செவ்வாய், 11 அக்டோபர், 2016

Dose no -10

குரங்குகள் தொல்லை அதிகரிப்பு- டெல்லி மக்கள் பீதி- பாஜக வைச் சேர்ந்த டெல்லி மாநகராட்சி துணை மேயர் பஜ்வா தனது வீட்டு மாடியில் அட்டகாசம் செய்த குரங்குகளை விரட்டினார்@ இதையடுத்து குரங்குகள் அவரைக் கடிக்கப் பாய்ந்தன. அதனால் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்தார்.

திருச்சி மாநகராட்சிக் கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் நகரில் குரங்குகள் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்றும் பன்றிகளின் தொல்லையால் மூளைக்காய்ச்சல் வரும் அபாயம் உள்ளதாலும் குரங்குகளையும் பன்றிகளையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
 இது கடந்த வாரம் நாளிதழ்களில் வந்த செய்திகள். குரங்கைத் தெய்வமாக வணங்கும் பாஜக துணைமேயர் அதை ஏன் அடிக்கப் போனார்? அப்பொழுது அவருக்கு அது தெய்வமாகத் தெரியவில்லையா?

செத்த  மாட்டின் தோலை உரித்ததற்காக அய்ந்து தாழ்த்தப்பட்ட தோழர்களைக் கல்லால் அடித்துக்கொன்ற பிஜேபி ஆர்எஸ்எஸ் விஹெச்பி க்காரனுக்கு அது தவறாகத் தெரியவில்லையா? ஒருவேளை அவர் மேல்ஜாதிக்காரர் என்பதால் விட்டுவிட்டார்களோ?

பன்றி எங்கள் பகவான் அவதாரம். அவர் அவதரித்ததால் வந்ததுதான் தீபாவளி. அதனால் பன்றியை ஒழிக்க எப்படித் தீர்மானம் கொண்டுவரலாம் என்று திருச்சி மாநகராட்சியை எதிர்த்து பிஜேபி ஆர்எஸ்எஸ் கும்பல் மார்தட்டுமா?

எங்கள் இராமபிரானுக்கு பாலம் கட்ட உதவிய வானரத்தை ஒழிக்க எப்படிப் பேசலாம் என்று இல கணேசன்களும் இராமகோபாலன்களும் கர்ஜிக்கவில்லையே! ஏன்?

பிளேக் நோயை ஒழிக்க எலிகளை அழிக்கவேண்டும் என்று  உத்தரவிட்ட வெள்ளைக் காரனை எதிர்த்து எங்கள் பிள்ளையார் வாகனமாம் பெருச்சாலியை ஒழிக்கலாமா? என்று கர்ஜித்து தேசபக்த திலகமான பாலகங்காதர திலகரால் கொண்டுவரப்பட்டதுதானே பிள்ளையார் ஊர்வலம்?

அது மாதிரி குரங்கு ஊர்வலமும் பன்றி ஊர்வலமும் எப்பொழுது இவர்கள் ஆரம்பிக்கப் போகிறார்கள்?
குரங்கு பேசியதா? அதுவும் தமிழ் பேசியதா? அல்லது தமிழ் பேசியவன்;தான் இராமாயணத்தில் குரங்காகச் சித்தரிக்கப்பட்டுள்ளானா? என்று வினா எழுப்பினால் அதற்கு பதில் சொல்ல வக்கற்ற கும்பல் ராமரும் லட்சுமணரும் மேஸ்திரி வேலை பார்க்கää குரங்குகள் பாலம் கட்டியதாகவும் அதை ஓவியமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஹரித்துவாரில் இருந்து டெல்லி செல்லும் ஜனசதாப்தி ரயில்வண்டியில் விளம்பரமாக வைத்துள்ளதாகவும் அறிக்கைவிட்டு நாங்கள் கொடுத்த ஹெவி டோஸ_க்கு பதில் சொல்லி விட்டதாகத் தனக்குத்தானே மார்தட்டிக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஹரித்துவாருக்கும் டெல்லிக்கும் இடையில் போய் ஏன் விளம்பரம் செய்ய வேண்டும்? அப்படிச் செய்திருக்கிறார்கள் என்றால் அந்தத்துறையில் ஆர்எஸ்எஸ் காரன் ஊடுருவி இருக்கிறான் என்பதுதான் பொருளே தவிர இராமன் இருந்தான் என்பதற்கோ இராமர்பாலம் இருக்கிறது என்பதற்கோ அது எப்படி ஆதாரமாகும்?

கலைஞர் அதை நம்புவது கிடக்கட்டும்.

ஆர்எஸ்எஸ் கும்பல் குரங்கு பாலம் கட்டியதை நம்புகிறதா இல்லையா? அப்படி அவர்கள் நம்புவது உண்மையானால் இப்படிக் கட்டுக்கடங்காமல் திரியும் குரங்குகளை அழைத்து வந்து நாட்டுக்குத் தேவையான பாலங்களைக்கட்டலாமே! காஷ்மீர்முதல் கன்னியாகுமரிவரை போடப்படும் நான்குவழிச்சாலையைப் போடச்சொல்லாமே! அதற்கு அத்வானியும் இராமகோபாலனும் இலகணேசனும் மேஸ்திரி - மன்னிக்கவும் எஞ்சினியர் வேலை பார்க்கலாமே!
குரங்கு என்ன இராமன் நடக்க மட்டும்தான் பாலம் கட்டுமா? மனிதன் போக்குவரத்துக்குப் பாலம் கட்டாதா? சாலை போடாதா? சங்பரிவார்க்கும்பல்; அதற்குக் கொஞ்சம் முயற்சிசெய்யலாமே! செய்வார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக