வியாழன், 29 டிசம்பர், 2016

பெரியாரியல் பயிலரங்கு

பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக பெரியாரியல் பயிலரங்கு 16-06-2013 அன்று பெல் தொமுச அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பெல்;;;;;; திராவிடர் தொழிலாளர் கழகம் பெல் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெரியாருடைய கருத்துக்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் இது குறித்து நல்ல விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

அதில் ஏராளமான இளைஞர்கள் தாங்களும் கலந்துகொண்டு பயிற்சி பெற விரும்புவதாகத் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தார்கள். எனவேää குறிப்பிட்ட நேரத்திலேயே தோழர்கள் அனைவரும் வந்து தங்கள் பெயர்களைப் பதிவுசெய்து தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள்.

காலை சரியாக 10 மணிக்கு பயிலரங்கத் துவக்க விழா நடைபெற்றது. திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு மு.சேகர் தலைமை உரையாற்றினார். திருச்சி மண்டலத் தலைவர் மானமிகு ஞா.ஆரோக்கியராஜ்ää திருவெறும்பூர் ஒன்றியத்தலைவர் வ.மாரியப்பன்ää ஒன்றியச் செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  திராவிடர் கழக செயலவைத்தலைவர் பயிலரங்கைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

திராவிடர் கழகத் துணைத்தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியாரின் பன்முக ஆற்றல் என்ற தலைப்பில் இளைஞர்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மிக அருமையாக முதல் வகுப்பை நடத்தினார்கள்.

சிறிது நேர தேநீர் இடைவேளைக்குப்பிறகு செயலவைத் தலைவர் மானமிகு அறிவுக்கரசு அவர்கள் வருணமும் வர்க்கமும் என்ற தலைப்பில் ஏராளமான ஆதாரங்களோடு வகுப்பினை எடுத்தார்கள்.

அதனையடுத்து துணைத்தலைவர் அவர்கள் பண்பாட்டுப் படையெடுப்பு என்ற தலைப்பில் தமிழர் அடையாளத்தை பார்ப்பனர் எவ்வாறு சிதைத்தனர் நம்முடைய தமிழர்களின் பண்பாட்டை எப்படிக் கெடுத்தனர் என்பதனை தமிழர்களின் பெயர்கள்ää ஊர்ப்பெயர்கள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி அந்த அடையாளத்தை மீட்டெடுக்க தந்தை பெரியார் இயக்கம் எடுத்து வரும் முயற்சிகளையும் சுட்டிக்காட்டிப் பேசியபோது மாணவர்கள் வியப்பிலாழ்ந்தார்கள்.

பகல் 1.30 மணிக்கு அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டது.

 உணவு இடைவேளைக்குப்பின் 2.30 மணிக்கு செயலவைத்தலைவர் அவர்கள் தொழிலாளரும் பகுத்தறிவும் என்ற தலைபபில் தொழிலாளர்களிடமும் சமுதாயத்திலும் நிலவி வரும் மூட நம்பிக்கைகளையும் அவற்றைக் களைந்து அனைவரும் பகுத்தறிவாளர்களாக மாற வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி பாடம் நடத்தினார்கள்.

அனையடுத்து துணைத்தலைவர் கவிஞர் அவர்கள் ஜாதி மதக் கேடுகள் என்ற தலைப்பில் மிக அருமையாக வகுப்பு எடுத்தார்கள். ஜாதிää தீண்டாமை ஆகியவற்றின் கொடுமைகளையும் மதத்தின் கேடுகளையும் அவற்றை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தையும்ää ஜாதியையும் மதத்தையும் ஒழிக்க தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் மிகப் பெரிய வரலாற்று ஆசிரியர்போல வகுப்பு எடுத்தார்கள்.

பிற்பகல் 4.30 மணிக்கு தேநீர் இடைவேளைக்குப் பிறகு செயலவைத் தலைவர் அவர்கள் தொழிலாளர்க்கான இயக்கங்கள் என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார்கள். இந்தியாவில் தொழிலாளர்களின் நிலையையும் தொழிற்சங்கங்கள் தோன்றிய வரலாற்றையும் மும்பையில் டோக்கன் வாங்க வரிசையில் நிற்காமல் முண்டியடித்துச் சென்றபோது தங்களுடைய சாப்பாட்டு மூட்டையை தீண்டத்தகாதவர்கள் தொட்டுவிட்டார்கள் என்பதற்காகத்தான் முதல் வேலை நிறுத்தம் நடைபெற்றது என்பதனையும் அகில இ;திய தெரிற்சங்க காங்கிரஸ்ää அதிலிருந்து உடைத்து காங்கிரஸ் இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கிய வரலாறுää சிங்காரவேலர்ää ஜீவா போன்றவர்களின் வரலாறுகளையும் தந்தை பெரியார் நாகை ரயில்வே ஊழியர் போராட்டத்தை ஆதரித்தது முதல் மேதினத்தைக் கொண்டாடிய வரலாறுää இரயில்வேயில் தென் இந்திய இரயில்வே தொழிற்சங்கத்தைத் துவக்கிய வரலாறு ஆகியவற்றையும் எடுத்துச் சொல்லி உண்மையான தொழிற்சங்கவாதிகள் யார் என்பதையும் உண்மையான கம்ய10னிஸ்ட்கள் நாம்தான் என்பதையும் வரலாற்று ஆதாரங்களைக் காட்டி வகுப்பெடுத்தார்கள்.

மாலை 5.30 மணிக்கு தேநீர் இடைவேளை முடிந்த உடன் கேள்வி பதில் நேரம் துவங்கியது. அதில் இளைஞர்கள் தொடுத்த வினா மிகவும் சமூகப்பொறுப்புடனும் சமுதாய மாற்றத்தை நோக்கியதாகவும் இருந்தது. ஜாதிää தீண்டாமை தொடர்பாகவும்ää சமூகநீதி தொடர்பாகவும் பெண்ணடிமை ஒழிப்புக் குறித்தும் பலகேள்விகள் தொடுக்கப்பட்டன.

துணைத்தலைவர் அவர்களும்ää செயலவைத் தலைவர் அவர்களும் அக்கேள்விகளுக்கெல்லாம் சுவைபடவும் அறிவுப்ப10ர்வமாகவும் ஆதாரப் பூர்வமாகவம் விடையளித்தார்கள். அந்த விடைகளால் இளைஞர்கள் அனைவரும் திருப்தி அடைந்து மனநிறைவுற்றார்கள். இதற்கு மேலும் உங்களுக்கு அய்யங்கள் எழுமேயானால் எங்களுக்கு எழுதுங்கள். தாராளமாக விடையளிக்கிறோம் என்று கவீஞர் அவர்களும் செயலவைத் தலைவர் அவர்களும் உறுதியளித்தார்கள்.

பயிலரங்கில் 54 இளைஞர்கள் கலந்துகொண்டார்கள். பயிற்சி நிறைவில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்கள் சார்பாக தோழர் சண்முகம் கவிஞர் அவர்களுக்கும்ää செயலவைத் தலைவர் அவர்களுக்கும் பயனாடையும் கேடயமும் வழங்கினார். பயிற்சிக்கான களத்தினை உருவாக்கிக் கொடுத்த பெல் திதொக செயலாளர் ம.ஆறுமுகம் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

பயிலரங்கு நிறைவடைந்த உடன் 24-06-2013 அன்று பணி ஓய்வு பெற உள்ள பெல் திதொக தலைவர் மானமிகு க.வெ.சுப்பிரமணியன் அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. மாவட்ட தி.க தலைவர் மு.சேகர் தலைமையேற்றார். திருச்சி மண்டலத்தலைவர் ஆரோக்கியராஜ் திருவெறும்ப10ர் ஒன்றியத்தலைவர் வ.மாரியப்பன் ஒன்றியச் செயலாளர் இரா. தமிழ்ச்சுடர் ஆகியோர் முன்னிலை வகி;த்தனர். பெல் திதொக செயலாளர் ம.ஆறுமுகம் க.வெ.சுப்பிரமணியன் அவர்களின் தொண்டினையும் அவர் ஏற்ற பொறுப்புக்கள் செய்த பணிகள் ஆகியவற்றைத் தொகுத்து வழங்கி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் க.வெ.சுப்பிரமணியன் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டுரை வழங்கினார். திராவிடர் கழகத் துணைத்தலைவர் ஆடையணிவித்து வாழ்த்திப் பேசினார். ஒன்றிய திராவிடர் கழகத்தலைவர் வ.மாரியப்பன் நன்றியுரையாற்றினார்.

பயிலரங்கத்திலும் பணி ஓய்வு பாராட்டு விழாவிலும் பகுத்தறிவாளர் கழக மாவட்ட முன்னாள் செயலாளர் சி.மேகநாதன்ää பெல் திதொக முன்னாள் தலைவர் சி.பிச்சைமணிää காட்டூர் பக தோழர் சங்கிலிமுத்துää காட்டூர் கிளை செலாளர் சிவானந்தனää துவாக்குடி நகரத்தலைவர் விடுதலை கிருஷ்ணன்ää நகரச் செயலாளர் ஆ.இராமலிங்கம்ää கவிஞர் இனியன்ää தி.தொக பொருளாளர் தாமஸ்ää தி.தொக தாமோதரன்ää திரு தமிழரசன்ää பாலகங்காதரன்ää திருவேங்கடநகர் கணேசன் விடுதலை செய்தியாளர் மா.செந்தமிழினியன்ää அமைப்புசாரா திராவிடர் தொழிற்சங்கத்தலைவர் திராவிடன் கார்த்திக்ää செல்வக்குமார்ää ஜோ.பி.சேவியர்ää காட்டூர் கனகராசு உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்துகொண்டார்கள். பயிற்சியாளர்களுக்கு உணவு தேநீர் ஆகிவற்றை வழங்கும் பொறுப்பை மானமிகு பூபாலன்ää தோழர் மேகநாதன்ää தோழர் சி.பிச்சைமணிää தோழர் ம.சங்கிலிமுத்து கவிஞர் இனியன் ஆகியோர் ஏற்றுக்கொண்டு சுவையான உணவும் தேநீரும் வழங்கினார்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக