வெள்ளி, 14 அக்டோபர், 2016

தர்மபுரி கலவரம் பற்றி



தர்மபுரி கலவரம் பற்றி எழுதியது
 தர்மபுரி மாவட்டம் நத்தம் , கொண்டம்பட்டி, அண்ணாநகர் காலனி ஆகிய கிராமங்கள் உயர் ஜாதிக்காரர்கள் என்று தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்களால் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டு சூறையாடப்பட்டிருக்கிறது. இது காட்டுமிராண்டித்தனமானது. கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமாகச் சொல்லப்படுவது கீழ் ஜாதிப் பையன் மேல்ஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்ததுதான் என்கிறார்கள். அய்யா மருத்துவர் போன்றவர்கள் இல்லை இல்லை இது காரணமில்லை. எங்கள் இனப் பெண்களை வேண்டுமென்றே பழி வாங்கும் நோக்கத்தோடு காதலிப்பதாக ஏமாற்றித் திருமணம் செய்து பின்பு விரட்டிவிட்டு விடுகிறார்கள். அதனால்தான் இந்தக் கலவரம் என்கிறார். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லுகிற மருத்துவர் இப்படிப் பேசலாமா? தாழ்த்தப்பட்டவன் தமிழன் இல்லையா?

எப்படியோ ஜாதிதான் இதற்குக் காரணமாக இருக்கிறது. ஜாதி என்பதற்கு ஏதாவது அடையாளம் இருக்கிறதா? பெரியார் கேட்டார்: ~எல்லா ஜாதி ஆண்களையும் நிர்வாணமாக நிறுத்தி வைத்து எந்த அடையாளமுமில்லாமல் இவர்களில் அய்யர் யார்? முதலியார் யார்ää உடையார் யார் என்று கண்டு பிடிக்கச் சொன்னால் கண்டுபிடிக்க முடியுமா?| என்று. மூன்று கை உள்ளவர் முதலியார்ää அய்ந்து கால் உள்ளவர் அய்யர்ää இரண்டு மூக்கு உடையவர் உடையார் என்று ஏதாவது அடையாளம் இருக்கிறதா? இல்லையே! அப்புறம் ஜாதிக்கு என்ன அடையாளம்?
காதல் என்பதும் திருமணம் என்பதும் ஒரு ஆணும் பெண்ணும் மட்டுமே தொடர்புடையது. இதில் ஜாதியோ மதமோ குறுக்கிட முடியாது. இதில் கலப்புத்திருமணம் என்பதும் போலியானது. பெரியார் சொல்வார் ~ஒரு மாட்டுக்கும் மனிதனுக்கும், கழுதைக்கும் மனிதனுக்கும், நாய்க்கும் மனிதனுக்கும் நடப்பதுதான் கலப்புத்திருமணம், மனித இனத்தில் பிறந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடப்பது எப்படி கலப்புத் திருமணமாகும்? என்று.

இந்தக் கலப்புத் திருமணத்தை இன்று பல ஜாதித் தலைவர்கள் எதிர்க்கிறார்கள். ஆர்எஸ்எஸ் அதனை விசிறிவிடுகிறது. இவர்கள் கூறும் காரணங்கள் ~இந்தக் கலப்புத்திருமணங்களால் எங்களுடைய பண்பாடுää கலாச்சாரம்ää பாரம்பரியம் கெட்டு விடுகிறது என்கிறார்கள். ஒரு தாழ்த்தப்பட்டவனும் இந்துதான் என்கிறது ஆர்எஸ்எஸ். வன்னியனும் இந்துதான்ää செட்டியாரும் இந்துதான்ää கொங்குக்கவுண்டரும் இந்துதான்ää கள்ளரும் வெள்ளாளரும்; இந்துதான்.  இவர்கள் நம்புகிற மதத்தை அவர்களும் நம்புகிறார்கள். அவர்கள் கொண்டாடும் பண்டிகையை திருவிழாவை இவர்களும் கொண்டாடுகிறார்கள். இவர்கள் வணங்கும் கடவுளை அவர்களும் வணங்குகிறார்கள். அப்புறம் எந்தக் கலாச்சாரம் சீரழிகிறது என்கிறார்கள்? ஆர்எஸ்எஸ் சொல்லுகின்ற ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே சட்டம் என்பதெல்லாம் எது?

மேல்ஜாதிக்கார ஆண் கீழ்ஜாதிக்காரப் பெண்ணைத் திருமணம் செய்வதை மனுதர்மம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் கீழ்ஜாதி ஆண் மேல்ஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்வதை மனுதர்மம் ஏற்றுக் கொள்வதில்லை. மேல்ஜாதி ஆண்கள் கீழ்ஜாதிப் பெண்ணைக் கெடுத்து விட்டு அதற்குப் பஞ்சாயத்து வருகிறபோது ஒரு கணிசமான தொகையை அபராதமாக விதித்ததெல்லாம் கடந்த கால வரலாறு. கீழ்ஜாதிக் காரர்கள் ~உங்கள் பெண்ணை நாங்கள் இதேபோலக் கெடுத்து விட்டால் இதேபோல அபராதம் விதித்து மன்னித்து விடுவீர்களா என்று கேட்டு அதுவும் பெருங் கலவரமாக வெடித்திருக்கிறது.

இங்கேயும் பறையர் பையன்ää வன்னிய இனப் பெண்ணைத் திருமணம் செய்வதற்கு எதிர்ப்புää கலவரம் வந்திருக்கிறது. அதே நேரத்தில் பறையர் இனப் பெண்ணை அருந்ததியர் இனப் பையன் காதலித்துத் திருமணம் செய்வதை பறையர் விரும்புவதில்லை. அதேபோலப் பள்ளர் இனப் பெண்ணை பறையர் இன ஆண் காதலித்துத் திருமணம் செய்வதைப் பள்ளர் விரும்புவதில்லை. இவை அனைத்துமே காட்டுமிராண்டித் தனமானது. வன்மையான கண்டனத்துக்குரியது. ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயமே காலத்தின் அவசியம். அதற்கு அனைவரும் பாடுபடுவோம். பெரியார்ää அம்பேத்கர் ஆகியோரின் இலட்சியத்தை வென்றெடுப்போம்!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக