செவ்வாய், 25 அக்டோபர், 2016

சேது சமுத்திரக்கால்வாய்த்திட்டத்துக்காக ராமன் பாலத்தை இடித்தால் கடல் பகுதியில் எரிமலை வெடித்துக்கிளம்பும் என்று ஓய்வுபெற்ற புவியியல் நிபுணர் கூறியிருப்பதாகக் கூறியுள்ளார்.



இராமன் என்ற இதிகாசக் கற்பனையைத் தூக்கிப்பிடித்து இந்த நாட்டில் பார்ப்பனீய வருணாசிரமக் கொடியை மீண்டும் பறக்க விடலாம் என்ற மனப்பான்மையிலிருந்து பார்ப்பனர்கள் விடுபடுவதாகத் தெரியவில்லை. பாபர் மசூதியை இடித்து ராமன் கோயிலை எழுப்பத் துடிப்பதும் மக்கள் நலன் சார்ந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில்  ~ராமன்பாலம்| என்ற புளுகைத் திணிப்பதும் அந்த வகையைச் சேர்ந்ததேயாகும்.

 புராணங்களையும் இதிகாசங்களையும் உண்மை வரலாறுபோல் நிலைநாட்ட இந்தக் கூட்டம் மேற்கொள்ளும் பித்தலாட்டத்தைச் சொல்லி முடியாது. கருத்தைக் கருத்தால் சந்திக்க முடியாது என்கின்ற கட்டம் வருகின்றபொழுது தயாராக சில சொற்களைக் கையிருப்பில் வைத்திருப்பார்கள்.

   ---- என்பது நம்பிக்கை    ---- என்பது அய்தீகம்     என்கின்ற வார்த்தைப் பிரயோகங்கள்தான் அவை. இப்படிச் சொல்லிவிட்டால் அதற்குமேல் எந்தவித விவாதத்துக்கம், அறிவுரீதியான விமர்சனத்துக்கும் அவர்கள் தயாராக இல்லை என்பது பொருளாகும்.

 பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் இராமன் கோயில் பிரச்சினையைக்கிளப்பும் நிலையிலும்கூட இந்தப் பிரச்சினையில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது. கூடாது இது ஒரு நம்பிக்கைப்பிரச்சினை என்று அடம்பிடித்துப் பேசினார்கள்h   --- இன்றும் பேசுகிறார்கள்

 ராமன் பாலம் பிரச்சினையில் தொடக்கத்தில் விஞ்ஞான முலாம் பூசிப் பார்த்தனர். நாசாவைச் சந்திக்கு இழுத்தனர். மணல் திட்டு இருப்பதாகத்தான் கூறினோமே தவிர ராமன் பாலம் என்றெல்லாம் கூறவில்லை. 17 லட்சம் வருடங்களுக்கு முந்தியது அந்தப் பாலம் என்றும் கூறவில்லை என்று அவர்கள் கைவிரித்த நிலையில்ää புதுப்புது அக்கப் போர்களைக் கிளப்பிவிட்டுப் பார்த்தனர்.

 யாரோ ஒரு விஞ்ஞானியாம். புனித் தனேஜா (வயது 40) என்ற நபர் விஞ்ஞானி என்று சங் பரிவார்க் கும்பலால் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ~இஸ்ரோ| வின் விஞ்ஞானி என்றும் அவர் கூறிக்கொண்டார். அவரைத் தூக்கிப் பிடித்து நிறுத்தினார்கள் சங்பரிவார்க் கூட்டம். தனுஷ்கோடி கடற் பகுதியில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று மணல் திட்டுக்களை வீடியோ படம் எடுத்து இதுதான் ராமர்பாலம் என்று தெரிவித்தாராம். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்களும் நம்பினார்களாம். அதன் பிறகே அவர்கள் இந்தப் பிரச்சினையை உரத்த குரலில் முழங்கினார்களாம்.

 கடைசியில் இப்பொழுது என்னாயிற்று? இஸ்ரோ வின் அதிகாரிகள் அப்படி ஒரு நபர் இஸ்ரோவில் பணியாற்றவில்லை என்று அடித்துச் சொல்லி விட்டார்கள். அந்த ஆசாமி இதற்காக ஆர்எஸ்எஸ் தலைவரிடமிருந்து ஏழு லட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். இவர்கள் தூக்கி நிறுத்திய இந்தப் பிரச்சினை அடிப்படை ஏதும் இல்லாததால் அடி முறிந்து அசிங்கமாகப் போய்விட்டதே.

 இந்த நிலையில்தான் இந்துமுன்னணி அமைப்பாளர் திருவாளர் இராமகோபாலன் என்பார் சங்பரிவார்க் கும்பலுக்கே உரித்தான வழக்கமான பாணியில் கரடி விட ஆரம்பித்து விட்டார்.

 ~சேது சமுத்திரக்கால்வாய்த்திட்டத்துக்காக ராமன் பாலத்தை இடித்தால் கடல் பகுதியில் எரிமலை வெடித்துக்கிளம்பும் என்று ஓய்வுபெற்ற புவியியல் நிபுணர் கூறியிருப்பதாகக் கூறியுள்ளார். யார் அந்தப் புவியியல் நிபுணர்? எந்த ஊர்க்காரர்? என்கிற விவரங்களை அவர் கூறவில்லை. இது அவர்களின் வழமையான பாணியாகும். அறிவு நாணயத்துக்கும் அவர்களுக்கும் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை.

 இதுவரை எந்தப் புவியியல் நிபுணராவது அந்தப் பகுதியில் எரிமலை இருப்பதாகக் கூறியதுண்டா? அப்படி இருந்தால் அதனை வெளிப்படுத்தலாமே! கடைசியில் நெருக்கிக் கேட்டால் என்ன சொல்லுவார்கள்?

 ~ராமன் நேற்றிரவு என் கனவில் வந்து அப்படிக் கூறினார்| என்று சொன்னாலும் சொல்வார்கள். சிதம்பரத்தில் நடராஜக் கடவுள் கனவில் வந்து நந்தனைத் தீயில் குளித்துவரச் சொன்னார் என்று சொல்லி, நந்தனைச் சாம்பலாக்கி விடவில்லையா?  சீரங்கத்திலிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருக்கும் தன் காதலி ஆண்டாளை சைட் அடிக்க முடியவில்லை. அதனால் கோபுரத்தை உயர்திக்கட்டு என்று அரங்கநாதன் ஜீயர் கனவில் கூறியதாகச் சொல்லி கோபுரத்தை உயர்த்திக் கட்டவில்லையா?

     நியாயமாகக் காவல்துறை, திருவாளர் இராமகோபலனை அழைத்து எரிமலை வெடிக்கும் என்று கூறியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். அப்படி ஒரு புவியியல் நிபுணர் இருப்பாரேயானால் அவரிடமும் தகவல் கேட்கும் முறையில் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற புரளிகள் மக்களை அச்சுறுத்தும் போக்கிரித்தனங்களுக்கு ஒரு முடிவு கட்ட முடியும்.
 இவண் :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக