செவ்வாய், 8 நவம்பர், 2016

உலக நாத்திகர் மாநாடு


திருச்சியில் 2011ஜனவரி 7,8,9 ஆகிய தேதிகளில் உலக நாத்திகர் மாநாடு நடக்க இருக்கிறது. அதில் அமெரிக்கா, நார்வே, ஃபின்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாத்திகக் கொள்கையை ஏற்றுக்கொண்ட அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்க உள்ளார்கள்.

உலகில் பிறக்கும் அனைவருமே பிறக்கும்போது நாத்திகர்தான். பிறந்த குழந்தைக்கு பெரியவர்கள் சொல்லிக்கொடுக்காமல் பசி, தூக்கம், போன்ற இயல்பான உணர்வுபோல கடவுள் உணர்வு வருவதில்லை.

பெரியவர்கள் ஒரு பொம்மையைக் காட்டி இது கடவுள், கும்பிடு, என்று சொல்லாமல் யாருக்கும் தானாகவே கடவுள் உணர்வு தோன்றுவதில்லை.

ஒரு இந்து வீட்டில் பிறந்த குழந்தை இஸ்லாமியர் வீட்டில் வளர்ந்தால் அல்லாவைத்தான் வணங்கும்.

ஒரு இஸ்லாம் வீட்டுக் குழந்தை கிறிஸ்தவர் வீட்டில் வளர்ந்தால் கர்த்தரைத்தான் கடவுள் என்று சொல்லும்.

ஒரு இஸ்லாமியக் குழந்தை இந்து வீட்டில் வளர்க்கப்பட்டால் இராமனையோ,பிள்ளையாரையோ, முருகனையோதான் வணங்கும்.

எனவே, கடவுள் நம்பிக்கை எந்தக் குழந்தைக்கும் தானாகத் தோன்றுவதில்லை.
இன்று மதவாதிகள் யாருமே கடவுளை நம்புவதில்லை. சங்கராச்சாரிக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், போப்பாண்டவருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் தானே கடவுள் என்று சொல்லக்கூடிய சாய்பாபாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் மருத்துவரிடம்தான் செல்கிறார்களே தவிர கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்று யாரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டு சும்மா இருப்பதில்லை.

எவ்வளவு பெரிய பக்தனாக இருந்தாலும் ஒரு விபத்து நேரிட்டால் மரத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடுவார்களே தவிர அவர் நம்பும் கடவுள் வசிக்கும் இடமான கோயிலுக்குப் போவதில்லை. எனவேää கடவுளை ஏற்றுக் கொண்டிருப்பவர்களும் கடவுளை நம்புவதில்லை.

கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்தக்கூடியவர் எவருக்கும் கடவுள்மீது நம்பிக்கை இல்லை. கடவுள் இல்லை என்று தெரிந்ததால்தான் சங்கராச்சாரி,வரதராஜப்பெருமாள் கோயில் வளாகத்தில் வைத்தே அக்கோவிலின் மேலாளர் சங்கரராமனை ஆள்வைத்துக் கொல்லுகிறார்.

கடவுள் இல்லை என்று தெரிந்ததால்தான் தேவநாதன் என்ற பார்ப்பான் கருவறைக்குள்ளேயே பெண்களிடம் காமக்களியாட்டம் நடத்துகிறான்.

கடவுள் இல்லை என்று தெரிந்ததால்தான் ஒரு அர்ச்சகன் கோயில் உண்டியலில் கைவைக்கிறான்.

கடவுள் இல்லை என்பதால்தான் ஒரு மதத்துக்காரன் தன்னுடைய மதத்துக்காரனைத் தவிர மற்றவர்களெல்லாம் சாத்தானுடைய குழந்தை என்கிறான். ஒரு மதத்துக்காரன் கட்டிய வழிபாட்டுத்தலத்தை இன்னொரு மதத்துக்காரன் இடித்துத் தள்ளுகிறான்.

கிறிஸ்துவ மதமும் இஸ்லாம் மதமும் கடவுளை ஏற்றுக்கொள்ளாதவனை நாத்திகன் என்கிறது.

ஆனால் இந்து மதம் வேதத்தை நம்பாதவனைத்தான் நாத்திகன் என்கிறது. ஏனெனில், அந்த வேதங்கள்தான் பிராமணர்கள்தான் கடவுள்@ அவனைத்தான் பார்ப்பனரல்லாதோர் அனைவரும் வணங்கவேண்டும் என்கிறது.

 அந்த வேதங்கள்தான் ஜாதியையும் தீண்டாமையையும் பாதுகாக்கிறது. அதனால்தான் தீண்டாமையையும் ஜாதியையும் ஒழிக்கவந்த பெரியார் கடவுளை ஒழித்தால்தான் இதையெல்லாம் ஒழிக்க முடியும் என்றார்.

இதனால்தான் தவத்திரு குன்றக்குடி அடிகளார் நாத்திகத்தை ஆகும் நெறி என்றார்@ ஆத்திகத்தை ஆகா நெறி என்றார்.

எனவே, அந்த ஆகும்நெறியான நாத்திக மாநாட்டுக்கு அனைவரையும் வருக! வருக!! ஏன்று அழைக்கிறோம்!.
இவண்: பெல் திராவிடர் தொழிலாளர் கழகம் திருச்சி-14.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக