வியாழன், 13 அக்டோபர், 2016

அறிவுத் திருடர்கள்



~தஞ்மாது ப்ராமணனே பேடஜம் நகார்யம்|     

இது வேதமந்த்ரம். 

இதன் பொருள் வைத்யம் என்பது ரத்தம் பார்க்கும் ஒரு தத்வம். அதாவது மனுஷனை வெட்டி அருவருப்பான இடத்தில் கைவைத்து இந்த வைத்யத்தை மேற்கொள்ள வேண்டும். இதையெல்லாம் பிராமணர்கள் செய்யக் கூடாது. ப்ராமணனாய்ப் பிறந்தவன் வைத்ய சாஸ்திரமே கற்கக் கூடாது என்பது  வேத நிபந்தனை என்று அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரி தன்னுடைய ~சடங்குகளின்கதை| என்ற நூலில் தெரிவித்துள்ளார். 

                    வெள்ளைக்காரன் வந்தப்போ தன்னுடைய இராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவம் பார்க்க மருத்துவப் படிப்பைக் கொண்டு வந்தபோது கண்ட ஜாதிக்காராளும் மிலிட்டரியில இருப்பா, அவாளையெல்லாம் தொட்டு வைத்தியம் பாத்தா நம்முடைய ஆச்சாரம் என்னாவது என்று ப்ராமணர்கள் மருத்துவம் படிக்க மறுத்து விட்டார்கள்.

பின்னாளில் மருத்துவர்களுக்கு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது என்று தெரிந்தவுடன் இந்த மருத்துவப்படிப்பை வேறு யாரும் படிக்கக் கூடாது, எல்லாவற்றையும் தங்கள் வயிற்றிலேயே அறுத்துக்கொட்ட வேண்டும் என்று கருதிய பார்ப்பனர்கள் அந்த வெள்ளைக்காரன் கட்டிய மருத்துக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதியைச் சூழ்ச்சியாகப் புகுத்தி விட்டார்கள்.
அதனால் சமஸ்கிருதம் கற்ற பார்ப்பனரைத் தவிர பார்ப்பனரல்லாதார் யாரும் டாக்டராக முடியாது என்ற நிலையை உருவாக்கி வைத்து விட்டார்கள்.  இந்த விதியை 1925ல் திராவிட இயக்க முன்னோடியான நீதிக்கட்சி ஆட்சி நீக்கியதால்தான் இன்றைக்கு பார்ப்பனரல்லாதார் அனைவரும் மருத்துவம் படிக்க முடிந்தது.         

அதன்பிறகு இட ஒதுக்கீடு அமுலுக்கு வந்தபோது அதனால் தகுதி போச்சு – திறமை போச்சு என்று கூச்சல் போட்டார்கள் பார்ப்பனர்கள். தங்களுக்கு மட்டுமே தகுதி திறமை இருப்பதாக மாய்மாலம் செய்து பார்ப்பனரல்லாத ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இழிவுபடுத்தி வந்தார்கள் பார்ப்பனர்கள்.          
இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர 200க்கு 200 எடுத்தவர்கள் 16 பேர். அதில் 10 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள். ஒருவர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர். இரண்டுபேர் தாழ்த்தப்பட்டவர். ஒருவர் தாழ்த்தப்பட்ட அருந்ததி இனம். இருவர் மட்டும் முன்னேறிய ஜாதி. இதில் கார்காத்த வேளாளர் உள்ளிட்ட முன்னேறிய ஜாதியும் உண்டு. பார்ப்பனர் பற்றிய குறிப்பு இல்லை. இன்னும் கொஞ்சம் வாய்ப்புக் கொடுத்தால் அனைத்து இடங்களையுமே ஒடுக்கப்பட்ட மக்கள் கைப்பற்றி விடுவார்கள் என்றே கருதத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் திறமை மேலோங்கி நிற்கிறது. தகுதி – திறமை தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சொன்ன பார்ப்பனக்குஞ்சுகள் யாரும் நம் மக்கள் எதிரில் நிற்கக் கூடத் திராணியற்றவர்களாய் ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள்.         

இவ்வளவு திறமையுள்ள நம் மக்களின் அறிவும் திறமையும் இவ்வளவு நாள் எங்கே போயிருந்தது? நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சாஸ்திரத்திலும் வேதத்திலும் புராண இதிகாசங்களிலும் எழுதி வைத்து நம் மக்களின் கல்விக் கண்ணைக் குருடாக்கி வைத்திருந்தனர்.

இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டதால் அதனால் வேலைக்கு வந்தவர்களுடைய பிள்ளைகள்தான் இவ்வளவு தூரம் சாதித்திருக்கிறார்கள். இரண்டு தலைமுறை வாய்ப்புக் கொடுத்த உடனேயே இவ்வளவு சாதனைகளைக் குவிக்கிறார்கள் என்றால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த வாய்ப்பு வழங்கப் பட்டிருந்தால் நம்நாடு எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கும்?    

அப்படி வாய்ப்புக் கொடுக்காமல்  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நம்முடைய சமுதாயத்தின் வளர்ச்சியையே தடுத்து நிறுத்திய கும்பல் எது? தனி நபரின் நிலத்தை அபகரித்தால் நில அபகரிப்புச்சட்டம் அவர்கள் மேல் பாய்கிறது. நிதி மோசடி செய்தால் நிதி மோசடிச்சட்டம் வருகிறது. ஒட்டுமொத்த சமுதாயத்தின் அறிவையே அபகரித்து நம்முடைய சமுதாயத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியவர்கள் அறிவுத் திருடர்கள் அல்லவா? அந்த அறிவுத்திருடர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது? யார் கொடுப்பது? எப்பொழுது கொடுப்பது? சிந்திப்பீர்!                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக