வியாழன், 8 மார்ச், 2018

விவேகானந்தர் - 4




பிஜேபி மத்தியில் ஆட்சி செய்தபோது பள்ளிகளில் சரஸ்வதி வந்தனா பாடச்சொல்லியும் வந்தே மாதரம் பாடச் சொல்லியும் நிர்ப்பந்தம் வந்தது. வந்தே மாதரம் என்பது முஸ்லிம்களைப் பன்றிகள் என்றும் அவர்களை வெட்டுங்கள்

 குத்துங்கள்கொல்லுங்கள் அவர்கள் சொத்துக்களைச் சூறையாடுங்கள் வீடுகளுக்குத் தீ வையுங்கள் என்று கூறிய ஆனந்தமடம் என்ற நாவலில் காளிதேவியைக் குறித்த பாடலாகும். அதனால் அதனை முஸ்லிம்களும் சிறுபான்மையினரும் பாட மறுத்தனர். அதனால் அவர்களுக்கு தேசத்துரோகிகள் என்று பட்டம் கட்டி பழிதூற்றினர் ஆர்எஸ்எஸ் காரர்கள். தமிழக கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன் அவர்கள் கல்வி அமைச்சர் மாநாட்டில் சரசுவதி வந்தனா பாடப்படுவதை எதிர்த்து வெளியேறினார். பாரதமே உயிர்த்தெழு என்ற விவேகானந்தரின் நூலை வழங்கி அத்தகைய மதவெறி ஏற்பட பெல் நிர்வாகமும் வழிவகுத்திருக்கிறது.

பக்கம் எண் 207ல் உள்ள சுதேசமந்திரம் என்ற பகுதி அத்தகைய உணர்வைத் தூண்டக்கூடிய பகுதியாகும்.
~ஓ இந்தியா! உனது பெண்மையின் லட்சியம் சீதை சாவித்திரி தமயந்தி என்பதை மறவாதே! நீ வணங்கும் கடவுள் துறவிகளுக்கெல்லாம் பெருந்துறவி
அனைத்தையும் தியாகம் செய்துவிட்ட உமாபதிசங்கரர் என்பதை மறவாதே! உன் செல்வம்ää உன் வாழ்க்கை இவை புலனின்பத்திற்காக அல்லää உன் தனிப்பட்ட இன்பத்திற்காக அல்ல என்பதை மறவாதே! அன்னையின் பீடத்தில் பலியிடப்படுவதற்கே நீ பிறந்துள்ளாய் என்பதை மறவாதே!

தாழ்ந்த ஜாதியினர் அறிவிலிகள் ஏழைகள் படிக்காதவர்கள் சக்கிலியர்கள் தோட்டிகள் எல்லோரும் உன்னுடைய ரத்தம் உன் சகோதரர்கள் என்பதை மறவாதே! ஓ வீரனே! துணிவுகொள். நான் இந்தியன் ஒவ்வோர் இந்தியனும் என் சகோதரன்| என்று கர்வத்துடன் சொல்.
அறிவற்ற இந்தியன் ஏழை இந்தியன் பிராமண இந்தியன் கீழ்ஜாதி இந்தியன் எல்லோரும் என் சகோதரர்கள் என்று சொல். இடுப்பில் கந்தை மட்டும் கட்டிக்கொண்டு நீயும் உரத்த குரலில் பெருமையாகக் கூறு@ ~இந்தியன் எனது சகோதரன் இந்தியன் எனது வாழ்க்கை இந்தியாவின் தேவதேவியர் எனது தெய்வங்கள். இந்தியச் சமுதாயம் என் குழந்தைப் பருவத்தின் தொட்டில் என் வாலிபப் பருவத்தின் இன்பத் தோட்டம் என் முதிய பருவத்தின் வாரணாசி.
சகோதரா சொல் - ~இந்திய மண்தான் எனது சொர்க்கம். இந்தியாவின் நலன்தான் என்னுடைய நலன். இரவும் பகலும் திரும்பத் திரும்பப் பிரார்த்தனை செய்!

 ~ஓ கௌரி மணாளா ஓ உலகநாயகியே எனக்கு மனிதத்துவத்தைக் கொடு அம்மா என்னுடைய பலவீனத்தைப் போக்கு என் கோழைத் தனத்தைப்போக்கு! என்னை மனிதனாக்கு!|
என்று சுதேசமந்திரம் என்ற பெயரில் பெண்மையின் லட்சியம் சீதை சாவித்திரி தமயந்தி என்றும் நீ வணங்கும் கடவுள் உமாபதி சங்கரர் என்றும் கௌரி மணாளன் என்றும் தேவதேவியர் எனது தெய்வங்கள் என்றும் வருகின்ற மந்திரத்தை முஸ்லிமும் சொல்ல வேண்டுமா? கிறிஸ்தவரும் சொல்ல வேண்டுமா? அப்படிச் சொல்லவில்லை என்றால் அவர்களுக்கு தேசத்துரோகி என்று பட்டம் கட்டுவீர்களா?

  பக்கம் 188ல் இந்துக்கள் வணங்கும் காளிதேவிதான் ஏசுவின் தாய் மேரி என்றும் கூறுகிறார். இதனை கிறிஸ்துவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
ஆர்எஸ்எஸ் காரர்கள் செய்கின்ற வேலையை பெல் நிர்வாகம் செய்வதா?                                                                  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக