வியாழன், 1 டிசம்பர், 2016

நிறைய ஆர்டர்கள் குவிந்திருந்தால் இந்தக்கூட்டம் என்ன சொல்லும்? இந்த பகவான்தான் அத்தனை ஆர்டர் வருவதற்கும் காரணமாயிருந்தார் என்று சொல்லியிருக்கும்


மார்ச்சிற்குப்பிறகு இதுவரை ஒரு ஆர்டர் கூட வரவில்லையாம். சிஎம்டி சொல்லிவிட்டாராம். ஒரு சங்கம் ரொம்பவும் புலம்புகிறது. (புலம்பல் மன்னர்கள்) அதுதான் ஏப்ரல் 1ந் தேதி (முட்டாள்கள் தினத்தில்) ஒரு ஆர்டர் வந்ததே! ஒரு கோயிலுக்கு மணி செய்து தருவதற்காக ஒரு இலட்சம் ரூபாய்க்கு ஒரு செக். அதையும் கமர்சியல் ஹோம் பேஜில் பெருமையாகப் போட்டிருந்தார்களே! அப்புறம் ஏன் ஆர்டர் வரவில்லை என்று புலம்ப வேண்டும்?

நிறைய ஆர்டர்கள் குவிந்திருந்தால் இந்தக்கூட்டம் என்ன சொல்லும்? இந்த பகவான்தான் அத்தனை ஆர்டர் வருவதற்கும் காரணமாயிருந்தார் என்று சொல்லியிருக்கும். ஆர்டர் வருவதற்கு அந்த பகவான் காரணம் என்றால் ஆர்டர் வராமல் இருப்பதற்கும் அந்த பகவான்தானே காரணமாக இருக்க வேண்டும்?

இப்பொழுது மட்டும் புலம்புவானேன்?

அடுத்த ஆண்டு முதல் கோயிலிலிருந்து எந்த செக்கும் வேண்டாம்@ ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று சொல்வார்களா?

இதற்கு முன்பும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ந்தேதி ஏதாவது ஒரு கோயிலில் மணிசெய்யவோää தேர் செய்யவோ சக்கரம் செய்யவோ ஒரு லட்சம் ரூபாய்க்கோ இரண்டு லட்சம் ரூபாய்க்கோ ஏதாவது ஒரு ஆர்டர் வாங்குவார்கள். அப்பொழுதெல்லாம் இந்த பகவான்தான் அந்தந்த வருடங்களில் வந்த ஆர்டர்களுக்கு துணைபுரிந்தார் என்று வெட்கமில்லாமல் சொல்லுவார்கள். நம்முடைய அதிகாரிகள் அந்த ஆர்டரை வாங்க என்னென்ன கஷ்டப்பட்டிருப்பார்களோ தெரியாது. ஆனால் கல்லாக உட்கார்ந்திருக்கும் அந்தக் கடவுள்தான் அதற்கு உதவிபுரிந்தார் என்று வியாக்கியானம் செய்வதில் ஒன்றும் குறைச்சலிருக்காது.

அப்படி ஒரு ஆண்டு அய்ந்து லட்சம் ரூபாய்க்கு ஒரு ஆர்டர் வாங்கப்பட்டது. அப்படி வாங்கிய அதிகாரி ஒரு தாழ்த்தப்பட்டவர். அவர் அந்தக் கோயில் நிர்வாகத்திடம் பேசி ஒப்பந்தம் போட்டு ஆர்டர் வாங்கினார். ஆனால் அந்த ஆர்டரை நிர்வாக இயக்குனரிடம் கொடுத்தபோது கையெழுத்துப்போட்ட அதிகாரி மிஸ்ஸிங். அவருக்குக் கீழே உள்ள அதிகாரிகளும் மேலே உள்ள அதிகாரிகளும் சேர்ந்து ஈடி யிடம் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் கையெழுத்துப்போட்ட அந்த அதிகாரிக்கு மட்டும் இது தெரியாது. இதை முதலில் சாதாரணமாக எடுத்துக்கொண்டார் அந்த அதிகாரி. பின்னால்தான் அவருக்குத் தெரிய வந்தது அதனுடைய சூட்சுமம். அந்த ஆர்டரைக் கொடுக்கும் இடத்தில் பிரச்சன்னம் ஆகும் எவருடைய முதுகிலும் பூணூல் இல்லாமல் இருக்கக் கூடாது என்று தி;ட்டமிட்டு இதைச் செய்திருக்கிறார்கள் என்பது. அதன்பிறகு கடுப்பாகிப்போனார் அந்த அதிகாரி.

இப்படி ஒவ்வொரு விசயத்திலும் ஜாதி பார்க்கவும் ஜாதியைக் காக்கவும் செய்யப்படுவதுதான் பூஜையும் புனஸ்காரங்களும். ஒரு எந்திரத்தை புதிதாக நிர்மாணிக்கும்போதோ ஒரு கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டும்போதோ பார்ப்பானை வைத்துப் பூஜை போடப்படுகிறது. இதனாலெல்லாம் எந்த பிரயோசனமும் இருப்பதில்லை.

இது பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனீயத்துக்கும்தான் ஆதாயமே தவிர உற்பத்திக்கோ இலாபத்துக்கோ எந்த பலனையும் கொடுக்கப் போவதில்லை. அதுபோலத்தான் ஆயுதபூஜை என்பதும். ஆயுத பூஜை செய்வதால் கிடைக்காத ஆர்டர் கிடைக்கப் போவதுமில்லை. தொழிலாளிக்கும் எந்த இலாபமும் இருக்கப் போவதில்லை. நிறுவனத்திற்கும் எந்த நன்மையும் நடக்கப்போவதில்லை.
பார்ப்பான் உயர்ந்தவன். மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற தத்துவம்தான் அதில் நிலை நாட்டப்படும். அது தொழிலாளர்களுக்கு மானக்கேடு. அறிவுக்கேடு. எனவேää தொழிலாளர்களே!
ஆயுதபூஜை கொண்டாடாதீர்! அறிவையும் மானத்தையும் இழக்காதீர்!!  இவண் :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக