செவ்வாய், 11 அக்டோபர், 2016

Dose no 9




இல்லாத இராமனைப்பற்றிக் கலைஞர் சொல்லி விட்டாராம். பொய்யைச் சொல்லியே காலம் காலமாய்ப் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களை ஏய்த்து வந்த கூட்டத்துக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. கலைஞர் ஆதாரத்தோடு சொன்ன வாதத்துக்கு அறிவுப்பூர்வமாகப் பதில் சொல்ல முடியாத அக்கிரமக்கூட்டம் தலைகால் புரியாமல் ஆத்திரத்தில் குதிக்கிறது.

 வடநாட்டிலே ஒரு வெறிபிடித்த சாமியார் பிஜேபி சார்பாக எம்பி யாக இருந்தவன்                     ~கருணாநிதியின் நாக்கையோ, தலையையோ வெட்டி வருபவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்குகிறேன்| என்கிறான்.

 எவ்வளவு கொழுப்பு, ஆணவம் இருந்தால் இவ்வாறு அவன் கூறியிருப்பான். அதைக் கண்டிக்க வக்கற்ற கூட்டம் பிஜேபி அலுவலகம் தாக்கப்பட்டதற்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. அவன் பிஜேபி எம்பி மட்டுமல்ல. விசுவ இந்த பரிஷத் தினுடைய மண்டலத் தலைவராக இரண்டு முறை இருந்தவன். ஆனால் பிஜேபி என்ன சொல்கிறது? அவனுக்கும் பிஜேபி க்கும் சம்மந்தமே இல்லை என்கிறது. அப்படியானால் அவனைக் கைது செய்யச்சொல்லி பிஜேபி யோ அதன் அடிவருடிகளோ ஏன் கூறவில்லை? அவனைப் போன்றவர்களாகத் தேடிப்பிடித்து எம்பி பதவியை ஏன் வழங்கியது?

 பிஜேபி இவனை மட்டும் சம்மந்தமில்லை என்று சொல்லவில்லை. பெங்களுருவில் செல்வியின் வீட்டில் பெட்ரோல் குண்டு போட்டவர்களுக்கும் பிஜேபிக்கும் ஆர்எஸ்எஸ_க்கும் சம்மந்தமில்லை என்றது. ஒரிஸ்ஸாவில் ஆஸ்திரேலியப் பாதிரியாரையும் அவரது மகன்களையும் உயிரோடு தீ வைத்துக் கொன்றவனை நல்லவன் என்றார் அத்வானி. பஜ்ரங்தள்காரர்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள் என்று சர்டிபிகேட் கொடுத்தார்.

 அதேபோலத்தான் கோட்ஸேவுக்கும் ஆர்எஸ்எஸ் ஸ_க்கும் சம்மந்தமில்லை என்றும் சொல்லி வருகிறது.

 இதுதான் ஆர்எஸ்எஸ் கும்பலின் கலாச்சாரம். இவர்கள் பேச்சின்மூலம் கொலைவெறியைத் தூண்டுவார்கள். ஒன்றுமில்லாததற்கெல்லாம் ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கள். இவர்களது பேச்சால் வெறியேற்றப்பட்ட ஒருவன் இதுபோன்ற கொலைவெறிச்செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்று கூறித் தப்பிக்கப் பார்ப்பார்கள்.

 இத்தகைய கொலைவெறி என்பது பார்ப்பனர்களுக்கு ஒன்றும் புதிது அல்ல. அசோகரது பேரன் பிம்பிசாரனை அவனது தளபதியாக இருந்த புஷ்யமித்திர சுங்கன் என்பவன்  கொன்று விட்டு ஆட்சியைப்பிடித்த பின்னர் புத்தபிக்குகளின் தலையை வெட்டி வருபவர்களுக்கு நூறு தங்கக் காசுகள் பரிசு என்று அறிவித்து அதன்மூலம் நாட்டில் இருந்த புத்தபிக்குளையெல்லாம் ஒழித்துக் கட்டினான்.
 காரணம் அசோகர் காலத்தில் அரசமதமாக இருந்த பௌத்தமதம் வருணாசிரமத்தை ஒழித்துக்கட்டியது. அதனால் சமுதாயத்தின் உச்சாணிக்கொம்பிலிருந்த பார்ப்பனர்களின் செல்வாக்கு சரிந்துவிட்டது. அதனால் மனம் வாடியிருந்த பார்ப்பனர்கள் சமயம்பார்த்து மன்னனைக் கொன்றுவிட்டு தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டார்கள்.

 அதேபோல சமத்துவப் பெரியாராக விளங்கக் கூடிய மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் சாதியை ஒழிக்க சமத்துவபுரங்களை உருவாக்கி வருகிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டம் இயற்றி பார்ப்பனர்களின் ஆதிக்கத்துக்கு வேட்டுவைக்கிறார். சுயமரியாதைத் திருமணத்தை அகில இந்தியாவிலும் அமுல்படுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்கிறார். அத்துடன் தங்கள் ஆதிக்கபீடங்களாக இருக்கக் கூடிய அய்அய்டிää அய்அய்எம்ää ஏஅய்எம்எஸ் போன்ற இடத்திலெல்லாம் இடஒதுக்கீட்டை அமுல்படுத்தி பார்ப்பன ஆதிக்கத்தைத் தகர்க்க மன்மோகன்சிங் அரசையும் பயன்படுத்தி வருகிறார்.

 இதனால் தங்கள் ஆதிக்கம் பறிபோய்விடுமோ என்று அஞ்சுகிற வேதமதக் கூட்டம் புஷ்யமித்திரன் பாணியில் கலைஞரின் தலைக்கு விலை வைக்கிறது.
சூடுசொரணையுள்ள தமிழர்களே! அந்தக் கொலைகாரக் கும்பலுக்குத் தக்க பாடம் புகட்டுவீர்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக