சனி, 7 ஜனவரி, 2017

திருச்சி செல்வேந்திரன் அவர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்

இருந்தாலும் அவர் ஏன் பெரியார் குறித்து இவ்வாறு எழுதியுள்ளார் என்று தெரியவில்லை

திராவிடர் கழகத்தில் இருந்து கோவை இராமகிருட்டிணன் அவர்களும் விடுதலை ராசேந்திரன் போன்றவர்களும் பிரிந்து பெரியார் திராவிடர் கழகம் ஆரம்பிப்பதாகச் சொன்ன நிகழ்வில் கலந்துகொள்வதாகச் சொல்லி விட்டு அங்கு போகாமல் அவர்களையும் ஏமாற்றி விட்டார்

அன்று கலைஞர் அவர்களைச் சந்தித்து திமுகவில் சேர்ந்துவிட்டார்
அப்பொழுது கலைஞர் காலில் அவர் விழுந்ததாகவும் ஒரு சுயமரியாதைக் காரர் இப்படிச் செய்யலாமா என்று கேட்டபோது பெரியாரே குன்றக்குடி அடிகளார் காலில் விழுந்தார் என்ற இந்த நிகழ்வைச் சென்னதாகவும் நான் கேள்விப்பட்டேன்

தங்களுடைய தவறான செயல்களுக்கு பெரிய மனிதர்களைத் துணைக்கு அழைத்து நியாயப் படுத்துவது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக