புதன், 9 நவம்பர், 2016

இந்து மதத்தில் எத்தனையோ கடவுளிருக்க தந்தை பெரியார் பிள்ளையாரை மட்டும் தெருவிலே போட்டு உடைத்தார் இராமனை மட்டும் செருப்பாலடித்தாரே ஏன்?

இந்து மதத்தில் எத்தனையோ கடவுளிருக்க தந்தை பெரியார் பிள்ளையாரை மட்டும் தெருவிலே போட்டு உடைத்தார் இராமனை மட்டும் செருப்பாலடித்தாரே ஏன்?

இந்து முன்னணி ஆர்எஸ்எஸ் கும்பல் எத்தனை கடவுளிருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி விட்டு இராமனுக்குக் கோயில் கட்டுவதையும் பிள்ளையார் ஊர்வலம் மட்டும் நடத்துவதையுமே வேலையாக ஏன் கொண்டிருக்கிறார்களோ அதனால்தான் பெரியாரும் இராமனை செருப்பாலடித்தார் பிள்ளையாரைத் தெருவிலே போட்டுடைத்தார்.

ஆர்எஸ்எஸ் காரர்கள் எதற்காக இயக்கம் நடத்துகிறார்கள்? அவர்கள் கொள்கை என்ன? என்பதை வெளிப்படையாகக் கூறமாட்டார்கள். ஆனால் அவர்கள் செய்யும் காரியங்களின் மூலமாக நாம் அதை உணரலாம். அதற்குத் தேவை ஈரோட்டுக் கண்ணாடியே.

பிள்ளையார் ஊர்வலத்தின் மூலகர்த்தா தேசபக்த திலகம் என்று வர்ணிக்கப்பட்ட பாலகங்காதர திலகர்தான். சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் அவர். வெள்ளைக்காரன் ஆட்சியில் மிகக் கடுமையான பிளேக் நோய் வந்தது. அதற்கு முன்பு பார்ப்பனர்கள் பிளேக் நோய் மாரியாத்தா கொடுத்ததுää காலரா காளியாத்தா கொடுத்ததுää அம்மை நோய் ஆத்தா படியளந்தது என்று கதையளந்து மக்களின் மூடத்தனத்தை மூலதனமாக்கிப் பிழைப்பு நடத்தி வந்தார்கள்.

வெள்ளைக்காரன் என்ன செய்தான் என்றால்ää இந்த பிளேக் நோய்க்குக் காரணம் பெருச்சாளிகள்தான் என்ற உண்மையைக் கண்டறிந்து அந்த எலிகளை அழிக்க உத்தரவிட்டான். பார்த்தார் திலகர். நம்முடைய பிள்ளையாருக்கு வாகனம் பெருச்சாளி. அதில் அமர்ந்துதான் பிள்ளையார் ஊரெல்லாம் வலம் வந்து தன் பக்தர்களுக்குப் படியளப்பார். அந்த வாகனத்தையே வெள்ளைக்காரன் ஒழிக்கிறான் என்றால் நம்முடைய பிள்ளையார் புல்லட் ஏறி ஊர்வலம் வர முடியுமா? அது ரொம்பக் கஷ்டமாச்சே என்று ~எல்லாம்வல்ல| பிள்ளையாருக்காக இவர் கவலைப்பட்டு வெள்ளைக்காரனை விரட்ட வேண்டும். அதற்கு பிள்ளையார் ஊர்வலம் நடத்த வேண்டும் என்று ஆரம்பித்து அதன் மூலம் மதக்கலவரத்தைத் தூண்டக் காரணமாக இருந்தவர் அந்தத் திலகர்.

இந்தியாவில் வெள்ளைக்காரனைத் துரத்தி விட்டு அமைக்கப்படும் சுயராஜ்யத்தில் மனுதர்மம்தான் சட்டமாக ஆக்கப்படும் என்பதை மிகத் தெளிவாகவே திலகர் குறிப்பிடுகிறார்.
மகாராஷ்டிர அரசாங்கம் பாலகங்காதர திலகரின் பேச்சுக்கள் எழுத்துக்கள் அடங்கிய தொகுப்பை நூலாக வெளியிட்டுள்ளது. அந்தத் தொகுப்பில் ~சுயராஜ்யத்தின் சட்டமாக மனுஸ்மிருதிதான் இருக்க வேண்டும்| என்று திலகர் பேசியதனை ஆதாரத்தோடு வெளியிட்டிருக்கிறது.

அத்துடன் பம்பாய் மாகாண சட்டமன்ற மேலவையில் பல்வேறுபட்ட தொழில்செய்பவர்களுக்கு இடம் அளிப்பதை எதிர்த்துக் கடுமையான மொழியில் பேசினார். அதில்
~~தொடக்கக் கல்விக்குப் பின் இடைநிலைக் கல்வியைத் தொடர வேண்டாம்|| என்று தீண்டத்தகாத மக்களுக்குத் திலகர் ஆலோசனை வழங்கினார். இதன் மூலம் தீண்டத்தகாத மக்களின் ஜாதித் தொழில்களை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பதை நம்பிய திலகர் அவர்களுக்கு உயர் கல்வி அளிக்கப்படுவதை எதிர்த்தார்.

அத்துடன் ~எண்ணெய்க்கடைக்காரர்களும், புகையிலைக்கடைக்காரர்களும் வண்ணார்களும் மற்றவர்களும் - (பார்ப்பனரல்லாதாரையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் இப்படித்தான் அவர் வர்ணித்தார்) சட்ட மன்றத்துக்குச் செல்ல ஆசைப்படுவது ஏன் என்று தனக்குப் புரியவில்லை என்றார். அவரது கருத்துப்படி இவர்களது வேலை சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே தவிர சட்டங்களை இயற்றும் அதிகாரத்துக்கு ஆசைப்படுவது அல்ல என்பதுதான்.

ஆர்எஸ் காரர்கள் தங்கள் கொள்கைகளை வெளிப்படையாகச் சொல்லா விட்டாலும் அவர்கள் உள் மனதில் உறங்கிக் கிடப்பது இந்தக் கொள்கைகள்தான். அதனால்தான் திலகர் வழியில் நடைபோடுவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள்.

அதற்குத்தான் இந்தப் பிள்ளையார் ஊர்வலம். திலகரின் அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால் இன்று நமக்குக் கிடைத்திருக்கும் வாழ்வு கிடைத்திருக்குமா என்பதை தமிழர்களே எண்ணிப்பாருங்கள்!

எந்தப் பெயரில் வந்தாலும் ஆர்எஸ்எஸ்ஸின் அனைத்து செயல்பாடுகளையும் எதிர்த்து முறியடியுங்கள். அதில்தான் உங்கள் வாழ்வு அடங்கி இருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக