வியாழன், 15 மார்ச், 2018

இந்துத்துவ பாசிசம்


இந்துத்துவ பாசிசம்


இந்தியாவில் பார்ப்பனர்கள் ஒருபோதும் மற்றவர்களை தங்களுக்கு இணையாக வைத்துப் பார்த்ததே இல்லை. தாங்கள் மட்டுமே சுகபோகமாக வாழ வேணடும். தங்களுக்கு மட்டுமே அதிகாரம் இருக்க வேண்டும். மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று கருதக் கூடிய மனோபாவம் கொண்ட சுயநலவாதிகள் பார்ப்பனர்கள்.

தங்களுடைய ஆதிக்கத்துக்கும் சுகபோக வாழ்வுக்கும் ஆபத்து வருகின்றபொழுதெல்லாம் ஏதாவது சதி செய்தோ சூழ்ச்சி செய்தோ தங்களுக்கு எதிராக இருப்பவர்களை ஒழித்து விட்டு தங்கள் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொள்வார்கள்.
இந்த நாட்டை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட சக்கரவர்த்தி அசோகர் பவுத்தப் பேரரசை நிறுவினார். அதில் சாதி இல்லை. ஏற்றத் தாழ்வு இல்லை. ஆண் பெண் பேதம் இல்லை. எல்லோருக்கும் எல்லாம் இருந்தது. பார்ப்பனர்கள் அதனை ஏற்றுக் கொள்ளாமல் அசோகருடைய பேரன் பிருஹதர்தன் என்பவரைக் கொன்று விட்டு புஷ்யமித்திர சுங்கன் என்ற சாமவேதப் பார்ப்பான் தன்னை அரசன் என அறிவித்து மனுதர்மத்தை சட்டமாக்கினான். பவுத்தர்களை கொலை செய்தான். நந்த வம்சம் சமண மதத்தை ஏற்றுக்கொண்டு மக்களை சமமாக நடத்தியது. அதனால் அதன் கடைசி அரசன் தனநந்தனை சூழ்ச்சியால் ஒழித்துக்கட்டி பார்ப்பன ராஜ்யம் உருவாகக் காரணமாக இருந்தவன் சாணக்கியன்.  அரசனுக்கும் மேலே அந்தணன் என்பது அவன் கொள்கை.

அதுபோல தமிழகத்தில் சமணர்கள் மக்களுக்கு கல்வி புகட்டி மருத்துவம் செய்து சேவை செய்தனர். அவர்களை திருஞான சம்மந்தன் என்பவன் பாண்டிய மன்னனைப் பயன்படுத்தி எண்ணாயிரம் சமணர்களைக் கொன்றொழித்து சைவமதத்தைப் புதுப்பித்தான். அதுபோல் தங்களுக்கு எதிராக இருந்த அனைவரையும் ஒழித்துக் கட்டியவர்கள் பார்ப்பனர்கள்.

வெள்ளைக்காரன் இந்த நாட்டிற்கு வந்தபோது தங்கள் ஆதிக்கத்துக்குக் கேடுவராமல் ஆட்சி நடத்தினால் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று ஒப்பந்தம் போட்டு வெள்ளையன் ஆதிக்கம் இந்த நாட்டில் ஏற்பட உதவியவர்கள் பார்ப்பனர்கள். வெள்ளைக்காரன் ஆட்சியைப் பயன்படுத்தி அனைத்துத் துறைகளிலும் தங்கள் ஆதிக்கத்தை தக்க வைத்து பார்ப்பனரல்லாத மக்களின் வாழ்வை அடிமைப்படுத்தியவர்கள் அழித்தொழித்தவர்கள் பார்ப்பனர்கள்.

இன்றைக்கு இந்தியாவில் ஓரளவு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி அறிவுபெற்று உயர்ந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் தந்தை பெரியார்ää அண்ணல் அம்பேத்கர்ää காரல் மார்க்ஸ் ஆகியோரின் சித்தாந்தங்களே காரணம். அதனால்தான் இந்துத்துவவாதிகளுக்கு அவர்கள் மேல் கடுங் கோபம். தங்களது கைகளுக்கு ஆட்சி அதிகாரம் வந்து விட்டால் தங்களது ஆதிக்கத்திற்கு எதிரானவர்களை முற்றிலும் அழித்து ஒழித்து விடுவார்கள். இந்துராஜ்யம் என்று உருவான உடன் அந்த வேலை நிச்சயம் நடக்கும்.

அதனால்தான் அதன் முன்னோட்டமாக இந்தியாவின் பல மாநிலங்களில் சூழ்ச்சி செய்து ஆட்சியைப் பிடித்து அதற்கு அடித்தளம் போடுகிறார்கள். திரிபுராவில் நயவஞ்சகமாக ஆட்சியைப் பிடித்த உடன் அங்கே இருந்த லெனின் சிலையை அகற்றுகிறார்கள். தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை அகற்ற முயற்சிக்கிறார்கள். தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும்; அண்ணல் அம்பேத்கர் சிலையை அவமானப் படுத்துகிறார்கள்.

ஜனநாயக நாடாக இருக்கும்பொழுதே இத்தகைய காலித்தனங்களை அவர்கள் செய்கிறார்கள் என்றால் இந்துராஜ்யம் என்ற ஒன்று வந்தால் எப்படி இருக்கும்? தங்களுக்கு எதிரானவர்களையெல்லாம் கொன்று அழித்து ஒழிப்பார்கள். கல்வி வேலைவாய்ப்புப் பெற்றுள்ள பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் பறிக்கப்படும். பெண்களுக்குக் கிடைத்துள்ள கல்வி உரிமைää சொத்துரிமை போன்றவை பறிக்கப்படும். பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்து ஆடும். அனைத்து அதிகாரங்களிலும் பார்ப்பனர்களே இருப்பார்கள். வருணாசிரம முறைப்படி ஆட்சி நடக்கும். மீண்டும் மக்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்கு அடிமைகளாக ஆக்கப்படுவார்கள்.

பார்ப்பனரல்லாத மக்களே! இந்த நிலை உருவாவதை அனுமதிக்கப் போகிறீர்களா? ஜாதி மதம் கடவுள் சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற பெயரில் மீண்டும் பார்ப்பனராஜ்யம் உருவாக அனுமதிக்கப் போகிறீர்களா? சிந்திப்பீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக