புதன், 12 அக்டோபர், 2016

கெணத்தக்காணோம்!



குஜராத்தில தேனாறும் பாலாறும் ஓடுது! வளர்ச்சி! வளர்ச்சி!! அபார வளர்ச்சி! நம்ம மோடி தெறமையாலே எல்லாம் வளந்துருச்சு. அந்த வளர்ச்சி இந்தியா பூராவுக்கும் வேண்டாமா? அதனால போடுங்கம்மா ஓட்டு! தாமர சின்னத்தப்பாத்து ன்னு பறந்து பறந்து ஓட்டுக் கேட்டாங்க! குஜராத் எங்க இருக்குதுன்னே தெரியாத நம்ம ஆளுகளும் இருக்கும்! இருக்கும்!! வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான் என்று நம்பி குத்தோ குத்துன்னு குத்தி நம்ம மோடிய பிரமதமரா ஆக்கிட்டாங்க! இன்னும் அஞ்சு வருஷத்துல நம்ம இந்தியாவ ஒலகத்துலயே நம்பர் ஒன் நாடா ஆக்கிப்புடுவாருன்னு நம்பறவங்களும் இன்னமும் இருக்கத்தான் செய்யிறாங்க!

அப்படி நம்பர் ஒன்னா ஆக்கப்போறேன்னு வந்தவரு ஆட்சியில என்னென்ன வளர்ச்சித் திட்டங்கள் நடக்குது தெரியுமா?

கங்கை நதியைச் சுத்தம் பண்ணனுமின்னு பல ஆயிரம் கோடிய ஒதுக்கியிருக்கிறாங்க. ஏற்கனவே காங்கிரஸ் கவர்மென்ட் இதுக்கு நாலாயிரம் கோடி ஒதுக்கி அந்த நாத்தம் புடிச்ச நதிய நம்மால சுத்தம் பண்ண முடியாதுன்னு கை கழுவி விட்ட திட்டம்தான் இது. இதுக்குத்தான் நம்ம மோடி இப்ப முன்னுரிமை கொடுக்கிறாரு. அதுக்கு எப்படியெல்லாம் பணம் தெரட்டுறாரு பாத்தீங்களா?
ஒபாமா நம்ம நாட்டுக்கு வந்தப்ப மோடி போட்டிருந்தாருல்ல ஒரு டிரஸ்சு. அதுகூட லண்டன்ல தைச்சதுன்னு முதல்ல சொன்னாங்க. அப்பறம் இல்ல இல்ல இந்தியாவுலதான் தெச்சதுன்னு சொன்னாங்க. அந்த டிரஸ்ஸ ஏலத்துல விட்டு அது நாலு கோடி ரூபாய்க்கு மேல ஏலம் போச்சு. அந்தப் பணத்தக்கூட கங்கைய சுத்தம் பண்ண மோடி ஒதுக்கிட்டாரு. நம்ம நாட்டுப் புனித நதியக் காப்பதில மோடிக்கு அப்படி ஒரு ஆர்வம்.

அடுத்து இந்த கவர்மென்ட் இன்னொரு திட்டத்துக்கும் பணம் ஒதுக்கியிருக்கிறாங்க. என்ன திட்டம் தெரியுமா? சரஸ்வதி ன்னு ஒரு நதி இருந்துச்சு. அதைக் கண்டு பிடிக்கனும்னு பல  கோடி ஒதுக்கியிருக்கிறாங்க! ஏற்கனவே உமா பாரதி மந்திரியா இருந்தப்ப இதே திட்டத்துக்கு நூறு கோடி ரூபா ஒதுக்கிச்சு. அந்த நூறு கோடி என்ன ஆச்சுன்னு தெரியலே. எல்லாப் பாப்பானும் ஒக்காந்து சரஸ்வதி நதியத் தேடுறேன்னு சொல்லி தின்னே தீத்துப்புட்டானுக!

அந்த நதி இருந்ததுக்கு என்னய்யா ஆதாரம் னு கேட்டா ஒரு படத்துல நம்ம வடிவேலு சொன்ன மாதிரி ~கெணத்தக் காணோம் சார்! கெணத்தக்க காணோம்! வட்டக்கேணி சார்! அது வெட்டுனதுக்கு ரசீது கூட வச்சிருக்கேன் சார். அதக் கண்டு பிடிச்சுக் குடுங்க சார்| னு கம்ப்ளயின்ட் பண்ணுவாருல்ல அது போல சரஸ்வதி நதி இருந்ததுக்கு நம்ம புராணங்களில ஆதாரம் இருக்குதுன்னு சொல்லி அந்தப் புராண இதிகாசக் குப்பையை எல்லாம் தேடுறதுக்குத்தான் இப்ப பல கோடி ஒதுக்கியிருக்கிறாங்க!
கங்காää யமுனாää சரஸ்வதி மூனு நதியும் கூடுற இடம் திரிவேணி சங்கமும் னு புராணங்கள் சொல்றதால இல்லாத சரஸ்வதியைத் தேடுறதுக்கு நிதி ஒதுக்கியிருக்கிறாங்க. அதோட அவங்க நிறுத்திறக் கூடாதுன்னு அவங்கள வேண்டிக்கிறோம். ஏன்னா புராணத்தில இன்னும் பல அரிய விசயங்களும் புதைஞ்சு கிடக்குது. அதுல ஒன்னு திருப்பாற்கடல். நம்ம பக்தர்களெல்லாம் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே சிறீமன் நாராயணா ன்னு திருப்பள்ளி எழுச்சி பாடுறாங்க. அப்ப கடல் முழுக்க பால் நெரம்பி இருக்குதுன்னுதானே அர்த்தம். அந்த திருப்பாற்கடலைக் கண்டு பிடிச்சாங்கன்னா நம்ம நாட்டுப் பால் பிரச்சினையும் தீந்துரும். உலக நாட்டுக்கே நாம பால் சப்ளை செய்யலாம்.

அடுத்து அந்தத் திருப்பாற்கடலை மேரு மலையை மத்தாகவும் ஆதிசேஷன் என்கிற பாம்பை கயிறாகவம் பயன்படுத்தி கடைஞ்சதிலே தேவாமிர்தம் கெடைச்சுதாம். அதனை சாப்பிட்ட தேவர்களுக்கு இறப்பே கிடையாதாம். அவங்களையும் கண்டுபிடிக்க பிஜேபி கவர்மென்ட் நிதி ஒதுக்கலாம். அவங்க தேவ லோகத்தில குடியிருக்கிறதா புராணங்கள் சொல்லுது. அந்த தேவலோகத்தையும் கண்டுபிடிச்சா இந்த பூலோகத்துக்கு இன்னும் நல்லது. நம்ம அரசாங்கத்துக்கிட்ட போயி மனு குடுத்துக் காத்திருக்கிறத விட நேரடியா அந்தந்த டிபார்ட்மென்ட் கடவுள்கிட்டயே மனு குடுத்தா நேரடியா பரிகாரம் கிடைக்கும் இல்லையா?

அத்தோட மறுபடியும் அந்த பால்கடலைக் கடைஞ்சு தேவாமிர்தம் எடுத்து பிஜேபி யில சேர்றவங்க எல்லாத்துக்கும் கொடுத்தா அவங்களுக்கு சாவே வராது. நம்ம மோடிஜிதான் நம்ம நாட்டோட நிரந்தர பிரைம் மினிஸ்டர். நம்ம தமிழிசை அக்கா இன்னமும் நல்லா சவுண்டு குடுப்பாங்க. எச்ச ராஜாவுக்கும் சீரங்கத்து அம்பிக்கெல்லாம் வேலை ரொம்பக் கொறஞ்சிடும்.

அப்பறம் நம்ம லட்சுமி தேவி நேரா வந்தா செல்வம் கொழிக்கும். சரஸ்வதி வந்தா கல்வி பெருகும். குபேரனக் கண்டுபிடிச்சா நாம உலக வங்கியில போயி கடன் வாங்க வேண்டியதில்லை. திருப்பதி வெங்கடாஜலபதிக்கே கடன் குடுத்தவராச்சே. கடன் குடுத்துட்டு இதுவரைக்கும் வட்டிகூட வாங்கிக்காம இருக்கிறாரு. அவரப்போல தேவர்கள் இங்க வந்தா உலக நாடுகள் பூரா நம்மகிட்ட வந்து பிச்சை கேப்பானுக பிச்சைக்கார நாய்ங்க. அதுக்கெல்லாம் ஏற்பாடு செய்வாரா மோடிஜி?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக