செவ்வாய், 18 அக்டோபர், 2016

ஒரு சொல் கூடத் தமிழ் இல்லை. எல்லாம் வடமொழியே. இதுதான் தமிழனின் ஆண்டுகளாம்.



 பிரபவ, விபவ,சுக்கில,பிரமோதூத, பிரஜோர்பதி, ஆங்கீரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது ... குரோதன, அட்சய என்று அறுபது பெயர்கள். இவற்றில் ஒரு சொல் கூடத் தமிழ் இல்லை. எல்லாம் வடமொழியே. இதுதான் தமிழனின் ஆண்டுகளாம்.

தமிழன் தன்னுடைய சுயத்தை இழந்து ஆரியத்துக்கு அடிமையானதற்கு இதைவிட நல்ல எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது.

 பெயர் இருக்கட்டும்@ இது எப்படி வந்தது? இவையனைத்தும் நாரதனுக்கும் கிருஷ்ணனுக்கும் பிறந்த பிள்ளைகளின் பெயர்களாம். அதாவது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவர்கள். ஆணும் ஆணும் கூடினால் பிள்ளை பிறக்குமா? எய்ட்ஸ்தான் வரும்.
 எப்படி அவர்கள் பிறந்தார்கள்? கிருஷ்ணன் கோகுலத்தில் உள்ள 60000 பெண்களையும் கூடிக்குலவிக்கொண்டிருந்தானாம். அவர்கள் அத்தனை பேருக்கும் புருஷன்களும் உண்டு. அதையும் மீறி அப்பெண்கள் கண்ணன் மேலே வெறியாக இருந்தார்களாம். இதைப் பார்த்துப் பொறாமையாக இருந்ததாம் இரண்டுங்கெட்டானாக இருந்த நாரதனுக்கு.

 கண்ணா, கண்ணா, அறுபதினாயிரம் பேரோடு சல்லாபமாய் இன்பம் அனுபவிக்கிறாயே , அதில் எனக்கொருத்தியைக் கொஞ்ச நேரம் லீசுக்குத் தரக் கூடாதா? என்று ஏக்கமாகக் கேட்டானாம் ~T | போர்டு வண்டியை வாடகைக்குக் கேட்பது மாதிரி. கண்ணனும் தாராளமாய் ஒருத்தியை எடுத்துக்கோää ஆனா ஒரு கண்டிஷன், நான் எந்த வீட்டில் இல்லையோ அந்த வீட்டுப் பெண்ணை அனுபவித்துக்கொள் என்றானாம். அவனுக்கென்ன நட்டம்? அவனே அடுத்தவன் பட்டாவில்தானே அனுபவிக்கிறான். அதனால் தாராள மனசு.

 ~அய் ஜாலி | என்று நாரதன் ஒரு கோபியரின் வீட்டுக்கு ஓடுகிறான். அங்கே கண்ணனின் காம லீலை. ஒப்பந்தப்படி அந்த வீட்டுக்குப் போகக் கூடாதல்லவா? அடுத்த வீட்டுக்கு ஓடுகிறான். அங்கேயும் கண்ணனின் மோகச் சத்தம். அடுத்தவனுக்குச் சத்தம் கேட்பது மாதிரியா லீலை செய்வார்? மனிதன் செய்தால் சீ அசிங்கம் என்பார். அவன் பகவானாயிற்றே .. அதனால் தாராளமாகச் செய்யலாம் போலும்.
 இப்படியே அறுபதினாயிரம் கோபியர் வீட்டுக்கு ஓடினாலும் எல்லா வீட்டிலும் கண்ணனின் முத்தச் சத்தம். அர்த்தமுள்ள இந்துமதத்தில் ஏராளமாய் விஞ்ஞான அற்புதங்கள் இருப்பதாய்க் கதைப்போர் ~அப்பொழுதே டேப் ரெக்கார்டர் இருந்திருக்கும். அதில் கண்ணனின் குரல் பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பாகி இருக்கும்| என்று கதை விட்டாலும் விடுவார்கள்.

 இப்படி ஓடிஓடிக் கடைசியில் களைத்துப் போனானாம் நாரதன். இருந்தாலும் அவன் காமவேட்கைக்கு களைப்பு இல்லை.

 ~என்ன கண்ணா இப்படிச் செய்து விட்டாய். விரகதாபம் என்னைக் கொல்கிறதே! அதை எப்படி நான் தணிப்பேன். சும்மா இருந்தவனுக்கு ஆசையைத் தூண்டிவிட்டு இப்படி சோதிக்கிறாயே இது உனக்கு நியாயமா? | என்று கேட்டானாம்.

 உன் விரகதாபம் தீரவேண்டும். அவ்வளவுதானே! நீ பெண்ணாக மாறு, உன் விரகதாபத்தை நான் தீர்க்கிறேன் என்று பெண்ணாக மாற வைத்து அறுபதினாயிரம் பேருடன் சல்லாபம் செய்தும் சளைக்காமல் மேலும் எனர்ஜியுடன் நாரதனைப் புணர்ந்தானாம்.ரிஷிப்பிண்டம் இராத்தங்காதாம். அதனால் உடனே அறுபது பிள்ளைகள் பிறந்ததாம். யார் பிரசவம் பார்த்தார்களோ தெரியாது..
 அந்தப் பிள்ளைகளின் பெயர்கள்தான் பிரபவ முதல் அட்சய வரைக்கும் உள்ளவையாம். அதுதான் தமிழனின் ஆண்டுக்குப் பெயர்களாம்.

 இந்த அசிங்கத்தை மாற்றி தமிழனின் பெருமைக்கு எடுத்துக்காட்டான திருவள்ளுவர் பிறந்தநாளை தமிழனுக்கு ஆண்டாய் அறிவிக்க 500 தமிழறிஞர்கள் 1921 லேயே அரசுக்கு வேண்டுகோள் வைத்தனர். தமிழாய்ந்த தமிழ்மகன்ää தன்மானத்தலைவர் கலைஞர் இப்பொழுது அதனைச் செயல்படுத்தி இருக்கிறார்.

பிரபவ, விபவ என்பவை வழக்கத்தில் வந்துவிட்டதாம். இதை எப்படி மாற்றலாம் என்று அக்கிரகாரவாசிகள் துடிப்பதில் அர்த்தம் உண்டு. ஆரிய அடிமைகளும் வெடிக்கிறார்களே! மானங்கெட்டதுகள்! இந்தத் துடிப்புகளும் வெடிப்புகளும் கலைஞரின் தன்மான உணர்வுக்கு முன் தூள்தூளாகும்.

  எனவே, அவரை தமிழினத்தலைவரே, முத்தமிழறிஞரே, செந்தமிழின் சீர்மைபோல வாழிய நீ பல்லாண்டு!! என வாழ்த்துவோம், வணங்குவோம்!

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக