வியாழன், 1 டிசம்பர், 2016

இந்த பாஷை அவர்களுக்குப் புரியவில்லை போல் தெரிகிறது. வேறு பாஷையில் கேட்டுப் பார்ப்போம் எ


ஆர்எஸ்எஸ் சுக்கும் பிஎம்எஸ் சுக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? பஜேபிக்கும் பிஎம்எஸ் ஸிற்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? உன்னுடைய கொள்கை என்ன? உன்னை இயக்குவது யார்? இலட்சிய சமுதாயம் அமைக்கப் போவதாகக் கூறுகிறாயேää உன்னுடைய அந்த இலட்சிய சமுதாயத்தில் அரசியல் சட்டமாக இருக்கப் போவது மனுதர்மமா?

அம்பேத்கார் எழுதிய அரசியல் சட்டமா? அந்த இலட்சிய சமுதாயத்தில் பார்ப்பான் உயர்ந்தவன், சூத்திரன் தாழ்ந்தவன்ää என்ற வருணாசிரமம் இருக்குமா? இருக்காதா? ஜாதி இருக்குமா? இருக்காதா? பார்ப்பான் இருப்பானா? பறையன் இருப்பானா? முடி வெட்டுவது யார்? துணி வெளுப்பது யார்? கோயிலில் மணி அடிப்பது யார்? அனைத்து ஜாதிக்காரருக்கும் அர்ச்சகர் உரிமை இருக்குமா? இருக்காதா?

அனைவருக்கும் கோயிலில் சென்று வழிபடும் உரிமை இருக்குமா? தமிழில் அர்ச்சனை நடக்குமா? சமஸ்கிருதம் மட்டும் இருக்குமா? அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை இருக்குமா? வேலை வாய்ப்பில் தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு இருக்குமா? இருக்காதா? என்ற கேள்விகளையெல்லாம் பிஎம்எஸ் ஆரம்பித்த காலத்திலிருந்திலிருந்து கொள்கை ரீதியாகவும் அறிவுப்பூர்வமாகவும்ää நாகரிகமாகவும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

பிஎம்எஸ் 1996ல் ஒரே ஒருமுறை விபத்தைப்போல வெற்றி பெற்று அதற்குப்பிறகு எந்தத் தேர்தலிலும் வெற்றிபெற வாய்ப்பே இல்லாதபோது 2002லிருந்து தொடர்ந்து அலுவலகத்தை ஏன் காலி செய்யவில்லை என்று கேட்டு வருகிறோம். எதற்கும் இதுவரை பதிலே சொன்னதில்லை. என்ன காரணம் என்பதும் இதுவரை எங்களுக்கும் புரியவில்லை.

நாங்கள் ஆலோசித்துப்பார்த்ததில் இந்த பாஷை அவர்களுக்குப் புரியவில்லை போல் தெரிகிறது. வேறு பாஷையில் கேட்டுப் பார்ப்போம் என்று முடிவு செய்தோம்.

அவர்களுக்கு என்ன பாஷை புரியும் என்று ஆலோசித்ததில் அவர்களது பழைய துண்டறிக்கைகளை ஆய்வு செய்தோம். கம்யூனிஸ்ட் காரர்களை விமர்சனம் செய்யும்போது        மிகவும் நாகரிகமாக(?) ~திண்ணையில் இருக்கும் கம்யூனிஸ்ட்| என்றும் ~கூட்டிக்கொடுக்கும் கம்யூனிஸ்ட்| என்றும் ~அவுட் ஹவுசில் இருக்கும் கம்யூனிஸ்ட்| என்றும்~உள்ளே சுகம் வெளியே சிணுங்கல்| என்றும் அடுத்தவன் வீட்டு படுக்கையறையை எட்டிப்பார்த்து சுகம் அனுபவிப்பவர்கள் போல் தலைப்பிட்டு அவர்களது விமர்சனம் இருக்கும். அத்துடன் கண்தான ஊக்குவிப்பாளரை புரோக்கர் என்று கூட விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

இதுதான் பாரதப் பண்பாடுபோலும்!
ஓஹோ இவர்களுக்கு இந்த பாஷைதான் தெரியும் போலிருக்கிறது. என்று முடிவுசெய்து  எங்களுக்குப் பிடிக்காத பாஷையில் அவர்களைவிட நாகரிகமாக கேள்வி கேட்டோம். இந்த பாஷை அவர்களுக்குப் புரிந்துவிட்டதுபோலும். உடனே அவர்கள் அதே பாஷையில் எங்களுக்குப் பதில் சொன்னார்கள். அவர்கள் பாஷை கம்யூனிஸ்ட்களுக்குப் புரியாததால் அவர்கள் பிஎம்எஸ் சுக்குப் பதில் சொல்லித் தங்களை அசிங்கப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை போலும்.

எங்களுடைய நண்பர்கள் பிஎம்எஸ் ஸில் உள்ளவர்கள்கூட அவர்களுக்குப் புரியவில்லை என்பதற்காக ஏன் உங்களுக்குப் பிடிக்காத மொழியில் எழுதுகிறீர்கள். நல்ல தமிழில் நாகரிகமாக எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.

இப்பொழுது எங்களுக்குப் பிடித்த நல்ல தமிழில் நாகரிகமாகக் கேட்கிறோம். ஜூன் முப்பதாம் தேதிக்குள் பிஎம்எஸ் தனக்குச் சொந்தமில்லாத அலுவலகத்தைக் காலி செய்ய வேண்டும் என்று நிர்வாகம் கடிதம் கொடுத்திருக்கிறதாம். அதற்குள் பிஎம்எஸ் தனது அலுவலகத்தைக் காலிசெய்து தனக்கும் ஒழுக்கம் இருக்கிறது என்று நிரூபிக்குமா?     மேலே உள்ள கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுமா? சொல்லாதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக