திங்கள், 2 ஜனவரி, 2017

viduthalai

2016 ஆம் ஆண்டு


2016 ஆம் ஆண்டு தன் பயணத்தை முடித்து 2017 ஆம் ஆண்டு தன் அடியைப் பதித்துள்ளது. 2016 என்பது தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டதுபோல சோகங்களையும்இ துயரங்களையும் சந்தித்த ஆண்டாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் அ.இ.அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற செல்வி ஜெ.ஜெய லலிதா அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு 75 நாள்கள் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு - மரணத்தைத் தழுவினார்.

அவர் உயிர் பிழைக்க மிகப்பெரிய அளவில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. யாகங்களும்இ வழிபாடுகளும் இதுவரையில் இல்லாத அளவுக்கு நாடெங்கும் நடை பெற்றன. ஆனாலும்இ அவர் உயிர் பிழைக்கவில்லை. இனிமேலாவது இந்த அனுபவத்திலிருந்து பாடம் பெற்றுஇ பக்தி மூடநம்பிக்கையிலிருந்து  அ.இ.அ.தி.மு.க.வினரும்இ அக் கட்சியின் அனுதாபிகளும் மட்டுமன்றிஇ பக்தி செலுத்தினால்  விரும்பியது நடக்கும் என்ற அறியாமை இருளிலிருந்து பக்தர் கள் மீளவேண்டும் என்பது நமது அறிவார்ந்த வேண்டுகோள்.

முதலமைச்சர் மறைந்த நிலையில்இ அடுத்து ஆட்சியைத் தொடரச் செய்வதில் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் சுமுகமாக அமைந்தது வரவேற்கத்தகுந்ததே!

அதேநேரத்தில்இ ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது  உதய் மின் திட்டம்இ உணவுப் பாதுகாப்புத் திட்டம்இ ‘நீட்’ தேர்வு ஆகிய மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில்இ அவர் மறைவைத் தொடர்ந்து அந்த மூன்றிலும் தமிழக ஆளும் தரப்பில் மத்திய அரசின் நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டது கண்டிக்கத் தக்கதாகும்.

செல்வி ஜெயலலிதா அவர்கள் மறைந்த நிலையில்இ மத்திய பி.ஜே.பி. அரசு தன் மூக்கை நுழைத்து அரசியல் லாபம் தேடலாம் என்ற முயற்சியில் ஈடுபடுவது நாகரிகமற்றது.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு ஆளும் தரப்பினை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார்.

திராவிடர் கழகத் தலைவர் சொன்னது மிகவும் சரியானதே என்பது - ஆளும் அ.இ.அ.தி.மு.க.வின் அவைத் தலைவர் திரு.மதுசூதனன் அவர்கள் வெளியிட்ட உண்மையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

தன் சொந்த பலத்தில் கட்சியை வளர்க்க வக்கில்லாத பி.ஜே.பி. ஒரு மரணத்தை முன்வைத்து அரசியல் லாபத்தைத் துய்க்கலாம் என்று கருதுவது அதன் பலகீனத்தையும்இ அரசியல் அநாகரிகத்தையும் தான்வெளிப்படுத்துகிறது.

அதேநேரத்தில்இ எஞ்சியுள்ள நான்கரை ஆண்டு காலத்தில் ஆளும் கட்சியின் பெயருக்கேற்ப அண்ணா வகுத்த கொள்கைகளையும்இ திராவிட இயக்கச் சித்தாந்தங்களையும் மறந்துவிடாமல் மக்கள் நல அரசாக நடத்துவது அவசியமாகும்.

2016 ஆம் ஆண்டின் இறுதியில் வீசிய வார்தா புயல் குறிப்பிட்ட மாவட்டங்களை சின்னாபின்னப்படுத்தி விட் டது. உரிய காலத்தில் வந்து சேதங்களைப் பார்வையிடத் தவறியிருக்கிறது மத்திய அரசு. இந்த நிலையில்இ மாநில அரசு கோரிய தொகையை அளிக்கவேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

மக்கள் நல வளர்ச்சியில் கவனம் செலுத்தாமலும்இ இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மையைத் தூக்கி எறிந்துவிட்டுஇ இந்து மத வெறியோடுஇ கோட்பாட்டோடு மத்திய பி.ஜே.பி. அரசு நடந்துகொள்வது மிகப்பெரிய ஆபத்தான போக்காகும்.

பசுவதை என்ற பெயராலே ஆளும் தரப்பினர் கோரத் தனமான ஆட்டம் போட்டு வருகின்றனர். செத்துப் போன மாட்டின் தோலை உரித்த தாழ்த்தப்பட்டவர்கள் அய்வர் கொல்லப்பட்டதும்இ குளிர்சாதனப் பெட்டியில் பசுக் கறி வைத்திருந்ததாகக் கற்பித்து முசுலிம் பெரியவர் ஒருவரை அடித்துக் கொன்றதெல்லாம் அநாகரிகக் காட்டு விலங்காண்டித்தனத்தின் எல்லையாகும்.

தேசியப் புதியக் கல்விக் கொள்கை என்று கூறிஇ மனுதர் மத்தின் குலக்கல்வித் திட்டத்தை செயல்படுத்தத் துடிக்கிறது மத்திய அரசு. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இது தொடர் பான எதிர்ப்பினை முன்னெடுத்துச் சென்று வருகிறது திராவிடர் கழகம்.

பொருளாதாரத் துறையில் கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லிஇ 500 ரூபாய்இ 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று திடீரென்று அறிவித்த மத்திய பி.ஜே.பி. அரசு ஆப்பதனை அசைத்துவிட்ட மந்தியைப் போல விழிப் பிதுங்கி நிற்கிறது. வெகுமக்களோ தங்களுக்கு உரிமையான பணத்தை வங்கியிலிருந்து எடுப்பதற்கு வீதியில் மணிக்கணக்கில் நின்று தங்களின் நேரத்தையும்இ உழைப்பையும் வீணாக ஆக்கிக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய அரசின் நூற்றுக்கு மேலான அறிவிப்புகள் முன்னுக்குப் பின் முரணாக வெளியாகி தானும் குழம்பிஇ மக்களையும் குழப்பி வருகின்றனர்.

இதுகுறித்து விவாதத்தைச் சந்தித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் வினாக்களுக்கும்இ சந்தேகங்களுக்கும்இ குற்றச்சாட்டு களுக்கும் பதில் அளிக்க முன்வராமல்இ நாடாளுமன்றத்திற்கு வருவதையே தவிர்த்த ஒரே பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற பெயரைச் சம்பாதித்ததுதான் மிச்சம்.

தெருக்களில் மேடைப் போட்டு முழங்கும் பிரதமர்இ மக்கள் பிரதிநிதித்துவ சபையில் பேசத் தயங்குவது  - அச்சத்தைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?

இந்த நிலையில்இ 2017 ஆம் ஆண்டாவதுஇ 2016 ஆம் ஆண்டிலிருந்து பாடங்களைக் கற்றுஇ நாடு நேர் நடைபோடுமா என்று எதிர்பார்க்கிறோம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக