ஞாயிறு, 13 நவம்பர், 2016

எந்த நாட்டிலும் செருப்புத் தைப்பதற்கென்று ஒரு ஜாதியில்லை



உலகில் உள்ள அனைத்து மக்களுமே செருப்பு அணிகிறார்கள். ஆனால் எந்த நாட்டிலும் செருப்புத் தைப்பதற்கென்று ஒரு ஜாதியில்லை. செருப்புத் தைப்பவன் சக்கிலியன் என்று இழிவுபடுத்தப்படுவதில்லை.

 அதேபோல் எல்லா நாட்டிலும் முடிதிருத்துபவர் இருக்கிறார். அவர் அம்பட்டன் என்று கேவலப்படுத்தப்படுவதில்லை. துணிவெளுப்பவர் வண்ணான் என்ற ஒதுக்கப்படுவதில்லை. பிணம் சுடுபவர் வெட்டியான் என்று இழிவாகக் கருதப்படுவதில்லை. ஏனெனில் அங்கே பார்ப்பான் என்ற ஜாதி கிடையாது.

அங்கேயும் மலம் கழிக்கிறார்கள். சிறுநீர்  பெய்கிறார்கள். அந்தக் கழிவறையைச் சுத்தம் செய்பவர் தோட்டி என்று ஒதுக்கப்படுவதில்லை. அங்கே யார் வேண்டுமானாலும் எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம். யாரும் தொழிலின் காரணமாக புறக்கணிக்கப்படுவதில்லை. அங்கெல்லாம் செருப்புத் தைப்பவன் மகன் நாட்டின் அதிபராகவும் ஆக முடியும்;;;;;;;;;;;;. அபிரஹாம் லிங்கனும் ஸ்டாலினும் அதற்குச் சான்று
.
எதற்கெடுத்தாலும் ஜப்பானைப் பார், ஜப்பானைப் பார் என்பார்கள் ஆதிக்கவாதிகள். அங்கே அவர்கள் என்ன பார்த்தார்கள் என்று தெரியவி;ல்லை. அங்கே கழிவறை சுத்தம் செய்பவர்களுக்கு என்ன பெயர் தெரியுமா? "Higenic Engineers". நவீன முறையில் கழிவறை சுத்தம் செய்யும் அவர்களுக்கு  எவ்வளவு சம்பளம் தெரியுமா? மாதம் 4000 முதல் 5000 டாலர்.

இங்கே இந்தப் புண்ணிய பூமியில் சாக்கடை சுத்தம் செய்பவன் தோட்டி. அவனுக்குத்தான் மிகக் குறைந்த கூலி. அவனைத் தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளும். அவன் இழிவான ஜாதி. அவன் சாக்கடை ஓரத்தில்தான் குடியிருக்க வேண்டும். அவர்கள் மனிதர்களாகவே மதிக்கப்படுவதில்லை. ஆடுமாடு பன்றி நாய்கள் நடக்கும் தெருவில் இவர்கள் நடக்க அனுமதிக்கப்படுவதில்லை. இந்துமதம் அவர்களுக்குக் கொடுத்த பரிசு. விதித்த கொடை இதுதான். இது ஓராண்டு ஈராண்டல்லää ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்த் தொடரும் கதை.

உழைப்பவர்கள் இங்கே இழிவானவர்கள். உழைக்காமல் அடுத்தவன் உழைப்பில் உண்டுகொழுப்பவன் இங்கே உயர்ஜாதி. அது மாத்திரமல்லாமல் சாஸ்திரத்திலும் புராணங்களிலும் உழைப்பவர்களெல்லாம் தேவடியாள் பிள்ளை என்று எழுதி வைத்து கேவலப்படுத்துகிறது இந்து மதம். பார்ப்பானைத் தவிர இங்கே அனைத்து ஜாதியினருமே தாழ்த்தப்பட்டவர்கள்தான். அதனால் ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்றார் பெரியார்.

ஆனால் இந்து மதத்தைக் காப்பாற்றப் புறப்பட்டதாகச் சொல்லிக்கொள்ளும் சிலர் இந்த ஜாதி அமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ஜாதிகளை ஒழித்து விட்டால் மேற்சொன்ன வேலைகளையெல்லாம் செய்வது யார் என்றும் கேட்டு இளைஞர்களிடையே ஜாதி உணர்வைத் தூண்டி வருகிறார்கள். அதற்குத் தமிழ்த்தேசியம் பேசுபவர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சில கேள்விகளை வைக்க விரும்புகிறோம்.

கீழ்ஜாதிக்காரன்கள் மட்டும்தான் அவரவர் ஜாதித்தொழிலைச் செய்ய வேண்டுமா? நீங்களெல்லாம் படித்துவிட்டு பட்டம் பெற்று பணம் பதவியை அனுபவிக்க வேணடுமா? பார்ப்பனர்கள் தனது ஜாதித் தொழிலை உதறிவிட்டு சூத்திரன் செய்கிற தொழில்களையெல்லாம் செய்கிறான். செருப்புக்கடை வைக்கிறான். வட்டிக்கடை நடத்துகிறான். மருத்துவராகிறான். எஞ்சினியராகிறான். அவனை அவனது குலத் தொழிலை மட்டும் செய்யச்சொல்லி வற்புறுத்த முடியுமா?

ஜாதியைக் காப்பாற்ற வேண்டும் என்று யாரெல்லாம் கூறுகிறீர்களோ நீங்கள் உங்களுக்கென்று உள்ள ஜாதித் தொழிலை மட்டும் செய்துகொண்டு ஜாதிதர்மம், ஜாதிப்பண்பாடு, ஜாதிக் கலாச்சாரம் ஆகியவற்றைக் காப்பாற்றத் தயாரா? நாங்கள் சத்திரியர்கள் என்று மார்தட்டும் மருத்துவர் அய்யாக்கள் மற்ற ஜாதிக்காரர்கள் செய்யும் வேலை எதற்கும் செல்லாமல் சத்திரியர்கள் செய்யும் வேலையான மிலிட்டிரிக்கும் காவல்துறைக்கும் மட்டும் தங்கள் இனத்தவர்களை வேலைக்கு அனுப்பத் தயாரா? 2013னிலும் ஜாதியைப் பாதுகாக்க நினைப்பது காட்டுமிராண்டித்தனம். ஜாதி ஒழிப்பே சமுதாய முன்னேற்றத்துக்கு வழி! ஜாதியை ஒழிப்போம்! சமத்துவம் காப்போம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக