சனி, 10 மார்ச், 2018

சூத்திரப்பய நீ அரசனாக கூடாது

சாகுமகராஜுவிற்கு வருஷாவருஷம் அரச பதவியை புதுப்பிக்க ஐயர் மந்திரம் ஓதுவது வழக்கம். அப்படி ஒருமுறை ஓதும்பொழுது சாகு மகராஜின் நண்பர் ராஜாராம் சாஸ்திரி உடனிருந்தார். திடீரென பார்ப்பான் கழுத்தை பிடித்து ''டேய் என்னடா சொல்றஇ மந்திரத்தை வாழ்த்தி சொல்லாமஇ சபிச்சி சொல்றயே'' என்றார். அதுக்கு பார்ப்பான் ''சூத்திரனுக்கு இப்படித்தான் மந்திரம் சொல்லணும்னு சாஸ்திரம் சொல்லுது''. சாகு கேட்கிறார் நண்பரிடம் ''அப்படி என்னதான் சொல்றான் இவன்''. ''நீ சூத்திரப்பய நீ அரசனாக கூடாது ஆனாலும் ஆயிட்டே. அதனால சீக்கிரம் செத்துப்போ''ன்னு சொல்றான். ''ஏண்டா அப்படி சொல்றே?''. அதுக்கு பார்ப்பான் சொல்றான் ''ஷத்திரியன்தான் ஆட்சி செய்யணும். அதுதான் மனுதர்மம். சூத்திரன் ஆட்சி செய்வது கர்மம். இதுதான் பிரம்மன் சொன்ன மந்திரம்''. ''டேய்பிரம்மன் உனக்கு சம்பளம் குடுக்கல,  நான்தான் கொடுக்கிறேன். வாழ்த்தி சொல்லுடா''. ''முடியாது''. அவனை வேலையை விட்டு நீக்கினார். அந்த காலத்திலேயே வருடம் ரூ.30000ஃ- சம்பளம் அவனுக்கு. இவனுக்கு சப்போர்ட்டுக்கு சங்கராச்சாரியர் முதல் பெரிய பெரிய பார்ப்பானுங்க வந்தாங்க. அதில் முக்கியமானவர் பால கங்காதார திலகர் என்ற பார்ப்பான். ''சுதந்திரம் எனது பிறப்புரிமை'' என முழங்கியவர். இவர் போயி ''ஐயர் சூத்திரனுக்கு சொன்ன மந்திரம் சரிதான். ஐயரை வேலைக்கு சேர்த்தே ஆகணும்'' என பிரிட்டிஷாரிடம் முறையிட்டார். பிரிட்டிஷார் ''கோர்ட்டில் முறையிடுங்கள்'' என்றவுடன் சாகுக்கெதிராய் திலகர் வழக்கு நடந்தது ''ஐயா அரசர் தர்மத்திற்கெதிராய் நடந்தார்'' என்று. வழக்கு தோல்வியாச்சு. ஏன்னா அது பிரிட்டிஷார் சட்டம். மனுதர்மம் அந்த சட்டத்தில் இல்லை. திலகருக்கு பயங்கர ஷாக். முதல்முறையா தோத்ததால ஏனென்று யோசிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக