சனி, 28 ஜனவரி, 2017

நன்றி எதிர்பாராத பெரியார் தொண்டர்னு

வீரமணி என்ன செஞ்சு கிழிச்சாருன்னு ஒரு இளைஞன் கேட்டான்
இன்னைக்கு மத்திய அரசு வேலைக்குOBC ன்னு ஒரு சான்றிதழைக்கொடுத்து வேலைக்குப் போறியே அது யாரு வாங்கிக் கொடுத்த உரிமை தெரியுமான்னேன்
தெரியாதுன்னான்
உங்க அப்பா அம்மா அதுக்காகப் போராடி ஜெயிலுக்குப் போயிருக்காங்களான்னு கேட்டேன்
இல்லேன்னான்
உங்க தாத்தா பாட்டி அதுக்காகப் போராடுனாங்களான்னேன்
அதுக்கும் இல்லேன்னான்.
அதுக்கு யாரு போராடுனதுன்னு தெரியுமான்னேன்
தெரியாதுன்னான்

நீ OBC ன்னு சான்றிதழ் கொடுத்து வேலைக்குப் போறே
உங்க அப்பா அம்மா யாரும் அதுக்காகப் போராடல
ஆனா வீரமணியோட பிள்ளைங்க யாரும் அரசாங்க வேலைக்குப் போகல
அவருதான்யா 42 மாநாடு நடத்தி 16 போரட்டங்கள் நடத்தி ஜெயிலுக்கெல்லாம் போயி இந்த உரிமைய உனக்கு வாங்கிக் குடுத்தாருன்னேன்

அப்பவும் அவன் ஒரு நன்றி கூடச் சொல்லல

என்னா வீரமணி போராடலன்னா இது கெடச்சிருக்காதான்னு எகத்தாளமாக் கேட்டான்
அப்பவும் சொன்னேன்
இந்த நன்றியக் கூட எதிர்பாராமத்தான்யா அவரு போராடுனாருன்னு சொன்னேன்
அவர் நன்றி எதிர்பாராத பெரியார் தொண்டர்னு சொன்னேன்
அப்படியான்னுட்டு அங்க இருந்து நகர்ந்துட்டான்

இதுதான் இன்றைய இளைஞர்களின் நிலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக