புதன், 12 அக்டோபர், 2016

சூரியநமஸ்காரம் பண்ணப் பிடிக்கலன்னா எல்லோரும் கடலில் போய் மூழ்கி விடுங்கோ



 சூரியன் என்பது ஒரு நட்சத்திரம். விண்ணில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. சூரியன் பூமிக்கு வெகு அருகிலுள்ள நட்சத்திரம். அவ்வளவுதான். அந்த நட்சத்திரத்தை வைத்து நம்முடைய மதவாதிகள் எத்தனை எத்தனை கதைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள் தெரியுமா?

ரேவதி, அஸ்வினி, கார்த்திகை, ரோகிணி என்று 27 நட்சத்திரங்கள் விண்ணில் இருப்பதாகவும் அவையெல்லாம் சந்திரனின் மனைவிகள் என்றும் எழுதி வச்சிருக்கா. அதில சூரியன் பேர் வரலய்.
 அந்தச் சூரியனை நவகிரகத்தில சேத்திருக்கா. அது கிரகமான்னா அதுவும் இல்லய். நம்ம பிள்ளைகளுக்கு LKG யிலேயே சொல்லித் தர்றோம். SUN IS A STARனு. ஆனா நம்ம ஜோஸ்யக்காராள்லாம் அந்த STAR அய் PLANET னு சொல்றா. அதாவது கிரகம்னு சொல்றா. அதே LKG யிலே SUN IS A PLANETனு சொல்லித் தர்றோம். அதே மாதிரி MOON IS A SATELLITE னு சொல்லித் தர்றோம். அதாவது நிலா பூமியோட துணைகிரகம் என்கிறதுதான் அது. ஜோஸ்யக்காராள் சொல்ற நவகிரகத்தில பூமி வரவில்லய். சந்திரன் வர்றது.

அதே மாதிரி நவகிரகம்னு சொல்ற ராகுவும் கேதுவும் எங்கேயும் கிடையாது. இதையெல்லாம் நம்ம BJP, RSS, BMS இ.முன்னணி கும்பல் விஞ்ஞானம்னு சொல்றா. அது மட்டுமா சொல்றா. அகில உலக சயின்ஸ் கான்ஃபரன்சில போய் இது மாதிரி அறிவியல் சமாச்சாரம் எங்க மதத்தில ஏராளம் உண்டுன்னும் பிரச்சாரம் பண்றா. இந்த சூரியன், சந்திரன் எல்லாம் கடவுள் வரிசையில வர்றாளாம். அவாளுக்கெல்லாம் பொண்டாட்டிகள், புள்ள குட்டிகளும் உண்டு.

 இந்த சூரியன் இருக்காரே, அவர் ரொம்ப POWERFULL GOD. அவர் பூமியில கிழக்கேயிருந்து மேற்கே சஞ்சரிக்கிறார். எப்படி தெரியுமா? ஏழு குதிரை பூட்டிய தேர். அந்தத் தேருக்கு ஒரே சக்கரம். அந்தத் தேரை ஓட்டுகின்ற சாரதி யாருன்னா ரெண்டு காலும் இல்லாத அருணன் என்கிறவன். அவன் ஒரு நாள் இந்திரலோகத்துக்கு பெண்ணுருவில போறான். அந்தப் பெண்ணுருவில் வந்தவனை இந்திரன் நோக்கினான். அந்த அழகுக்கு அவன் மயங்கி அந்த அருணனுடன் கூடினான். அங்கேயே ஒரு மகன் பிறந்தான். அவன்தான் இராமாயணத்தில் வரும் குரங்கரசன் வாலி.

சமாச்சாரம் இப்படியானதாலே தேரை ஓட்டக் கூடிய சாரதியைக் காணோம்னு சூரியன் தேடறார். அருணன் லேட்டா வர்றான். ஏன் லேட்டுன்றார் சூரியன். சமாச்சாரம் இப்படின்றதை எடுத்துச் சொன்னான் அருணன். உடனே அந்தப் பெண்ணுருவில் தன்னுடைய சாரதியைப் பார்க்கனுமின்னு சூரியனுக்கு ஒரு சபலம். அந்த அருணனும் பெண்வேடமிட அதைப் பார்த்து சூரியன் இச்சை கொள்ள இருவரும் கூடினர். அங்கே உடனே பிறக்கிறான் அதே இராமாயணத்தில் வரும் சுக்கிரீவன். அதனாலே வாலியும் சுக்கிரீவனும் அண்ணன் தம்பிகள்னு இராமாயணம் சொல்றது.

மகா பாரதத்திலயும் சூரியன் ரொம்ப முக்யமானவர். பஞ்சபாண்டவருக்கெல்லாம் முந்தி அவாளோட அம்மா குந்திதேவி வயசுக்கு வர்றதுக்கு முன்னமேயே இந்த சூர்யன் வந்து குந்தி தேவிக்கு பிள்ளை குடுக்கிறார். வயசுக்கு வராதவ எப்படின்னுறீங்களா? அதாங்க காது வழியா! காது வழியா பொறந்ததனாலதான் அவனுக்குக் கர்ணன் னு பேர். கர்ணம் என்றால் காது. என்ன? படிக்கையிலேயே குமட்டறதா? அப்படியெல்லாம் குமட்டப்படாது. BJP, RSS, BMS இ.முன்னணி கும்பலுக்கு கோபம் வந்துடும். வந்தா சாபம் விட்டுடுவா! இல்லேன்னா இந்து விரோதின்னுடுவா!

அப்படித்தான் இந்த BJP அரசாங்கம் எல்லாப் பள்ளிக்கூடத்துக்கும் ஒரு உத்தரவு போட்டிருக்குது. அது என்னன்னா பள்ளிப்பிள்ளைகள் எல்லோரும் யோகா மற்றும் சூரியநமஸ்காரம் பண்ணனும்கிறதுதான் அது. அதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பின உடனே சூரிய நமஸ்கார பயிற்சியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

அத்தோட முடிஞ்சுபோனாப் பரவாயில்லை. BJP MP ஒரு ஆளு யோகி ஆதித்யநாத் என்பவர்  சூரியநமஸ்காரம் பண்ணப் பிடிக்கலன்னா எல்லோரும் கடலில் போய் மூழ்கி விடுங்கோன்னு பேசியிருக்கிறார். அதனாலே நாடு பூராவும் ஒரே சர்ச்சை எழுந்துள்ளது. இது என்ன புதுசாங்கிறீங்களா? மோடி ஆட்சியில உட்கார்ந்ததிலயிருந்து இது மாதிரி மதவெறிப்பேச்சை ஒவ்வொரு MP யும் கிளப்பி விடுறதும் எதிர்ப்பு வந்த உடனே அது அவாளோட தனிப்பட்ட கருத்துன்னுறதும் வாடிக்கையான்னா போச்சு! நமக்கேன் வம்பு. அப்புறம் நம்மையும் இந்த BJP, RSS, BMS இ.முன்னணி கும்பல் எதையாவது சொல்லி கடலில் தூக்கிப் போட்டாலும் போட்டுடுவா!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக