர்க்கிறோம். அண்ணல் சொல்கிறார்ää
~~இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதியாகவும்ää நண்பகலுக்குப்பன் வேறொரு பகுதியாகவும் பிரிக்கப்பட்டது. காலை முதல் நண்பகல்வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறிமாறித்தன் நேரத்தைக் களித்தான். அந்தப்புரப் பெணு;களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக்களிப்பான். கோமாளிகளுடன் பேசிக்களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான். இராமனின் உணவில் அருஞ்சுவைப் பொருட்கள் அனைத்தும் இடம் பெற்றன. மதுää மாமிசம்ää பழவகைகள் உட்பட. இராமன் மதுவை அறவே தொடாதவன் அல்ல. இராமன் அளவுக்கு அதிகமாகவே குடித்துவிட்டு அவன் ஆடும் ஆட்டத்தில் சீதையையும் கலந்துகொள்ளச் செய்தான். அந்தப்புரப் பெண்களுடன் இயல் இசை நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரிää உரகா மற்றும் அப்சரசுகள் போன்ற பேரழகிகள் இருந்தனர். போதாதென்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெண்ணழகிகளெல்லாம் அந்த அந்தப் புரத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். இந்த அழகிகளின் மத்தியில் இராமன் குடித்துக் கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்பெண்களெல்லாம் இராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு பட்டனர். வஞ்சியரின் வளையத்துள் கிடந்த ஆடவருள் இளவரசன் இராமன் முதல்வன்என்கிறார் வால்மீகி. இவை இராமனின் ஒரு நாள் வாழ்க்கை நிகழ்ச்சிகளல்ல. இராமனின் வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளே இவை” என்று இராமன் கிருஷ்ணன் பற்றிய புதிர் என்ற கட்டுரையில் அண்ணல் அம்பேத்கர் எழுதுகிறார். அதனை இந்திய அரசின் நல அமைச்சகம்ää அம்பேத்கர் பவுண்டேசன் சார்பாக வெளியிட்ட பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 8 பக்கம் 462ல் காணலாம்.
அத்துடன் கிருஷ்ணனைப்பற்றிக் குறிப்பிடும் அம்பேத்கர் சிசுபாலனுக்குத்திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ருக்மணியைக் கிருஷ்ணன் கடத்திக்கொண்டு போய்வி;ட்டதாகவும் கிருஷ்ணன் ருக்மணியின் உண்மையான கணவனாயும் இருந்ததாகத் தெரியவில்லை என்று எழுதும் அம்பேத்கர் ருக்மணியைத் தொடர்ந்து பெரும் மந்தைக் கூட்டமே கிருஷ்ணனின் மனைவிக் கூட்டமானது. கிருஷ்;ணனின் மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை பதினாயிரத்து ஒரு நூற்றெட்டுப் பேர்கள். அவனுடைய குழந்தைகளின் எண்ணிக்கையோ ஒரு இலட்சத்து எண்பதாயிரம் பேர்கள்|| என்றும் அதே நூலில் பக்கம் 473ல் குறிப்பிடுகிறார்.
அந்த இரு கடவுளரின் பெயரால்தானே இன்று நீங்கள் நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் நடத்தி வருகிறீர்கள். 95 ஆண்டு காலம் வாழ்ந்து தமிழர் உரிமைக்காகப் போராடி மறைந்த எம் தலைவர் பெரியார் பொதுவாழ்விலும் தனிமனித வாழ்விலும் அப்பழுக்கற்ற மனிதராக வாழ்ந்து மறைந்தார். ஆனால் நீங்கள் இந்த நாட்டிற்கு அமைக்கப் போகும் இராமராஜ்யத்தின் கதாநாயகர்களின் வாழ்க்கை உங்கள் இதிகாசங்களின்படி இவ்வளவு இழிவானதாயிருக்கிறது. இதிலிருந்து நீங்கள் நாட்டு மக்களுக்குக் காட்டும் கலாச்சாரம் எத்தகையது என்பதை விளக்க முடியுமா? இப்படிப்பட்ட கடவுளரைக் கொண்டாடும் நீங்களா பெரியாரை விமர்சனம் செய்வது?
எனவே பெரியார் என்பவர் ஒரு தனிமனிதரல்ல. தாழ்வுற்றுக்கிடந்த தமிழ்ச்சமுதாயத்தை வாழ்விக்க வந்த வரலாற்று நாயகன். உன் ஆரிய மத வண்டவாளங்களை தன்னுடைய பகுத்தறிவு என்னும் பீரங்கியால் வெடி வைத்துத் தகர்த்து தமிழனுக்குத் தன்மான உணர்வூட்டிய அறிவுச் சூரியன். அவருடைய பகுத்தறிவு வாதத்தின் முன் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறிப் போய்க்கிடந்த தறுதலை இந்து முன்னணியே! உன் ஜம்பம் இனியும் பலிக்காது. உன்னை எதிர்த்தவர்களையெல்லாம் வரலாற்றில் அசுரனென்றும் அரக்கனென்றும் இராட்சசரென்றும் சொல்லி அழித்ததுபோல் பெரியார் என்ற மேருமலையை உன்னால் அழிக்க முடியாது. சமணர்களை கழுவிலேற்றிக் கொன்றதுபோல்ää பௌத்தர்களின் தலைக்கு விலைவைத்து அவர்களைப் பூண்டோடு அழித்ததுபோல் பெரியாரின் வாரிசுகளை உன்னால் அழிக்க முடியாது என்பதால் பெரியாரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவரை மக்கள் மனங்களிலிருந்து உன்னால் அகற்ற முடியாது. பெரியார் என்பவர் அழிவில்லாச் சூரியன் போன்றவர். அவரது தொண்டர்கள் ஏதோ கறுப்புச் சட்டை போட்டுக்கொண்டு அங்கொன்றும் இங்கொருவருமாய் இருப்பவர்கள்தான் என்று எண்ணாதே! கறுப்புச் சட்டை போட்ட பெரியார் தொண்டர்களைவிட கறுப்புச்சட்டை போடாத பெரியார் தொண்டர்கள் ஏராளம் இருக்கிறார்கள். அவர்கள் உன் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம். அவர்களை ஒருங்கிணைத்து உன் வண்டவாளங்களை தமிழ் மண்ணில் தோலுறிக்க தந்தை பெரியாரால் வார்த்தெடுக்கப்பட்ட தமிழர் தலைவர் வீரமணியும் அவரது அடிச்சுவட்டில் பெரியார் காண விரும்பும் சமுதாயத்தை அமைக்க சர்வபரித் தியாகம் செய்யத் தயாராக உள்ள தொண்டர் படையும் உன்னுடைய விசமத்தனத்தை வேரறுக்கும்.
இவ்வாறு நீ சொன்ன பித்தலாட்டமான குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் அப்படியே அதனை வெளியிட்டு ஒவ்வொரு வரிக்கும் பதில் சொல்லும் துணிவும் நாணயமும் எங்களிடம் உண்டு. அதுபோல் உனக்கு அந்த அறிவு நாணயம் உண்டா? மேலும் கீழும் உள்ள வரிகளை எடுத்து விட்டு இடையில் உள்ள வார்த்தையை உனக்கு சாதகமாக ஆக்கி பெரியார் மீது தப்பான அபிப்பிராயம் ஏற்படும்படி செய்த அந்தப் பித்தலாட்டங்களையெல்லாம் தோலுறித்துக் காட்டியிருக்கிறோம்.
உன்னால் இப்படிப் பித்தலாட்டமான வகையில்தான் எழத முடிந்ததே தவிர நாங்கள் கேட்ட கேள்வியில் ஒர வரியைக் கூட ஒரு வார்;த்தையைக்கூட மறுக்க முடியவில்லையே!
தினமலர்க்காரன் தமிழ் செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி வருமா என்று கேட்டானே! அது பற்றி உன்னுடைய கருத்து என்ன? பிள்ளையார் ஊர்வலம் நடத்துவதால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் என்ன பலன்? பிள்ளையார்தான் காவிரி உருவாகக் காரணமாக இருந்தவரா? அந்தப் புராணங்கள் உண்மையா? பிள்ளையார்தான் காரணமென்றால் இப்பொழுது கர்நாடகத்தான் தண்ணீர் தர மறுக்கும்போது பிள்ளையாருக்கு சக்தியிருந்தால் மீண்டும் தண்ணீர் வர ஏற்பாடு செய்யலாமே! உனக்கு பிள்ளையார் மீது நம்பிக்கை இருக்கிறதா? கடவுளைத்தான் யாராவது ஆர்எஸ்எஸ் காரர்கள் நம்புகின்றீர்களா? இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா?
நீ அமைக்கப் போகும் இந்துராஷ்டிரத்தில் மனுதர்மம் சட்டமாக இருக்குமா? அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டம் இருக்குமா?
திலகர் வழியைக் கடைப்பிடிக்கும் நீங்கள் மனுதர்மத்தை;தான் சட்டமாக ஆக்குவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட நீங்கள் அம்பேத்கரைப்பற்றிப் பேசுவது யாரை ஏய்க்க?
எனவே, தமிழனத் தோழர்களே!
பெரியார் இல்லையேல் நமக்கு வாழ்வு உண்டா? சிந்தித்துப் பாருங்கள்!
1952ல் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த இராஜகோபாலாச்சாரி என்ன செய்தார்? அன்றைக்கிருந்த பள்ளிகளின் எண்ணிக்கையே மிகவும் குறைவு. அவற்றில் 6500 பள்ளிகளை இழுத்து மூடிää நம் தமிழினப் பிள்ளைகள் அரை நேரம் படிக்க வேண்டும். மீதி அரைநேரம் அவரவர் குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அதனை எதிர்த்துத் தந்தை பெரியார் போர்க்கொடி தூக்கினார். அந்தத் திட்டத்தை வாபஸ் வாங்க இராஜாஜி தயாரில்லை. அதனால் தன்னுடைய தோழர்களுக்கு பெட்ரோலும் தீப்பந்தமும் வைத்துக்கொள்ளச் சொல்லி உத்தரவி;ட்டார் பெரியார். குறிப்பிட்ட தேதியை நிர்ணயித்து அந்த நாளுக்குள் அந்தக் குலக்கல்வித் திட்டத்தை வாபஸ் வாங்காவிட்டால் அக்கிரஹாரத்தைக் கொளுத்துங்கள் என்று உத்தரவிட்டார் பெரியார். அப்பொழுதும்கூட தன்னுடைய பதவியை மட்டும் இராஜினாமா செய்துவிட்டு ஓடினாரே தவிர இராஜாஜி அந்தத் திட்டத்தை வாபஸ் வாங்கவில்லை.
அதற்குப் பிறகு பெரியார் அவர்கள் பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் வரதராஜூலு நாயுடு அவர்களது வீட்டில் காமராசர் அவர்களைச் சந்தித்து இந்த நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்குமாறு வேண்டினார். முதலில் தயங்கிய காமராசர் பெரியார் கூறிய ஊக்க வார்த்தைகளால் அதனை ஏற்றுக் கொண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். காங்கிரசை ஒழிப்பதே தனது இலட்சியம் என்று முழக்கமிட்டு காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்தும் காங்கிரசிலிருந்தும் வெளியேறிய பெரியார்ää குடியாத்தம் இடைத் தேர்தலில் காமராசரை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்தாரென்றால் எதற்காக? தமிழர்களின் கல்விக்கண் திறக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தானே! அவ்வாறு காமராசரை பெரியார் ஆதரிக்காமல் இருந்திருந்தால் இராஜாஜியின் சீடர்களான பக்தவச்சலமோää சி.சுப்பிரமணியமோதான் முதல்வராக ஆகியிருப்பார்கள். மீண்டும் குலக்கல்வித் திட்;டமே தொடர்ந்திருக்கும். அதனால் தமிழர்கள் கடுமையான பாதிப்பினை சந்திக்க நேர்ந்திருக்கும். காமராசர் வெற்றிபெற்று இராஜாஜி மூடிய அனைத்துப் பள்ளிகளையும் திறந்ததோடு மேலும் பல பள்ளிகளைத் திறந்து தமிழர்களுக்குக் கல்வியைக் கொடுத்தார்.
பெரியார் காமராசரை ஆதரித்ததை இந்து முன்னணிää ஆர்எஸ்எஸ்ää பிஎம்எஸ்ää பிஜேபி போன்ற அமைப்புக்கள் கேலி செய்கிறதென்றால் அதன் பொருள் என்ன?
எந்த ஒரு சமுதாயத்திற்குக் காலங்காலமாகக் கல்வி அறிவு கொடுக்கக் கூடாது என்று வைத்திருந்தோமோ அந்த சமுதாயம் அவரால் படிப்பறிவு பெற்றுவி;ட்டதே என்கின்ற வயிற்றெரிச்சல்தானே இதற்குக் காரணமாக இருக்க முடியும்?
அவர்களது குருநாதரான திலகர் என்ன சொன்னார்?
~~தொடக்கக் கல்விக்குப்பின் இடைநிலைக் கல்வியைத் தொடர வேண்டாம் என்று தீண்டத் தகாத மக்களுக்குக் திலகர் ஆலோசனை கூறினார். இதன்மூலம் தீண்டத் தகாத மக்களின் ஜாதித் தொழில்களை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பதை நம்பிய திலகர்ää அவர்களுக்கு உயர் கல்வி அளிக்கப்படுவதை எதிர்த்தார்.
அதன் அடிப்படையில்தானே இராஜாஜி குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்?
அவர்களுடைய நோக்கம் மனுதர்மத்தைச் சட்டமாக்க வேண்டும் என்பதுதானே!
சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று சொன்னார் திலகர். இவரது சுயராஜ்யம் மனுதர்மம்தான். மகாராஷ்டிர அரசின் கல்வித்துறை 1994-இல் nவிளியிட்ட சத்தரபதி சாகு- சமூக ஜனநாயகத்தின் தூண் (;; ஊhயவசயியவால ளுயபர –வுhந pடைடயச ழக ளழஉயைட னநஅழஉசயஉல) என்ற நூலில் 363- 364 பக்கங்களில் (‘ழரச டயற ளை ஆயரௌஅசiவாலஇ யனெ pழiவெநன ழரவ வாயவ வாந டயற(அயரௌஅசiவால) ழசனநசள முiபெ வழ யனஅinளைவநச றiவா வாந hநடி ழக டநயசநென pநசளழளெ யனெ டீசயாஅiளெ- ( ளுயஅயபசய டுழமஅயலெய வடையம- ஏழட. ஏஐ- pயபநள 449-500) என்று திலகர் குறிப்பிடுவதாகக் கூறப்பட்டுள்ளது.
அதன் பொருள்
~~நமது சட்டம் மனுஸ்மிருதிதான் என்று கூறிய திலகர்ää கற்றறிந்தவர்கள் மற்றும் பிராமணர்களின் உதவியுடன் அரசன் ஆட்சி நடத்த வேண்டும் என்று இந்த மனுஸ்மிருதிச் சட்டம் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஆயரௌஅசவைi றாiஉh றயள வழ டிந வாந டயற ழக ளுறயசயதலயஇ யுஉஉழசனiபெ வழ வுடையம. ( வுடையம’ள ளிநநஉh யவ லுநழவஅயட ழn 9வா தயn 1917)
சுயராஜ்யத்தின் சட்டமாக மனுஸ்மிருதிதான் இருக்க வேண்டும் என்று திலகர் விரும்பினார். என்பது இதன் பொருள்.
ஐn hளை ளிநநஉh யவ யுவாயni ழn 11வா ழேஎநஅடிநச 1917இ வுடையம ரளநன ளவசழபெ டழபiஉ in னநலெiபெ pழளவைழைn வழ னகைகநசநசெ pசழகநளளழையெட உயளவநள in வாந டநபளைடயவiஎந உழரnஉடை ழக டீழஅடியல Pசநளனைநnஉல”
இந்த மனுதர்மத்தைச் சட்டமாக்க வேண்டும் என்று திலகர் சொன்னதைத்தான் ஆர்எஸ்எஸ் சும் சொல்கிறது. அதனுடைய அரசியல் வடிவம்தான் பிஜேபி. அதனுடைய தொழிற்சங்கம்தான் பிஎம்எஸ். அதனுடைய பலவேறு பிரிவுகள்தான் இந்துமுன்னணிää விசுவ இந்து பரிஷத்ää வித்யார்த்திபரிஷத் போன்ற அமைப்புக்கள் எல்லாம். இவர்கள் எல்லோருடைய நோக்கமும் ஒன்றுதான். அதுதான் மனுதர்மத்தைச் சட்டமாக்கி இராமராஜ்யத்தை அமைப்பது.
இவர்கள் மனுதர்மத்தைச் சட்டமாக ஆக்க வேண்டும் என்பதை மறைமுகத் திட்டமா வைத்திருக்கிறார்களே தவிர வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். அதுவும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அதனை வெளிப்படையாகப் பேசி இயக்கம் நடத்த முடியாது. அந்த அளவிற்கு பெரியார் அவர்களும் அவரது இயக்கமும் தொண்டர்களும் மனுதர்மத்தின் வண்டவாளங்களைத் தோலுறித்துக் காட்டியிருக்கிறோம்.
மனுதர்மம் என்ன சொல்கிறது?
உழைக்கும் மக்களை கீழ்ஜாதியாக்கி சூத்திரர் என்கிறது. அந்த சூத்திரர் ஏழு வகைப்படுவர்.
யுத்தத்தில் ஜெயித்துக்கொண்டு வரப்பட்டவர்ää பக்தியினால் வேலை செய்கிறவன்ää தன்னுடைய தேவடியாள் மகன்ää விலைக்கு வாங்கப்பட்டவன்ää ஒருவனால் கொடுக்கப்பட்டவன்ää குலவழியாக தொன்றுதொட்டு வேலை செய்கிறவன்ää குற்றத்திற்காக வேலை செய்கிறவன்ää என தொழிலாளிகள் ஏழு வகைப்படுவர்
அந்த சூத்திரனிடத்தில் பிராமணன் கூலி கொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம்.
சூத்திரன் பொருள் ஈட்டுவதற்கு உரிமை உடையவன் என்றாலும் குடும்பத்திற்குத் தேவையானதைவிட அதிகமாக ஈட்டக்கூடாது. அவ்வாறு அவன் ஈட்டினால் அவன் வழிபடத்தக்க பிராமணi
உலகிலுள்ள செல்வங்கள் அனைத்தும் பிராமணனுக்கே சொந்தம் என்றும் ஒரு அரசன் புதையல் எடுத்தால் அதில் பாதியை பிராமணருக்குக் கொடுத்து விட்டு மீதியை கஜானாவில் சேர்க்க வேண்டும். ஆனால் ஒரு பிராமணன் புதையல் எடுத்தால் அதை அவனே வைத்துக்கொள்ளலாம். அரசனிடம் தர வேண்டிய அவசியமில்லை.
என்றும் ~அரசன் தினந்தோறும் காலையிலெழுந்து மூன்று வேதமோதினவர்களாயும்ää நீதிசாஸ்திர வித்வான்களாயும் இருக்கிற பிராமணாளை உபசரித்து அவர்கள் சொல்லுகிறபடி நீதி செலுத்த வேண்டும்| என்றும்
~அரசன் நான்காவது யாமத்தில் எழுந்து மலஜல உபாதைகளைத் தீர்த்துக்கொண்டு ஜெபம்ää ஹோமம்ää பிராமண பூஜை இவைகளைச் செய்து பின்பு லட்சணமுள்ள சபைக்குப் போக வேண்டியது| என்றும்
~வழக்கின் உயர்வு தாழ்வு லாபம் நஷ்டம்ää தருமம்- அதர்மம் இவைகளை நன்றாயறிந்து அவரவர் வருணாசிரமத்துக்குத் தக்கபடி வழக்கை விசாரிக்க வேண்டியது|
~அதாவது பிராமணன் கொலை செய்தால் அவனது தலையை மொட்டையடிப்பது தண்டனையாகும். அதனையே சூத்திரன் செய்தால் அவனுக்கு மரணதண்டனை|  என்றும்
~வட்டிக்குக் கடன்கொடுப்போர் பிரமணனுக்கு நூற்றுக்கு இரண்டு வட்டிää சத்திரியனுக்கு மூன்று வட்டிää வைசியனுக்கு நான்குää சூத்திரனுக்கு அய்ந்து வட்டியும் வாங்க வேண்டும்| என்றும்
இந்த வழக்கு விசாரணையை பிராமண குலத்திற் பிறந்து கர்மாநுஷ்டானமில்லாத பிராமணனாயிருந்தாலும் அரசன் செய்ய வேண்டிய விசாரணையைச் செய்யலாம். ஆனால் இதனை சூத்திரன் ஒருபோதுஞ் செய்யலாகாது| என்றும்
~எந்த தேசத்தில் அரசன் செய்ய வேண்டிய தரும விசாரணையை சூத்திரன் செய்கிறானோ அந்த தேசம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே சேற்றிலகப்பட்ட பசுப்போல துன்பப் படும்|என்றும் மனுதர்மம் சொல்கிறது.

~~மனுதர்ம சாஸ்திரம் என்ற பார்ப்பன மேல்ஜாதிக் காரர்களின் கருவியான இதன் நோக்கம் இரண்டு என்று சொல்லலாம். ஒன்று –தங்களை உழைக்காமல் வாழக்கூடிய “மேல்ஜாதிக்காரர்” களாக்கிக்கொண்டு  இந்நாட்டின் சொந்த மக்களை சுயமரியாதைää மானம் இழந்தவர்களாக்கித் தங்களின் நிரந்தர அடிமைகளாக ஆக்கி வைத்திருப்பது. இரண்டாவது இந்த அடிப்படையில் நீதிபரிபாலனம் ஏற்பட்டு விட்டால்ää மக்கள் சமுதாய ஒழுங்குமறையை நிலைநிறுத்தப் பாடுபடும் அமைப்புக்களான அரசாங்கம்ää சட்டம்ää நீதிமன்றங்கள் எல்லாம் தங்ள் ஆதிக்கத்தையும்ää சுகவாழ்வையும் இந்த நாட்டு மக்களின் அடிமைத்தனத்தையும் என்றென்றும் நிரந்தரமாகப் பாதுகாத்துவரும் அமைப்புக்களாகவே இருக்கவே பயன்பட்டுவரும் என்பதுமாகும்.
மூவாயிரம் ஆண்டுகளாக இந்நாட்டில் மனுதர்ம முறையில்தான் நீதிசெலுத்தப்படவேண்டும் என்ற கருத்து பரப்பப்பட்டு “சூத்திர” ராஜாக்கள் பலர் தங்களை “மனுவழிச்செங்கோல் ஓச்சும் மன்னர்கள்” என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்ளும்படிச் செய்துää நமது பிறவி இழிவுக்கு பாதுகாப்பு அரண் அமைத்தனர் பார்ப்பனர்கள்.இராஜாக்கள் ஆட்சிக்குப்பிறகு ஏற்பட்ட வெள்ளைக்கார்கள் ஆட்சியிலும்கூடää சிவில் விவகாரங்களைப் பொறுத்தவரை மனுதர்ம அடிப்படையிலேயே உள்ள “இந்து லா”வையே சட்டமாக வைத்துவிட்டுää கிரிமினல் குற்றச் சட்டத்தை மட்டும் மேல்நாட்டு முறையில் - உண்மை நீதிமுறையில் வைக்க அனுமதித்தனர்.
உலகில் வேறு எந்த நாட்டிலாவது சொந்த நாட்டு மக்களைää உழைக்கும் மக்களைää வேறு இனத்தவர் தங்களது வைப்பாட்டிமக்கள் என்று அழைக்கக் கூடிய அநீதியும்ää அந்த அநீதியின் அடிப்படையிலே அமைந்த சட்டää நீதி அமைப்புக்களும்ää அதைப் பாதுகாக்கும் அரசாங்கமும்ää இவ்வளவு இழிவிருந்தும் அதைப்பற்றிச் சிறிதுகூட இலட்சியம் செய்யாத மானமற்ற சுயநல மக்கள் கூட்டம் எங்காவது உண்டா? தமிழ்ப்பெருமக்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். பிறவி இழிவு ஒழிப்பு என்பதில்தான் நமது உரிமை விடுதலை அடங்கியிருக்கிறது. ஆகவேää அருள்கூர்ந்து ஆழ்ந்து சிந்தித்து இக்கொடுமைகளைக் கண்டு நியாயமான ஆத்திர உணர்ச்சியையும் நெஞ்சம் பதறும் நிலையையும் பெறவேண்டும்|| என்று தந்தை பெரியார் அவர்கள் மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி என்ற நூலின் முன்னுரையில் குறிப்படுகிறார்.
இந்த மனுதர்மத்தின்படி இந்தியாவி;ல் பல மன்னர்களும் ஆட்சிபுரிந்திருக்கிறார்கள்.  தமிழகத்தை ஆண்ட சேர சோழää பாண்டியர்களும்ää பல்லவர்களும்ää நாயக்கர்களும் மனுதர்மத்தின்படிதான் பரிhமணர்களின் ஆலோசனையோடு ஆட்சி செய்து பிராமணர்களுக்கு பொன்னும்ää பொருளும்ää விளைநிலங்களும்ää பல ஊர்களையும் தானமாகக் கொடுத்து மக்களை வறுமைக்கு ஆளாக்கி பிராமணர்களைக் கொழுக்க வைத்துள்ளார்கள்.
மன்னர்களைத் தங்கள் கைப்பாவையாக்கி தாங்கள் சொல்வைதயெல்லாம் வேதவாக்காக நினைக்கும் வண்ணம் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளார்கள் பார்ப்பனர்கள்.
இவர்கள் கூறும் அவதாரபுருஷன் இராமனையே தங்கள் கைப்பாவையாக்கி தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி சூத்திர மக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதற்கு சம்பூக வதைப்படலமே சான்றாகும்.
இவர்கள் கூறும் மனுதர்மத்தில் மன்னன் பிராமணர்களின் ஆலோசனையோடு எந்த வழக்கையும் விசாரித்துத் தீர்ப்பு வழங்கவேண்டும் என்கிறார்கள். ஆனால் மன்னனான இராமனுக்கே இவர்கள் உத்தரவுதான் போடுகிறார்களே தவிர சம்பூகன்மீது குற்றச்சாட்டு வைத்து விசாரித்துத் தீர்ப்பு வழங்கச் சொல்லவில்லை.
~இராமனுடைய ஆட்சியில் பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணமடைந்தானாம். மகனைப் பறிகொடுத்த தந்தை தன் பிள்ளையின் பிணத்தைத் தூக்கிக் கொண்டு இராமனின் அரண்மனையை நோக்கிப்nபுhனான். அரண்மனையில் வாசலில் பிணத்தைக் கிடத்திவிட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு இராமனே காரணம் என்றான். மன்னனின் ஆட்சியில்  படிந்திட்ட பாவந்தான் தன் பிள்ளையின் சாவுக்குக் காரணம் என்றான். அக்குற்றத்தை அறிந்து தண்டிக்காவிட்டால் மன்னன் இராமனே குற்றவாளி என்றான். மனம்போனபடி பழித்தான். சபித்தான். குற்றவாளியைப் பிடித்துத் தண்டித்து தன் மகனைப் பிழைக்கச் செய்யாவிட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டினிப்போர் நடத்தித் தற்கொலை செய்துகாள்வேன் என அச்சுறுத்தினான். அதைக் கேட்டு நாரதன் உட்பட எட்டு ரிஷிகளுடன் இராமன் கலந்தாலோசித்தான். இராமராஜ்யத்தில் யாரோ சூத்திரன் கடவுளைநோக்கி தவம் செய்துகொண்டிருப்பதாகவும் அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நாரதன் சொன்னான். தரும சட்டங்களின்படி பிராமணர்கள் மட்டும் தவம் செய்யலாம். பிராமணர்களுக்கு சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை என்று நாரதன் கூறினான். தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம்ää குற்றம் என்று இராமன் திடமாய் நம்பினான். உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றித் துருவி அக்குற்றவாளியைப் பிடித்துவரப் புறப்பட்டான். இறுதியில் நாட்டின் தெற்கே அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்திலாழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனை நோக்கிப் போனான். அந்தத் தவம் செய்துகொண்டிருப்பவன் சம்பூகன் என்னும் சூத்திரனா? மனித உருவிலேயே மோட்சத்திற்குச் செல்லத் தவம் செய்பவனா? என்றுகூடக் கேட்டறியாமல்ää விசாரணையோää எச்சரிக்கையோää உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவி விட்டான் இராமன். அதே நொடியில் எங்கோ தொலைதூரத்து அயோத்தியில் அகால மரணமடைந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம்.
கடவுள்களெல்லாம் மன்னன் இராமனின் மீது மலர் தூவி மகிழ்ந்தார்களாம். தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்N கஉள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டதைத் தடுத்துää தண்டித்துää சம்பூகனைக் கொலைசெய்த மன்னன் இராமனின் நற்செய்கைக்காக அவர்கள் மகிழ்ந்தார்கள். கடவுள்கள்ää தேவர்கள் எல்லாம் அவனைப் பாராட்டினார்கள். அயோத்தி அரண்மனை வாசலில் பிணமாய்க்கிடந்த பிராமணச் சிறுவனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று கடவுள்களிடம் இராமன் வேண்டினான். ~அந்தப் பிராமணச் சிறுவன் எப்போதோ உயிர்பெற்று எழுந்து விட்டான்| என்று அவர்கள் இராமனுக்குச் சொல்லிவிட்டு மறைந்துபோனார்கள்.|| என்ற அண்ணல் அம்பேத்கர் இராமன் கிருஷ்ணன் பற்றிய புதிர் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
இராமனுடைய நோக்கமாக துளசிதாஸ் இராமாயணத்தில் சொல்லப்படுபவை என்னவென்றால் ~சூத்திரர் அனைவரும் பிராமணர்களைத்தான் கடவுள்களாக வணங்கவேண்டுமே தவிர நேரடியாக கடவுளை வணங்கக் கூடாது|
பிhhமணர்களை யார் வணங்குகிறார்களோ அவர்களைத்தான் தனக்குப் பிடிக்கும் என்றும்ää பிராமணர்களுக்கு எதிரானவர்களை தனக்குப் பிடிக்காது என்றும் இராமன் கூறுகிறான்.
கடவுள் அவதாரமாகிய நானே பிராமணனைத்தான் கடவுளாக வணங்குகிறேன். கடவுளர் அனைவரும் பிராமணர்களை வணங்க வரிசையில் நிற்கிறார்கள|; என்றும் இராமன் கூறுவதாக துளசிதாஸ் இராமாயணம் கூறுகிறது.
இத்தகைய இராம ராஜ்யத்தை அமைத்து மனுதர்மத்தை சட்டமாக்கி பார்ப்பன இராஜ்யத்தை மீண்டும் கொண்டு வருவதே ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புக்களின் நோக்கமாகும்.
அந்த மனுதர்மத்தைப்பற்றிப் பெரமையாகப் பேசுவதற்குக் கூச்சப்படும் ஒரு காலத்தை தந்தை பெரியார் சகாப்தம் உருவாக்கிவிட்டது.
ஆர்எஸ்எஸ் போன்ற சங்பரிவார் அமைப்புக்கள்கூட மனுதர்மத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதை வடக்குப் பக்கத்தில்தான் வைத்துக் கொண்டிருக்கின்றன. திருவாளர் ~சோ| போன்றவர்களே மனுதர்மத்துக்கு முட்டுக்கொடுத்துப் பார்த்து உதட்டைப் பிதுக்கிவிட்டார். இதனால்தான் நாம் வெளியிட்ட ஒவ்வொரு துண்டறிக்கையிலும் உன்னுடைய சட்டம் எது? மனுதர்மமா? அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டமா? என்று கேட்டும் அதற்கு இந்து முன்னணியால் பதில் சொல்ல முடியவில்லை.
நீ அமைக்கப் போகும் இராஜ்யத்தில் பிராமணன்ää வைசியன்ää சத்திரியன்ää சூத்திரன்ää பஞ்சமன் இருப்பானா? அல்லது அனைவரும் சமமாக இருப்பார்களா? பார்ப்பான் இருப்பானா? பறையன் இருப்பானா? அங்கேää கோயிலுக்கு மணியடிப்பது யார்ää தெருக்கூட்டுவது யார்? செருப்புத் தைப்பது யார்? முடிவெட்டுவது யார்? விவசாயம் செய்வது யார்? என்று கேட்டும் அதற்கு பதிலில்லை.
அதேபோல தமிழ் செம்மொழியானால் வீட்டுக்குவீடு பிரியாணி வருமா என்று; கேட்கும் பார்ப்பனப் பத்திரிகைகளின் திமிர்த்தனம் பற்றியும் வாய் திறக்கவில்லை.
மற்ற மதங்களில் கடவுளை நம்பாதவன்தான் நாத்திகன். ஆனால் இந்து மதத்தில் வேதத்தை நம்பாதவன்தான் நாத்திகன். ~நாஸ்திகா வேதநிந்தகா| என்பது வேதம். வேதம் என்ன சொல்கிறது? ~உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது@ கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர்@ மந்திரம் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது@ எனவேää பிராமணர்களே அனைவரும் வணங்கத்தக்க கடவுள்| என்கிறது. அதனால்தான் பிராமணன் கடவுளுக்கும் மேலானவன் என்கிறார் சங்கராச்சாரி. அவர்கள் கடவுளை நம்பினால் எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று அவர்மீது பழியைப் போட்டுவிட்டு பஜனை செய்துகொண்டிருப்பார்கள். அவர்களுடைய கடவுள் என்ன சொல்கிறது? ~எங்கு தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன்| என்று பகவான் கண்ணன் கீதையிலே சொல்வதாக எழுதி வைத்திருக்கிறார்கள். இதை அவர்கள் நம்பினால் கடவுளை அவதாரம் எடுக்கச் சொல்லி அவரிடம்தானே முறையிட வேண்டும்? அதற்காக ஜபம்ää தவம்ää ஹோமம்ää யாகம் எல்லாம் செய்ய வேண்டியதுதானே! அது மாதிரி செய்யவில்லையே! ஏன்?
அதேபோல் ~எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது@ எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்@ எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது@ என்றும் எதைக்கொண்டு வந்தாய்? அதை இழப்பபதற்கு?| என்ற வாசகங்களை தங்கள் இல்லங்களிலும் அலுவலகத்திலும் கடைகளிலும் அச்சடித்துப் பெரிதாக மாட்டியிருப்பார்கள். இழப்பதற்கே எதுவும் இல்லை என்கிறபோது ~இழந்ததை மீட்போம்@ இருப்பதைக் காப்போம|; என்று சொன்னார்களே! அதிலும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைத்தானே இது காட்டுகிறது?
ஆனால் நம் மக்களிடம் இருக்கும் கடவள் நம்பிக்கையை நன்கு பயன்படுத்தி தங்களுடைய திட்டங்களைச் செயல்படுத்த முயற்சிக்கிறார்கள். இவர்களது செயல்திட்டம் மனுதர்மத்தைச் சட்டமாக்கி பிராமணர்கள் தயவுடன் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதுதான். முன்பெல்லாம் எங்கே இருக்கிறது மனுதர்மம்? அது செல்லறித்த ஏடுகளில்தான் இருக்கிறது என்று கதை விட்டார்கள். இப்பொழுது அவர்களது குருநாதரான திலகர்மூலம் அதை அம்பலப்படுத்தியவுடன் அலறுகிறார்கள். கொள்கையைக் கொள்கையால் சந்திக்க வக்கில்லாமல் தனிநபர் விமர்சனத்தில் ஈடுபடுகிறார்கள். விஸ்வகர்மா ஜெயந்தி பற்றி அவர்கள் அளந்த அளப்புக்கெல்லாம் அடுத்த நாளே பதிலடி கொடுத்தும் அதற்கு பதிலளிக்க அவர்களிடம் சரக்கு எதுவுமில்லாததால்தான் ழுNஐழுN என்கிறார்கள். அத்துடன் நம்முடைய துண்டறிக்கைகளை திருட்டுத்தனமாகக் கிழிக்கவும் செய்கிறார்கள்.
இதிலும் பதிவிரதைபோல இந்து முன்னணிக்கும் பிஎம்எஸ்எஸ_க்கும் சம்மந்தமே இல்லைää பிஎம்எஸ்எஸ_க்கும் பிஜேபிக்கும் தொடர்பே இல்லைää ஆர்எஸ்எஸ்ஸா? அப்படியென்றால் என்ன? என்று கேட்கிறார்கள். ஒருவருடைய தொடர்பை அவர் மறைக்கிறார் என்றால் ஒன்று இவர் நல்லவராக இருக்க மாட்டார்@ அல்லது தொடர்புடைய நபர் நல்லவராக இருக்க மாட்டார் என்பதுதான் பொதுவான நியதி. இவர்கள் ஒருவருக்கொருவர் உள்ள உறவை மறைப்பதிலிருந்தே இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது சொல்லாமலே விளங்கும்.
ஆனால் ஒன்று இவர்கள் எல்லோருமே திலகர் பெருமானை உயர்வாகச் சொல்கிறார்கள். திலகர் பெருமான் மனுதர்மத்தைச் சட்டமாக்க வேண்டும@; பிராமணர்கள் ஆலோசனைப்படிதான் ஆட்சி நடக்க வேண்டும் என்கிறார். பிராமணர் ஆலோசனையோடு நடந்த மராட்டியää திருவாங்கூர் சமஸ்தான ஆட்சிகளின் யோக்கியதையை அம்பலப்படுத்திய பிறகும் அதுபோன்ற ஆட்சிதான் வேண்டும் என்று சுயமரியாதையும் மானமும் அறிவுமுள்ள யாராவது ஒத்துக்கொள்ள முடியுமா?
எனவேää பிற்படுத்தப்பட்டää தாழ்த்தப்பட்ட சகோதரர்களே! இவர்கள் பின்னால் நாம் செல்வது நம்முடைய சமுதாயத்தை மீண்டும் படுகுழிக்கே கொண்டு செல்லும். எனவேää இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக