வெள்ளி, 16 மார்ச், 2018


தமிழ் மன்றம் என்றால் திருவிளையாடல் புராணம் கந்தபுராணக் குப்பைகள் நிறைந்ததாகத்தான் இருக்கும். அதுபோன்று இம்மன்றம் இருக்கக் கூடாது. தமிழ் படித்திருக்கிறாயா? தமிழில் என்ன படித்திருக்கிறாய் என்றால் திருவிளையாடல் புராணம் அருணாச்சல புராணம் படித்திருக்கிறேன் என்றுதான் சொல்லுவான். காரணம் தமிழில் அவைதான் இருக்கின்றன.
தமிழ் மன்றம் என்றால் அவை போன்ற புத்தகங்களை உள்ளே விடக் கூடாது. நமது தமிழில் நீதிக்கு அறிவுக்குப் புத்தகங்கள் இல்லையே! தமிழ் என்றால் புராணம் கடவுள் கதை இவைகள்தான் நிறைந்திருக்கின்றனவே ஒழிய மனிதனின் அறிவிற்கு வளர்ச்சிக்கு அதில் எதுவும் இல்லையே! இத்தமிழ் மன்றத்தில் உள்ளவர்களும் தமிழ் அறிஞர்களும் இனியாவது தமிழில் இன்றைக்கு வேண்டிய மாதிரி அக்கம் பக்கத்திற்குக் கவர்ச்சி உள்ள மாதிரி ஆக்க வேண்டும்


தந்தை பெரியார்
உண்மை 14.08.1970

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக