வியாழன், 1 டிசம்பர், 2016

நீதிமன்றத் தீர்ப்பு இவர்கள் சொல்லுவதுபோல் அந்த அலுவலகத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

1996க்குப் பிறகு நடந்த மூன்று தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவிய BMSசங்கம் தொடர்ந்து தனது அலவலகத்தைப் பயன்படுத்துவது எப்படி?

2012ல் நிர்வாகத்தால் காலி செய்யப்பட்ட பிறகும் மீண்டும் அந்த அலுவலகத்தை எப்படிப் பெற்றாய்?

நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிருச்சு என்று நிர்வாகமும் நீ போய் ஹைகோர்ட்டக் கேளு என்று மரியாதையா(?)BMSசும் சொன்னது.
ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு இவர்கள் சொல்லுவதுபோல் அந்த அலுவலகத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக பொது இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பவர்களை வெளியேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் 1971 சட்டத்தின்படி அவர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயமில்லை என்று சொல்லிவிட்டு நிர்வாகத்திற்கு அந்த சுதந்திரத்தை வழங்குகிறோம்.

அவர்களுக்கு அலுவலகம் வழங்கலாமா? வேண்டாமா? மேற்படி 1971சட்டத்தின்படி அவர்களை வெளியேற்றலாமா? வேண்டாமா? என்பதை நிர்வாகமே முடிவு செய்துகொள்ளட்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

ஆக தீர்ப்பில் கட்டாயம் அவர்களுக்கு அலுவலகத்தை வழங்க வேண்டும் என்று சொல்லாதபோதும் நிர்வாகம் அவர்களுக்கு அலுவலகத்தைத் திறந்துவிட்டிருக்கிறது என்றால் நிர்வாகமே அவர்கள் மீண்டும் பங்குபெறும் சங்கமாக வருவதற்கு உதவி செய்கிறது என்பதுதான் பொருள்.

எதனைக் காட்டி அல்லது யாரைக் காட்டிக் கொடுத்து BMS சங்கம் இந்த அலுவலகத்தைப் பெற்றது? நிர்வாகத்தின் கைக்கூலி யார்? என்பதைத் தொழிலாளர்களே! தெரிந்துகொள்வீர்! இந்தத் தேர்தலில் தோற்றாலும் அவர்களுக்கே நிர்வாகம் தாரை வார்க்குமா? அல்லது BMSஅலுவலகத்தை மரியாதையாகத் திருப்பிக் கொடுத்து தான் ஒழுக்கமான சங்கம் என்று நிரூபிக்குமா?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக