புதன், 12 அக்டோபர், 2016

மாட்டு மூத்திரம் எவ்வளவு பெரிய கிருமி நாசினி தெரியுமோ?


மத்திய அமைச்சர் திருமதி மேனகா கண்டி (ஃபெரோஸ் கண்டி யின் மருமகள்)  மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஒரு உத்தரவு போட்டிருக்கிறார். என்ன தெரியுமோ? இனிமேல் மத்திய அரசு ஆஃபீஸ்களில் கிருமி நாசினிகளுக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்.
ஆஹா! மாட்டு மூத்திரம் எவ்வளவு பெரிய கிருமி நாசினி தெரியுமோ?

1927ல் மகாத் என்ற இடத்தில் உள்ள குளத்து நீரை அம்பேத்கர் என்ற கிருமி தன்னுடைய தொண்டர்களுடன் சென்று ஒரு கை அள்ளிப் பருகினார். அவர் கை பட்டதால் அவரது பிறவியிலுள்ள கிருமிகள் அந்தக் குளத்து நீரில் பட்டு குளமே தீட்டாயிடுத்து. அவ்வளவு பெரிய கிருமிகள் அவரது உடலில் உள்ளது. அப்படித் தீட்டாகி விட்டதால் அந்த நீரைப் பருக இவர்களையும் இந்து என்று சொல்லக்கூடிய மற்ற இந்துக்கள் நீர் எடுக்க மறுத்து விட்டனர். உடனே அந்த கிருமியை ஒழிக்க டாக்டரிடம் போகிறார்கள். யார் அந்த டாக்டர்கள்? அவாதான் பூலோக தேவர்கள். நம்ம பிராமணர்கள். அவர்களிடம் சென்று சொன்ன உடன் அவர்கள் படித்த மருத்துவ புத்தகத்தில் (வேதத்தில்) அதற்கான கிருமி நாசினி இருக்கிறது என்று கூறி அதன்படி அந்த கிருமியை ஒழித்தார்கள். என்ன அந்தக் கிருமி நாசினி? அதுதான் இந்த அம்மா சொல்லும் மாட்டு மூத்திரம்.

அந்த மாட்டு மூத்திரத்துடன் மாட்டு சாணி, பால், தயிர்,எல்லாவற்றையும் ஆயிரத்து எட்டு குடத்தில்  கலந்து பஞ்ச்ச கவ்யம்ங்கிற பேர்ல தீட்டான அந்தக் குளத்தில் கொட்டினார்கள். உடனே தீட்டு போயிடுத்து. இந்துக்களெல்லாம் அந்த மாட்டு மூத்திரம் கலந்த தண்ணீரை எடுத்து மடக்ää மடக் என்று குடித்தார்கள். ஆனாலும் யாரும் சாகவில்லை. அம்பேத்கர் தண்ணீர் குடித்ததால் பரவிய அந்தக் கிருமிகளெல்லாம் செத்துடுத்து.

அப்பேர்ப்பட்ட கிருமி நாசினிதான் இந்த மாட்டு மூத்திரம். அதனாலதான் நமக்கெல்லாம் செல்வத்தை வாரி வழங்குற லட்சுமிதேவி மாடு மூத்திரம் போற இடத்தில  குடியிருக்கான்னு சொல்லி சங்கராச்சாரி போன்றவாள் எல்லாம் காலையில எழுந்து மாட்டோட அந்த எடத்தத் தொட்டு கும்பிட்டுட்டுத்தான் மற்ற வேலையெல்லாம் பாப்பாளாம். (அந்த லிஸ்ட்ல பல பேர் உண்டு)

அந்தக் கிருமி நாசினி எந்த எந்த எடத்துல உள்ள கிருமிகளக் கொல்லுது தெரியுமா? ஒருத்தர் வீடு கட்டறப்ப அந்த வீடு கட்ட கொத்தனார், சித்தாள் போன்ற கிருமிகள் அந்த வீட்டுல உலாவி இருப்பாளோ இல்லியோ, அதனால அந்த கிரஹம் தீட்டாகி இருக்கும். அதனால் அந்த கிரஹத்தில கிரஹப்பிரவேசம் நடத்தி அந்த மாட்டு மூத்திரத்துடன் மாட்டு சாணி, பால்ää தயிர்ää எல்லாவற்றையும் தெளித்து அந்த ஆத்துல இருந்து கிருமிகள வெரட்டிடுவா.

மக்கள் நலனில் அக்கறையுள்ள நம்ம பிஜேபி கவர்மென்ட் எப்பேர்ப்பட்ட திட்டத்தையெல்லாம் அமல்படத்தறா பாருங்கோ! எல்லாம் வளர்ச்சிதான். அடுத்து என்ன செய்வா தெரியுமோ?
கிருமிகளை ஒழிக்க கிருமி நாசினி பயன்படுத்தச் சொல்றவா அடுத்து அந்தக் கிருமிகளையே ஒழிக்க மெகா திட்டம் போடுவா! கிருமின்னா என்னன்னு முதவே சொல்லிட்டோம்.

அம்பேத்கர் போன்றவாள் எல்லாம் என்னதான் வெளிநாட்டுல போய் படிச்சிண்டு வந்து எவ்வளவுதான் அறிவாளியா இருந்தாலும் படிக்காத கூமுட்டை பிராமணாள் ஒருத்தருக்கு ஈடாக மாட்டாள்னு நம்ம பூரி சங்கராச்சாரி ஏற்கனவே சொல்லியிருக்கா. இருந்தாலும் இந்த அரசியல் கட்சிகள் எல்லாம் ஓட்டுக்காக வேண்டி அம்பேத்கர் எழுதி வச்ச சட்டத்த வச்சு அவா மாதிரி படிப்பாளிகளயெல்லாம் கவர்மென்ட் ஆஃபிஸ்ல வேலைக்கு நியமனம் பண்ணிண்டிருக்கா. அதனால அந்த ஆஃபீஸெல்லாம் தீட்டாயிடுமோல்லியோ?

ஒரு ஜட்ஜா இருந்தவா ஒக்காந்த சேரில ஒக்காந்தாலே தீட்டாயிடுதுன்னு இன்னொரு பிராமண ஜட்ஜ் தீட்டுப் போக்கினாளோல்லியோ? அந்த சிரமத்த அவாளுக்குக் அதாவது தீட்டுப் போக்குகிற சிரமத்த குடுக்காமலே செய்துடலாமே. அதனால அம்பேத்கரோட ஆளுகள் அப்புறம் இந்த ஓபிசி அபிஸ்டுகள் யாரையும் ஆஃபீஸ்களில அப்பாயின்ட்மென்ட் பண்ணாம ஆபீஸை சுத்தமா வச்சுக்கனும்னு ஆர்டர் வந்தாலும் வரலாம். அது வராதுங்கறதுக்கு ஒன்னும் உத்தரவாதமில்லை. நன்னா புரிஞ்சுக்கோங்க!
அப்புறம் இன்னொரு சேதி!

நம்ம சீரங்கத்து அம்பி காளையில்லாம பசு கன்று போட்டதப்பத்தி விலாவாரியா எழுதியிருந்தா. சம்மந்தப்பட்டவாளுக்கும் லெட்டர் போட்டதாவும் சொன்னா. ஆனா இப்பவும் பிஜேபி கவர்மென்ட் நம்ம பிஹெச்ஈஎல் பங்குகள வித்து 3200 கோடி சம்பாதிக்கப்போறா. அதாவது பசு காளையில்லாமலே இப்ப கன்று போடப்போகுது. அம்பி இதப்பத்தி மூச்சு விடுவாரா?
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக