புதன், 14 டிசம்பர், 2016

சுயமரியாதை உள்ளவனெல்லாம் இங்கே இருக்கப்படாது. தெரியுமா?



தம்பி : அண்ணே! எப்படீண்ணே இருக்கிறீங்க?

அண்ணன் : நான் நல்லா இருக்கேன் தம்பி. நான் சொன்னபடி BMSக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வச்சிட்டீங்க. ரொம்ப மகிழ்ச்சி தம்பி.

எண்ணண்ணே மகிழ்ச்சின்னு சொல்றீங்க. நன்றின்னு சொல்ல மாட்டீங்களா?

நன்றி எல்லாம் சொல்லக் கூடாது தம்பி. நம்ம BMS கூட்டத்துல என்னைக்காவது நன்றின்னு செல்லி இருக்காங்களா? மகிழ்ச்சின்னுதான் சொல்லுவாங்க. அதனாலதான் தம்பி.

நன்றி உணர்ச்சிங்கறது தமிழர் பண்பாடுதானே அண்ணே! நாம ஏன் அதைச் சொல்லக் கூடாது?

தம்பி, நாமெல்லாம் பாரதப் பண்பாட்ட கடைப்பிடிக்கறவங்க. பாரதப் பண்பாட்டில நன்றி உணர்ச்சிக்கெல்லாம் இடமில்லே.

ஆமாண்ணே, இந்தத் தேர்தலுக்கு முன்னே BMS க்கும் BJP, RSS க்கும் தொடர்பு இல்லேன்னு சொன்னீங்கண்ணே! இப்ப BMS காரங்க RSS ஒரு அறிமுகம்னு நோட்டீஸ் போட்டிருக்காங்களேண்ணேää அது எதுக்குண்ணே!

ஆமா தம்பி, அது ஓட்டு வாங்கறதுக்காகச் சொன்னது. இப்பத்தான் ஜெய்ச்சுட்டம்ல. அடுத்த கட்டமா உங்கள RSS ல சேத்தாகனும். RSS ங்கிறது ஒரு தேசபக்த அமைப்பு. சேவை செய்யறதுதான் அதனுடைய ஒரே நோக்கம். அதனால அதைப்பத்தி சின்னப் பிள்ளைங்களான நீங்கள் எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டாமா? அதனாலதான் போட்டிருக்கிறாங்க..

அது சரிண்ணே! RSS அய் காந்தி பாராட்டினாரு, அம்பேத்கர் பாராட்டினாரு அப்படீன்னெல்லாம் போட்டிருக்காங்க! அதுக்கெல்லாம் ஆதாரம் ஏதாச்சும் இருக்காண்ணே!

தம்பி, ஆதாரமெல்லாம் கேட்கக் கூடாது தம்பி. சொன்னா அப்படியே நம்பனும். அவ்வளவுதான்.

அண்ணே! இந்த திக காரன் BMS சுக்கு ஓட்டுப்போட்ட எங்களையெல்லாம் சூத்திரன்னு சொல்லி கேலி பண்ணி நோட்டீஸ் போட்டாண்ணே,அந்த நோட்டீஸ்ல எல்லாம் நானும் நம்ம BMS சகோதரர் ஒருத்தரும் போயி அவனைக் கெட்ட வார்த்தையில திட்டி அந்த நோட்டீஸ்ல கிறுக்கி வச்சிட்டு வந்துட்டோம்ணே

சபாஷ் தம்பி, அப்படித்தான் இருக்கனும். இந்த திக காரன் ஒரு கூமாச. ஒரு பொறம்போக்கு. அட்ரஸ் இல்லாத பய. குடிகாரன். அவன சும்மா விடக்கூடாது.

சரிண்ணே இந்த திககாரன் அதுக்குப் பிறகு இந்துராஜ்யம், இராமராஜ்யம்னு ஒரு நோட்டீஸ் போட்டிருக்காண்ணேää அதுல பிராமணரல்லாத நாமெல்லாம் பிராமணரத்தான் கடவுளா வணங்கனும்னு இராமரே சொல்றதாப் போட்டிருக்காண்ணே! அதப்பத்தி நீங்க என்னண்ணே நெனக்கிறீங்க!

ஆமா, தம்பி, இராமர் சொல்லி இருக்கிறதெல்லாம் உண்மைதான் தம்பி. பிராமணர்கள்தான் இந்த லோகத்தில நமக்கெல்லாம் கடவுள். அதனாலதானே தம்பி நாம அவங்கள சாமின்னு கும்பிடுறோம். அவங்கள வணங்கினாத்தான் நாம மோட்சத்துக்குப் போக முடியும். மோட்சத்துக்கு வழிகாட்டுறதுக்குத்தான் தம்பி நாம சங்கமே வச்சிருக்கிறோம்.

அண்ணே! இந்த உலகத்தில சிறப்பா வாழனும்னு நாங்க ஆசைப்படுறோம். அதுக்கு உதவியா BMS இருக்கும்னுதான் ஓட்டுப் போட்டோம். இப்பப் போயி மோட்சம் நரகம்னெல்லாம் பேசுறீங்க! பார்ப்பான் கால்ல எல்லாம் விழுந்து கும்பிடனும்னு சொல்றிங்க. இதுக்கெல்லாம் எங்க சுயமரியாதை இடம் கொடுக்காதுண்ணே!

என்ன தம்பி பேச்செல்லாம் ஒரு மாதிரியாப் போகுதுää சுயமரியாதை அது இதுன்னெல்லாம் பேசுறே! சுயமரியாதை உள்ளவனெல்லாம் இங்கே இருக்கப்படாது. தெரியுமா?

அப்படியாண்ணே! ரொம்ப நன்றிண்ணே, சுயமரியாதை உள்ளவன் உங்க சங்கத்தில இருக்கப்படாதுன்னா, நானும் உடனே வெளியேறுறேண்ணே!

போடா, போ, தி.க காரன் பேச்சக் கேட்டு பல பேர் வெளியேறிட்டான். அவனெல்லாம் நாசமாத்தான் போவான். நீயும் நாசமாத்தான் போகப்போறே போ.

அண்ணேää நான் நாசமாப் போறேனோ இல்லையோ, சுயமரியாதையோட இருப்பேன் அது போதும்ணே!


இவண்: அனைவரும் சுயமரியாதையுடன் வாழ வழி காட்டும் தி.தொ.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக