வியாழன், 13 அக்டோபர், 2016

இவரல்லவோ தமிழர் தலைவர்



இவரல்லவோ தமிழர் தலைவர்       
இவர்தானே நமக்கும் தலைவர்                                               
இவர் இயங்குவது தமிழருக்காய்      
இவர் பேசுவது தமிழருக்காய்              
 அவருக்குப் பெயர் ஆசிரியர்      
அறிவுச் சுடரேந்தும் ஆசிரியர்              
அவருக்கும் நமக்கும் ஒரே தலைவர்    
அவர்தானே தந்தை பெரியார்!

 சமூக நீதிப் போராளிகள்         
சமூக நீதிக் காவலர்கள்     
சமூகத்தில் பல பேருண்டு        
 சமூகம் என்பது அவர்களுக்கு    
சமூகத்தைப் பிளவு படுத்தும்        
சாதி என்னும் சதிதானே!     
 சமூகத்தை ஒன்று படுத்தும்         
ஒரேதலைவர் நம் தலைவர்தானே!

 மண்டல் அறிக்கை அவரின்கொடை     
 மண்ணுலகில் அவர்போல் எவருமில்லை    
மண்டலுக்காய் அவர் நடந்தநடை        
எவரும் இங்கு நடந்ததில்லை    
 மண்டலை மண்ணுக்கு அனுப்பு        
மனுதர்மக் கூட்டத்தின் மனக்கொதிப்பு   
 மண்டலை உடன் அமுல்படுத்து       
 மாமணி வீரமணியின் எழுச்சிமுரசு!

அறுபது வயதுகூட நிரம்பவில்லை        
அறுபத்தொன்பது சதத்துக்கு ஆபத்து    
அறிவாசான் பெரியாரின் வழிநின்று       
ஆரியத்தை வேரறுத்தார் வீரமணி     
அரசியல் சட்டத்தின் முதல்திருத்தம்       
அறிவுச்சுடர் பெரியாரின் அருட்கொடையே!   
அறுபத்தொன்பது சதவிகித ஒதுக்கீடு       
ஆசிரியர் வீரமணியின் பெருங்கொடையே!

சாதியைக் காப்பாற்ற சங்கமுண்டு        
சதிமதத்தைக் காப்பாற்ற அமைப்புமுண்டு    
சாதியையும் சதிசெய்யும் மதத்தினையும்       
சாய்த்திட வந்தவர் நம்தலைவர்     
வீதிக்கு வந்துவிட்ட சாதிப்பாம்பை        
விரட்டிடவே புறப்பட்டார் வீரமணி      
ஆதிக்க வாதிகளின் அழிம்புகளை       
அழித்திட அவர்வழியில் நடந்திடுவோம்!              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக