செவ்வாய், 8 நவம்பர், 2016

யார் இந்த மாளவியா?



முன்னாள் பிரதமர் வாஜ்பேய் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்குகிறார்கள் என்பதையும் அதற்கு என்ன காரணம் என்பதையும் BHEL BJP என்ற பெயரில் நோட்டீஸ் போட்ட அம்பிகள் மதன்மோகன் மாளவியா என்பவருக்கும் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டிருக்கிறதே! அவரைப் பற்றியும் நோட்டீஸ் போடலாமே! ஏன் போடவில்லை?

யார் இந்த மாளவியா? இவரைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்த பிஜேபி காரர்கள் காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சே ஆர்எஸ்எஸ் தானே என்றால், இல்லை, இல்லவே இல்லை என்று தங்கள் பூணூலைப் பிடித்துக்கொண்டு சத்தியம் செய்வார்கள். பிறகு அவர் யார்? என்றால் அவர் இந்துமகாசபையைச் சேர்ந்தவர் என்பார்கள். இந்துமகா சபாவுக்கும் ஆர்எஸ்எஸ்சுக்கும் சம்மந்தமில்லை என்பார்கள். அந்த இந்துமகாசபாவைச் சேர்ந்த வீரசவர்க்கர் படத்தை பாராளுமன்றத்தில் வைப்பார்கள்.

அந்த இந்துமகா சபா என்ற அமைப்பைத் துவக்கியர் யார் என்றால் அவர்தான் மதன்மோகன் மாளவியா. அவர் அம்பேத்கர் அவர்கள் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு தனித் தொகுதிமுறையை வாதாடிப் பெற்றதை எதிர்த்து இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் காந்தி கலந்துகொள்ளச் சென்றபொழுது அவருக்கு உதவியாகச் சென்றவர். அதாவது அம்பேத்கருக்கு எதிராகச் சென்றவர்.

பிராமணன் கடல் தாண்டிப் போகக் கூடாது என்ற சாஸ்திர விதியை மீறி நீங்கள் கடல்தாண்டிச் செல்லலாமா? என்று கேட்டபோது ஒரு பிடி மண்ணை எடுத்து அதை உருண்டையாக்கி அதை எடுத்துக்கொண்டே சென்று வெளிநாட்டில் தங்கினால் சொந்த மண்ணிலேயே இருப்பதாக அர்த்தம் என்று வியாக்கியானம் செய்தார். அதனால் அவரை மண்ணுருண்டை மாளவியா என்று அழைத்தனர்.

(இப்பொழுது வெளிநாடு செல்கின்ற பார்ப்பனர்கள் யாரும் அப்படி மண்ணை எடுத்துப் போவதாகத் தெரியவில்லை.)

மாளவியாவின் மிகப் பெரிய சாதனை காசி இந்துப் பல்கலைக் கழகத்தை நிறுவியது. அதனை நிறுவி பார்ப்பனர்களுக்கே கல்வியைக் கற்றுக் கொடுத்ததுதான் அவரின் மிகப் பெரிய சாதனை.  அந்தப் பல்கலைக்கழகத்தில் தீண்டாதவர்கள் உள்ளே வரக்கூடாது என்றும் பார்ப்பனரும் பார்ப்பனர் அல்லாதாரும் சமமாய் இருக்கக் கூடாது என்றும் அவர்களுக்கு வேறு படிப்பு இவர்களுக்கு வேறு படிப்பு என்றும் ஏற்பாடு செய்து அதனை நடத்தியவர். அப்பல்கலைக் கழகத்தில் இன்றும் அதே ஜாதிவெறி மேலோங்கி இருக்கிறது. அங்குதான் ஜெகஜீவன்ராம் அவர்கள் சம்பூர்ணானந்த் என்பவரது சிலையைத் திறந்ததற்காக அந்த சிலை தீட்டாகிவிட்டது என்று கூறி கங்கை நீரைக் கொண்டு சுத்தப்படுத்தினார்கள்.

அந்த மாளவியா ஜாதி தர்மம் என்பது பகவான் கிருஷ்ணன் கீதையிலேயே கூறும் தர்மம். அதனை அனைவரும் கடைப்பிடித்தாக வேண்டும். தென்னாட்டில் பெரியார் துவக்கிய சுயமரியாதை இயக்கம் ஜாதி ஒழிப்பில் ஈடுபடுகிறது. அதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்றும்

கோயில்களில் அனைத்து ஜாதியினரும் நுழைய வேண்டும் என்று கூறுவது தவறு. யார், யார் எந்தெந்த ஜாதிக்காரர் எங்கெங்கே எதுவரை செல்லலாம் என்று நன்கு விளம்பரப் படுத்தி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்

குழந்தைத் திருமணம் தேவைதான் என்றும் அழுத்தந்திருத்தமாகப் பேசியவர் இந்த மாளவியா. பிற மதங்களுக்குச் சென்றவர்களை தாய் மதத்திற்கு திரும்ப சுத்தி மூலம் அழைத்து வர வேண்டும் என்று சொன்னவர் மாளவியா.

பிஎம்எஸ்ஸின் தெங்கடிஜி சொன்னதுபோல் சென்னையில் உள்ள பார்ப்பனர்களிடம் இந்து மத சாஸ்திரங்களில் தீண்டாமைக்கான சுலோகங்கள் இல்லை என்று சொன்ன போது சாஸ்திரம் தெரிந்த பார்ப்பனர்கள் அதனை மறுத்து தீண்டாமைக்கு ஆதாரமாக சமஸ்கிருதத்தில் அச்சிட்ட வேதசாஸ்திரப் புத்தகங்களைக் காட்ட இஞ்சி தின்ற குரங்கு மாதிரி விழித்தார்
.
அப்படிப்பட்ட ஜாதிவெறி,சனாதன வெறியருக்குத்தான் பாரத ரத்னா விருது வழங்குகிறது ஆர்எஸ்எஸ் ஸால் வழிநடத்தப்படும் பாஜக மோடி அரசு.  அவருக்கு ஏன் வழங்குகிறது?

காந்தியைக் கொன்ற கோட்ஷே சிறந்த தேசபக்தர் என்று பாஜக எம்பிக்களும் சாமியார்களும் கூறி வருகின்றனர். கோட்ஷேவுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று அதே இந்துமகாசபா வின் பெயரால் இப்பொழுது கூறி வருகிறார்கள். இன்னும் கொஞ்சநாளில் கோட்ஷேவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாலும் வைப்பார்கள்.

அதற்கு முன்னோடியாகத்தான் கோட்ஷேவுக்குக் கொலை வெறி ஊட்டிய இந்து மகாசபையைத் தோற்றுவித்த மதன் மோகன் மாளவியா என்ற சாதிவெறி மதவெறி பிடித்த பார்ப்பானுக்கு பாரத ரத்னா விருது வழங்க இருக்கிறார்கள். இதுதான் மோடி அரசின் ஆறு மாத கால சாதனை. கண்டுகொள்வீர் காவிகளை!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக