வியாழன், 1 டிசம்பர், 2016

யார் இந்த சவர்க்கர்?


திடீரென வீர(?) சவர்க்கர் பிறந்தநாள் என்று ஒரு நோட்டீஸ் வந்துள்ளது நேற்றுத்தான் பிறந்ததுபோல. ஏன் இத்தனைநாள் இதுமாதிரி வரவில்லை? நரேந்திர மோடி என்பவரை முன்னிறுத்தி ஆர்எஸ்எஸ் ஆட்சியிலமர்ந்துள்ளதுää அதனால் இத்தனைநாள் வெளிவராத சவர்க்கர் இப்பொழுது வெளிவருகிறார் புற்றிலிருந்து பாம்புää வெளி வருவதைப்போல.

யார் இந்த சவர்க்கர்? காந்தியாரைக் கொன்ற கோட்ஷே என்பவரைத் தயாரித்தவர் இந்த சவர்க்கர் இந்துத்துவா என்னும் கருத்தியலை உருவாக்கியவர் இந்த சவர்;க்கர் இந்துமகாசபா எனும் மதவெறி இயக்கத்தைத் தோற்றுவித்தவர் இந்த சவர்க்கர் காந்தியைக் கொலை செய்வதற்கான வரைபடத்தைத் வரைந்து கொடுத்துவிட்டு பதுங்கிக் கொண்டவர் சவர்க்கர் கொலையைத் திட்டமிட்டுச் சதிவலை பின்னிய குற்றத்திற்கான தண்டனையைப் பெறாமல் தப்பித்துக்கொண்டவர் சவர்க்கர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றாலும் மதவெறி பிடித்த சித்பவன் பார்ப்பனர் மதத்தைப் புனரமைப்பதுä வேதங்களையும் சாத்திரங்களையும் பாதுகாப்பது பார்ப்பனர்களையும் பசுமாடுகளையும் பாதுகாப்பது கடமை என்றவர் சவர்க்கர்.

கடல் கடந்துச்செல்வது சாஸ்திர விரோதம் என்கிறது இந்துமதம். வேதங்களையும் சாஸ்திரங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட சவர்க்கர் கடல்கடந்து இலண்டன் சென்று சட்டம் படிக்கப்போனார். சாஸ்திரத்தை மீறலாமா? ஊருக்குத்தான் உபதேசமோ? படிக்கப் போனவர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டார்.நாசிக் மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் என்பவர்  கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை செய்யத் திட்டம் தீட்டிக் கொடுத்ததுää ஆயுதங்கள் வாங்கிக் கொடுத்தது சவர்க்கர். வழக்கில் வசமாக மாட்டிக் கொண்டதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்களிலேயே இந்தப் பார்ப்பனப்புலி எலியாக மாறிவிட்டது, விடுதலை செய்யுங்கள்ää நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்று கருணைமனு போட்டார் சவர்க்கர். ஆங்கிலேய அரசு கவனிக்கவில்லைää மீண்டும் மனு போட்டார் அந்தமான் சிறையிலிருந்து மாற்றி இந்தியச் சிறையில் போடுங்கள்” என்று மன்றாடினார்.

தன்னை விடுதலை செய்தால்ää தான் என்றென்றும் பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக இருப்பேன”; என்று உறுதிகூறி எழுதினார். ஊதாரியான மகன் தாயின் வீட்டு வாசலுக்கு வருவதுபோல தாயுள்ளம் கொண்ட அரசின் கதவைத் தட்டாமல் தாம் எங்கு போக முடியும்? என்று புலம்பினார். என்னை வெளியே விட்டால் என்னோடு சேர்ந்த பலரை அரசுக்கு ஆதரவாகக் கொண்டு வருவென் என்றும் வாக்குறுதி கூறிக் கடிதம் எழுதினார். மிகவும் கோழைத்தனமாக மன்றாடிக் கெஞ்சிக் கேட்டுக் கடிதம் எழுதினார். இவரா வீரசவர்;க்கர்? மொத்தம் நான்கு கடிதங்கள் எழுதினார். அதன் பயனாக மராட்டிய மாநிலம் ரத்தினகிரி சிறைக்கு மாற்றப்பட்டார்ää பிறகு எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார்.

ரத்தினகிரி மாவட்ட எல்லையைத் தாண்டக்கூடாதுää 5 வருடங்களுக்கு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாதுää பேசக்கூடாதுää எழுதக் கூடாது என்கிற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டு வெளியே வந்தது இந்த விடுதலைப் போராட்ட(?) திலகம்.

இவரைப்பற்றித்தான் இப்பொழுது புதிதாக நோட்டீஸ் வந்துள்ளது. முதல் நோட்டீஸே மதவெறியைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. பல்வேறு மதத்தவர்களும் பல இன மொழிகலாச்சாரங்களைக் கொண்டவர்களும் பணிபுரியும் இந்நிறுவனத்தில் இதுபோன்ற துண்டறிக்கை வருவது மிகவும் ஆபத்தானது. இதனை நிர்வாகம் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் மோசமான பின்விளைவுகள் வருவதற்கு நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரிக்கிறோம். நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? அல்லது வழக்கம்போல் இப்படி ஒட்டுபவர்கள் யாரென்று தெரியாது என்று மழுப்பி ஆர்எஸ்எஸ் கூடாரத்துக்குள் அடங்கிப் போகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக