வியாழன், 27 அக்டோபர், 2016

வாழ்க கே.ஆர் நாராயணன்! வெல்க சுயமரியாதை!!

சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியா இருந்தப்ப திருப்பதி வெங்கடாஜலபதியப் பார்க்க வாரந் தவறாம வருவாரு

ஒரு தடவ படியேற முடியாம தடுமாறிக்கூட விழுந்திட்டாரு

இருந்தாலும் வாரந் தவறாம திருப்பதிக்கு வந்திருவாரு

அவர் எப்ப வந்தாலும் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்தது திருப்பதி தேவஸ்தானம்

அடுத்து நமது மக்கள் ஜனாதிபதி கே.ஆர் நாராயணன் குடியரசுத்தலைவராப் பதவியேற்றாரு

உடனே திருப்பதி தேவஸ்தானம் ஒரு தீர்மானம் போட்டது
என்ன தெரியுமா?

திருப்பதியில் இனிமேல் யாருக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பதில்லை என்பதுதான் அது

அதன் நோக்கம் என்ன?

எங்கே இந்த தலித் கே.ஆர் நாராயணனும் மத்த ஜனாதிபதி மாதிரி திருப்பதிக்கு வந்துருவாரோ
வந்தா அவருக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கனுமே. எப்படி ஒரு பஞ்சமனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பது? என்பதாலதான் அவசர அவசரமா இந்தத் தீர்மானத்தப் போட்டாங்க

ஆனா சுயமரியாதையுள்ள நம் கே.ஆர்.நாராயணன்
தான் பதவி வகித்த 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட திருப்பதிக்குச் சென்றதில்லை.
அதேபோல காஞ்சி சங்கர மடத்திற்கும் சென்றதில்லை

வாழ்க கே.ஆர் நாராயணன்!
வெல்க சுயமரியாதை!!

Image result for k.r.Narayanan image

1 கருத்து:

  1. இந்த தகவலை முகநூலில் பதிவிட்டிருந்தேன் 350 பேர் விருப்பம் தெரிவித்தும் 168 பேர் பகிர்ந்தும் இருந்தார்கள்
    by Arumugam

    பதிலளிநீக்கு