வெள்ளி, 16 மார்ச், 2018

ஆவணி அவிட்டம்


கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஆவணி அவிட்டம் என்று ஒன்று வந்தது. அன்றையதினம் சில ஜென்மங்கள் தங்கள் முதுகில் தொங்கும் அழுக்குப் ப10ணூலை மாற்றி நாலணாவுக்கு வேறு நூல் வாங்கி மாற்றிக் கொள்கிறார்கள். இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா? வேதம் புதிது என்று பாரதிராஜா எடுத்த திரைப்படத்தில் ஒரு பிராமணச் சிறுவன் எல்லா பிராமணர்களும் இந்த அழுக்குக் கயிறை மாற்றிக் கொள்கிறார்கள். நானும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பான். அவனை வளர்த்து வரும் பெண்மணி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று இந்தப் பையனுக்குப் பூணூல் மாற்றிவிடுங்க சாமி என்பார். அதற்கு அக்கிரஹாரக் கூட்டம் இந்தப் பையன் பிராமணச் சிறுவனாக இருந்தாலும் இவன் வளர்ந்து வருவது சூத்திராள் வீடாச்சே! அதனால் இந்தப் பையனுக்கு பூணூலை மாற்றி விட மாட்டோம் என்று சொல்லி மறுத்து விடும்.

இப்படி சூத்திராள் இல்லத்தில் வளரும் அக்கிரஹாரத்துப் புள்ளாண்டானுக்கே பூணூல் மாத்தற உரிமையில்லேங்கிறப்போ ஆசாரிää செட்டியார் போன்ற சூத்திராள்லேயே சில பேர் பூணூலை மாத்திக்கிறாங்க! இதெல்லாம் சட்டப்படியும் சாஸ்திரப்படியும் செல்லாது. பூணூல் மாட்டிக்கிட்டதனாலேயே சூத்திராளைக் கோயிலுக்குள்ளே விடமாட்டா. அர்ச்சகர் பயிற்சிபெற்று ஸ்பஷ்டமா மந்திரம் சொன்னாலும் அர்ச்சகராக முடியாது. கல்யாணம் கருமாதி எதுக்கும் அது செல்லாது. பாப்பாத்தி வயித்தில பிறப்பவன் மட்டும்தான் பிராமணன். இதுதான் மனுதர்மம்.
இதையெல்லாம் எதுக்குச் சொல்றோம்னு பார்க்குறீங்களா? இதுக்குத்தான் அரசாங்கமே ஒருநாள் லீவு வி;ட்டது. தற்போது அது மாறிடுத்து. இந்தப் பூணூல் மாத்தறது எதுக்குன்னு யாருக்காவது தெரியுமா? நாங்கதான்யா பிர்மாவோட முகத்திலே பிறந்தவா! நீங்கள்லாம் சூத்திராள் என்று பறை சாற்றத்தான். பூணூல் அணியற வரைக்கும் சாதாரண மனுஷ்யனா இருந்த இந்தப் பையன் பூணூலை நாலணாவுக்கு வாங்கித் தோள்ல போட்டுட்டா இன்னைலேர்ந்து அவா பூதேவா! அதாவது கடவுளுக்குச் சமம். அதனால அவனை இன்னைலேர்ந்து எல்லாரும் சாமின்னுதான் கூப்பிடனும். தெரியறதோ? என்று அறிவிப்பதுதான். பச்சையாச் சொல்லப் போனா பூணூல் என்பது ஜாதிவெறியின் சின்னம்! மனிதரில் இவன் அனைவரையும் விட மேம்பட்டவன் என்பதை அறிவிக்கும் ஆணவத்தின் வெளிப்பாடு!
இன்று புதிதாக முளைத்திருக்கும் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாது. அவர்கள் கண்ணை உறுத்தும் ஒரே விஷயம் இட ஒதுக்கீடுதான். பள்ளிக் கூடத்தில போய் சேரும்போது என்ன ஜாதின்னு கேட்குறான் பாருங்க! அதை எடுத்துட்டா இந்த ஜாதி ஒழிஞ்சிரும் என்பான். அதை எடுத்துட்டா இந்தப் ப10ணூலை எல்லோரும் வெட்டி எரிந்து விடுவார்களா? அல்லது இந்த ஜாதி ஒழிப்பு வீரர்கள்தான் அதில் கைவைக்க முடியுமா? நம்ம ஆட்கள் ஜெயிலுக்குப் போனால் அங்கே அரைஞாண் கயிறையே வெட்டிவிடும் சிறை நிர்வாகம் இந்தப் பூணூல் மீது கைவைக்க முடியாது. அவ்வளவு பவர் இருக்கு இந்தப் ப10ணூலுக்கு!

இன்னும் சிலபேர் பிராமணன் என்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல அது குணத்தின் அடிப்படையில் அமைவதுதான் என்று அதற்கு வியாக்கியானம் செய்வார்கள். அப்படியானால் பார்ப்பானைக் கட்டிக்கிட்ட பாப்பாத்தி வயிற்றில் பிறக்காத யாராவது இதுவரை பிராமணராக மாற்றப்பட்டு இந்த பிராமணர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறார்களா? அல்லது மோசமான நடத்தையுள்ள கம்மனாட்டி கையைப் புடுச்சு இழுத்த சங்கராச்சாரி பிராமணன் இல்லை. அவர் ஒரு சண்டாளன் என்று யாராவது அறிவிச்சிருக்கிறாங்களா?

கர்ப்பக்கிரஹத்தையே கர்ப்பம் உண்டாக்கும் கிரஹமாக மாற்றிய காஞ்சிபுரம் தேவநாதன்கூட நேற்றுக்கு முதல்நாள் பூணூலை மாற்றி தானும் பிராமணன்தான் என்று அறிவித்துக் கொண்டுள்ளானே தவிர இழிவான குணமுள்ள எவனும் பிராமணன் அல்ல என்றோ நல்ல குணமுள்ள வேறு யாரும் பிராமணன் என்றோ அறிவிக்கப்படவில்லை.

கடைசியாக ஒன்று! இந்துத்துவா கும்பலும் ஹிந்து ரிலீஜியன் மேனேஜ்மென்ட்டும் 150வது பிறந்தநாள் கொண்டாடிய விவேகானந்தரே பூணூல் என்பது கோவணம் கட்டி வைக்கும் கயிறு என்று சொல்லி விட்டார். அதனை ஏற்று ஆர்எஸ்எஸ் குடும்பத்திலுள்ள எந்த பிராமணாளாவது அந்தக் கயிற்றை அறுத்து எரிந்துவிட்டாளா? யாராவது இருந்தா சொல்லுங்கோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக