வெள்ளி, 2 டிசம்பர், 2016

பந்தலிலே பாகற்கா பந்தலிலே பாகக்கா போகயில பாத்துக்கலாம் போகயில பாத்துக்கலாம்


    ஒரு இழவு வீட்டிற்கு இரண்டு பெண்மணிகள் துக்கம் விசாரிக்கப் போகிறார்கள். போனவர்கள் கண்களில் அந்த வீட்டில் பாகற்காய் பந்தலில் ஏராளமாய்க் காய்த்துத் தொங்கும் காய்கள் கண்களில் பட்டுவிட்டது.  அதை எப்படியாவது கொண்டுசென்றுவிட வேண்டும் என்று திட்டமிட்ட அவர்கள் இருவரில் ஒருவர் இப்படி ஒப்பாரி வைக்கிறார்

   பந்தலிலே பாகற்கா பந்தலிலே பாகக்கா ஆஹாங்…. என்று. அதற்கு இன்னொரு பெண்மணி    போகயில பாத்துக்கலாம் போகயில பாத்துக்கலாம் ஆஹாங் .. என்று பதிலை ஒப்பாரிமூலம் தெரிவிக்கிறார். இதை இரண்டையும் கவனித்த இழவு வீட்டுக்காரப் பெண்மணி இழவு விழுந்த துக்கத்தையும் மறந்து இப்படி புலம்புகிறார்     அய்யோ நான் விதைக்கல்லோ விட்டிருக்கேன் விதைக்கல்லோ விட்டிருக்கேன் ஆஹ்ஹாங் என்று
அந்த இழவு வீட்டுற்குப் போன பெண்மணிகள் மாதிரியான நிலையில்தான் இப்பொழுது பிஎம்எஸ் இருக்கிறது.

     வெல்டர்ஸ் அசோசியேசன் போராட்டம் நடந்தபோது நிர்வாகம் பங்குபெறும் சங்கங்களையும் வெல்டர்ஸ் அசோசியேசனையும் மோதவிட நினைத்தது. இடையில் சில மனக்கசப்புக்கள் ஏற்பட்டாலும் அதற்குப்பிறகு பங்குபெறும் சங்கங்கள் எடுத்த ஒரு சரியான நிலைப்பாட்டாலும் வெல்டர்ஸ் அசோசியேசனின் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையினாலும் ஒரு சுமுகமான நிலை உருவானது. இடைப்பட்ட நேரத்தில் எல்லோரும் கவலையோடு இந்தப்பிரச்சினையை உற்று நோக்கிக் கொண்டிருந்த  நிலையில் பிஎம்எஸ் ஒரு பிட் போட்டது.
   
அதிலே பிரச்ச்னை நல்லபடியாக முடிய வேண்டும் என்ற நோக்கத்தை விட இழவு வீட்டில் ஆதாயம் தேடும் பேராசைக்காரப் பெண்மணிகள் ஒப்பாரி வைப்பது போலத்தான் இருந்தது. பிரச்சினை என்ன? அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி என்று கூறுவதைவிட பங்குபெறும் சங்கங்கள் துரோகம் செய்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டி அதன்மூலம் அவர்களை ஓரங்கட்டி அதன்மூலம் ஆதாயம் தேட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. 1997ல் வெல்டர்ஸ் அசோசியேசன் போராடியபோது ஏதோ இவர்கள் மட்டுமே பங்குபெறும் சங்கமாக இருந்தது மாதிரியும் மற்றவர்கள் யாருமே இல்லாதது மாதிரியும் இவர்கள் மட்டுமே அதனை முடித்தது மாதிரியும் பிட் போட்டது

புதிய தோழர்களுக்கு அதெல்லாம் தெரியாது என்ற கருத்தில். ஆனால் அப்பொழுது இருந்த நான்கு சங்கங்களும் இணைந்துதான் அந்தப் பிரச்சினையை முடித்தார்களே தவிர பிஎம்எஸ் மட்டும் தனியாக எதையும் சாதிக்கவில்லை. மாறாக அதன் தலைவர் சையத் தாஜூதீன் மதனி என்ற இஸ்லாமியர் இருந்த காரணத்தால் அவரை மட்டம் தட்டும் வேலையில்தான் பிஎம்எஸ் முன்பு தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.

   பிஎம்எஸ்ஸின் ஒவ்வொரு செய்கையும் பந்தலிலே பாகக்காய் பாணியிலே ஆதாயம் தேடும் நோக்கிலேதான் இருக்குமே தவிர தொழிலாளர்களுக்கு நன்மை தரும் எந்த முயற்சியும் அதில் இருக்காது. நிர்வாகத்தின் சர்வாதிகாரப் போக்கையோ துரோகங்களையோ கண்டிப்பதைவிட அல்லது அதனை எதிர்த்துப் போராடத் தொழிலாளர்களைத் தூண்டுவதைவிட தொழிற்சங்கங்களை விமர்சிப்பதன்மூலம் ஆதாயம் தேடுகின்ற புத்திதான் மேலோங்கியிருக்கும்.

அதனால்தான் 2009ல் தானும் மத்திய சங்கமாக இருந்தோம் என்பதைக்கூட மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு ஈட்டிய விடுப்பு விசயத்தில் நிர்வாகம் எடுத்த சர்வாதிகார நடவடிக்கையை எதிர்ப்பதை விடுத்து தனக்கும் அதில் பங்குண்டு என்பதையும் மறந்துவிட்டு மற்ற சங்கங்களையும் மற்ற சங்கத் தலைவர்களையும் சாடுகின்றது. இப்போக்கினைத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. என்றைக்கும் கருவாடு மீனாகவும் போவதில்லை என்று எச்சரிக்கிறோம்.    :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக