திங்கள், 17 அக்டோபர், 2016

தேவேந்திரர் திருவிழா எனும் இந்திர விழா

29-01-2012 அன்று திருச்சி தேசியக்கல்லூரி மைதானத்தில் தேவேந்திரர் திருவிழா எனும் இந்திர விழா என்ற பெயரில் ஒரு கூட்டம் நடைபெற்றது. ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்ட அக்கூட்டத்தில் சுமார் 500 பேர்கூடக் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனை நடத்தியவர் தேவேந்திரர் மலர் என்ற பத்திரிகையின் ஆசிரியர் திரு ம.தங்கராஜ் என்பவர். இவர் காஞ்சி சங்கராச்சாரி நடத்திய மதமாற்றத்தடைச்சட்ட ஆதரவு மாநாடுகளில் கலந்துகொண்டவர் என்பதிலிருந்தே அவர் யார் என்பதை வெளிப்படுத்தும்.

அவர் கூட்டிய  அந்தக் கூட்டத்தில் முக்கியமான தீர்மானம் பல்வேறு பெயர்களில் பட்டியல் சாதியில் குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளன், வாதிரியார் என்று அரசால் அழைக்கப்படும் அனைவரையும் ஒன்றாக இணைத்து தேவேந்திரகுலவேளாளர் என்று அரசு சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதாகும்.

இது ஆரிய சூழ்ச்சிக்குப் பலியான ஒரு செயலாகும். தேவேந்திரகுல வேளாளர் என்றோä,வன்னிய குல சத்திரியர் என்றோ, சத்திரிய குல நாடார் என்றோ அழைக்கப்படுவதால் அதன் பயன் முழுவதையும் அனுபவிக்கப் போகிறவர் பார்ப்பனர்களே என்பதைத் தந்தை பெரியார் பல ஆண்டுகளுக்கு முன்பே தேவேந்திரகுல வேளாளர் மாநாட்டிலேயே சென்று எடுத்துரைத்த பிறகும் இன்னமும் அதனைப்பிடித்துத் தொங்குவது ஏன் என்பது விளங்கவில்லை.

தமிழக அரச அனைத்துப் பட்டியல் சாதி இனத்தவரையும் ஆதி திராவிடர் என்று அழைக்க வேண்டும் என்றும் அரிஜன நலத்துறை என்று இருந்ததை ஆதி திராவிடர் நலத்துறை என்று மாற்றியதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது இவர்களது வாதம். ஆதி திராவிடர் என்பது எந்தத் தனிப்பட்ட ஜாதியையும் குறிக்காதபோது அது அப்பிரிவில் வரும் பறையர் என்ற இன மக்களை மட்டும் குறிப்பதாக இவர்கள் கூறுகிறார்கள். இது இல்லாத ஊருக்குப் போகாத பாதையைக் காட்டுவதாகும்.

இப்பொழுது பார்ப்பனர்களும் அவர்களது அடிவருடிகளும் ஆரியர் - திராவிடர் என்பது மாயை என்று ஒரு பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அக்கருத்துக்கு வலுவூட்டுவதாகவே இச்செயல் நிலவுகிறது.
அத்துடன் எங்களுக்குத் தேவை பெயர் மாற்றம் மட்டும்தானே தவிர இட ஒதுக்கீடு தேவையில்லை என்று அவர் சொல்கிறார். இட ஒதுக்கீட்டின்மூலம் படித்துப் பதவிக்கு வந்த பலர் அக்கூட்டத்தில் இருந்தாலும் அதற்கு மிகுந்த கரவொலியும் எழுந்தது. ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமானால் கல்வியும் வேலைவாய்ப்பும் மிகமிக அவசியம் என்பதால்தான் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் தந்தை பெரியார் அவர்களும் அந்த இடஒதுக்கீட்டுக்காக தமது வாழ்நாள் முழுவதம் பாடுபட்டார்கள்.

அதுவும் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் வட்டமேசை மாநாட்டிலே கலந்துகொண்டு தனித்தொகுதி முறைக்காகவும் இட ஒதுக்கீட்டிற்காகவும் எவ்வளவு வசைமொழிகளையும் மிரட்டல்களையும் எதிர்ப்பையும் தாண்டி தாங்கிக்கொண்டு இந்த உரிமையைப் பெற்றுத் தந்தார்கள் என்ற வரலாற்றைத் தெரிந்தவர்களுக்கு இவர்கள் செயல் எவ்வளவு மோசமானது என்பது புரியும்.

இன்றைக்கும் தென்மாவட்டங்களில் கல்வியும் வேலை வாய்ப்பும் அற்ற இளைஞர்கள் ஏராளம் இருப்பதால்தான் சாதிமோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கல்வியும் வேலைவாய்ப்பும் அந்த இளைஞர்களுக்கு இருந்துவிட்டால் சாதிமோதல் என்ற எண்ணம் வருவதற்கே வாய்ப்பிருக்காது. ஒருவேளை திரு . தங்கராஜ் போன்றவர்களுக்கு இந்த மோதல்கள் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ என்னவோ? இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால் இன்றையதினம் தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்கள் பெற்றிருக்கும் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்திருக்குமா? என்பதைப்பற்றி அவர்கள் வாய் திறப்பதில்லை.

 கல்வியும் வேலைவாய்ப்பும் வேண்டாம் என்று இவர்கள் கூறுகிறார்களா என்றும் தெரியவில்லை. அப்படியானால் இந்த மக்கள் அவரவர் குலத்தொழிலைச் செய்யச் சொல்கிறார்களா என்பதும் தெரியவில்லை.

அந்த மாநாட்டுக்கு வந்த ஒரு சிலரிடம் பேச்சுக் கொடுத்தபோது இடஒதுக்கீடு எங்களுக்குத் தேவையில்லை. ஆனால் அடித்தட்டிலே இருக்கும் மக்களுக்கு அது தேவைதான் என்று சொன்னது முரண்பாடாக இருந்தது.

மேலும் திரு தங்கராசு அவர்கள் பேசுகையில் பத்து சதவிகிதம் அரசு ஊழியர்கள்தான் தாம் அனுபவிக்கும் சலுகைகளுக்காக தொண்ணூறு சதவிகிதம் உழைக்கும் மக்களை தீண்டத்தகாத மக்களாக ஆக்கி வைத்திருப்பதாக உண்மைக்கு மாறான கருத்தினைச் சொன்னார். அதற்கும் அங்கே கைதட்டல் கிடைத்தது. 

சாதி எனக்குப் பெருமை, சாதி இருந்தால்தான் எனது பண்பாடும் கலாச்சாரமும் காப்பாற்றப்படும். எங்களுடைய சாதி மற்ற சாதிகளுக்கெல்லாம் படியளந்த சாதி, அது எப்படித் தாழ்ந்த சாதியாக இருக்க முடியும்? என்கிறார். இதிலிருந்து அவருடைய சாதியைவிட இழிந்த சாதிகள் அவருக்கும் கீழே இருக்க வேண்டும் என்று கருதுகிறாரா தெரியவில்லை.

கலப்புத் திருமணத்தையும் அவர் குறைகூறுகிறார்.
அம்மாநாட்டில் கொங்குவேளாள சமுதாயத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் நமது முன்னோர் ஜாதிகளை ஏற்படுத்தி சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள் என்றும் இடையில் எவனோ ஒருவன் இங்கு வந்து உயர்;ந்தவன் தாழ்ந்தவன் என்று ஆக்கி வைத்து விட்டான் என்று குறைகூறுகிறார்.

திருக்குறளை மிகவும் புகழ்ந்து பேசிய அவர் கீதையையும் அவர் தூக்கிப்பிடிப்பது வேடிக்கையானது. பெயர் வைப்பதில் உள்ள மூடத்தனத்தைச் சாடியது நன்றாக இருந்தது. தமிழனுடைய அடையாளத்தை ஒழிக்கவே தஷ்ää புஷ் என்று அர்த்தம் தெரியாத பெயர்களை வைக்கிறார்கள் என்று சொன்ன அவர் ஷ்யாம் என்றால் கருப்பன் என்பதையும் சொல்லி கருப்பன் என்ற பெயரைவிட ஷ்யாம் ஒன்றும் உயர்ந்தது அல்ல என்று சொன்னது மகிழ்ச்சிதான் என்றாலும் மனுதர்மம் வருணாசிரமத்துக்குத் தக்கபடிதான் ஒவ்வொரு வருணத்தானும் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லியிருப்பதையும் வைகுண்ட சாமிகளுக்கு அவரது பெற்றோர் இட்ட முடிசூடும் பெருமாள் என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இவர்கூறும் உயர்ந்த கலாச்சாரத்துக்குச் சொந்தமான இந்து உயர்ஜாதியினர் அப்பெயரை மாற்ற வைத்ததையும் வசதியாக மறைத்துவிட்டார். இவர் ஜாதி அமைப்புமுறை இருப்பதால்தான் பல நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருந்தாலும் நமது நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடையவில்லை என்று கூறி ஜாதியைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

சென்ற ஆண்டு இந்த அமைப்பின் முதலாவது மாநாட்டில் இவர்கள் ஜாதியைச்சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் ஜாதியை ஒழிப்போம் என்று கூறுபவர்கள் அனைவரும் பித்தலாட்டக்காரர்கள் என்றும ஜாதியை ஒழிக்க முடியாது என்றும் கூறிவிட்டு பள்ளியில் அதாவது டுமுபு யில் உங்கள் ஜாதி என்ன என்று கேட்கப்படுவது என்று நீக்கப்படுகிறதோ அன்றுதான் ஜாதி ஒழிக்கப்படும் என்கிறார். ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்கிறாரா? ஒழிக்கப்படக் கூடாது என்கிறாரா என்று தெரியவில்லை. டுமுபு யில் உங்கள் ஜாதி என்ன என்று கேட்கப்படுவது நிறுத்தப்பட்டால் பார்ப்பான் எல்லாம் தங்கள் பூணூலைக் கழற்றி எறிந்துவிடுவார்களா என்று அவர் ஒன்றும் கூறவில்லை.

திரு சுப்பிரமணியம் அவர்களுக்குப்பிறகு பேசவந்த  நாடார் குலத்தைச் சேர்ந்த திரு கரிக்கோல்ராஜ் பேசியதுதான் மிகுந்த வேதனைக்குரியது. எடுத்த எடுப்பிலேயே திரு குருமூர்த்தி அவர்கள் இந்துமதக் கோட்பாடுகளும் ஜாதி அமைப்பு முறையும் இருந்தால்தான் நாடு முன்னேறும் என்று பேசியதை ஆமோதித்து தனது உரையைத் தொடர்ந்தார். நமது முன்னோர் ஜாதிகளை ஏற்படுத்தி சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள் என்றும் வெள்ளைக்காரன் வந்துதான் நமக்குள் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி வைத்து விட்டான் என்று குருமூர்த்தி அவர்கள் கூறியதைக் கண்டுகொள்ளாமல் தாழ்த்தப்பட்டவர்களாகிய உங்களைப் பார்த்தால்தான் தீட்டு என்று சொன்னார்கள். ஆனால் நடார்களாகிய எங்கள் பேச்சைக் காதில் கேட்டாலேயே தீட்டு என்று அவமானப்படுத்தினார்கள் என்றும் நாங்கள் தொட்ட பணத்தைத் தொட்டால்கூடத் தீட்டு என்று அதன்மீது தண்ணீர் தெளித்து எடுத்துச் சென்றார்கள் என்று சொன்ன அவர் யார் இதனைச் செய்தது? யார் அவமானப்படுத்தியது? என்பதை மறைத்து விட்டார்.  நாடார்குலப் பெண்கள் ஜாக்கெட் அணியக்கூடாதுää அதற்கு வரி செலுத்த வேண்டும்ää நாடார்கள் முண்டாசு அணியக்கூடாதுää நாடார்குலப் பெண்கள் தங்க நகை அணியக்கூடாதுää உலோகப் பாத்திரத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாதுää இடுப்பிலே தண்ணீர் தூக்காமல் தலையிலே தண்ணீர் எடுத்து இரண்டு கைகளாலும் பாத்திரத்தைப் பிடித்துக்கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்ன பார்ப்பன நம்பூதிரிகளையும் இந்துமதக் கொடுமைகளையும் அவர் இருட்டடிப்புச் செய்தது வேதனையாக இருந்தது.

திருச்செந்தூர் கோயிலிலும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் நுழைய உரிமை கேட்டு வழக்கு மன்றம் சென்ற பொழுது இந்து மத சாஸ்திரங்களையும்ää புராண இதிகாசங்களையும்ää ஸ்ருதிää ஸ்மிருதிகளையும் காரணம் காட்டி கோயிலில் நுழையும் உரிமை நாடார்களுக்கு இல்லை என்று மறுத்த பார்ப்பனீயக் கொடுமைகளைப்பற்றி வாய் திறக்கவில்லை. காங்கிரஸ் மாநாடுகளில் நாடார்களின் கோயில் நுழைவுப்போராட்டம் பற்றிப் பிரச்சினை வந்தபொழுது காங்கிரசிலிருந்த பார்ப்பனர்கள் அதனை வன்மையாக எதிர்த்ததையும் வசதியாக மறைத்து விட்டு இந்துமத்தின் மிக உயர்ந்த(?) தத்துவங்களைப் புகழ ஆரம்பித்து மதங்களும் ஜாதி அமைப்பும் இருந்தால்தான் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க முடியும் என்று பேசினார்.

இத்தனை கொடுமைகளுக்கும் இந்துமதமும் அதன் ஜாதி அமைப்பு முறையும்தான் காரணம் என்பதை சாமர்த்தியமாக மறைத்து விட்டார்.

எந்த ஜாதியினாலும் மதத்தினாலும் யார் அதிகம் பாதிக்கப்பட்டார்களோ அவர்களே அந்த ஜாதியையும் மதத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று சொல்வது கொடுமையிலும் கொடுமை அல்லவா?
சிறப்புரை என்ற பெயரில் அவருக்கு ஏதோ முக்கிய வேலை இருப்பதாகவும்ää விமானத்திற்கு நேரமாகிவிட்டது என்றும் கூறி மற்றவர்களின் பேச்சை இருந்து கேட்காமலேயே முதலாவதாகப்பேசிவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாகச் சென்றுவிட்டார் ஆர்எஸ்எஸ்ஸின் மூளையான ஆடிட்டர் குருமூர்த்தி. அவரது பேச்சு முழுக்க இனிப்பு உருண்டையில் விஷம் கலந்து கொடுக்கும் ஆரியத்தனமே மேலோங்கியிருந்தது.

எடுத்த எடுப்பிலேயே இந்த மாநாட்டைக் கூட்டியவர்களுக்குப் புகழாரம் சூட்டி உச்சத்தில் தூக்கி வைத்த அவர் இதை நான் முகஸ்துதிக்காகச் செய்யவில்லை என்று எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோலப் பேச்சை ஆரம்பித்தார்.  ஆங்கிலேயக் கல்வி மூலமாக நம்முடைய பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ள முடியவில்லை மேற்கத்தியர்களால்தான் நம்மை ஒருவருக்கொருவர் தாழ்வாக நினைக்க வைத்தது என்றும் சுதந்திரம் பெற்ற பின்பும் அதே கல்விமுறையே நீடிப்பதாகவும் குறைப்பட்டுக் கொண்டார்.

எல்லா சமூகத்துக்கும் தனித்தனிக் கலாச்சாரம் பண்பாடு தெய்வ வழிபாடு உண்டு@ தான் என்கிற அகங்காரம் இல்லை@ காலத்தின்கோலமாக உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்று மாறிவிட்டது என்று ஆதங்கப்பட்டார். 1875ல் வெள்ளைக்காரன் 175 சமுதாயத்தை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் வைத்திருந்ததாகவும் சில சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் எங்கள் சமுதாயத்தைத் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் வைக்கக் கூடாது என்று மனு கொடுத்ததாகவும் குறிப்பிட்டு ஆங்கிலக் கல்வி குறைவாக இருந்த காலத்திலேயே இந்த உணர்வு இருந்ததையும் வெகுவாகப் புகழ்ந்தார். அதே நேரத்தில் இன்னொரு செய்தியையும் வசதியாக மறைத்து விட்டார். முற்பட்ட ஜாதி என்று கூறிக்கொள்வோர் சிலர் தங்களை சூத்திரர் என்று அழைக்கக் கூடாது என்று மனுக் கொடுத்ததையும் அதற்கு அரசு அவர்களுக்கு சற்சூத்திரர் என்று பட்டம் கொடுத்ததையும் மறைத்து விட்டார்.

தந்தை பெரியார்தான் அப்பொழுது கேட்டார்! ~சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்று பொருள்@ சற்சூத்திரன் என்றால் நல்ல தேவடியாள்மகன் என்று பொருள்ää இதில் என்ன பெருமை இருக்கிறது?| என்று பொட்டிலடித்தாற்போல் கேட்டார். ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் அதிகம் நிறைந்த அந்தக்காலத்தில் தனக்கு மேல் எத்தனை ஜாதிகள் இருந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தனக்கும் கீழ் எத்தனை ஜாதிகள் என்று கணக்குப்போட்டு மகிழ்ந்துகொள்ளும் இழிநிலை இருந்ததை மிகவும் பெருமையாகக் குருமூர்த்தி அவர்கள் குறிப்பிடுவதுதான் கடைந்தெடுத்த பார்ப்பனீயம்.

அடுத்து நீங்கள் கேட்கும் பெயர்மாற்றம் என்பது புதிது அல்ல@ ஏற்கனவே உங்களுக்கு இருந்த பெயரைத்தான் நீங்கள் கேட்கிறீர்கள். தேவேந்திரர் என்கிற பெயர் உங்களுக்கு தெய்வத்திடம் இருந்து வந்தது. தெய்வம்தான் உங்களுக்கு அந்தப் பெயரைக் கொடுத்தது. அதனை மாற்றுவதற்கு அரசுக்கு உரிமை கிடையாது. ஏற்கனவே இருக்கும் பெயரை சட்டத்தின்மூலமாக அரசு மாற்றி விட்டது. ஆவணப்படி உங்கள் பழைய பெயரை நீங்கள் திரும்பக் கேட்கிறீர்கள். பெயர் மாற்றம் இல்லை. ஆவணம் மட்டுமே மாற்றப்பட வேண்டும் என்று கொம்பு சீவி விட்டார்.

அடுத்து தேவேந்திரன் பூஜை செய்த லிங்கத்தை தேவேந்திரர்கள் தயாரித்து விற்பதாகவும் அதனை காஞ்சிமடமும்ää இராமகிருஷ்ண மடமும் எந்தவிதமான தயக்கமும் இன்றி வாங்கிச் செல்வதாகவும் இதனை நம்பமுடியவில்லை என்று டாக்டர் ஒருவர் ஆச்சரியப்பட்டதாகவும் புளகாங்கிதமடைந்தார். இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது என்பதை அவர் கூறவில்லை.

அவர் பேச்சின் உச்சக்கட்டமாக அவர் தெரிவித்த கருத்து ஆய்வுக்குரியது. அதாவது அமெரிக்காவில் ஒரு வகுப்பிலுள்ள மாணவர்களை மூன்று வகையாகப் பிரித்தார்களாம். முப்பது மாணவர்கள் மிகச்சிறந்தவர்கள் என்றும்ää சுமாரான மாணவர்கள் முப்பது பேர் என்றும்ää பின்தங்கிய மாணவர்கள் முப்பது பேர் என்றும் பிரித்து வைத்து ஆய்வுசெய்தார்கள்.

அடுத்த பரிட்சையில் சிறந்தவர்கள் என்று பிரிக்கப்பட்டவர்கள் அதிகமான மதிப்பெண்ணையும்ää சுமாரானவர்களாகச் சித்தரிக்கப்பட்டவர்கள் சுமாரான மதிப்பெண்ணும்ää பின்தங்கியவர்களாகப்பிரித்து வைக்கப்பட்டவர்கள் மிகமிகக் குறைந்த மதிப்பெண்ணும் பெற்றதாகவும் அதற்குப் பிறகு அந்த ஊடயளளகைiஉயவழைn முறையை அமெரிக்காவில் கைவிட்டுவிட்டார்கள் என்பதையும் ஆதாரத்தோடு எடுத்துச்சொன்ன குருமூர்த்தி இதில் இந்திய சமுதாயத்தில் என்னென்ன பாகுபாடுகள்ää ஏற்றத்தாழ்வுகள்ää இழிநிலைகள் இருந்தன என்பதையெல்லாம் மூடிமறைத்து விட்டார்.

பிராமணன்ää சத்திரியன்ää வைசியன்ää சூத்திரன் என்று பாகுபடுத்தி அதிலும் அனுலோம ஜாதிää சங்கர ஜாதி பிரதிலோப ஜாதிää பாகியஜாதி என்று பிளவுபடுத்திää கிட்ட வரக்கூடாத ஜாதிää நெருங்கக்கூடாத ஜாதி என்று பேதப்படுத்தியதையும்ää ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தேக்கமடையச் செய்து எந்த மாற்றமுமில்லாமல் அப்படியே நாற்றமடைந்த குட்டைபோல சமுதாயத்தை ஆக்கி வைத்திருந்த கொடுமையினையும் அதற்காக யாரும் வெட்கப்படாமல் அதுதான் பெருமை பண்பாடு கலாச்சாரம் என்று கூச்சநாச்சமில்லாமல் அதனைப் பாதுகாக்க வேண்டும் என்று பேசுவதையும் அப்படியே மறைத்து விட்டார். சூத்திரன் படிக்கக் கூடாதுää படித்தால் நாக்கை அறுக்க வேண்டும்ää காதில் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்ää நெஞ்சில் நிலைக்க வைத்திருந்தால் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்று சொன்ன காட்டு மிராண்டித்தனத்தையெல்லாம் அப்படியே மறைத்து விட்டார். தந்தை பெரியாராலும்ää அண்ணல் அம்பேத்கராலும் பெருந்தலைவர் காமராசர் அவர்களாலும் கல்வி உரிமை பெற்று பட்டம் பதவிகளுக்குச் செல்லுகின்றபோது உங்களுக்குத் தகுதி இல்லை திறமையில்லை என்று சொல்லி இன்னமும் இழிவுபடுத்தி வரும் பார்ப்பனத் திமிரைப்பற்றி எதுவும் குருமூர்த்தி அவர்கள் வாய்திறுக்கவில்லை.

இன்னமும் அய்அய்டிää அய்அய்எம்ää ஏஅய்எம்ஸ் போன்ற நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டவர்களை தகுதியற்றவர்கள் திறமையற்றவர்கள் என்று இழிவுபடுத்தியும் பிற்படுத்தப்பட்டோரை இன்னும் நுழைய விடாமல் தடுத்து வரும் பார்ப்பன சூழ்ச்சியையும் பற்றி கண்டுகொள்ளவே இல்லை.
மாறாகää எவையெல்லாம் மக்களை இழிவுபடுத்தியதோää எவையெல்லாம் நம் மக்களைத் தாழ்வுபடுத்தியதோ அதையெல்லாம் பண்பாடு என்ற பெயராலும் பாரம்பரியம் என்ற பெயராலும் கலாச்சாரம் என்ற பெயராலும் பாதுகாக்க வேண்டும் என்று கூறுவது கடைந்தெடுத்த பித்தலாட்டங்களாகும்.

மக்களுடைய ஜாதியும் இழிநிலையும் நீக்கப்பட வேண்டுமானால் மக்கள் புனிதமானவை என்று நம்புகின்ற சாஸ்திரங்களையும் சடங்குகளையும் புராண இதிகாசங்களையும் அழித்து ஒழிக்காமல் அவை புனிதமானவை என்ற நம்பிக்கையைத் தகர்க்காமல் மக்களுடைய இழிநிலை நீங்காது என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். ஆனால் அந்தப் புனிதமான ஜாதிச்சடங்குகளையும்ää சாஸ்திர புராணங்களையும்ää இதிகாசக் குப்பைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லுகின்ற அமைப்பின் பிரதிநிதியான குருமூர்த்தி அவர்கள் இதுபோன்ற மக்கள் மத்தியில் இத்தகைய விஷவிதைகளைத் தூவி அவர்களுக்கு ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கிறார்.

இன்று பார்ப்பனர்களோää உயர்ஜாதியினரோää ஜாதியைப் பாதுகாக்க வேண்டும் என்றோää ஜாதி புனிதமானது என்றோää அவற்றைப் பாதுகாப்பதன்மூலமாகத்தான் நம்முடைய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க முடியும் என்று பேசியிருந்தால் இன்று நாடெங்கிலும் இருந்து முற்போக்கு அமைப்புக்களிடமிருந்து எதிர்ப்புக்கணைகள் கிளம்பியிருக்கும். அந்த எதிர்ப்புக் கணைகளிலிருந்து தப்பிக்கவும் வேண்டும். அதே நேரத்தில் தங்களுடைய ஜாதி ஆதிக்கத்தையும் தக்க வைக்க வேண்டும் என்று கருதுகின்ற ஆரியக் கூட்டம் எந்த மக்கள் இந்த ஜாதிக் கொடுமைகளுக்கு ஆளானார்களோ அந்த மக்கள் மூலமாகவே இதனைச் சொல்ல வைத்தால் தங்களுடைய எண்ணம் ஈடேறிவிடும் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.

அதற்காக அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். திரு குருமூர்த்தி அவர்கள் சொல்லுகிறார் : எனக்கு ஏராளமான தொழிலதிபர்களைத் தெரியும். நான் எவ்வளவு நிதி கேட்டாலும் அதை அவர்கள் தருவார்கள். உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று கூறி அவரது உரையை முடித்தார்.

அவர் இதே வேலையாக இருப்பதை அவருடைய கடந்த கால செயல்பாடுகள் நிரூபிக்கின்றன. இந்துத்துவாவையும் அதன் பார்ப்பனீயப் போக்கினையும் சரியான அடையாளங் கண்டு அம்பேத்கரிய- பெரியார் பாதையில் திராவிட தத்துவங்களை ஏற்றுக்கொண்டு செயல்படும் தொல் திருமாவளவன் அவர்களிடமிருந்து ஒரு சிலர் பிரிந்த நேரத்தில் அதனை ஊக்கப்படுத்தும் முகமாக ஒரு பொலிரோ காரும் பத்து பைக்குகளும் பத்து மொபைல் போன்களும் வழங்கியதாகவும்ää அத்துடன் ஏராளமான பண உதவி செய்ததாகவும் நாகர் சேனை என்ற அமைப்பைத் துவக்கிய நபர் ஒரு புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

குருமூர்த்தி போன்றவர்கள் இதுமாதிரி ஆட்களைத் தேடிப்பிடித்து உதவுவதன்மூலம்ää பெரியார்ää அம்பேத்கர் ஆகியோர் காண விரும்பிய சமதர்ம சமுதாயத்தை முறியடித்து பார்ப்பன இந்துமத சாம்ராஜ்யத்தை நிறுவி அதன்மூலம் மனுதர்மத்திற்கு மகுடம் சூட்டலாம் என்று கனவு காணுகிறார்கள். தந்தை பெரியாருக்குப்பின் இச்சுமுதாயத்தை கண்ணும் கருத்துமாக இருந்து பார்ப்பன மனுதர்மக் கூட்;டத்திடமிருந்து பாதுகாத்துவரும் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் இருக்கும் வரை தமிழ் மண்ணில் அவர்கள் பித்தலாட்டம் செல்லாது என்பதை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களே! இத்தகைய ஓநாய்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக